விகடனில் வெளியாகும் ‘தேசாந்திரி’ யில் எஸ்.ராமகிருக்ஷ்ணன் இந்த கவிதையை குறிப்பிட்டிருந்தார்.
ஒரு பறவை பறந்துகொண்டிருக்கும்போது
மிதந்து கொண்டிருக்கிறது
கூடவே வானமும்
பறவையை சுட்டார்கள்
விழுந்ததோ
ஒரு துண்டு வானம்
-பாலைநிலவன்
பறவையை சுட வானம் விழுந்ததேன்?
யோசித்துக்கொண்டிருகிறேன்.