புதுமைப்பித்தன் நூற்றாண்டு விழா சென்றமாதம் திருநெல்வேலியில் கொண்டாடப்பட்டது.
புதுமைப்பித்தன்சிறுகதைகள் மட்டும் எழுதவில்லை, தமிழ்நாட்டில் இருந்துகொண்டு 1938-39 காலகட்டத்தில் இரண்டாம் உலகயுத்தம் நடந்து கொண்டிருக்கும் போதே ஹிட்லர், முசோலினி பற்றி ‘கப்சிப் தர்பார்’, ‘பாசிஸ்ட் ஜடாமுனி’ ஆகிய நூல்களை எழுதினார். அது மட்டுமின்றி சோவியத் யூனியன் பற்றிய செய்திகளை அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய செய்தித்தாள்கள் மூலம் படித்தறிந்து ‘ஸ்டாலினுக்கு தெரியும்’ என்ற நூலையும் எழுதினார். தகவல் தொடர்பு சாதனங்கள் குறைவாக இருந்த அக்காலத்தில், மிகத்துல்லியமாக ஏகாதிபத்தியத்தின் தன்மைகளை புரிந்து கொண்டு மிகச்சரியாக வெளிப்படுத்தினார் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் வாழ்ந்த காலம் 1902-1948.