ராம ராஜ்ஜியம் ராவண ராஜ்ஜியம்

திசைகள் இணைய தளத்தில் திரு. சொக்கனின் ‘ராம ராஜ்ஜியம் ராவண ராஜ்ஜியம்’ கட்டுரையை படிக்க நேர்ந்தது. அவர் சொன்ன கருத்துக்கள் மிகவும் ஏற்புடையதாக இருந்தது. அதிலும்,

‘இன்றைய சூழலில், நடுத்தரப் பொருளாதாரநிலையில் இருக்கும் ஓர் இளைஞனோ, குடும்பமோ அரசியலை, அரசியல்வாதிகளைக் கொஞ்சமும் நம்பாமல், எதிர்பார்க்காமல் தங்களின் வாழ்வைச் சுலபமாக அமைத்துக்கொண்டுவிடலாம்.

தனியார் நிறுவனங்கள் பெருகிவிட்டன, அரசு வேலைக்கு அவசியம் இல்லை, தேவையும் இல்லை, படிப்பதற்கோ, கல்யாணம் செய்வதற்கோ, வீடு கட்டுவதற்கோ கடன் தேவைப்பட்டால், (அநியாய வட்டியானாலும்) அதைத் தருவதற்குப் பன்னாட்டு வங்கிகள் வரிசையில் காத்திருக்கின்றன, மின்சாரத்தில் தொடங்கி, அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் ஆனை விலை, குதிரை விலை கொடுத்தாவது வாங்கப் பழகிவிட்டோம், ஒருவேளை பிற உள்கட்டுமான வசதிகளில் குறை இருந்தாலும், ‘நம்ம ஊர்ல எல்லாமே இப்படித்தான்’ என்று சலித்துக்கொண்டு, அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்தப் போய்விடுகிறோம்.இப்படிப்பட்ட நவீன வாழ்க்கையில், ஆட்சியாளர்கள் என்பவர்கள் யார்? எதற்கு?’

மிக மிகச் சரியான கருத்து. மக்கள் கவனிப்பது இருக்கட்டும், முதலில் எதிர்கட்சிகள் கவனித்தார்களா?கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை முறை எதிர்கட்சிகள் போராட்டங்கள் நடத்தின? போராட்டங்கள் இல்லையென்றால், கடந்த ஆட்சியில் தவறுகளே இல்லையா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s