கவிஞர் அறிவுமத்தியின் ‘நட்புக்காலங்கள்’ கவிதையை எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும்புத்தம் புதிதாகவே இருக்கும்.
என் மனதை தொட்ட சில கனங்கள்,
உன் பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்லவாசகம்
தேடித் தேடி
உண்டான சலிப்பில்
உண்டானது
உனக்கான
என்
கவிதை
——————-
புரிந்து கொள்ளப்படாத
நாள்களின்
வெறுமையான நாட்குறிப்பில்
தாமாகவே வந்து
அமர்ந்திருக்கிறது
எனக்குபிடித்தமான
உன்புன்னகை
——————–
நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள் உள்ளவரை
வாழ்க்கை
அநாகரீகமானதுதான்
—————————
கடற்கரையின்
முகம் தெரியாத இரவில்
பேசிக் கொண்டிருந்த நம்மை
நண்பர்களாகவே
உணரும் பாக்கியம் எத்தனை கண்களுக்கு
வாய்த்திருக்கும்
—————————
பார்வையாளர் நாள்.
குளித்துக் கொண்டிருந்த நீ
வருகிற வரை
எனக்கு துணையாய் இருந்த
உன் விடுதிஅணிலுக்கு
இப்போதும்
ஞாபகம் இருக்குமா
என்னை.
—————————