நேற்று சன் டீவியில் மாதவன் நடித்த ‘நளதமயந்தி’ திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு நகைச்சுவை. இதை நகைச்சுவை என்றும் வைத்துக் கொள்ளலாம் அல்லது கிரேஸி மோகனின் சிந்தனைத்திறன் என்றும் வைத்துக்கொள்ளலாம்.மாதவன் குக்கிராமத்திலிருந்து ப்ளைட்டில் ஆஸ்திரேலியா செல்வார். அதுதான் அவரது முதல் ப்ளைட் பயனமாக இருக்கும். டிக்கெட் பரிசோதகர் மாதவனின் ப்ளைட் டிக்கெட்டைப் பரிசோதித்துவிட்டு, தான் இன்னும் ப்ளைட் ஏறியதில்லை என்பதை ‘ஏர்போர்ட்ல இருக்கேன்னு தான் பேரு ஆனா நானே இன்னும் ப்ளைட் ஏறியதில்லை, அதுசரி மாடிப்படி மாடி ஏறுமா?’ என்பார், டிக்கெட்டை வாங்கிக் கொண்டே மாதவன் எஸ்களேட்டரைப் பார்ப்பார், பிறகு ‘இல்லையே மாடிப்படி மாடி போறதே!!’ என்பார்.இந்த நகைச்சுவைக்கு வேண்டுமானால் சிரிக்கலாம், ஆனால் கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள், கண்டிப்பாக சிரிக்க இயலாது.
பெரியவர்கள் மாடி ஏற எஸ்களேட்டரைப் பயன்படுத்தும் பொழுது மிக மிக கவனமாக இருக்கவேண்டும். கண்டிப்பாக உடன் வருபவர்களையோ அல்லது அங்கே அருகில் இருப்பவரையோ உதவிக்கு அழைத்துக்கொள்ளவேண்டும். இல்லையேல் கண்டிபாக லிப்டைத் தான் பயன்படுத்தவேண்டும். கவனம் தேவை, பெரியவர்களே!இது சின்னக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.