தேன்கூடு போட்டிக்கு மூன்றாவது முறையாக நான் என் சிறுகதையை சமர்பித்திருக்கிறேன். முதல் இரண்டு முறையும் அறிமுக பிளாகரான எனக்கு நானே எதிர்பார்த்திராத அளவிற்கு வாக்குகள் கிடைத்தன. சந்தோஷம். இந்த முறை என் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் சில நண்பர்கள் – என் பதிவுகளை தவறாமல் வாசித்துவருபவர்கள் – என் சிறுகதைக்கு வாக்களிக்க முயற்சித்து, நான் தோல்வியைத் தழுவும் முன் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.
21 ஆம் தேதி காலையிலே நான் என் அலுவலகத்திற்கு வந்தவுடன் வாக்களித்து விட்டேன். நான் வாக்களித்ததால், என்னைத் தொடர்ந்து வாக்களிக்க முயற்சித்த என் நண்பர்கள் அனைவருக்கும் இதே errror msg -ஐத் தான் பெற்றனர்.
>>Thank you for voting on this poll. The results will be announced shortly! (you already submitted an answer for this survey. If this not the case, please contact us.)
ஏன் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே server -க்கு கீழ் இருப்பதாலா? அப்படியென்றால் தேன்கூட்டில் userid, pwd எதற்கு? வெறும் server ip வைத்தே login செய்து கொள்ளலாமே. என்ன logic என்று எனக்கு விளங்கவில்லை.
சரி, அலுவலகத்தில் ஒரே செர்வருக்கு கீழ் இருப்பதால் வாக்களிக்க இயலவில்லை என்று என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்று முயற்சித்திருக்கிறார், வீட்டிலும் இதே err msg தான். (இது என்ன கடவுளே, புரியாது கடவுளே!)
அவர் படைப்புகளை தேர்ந்தெடுக்கவேயில்லை. வாக்களிக்கவும் இல்லை. அவருக்கு எப்படி தேன்கூடு நன்றி சொல்கிறது?
>>Thank you for voting on this poll. தேன்கூடுக்கு ரொம்பத்தான் பவ்யம்.
ஒரே நபர் வேறு வேறு userid -க்களை create செய்து தன் கதைக்கு தானே பலமுறை வாக்களிப்பதை தடுப்பதே இதன் நோக்கம் என்பதை நான் அறியாமலில்லை, ஆனால் அதே சமயத்தில் வாக்களிக்க விரும்புபவர்களை – வாக்களிப்பதற்காகவே, userid create செய்தவர்களை – discourage செய்வதாகவே இருக்கிறது.
கள்ளவோட்டுகள் போடக்கூடாதுதான், ஓட்டே போடக்கூடாது என்றால் எப்படி?
சேர்க்கப்பட்டது:
தேன்கூடு நன்றி. இப்பொழுது என் நண்பர்களால் ஓட்டளிக்க முடிகிறது.