நல்ல மனுசனுக்கு ஒரு கடி :
அதனால் கூட இருக்கலாம் இல்லையா? எதனால்? அதாவது வெகுஜன பொதுஜன மக்களே என்னவென்றால் : நான் நாய்க்கு பயந்ததனால் தான் நாய் என்னை அன்றைக்கு கடித்ததா? இல்லை நாய் கடித்ததனால் தான் எனக்கு நாயிடம் பயம் வந்ததா?
நான் என்ன : நாயே இன்னைக்கு நீ செத்தன்னு, சொல்லியா மிதிச்சேன். தெரியாமத்தான மிதிச்சோம். அதக்கூட பொறுத்துக்க முடியல அதால. டபார்ன்னு பாஞ்சு ஒரே கடி. ஹ¤ம். நல்லவேளை இந்த பேகி பேண்ட் போட்டதால தப்பிச்சேன். பின்ன, நாய் அந்த கடி கடிச்சதுக்கு ஆபரேசன்ல பண்ணனும். ஒரே கொத்தா புடிங்கிருக்கும்ல. தப்பிச்சுட்டோம்ல. ஆனா அந்தவாக்குல கடிச்சதுல பல்லு பட்ருச்சு. ரத்தம் வந்திருச்சு. பிடிச்சேன் ஒரே ஓட்டம். நாய் பக்கத்துல இருக்கம்போது ஓடக்கூடாதுன்னு சொல்லுவாய்ங்க. அவெய்ங்க கிடக்காய்ங்க. கடி யாரு வாங்கறது? நின்னு மொறச்சு பாத்தா விட்றுமா? அத பாத்தமாட்ல காலு கையெல்லாம் நடுக்கமெடுக்குதுல்ல. நாயும் விடல. என்ன தொரத்த ஆரம்பிச்சுருச்சு. என்னா திமிரு? அதான் லவக்குன்னு கடிச்சுருச்சுல்ல. அப்புறமும் என்ன வேணுமாம்? ஐயோ யாராவது காப்பாத்துங்க, நாயப்புடிங்கன்னு நான் கத்தறேன். எல்லோரும் ஒலியும் ஒளியும்ல அண்ணாத்த ஆடுறார் பாட்ல மூழ்கிக் கெடக்குறாய்ங்க. எவன் நம்மல கவனிக்குறான். இதுல ஒரு விசயம் என்னன்னா, இது ஒன்னோடயெடம் இது என்னோடயெடம்னு அடிச்சுக்கிறவய்ங்க, நம்பல தொரத்த ஆரம்பிச்சாமட்டும் ஒன்னு கூடியிறாய்ங்க. அங்க ஒரு நாயி இங்கொரு நாயின்னு கும்பலா தொறத்துதுக. மாப்பு மாட்னடா இன்னக்கின்னு.
எப்படியோ ஓடி தப்பிச்சுட்டேன். அதுக்கப்புறம் நான் ஊசி போட்டு, எங்க அண்ணன் அந்த நாய தொரத்தி தொரத்தி அடி வெளுத்துக்கட்டுனது வேற கத. அப்புறம் தான் பயம் அதிகமாச்சு. ஒரு நாய் இன்னொரு நாய்கிட்ட போட்டுக் கொடுத்துருக்குமோன்னு. இவிங்க தான்டா பாத்துவெச்சுக்க. வ….. மாட்னாய்ங்க போட்டுத் தாக்கிருன்னு அடிவாங்குனவைய்ங்க சொல்லியிருப்பாய்ங்களோன்னு ஒரு கவலை. அண்ணனுக்கு என்ன டப டபன்னும் மோட்டார் பைக்குல போவாரு. நாம அந்தப்பக்கட்டு போனாக்க சும்மா கிர்ருன்னு மொரைக்குதுக. எப்ப புடுங்கும்னு தெரியாது. சில சமயம் மதுரைக்குப் போயிட்டு நைட்டு லேட்டாகி நடந்து வந்தம்னாக்க வீடு போய்ச் சேர்ர வரைக்கும் உசிரப்புடிச்சுக்கிட்டு தான் நடக்கனும். சில எடத்துல தெரு லைட்டு இருக்காது. (சில இடத்துல மட்டுமான்னு நீங்க கேக்குறது என் காதுல விழத்தேன் செய்யுது!) அப்பத்தான் ரொம்ப உசாரா இருக்கனும். மறுபடியும், கன்ணு தெரியாம (நமக்கு சும்மாவே கண்ணு தெரியாது) அதே நாய குறுக்குல மிதிச்சோம்னு வச்சுக்குங்க. டேய் என்ன திமிருடா உனக்கு, என்னையே மிதிச்சுக்கிட்டுத் திரியரன்னு கோபத்துல எங்க கடிக்கும்னு தெரியாது. சில நாய்ங்க இருக்குதுங்க. அட இருட்டாக் கெடக்கே டார்ச் அடிப்பம்னு அடிச்சாக்க, அதுக்கும் கத்துவாய்ங்க. அப்புறம், நாயோட கண்ணும் நம்மோட கன்ணும் நேருக்கு நேரா பாத்துக்க கூடாதுன்னு நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் சொல்லுவார். பாத்தா நாய்க்கு வெறி புடிச்சுக்குமாம். அட பாவிகளா, அதோட கண்ண எதுக்கு போய் நேருக்கு நேரா பாக்கனும். அதென்ன, உங்க கேர்ள் பிரண்டோட கண்ணா? அப்புறம் அதுக்கு கோபம் வருமா வராதா?
ஆனா நீங்க பாக்காட்டியும் இருட்டுல நாயோட கண்ணு சும்மா கலர்புல்லா ஜொலிக்கும். உங்கள அப்படியே ஈர்க்கும். அப்படித்தான் அன்னைக்கும் ஆச்சு. இது சென்னையில இருக்கறப்போ நடந்தது. (சென்னையிலுமான்னு கேட்டா? ஹே ஹே.. நாங்க பல ஏரியா போய் கடி வாங்குனவைங்கப்பு. அவ்ளோ கடி வாங்கினாலும் ஒரு சத்தம் கூட வராதுல.) அன்னைக்கு பாழாப்போன ஆபிஸில கொஞ்சம் ஓவர் வேலை. நாங்க கிண்டியில இருந்தோம். இந்த வண்டிக்காரன் சந்து இருக்குல அதுல இருந்தோம். என்னோட வேல பாக்குறவரு அவரோட வண்டியில தெரு முக்கு வரைக்கும் என்ன கொண்டாந்து விட்டாரு. தெருவுல ஒரு பய கிடையாது. நானும் பம்மி பம்மி நடந்துவாரேன். எங்க வீடு இருக்குற தெருவுக்குள்ள நுழஞ்சன்ல, ஒரு நாய் அங்க படுத்துக்கிட்டு தலய தூக்கி என்ன பாத்துச்சு. கண்ணு குங்கும கலர்ல மின்னுது. தெருவுல யாரும் இல்ல. தெரு வெளக்கும் எரியல. ஆனா நாயோட கண்ணு மட்டும் நல்லா பளிச்சுன்னு தெரியுது. நான் கிட்ட வர வர அது எந்திருச்சுருச்சு. அமைதியா என்ன பாத்தமானைக்கே நிக்குது. எனக்கு உள்ளுக்குள்ள ஒரு நடுக்கமெடுக்க ஆரம்பிச்சுருச்சு. கால் எவ்ளோ மெதுவா நடக்கமுடியுமோ அவ்ளோ மெதுவா நடக்குது. சும்மா நிக்கவும் யோசனையா இருக்கு. நின்னம்னாக்க நாய் உஷாராயிடும்ல. நாய்பயம்போக்கியசச்சிதானந்தசுவாமிகள் தோன்றினார்: மாப்ள, நாய பாத்தீனாக்கா கண்டுக்கிடாதமானிக்கு நீ பாட்டுக்கு நடந்துக்கேயிரு. அதுவும், ஊரு எம்.எல்.ஏ மாதிரி, உன்ன கண்டுக்கிடாது. மவனே நின்னு பாத்த, தொலஞ்சடிமாப்ள. எது வந்தாலும் வரட்டும்னு துணிஞ்சு நடந்தேன். குர்ருன்னுச்சு. நமக்கு உள்ளுக்குள்ள பயமாயிருந்தாலும் சமாளிச்சு நடந்திட்டேன். பின்னாடி மோப்பம் பிடிச்சுக்கிட்டே வந்துச்சு. கன்ணுக்கு முன்னால இருந்தாலும் நாய் இப்ப என்ன செய்யுதுன்னு தெரிஞ்சுக்கிடலாம். பின்னால வந்தாக்க அது என்ன செய்யுதுன்னே தெரியாதுல்ல. அப்ப ஒரு பயம் வரும் பாருங்க. உடம்பெல்லாம் புல்லரிக்கும். கால் தானகவே வெகம் பிடிக்கும். ஒரு வழியா விட்ருச்சு.
நடந்து எங்க வீட்டுக்கு பக்கத்துல வந்தேன். கீழே ஒரு நாய் தூங்கிட்டு இருந்துச்சு. அப்பாடான்னு இருந்துச்சு. எங்க வீடு அப்பார்ட்மெண்ட் மாதிரி. நாலு வீடு கீழயும் மேலயுமா இருக்கும். நாங்க மேல ரோட்டப் பாத்து இருக்குற வீட்ல குடியிருந்தோம். கீழ ஒரு கேட் இருந்துச்சு. என்னன்னாக்க, அந்த வீட்ல என்னமோ இந்திய பிரதமர் குடியிருக்கறதா தப்பா நெனச்ச வீட்டு ஓனரு, கீழ இருக்குற கேட்ட நைட்டு பத்துமணிக்கு கண்டிப்பா பூட்டிருவாரு. அங்க இருக்கறதென்னவோ வெட்டி பேச்சுலர்ஸ் தான். ஒரு பய பத்து மணிக்கு வீட்டுக்கு வரமாட்டான். அதனால சாவிய பையில வெச்சுருப்போம்.
கீழ கேட்டு பூட்டியிருந்துச்சு. எங்கிட்ட சாவி இல்ல. ஒரு நாய் ரோட்ல படுத்து தூங்குது.மேல டீவி ஓடுற சத்தமும். டுபாகூர் நவனீதனின் சத்தமும் தெளிவா கேக்குது. நான் கீழயிருந்து அவிங்களுக்கு கேக்குறமாதிரி மெதுவா கத்துனேன். ஏன்னா படுத்திருக்குற நாய முழிக்கவெச்சுட கூடாதுல்ல. சும்மா மெதுவா கத்தி பாத்தேன். அவிங்க வரல. சத்தம் போட்டு நாய முழிக்கவெக்கறதுக்கு பதிலா, சுவரெரி குதிச்சரலாம்னு நினைச்சேன்.
சுவரு கொஞ்சம் ஒசரம் ஜாஸ்தி. என்னவிட ஒசரம். கையில வெச்சிருந்த குமுதத்த சுவரு மேல வெச்சுட்டு, சுவத்தபுடிச்சு எம்பி, ம்ம்..இன்னும் நல்லா எம்பி, கஷ்டப்பட்டு மேல ஏறப்போகயில கை வழுக்கி தொப்புன்னு கீழ விழுந்தேன். விழுந்த சத்தத்துல நாய் எந்திருச்சுருச்சு. நான் மெதுவா எந்திருச்சு பவ்யமா ஒன்னும் தெரியாத மாதிரி நின்னேன். நாய் என்னயே கிர்ருன்னு பாத்துச்சு. எனக்கு ரொம்ப பயமாகிடுச்சு. என்னடா இப்படி எக்குத்தப்பா மாட்டிக்கிட்டமேன்னு.
நல்லா சத்தமா, நவனீதான்னு கத்துனேன். அப்பாடா ஒரு வழியா நவனீதனுக்கு காது கேட்ருச்சு. ஜன்னல தொறந்து வெளியே பாத்தான். என்னடா சாவியா? ன்னு கேட்டவன், உள்ள போயி வேகமா சாவிய எடுத்துட்டு வந்து, ஜன்னல வழியா தூக்கிப்போட்டான் படுபாவி. அந்த சாவி கரெக்டா போய் அந்த நாயோட காலுக்கு முன்னாடி விழுந்துச்சு.
இராமநாரயணன் படத்துல வர நாயாயிருந்தா அதுவே சமத்தா சாவிய எடுத்துட்டு வந்து நம்ம கையில் கொடுத்து, இன்னொரு கால்ல நமக்கு கை கூட கொடுக்கும். விட்டம்னாக்க அதுவே கேட்ட ஓபன் பண்ணி கொடுக்கும். சாவிய குனிஞ்சு எடுக்கமுடியுமா? நாய் என்ன நினைக்கும்? நம்மல அடிக்கறதுக்கு கல்ல எடுக்குறான்னு நெனைக்காது? நாய் என்னப்பாக்குது சாவியப்பாக்குது. நீ எடுடி பாத்துப்புடுவோம்னு நிக்கறமாதிரி எனக்கு தோணுது. நாம் எடுக்கவேயில்ல. எடுப்பனா? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. நல்ல மனுசனுக்கு ஒரு கடி.
மறுபடியும் கத்துனேன். பழாப்போன சண்டாளா கீழ வந்து தொலையேன் டான்னு. நவனீதனும், சிவாவும் வந்தாய்ங்க. கதவதொறந்தாய்ங்க. என்னடா நிக்கற? சாவிய எங்கடான்னாய்ங்க. நான் கீழ காமிச்சேன். நவனீதன் அசால்ட்டா போய் சாவிய எடுத்துட்டு, பூட்டிட்டு வாடான்னு சொல்லிட்டு போய்ட்டான்.
கொஞ்ச நேரம் என்னை அந்த நாய் எகத்தாளமாக பார்த்துக்கொண்டிருந்து விட்டு, தன் இடத்தில் சென்று மறுபடியும் படுத்துக்கொண்டது.
(தொடரும்)
சுவாரசியமா இருக்கு, ஆமாம் இது என்ன கதைய அல்லது உங்களுக்கு நிஜமாவே பைரவர்களோடு நடந்த அனுபவமா.
LikeLike
பார்னி : வருகைக்கு நன்றி. இது கதையல்ல நிஜம். :)))
LikeLike
Ha ha ha…very funny story muthu! – mondha mooki
LikeLike
is it? danks mm.
LikeLike
Nice to recollect those good old days. Ippa nanga irukira areala roadku nalanju nai kaval. Night 11 maniku mela areakulla 2wheelerla varavangala, kootama senthu veratrathu than athungolada hobby. Next time nee India varum pothu xperience pannalam.
LikeLike
so you are being chased by dogs. thank god you got bikes. think of running! bit tough aint it, that too with a belly – a free gift for all software engineers.
LikeLike