யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2

தொழிற்சாலைச் சுற்றிலும் இருக்கும் மக்கள் தொகை அடர்ந்த பகுதியில், மக்கள் வீட்டுக்குள்ளே தான் இருந்தனர், நல்ல உறக்கத்தில். தூரத்து இடியின் ஓசை போல ஒரு சத்தம் அவர்களை தூக்கத்திலிருந்து விடுவித்தது, மற்றொரு தூக்கத்தை நோக்கி அழைத்தது. அவர்கள் மெதுவாக வீடுகளை விட்டு வெளியேறியபோது பயம் கலந்த அலறல் சத்தத்தையே கேட்டனர். சிறிது தூரத்தில் தொழிற்சாலைக்கு மேல் வெண் மேகங்களைக் கண்டனர். எங்கோ தீ பிடித்திருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொண்டனர். கூர்ந்து கவனித்தவர்கள் மட்டுமே தொழிற்சாலைக்கு வெளியே பைப்பின் வழியே நச்சுப்புகை வெளியேறிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர்.

பிளாட்பாரத்தில் பாதுகாப்பின்றி தூங்கிக்கொண்டிருந்தவர்கள் முதலில் உயிரிழந்தனர். அதில் ஏனையோர் குழந்தைகள். மறுநாள் காலை அவர்களது உடல்கள் போர்வைகளால் மூடப்பட்டிருந்தது. ஊயிரிழந்தப்பின் பாதுகாப்பு. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், ஊனமுற்றோர்கள் – ஓடி தப்பிக்க முடியாதவர்கள்- பெரிய எண்ணிக்கையின் மாண்டனர்.

முடிந்தவர்கள், ஓடினர். கூக்குரலிட்டு, தட்டுத்தடுமாறி, அருகில் இருந்தவர்களை இழுத்துக்கொண்டு அவர்கள் எந்த திசைகளிலெல்லாம் ஓடமுடியுமோ, அந்த திசைகள் எங்கும் ஓடினர். குழப்பத்தில் சிலர் தொழிற்சாலையை நோக்கி ஓடினர் – நச்சுபுகையின் பிறப்பிடத்தை நோக்கி.

அதற்கப்புறம் அந்த நகரம் தான் இது வரை சந்தித்திராத மிகப்பெரிய குழப்பத்தை சந்தித்தது. குடும்பங்கள் பிரிந்தன. மிக வேகமாக ஓட முடியாதவர்கள் எஞ்சி நின்றனர். பெண்கள் சாலைகளில் விழுந்து கிடந்தனர். பீதியில் கண்மூடித்தனமாக ஓடியதில் குழந்தைகள் நசுக்கப்பட்டனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு எதிர்திசையில் வந்தவர்களை முட்டித்தள்ளினர். சிலர் லாரிகளிலும், டெம்போக்களிலும், ஆட்டோவிலும், ரிக்ஷாவிலும் ஏறினர். வசதி படைத்தவர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஏறிக்கொண்டனர். அவர்களது கார்கள் வழியெங்கும் பீதியடைந்த கும்பல்களால் வழி மறிக்கப்பட்டன. அவர்கள் கார்களின் மேல் ஏற முற்பட்டனர். அதற்கப்புறம் சில நேரத்தில் இராணுவம் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது.

இராணுவம் தங்களால் முடிந்தவரை மக்களை வெளியேற்ற முயற்சி மேற்கொண்டனர். வாகனங்கள் ஏற்படுத்திக்கொடுத்தனர். முதல் இரண்டு நாட்களில் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊரை விட்டு வெளியேறினர்.

போபாலின் வெளிபுறத்தில் பலர் உடல் பாதிக்கப்பட்டு பயத்துடன் உரைந்து கிடந்தனர்.தனிமையில் கைவிடப்பட்ட அவர்கள் தங்களது உறவுகளைத்தேடி அலைந்தனர். கோபமடைந்த சில மக்கள் மருத்துவமனை நோக்கி நடந்தனர். ஹமீதியா மருத்துவமனை (Hamidia Hospital) முதல் நாளிலே 25000 பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்சைக்குள்ளாக்க முயன்றது. அது எந்த வகையிலும் அந்த மருத்துவமனையால் சமாளிக்க முடியாத எண்ணிக்கை. தொடர்ந்து வேலை செய்த கலைப்படைந்த மருத்துவர்கள் தங்களால் முயன்றதை இயன்றதை செய்தனர். அருகிலிருந்த காந்தி மருத்துவ கல்லூரியில் (Gandhi Medical College) உறங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் எழுப்பி உதவிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த குழப்பத்தில் மருத்துவர்கள் பலருக்கு இறப்பு சான்றிதழ் (Death Certificate) வழங்க மறந்தனர். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு பின்னர் மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இரவு முழுதும் நகர்ந்த புகை ஏரியை நோக்கி சென்றது. ஏரி தனது ஈரப்பதத்தால் புகையின் நச்சுத்தன்மையை தளர்வடையச் செய்தது. சொல்லப்போனால் எஞ்சியிருந்த மக்களை காப்பாற்றியது அந்த ஏரி தான்.

இந்த பேரிடர் ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது காலை ஒரு மணிக்குப் பின்னர் தான். ரோந்துப் பணியிலிருந்த காவலர் ஒருவர் தனது கன்ட்ரோல் ரூமிற்கு வயர் லெஸ் செய்தி அனுப்பினார். கன்ட்ரோல் ரூமிலிருந்து எஸ்.பி அலுவலகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. எஸ்.பி சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தார்.

அதிர்ச்சியும் குழப்பமும் எங்கும் நிறைந்திருந்தது. யாருக்கும் என்ன நடந்தது என்று தெளிவாகத் தெரியவில்லை. புகையின் இயல்பினை யாரும் அறிந்திருக்கவில்லை.தீயணைப்பு படையினரும், டாக்டர்களும், ஆம்புலன்ஸ்களும் துரிதமாக செயல்பட்டும், மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களது சேவைகள் பல முறை துண்டிக்கப்பட்டன. மாணவர்களிடமும், இராணுவத்திடமும், காவல்துறையினரும், இன்னபிற மக்களின் சேவைகள் ஒருங்கிணைப்பின்றி சிதறிக்கிடந்தன. இணைக்க யாரும் இல்லை. ஆனால் அவர்களது சேவைகளில் துணிச்சலும், தீர்க்கமும், சோர்வின்மையும் இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

ஆனால் எவரிடத்திலிருந்து உதவி உடனடியாக கிடைத்திருக்க வேண்டுமோ அவர்கள் மிகுந்த அமைதியைக்கடைப்பிடித்தனர். UCIL ஐ தொடர்பு கொள்ள முயன்ற டாக்டர்களும், காவல்துறையினரும் தொடந்து தொடர்பு கொள்ள முடியாமல் திண்டாடினர். அவர்களிடமிருந்து பதிலே இல்லை. சொல்லப்போனால் யாரைத்தொடர்பு கொள்வது, அங்கே தான் யாருமே இல்லையே. பெரும்பாலான தொழிலாளர்கள் இடத்தை காலி செய்திருந்தனர். அடுத்த சில நாட்களுக்கு UCIL தனது மௌன பாதையைத் தொடர்ந்தது.

எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் மத்தியபிரதேச அரசே குழப்பமடைந்தது போலிருந்தது. முதலில் மக்கள் பயப்படத்தேவையில்லை என்று பொது அறிவிப்பு வெளியானது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பிறகு காலை இரண்டு மணியளவில், காவலர்கள் மக்களை உடனே ஊரைக் காலிசெய்யுமாறு கூறினர். அதற்குப்பிறகு நடந்த குழப்பத்தில் போலீசார் இரண்டு விசயத்தை மக்களுக்கு அறிவுறுத்தத்தவறினர். அது, முதலில், மூக்கைச் சுற்றியும், வாயைச் சுற்றியும் ஒரு ஈரத்துண்டைக் கட்டிக்கொள்வது. மற்றொன்று, காற்று வீசும் திசைக்கு எதிரே ஓடுவது.

இந்த நாளில் பிறந்த ஒரு பெண் குழந்தை – படத்தில் இருப்பவர்- “கேஸ் தேவி” என்றழைக்கப்படுகிறார். இவருக்கு தற்போது 21 வயதாகிறது.

எத்தனை மக்கள் அந்த இரவில் மாண்டனர்? திட்டவட்டமாக எதுவும் கூற இயலாது. UCIL ஐ சுற்றியிருந்த பகுதிகளில் – ஜெயபிரகாஷ் நகர், சோலா கேச்சி, காஜி கெம்ப் மற்றும் நிஷாத் பூர் – தான் இழப்பு அதிகமாக இருந்தது. இவர்கள் தொழிற்சாலையிலிருந்து 200-300 மீட்டர் தொலைவிலேதான் இருந்தனர். அரசு காட்டிய எண்ணிக்கை 2000. புதைப்பதற்கு பயன்படுத்தப் பட்ட துணிகளின் எண்ணிக்கை, 8000 மக்கள் இறந்திருக்ககூடும் என்று சொல்கிறது. அதற்கப்புறம் வாரம், மாதம், வருடக்கணக்காக இறந்த பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 20,000 ஐத் தாண்டியது.

உண்மையாக, அன்றைய பெரிய பிரச்சனை இறந்தவர்கள் அல்ல. பின்னாட்களில் அவர்கள் அடையாளம் காணப்படாமல். யாரும் சொந்தம் கொண்டாடாமல், மொத்தமாக புதைக்கப்பட்டனர். எரிப்பதற்கு மரம் இல்லாமல் போகவே மண்ணென்னெய் ஊற்றி இறந்தவர்களை எரித்தனர். இடம் பத்தாமல் ஏற்கனவே, எப்போதோ புதைத்த இடங்களைத் தோண்டினர்.

ஆனால் தொடர்ந்து உயிரோடிருந்தவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மூச்சுதிணறல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, சில சமயம் கண் பார்வையைப் பறிகொடுத்து, அவர்கள் ஒரு முடிவேயில்லாத ஒரு கொடிய கனவை கடந்து கொண்டிருந்தனர்.

அடுத்த சில நாளில் அரசு மறுபடியும் மறுபடியும் உணவு, காற்று மற்றும் தண்ணீர் சுத்தமாகி விட்டது என்று அறிவித்துக்கொண்டேயிருந்தது. ஆனால் உண்மையாக இவை சோதனைகு உட்படுத்தப்படவில்லை. 1600 க்கும் மேற்பட்ட விலங்குகள் -நாய்கள், மாடுகள் மற்றும் ஆடுகள்- இறந்தன. விலங்குகளின் அழுகிக்கொண்டிருக்கும் உடல்கள் தொற்று நோய் ஏற்படக்கூடிய அபாயத்துடன் இருந்தன. முடிவாக ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பத்து புல்டோசரின் துணையுடன் அவை புதைக்கப்பட்டன. பிளீச்சிங் பவுடரும், காஸ்டிக் சோடாவும் காற்றின் நச்சுத்தண்மையை நீக்க தூவப்பட்டன.

ஆல்-இண்டியா-ரேடியோ இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு போப்பாலில் நிலமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் போப்பால் மக்கள் குடித்த தண்ணீர் தூய்மையாக இருந்ததா? மற்றொரு கசிவு ஏற்படுமா? உடம்பில் MIC இனால் ஏற்பட்ட பாதிப்பு நிரந்தரமா அல்லது தற்காலிகமாகத்தான் இருக்குமா? உண்மையான பதில்கள் மக்களுக்கு கிடைக்க வில்லை. யாருக்கும் தெரியவில்லை.

பீதியடைந்திருந்த மக்கள் யார் என்ன சொன்னாலும் உடனே நம்பினர். சின்னச்சின்ன வதந்திகள் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மக்கள் மறுபடியும் இலக்கில்லாமல் ஓடத்தொடங்கினர். மக்கள் உஜைனுக்கும், சேகோருக்கும், இந்தோருக்கும் ஓடினர். அங்கே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். போப்பால் வெறுமை அதிகரித்தது. அது பேய் நகரமாக மாறியது.

 

5 thoughts on “யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 2

  1. இன்றளவும் எமர்ஜென்சி ஒருங்கிணைப்பு பற்றிய விழிப்புணர்வோ, அதன் முக்கியத்துவம் குறித்த பிரச்சாராமோ நமது ஊரில் கிடையாது என்றே நினைக்கிறேன்.

    Like

  2. அப்படியும் சொல்ல முடியாது. சுனாமி காலத்துல ரொம்ப சூப்பரா நம்ப ஆளுக வேலை செஞ்சாங்கல்ல? இல்லியா? நீங்க இந்திராகாந்தியோட எமர்ஜென்சி பத்தி கேட்டீங்கன்னா நோ கமெண்ட்ஸ். :))

    Like

  3. இந்திராகாந்தி எமர்ஜென்சி பத்தி சொல்லவில்லை முத்து. அது பற்றி விவரம் தெரியாது.அவசரகாலங்களில் காவல்துறை, மருத்துவ அமைப்புகள், தீயனைப்பு துறை, ராணுவம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு பற்றிதான் கூற விழைந்தேன்.

    Like

  4. நீங்கள் இந்திராகாந்தியின் எமர்ஜென்சியைப் பற்றிக் கேட்கவில்லை என்று தெரியும் நிர்மல். just was kidding. யாரேனும் ஒருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டால் அனைவரையும் ஒருங்கினைத்து விடலாம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s