“மும்பை நகரத்தின் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 35,000 ஏக்கர் நிலத்தை ரிலயன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. அங்கே அவர்கள் ‘மகா மும்பை சிறப்பு பொருளாதார மண்டலத்தை’ (Special Economic Zone-SEZ) தொடங்க உள்ளனர். அந்த நிலப்பரப்பில் உள்ள 43 கிராமங்கள் பெயர்த்தெறியப்பட உள்ளன. நவீன மும்பையைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. நல்ல பருவ மழையும், தடையற்ற விவசாயமும் அவர்களின் வாழ்வைக் காத்து வருகிறது. சந்தை விலை ஏக்கருக்கு 25-30 லட்சம் வரை இருக்க, வெறும் 3-4 லட்சம் ரூபாய் கூட அவர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. அந்த கிராமத்தினர் தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மகாராஸ்டிரா அரசு வாலை ஆட்டிக்கொண்டு அம்பானி சகோதரர்களின் காலடியில் கிடக்கிறது. பல மாநில முதல்வர்கள் அம்பானி சகோதரர்களின் கண்ணில் படும் படியாக வாலை ஆட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். நிலத்திற்குப் பதிலாக ரொக்கப்பணம் வழங்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியிருந்தாலும், அவைகளை மீறுவதில் பல மானில அரசுகளுக்கு தனிப்பட்ட ஆர்வம் தான். இந்த பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு நில பேரத் தரகர் வேலை பார்ப்பது (Real Estate Broker) பல மாநில அரசுகளுக்கு விருப்பப் பணியாக மாறி விட்டது.”
–அ. முத்துகிருஷ்ணன், “குருவும் இசைவான முதலீட்டுச் சூழலும்” என்ற கட்டுரையிலிருந்து.
சரி,SEZ என்றால் என்ன? அவரது எழுத்துக்களிலே:
நம் நாட்டு எல்லைக்குள் சில பகுதிகளைக் கையகப்படுத்தி அதன் எல்லைகளை வரையறுக்கிறார்கள். அங்கே பெரும் நிறுவனங்கள் எந்த துறை சார்ந்தும் தொழில் தொடங்கலாம். மென்பொருள் நிறுவனங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள், கேளிக்கைப் பூங்காக்கள், மின்சார உற்பத்தி நிலையங்கள், அங்காடிகள் என தன்னிறைவு பெற்ற பகுதியாக அது திகழும். அந்த துணை நகரம் ஐரோப்பா, அமெரிக்க சாயலோடிருக்கும். அந்த எல்லைக்குள் இந்திய அரசாங்கத்தின் எந்த சட்டமும் செயல்படாது. தொழில் துறைச் சட்டங்கள், சுங்க வரி, விற்பனை வரி, மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என இது போன்ற ஆயிரக்கணக்கான விதிமுறைகள் நடைமுறைகள் எல்லாம் அங்கே எட்டிக்கூட பார்க்க முடியாது. SEZகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஏற்படவிருக்கும் வரி இழப்பு சுமார் 90,000 கோடி. இதை அரசாங்கம் Tax Holiday என்று செல்லமாக அழைக்கிறது.
மேலும் ஒரு அதிர்ச்சியான தகவல்:
இந்த நிலப்பரப்பு வெளிநாட்டுத் தூதரகம் போலத்தான் கருதப்படுமாம். வருங்காலத்தில் SEZகளுக்குள் நுழைய விசா, பாஸ்போர்ட் தேவைப் படலாம். Like East India Company’s Private Cities? அதனால் தான் இப்பொழுது பல developing countriesக்கு வந்து இறங்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்களை, மறுகாலனியிசம் என்று கொஞ்சம் பயத்தோடு அழைக்கிறார்கள். இது ஒரு புதுவகையான சுரண்டல். புதுவிதமான அடிமைத்தனம். Dependency. கொஞ்சம் கொஞ்சமாக நாம் அவர்களது எக்கானமியைச் சார்ந்து வருகிறோம். இந்த சுரண்டலிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில் நாம் -Indian Based Companies, software,hardware,bio-technology or anything- சில ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, தொலைநொக்குப் பார்வையோடு பல புதிய பயனுள்ள products கண்டுபிடிக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் மற்றநாட்டினருக்கு உழைத்துக் கொட்டிக் கொண்டிருப்பது? இன்போசிஸ், விப்ரோ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் ஆராய்ச்சிக்காக கனிசமான தொகையை செலவு செய்யவேண்டும்.
SEZஇன் disadvantages:
1. மிகச்குறைந்த -அடிமாட்டு- விலையில் நிலங்களைக் கையகப்படுத்துதல்
2. வரிவிலக்கு தவறாக பயன்படுத்தப்படுதல்
3. யாரோ வெகு சிலரின் கொள்ளை லாபத்துக்காக, வேறு யாரோ வரி கட்டுவது.
இந்த முயற்சி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்பதில் சிறு ஐயப்பாடும் இல்லை. மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அந்த பணம் அவர்கள் குழந்தைகளின் கல்விக்கே போதாது என்கிறது ஒரு கட்டுரை. அப்படித்தானே இருக்கிறது. இன்று மதுரையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒரு குழந்தையைப் படிக்க வைக்க ஒரு quarterக்கு இருபதினாயிரம் ரூபாய் கேட்கிறது ஒரு பள்ளி. என் நண்பர் ஒருவர் சொன்னார்: நானெல்லாம் எனது மொத்த படிப்புக்கே (MCA வரையில்) அவ்வளவு தான் செலவழித்திருக்கிறேன்.
மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு விசயம் : வரி விலக்கு. ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பெரிய ஐந்து மென்பொருள் நிறுவனங்கள் ஆயிரம் கோடி வரிவிலக்கு பெறுகின்றன. இவை கடந்த பத்து வருடங்களாக வரிவிலக்கு பெறுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும். மேலும் இந்த நிறுவனங்கள் தங்கள் வரி விலக்கை நீட்டித்துக்கொள்ள SEZக்குப் படையெடுக்கின்றன.
இவ்வாறான சலுகைகள் ஒட்டுமொத்த எக்கனாமிக்கு ஒரு போதும் உதவப்போவதில்லை. ஒரு சிலரின் கைகளிலே தான் பணம் மேலும் மேலும் குவிய வாய்ப்பாக இருக்கும் (பிறகு அவர்கள்,நமது அரசாங்கத்திற்கே சட்டங்கள் இயற்றுவார்கள் இல்லியா?) என்பதில் சந்தேகம் இருக்கிறதா என்ன? இதற்கு அமெரிக்காவே சிறந்த எடுத்துக்காட்டு!
கஷ்டப்பட்டு அன்றாடத் தேவைகளுக்காக உழைக்கும் மிகச்சாதரண – இன்னும் அடித்தட்டிலே இருக்கும் -மக்களே வரி கட்டிக்கொண்டிருக்கும் போது, ஏற்கனவே கோடிகளில் புரளும் இவர்களுக்கு ஏன் வரிவிலக்கு? இவர்கள் (பன்னாட்டு மற்றும் உள்ளூர் நிறுவனங்கள்) சம்பாதித்து அருகில் இருக்கும் கிராமங்களையாவது முன்னேற்றினார்களா? பெங்களூருக்கு அருகிலிருக்கும் – IT revolution ஆல் எந்த பாதிப்பையும் காணாமல், இன்னும் அப்படியே எவ்வித வளர்ச்சியும் இல்லாத – கிராமங்களைப் பற்றிய documentary ஒன்றை BBC ஒளிபரப்பினார்கள்.
ஒரு infra-structure development ஏற்படும் போது அந்த பகுதியிலிருக்கும் நிலங்களைக் கையக்கப்படுத்துவது வழக்கம் தான். அதை எதிர்ப்பது நாட்டின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதும் உண்மையே. உதாரணத்துக்கு நேஷனல் ஹைவேய்ஸ் (Nationa Highways) அகலப்படுத்தும் போது ரோட்டின் மிக அருகில் இருக்கும் வீடுகளும், தொழிற்சாலைகளும், பல கட்டிடங்களும் இடிக்கப்படுவதும், கையகப்படுத்தப்படுவதும் இயல்பே, அதற்கு அரசு கொடுக்கும் சொற்ப பணத்துக்குக்கூட ஏதோ நியாயம் கற்பிக்களாம், ஆனால் கோடிகளில் புரளப்போகும் (ரிலயன்ஸ் போன்று ஏற்கனவே கோடிகளில் புரளும்) மக்களுக்காக நிலத்தைக் கையகப்படுத்தும் போது நிலத்துக்காக ஏன் நியாயமான (மார்கெட் நிலவரப்படி) தொகை கொடுக்கக்கூடாது?
மென்பொருள் நிறுவனங்களால் தான் பல இளைஞர்கள் தங்களது குடும்பத்தை ஒரே ஜெனரேஷனில் முன்னேற்றியிருக்கிறார்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானாக வேண்டிய சூழ்நிலையில், அந்த வள்ர்ர்சி மற்றவர்களின் தலையில் இடியாக இறங்கக்கூடாது அல்லவா? ஒரு நாடு வாழ ஒரு கிராமத்தை அழிக்கலாம் என்று டுபாகூர் வசனம் பேசினால், ஒரு கிராமம் இல்லையப்பா, நாற்பத்திமூன்று கிராமங்கள்! நாற்பத்திமூன்று.
links:
http://sezindia.nic.in/
http://en.wikipedia.org/wiki/Special_Economic_Zone
http://www.hindu.com/2006/09/28/stories/2006092808341200.htm
http://www.indiantaxsolutions.com/main.php?t=28011984&d=1152598537
Thanks : உயிர்மை
நாம் அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம்.
LikeLike
i am aasath:what will we do … ? SEZ hasn’t a single problem. Enemy (World Bank/WTO/(ie, USA) defined this defect also. He had raise many items in his agenda…It has formed under our govt.’s signature in GATT on 1994. This GATT can reduce the barriers of a nation and its’ self-sufficient. World Capitalists have requires a World market,… not a USA market only or England Market only, or Indian Market only.At battle of Plazzy, Sraj-Uth Chowla had got anger against the capture of Kazim Bazzaar by East Indian Company. This battle of historical turning point had becomes us to under the ruling of A East India Company. Can a company ruling over a peninsula which including 600 diferent states in 200 years?Compare it today also…
LikeLike
India needs SEZ to further its growth. Loss of revenue thru taxes will be a short term impact only and it will be compensated in the long term, considering the no. of direct and indirect employments that these SEZs will create. However, Govt. needs to formulate fair policy of land acquistion and effective rehabilitation package for the displaced and also have to monitor closely, so that SEZ is not misused for personal gains. As IT revolution improved the standard of living of many Indian people, this SEZ will be the engine of growth in the next decade and will help many more semi skilled workers to improve their living standards.
LikeLike
முத்து,சுடரேத்த வாங்கப்பு! :)http://ilavanji.blogspot.com/2007/02/blog-post.html
LikeLike