Vision For Collective Failure!

“I will be very disappointed [if their contracts are not renewed]. I know Rahul and Greg, and both of them worked very hard for the team. They had a vision for the team and for winning matches. The biggest failure in the World Cup was our batting, so you can’t blame the coach and the captain for it. It’s a total collective failure,” More told rediff.com.

“I will be very disappointed if Rahul is not continued with as captain. If you are talking about the future of the Indian team, Rahul is the best person. And Chappell should also continue, because you can’t work miracles in 18 months. If any coach comes and tells me or any other country that I can make a champion team in 18 months, I will not agree at all. He will probably be lying or hiding something from you,” added More.

வில் பி வெரி டிஸப்பாய்ன்டட். சரி, ஆயிட்டுப்போ! மொரே சார், உங்கள தான் வீட்டுக்கு அனுப்சாச்சுல்ல அப்புறம் ஏன் சும்மா எதுனாச்சும் பெனாத்திட்டு இருக்கீங்க? என்னது பதினெட்டு மாசத்துல எந்த கோச்சாலயும் சாம்பியன் டீம் உருவாக்க முடியாதா? சாப்பல் வந்தப்ப ஏற்கனவே இந்தியா சாம்பியன் டீம் தான் சார். என்னவோ இந்தியா பெர்முடா மாதிரி இருந்தது போலவும் சாப்பல் வந்துதான் அட்லீஸ்ட் இந்தளவுக்காவது (பெர்முடாவ வின் பன்றளவுக்கு!) கொண்டுவந்திருக்கார்ங்கற மாதிரில்ல பேசுறீங்க! ரெக்கார்ட்ஸ் எடுத்துபாருங்க சார். சேப்பல் வர்றதுக்கு முன்ன இந்தியா எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சது, அவர் கோச்சா வந்ததுக்கப்புறம் எத்தன ஓவர் சீஸ் மேட்ச் ஜெயிச்சிருக்குன்னு! சேப்பலும் நீங்களும் சேர்ந்து என்ன செஞ்சீங்க? ஒழுங்கா இருந்த டீம்ல பாலிடிக்ஸ் உண்டு பண்ணீங்க. பாவம் கங்கூலி யார் யாருக்கெல்லாம் ஜால்ரா போடவேண்டியிருந்தது?!

சச்சின், கங்கூலி, டிராவிட், சேவாக், யுவராஜ், உத்தப்பா, படான், ஸ்ரீ சாந்த் போல நல்ல ப்ளயர்ஸ வெச்சுக்கிட்டு முதல் சுத்துலயே வெளியே வந்தா என்ன நியாயம்? அந்த டீமுக்கு கோச்சிங் பண்ணவருக்கு கண்டிப்பா சப்போர்ட் பண்ணித்தான் ஆகனுமா? அவர் இன்னும் கோச்சா இருந்து என்னத்த சாதிக்கப் போறார்? இல்ல இந்த ப்ளேயர்ஸ் இன்னும் விளயாடி என்னத்த கிழிக்க போறாங்க?! போதும் போதும் நீங்க விளயாடினது ஏதாவது பொளப்ப பாத்து பொளச்சுக்கோங்க (யாராருக்கு என்னென்ன வேலைங்கறது கூட எங்ககிட்ட மெயில் இருக்கு fwd பண்றோம். எங்களுக்கு வேற என்னத்துக்கு ஆபீஸ்ல சம்பளம் கொடுக்கறாங்க!). நாங்க வேற டீம் உருவாக்கிக்கறோம். இதுல ஆயிரத்தெட்டு விளம்பரம். ஐயோ..ஐய்யோ..(வடிவேலு போல சொல்லவும்!)

டீம் ஒழுங்கா பேட் செய்யல அதுனால தான் வின் பண்ண முடியலங்கறது எங்களுக்கு தெரியாதா? அதுதானே ஏன்னு கேக்கறோம். விஷனா? என்ன விஷன்? இப்பவும் ஒரு விஷன் இருக்குமே?! விஷன் 2011 தான! எங்களுக்கு தான் தெரியுமே?! அதுல யார் கூட தோப்பீங்க? பெர்முடா! ட்ரை பண்ணுங்க. முயற்சி செஞ்சா எதையுமே செய்யலாம். “கலெக்டிவ் பெயிலியர்!” அதனாலதான் சொல்றாம் ஒரே கலெக்டிவ்வா எல்லோரும் வீட்டுக்கு போங்கன்னு.

கலெக்டிவ்னா எல்லோரும்: ப்ளேயர்ஸ், கோச், டீம் செலக்டர்ஸ் including Powar!

இவிங்க ரொம்ப நல்லவய்ங்கடா!

டிராவிட் அந்த நான்கு போர்கள் அடிக்கும் போதுகூட எனக்கு நிறைய நம்பிக்கையிருந்தது. ஆஸ்திரேலியாவின் பெவன் போல தனியாளாக நின்று போராடி ஜெயித்துக்கொடுப்பார் என்று தான் நம்பினேன். பெவன் இது போல எத்தனை முறை செய்திருக்கிறார்? வெறும் எழுபது ரன்கள் தானே? காலீஸ் எத்தனை முறை செய்திருக்கிறார்? யுவராஜ் எத்தனை முறை செய்திருக்கிறார்? வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஆனால் எப்படி தோற்கிறோம் என்ற ஒன்று இருக்கிறதல்லவா? அப்படியே நெடுஞ்சான்கடையாக போய் காலிலே விழுவதா? நான் டிராவிட்டை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அவர் மட்டும் என்ன செய்வார் பாவம்? அவர் மட்டும் தனியாக என்ன செய்திருக்கிறார் இது வரை? ஒன்று கங்கூலி அடிப்பார், டிராவில் துணை நிற்பார். இல்லையேல் சச்சின் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் யுவராஜ் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அதுவும் இல்லையேல் கைப் அடிப்பார், டிராவிட் துணை நிற்பார். அவர் தனியாக நின்று ஜெயித்துக்கொடுத்த மேட்ச் ஏதாவது இருக்கிறதா? கங்கூலி செய்திருக்கிறார். சச்சினும் செய்திருக்கிறார்.

ஒரு ஓவரில் நான்கு determined ஷாட்ஸ் அடித்து விட்டு அடுத்த ஓவரில் பரிதாபமாக விக்கெட்டைக் குடுப்பானேன்?! ஏன் கடைசிவரை நிற்பதுதானே? நின்று என்னத்த சாதிக்கபோறோம் என்ற நினைப்பா? அவர் சேவாக் போல அவுட் ஆகியிருந்தால் பரவாயில்லை, சேவாக்கின் அவுட் முரளியின் மாயாஜாலம். ஆனால் டிராவிட் தனது விக்கெட்டை தானே தூக்கிக் கொடுத்த மாதிரியல்லவா இருந்தது? அவர் நின்றிருந்தால் ஜெயித்திருப்போம் என்று நான் சொல்லவில்லை. பின்னால் அகார்கர் இருக்கிறார். ஹர்பஜன் இருக்கிறார். ஜாகீர் இருக்கிறார். இவர்கள் அனைவரும் ஓரளவுக்கு பேட்டிங் பிடிப்பவர்கள் தான். கொஞ்சம் நம்பிக்கை வைத்து இறுதி வரை போராடியிருக்கலாமே? அதுவும் இது என்னமாதிரியான ஒரு மேட்ச். தோற்றால் முதல் சுற்றிலே வெளியேற வேண்டும். சச்சின், டிராவிட், கங்கூலி என்ற மூன்று legends ஒன்றாக இருந்த டீம் முதல் சுற்றிலே வெளியே வருகிறது என்றால், 50 செஞ்சுரி,400 அம்பது, 12312 மூன்று என்று சும்மா கணக்கு மட்டும் வைத்து என்ன பிரயோஜனம்? கணக்கு எதற்கு? யாருக்கு வேண்டும் சொந்த கணக்கு?

சச்சின் டக் அவுட் ஆன பிறகு ஒரு விளம்பரம் -National Egg Corporation -வந்தது. ஒரு சின்ன பையன் முட்டை சாப்பிட்டுவிட்டு சச்சினுடன் கை குழுக்குவான், சச்சினுக்கு எழும்பு முறிவது போல வலிக்கும். என் நண்பர் ஒருவர் அடித்த கமெண்ட்- நல்லா முட்டைய சாப்பிட்டு வந்துட்டு முட்டை போட்டுட்டு போயிட்டார். சச்சின் ஒரு மாஸ்டர் பேட்ஸ்மேன். மறுப்பதற்கில்லை. ஆனால் முக்கியமான -மிக முக்கியமான- சந்தர்ப்பத்தில் ஆடாமல் விட்டால் மாஸ்டராவது, டோஸ்டராவது.

நான் போன பதிவிலே சொன்னது போலதான் இருந்தது கங்கூலியின் ஆட்டம். அவர் தூக்கி தூக்கி அடிக்க பார்க்கிறார். அவரால் strike rotate செய்ய முடியவில்லை. சுற்றி நிற்கும் fielders க்கு fielding practice கொடுத்தப்புறம் ரன் ரேட்டை (தனது strike rate) உயர்த்த தூக்கி அடிக்கிறார். சில சமயம் மாட்டுகிறது பல சமயம் முரளியின் கைகளில் மாட்டுகிறது. அவர் என்ன செய்வதென்று தெரியாமல இங்கும் அங்கும் ஓடுகிறார். (மலர் ஸ்டேடியத்தில் இருந்ததால் முரளி கொஞ்சம் ஓவர் enthu வா இருந்தாரோ?!)

மற்றொரு ஸ்வீட் சர்ப்ரைஸ் (ஸ்ரீலங்காவுக்கு!) யுவராஜ் அவுட். “இவிங்க ரொம்ப நல்லவய்ங்களா இருக்காய்ங்கடா, நமக்கு ரொம்ப தொல்ல தராம அவிங்களே அவுட் ஆகிட்டு போறாய்ங்க” என்று ஸ்ரீலங்காவின் கேப்டன் சொன்னதாக சிரிக் இன்போ செய்தி வெளியிட்டிருந்தது!

அப்புறம் நம்ப பிஞ்ச் ஹிட்டர். அகார்க்கர். என்னவாம் அப்படியொரு ராக்கெட் ஷாட் அடிச்சிட்டு அவ்ளோ அவசரமா ஓடினார்? அங்க பெவிலியன்ல யார் இருந்தாவாம்? பிஞ்ச் ஹிட்டர். நெக்ஸ்ட் கபில் தேவுக்கு என்ன ஆச்சு? இதெல்லாம் டூ மச்.

இதுக்கெல்லாம் மேல, ஏதோ டெஸ்ட் மேட்ச் ஆடிட்டு இருக்கற மாதிரி, டிராவிட் மட்டைய போட்டதுதான். என் நண்பர் : “மொல்லப்பா.. மொல்ல.. மொல்ல.. பந்துக்கு வலிக்கப்போகுது.” என்று மிக மிக எரிச்சலாக கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இவர்கள், மற்றவர்கள் ஆடும் மேட்சுகளைப் பார்க்கிறார்களா இல்லியா? அவனவன் எப்படி அடிக்குறான்? சும்மா அந்த ப்ளாஷ் கேம்ல அடிச்சமாதிரி பொலந்து கட்றானுங்க. இவிங்க என்னன்னா! சும்மா பெர்முடா மாதிரி ஏதாவது கிடச்சா போதும் சுத்தி நின்னு கும்மி அடிக்கறது, அடப்போங்கப்பா.

பாப் உல்மர், பாகிஸ்தான்-அயர்லாந்து மேட்சுக்கு முன்னர் ஒரு பேட்டியில்: ICC wants, minnows to give an upset. Lets just not hope thats us! என்றார். Chappell என்ன சொன்னார் என்று தெரியவில்லை. vision 2011 பத்தி யோசிச்சிட்டு இருந்திருப்பார். Chappell சொன்ன பதில் : We just didnt play enough cricket. ம்ம்..அதுதான் எங்களுக்கு தெரியுமே! நீங்க என்ன சொல்றீங்க? வேற சொல்லுங்க! இப்படி தோக்கறதுக்கு எத்தன build-up? விஷன் 2007, we are in process of strategic planning towards world cup!! எத்தன? வில்லன் படத்துல கருணாஸ் “இதுதானா உங்க டக்கு” ன்னு சொலறமாதிரி, “இதுதானாய்யா உங்க ப்ராஸஸ்”!

பவுலிங். அவனவன் 140,150ன்னு பொட்டுட்டிருக்கான், நம்பாளுங்க 90க்கு முக்கறாங்க. பின்ன எங்கிட்டு விக்கெட் விழும்? அப்புறம் நம்ப பேட்ஸ் மேன், சும்மா சொல்லக்கூடாது பவுன்ஸர் போட்டா சொல்லிவெச்சமாதிரி டக்குன்னு குனியிறாங்க. இந்த ஹ¥க்குன்னு ஒரு ஷாட் இருக்குமே அதெல்லாம் மறந்து போச்சா சார்? இல்ல பெர்முடாகூட மட்டும் தான் அடிப்பீங்களா? இல்லியே நாங்க மத்த நாடுகள் கூடவும் அடிப்பமே. ஆனா அவங்க இந்தியாவுக்கு வரனும். அப்பத்தான் அடிப்போம்!

வாஸ்க்கே டான்ஸ் ஆடின நம்ப ஆளுங்க ஜெயிச்சு சூப்பர்8க்கு போனா மட்டும் என்ன பண்ணப்போறாங்க? அங்க மெக்ராத், போலாக், பாண்ட் ஓடி வர ஆரம்பிச்ச உடனே ஒன்னுக்கு அடிச்சுறுவாங்க. மொத ரவுண்ட்லயே வெளியே வந்தது நல்லதுதான். இல்ல இன்னும் சிரியா சிரிச்சுறுப்பாய்ங்க. கங்கூலி ஆடுற ஆட்டத்துக்கெல்லாம், இவருக்கெல்லாம் கிரிக்கெட் ஆடத்தெரியுமா தெரியாதான்னு கேப்பாய்ங்க! ஏனய்யா சும்மா அவங்களையே பிடிச்சுக்கிட்டு தொங்கறீங்க? இவ்ளோ பேர் இருக்கற தேசத்துல ஆளே இல்லியா? சரி படான், ஸ்ரீசாந்த் எங்க போனாங்க? அகார்கருக்கு இவங்க ரெண்டு பேரும் கொறஞ்சு போயிட்டாங்களா? அட்லீஸ்ட் படான் பேட்டிங்காவது பண்ணுவார், அகார்கர் மாதிரி ராக்கெட் ஷாட் அடிக்க மாட்டார்! ஐயோ கடவுளே, இந்த அகார்கர் கிட்டயிருந்து இந்திய டீம காப்பாத்த யாருமே இல்லியா?! இந்த சுரேஷ் ரெய்னான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் எங்க போனார்? ஒன்னுமே புரியல! என்ன செலக்ஷனோ? என்னா கமிட்டியோ!

எங்க அண்ணன் கவலைப்படுவார், இந்த ஜெனரேஷனுக்கு அப்புறம் அடுத்த ஜெனரேஷன் ப்ளேயர்ஸ் யாரும் சரியில்ல என்பார். இப்போ பாக்கும் போது இந்த ஜெனரேஷனே சரியில்ல, பின்ன என்ன அடுத்த ஜெனரேஷன்?

அடப்போங்கப்பா, காலையில அஞ்சு மணி வரை கண்ணு முழிச்சு பாத்ததுக்கு ஒரே ஒரு பலன். இந்திய கிரிக்கெட் தெகட்டிப் போச்சு. புட்பாலுக்கு மாறலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன். அமேரிக்கவாசிகள் பேஸ்கட் பால் பார்ப்பீர்கள்! பெட்டர். இல்லியா? இந்த நேரத்தில வேற ஏதாவது கேம் (ஹாக்கி!) இந்தியாவில் பிரபலமாவதற்கு முயற்சி செய்தால் பலன் கிடைக்கும்! கிரிக்கெட்டர்ஸ்க்கு மட்டும் என்ன கொம்பா இருக்குங்கற இமேஜ உடைக்கலாம்! ஹாக்கி கப் வேற வருது! (ஆனா அவிங்களும் அப்படித்தான் முக்கியமான நேரத்தில சொதப்புவாங்க!) Best Wishes Hockey Team!

Cricket Team, Please Learn the basics! And learn from Bangladesh, what the word “team” stands for!

என்னோட ஜட்ஜ்மென்ட் (யார் கேட்டா?!) : Dissolve the team! Send every one to play Ranji or whatever local match (And dont recruit them how-so-ever they play, like you did for Jadeja!). Build a new young team – and a sub-team with a whole bunch of 11 members always ready – with Yuvraj as captain. Let them fight and let them win or loose! Yes. Winning or Loosing doesnt matter at all. We want a fight. A real fight! Fight and Die, Yeah, thats better!

விளம்பர செஞ்சுரியும் சிவாஜிக்கு இலவச டோக்கனும்.

*(ஹலோ, விளம்பரத்துக்காக ஒன்னும் நான் இந்த தலைப்பு வெக்கல, சும்மா தோணுச்சு வெச்சென். :)) )

விளம்பரம். விளம்பரம். விளம்பரம். இதைத்தான் கண்டோம் கிரிக்கெட்டில். எங்களுக்கு இத்தனைக்கும் பே சானல். நூறு டாலர் கட்டியிருக்கிறோம். ஒவ்வொரு ஓவருக்கு இடையிலும் விளம்பரம் போடுகிறார்கள் சரி. அதுக்காக விக்கட் கீப்பர் ஸ்டம்ப்பை சும்மாகாச்சிக்கும் தட்டிவிட்டாக்கூட விளம்பரம் போட்டுடுறாய்ங்கப்பா. சேவாக் என்னைக்காவது, அல்லது ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி தான் செஞ்சுரி போடுறாரு, அப்பக்கூட அவர் முகத்தில வர்ற சிரிப்ப பாக்கவிடாம விளம்பரம் போட்டுட்டாய்ங்க. அந்தப்பக்கம் கும்பளே கேமராவ தூக்கிட்டு நின்னாரு, சேவாக் செஞ்சுரி அடிக்கறத போட்டோ பிடிக்க, பாவம் அவராவது சேவாக்கத்தான் எடுத்தாரா இல்ல விளம்பரத்த எடுத்தாரான்னு தெரியல்ல.

ஆறாவது பால்ல சேவாக் ஒரு ரன் அடிச்சாரோ இல்லியோ, ஓவர் முடிஞ்சதோ இல்லியோ, உடனே அடுத்த மைக்ரோ செகண்ட் – அவர் இன்னும் அந்தப்பக்கட்டு ஓடவே இல்லீங்க.- விளம்பரம் -நோக்கியா, அந்த ஹோலி விளம்பரம். அந்த செல்போன நான் வாங்கவே மாட்டேன்னு என் நண்பர் சபதம் போட்டுவிட்டார்- போட்டுட்டாயங்க. அப்புறம் ரீப்ளேலதான் அவர் சிரிச்சாமானிக்கு பேட்ட தூக்கிகாட்றத பாக்கமுடிஞ்சது. இதுக்கு எதுக்கு நான் லைவ் -ராத்திரி கண்ணு முழிச்சு -பாக்கணும்? மறுநாள் ஹைலைட்ஸே பாக்கலாம்ல? தெரியுதுல பின்ன எதுக்கு முழிக்கிறன்னு கேட்டா என்ன சொல்றது?! நீங்க வெளம்பரம் போடுங்கப்பு வேணாங்கல, அதுக்கு ஒரு வகை தொகையில்லாம, அம்பையர் பவர்பிளேன்னு கைய சுத்திசுத்தி காட்ற கேப்ல கூட விளம்பரம் போட்டா எப்படி? அதுவும் அந்த உருப்படாத (ஆதித்யா பிர்லா) விளம்பரம். அதுக்கு டயாக்கின், ஏர் செல் விளம்பரம் சிம்பிள் பட் எபக்டிவ் இல்லீங்கலா?

சேவாக் செஞ்சுரி அடிக்கறதுக்குள்ள இவிங்க விளம்பரத்தில செஞ்சுரி போட்டுடறாய்ங்க. Mr. Starhub, since we have subscribed to the channel, we are not supposed to see any advertisements! Can you please look in to this!

***

துசரி, இந்தியா சூப்பர் 8க்கு போகுமா? அவன் அந்த மேட்ச்சில தோத்தா, இவன் இவ்ளோ ரன் வித்தியாசத்தில தோத்தா, நாம இவ்ளோ ரன் எடுத்து ஜெயிச்சான்னு நம்பள கணக்கு போட வெச்சே காலத்த ஓட்டுறாய்ங்க. கடைசி வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் வெக்கிறாய்ங்க இல்ல? அதுல ஒரு சந்தோஷம் ஹ¤ம். (ஆனா சும்மா சொல்லக்கூடாது பங்களாதேஷ் ஆட்டத்துல ஒரு discipline இருந்துச்சு!) இப்ப இதுக்கு போடற கணக்க இஞ்சினியரிங் படிக்கறப்பவே போட்டிருந்தா ஒழுங்கா நல்ல கம்பெனியில வேல பாத்திருக்கலாம். ஹ¤ம்.

பாப் உல்மர் இறந்துவிட்டார். பாகிஸ்தான் வெளியேறியதானல் ஏற்பட்ட ஸ்ட்ரஸ் காரணமா? என் நண்பன் ஒருவன்: அவர் மானஸ்தர்டா என்றான். நம்ப நாட்டாம சரத்குமார் மாதிரி. My deep condolences.

***

பாகிஸ்தான் வேளியேறியதைப் பற்றி ஒரு கமெண்ட்ஸ¤ம் இப்போ கொடுக்க முடியாது, வெள்ளிக்கிழமை போகட்டும், இந்தியா அப்புறமும் உள்ள இருந்தா பாக்கலாம். உத்தப்பா வைட் பால் எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா கொஞ்சம் நேரம் பேட்டுக்கு வற்ர பந்த மட்டும் ஆடினார்னா நல்லா இருக்கும். அப்புறம் செட்டில் ஆன பிறகு சாத்திக்க வேண்டியது தான? கங்கூலியின் பெர்முடாவுடனான ஆட்டம் கவலை அளிப்பதாக இருந்தது. He always tries to loft the ball. And these days he is quite unsuccessfull. முன்பு ஆடியது போலத்தான் ஆடுகிறார். முன்பும் என்பது பாலுக்குதான் half-century போடுவார். ஆனா அதுக்கப்புறம் அவர் 80-90 க்கு ஒரே ஜம்ப் பண்ணி போயிடுவார். He is not able to convert his half-centuries to centuries, can you guys see that? இப்போ கொஞ்சம் frustrationa வெளியே போயிருக்கிறார், அடுத்த ஆட்டம் பாக்கலாம். எனக்கென்னமோ ஒன்னும் சரியா தோணல. யுவராஜ் simply superb. வீட்டை கபளீகரம் செய்ததாலோ என்னவோ டோனி தனது வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை.

அது சரி, வீட்ட ஏன்ப்பா உடைக்கிறீங்க? உருவ பொம்மை கொழுத்தறீங்க சரி, கொழுத்திட்டுப் போங்க, வீட்ட போய் கபளீகரம் பண்ணனுமா? என்னக்கேட்டா அனைத்து வீரர்களும் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனைவரும். ஒருவர் பாக்கியில்லாமல். அப்ப என்ன செய்வீங்க? இனி விட்டாக்க வீட்ல இருக்கறவங்கள கடத்திட்டு போய் வெச்சுக்கிட்டு ஒழுங்கா விளையாடு இல்லீன்னா உன் மகன் க்ளோஸ்ன்னு சொல்லுவாய்ங்க போல இருக்கே? அயிரம் ஊழல் பண்ணிட்டு நம்பளோட அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்யாமல் இருக்கற அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் லஞ்சம் கேட்கிற அரசு அதிகாரிகளுக்கு எதிராகவும் இதை செய்தால் கொஞ்சம் புண்ணியமுண்டு. எங்கே அவர்கள் வீட்டை உடைக்கச்சொல்லுங்கள் பார்ப்போம்!

நாம எழுதற கோட்ல (code) பக்ஸ் வாரதுக்காக சம்பளத்த குறச்சு கொடுத்தா ஏத்துப்போமா? cricinfo ல சொன்னமாதிரி Cricket is just a game. A game between leather and willow.

***

பின்தொடரும் நிழலின் குரல் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்ப புரியுதா நான் ஏன் கொஞ்ச நாளா இந்தப்பக்கம் வரலுன்னு? கொஞ்சம் பயம் வந்துடுச்சு. நாவல் படிச்சப்புறம் நம்பல ஏதும் நிழல் பின் தொடரும்மான்னு. கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு படிக்கறதுக்கு. ஏற்கனவே கொற்றவையை ஆரம்பித்து கைவிட்டுவிட்டேன். ulysses போல கொற்றவையைப் படித்து முடிப்பதும் வாழ்க்கையின் லட்சியங்களில் ஒன்றாகிவிட்டது. கம்யூனிசத்தின் pros and cons விவரிக்கப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது. balanced view தானே? இப்பொழுதுதான் வீரபத்ரபிள்ளை எழுதிய கடிதங்களுக்கு வந்திருக்கிறேன். திருப்பி திருப்பி சொன்னதையே சொல்வது போல இருக்கிறது. அது கொஞ்சம் tired ஆக்குகிறது.

tired ஆகிற பொழுது புத்தகத்தை மூடி வைத்துவிடுகிறேன். வீரபத்ரபிள்ளையும் அருணாச்சலமும் பின் தொடர ஆரம்பித்துவிடுகின்றனர். பேசாம harry potter and half blood price க்கு தாவிவிடலாமா என்று சீரியஸாக யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

***

மீண்டும் ஒரு முறை Forrest Gump பார்த்தேன். what an inspirational movie it is! (But really are we getting inspired? அப்படி inspire ஆகியிருந்தால் நான் எதுக்கு இந்தப் படத்த இன்னொரு தடவ பாக்குறேன்!) Always do your best என்கிறது படம், செய்கிறோமா?

Apocalypto என்றொரு படம் பார்த்தோம். GVMax என்ற பெரிய திரையரங்கில். வழக்கம்போல MilGibson அதிக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தார். தலையைத் துண்டமாக வெட்டி, நெஞ்சாங்கூட்டில் கைவிட்டு இதயத்தை எடுத்து இரத்தம் குடிப்பது போன்ற சிலருக்கு தலைசுற்ற வைக்கும் காட்சிகள். அதில் ஹீரோவினுடைய பெயர் jacuar paw. சொல்ல மறந்துவிட்டேன் படத்தில் மொழியே கிடையாது. மிருகங்களுக்கு மொழியேது?

இப்படி நெஞ்சாங்கூட்டை இவர்கள் திறந்து மூடிக்கொண்டிருக்க என் நண்பன் ஒருவன் தலைசுற்றல் வந்து பாதியிலே எழுந்து போய்விட்டான். அன்றிலிருந்து அவனுக்கு ஜாக்குவார் தங்கம் என்ற திருப்பெயர் நிலவிவருகிறது. ஆனால் அவன் எழுந்து போன பிறகு படம் நன்றாகவே இருந்தது. குறிப்பாக அந்த கடைசி chase. very much impressive. நம்ப ஜாக்குவார் மிஸ் பண்ணிட்டார்.

இப்ப அவனுக்கு கோனபாட்டில் கோவிந்தன் என்றொரு பெயரும் வழங்கப்படுகிறது. அது என்ன கோனபாட்டில் கோவிந்தன் என்று கேட்பவர்களுக்கு: அவன் தண்ணீர் பிடித்து குடிக்கும் பெட் பாட்டில், ஒரு நாள் இவன் சூடான தண்ணீர் ஊற்றியதால், சற்று நெளிந்து விட்டது. அப்படியும் விடாமல் அந்த பாட்டிலில் தான் தண்ணீர் குடிப்பேன் என்று குடித்துக்கொண்டிருக்கிறான். அதனால் தான் அவனுக்கு அந்த பெயர்.

***

ன் நண்பருக்கு வேறு ஒரு கவலை, செல்விய நிப்பாட்டிட்டு அரசின்னு புது சீரியல் ஆரம்பிச்சாங்க, இப்பப் பாத்தாக்க அரசில அதே செல்வி கத தான் தொடருது. என்னத்த சொல்றதுன்னு அவர் சலிச்சுக்கறார். ரொம்ப முக்கியம்!

அதே நபர் என்னிடம் முன்பு ஒரு நாள், செல்வில நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா, நானும் என் வைப்பும் நேத்து வெளில போய்ட்டம் பாக்கமுடியல- இல்லீன்னா அவ வீட்ல இருந்தா அவ, நான் வீட்ல இருந்தா நான் யாரவது பாத்துட்டு இன்னொருத்தருக்கு கத சொல்லுவோம்- நீங்க பாத்தீங்களா, பாத்தீங்கன்னா என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் என்றார். நான் சீரியலெல்லாம் பாக்குறதில்லீங்ண்ணான்னு எஸ்கேப் ஆயிட்டேன். எப்படித்தான் இந்த சீரியல கட்டிட்டு அழறாங்களோ தெரியல. எல்லாம் வீட்டம்மாக்கள் பண்றது. சும்மாவா சொன்னாரு கவிஞர்: (சீரியல் பாக்காத) மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு. Bachelors வேண்டிக்கோங்கப்பா.

கல்யாணம் ஆனவங்களுக்கு, ஒன்னும் பண்ணமுடியாது. தலையில எழுதினத மாத்த முடியுமா என்ன? My deep regrets! நீங்களும் கூட உட்கார்ந்து பாத்து enjoy பண்ணுங்க. வேற என்ன பண்றது?!

***

சிவாஜி படத்த முதல் நாள் பாக்குறதுக்கு சென்னையில டோக்கன் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு என் நண்பன் ஒருவன் சொன்னான். ஒரு டோக்கன் விலை ஆயிரத்து நூறு ரூபாயாம். ரொம்ப கம்மியா இருக்கே!

ஏதாவது election வந்தாலாவது பரவாயில்ல, சிவாஜிக்கு இலவச டிக்கெட் தாரோம்னு யாராவது வாக்குறுதி கொடுப்பாங்க, அவங்களுக்கு ஓட்டப்போட்டுட்டு டிக்கெட்ட வாங்கிக்கலாம், இப்போதைக்கு election கூட இல்லியே, என்ன பண்றது?

***

காந்தம்

(தொடர்கதை)
5

“ராக்கு எந்திரிடி” என்கிற வார்த்தைகள் அவளது மனதில் எழுந்து தொண்டையிலே நின்று கொண்டது. கைகள் மிக வேகமாக இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. அவள் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்த தண்ணீர் செம்பு அவளது ஆக்ரோஷமான கைகள் பட்டு உருண்டோடியது. சத்தம் கேட்டு ராக்கு பதறி விழித்தாள்.

“அண்ணி என்னண்ணி ஆச்சு? ஐயோ கடவுளே” என்று அடித்துக்கொண்டு எழுந்தாள். சத்தத்தில் முழித்த செந்தில் ஏதும் புரியாமல் அழ ஆரம்பித்தான். ராக்கு செய்வது தெரியாமல் இரும்புக்கம்பி ஏதும் கிடக்கிறதா என்று தேடினாள். சாவியைத் தேடினாள். ஒன்றுமில்லாத வீட்டிற்கு சாவி எதற்கு? வெளியே ஓடிப்போய் எதிர் வீட்டு கிழவியின் பாக்கு இடிக்கும் சிறிய உரலை வாங்கி வந்தாள்.

“செந்தில் ஓடிப்போய் தெக்குவீட்டுக் கிழவிய கூட்டிட்டு வாடா” என்றாள். செந்தில் வெளியேறி ஓடினான். தெக்குவீட்டுக்கிழவியை போய் கூப்பிடவேண்டும் என்பது மட்டும் தான் அவனுக்கு தெரிந்தது. நடக்கப்போவது பற்றி அவன் எதையுமே அறிந்திருக்கவில்லை. யார் தான் அறிவார்?

மழை விட்டேனா பார் என்று சுழற்றி சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது. செந்திலின் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தெருவெங்கும் இருந்தது. மழை வராதா என்று காத்துக்கிடந்த மக்கள் மழை வந்ததும் வீடுகளுக்குள் சென்று ஒளிந்து கொண்டனர். மழை மக்களைக் காணாமல் தெருவெங்கும் ஓடித்திரிந்தது.

“ர்ர்ர்..ர்ர்ர்…க்க்க்க்கு..க்க்..க்க்…க்க்..கா..க்கா…ள்ள்ள்..ளி..ய்ய்” செல்லம்மாவின் பற்கள் கிட்டித்துக்கொண்டன. நாக்கு எழவில்லை. கைகள் எதையோ விடாபிடியாக பிடித்துக்கொண்டிருப்பதைப் போல இருந்தது. அவள் கண்கள் உறக்கத்திலிருக்கும் காளியையே பார்த்துக்கொண்டிருந்தது. கண்களில் நீர்த்துளி பெறுக்கெடுத்தது. கால்கள் இழுத்துக்கொள்வதை நிறுத்திக்கொண்டன.

சட்டென்று அனைத்தும் இளகியது. கண்கள் குத்திட்டு நின்றன. அவை கூரையின் இடுக்கில் தெரிந்த சிறிய துவாரத்தையே உற்றுப் பார்த்தவாறு இருந்தன.

“ஐயோ அண்ணி..” என்ற சத்தம் ஊரெங்கும் ஒலித்தது. எதிர் வீட்டுக் கிழவி அசையாமல் உட்கார்ந்திருந்தாள். சிறையில் மாணிக்கம் திடுக்கென்று விழித்தான். அவன் முகம் வியர்வையால் நனைந்திருந்தது.

***

“டேய் என்னடா அழுதிட்டேயிருக்க? என் செல்லம்ல கண்ணுல பால குடிச்சிடு ராசா” என்று சங்கில் பாலை ஊற்றி காளிக்கு குடுத்துவிட முயற்சிசெய்து கொண்டிருந்தாள் ராக்காம்மா. செந்திலும், குமாரும் வெளியே விளையாடச்சென்றிருந்தனர். பக்கத்தில் ராணி உட்கார்ந்தவாறு காளியையும் ராக்குவையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ராக்குவின் வீட்டுக்காரன் ரங்கன் அடுப்பில் எதையோ கொதிக்கவிட்டுக்கொண்டிருந்தான். அவன் காளியை சமாதானப் படுத்த அங்கிருந்தவாரே ஏதேதோ விசித்திரமான ஒலி எழுப்பிக்கொண்டிருந்தான். ரங்கனுக்கு காளி என்றால் உயிர். செல்லம்மா இறந்துவிட்ட பிறகு இவர்கள் அனைவரும் தங்களது கிராமத்துக்கு திரும்பிவிட்டிருந்தனர். வாழ்க்கை மெல்ல பிடிபடத்தொடங்கியது. ராக்கு குழந்தைகளை சமாளிக்கக் கற்றுக்கொண்டாள். குமாரும், செந்திலும் சொன்னதையெல்லாம் கேட்டு சமர்த்தாக இருந்தனர். அவர்களுக்கு எல்லாமே புரிந்தது போலவும் எதுவுமே புரியாதது போலவும் இருந்தது.

வாசலில் நிழலடவே ராக்கு யார் என்று நிமிர்ந்து பார்த்தாள். “அண்ணே….வாண்ணே..எப்பண்ணே வந்த” காளியை அனைத்தவாறு பதற்றம்கலந்த மகிழ்ச்சியுடன் எழுந்தாள். சங்கு உருண்டோடியது.

***

“ஏண்ணே போற போறங்கற? எங்களோடவே இருந்திடவேண்டியது தானண்ணே. இந்த குழந்தைகள வெச்சுக்கிட்டு எங்கண்ணே போவ? எப்படி காப்பாத்துவ?” ராக்குவின் குரல் தழுதழுத்தது. பேசமுடியாமல் கேவிகேவி அழுதாள். “மாமா சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. சம்பந்தகாரர் வீட்டில இருக்கம்னு நினைக்காதீங்க. நான் உங்களை அப்படி நினைக்கல. உங்க குழந்தைகளையும் நான் அப்படி நினைக்கல. நாம ரெண்டு பேருமே சேர்ந்து விவசாயம் செய்யுவோம். வாரத வெச்சு சாப்டுவோம். எங்கள விட்டுட்டு குழந்தைகள கூட்டிட்டு போகாதீங்க மாமா” என்றான் ரங்கன். ரங்கனின் ஆத்தாகிழவி “அட ஆமாப்பா இரப்பா இங்கனயே..எங்க போயிட்டு என்ன பண்ணுவ?” என்றாள். ஆனால் இவை எதையுமே கேட்கும் மனநிலையில் இல்லை மாணிக்கம்.

“இல்லத்தா நான் போறேன். ஆந்திராப்பக்கம் எங்கிட்டாவது போய் பொழச்சுக்கறேன். உன் வாழ்க்கை உன்னோட. நீ ஏன் தேவையில்லாத பாரத்த தூக்கி சுமக்கற. கிடைக்கறது எதுவோ அது எங்களோடயே இருக்கட்டும். நீ கஷ்டப்படாத ஆத்தா” என்றான். “அண்ணே உன் குழந்தைகள் எனக்கு பாரம்மாண்ணே. ஏண்ணே இப்படி பேசுற?” “இல்லத்தா நான் போறேன். நீங்க பாத்து பிழச்சுக்கிடுங்க” “அண்ணே காளிய மட்டுமாவது எங்கிட்ட விட்டுட்டு போண்ணே. இந்த சின்ன பயல வெச்சுக்கிட்டு என்ன பண்ணுவ நீ? அவனுக்கு கஷ்டம் உனக்கும் கஷ்டம். அண்ணே தயவு செஞ்சு காளிய எங்கிட்ட கொடுத்துடுண்ணே” ரங்கன் காளியை அனைத்தவாறு இருந்தான். அவன் கண்களில் ஏனோ நீர்துளி ஒன்று தோன்றியது.

***

“ஆம். உதித்துவிட்டது. கடைசியில் உதித்தேவிட்டது. குமுறும் எரிமலையாய். கொந்தளிக்கும் கடலாய். உறுமும் புலியாய் உப்பரிகைத்தீயாய் கடைசியில் எழுந்தேவிட்டது செஞ்சுடர். இந்த சுடர் ஏழைகளின் வீடுகளிலே சூழ்ந்திருக்கும் இருளை என்றைக்குமாக அகற்றும். நமது தளபதி தமிழ் இருக்கும் வரையிலும் அன்புத் தொண்டர்கள் உக்கிரமாக இயங்கும்வரையிலும், மக்களான உங்களது மகத்தான ஆதரவு இருக்கும் வரையிலும் இந்த சுடர் அநீதிக்கு எதிராக எரிந்துகொண்டேயிருக்கும். இனி யாரும் எம்மக்களை சுரண்டவிடமாட்டோம்” மகிழன், தமிழின் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தார். தமிழ் தன்க்குள் சிரித்துக்கொண்டார். “..இன்று உதித்த மறுமலர்ச்சி கழகம் மேன்மேலும் வளரட்டும் என்று கூறி தளபதி தமிழ் அவர்களை பேசவருமாறு அழைக்கிறேன்” என்று முடித்தார் ம.கவின் நிறுவனர் மறைமலை. அவர் வாயில் வழிந்தோடிய வெற்றிலைச் சாற்றை துடைத்துக்கொண்டே இரு கைகளை நீட்டி தமிழை அழைத்தார்.

தமிழ் கம்பீரமாக எழுந்து மறைமலையை நோக்கி நடந்து வந்து அவரது அகன்ற கைகளில் அடங்கிக்கொண்டார். இருவரும் ஆரத்தழுவிக்கொண்டனர். மறை தமிழின் முதுகைத் தட்டிக்கொடுத்தார். கூட்டம் கட்டுக்கடங்காமல் கரகோஷம் எழுப்பியது.

மறைமலை மெதுவாக நடந்து சென்று மகிழனின் பக்கத்தில் இருந்த காலியான இடத்திற்கு சென்றார். மகிழன் பவ்யமாக எழுந்து நின்று கும்பிட்டார். “அட உக்காருங்க தம்பி. எப்ப வந்தீங்க?” “கொடியேத்தும் போது வந்தேண்ணே. ஷ¥ட்டிங்கில கொஞ்சம் நேரமாயிடுச்சு. மன்னிக்கனும்.” என்றார் மகிழன். “அட அதனால என்ன தம்பி. என் காலம் முடிஞ்சது. இனி என் அன்புத் தம்பிங்க நீங்க ரெண்டுபேரும் இருக்கீங்க. இது உங்க கட்சி இனிமேல். அடுத்து நீங்க தான் பேசனும்” என்றார் மறைமலை.

மகிழன் சிரித்துவிட்டு கூட்டத்தை நோக்கி ஆழ்ந்த பார்வையை வீசினார். கூட்டம் முழுதும் மகிழனையே பார்த்துக்கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்த தமிழ் நிறுத்திவிட்டு மகிழனைப் பார்த்தார். பின் சிரித்துவிட்டு மீண்டும் விட்ட இடத்திலிருந்து திருக்குறளைச் சொல்ல ஆரம்பித்தார்.

***

நீண்ட செம்மன் சாலை கண்ணுக்கெட்டியதூரம் வரை வரண்டு கிடந்தது. ஆங்காங்கே பணை மரங்கள் சிலைபோல அசையாமல் நின்று கொண்டிருந்தன. “போதும்மா நீ உன் வீட்டுக்கு போ. இனி நான் போய்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் மாணிக்கம். தோளில் ராணி தூங்கிக்கொண்டிருந்தாள். இடக்கையில் செந்திலும். செந்தில் கையை குமாரும் பிடித்தவாறு அவர்கள் சென்றனர். சூரியன் உதிக்கத் தொடங்கியிருந்தது. செம்மனின் நிறம் சூரிய கதிர்களால் மேலும் பொன்னாக மின்னின. காலை குளிரில் மண் நடப்பதுக்கு இதமாக இருந்தது. நேரம் போக போக இதே மணல் சுட்டு பொசுக்க ஆரம்பித்துவிடும். செந்திலும், குமாரும் தாங்குவார்களா? அவர்களது பிஞ்சுக் கால்கள் இவை எதையும் அறியாமல் அப்பாவின் நிழலில் நடந்துகொண்டிருந்தனர்.

கொஞ்ச தூரம் நடந்ததும் மாணிக்கம் நின்றார். குமாரையும் செந்திலையும் அங்கேயே விட்டு விட்டு, ராணியை தோளில் சுமந்தபடி ராக்குவை நோக்கி திரும்பி வந்தார். தன் கழுத்தில் கிடந்த புலி நகம் கொண்ட கருப்புக் கயிறை கழற்றி ராக்குவின் கைகளில் சுகமாக கண் மூடி ஆழந்த உறக்கத்திலிருந்த காளியின் கழுத்தில் போட்டார். கீழே குணிந்து காளியின் சின்ன கண்ணத்தில் முத்தமிட்டார். “நீ நல்லாயிருப்படா” என்று தழுதழுப்பான குரலில் சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்காமல் நடக்கத்துடங்கினார்.

சூரியன் கிட்டத்தட்ட உதித்துவிட்டது.

***
(தொடரும்)

தோன்றலும், பின் மறைதலும்

(சிறுகதை)

மிகவும் இருட்டாக இருந்தது. கண்களைத் திறந்திருக்கிறேனா இல்லையா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. திறந்துதான் இருக்கிறேன். ஏசி குளிர் கடினமாக என்னைத்தாக்கியது. நான் கனத்த ரசாயால் என்னை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். ரசாய்க்குள் இன்னும் இருட்டாக ஆனது போல் இருந்தது. கண்களை விழித்து ரசாயை ஊடுருவி பார்க்க முயன்றேன். தலை வலித்தது. இல்லை அப்படி தோன்றுகிறதா? ரசாயை விலக்கி எழுந்து உட்கார்ந்தேன். குளிர் எனது நாசிக்குள் செல்ல முயன்றது. உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஏற்பட்டது போல இருந்தது. அட்லீஸ்ட் பேனையாவது ஆப் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன். எழுந்து சென்று ரீடிங் டேபிளில் ஜண்டு பாமைத் தேடினேன். புத்தகங்களுக்கு மத்தியில் அது ஒளிந்து கொண்டிருந்தது. கைகளில் தட்டுப்பட்டது. நன்றாக தேய்த்துக்கொண்டேன். மெதுவாக நடந்து ஜன்னல் அருகில் வந்து திரைச்சீலையை விலக்கினேன். வெளியே பொங்கிக்கொண்டிருந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளி பாய்ந்து வந்து என்னில் ஒட்டிக்கொண்டது. நிசப்தமாக இருக்கும் மரங்களை என் ஜன்னலின் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் வந்து என் கட்டிலில் மெத்தென்று உட்கார்ந்தேன். ரசாயை கழுத்துவரை போர்த்திக்கொண்டேன். காது மடல்கள் ஜில்லிட்டு குறுகுறுவென்றிருக்கவே மீண்டும் தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டேன். இப்பொழுது ரசாயின் ஊடே மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் பரவியது. ஜண்டுபாம்மின் கனத்த நெடி மூச்சுக்காற்றில் ஊடுறுவி என் சுவாசத்தை கடினப்படுத்தியது. தலையிலிருந்து ரசாயை விலக்கிகொண்டேன். அருகிலிருந்த் டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தேன். மணி சரியாக ஒன்று. மீண்டும் விட்டத்தை பார்க்கத் தொடங்கினேன். திடீரென்று என் செல்போனை எடுத்து ஏதேனும் கால் அல்லது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை.

ஒரு பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டேன். டிஜிட்டல் கடிகாரத்தில் எண்கள் மெர்குரி நிறத்தில் பளிச்சென்று இருந்தன. நடுவில் இரண்டு புள்ளிகள் தொன்றின. பின் மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்..தலையை திருப்பி மறுபக்கம் சாய்ந்து கொண்டேன். தலையனையிலிருந்து ரூம் ஸ்ப்ரே அல்லது என் பாடி ஸ்ப்ரே அல்லது என் செண்ட் அல்லது இவையெல்லாம் சேர்ந்தது போல் ஒரு நெடி எழுந்து அழுத்தமாக என் நாசிக்குள் நுழைந்தது. ஜண்டு பாமின் ஸ்மெல் இப்பொழுது தலையனையின் ஸ்மெல்லால் அடக்கியாளப்பட்டிருந்தது. சோனி மியூசிக் சிஸ்டம் சாந்தமாக இருந்தது.

இருட்டிலே இளையராஜாவின் சிடியைத் தேடினேன். கிடைத்த ஒன்றை எடுத்து ட்ரேயை திறந்து உள்ளே வைத்து மூடினேன். ரிமோட் கன்ட்ரோலை எடுத்துக்கொண்டு மெத்தைக்கு வந்தேன். மீண்டும் ரசாயை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டேன். ப்ளே. சோனியின் சின்ன திரையில், சிடி 1 என்று தோன்றி சிறிது நேரம் யோசித்து விட்டு, பாட ஆரம்பித்தது. “ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு..” பாடல் சன்னமாக ஒலித்தது. ஜானகி ஹிட்ஸ் போல இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸாக கூட இருக்கலாம். ஏன் எம்.எஸ்.வி ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். இல்லையேல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். தவறுதலாக இந்தப் பாடலை நான் பதிவு செய்திருக்கலாம். அடுத்த பாடலை வைத்துதான் என்ன ஹிட்ஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எதையும் யாரையும் நம்பமுடியவில்லை. பிஸ் அடித்து விட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது.

நான் என் அறைக்கதவை முடியபோது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நமது மூளைக்கு அல்லது மனதுக்கு -மனதென்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன? இருந்தால் எங்கே இருக்கிறது? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற?- இப்படி ஒரு ப்ளஷ் இருந்தால் ரொம்ப வசதியாக இருக்கும். தெவையில்லாத நினைவுகளை எவ்வளவு எளிதாக ப்ளஷ் செய்து கொள்ள முடியும்? ஒரு செர்ச் வசதி கூட இருக்கலாம். என்ன நினைவுகள் என்று தேடுவதற்கு! மறுபடியும் ஜன்னலோரம். ஆழ்ந்த அமைதி. “ராசாவே.. உன்னை விட மாட்டேன்” என்ற பாடல் பாடத்தொடங்கியது. ஜானகி ஹிட்ஸ் தான் போல இருக்கிறது.

மீண்டும் மெத்தை. இப்பொழுது காலில் ஈரம் படர்ந்திருப்பதால் முன்பை விட அதிகமாக குளிர்ந்தது. ரசாயை எடுத்து போர்த்திக்கொண்டேன். கைகளை தலைக்கு அடியில் சேர்த்து வைத்துக்கொண்டு விட்டத்தை மீண்டும் முறைக்க ஆரம்பித்தேன். சோனி ப்ளேயரில் லைட் சீராக பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தது.

திடீரென்று செல்போனை எடுத்து A வைப் ப்ரஸ் செய்தேன். அடுத்து K வை ப்ரஸ் செய்தேன். அக்ஷதா என்று திரையில் தோன்றியவுடன், கால் பட்டனை ப்ரஸ் செய்தேன். காலிங் அக்ஷதா என்று திரையில் தோன்றியது. காதுக்கு கொடுத்தேன். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்….”Please record your voice message….” டாமிட். யூ ஆர் கில்லிங் மீ அக்ஷதா. வை டோன்ட் யூ ஜஸ்ட் ஆன்சர் மை கால். கோபம் பீறிட்டுக்கொண்டு வரவே, செல்போனை தூக்கியெறிந்தேன். அது மெத்தையின் ஒரு முனையில் சென்று விழுந்தது. அதிலிருந்து மங்கலான ஒரு வெளிச்சம் வந்து கொண்டுருந்தது. கட்டிலில் தவழ்ந்து மறு முனையை அடைந்து செல்போனை எடுத்து மீண்டும் கால் செய்தேன். ரிங். ரிங். ரிங். ரிங்…

***

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்..மான் புலியை வேட்டைதான் ஆடிடுமே கட்டில்..முன்னும் பின்னும் நான் முழுமையா..” தலையில் தட்டப்பட்டு காதில் இருந்த பெரிய இயர்போனை கழட்டினேன். ஆல்ட்-டேப் போட்டு சட்டென்று என் ஸ்க்ரீனை மறைத்தேன். “டர்டி பெல்லோ” என்று குரல் கேட்டு பின்னால் திரும்பினேன்..”என்ன” “செவுடாடா நீ. எத்தனவாட்டி போன் அடிக்குது. எடுக்கறதில்ல? மூஞ்சப்பாரு!” என்று சொல்லிவிட்டு தன் இடத்தில் -எனக்கு நேர் எதிராக இருந்த க்யூபிக்கள்- சென்று அமர்ந்துகொண்டாள். “ச்..சே..முதல்ல இடத்த மாத்தி வேற பக்கம் போகனும். இவ கண்ணிலே சிக்கக்கூடாது. தலையில் அடிக்கறா?!” “என்ன முணுமுணுக்கற?” “ம்ம்..உன் போனிடெய்ல் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னேன்” “அது. அந்த பயம் இருக்கட்டும்!” என்னுடைய டெஸ்க் போனில் ஐந்து மிஸ்டு கால்ஸ் இருந்தது. யார் யார் என்று பார்த்தேன். என் பாஸ் தான். 342 டயல் செய்தேன். விஷாந்த் என்று போன் ஸ்கிரீனில் தெரிந்தது. “வேர் வேர் யூ மேன்? ஹவ் மெனி டைம்ஸ் ஐ ஹாவ் டு கால் யூ? டோன்ட் யூ எவர் புட் தாட் ஸ்டுபிட் இயர்போன் அகெய்ன் ஆன் யுவர் ஸ்டுபிட் ஹெட். அன்டர்ஸ்டான்ட்” “ஓகே விஷாந்த். கூல்!” (போடா பவர் மண்டையா! பவர் : அவருடைய ப்ராஜெக்ட்) “ஸோ.வாட்ஸ் அப்?” “யூ காட் டு கோ டு செமினார் ஹால் 5. ப்ரஸெர்ஸ் ஆர் வெயிடிங் பார் யூ. கமான் மேக் இட் பாஸ்ட்!” “ஓகே. ஜஸ்ட் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்(பவர் மண்டையா!)” டொக்கென்று போனை வைத்தேன்.

“என்ன வாங்கிக்கட்டினியா?” என்றாள். “ம்ம்..அஞ்சு கால் அடிச்சப்புறம் தான் வந்து தலையில் தட்டுவியா? மொத கால் அடிக்கும்போதே வறதுக்கென்ன?” “நான் என்ன உனக்கு பிஏவா? உன் ப்ளேஸ்க்கு வரதுக்கே பயமாக இருக்கு. நீ என்னென்னம்மோ பாக்குற! (உதட்டை சுழித்துக்கொண்டாள். மச்சம் கொஞ்சம் மேலே ஏறி பின் கீழே இறங்கி தன் இடத்துக்கு மீண்டும் வந்தது) டர்டி பாய். (நான் பார்ப்பதை உணர்ந்தவளாக) வோய் என்ன பாக்குற? உத வாங்கப் போற” “ம்ம்..க்க்க்ம்ம்ம்..அசின்னு நெனப்பு. சரி நான் ஹால் பைவுக்கு போறேன்.” “போ. எனக்கென்னவந்தது!” என்னுடைய டைரியை எடுத்துக்கொண்டேன். பேனா இல்லை. “பேனா கொடுடி” “முடியாது போடா. நீ கடிச்சு கடிச்சு கொடுப்ப. பேனா கூட இல்லாம நீ என்ன வொர்க் பண்ற?” “ப்ளீஸ் டா” சற்றே கோபமாக தன்னுடைய ஹேன்ட் பேக்கில் தேடி எடுத்துக்கொடுத்தாள். அழகான மெல்லிய நீல கலர் பேனா. “வோய் பத்திரமா கொண்டுவா. வாய்ல கடிச்சு எச்ச பண்ணாம கொண்டுவா புரியுதா?” “சரி (டி முட்டகண்ணி)” ஓட்டமும் நடையுமாக லிப்டை நோக்கி சென்றேன். “ஐயோ செல்போன்” மீண்டும் என் க்யூபிக்களுக்கு வந்து சார்ஜ் போட்டிருந்த செல் போனை எடுத்தேன், அவள் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள் “என்ன” என்றேன் “நத்திங்” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

***

செமினார் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று தான். “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “சோ நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். அக்ஷதா” “ஓகே மிஸ். அக்ஷதா. கோ அகெட் ப்ளீஸ்” “வென் வீ ஹேவ் திஸ்…” அவள் உதடுகள் மிகச் சரியாக அளவாக அழகாக இருந்தன.

“ஸோ..த டேட்டா ப்ளோஸ் த்ரூ திஸ் லேயர்.. அன்ட்” அவளுடைய ப்ரீ ஹேர் மெல்லிய காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்தது. ஒரு கற்றை முடி கண்னத்தில் விழுந்து அவளது கண்களை சில சமயம் மறைத்தது. “வீ ஹாவ் செக்ரிகேட்டட் எவ்ரி அதர் திங்க்ஸ் இன் திஸ்..” அவளது மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் முடியை பின்னால் இழுத்து விட்டுக்கொண்டன. அளவான கண்ணம். சின்ன கண்கள். இரண்டு முறை சிமிட்டிக்கொண்டது. பட்டர்ப்ளை தன் மெல்லிய சிறகை அழகாக அடித்துக்கொள்வதைப் போல. “திஸ் இஸ் ப்ரஸண்டேசன் லேயர்..வாட் எவர்..” மாநிறம். நிறத்துக்கு ஏற்றார் போல மெல்லிய பீச் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டா மிஸிங். ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..”ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்” செறுமலுடன் மார்க்கர் பேனாவை மூடி போர்டில் இருந்த ஸ்டாண்டில் வைத்துவிட்டு, டேபிலை அடைந்து வாட்டர் பாடிலை எடுத்து தண்ணீர் குடித்தேன். “சோ தாட்ஸ் ஆல் பார் டுடே கைஸ். லெட் அஸ் மீட் டுமாரோ..ஹெல்ப்..” என்று வாட்டர் பாட்டிலை மூடி டேபிளில் வைத்தேன். அவள் தன்னுடைய ஹேண்ட் போனை எடுத்து ஏதோ மெசேஜ் செக் செய்துகொண்டாள். பாய் ப்ரண்டாக இருக்குமோ? மீண்டும் தண்ணீர் குடித்துக்கொண்டேன்.

லிப்ட் மூன்றாவது மாடியில் நின்றது. ஒரு தெய்வீக மனம் கமழ்ந்தது போல இருந்தது. அவள் தான் நுழைந்தாள். ப்ளூ ஜீன்ஸ் அன்ட் வைட் ரவுண்ட் நெக். ப்ரீ ஹேர். “ஹாய்” “ஹாய்” வட்ட கருப்பு பொட்டு. கூடவே ஒரு அட்டு பிகரு. அட்டு பேசியது: “ஹலோ” “ம்ம்” “வீ கேம் பார் எ டீ ப்ரேக்” “ஓ” (ரொம்ப முக்கியம். நீ கொஞ்ச நேரம் வாய மூடேன். அவ பேசமாட்டாளோ?!) கையில் நோக்கியாவில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள். “ஆர் யூ லேட் டுடே?” (அடச்சே!) “ம்ம்..” ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் இறங்கிச் சென்றாள். ஒரு வார்த்தை கூட பேசாமல்.

யாம் வெயிட்டிங் பார் யூ அட் த லிப்ட் லாபி. யா இட்ஸ் அர்ஜெண்ட்” அக்ஷதா அழைக்கும் போது அர்ஜெண்டாவது மண்ணாவது. அவளது ப்ராடெக்ட் (முதலில் என் வசமிருந்தது!) ஏதோ மக்கர் பண்ணுகிறதாம். ஷி வான்ட்ஸ் மீ டு கோ வித் ஹெர்.


“யூ டிட் வெல்” என்றாள் லிப்டில் நுழைந்து கொண்டே. “யூ டூ” என்றேன். “இல்லை. எனக்கு நெர்வஸாகிவிட்டது.” என்றாள். “ஆர் யூ தாம்மிழ்ழ்?” (நீ என்னைத் தீண்டினால் தீராதடி ஆசைத் தமிழ்!) என்றேன் தெரியாதமாதிரி. “யெஸ். ப்ரம் திருச்சி” என்றாள். ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் வெளியே போகும் போது, “கேன் ஐ ஹாவ் யுவர் நம்பர்” என்றேன். திரும்பிப் பார்த்தவள், சிரித்தாள். “ஓ ஸ்யூர்.” நம்பர் பரிமாறிக்கொண்டோம். “ப்ளீஸ் கால் மீ ஒன்ஸ். நான் தெரியாதவங்க கிட்டருந்து கால்ஸ் வந்தால் எடுக்க மாட்டேன்” “ஓகே” கால் செய்தேன். அக்ஷதா என்று ஸ்க்ரீனில் தெரிந்தது. செல்போன் தனது பிறவிப்பயனை அடைந்தது.

தாட்ஸ் ஆல் பார் டுடே. லெட்ஸ் மீட் டுமாரோ த ஸேம் டைம்” என்றவாறு டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டேன். செல் போன் அடிக்கவே, எடுத்தேன். “வோய். எங்க சாப்பாடு” என்றாள்.

பேனா எங்கடா?” என்றாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தீடீரென்று. “ரொம்ப தான் அலட்டிக்காத பெரிய பேனா தங்க பேனா!” பையிலிருந்து எடுத்துக்கொடுத்தேன். வாங்கியவள், கடிச்சியா? என்றாள் இல்லை இல்லையென்று அவசரமாக தலையாட்டினேன்.

டேபிள் டென்னிஸ் விளையாடிவிட்டு ஷ¥வை வைப்பதற்காக வந்தேன். அவளது க்யூபிகள் காலியாக இருந்தது. டெடி பியர் -நான் ப்ரஸண்ட் பண்ணினது தான்- என்னைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தது. “யாரடா தேடுற டம்போ?” என்றது தனது கிரிஸ்டல் கண்களை உருட்டியபடி, அவளைப் போலவே. க்யூட்.

லிப்ட்க்கு வந்து டவுன்-ஆரோவை ப்ரஸ் செய்து காத்திருந்தேன். அக்ஷதா வந்தாள். “வோய் நீ இன்னும் வீட்டுக்கு போகலயா?” “இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது. ஆட்டோவில தான் போகனும். சாப்டியா?” என்றாள். “இல்ல. இப்பத்தான் போறேன். எங்க போகலாம்?”

“வர வர பர்கர் நல்லாவேயில்ல” என்று சொல்லிக்கொண்டே பவுண்டெய்னுக்கு எதிரில் உட்கார்ந்தேன். ஏப்பம் ஒன்று போனஸாக வந்தது. அக்ஷதா ஒரு டிஸ்கஸ்டட் பார்வை வீசினாள்.

நிலா மிகவும் அழகாக இருப்பது போல இருந்தது. இருக்காதா பின்ன? ஏதேதோ பேசினோம். (என்னன்னு கண்டிப்பா தெரியாது. ப்ளீஸ் கேட்காதீங்க!) “நான் நல்லா பாடுவேன் தெரியுமா?” என்றாள். “வாவ். வாட் எ சர்ப்ரைஸ். ச்சோ ஸ்வீட். ப்ளீஸ் பாடாத. ஷாப்பிங் வந்திருக்கறவங்க பாவம்.” ஒரு முறை என்னை ஆழமாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“சும்மா சொன்னேன். பாடேன். ப்ளீஸ்.” “முடியாது. நான் கிளம்பறேன்.” எழுந்து கொண்டாள். நானும் அவள் பின்னே சென்றேன். “நீ எங்க வர்ற?” “ஆட்டோ வரைக்கும் வர்றேன். லேட் ஆயிடுச்சு தனியா போய்டுவியா?” “ஆஹா. ரொம்பத்தான் கரிசனம். எல்லாம் எங்களுக்கு தெரியும். இத்தன நாள் போகலையா?”

“இவங்கள லேக் கார்டன்ஸ்ல கொண்டுபோய் விட்டுடுப்பா” “சரி சார்” என்னை முறைத்தவாரே உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஆட்டோ ஸ்டார்ட் செய்ய தடுமாறியபோது என் மனம் ஸ்டார்ட் ஆகிக் கொண்டது. “தள்ளி உக்காரு” என்று சொல்லி நானும் உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

ஆட்டோ மிக மெதுவாக – மிக மெதுவாக. ஸ்டுபிட் டிரைவர். – சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் தெருவிளக்கால் அவளுடைய முகம் அவ்வப்போது எனக்கு கொஞ்சம் மட்டும் தெரிந்தது, மணிரத்னம் படம் போல. நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். திரும்பிய போது, அவளது கடைக்கண் பார்வையை அறிந்து கொண்டேன். சட்டென்று தலையை திருப்பிக்கொண்டாள். (எப்படி பிடிச்சேன் பாரு!). மவுனத்தை கலைக்க “எனக்கு ஜோசியம் பார்க்க தெரியும், தெரியுமா?” என்றேன். “தெரியுமே குடுகுடுப்ப பேமிலின்னு” என்று சிரித்தாள். கை நீட்டினாள். “இந்த இடம் மேடா இருந்தா..” “என்னடா?” என்றாள் முறைத்தவாறு “இல்ல இல்ல..இந்த இடம் மேடா இருந்த உனக்கு லீடர் ஷிப் க்வாளிட்டீஸ் அதிகம் இருக்குன்னு அர்த்தம்” என்றேன். “ம்ம்ம்..அந்த பயம் இருக்கட்டும்!”

சோனி ப்ளேயரை ஆன் செய்தேன். “சட்டென நனைந்தது நெஞ்சம்..சர்க்கரையானது கண்ணே...” செல் போன் ரிங் செய்தது. எடுத்தேன். அக்ஷதா. “என்னடா வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்தியா?” ஏசியை ஆன் செய்தேன். –இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்..

மணி இரண்டு. “அப்பத்தான் என்னோட ஸ்கூல்ல நான்..” -எந்த வாசல் வழி காதல் வந்ததென்று..-
மனி மூன்று “எல்லோரும் என்னத்தான் பார்த்திட்டு இருந்தாங்க. ஒரு பால். மூனு ரன் அடிக்கனும். நான் என்ன பண்ணினேன் தெரியுமா….”
மணி நாலு. “பாடேன் ப்ளீஸ்” “என்ன சொன்ன நீ? ஷாப்பிங் வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்கன்னு சொன்னேல்ல. பாடமாட்டேன் போடா” “என்னது போடாவா?” “ம்ம்..” “சரி”
மனி நாலேமுக்கால். “ஓகே bye. சோம்பேறி காலைல லேட்டா வராத, ஒழுங்க டைமுக்கு எழுந்து வா.” “சரிங்க மேடம்.” “bye” “bye”

ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “ஹலோ..யாரு?” “அடப்பாவி அதுக்குள்ள கும்பகர்ணம் போட்டு தூங்கிட்டியா?” “ஹாங்..யாரு?” எனக்கு இன்னும் தூக்கம் கலைந்த பாடில்லை. “யாரா?போடா!” டொக்.

அடிப்பாவி. ரிங். ரிங். ரிங். அவள் ஆன்ஸர் பண்ணவில்லை.

ரிங். ரிங். ரிங். ரிங். “என்னடா கோபமா?” “இல்லடி” “டியா?” “ஆமா. நான் சொல்லுவேன்” “ம்ம்” “பாட்டு பாடலேன்னு கோபமா?” ஆகா இது தானா மேட்டரா. “இல்லடி. நீ பாடலன்னு சந்தோஷம் தான். பாரு தூங்கிட்டேன் பாரு. இல்லன்னா எனக்கு தூக்கம் வந்திருக்குமா?” “போடா.” “ப்ளீஸ் கோச்சுக்காதடா செல்லம்” “செல்லமா?” “ம்ம்ம்..நான் சொல்லுவேன்” “ம்ம்ம்..” “பாடேன் ப்ளீஸ்” “முடியாது” “ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்” “சரி. ஒரு ஸ்டான்சா தான் பாடுவேன்” “ம்ம்..அமிர்தம் ஒரு சொட்டுன்னா என்ன புள் பாட்டில்ன்னா என்ன? அமிர்தம் அமிர்தம் தான?” “ஆரம்பிச்சுட்டான்” “பாடேன்” “ம்ம்” மௌனம். நிசப்தம். அமைதி. “ஹலோ. எனிபடி ஹோம்” “ம்ம்” “பாடலயா? வெக்கமா” “உன்கிட்ட எனக்கு என்னடா வெக்கம். பாடறேன் பாரு!ச்சீ. கேளு!” கட். போன்ல க்ரெடிட் முடிஞ்சது. அடப்பாவிகளா.

ரிங். ரிங். ரிங். ரிங். கதவைப் பூட்டும் போது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டது. அவசரமாக ஓடி வந்து போனை எடுத்தேன். “என்னடா ஆச்சு? ஏன்டா கட் பண்ணின?” “கட் ஆயிடுச்சு. க்ரெடிட் முடிஞ்சிருச்சு” “ஓ. பாத்தியா நான் பாடறது அவங்களுக்கே பிடிக்கல!” “ம்ம்” “ம்ம் ஆ” “இல்ல இல்ல. பாடேன்” (ஆட போங்கப்பா!) “ஊரு சனம் தூங்கிருச்சு…”

“டேய் ப்பாடு” விக்ரம் சிம்மக்குரலில் யாரையோ அழைத்தார். தியேட்டரில் சத்தம் காதைப் பிளந்தது. என்னுடைய காதுகளுக்கு அருகில் வந்தவள், “ஆமா, பாடுன்னா என்னடா?” என்றாள். எனக்கென்ன தெரியும்? புதுசா வந்திருக்கே தமிழகராதி அதுல வேணா பாக்கலாம். காதக்குடு என்றேன். சொல்லிமுடித்தவுடன் நறுக்கென்று கிள்ளினாள். “டர்டி மைன்டட்”. சத்தியமா அவ்ளோ அழகான ஸ்மைல் – வித் வெக்கம் யூ நோ!- நான் பார்த்ததேயில்ல. அவளுடைய கையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன். அவளுடைய கைகள் மிகவும் குளிர்ந்திருந்தது. என் கண்களை ஊடுறுவி பார்த்த அவள், என் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“எனக்கு வென்னிலா வித் பனானா ஸ்பிலிட்” என்றாள்.

பனானா அவள் உதடுகளில் சிக்கி மோட்சம் அடைந்து கொண்டிருந்தது. வெண்ணிலா ஐஸ்கிரீம் அவள் வாய்க்குள் சென்றும் உருகாமால் இருந்தது. நீங்களே சொல்லுங்கள் பனிக்குகைக்குள் ஐஸ்கிரீம் எப்படி உருகும்?

“வோய். உத வாங்கப்போற! என்னடா பாக்குற? ஒழுங்கா சாப்டு!” என்றாள் முட்டக்கண்ணை உருட்டியபடி. பயமாகத்தான் இருந்தது. இவள் எனக்கு யார்? ப்ரண்டா. கேர்ள் ப்ரண்டா. லவ்வரா? “வோய் முட்டகண்ணி. நீ யாரயாவது லவ் பண்ணிருக்கியா?” சர்வ சாதரணமாக உதட்டைப் பிதுக்கினாள். உண்மையில் பிதுக்கப்பட்டதென்னவோ என் இதயம் தான். மச்சம் மேலேயேறி மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்தது. “ப்ச்..இல்லடா. நீ?” நானும் தோளை குலுக்கிக்கொண்டேன். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்துக்கொண்டவள், “வவ் வீலிங் வெவ்வடி இவுக்கும்?” என்றாள். “ம்ம்ம்..என்னம்மா? முழுங்கிட்டு சொல்லு” “ம்ம்ம்ம்” “இல்ல. லவ் பீலிங் எப்படி இருக்கும்?” என்றாள்.

“ம்ம்ம்” மறுபடியும் செமினாரில் விட்டது போல இருந்தது. “அதாவது நீ எப்பவெல்லாம் ப்ரீயா இருக்கியோ..லைக்..வேலை இல்ல..சும்மா உக்காந்திருக்க..நாட் பிசி அட்டால்..ங்கறப்போ சட்டுன்னு அவன் முகம் உனக்கு ஞாபகம் வரும். அப்படி வந்தா யூ ஆர் இன் லவ்! இன்பாக்ட் நீ வேலை செஞ்சுகிட்டிருக்கும் போதே உனக்கு அவன் முகம் ஞாபகம் வருதுன்னா, முத்திப்போச்சுன்னு அர்த்தம். அப்பாகிட்ட சொல்லிடு.” என்றேன். “ம்ம்ம்”

“ம்ம்ம்..அப்படீன்னா எனக்கு உன் முகம் தான்டா ஞாபகம் வருது!” என்றாள்.

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு. உயிரை மட்டும் விட்டுவிடு! சட்டென நனைந்தது நெஞ்சம்!-

“அப்பாகிட்ட சொல்லிடவா?” என்றாள்.

ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்”
“அழாதடா”
அவள் அழுது கொண்டே
“எனக்கு தெரியும்டா. உன்னால என்ன கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு. அது தான் நான் ரொம்ப நாள் சொல்லாம இருந்தேன்” என்றாள்.

“அழாதடா”
“இல்லடா நான் அழல. அப்புறமா பேசறேன்.” “bye”
“ஏண்டா என்னாச்சு?”
“இடியட். அப்புறமா பேசறேன்னு சொல்றேன்ல” “bye”

ப்பா அவன் வீட்டுக்கு போய் பேசப்போறார்டா. எப்படியும் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் இருக்கும்”
“ம்ம்”

***

ன்னடா செமினார் முடிஞ்சதா. ப்ரெஸ்சர்ஸ் என்ன சொன்னாங்க. யாரும் புது பொண்ணு வரலையா? நல்லா சைட் அடிச்சிருப்பியே” என்றாள் நான் வந்ததும் வராததுமாக. நான் டைரியை வைத்து விட்டு, அவளைப் பார்த்தேன் “நான் சைட் அடிக்கறதில்ல” “சொன்னாங்க சொன்னாங்க. பேனா எங்கடா” “இந்தா” “கடிச்சியா” “இல்ல” “நீ கடிச்சிருப்ப உன்னால பேனாவையோ பென்சிலையோ கடிக்காம யோசிக்கவே முடியாதே. பொய் சொல்லாத!” ஷீ த்ரு அவே எ நாட்டி ஸ்மைல்.

(பேனாவை வாங்கி தன் மேஜை ட்ராயரில் போட்டுக்கொள்கிறாள். அங்கே நான்கைந்து பேனாக்கள் இருக்கின்றன முனை கடிபட்டு. தனக்குள் சிரிக்கிறாள்.)

“என்னைக்கு நிச்சயதார்த்தம்?” “டிசம்பர் 3”
“ம்ம்”
“டேய் சுப்பு. ஏண்டா சோகமா இருக்க? நாம பேசித்தான முடிவு எடுத்தோம்?”
“ஒன்னும் இல்ல.ஓகே. bye. நான் போறேன்.”

***

ரிங். ரிங். ரிங்.
“என்னடா தூங்கலயா?”
“ம்ம்”
“என்ன செஞ்சிட்டிருக்க?”
“சும்மா படுத்திருக்கேன்”
“சும்மாவா? அய்யே!”
“ஸ்டுபிட். டர்டி மைண்டட்.”
“ம்ம்”
……
“ஏதாவது பாடேன்”
“என்ன பாட்டு பாட?”
“ஏதாவது”
“ஏதாவதுன்னா எனக்கு தெரியாது. நானே ஒரு ஸ்டுபிட்”
“ம்ம்”
“சொல்லுடா என்ன பாட்டு பாடட்டும்?”
சொஞ்சநேரம் கழித்து..”ஊரு சனம் தூங்கிருச்சு..”
…..
“வை யூ லெட் மீ கோ?” என்றாள்.
“என்னடா?”
“நீ என்ன லவ் பண்ணதான? நான் வேறொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடனே நீ ஏன் தடுக்கல? வை யூ லெட் மீ கோ?” (ஆழுகிறாள்)
..
“அக்ஷதா. நீ ஏன் என்னை விட்ட? நான் முடியாதுன்னப்புறம் ஏன் நீ என்ன கம்பெல் பண்ணல? வை யூ லெட் மீ கோ?”
“என்ன பழி வாங்கறயா?”
“இல்ல பொறுக்கி. நான் கேக்கறேன்”

“அக்ஷதா. வில் யூ மேரி மீ?”
“எப்படிடா? அப்பா பேசிட்டாருடா.”
“சோ வாட். இன்னும் நிச்சயம் முடியலைல”
“சோ வாட்டா? எவ்வளவு ஈசியா சொல்ற. எத்தன வாட்டிடா நான் உங்கிட்ட கேட்டேன்”

“ம்ம்ம். bye”
“bye”

அழுகிறாள். அழுகிறாள். அழுதுகொண்டேயிருக்கிறாள். விடியும் வரை.
***

SMS சத்தம் கேட்டு போனை எடுத்தேன். அக்ஷதாவிடமிருந்து SMS. “ப்ளீஸ்டா இனிமே எங்கூட பேசாதடா. ப்ளீஸ்!” வெடித்துக் கிளம்பிய அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

***

ரிங். ரிங். ரிங். ரிங். “டாமிட். ப்ளீஸ் அக்ஷதா ஆன்சர் பண்ணுடா. ப்ளீஸ்” ஏசி குளிர் பொறுக்கமுடியவில்லை. ரசாயை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அழுகை வெடித்து வெடித்து கிளம்பியது. ஐ மேட் எ மிஸ்டேக். ப்ளடி ஸ்டுபிட் மிஸ்டேக். எ மிஸ்டேக் ஐ ஆம் கோயிங் டு ரெக்ரட் பார் எவர் அன்ட் எவர். தலையை திருப்பி டிஜிட்டல் க்ளாகில் மணி பார்த்தேன். மணி நாலு என்றது. எத்தனை இரவுகள்? எழுந்து ஜன்னலுக்கு வந்தேன். எங்கும் நிசப்தம். திரைச்சீலையை இழுத்து வெளிச்சம் வராதபடி மூடினேன். சோனி ப்ளேயரை ஆப் செய்தேன். எங்கும் இருட்டு. டிஜிட்டல் க்ளாகில் மட்டும் இரண்டு புள்ளிகள் தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்..

பீஸில் வேலை எதுவும் ஓடவில்லை. எதிர் சீட் காலியாக இருந்தது. அக்ஷதா நோட்டீஸ் கூட கொடுக்காமல் ரிசைன் செய்து விட்டாளாம்.

டெஸ்க் போன் அடித்தது. என் பாஸ். “ஹலோ” “ஷால் வீ கோ? ஹால் நம்பர் 5.” “ம்ம்..ப்ரெஸர்ஸ் அகெய்ன்?” “ம்ம்..ஹ¥ எல்ஸ்?” “விசாந்த். ஐ யாம் பெட்அப் வித் திஸ், யூ நோ?”..

“சோ. ஆல் த ப்ராஸஸ் ஹாவ் டு கோ த்ரூ திஸ் லூப்.” நான் மீண்டும் செமினார் எடுத்துக்கொண்டிருந்தேன்.. “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “ஸோ. நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். ப்ரியா. ப்ரியா சிங்கால்” “ம்ம்ம்..க்க்ம்ம்ம்..மே ஐ நோ ஹ¥ இஸ் திஸ் ‘சிங்கால்’, இப் யூ டோன்ட் மைண்ட்!” அங்காங்கே சிரிப்பலை எழுந்தது. அவளும் சிரித்தாள். க்யூட் அன்ட் ஸ்வீட். “ஆப் கோர்ஸ், மை டாட்!”

இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்

***

குரல்வலை: 111:1
தோன்றியது மறைந்துதான் ஆக வேண்டும். மறைந்தது தோன்றித்தான் ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.

-முத்துசீனிவாசசுவாமிகள்.

சிங்கப்பூரில் நில நடுக்கம்

சுமாத்ராவின் மேற்கு கடற்கரையில் செவ்வாய் காலை 6.3 ரிக்டர் புள்ளியளவு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி (epicenter) சிங்கப்பூரிலிருந்து 420கிமீ தொலைவில் அமைந்திருந்தது. எனினும் சில அதிர்வுகளை இங்கு பலர் உணர்ந்திருக்கின்றனர். நான், மற்றும் எனது boss இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நான் உணரவில்லை (Yeah, I am unshakable!). நான் வெளியே சென்றுவிட்டு வரும் போது எனது அலுவலகத்திலிருந்து மக்கள் வெளியேறி கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் என்னவென்று விசாரித்த பொழுது, நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு கிடைத்த லிப்டில் தொற்றிக்கொண்டனர். மேலே போகிறதா கீழே போகிறதா என்று கூட பார்க்காமல். நானும் ஓடோடி சென்று எனது cellphone ஐ எடுத்துக்கொண்டு -ரொம்ப முக்கியம் என்று என் நண்பர் கத்திக்கொண்டிருந்தார்!- கூட்டத்தில் ஐக்கியமானேன். சிலர் படிகள் இறங்கி தப்பித்தனர். நானும் வேறு சில நண்பர்களும் லிப்டில் தான் சென்றோம். (அப்பக்கூட சோம்பேறி!)

வெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஏதேதோ கதைகளை சொல்லிக்கொண்டு. என்னுடைய boss பையுடன் escape ஆகி எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்தார். சிலர் நடுக்கம் தெரிந்தது என்றும் தலை சுற்றல் இருந்தது என்றும் சொன்னார்கள். எனக்கு தெரியவில்லை. இது மூன்றாவது நிலநடுக்கம் எனக்கு. ஒன்று சென்னையில் (நான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன்). இரண்டாவது கோலாலம்பூரில் (நல்ல உறக்கத்தில் இருந்தேன்!). இப்பொழுது சிங்கப்பூரில் (discussion லில் இருந்தேன்!).

நாங்கள் lunch க்கு அமிர்தாவுக்கு சென்றுவிட்டோம். Earthquake வந்திருக்கிறதே, கொஞ்சம் கூட அதற்கு மரியாதை கொடுக்காமல் மக்கள் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எப்பொழுதும் இருப்பதை விட கூட்டம் அதிகம் வேறு. இன்றைக்கு special ஆக கேசரி. நாங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த போது என்னுடைய boss தோளில் பையுடன் வெளியேவே நின்று கொண்டிருந்தார்.

suntech city யில் அதிவுகள் நிறைய இருந்தன என்றும் இரண்டொரு HDB யில் crack விழுந்தது என்றும் கேள்விப்பட்டேன். suntech க்கிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நாங்கள் Raffels வந்தோம்!

என்னுடைய இன்னொரு பாஸ் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “ஆமாம் நான் கூட முத்துவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நடுக்கத்தை (அதிர்வை) உணர்ந்தேன்!”

அப்புறம் முத்துவ பாத்து நடுங்காதவங்க யாரு இருக்கா?! எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கு முத்துகிட்ட, ம்ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்!

இரண்டாவது தடவையாக மதியம் இரண்டு மணியளவில் மற்றொரு நடுக்கத்தை நான் உணர்ந்தேன்! நன்றாக ஒரு shake இருந்தது, for 2 secs.

ஆயிரம்கால் இலக்கியம் – 7

சாரு நிவேதிதாவை எனக்கு பிடிக்கவே செய்கிறது. தொடர்ந்து அவர் மதுவைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், தனது சொந்த கதைகளைப் பற்றியும் எழுதிக்கொண்டிருந்தாலும், எனக்கு பிடிக்கவே செய்கிறது. எனக்கு பிடிக்காவிட்டால் தான் என்ன? சாருவுக்கு என்ன நேர்ந்து விடப் போகிறது? அவர் தொடர்ந்து எழுதிக்கொண்டே தான் இருக்கப்போகிறார். அவருக்கான வாசகர் வட்டம் -mostly NRIs என்று நினைக்கிறேன்!- வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. எனக்கு பிடிக்காமல் பிடிக்கிறது! ரசிக்காமல் ரசிக்கிறேன். பல இடங்களில் சிரிக்காமல் சிரிக்கிறேன். ஏன் என்று யோசித்தால், அவரது எழுத்து தான் என்று தோன்றுகிறது. ஒரு நெருங்கிய நண்பனிடம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு. பாசாங்கோ வேஷமோ இல்லாமல், இதைத் தான் சொல்லவேண்டும், இதைச் சொல்லக்கூடாது என்ற ஏற்கனவே எழுதி தயாரித்து வைத்துக்கொண்டு பேசுவதைப்போல அல்லாமல், யதார்த்தமாக பேசுவதனால் கூட இருக்கலாம். மேலும் நாம் அறிந்திடாத பல புதிய விசயங்களை கட்டுரைகள் தோறும் தெளித்துவிட்டிருப்பதால் கூட இருக்கலாம். knowledge is wealth இல்லியா?

மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள் தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும்.
-ஆதவன் [காகித மலர்கள்]

கோணல் பக்கங்களிலே இடம் பெற்ற கவிதை இது:

தெறித்து விழுந்த ஒரு கணல் துண்டாய்
தோப்பை விட்டு
விலத்தி நிற்கும் ஒற்றைக் கரும்பனையாய்
குழு தவிர்த்து
தனித்தே அலையும் ஒரு கரும்புலியாய்
ஒரு உதிரித் தமிழனாய்
நான் மட்டுமேனும்
உமது தலைமையை
மறுத்து நிற்பேன்

– சக்கரவர்த்தி

அவர் மதுவைப் பற்றி அதிகமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அவரே பதில் சொல்லியிருந்தார், அது:
எவ்வளவு எழுத்தாளர்களையும் எவ்வளவு சினிமாக்களையும், எவ்வளவு பத்திரிக்கைகளையும், எவ்வளவு இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறேன், அவர்களையெல்லாம் படித்தீர்களா, கேட்டீர்களா? பின் இதை மட்டும் ஏன் பெரிதாக சொல்கிறீகள்? அவற்றைப் போலவே இதையும் மறந்துவிட்ங்கள்!

[கருத்து(?!) மட்டுமே சொல்லியிருக்கிறேன்.original words மறந்துவிட்டது. புத்தகத்தை நூலகத்தில் return செய்து விட்டேன்!]

மிகச்சரி! உண்மை.
நான் அவரது கட்டுரைகளை revisit செய்ததில், இதையெல்லாம் வாய்ப்பு கிடைத்தால் படிக்கவேண்டும் என்றோ, கேட்கவேண்டும் என்றோ குறித்து வைத்துக்கொண்டேன். அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

1. Status Quo எழுத்துக்களைப் பற்றி.
Antonio Gramsci என்ற மார்க்ஸிஸ்டைப் பற்றி.

2. Joseph Heller எழுதிய Catch 22 என்ற நாவல். Catch-22 என்றால் என்ன என்று தேடிய பொழுது, ஒரு மனிதன் இரண்டு செயல்களைச் செய்யவேண்டும். ஆனால் இரண்டும் ஒன்று ஒன்று தொடர்புடையவை. ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒரு செயல் செய்யாமல் மற்றொரு செயலைச் செய்ய முடியாது. dead lock. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விக்கிபீடியாவில் இதைப் பார்க்க நேர்ந்தது: படித்து முடித்து விட்டு வேலை தேடுவது. வேலையில் சேர்வதற்கு அனுபவம் தேவை. வேலையில் அனுபவம் பெருவதற்கு வேலை தேவை. கிட்டத்தட்ட முட்டையிலிருந்து கோழியா. கோழியிலிருந்து முட்டையா என்பதைப் போல! நாவல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் concept நன்றாக இருக்கிறது.

3.Memories Of Underdevelopment என்ற படம்.

4. அழகிய பெரியவன் என்ற எழுத்தாளர். இணையத்தில் தேடியவரைக்கும் இவரது நான்கு புத்தகங்களைப் பற்றிய அறிமுகம் எனக்கு கிடைத்தது.
அ. அழகிய பெரியவன் கதைகள்
ஆ. தகப்பன் கொடி
இ. தீட்டு
ஈ. நெரிக்கட்டு
இதில் எந்த புத்தகமும் நான் படித்ததில்லை. சாரு கொடுத்த அறிமுகமே எனக்கு முதல் அறிமுகம்.

5. Art Foundation Of Michigan வெளியிடும் sulphur என்ற magazine. link கிடைக்கவில்லை.

6. Pier Paolo Pasolini என்ற இத்தாலிய இயக்குனர்.

7. Julio Cortazar எழுதிய Hopscotch என்ற நாவல். Hopscotch என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு [வேறு வேறு படங்கள் வரைந்து, வேறு வேறு விதிமுறைகளில்] என்று பின்னர் தெரிந்து கொண்டேன். Base நம்முடைய சில்லாக்கைப் போலத்தான். சில்லாக்கைத் தூக்கிப் போட்டு நொண்டியடிப்போமே ஞாபகம் இருக்கா?

8. Donald Barthelme எழுதிய
the dead father என்ற நாவல்.

***

தீராநதியில் வெளிவந்த பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதை (ஆச்சரியமாக, உரைநடை வடிவில் இருந்தது. எப்பொழுதும் புதுக்கவிதை மரபாகிவிட்ட ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதும் முறை தூக்கியெறியப்படுவதற்கான முதல் முயற்சியோ? இருக்கலாம். அட்லீஸ்ட் பேப்பராவது மிச்சப்படும் இல்லையா?) ஒன்று வெளிவந்திருந்தது, எனக்கு பிடித்த சில:

சூர்யன் தோன்றுகிறது. பிறிதொரு நேரத்தில் நிலாவும் நட்சத்திரங்களும் தோன்றுகிறது. அன்பும் பிரியமும் தோன்றுகிறது. வெறுப்பும் கசப்பும் தோன்றுகின்றன. மழை தோன்றுகிறது. கண்ணுக்கு தெரியா காற்றும் தோன்றுகிறது. பிறப்பும் சொல்லிவைத்தார் போல சாவும் தோன்றுகிறது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கரைந்துபோதல் தோன்றுகிறது.

தோன்றுகிறது. தோன்றுவது மட்டுமே தோன்றுகிறது

(?!) 😦 😦

நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது ஒரு பூவைப் பறித்துக்கொண்டிருக்கிறோம். நீ இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறாய். நானும் நாமும் இப்போது சாவை நோக்கி மேலும் ஒரு அடி எடுத்து வைக்கிறோம்.

எப்போது கொஞ்சம் புரிந்து நிறைய புரியாமல் இருக்குமே, அது போல ஒன்று:

வெறுப்பின் வீர்யமிக்க விதைதேடி, வீர்யமிக்க நிலம் தேடி, விதைத்தாயிற்று. கண் இமைக்கும் நேரத்தில் நிலம் கீறி வெளிவந்த நதி கிளைகளுடனும் பேரிரைச்சலுடன் ஓடத்துவங்கியது.

நிரந்தரமான படகில் நிரந்தரமான நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். சடலங்கள் மிதந்து வந்து கொண்டேயிருக்க நதி செல்லும் வழியெல்லாம் சரிதம் ஆகிறது.

இந்த கவிதைகள் என்றைக்குத் தான் எனக்கு முழுதாக விளங்கப்போகிறதோ தெரியவில்லை. ஒரு வகையில் முழுதும் விளங்காமல் இருப்பது தான் அழகு இல்லையா?

***

சோகமித்திரனின் நேர்காணல் ஒன்றில் நான் நிர்மலுக்கு கேட்ட கேள்வியின் சாராம்சம் கொண்ட ஒரு கேள்வியை நிருபர் கேட்டிருந்தார், அதற்கு அசோகமித்திரனின் பதில்:

தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்-ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார், இந்திரஜித், சாருநிவேதிதா..இவ்வாறு நிறைய. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?

(தீராநதி குறிப்பிட்ட எழுத்தாளர்களில் பிரேம்-ரமேஷ் மற்றும் சாருநிவேதிதாவின் எழுத்துகளை மட்டுமே நான் படித்திருக்கிறேன். அதில் பிரேம்-ரமேஷ் அவர்களின் ஒரு கதையை இதே தீராநதியில் படிக்க நேர்ந்தது. ஹோமோ செக்ஷ¤வல்ஸ் பற்றிய கதை அது. மிக வெளிப்படையாக எழுதியிருந்தார்கள் பிரேம்-ரமேஷ். எனக்கு டோட்டல் ஷாக். இதைப்பற்றி “யாத்ரா” ரவீந்தரன் அவர்களிடம் விவாதித்த பொழுது அவருடைய வாதம் வேறு மாதிரி இருந்தது. பிடிக்கவில்லையென்றால் படிக்காதே. குமுதம் படி. உனக்கு ஏற்றார் போல இருக்கும் என்றார். சாருவைப்பற்றி நான் சொல்லத்தேவையில்லை. அவருடைய “நேநோ” வை படிக்க வைத்திருக்கிறேன். என்ன ஷாக் இருக்கிறதோ தெரியவில்லை!)

அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்ளோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்திலும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவைப் பத்தினதுதான். என்ன ஒரு மென்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கனும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம் எழுதறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு இல்லை. இந்த கோட்பாடெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். நான் நினைக்கிறேன். அவ்வளவுதான். அவங்க வேறு மாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் பரிசு வாங்கி இருக்கிறாரே பாமுக். அவரு பாக்கறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்கிறாரே ஒழிய..இந்த மாதிரியெல்லாம் எழுதல. “டாக்டர் ஷிவாக்கோ”ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கிக்க கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்கமாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறாங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.

Boris Leonidovich Pasternak http://en.wikipedia.org/wiki/Boris_Pasternak எழுதிய
Doctor Zhivago என்ற நாவல் பற்றி எனக்குத் தெரியும். Amitav Gosh எழுதிய The Glass Palace புத்தகத்தில் ஒரு blurb: “A Dr zhivago for middle east” ஐ படித்துவிட்டு Dr zhivago ஐ இணையத்தில் தேடிக் கண்டுபிடித்தேன். ஆனால் Dr zhivago ஒரு ரைட்டரா? மேலும் pasternak க்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது அவர் தான் வாங்கிக்கொள்வதற்கு மறுத்தார்.

***

சோகமித்திரனின் “அழிவற்றது” சிறுகதைத் தொகுதியில் படித்த சிறுகதை ஒன்று. கர்ணபரம்பரைக் கதை என்று இதை வகைப்படுத்தியிருந்தார். கதையின் பெயர் : தலையெழுத்து.

ஒரு குரு இருக்கிறார். அவருக்கு ஒரு சிஷயர் இருக்கிறார். குருவும் அவரது மனைவியும், சிஷ்யரும் நகரத்துக்கு வெளியே குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறான். அப்பொழுது யாரோ ஒரு வயதானவர் வீட்டிற்குள் செல்ல முயற்சித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான் சிஷ்யன். ஓடிச்சென்று அவரது கைகளைப் பிடிக்கிறான். “நீங்கள் யார். குழந்தை பிறக்கும் இந்த நேரத்தில் உள்ளே செல்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்” என்கிறான். கிழவர் பயத்தால் உரைகிறார். “நான் தான் பிரம்மா. நான் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. எப்படி உன் கண்ணுக்கு தெரிந்தேன் என்று வியப்பாக இருக்கிறது” என்கிறார். சிஷ்யன் அதிரிந்து”இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “நான் பிறந்து விட்ட இந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வந்திருக்கிறேன்” என்கிறார் பிரம்மா. சிஷ்யன் “என்ன எழுதப் போகிறீகள். என்னிடம் சொல்லுங்கள்”என்கிறான். முதலில் மறுத்த பிரம்மா பிறகு சிஷ்யனிடம் யாரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு “இவ்வளவு உயர்ந்த குருவுக்குப் பிறந்த இந்தப் பெண் விபச்சாரியாக வரப்போகிறாள்” என்கிறார்.

சில வருடங்கள் செல்கிறது. மறுபடியும் குருவின் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகிறது. சிஷ்யன் பிரம்மாவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். குழந்தை பிறந்து அழும் சத்தம் கேட்டவுடன் பிரம்மா அங்கு வருகிறார். இந்த முறை “குருவுக்கு பிறந்திருக்கும் இந்த மகன் ஒரு திருடனாக வருவான்” என்கிறார்.

உயர்ந்த இடத்தில் இருக்கும் குருவுக்கு பிறந்த இரு குழந்தைகளும் திருடனாகவும் விபச்சாரியாகவும் உருவாகப்போகின்றன என்பதை சிஷ்யன் நம்பியிருக்கவில்லை. ஏதோ பிரம்மா கப்சா விட்டிருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறார். வருடங்கள் உருண்டோடுகின்றன. சிஷ்யரும் தனது பாடத்தை முடித்துக்கொண்டு குருவிடம் விடைபெற்றுச் சென்று விடுகிறார்.

சிஷ்யரும் குருவாகிவிடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது குருவை சந்திக்க அவரது குடிசைக்கு செல்கிறார். அங்கு யாரும் இல்லை. எப்போதோ வந்த வெள்ளத்தில் குடிசை அடித்துச் செல்லப்பட்டுவிட்டது என்றும், குருவும் குழந்தைகளையும் அதற்கு பிறகு காணவில்லை என்றும் அங்கிருக்கும் மக்கள் சொல்கின்றனர்.

மிகுந்த வருத்தத்தோடு சென்று விடுகிறார் சிஷ்யர். ஒரு நாள் கங்கையில் குளித்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி விழ இருந்தவரை ஒரு வாலிபன் தாங்கிப்பிடிக்கிறான். அவனது முகத்தைப் பார்த்த குரு ஒரு கனம் ஸ்தம்பிக்கிறார். குருவின் அதே முகம். பிறகு விசாரிக்கும் போது அவன் தான் குருவின் மகன் தான் என்று ஒத்துக்கொள்கிறான். பிறகு பிழைக்க வேலை இல்லாததால் தான் திருடனாக மாறிவிட்டதாக கூறுகிறான். சிஷ்யர் அவனது அக்காவைப் பற்றிக் கேட்க அவன் “அவளைப் பற்றிக் கேட்காதீர்கள். இங்கு தான் கேவலமான தொழிலைச் செய்து கொண்டிருக்கிறாள்” என்று கோபத்துடன் சொல்கிறான்.

சிஷ்யர் அவளைப் பார்க்க செல்கிறார். அவள் தான் செய்தது தவறு தான் என்றும் எனினும் வாழ்வதற்கு வேறு வழி தெரியவில்லை என்றும் சொல்கிறாள். சிஷ்யர் அவளுக்கு ஒரு வழி சொல்கிறார் : நீ தினமும் உன்னிடம் வரும் ஆண்களிடம் நூறு முத்துக்கள் கொடுக்க வேண்டும் என்று கேள் என்கிறார். ஆனால் அவ்வாறு கிடைக்கும் முத்துக்களை நீ மறுநாளே செலவழித்து விட வேண்டும் என்றும் கூறுகிறார். அவளும் அப்படியே செய்கிறாள். யாரும் அவளிடம் வரவில்லை. மணி இரவு பணிரெண்டு நெருங்கிக்கொண்டுருக்கிறது. இவள் பதட்டமடைகிறாள். மணி பணிரெண்டு அடிக்கப்போகும் போது ஒரு மனிதன் தலையில் துண்டைப் போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு நூறு முத்துக்கள் கொடுத்து விட்டுப் போகிறான். மறுநாளும் யாரும் வராமல் இருக்க சரியாக பணிரெண்டு மணிக்கு ஒரு மனிதன் முகத்தை மறைத்துக் கொண்டு முத்துக்களைக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறான். அவள் சந்தோஷமாக சிஷ்யரிடம் வந்து நடந்ததைக் கூறி நன்றி சொல்கிறாள்.

சிறுது நாட்களுக்குப் பிறகு சிஷ்யர் திருச்செந்தூரின் கடலில் குளித்துக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு வயதான கிழவன் கடலுக்குள் சென்று ஏதோ எடுத்துக்கொண்டு வந்து கரையில் இருந்த ஒரு குழியில் போட்டு விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடுகிறார். குழிக்குள் முத்துக்கள் இருப்பதைப் பார்க்கிறார் சிஷ்யர். கிழவர் யார் என்று பார்க்க, நம்ப பிரம்மா.

பிரம்மா சிஷ்யரைக் கண்டுகொண்டு “நீ பாட்டுக்கு அவ கிட்ட நூறு முத்துக்கள் கொடுத்தாதான் ஆச்சுன்னு சொல்லசொல்லிட்ட, யாரு அவளுக்கு நூறு முத்துக்கள் கொடுப்பதாம்?” என்று சொல்லிவிட்டு, மீண்டும் கடலுக்குள் முத்தெடுக்க சென்றுவிட்டாராம்.
அவர் தலையெழுத்து அம்புட்டுதேன் என்பதோடு முடிகிறது கதை.

***

தன் எழுதிய கவிதை ஒன்று : பிப்ரவரி 14 ஸ்பெஷல்

என் உதடுகள்
இப்போது
குளிர்கிறது
போர்த்தக்
கிடைக்குமா
உன் இதழ்கள்!

***

(தொடரும்)