சிங்கப்பூரில் நில நடுக்கம்

சுமாத்ராவின் மேற்கு கடற்கரையில் செவ்வாய் காலை 6.3 ரிக்டர் புள்ளியளவு பூகம்பம் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தின் மையப்புள்ளி (epicenter) சிங்கப்பூரிலிருந்து 420கிமீ தொலைவில் அமைந்திருந்தது. எனினும் சில அதிர்வுகளை இங்கு பலர் உணர்ந்திருக்கின்றனர். நான், மற்றும் எனது boss இருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நான் உணரவில்லை (Yeah, I am unshakable!). நான் வெளியே சென்றுவிட்டு வரும் போது எனது அலுவலகத்திலிருந்து மக்கள் வெளியேறி கிட்டத்தட்ட ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தனர். ஒன்றும் புரியாமல் என்னவென்று விசாரித்த பொழுது, நிலநடுக்கம் என்று சொல்லிவிட்டு கிடைத்த லிப்டில் தொற்றிக்கொண்டனர். மேலே போகிறதா கீழே போகிறதா என்று கூட பார்க்காமல். நானும் ஓடோடி சென்று எனது cellphone ஐ எடுத்துக்கொண்டு -ரொம்ப முக்கியம் என்று என் நண்பர் கத்திக்கொண்டிருந்தார்!- கூட்டத்தில் ஐக்கியமானேன். சிலர் படிகள் இறங்கி தப்பித்தனர். நானும் வேறு சில நண்பர்களும் லிப்டில் தான் சென்றோம். (அப்பக்கூட சோம்பேறி!)

வெளியே மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். ஏதேதோ கதைகளை சொல்லிக்கொண்டு. என்னுடைய boss பையுடன் escape ஆகி எனக்கு முன்னாள் நின்று கொண்டிருந்தார். சிலர் நடுக்கம் தெரிந்தது என்றும் தலை சுற்றல் இருந்தது என்றும் சொன்னார்கள். எனக்கு தெரியவில்லை. இது மூன்றாவது நிலநடுக்கம் எனக்கு. ஒன்று சென்னையில் (நான் லேசான நடுக்கத்தை உணர்ந்தேன்). இரண்டாவது கோலாலம்பூரில் (நல்ல உறக்கத்தில் இருந்தேன்!). இப்பொழுது சிங்கப்பூரில் (discussion லில் இருந்தேன்!).

நாங்கள் lunch க்கு அமிர்தாவுக்கு சென்றுவிட்டோம். Earthquake வந்திருக்கிறதே, கொஞ்சம் கூட அதற்கு மரியாதை கொடுக்காமல் மக்கள் நிறைய பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். எப்பொழுதும் இருப்பதை விட கூட்டம் அதிகம் வேறு. இன்றைக்கு special ஆக கேசரி. நாங்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வந்த போது என்னுடைய boss தோளில் பையுடன் வெளியேவே நின்று கொண்டிருந்தார்.

suntech city யில் அதிவுகள் நிறைய இருந்தன என்றும் இரண்டொரு HDB யில் crack விழுந்தது என்றும் கேள்விப்பட்டேன். suntech க்கிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் நாங்கள் Raffels வந்தோம்!

என்னுடைய இன்னொரு பாஸ் இவ்வாறு சொல்லியிருக்கிறார்: “ஆமாம் நான் கூட முத்துவுடன் பேசிக்கொண்டிருந்த போது ஒரு நடுக்கத்தை (அதிர்வை) உணர்ந்தேன்!”

அப்புறம் முத்துவ பாத்து நடுங்காதவங்க யாரு இருக்கா?! எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கு முத்துகிட்ட, ம்ம்ம்ம்..இருக்கட்டும் இருக்கட்டும்!

இரண்டாவது தடவையாக மதியம் இரண்டு மணியளவில் மற்றொரு நடுக்கத்தை நான் உணர்ந்தேன்! நன்றாக ஒரு shake இருந்தது, for 2 secs.

4 thoughts on “சிங்கப்பூரில் நில நடுக்கம்

  1. கோவி. கண்ணன்: எனக்கு முதல் முறை பயம் இல்லை, இரண்டாவது முறைதான் நான் உணர்ந்தேன் – நன்றாகவே!- அப்பொழுதுதான் எனக்கு தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது! ஆனா முதுகு தெரியல! :)விடாது கருப்பு: You are unshakable! 🙂

    Like

Leave a comment