தோன்றலும், பின் மறைதலும்

(சிறுகதை)

மிகவும் இருட்டாக இருந்தது. கண்களைத் திறந்திருக்கிறேனா இல்லையா என்று கூட எனக்கு சந்தேகம் வந்தது. திறந்துதான் இருக்கிறேன். ஏசி குளிர் கடினமாக என்னைத்தாக்கியது. நான் கனத்த ரசாயால் என்னை முழுவதுமாக போர்த்திக்கொண்டேன். ரசாய்க்குள் இன்னும் இருட்டாக ஆனது போல் இருந்தது. கண்களை விழித்து ரசாயை ஊடுருவி பார்க்க முயன்றேன். தலை வலித்தது. இல்லை அப்படி தோன்றுகிறதா? ரசாயை விலக்கி எழுந்து உட்கார்ந்தேன். குளிர் எனது நாசிக்குள் செல்ல முயன்றது. உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஏற்பட்டது போல இருந்தது. அட்லீஸ்ட் பேனையாவது ஆப் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டேன். எழுந்து சென்று ரீடிங் டேபிளில் ஜண்டு பாமைத் தேடினேன். புத்தகங்களுக்கு மத்தியில் அது ஒளிந்து கொண்டிருந்தது. கைகளில் தட்டுப்பட்டது. நன்றாக தேய்த்துக்கொண்டேன். மெதுவாக நடந்து ஜன்னல் அருகில் வந்து திரைச்சீலையை விலக்கினேன். வெளியே பொங்கிக்கொண்டிருந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளி பாய்ந்து வந்து என்னில் ஒட்டிக்கொண்டது. நிசப்தமாக இருக்கும் மரங்களை என் ஜன்னலின் வழியாக நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் வந்து என் கட்டிலில் மெத்தென்று உட்கார்ந்தேன். ரசாயை கழுத்துவரை போர்த்திக்கொண்டேன். காது மடல்கள் ஜில்லிட்டு குறுகுறுவென்றிருக்கவே மீண்டும் தலையோடு சேர்த்து போர்த்திக்கொண்டேன். இப்பொழுது ரசாயின் ஊடே மஞ்சள் வெளிச்சம் கொஞ்சம் பரவியது. ஜண்டுபாம்மின் கனத்த நெடி மூச்சுக்காற்றில் ஊடுறுவி என் சுவாசத்தை கடினப்படுத்தியது. தலையிலிருந்து ரசாயை விலக்கிகொண்டேன். அருகிலிருந்த் டிஜிட்டல் கடிகாரத்தில் மணி பார்த்தேன். மணி சரியாக ஒன்று. மீண்டும் விட்டத்தை பார்க்கத் தொடங்கினேன். திடீரென்று என் செல்போனை எடுத்து ஏதேனும் கால் அல்லது மெசேஜ் வந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஒன்றும் இல்லை.

ஒரு பக்கம் சாய்ந்து படுத்துக்கொண்டேன். டிஜிட்டல் கடிகாரத்தில் எண்கள் மெர்குரி நிறத்தில் பளிச்சென்று இருந்தன. நடுவில் இரண்டு புள்ளிகள் தொன்றின. பின் மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்றின. மறைந்தன. தோன்..தலையை திருப்பி மறுபக்கம் சாய்ந்து கொண்டேன். தலையனையிலிருந்து ரூம் ஸ்ப்ரே அல்லது என் பாடி ஸ்ப்ரே அல்லது என் செண்ட் அல்லது இவையெல்லாம் சேர்ந்தது போல் ஒரு நெடி எழுந்து அழுத்தமாக என் நாசிக்குள் நுழைந்தது. ஜண்டு பாமின் ஸ்மெல் இப்பொழுது தலையனையின் ஸ்மெல்லால் அடக்கியாளப்பட்டிருந்தது. சோனி மியூசிக் சிஸ்டம் சாந்தமாக இருந்தது.

இருட்டிலே இளையராஜாவின் சிடியைத் தேடினேன். கிடைத்த ஒன்றை எடுத்து ட்ரேயை திறந்து உள்ளே வைத்து மூடினேன். ரிமோட் கன்ட்ரோலை எடுத்துக்கொண்டு மெத்தைக்கு வந்தேன். மீண்டும் ரசாயை எடுத்து கழுத்து வரை போர்த்திக்கொண்டேன். ப்ளே. சோனியின் சின்ன திரையில், சிடி 1 என்று தோன்றி சிறிது நேரம் யோசித்து விட்டு, பாட ஆரம்பித்தது. “ஊரு சனம் தூங்கிருச்சு ஊத காத்தும் அடிச்சிருச்சு..” பாடல் சன்னமாக ஒலித்தது. ஜானகி ஹிட்ஸ் போல இருக்கிறது. இளையராஜா ஹிட்ஸாக கூட இருக்கலாம். ஏன் எம்.எஸ்.வி ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். இல்லையேல் ஏ.ஆர்.ரஹ்மான் ஹிட்ஸாகக் கூட இருக்கலாம். தவறுதலாக இந்தப் பாடலை நான் பதிவு செய்திருக்கலாம். அடுத்த பாடலை வைத்துதான் என்ன ஹிட்ஸ் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். எதையும் யாரையும் நம்பமுடியவில்லை. பிஸ் அடித்து விட்டு வந்தால் தேவலாம் போல இருந்தது.

நான் என் அறைக்கதவை முடியபோது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. நமது மூளைக்கு அல்லது மனதுக்கு -மனதென்ற ஒன்று தனியாக இருக்கிறதா என்ன? இருந்தால் எங்கே இருக்கிறது? ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிற?- இப்படி ஒரு ப்ளஷ் இருந்தால் ரொம்ப வசதியாக இருக்கும். தெவையில்லாத நினைவுகளை எவ்வளவு எளிதாக ப்ளஷ் செய்து கொள்ள முடியும்? ஒரு செர்ச் வசதி கூட இருக்கலாம். என்ன நினைவுகள் என்று தேடுவதற்கு! மறுபடியும் ஜன்னலோரம். ஆழ்ந்த அமைதி. “ராசாவே.. உன்னை விட மாட்டேன்” என்ற பாடல் பாடத்தொடங்கியது. ஜானகி ஹிட்ஸ் தான் போல இருக்கிறது.

மீண்டும் மெத்தை. இப்பொழுது காலில் ஈரம் படர்ந்திருப்பதால் முன்பை விட அதிகமாக குளிர்ந்தது. ரசாயை எடுத்து போர்த்திக்கொண்டேன். கைகளை தலைக்கு அடியில் சேர்த்து வைத்துக்கொண்டு விட்டத்தை மீண்டும் முறைக்க ஆரம்பித்தேன். சோனி ப்ளேயரில் லைட் சீராக பாடலுக்கு ஏற்ப நடனமாடிக்கொண்டிருந்தது.

திடீரென்று செல்போனை எடுத்து A வைப் ப்ரஸ் செய்தேன். அடுத்து K வை ப்ரஸ் செய்தேன். அக்ஷதா என்று திரையில் தோன்றியவுடன், கால் பட்டனை ப்ரஸ் செய்தேன். காலிங் அக்ஷதா என்று திரையில் தோன்றியது. காதுக்கு கொடுத்தேன். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங்….”Please record your voice message….” டாமிட். யூ ஆர் கில்லிங் மீ அக்ஷதா. வை டோன்ட் யூ ஜஸ்ட் ஆன்சர் மை கால். கோபம் பீறிட்டுக்கொண்டு வரவே, செல்போனை தூக்கியெறிந்தேன். அது மெத்தையின் ஒரு முனையில் சென்று விழுந்தது. அதிலிருந்து மங்கலான ஒரு வெளிச்சம் வந்து கொண்டுருந்தது. கட்டிலில் தவழ்ந்து மறு முனையை அடைந்து செல்போனை எடுத்து மீண்டும் கால் செய்தேன். ரிங். ரிங். ரிங். ரிங்…

***

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்..மான் புலியை வேட்டைதான் ஆடிடுமே கட்டில்..முன்னும் பின்னும் நான் முழுமையா..” தலையில் தட்டப்பட்டு காதில் இருந்த பெரிய இயர்போனை கழட்டினேன். ஆல்ட்-டேப் போட்டு சட்டென்று என் ஸ்க்ரீனை மறைத்தேன். “டர்டி பெல்லோ” என்று குரல் கேட்டு பின்னால் திரும்பினேன்..”என்ன” “செவுடாடா நீ. எத்தனவாட்டி போன் அடிக்குது. எடுக்கறதில்ல? மூஞ்சப்பாரு!” என்று சொல்லிவிட்டு தன் இடத்தில் -எனக்கு நேர் எதிராக இருந்த க்யூபிக்கள்- சென்று அமர்ந்துகொண்டாள். “ச்..சே..முதல்ல இடத்த மாத்தி வேற பக்கம் போகனும். இவ கண்ணிலே சிக்கக்கூடாது. தலையில் அடிக்கறா?!” “என்ன முணுமுணுக்கற?” “ம்ம்..உன் போனிடெய்ல் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொன்னேன்” “அது. அந்த பயம் இருக்கட்டும்!” என்னுடைய டெஸ்க் போனில் ஐந்து மிஸ்டு கால்ஸ் இருந்தது. யார் யார் என்று பார்த்தேன். என் பாஸ் தான். 342 டயல் செய்தேன். விஷாந்த் என்று போன் ஸ்கிரீனில் தெரிந்தது. “வேர் வேர் யூ மேன்? ஹவ் மெனி டைம்ஸ் ஐ ஹாவ் டு கால் யூ? டோன்ட் யூ எவர் புட் தாட் ஸ்டுபிட் இயர்போன் அகெய்ன் ஆன் யுவர் ஸ்டுபிட் ஹெட். அன்டர்ஸ்டான்ட்” “ஓகே விஷாந்த். கூல்!” (போடா பவர் மண்டையா! பவர் : அவருடைய ப்ராஜெக்ட்) “ஸோ.வாட்ஸ் அப்?” “யூ காட் டு கோ டு செமினார் ஹால் 5. ப்ரஸெர்ஸ் ஆர் வெயிடிங் பார் யூ. கமான் மேக் இட் பாஸ்ட்!” “ஓகே. ஜஸ்ட் இன் பைவ் மினிட்ஸ் ஐ வில் பி தேர்(பவர் மண்டையா!)” டொக்கென்று போனை வைத்தேன்.

“என்ன வாங்கிக்கட்டினியா?” என்றாள். “ம்ம்..அஞ்சு கால் அடிச்சப்புறம் தான் வந்து தலையில் தட்டுவியா? மொத கால் அடிக்கும்போதே வறதுக்கென்ன?” “நான் என்ன உனக்கு பிஏவா? உன் ப்ளேஸ்க்கு வரதுக்கே பயமாக இருக்கு. நீ என்னென்னம்மோ பாக்குற! (உதட்டை சுழித்துக்கொண்டாள். மச்சம் கொஞ்சம் மேலே ஏறி பின் கீழே இறங்கி தன் இடத்துக்கு மீண்டும் வந்தது) டர்டி பாய். (நான் பார்ப்பதை உணர்ந்தவளாக) வோய் என்ன பாக்குற? உத வாங்கப் போற” “ம்ம்..க்க்க்ம்ம்ம்..அசின்னு நெனப்பு. சரி நான் ஹால் பைவுக்கு போறேன்.” “போ. எனக்கென்னவந்தது!” என்னுடைய டைரியை எடுத்துக்கொண்டேன். பேனா இல்லை. “பேனா கொடுடி” “முடியாது போடா. நீ கடிச்சு கடிச்சு கொடுப்ப. பேனா கூட இல்லாம நீ என்ன வொர்க் பண்ற?” “ப்ளீஸ் டா” சற்றே கோபமாக தன்னுடைய ஹேன்ட் பேக்கில் தேடி எடுத்துக்கொடுத்தாள். அழகான மெல்லிய நீல கலர் பேனா. “வோய் பத்திரமா கொண்டுவா. வாய்ல கடிச்சு எச்ச பண்ணாம கொண்டுவா புரியுதா?” “சரி (டி முட்டகண்ணி)” ஓட்டமும் நடையுமாக லிப்டை நோக்கி சென்றேன். “ஐயோ செல்போன்” மீண்டும் என் க்யூபிக்களுக்கு வந்து சார்ஜ் போட்டிருந்த செல் போனை எடுத்தேன், அவள் என்னையே முறைத்துக்கொண்டிருந்தாள் “என்ன” என்றேன் “நத்திங்” என்று தோள்களைக் குலுக்கிக்கொண்டாள்.

***

செமினார் எடுப்பது எனக்கு பிடித்தமான ஒன்று தான். “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “சோ நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். அக்ஷதா” “ஓகே மிஸ். அக்ஷதா. கோ அகெட் ப்ளீஸ்” “வென் வீ ஹேவ் திஸ்…” அவள் உதடுகள் மிகச் சரியாக அளவாக அழகாக இருந்தன.

“ஸோ..த டேட்டா ப்ளோஸ் த்ரூ திஸ் லேயர்.. அன்ட்” அவளுடைய ப்ரீ ஹேர் மெல்லிய காற்றில் அழகாக அசைந்து கொண்டிருந்தது. ஒரு கற்றை முடி கண்னத்தில் விழுந்து அவளது கண்களை சில சமயம் மறைத்தது. “வீ ஹாவ் செக்ரிகேட்டட் எவ்ரி அதர் திங்க்ஸ் இன் திஸ்..” அவளது மருதாணி அணிந்த நீண்ட விரல்கள் முடியை பின்னால் இழுத்து விட்டுக்கொண்டன. அளவான கண்ணம். சின்ன கண்கள். இரண்டு முறை சிமிட்டிக்கொண்டது. பட்டர்ப்ளை தன் மெல்லிய சிறகை அழகாக அடித்துக்கொள்வதைப் போல. “திஸ் இஸ் ப்ரஸண்டேசன் லேயர்..வாட் எவர்..” மாநிறம். நிறத்துக்கு ஏற்றார் போல மெல்லிய பீச் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். துப்பட்டா மிஸிங். ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..”ம்ம்ம்க்க்க்க்க்ம்ம்ம்ம்” செறுமலுடன் மார்க்கர் பேனாவை மூடி போர்டில் இருந்த ஸ்டாண்டில் வைத்துவிட்டு, டேபிலை அடைந்து வாட்டர் பாடிலை எடுத்து தண்ணீர் குடித்தேன். “சோ தாட்ஸ் ஆல் பார் டுடே கைஸ். லெட் அஸ் மீட் டுமாரோ..ஹெல்ப்..” என்று வாட்டர் பாட்டிலை மூடி டேபிளில் வைத்தேன். அவள் தன்னுடைய ஹேண்ட் போனை எடுத்து ஏதோ மெசேஜ் செக் செய்துகொண்டாள். பாய் ப்ரண்டாக இருக்குமோ? மீண்டும் தண்ணீர் குடித்துக்கொண்டேன்.

லிப்ட் மூன்றாவது மாடியில் நின்றது. ஒரு தெய்வீக மனம் கமழ்ந்தது போல இருந்தது. அவள் தான் நுழைந்தாள். ப்ளூ ஜீன்ஸ் அன்ட் வைட் ரவுண்ட் நெக். ப்ரீ ஹேர். “ஹாய்” “ஹாய்” வட்ட கருப்பு பொட்டு. கூடவே ஒரு அட்டு பிகரு. அட்டு பேசியது: “ஹலோ” “ம்ம்” “வீ கேம் பார் எ டீ ப்ரேக்” “ஓ” (ரொம்ப முக்கியம். நீ கொஞ்ச நேரம் வாய மூடேன். அவ பேசமாட்டாளோ?!) கையில் நோக்கியாவில் எதையோ தீவிரமாக தேடிக்கொண்டிருந்தாள். “ஆர் யூ லேட் டுடே?” (அடச்சே!) “ம்ம்..” ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் இறங்கிச் சென்றாள். ஒரு வார்த்தை கூட பேசாமல்.

யாம் வெயிட்டிங் பார் யூ அட் த லிப்ட் லாபி. யா இட்ஸ் அர்ஜெண்ட்” அக்ஷதா அழைக்கும் போது அர்ஜெண்டாவது மண்ணாவது. அவளது ப்ராடெக்ட் (முதலில் என் வசமிருந்தது!) ஏதோ மக்கர் பண்ணுகிறதாம். ஷி வான்ட்ஸ் மீ டு கோ வித் ஹெர்.


“யூ டிட் வெல்” என்றாள் லிப்டில் நுழைந்து கொண்டே. “யூ டூ” என்றேன். “இல்லை. எனக்கு நெர்வஸாகிவிட்டது.” என்றாள். “ஆர் யூ தாம்மிழ்ழ்?” (நீ என்னைத் தீண்டினால் தீராதடி ஆசைத் தமிழ்!) என்றேன் தெரியாதமாதிரி. “யெஸ். ப்ரம் திருச்சி” என்றாள். ப்ளோர் செவன் என்றது லிப்ட். அவள் வெளியே போகும் போது, “கேன் ஐ ஹாவ் யுவர் நம்பர்” என்றேன். திரும்பிப் பார்த்தவள், சிரித்தாள். “ஓ ஸ்யூர்.” நம்பர் பரிமாறிக்கொண்டோம். “ப்ளீஸ் கால் மீ ஒன்ஸ். நான் தெரியாதவங்க கிட்டருந்து கால்ஸ் வந்தால் எடுக்க மாட்டேன்” “ஓகே” கால் செய்தேன். அக்ஷதா என்று ஸ்க்ரீனில் தெரிந்தது. செல்போன் தனது பிறவிப்பயனை அடைந்தது.

தாட்ஸ் ஆல் பார் டுடே. லெட்ஸ் மீட் டுமாரோ த ஸேம் டைம்” என்றவாறு டேபிளில் இருந்த வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடித்துக்கொண்டேன். செல் போன் அடிக்கவே, எடுத்தேன். “வோய். எங்க சாப்பாடு” என்றாள்.

பேனா எங்கடா?” என்றாள் சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் தீடீரென்று. “ரொம்ப தான் அலட்டிக்காத பெரிய பேனா தங்க பேனா!” பையிலிருந்து எடுத்துக்கொடுத்தேன். வாங்கியவள், கடிச்சியா? என்றாள் இல்லை இல்லையென்று அவசரமாக தலையாட்டினேன்.

டேபிள் டென்னிஸ் விளையாடிவிட்டு ஷ¥வை வைப்பதற்காக வந்தேன். அவளது க்யூபிகள் காலியாக இருந்தது. டெடி பியர் -நான் ப்ரஸண்ட் பண்ணினது தான்- என்னைப் பார்த்து எகத்தாளமாக சிரித்தது. “யாரடா தேடுற டம்போ?” என்றது தனது கிரிஸ்டல் கண்களை உருட்டியபடி, அவளைப் போலவே. க்யூட்.

லிப்ட்க்கு வந்து டவுன்-ஆரோவை ப்ரஸ் செய்து காத்திருந்தேன். அக்ஷதா வந்தாள். “வோய் நீ இன்னும் வீட்டுக்கு போகலயா?” “இல்லடா கொஞ்சம் வேலை இருந்தது. ஆட்டோவில தான் போகனும். சாப்டியா?” என்றாள். “இல்ல. இப்பத்தான் போறேன். எங்க போகலாம்?”

“வர வர பர்கர் நல்லாவேயில்ல” என்று சொல்லிக்கொண்டே பவுண்டெய்னுக்கு எதிரில் உட்கார்ந்தேன். ஏப்பம் ஒன்று போனஸாக வந்தது. அக்ஷதா ஒரு டிஸ்கஸ்டட் பார்வை வீசினாள்.

நிலா மிகவும் அழகாக இருப்பது போல இருந்தது. இருக்காதா பின்ன? ஏதேதோ பேசினோம். (என்னன்னு கண்டிப்பா தெரியாது. ப்ளீஸ் கேட்காதீங்க!) “நான் நல்லா பாடுவேன் தெரியுமா?” என்றாள். “வாவ். வாட் எ சர்ப்ரைஸ். ச்சோ ஸ்வீட். ப்ளீஸ் பாடாத. ஷாப்பிங் வந்திருக்கறவங்க பாவம்.” ஒரு முறை என்னை ஆழமாக பார்த்து விட்டு முகத்தை திருப்பிக்கொண்டாள்.

“சும்மா சொன்னேன். பாடேன். ப்ளீஸ்.” “முடியாது. நான் கிளம்பறேன்.” எழுந்து கொண்டாள். நானும் அவள் பின்னே சென்றேன். “நீ எங்க வர்ற?” “ஆட்டோ வரைக்கும் வர்றேன். லேட் ஆயிடுச்சு தனியா போய்டுவியா?” “ஆஹா. ரொம்பத்தான் கரிசனம். எல்லாம் எங்களுக்கு தெரியும். இத்தன நாள் போகலையா?”

“இவங்கள லேக் கார்டன்ஸ்ல கொண்டுபோய் விட்டுடுப்பா” “சரி சார்” என்னை முறைத்தவாரே உள்ளே உட்கார்ந்திருந்தாள். ஆட்டோ ஸ்டார்ட் செய்ய தடுமாறியபோது என் மனம் ஸ்டார்ட் ஆகிக் கொண்டது. “தள்ளி உக்காரு” என்று சொல்லி நானும் உள்ளே ஏறி உட்கார்ந்து கொண்டேன்.

ஆட்டோ மிக மெதுவாக – மிக மெதுவாக. ஸ்டுபிட் டிரைவர். – சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது கடந்து செல்லும் தெருவிளக்கால் அவளுடைய முகம் அவ்வப்போது எனக்கு கொஞ்சம் மட்டும் தெரிந்தது, மணிரத்னம் படம் போல. நான் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தேன். திரும்பிய போது, அவளது கடைக்கண் பார்வையை அறிந்து கொண்டேன். சட்டென்று தலையை திருப்பிக்கொண்டாள். (எப்படி பிடிச்சேன் பாரு!). மவுனத்தை கலைக்க “எனக்கு ஜோசியம் பார்க்க தெரியும், தெரியுமா?” என்றேன். “தெரியுமே குடுகுடுப்ப பேமிலின்னு” என்று சிரித்தாள். கை நீட்டினாள். “இந்த இடம் மேடா இருந்தா..” “என்னடா?” என்றாள் முறைத்தவாறு “இல்ல இல்ல..இந்த இடம் மேடா இருந்த உனக்கு லீடர் ஷிப் க்வாளிட்டீஸ் அதிகம் இருக்குன்னு அர்த்தம்” என்றேன். “ம்ம்ம்..அந்த பயம் இருக்கட்டும்!”

சோனி ப்ளேயரை ஆன் செய்தேன். “சட்டென நனைந்தது நெஞ்சம்..சர்க்கரையானது கண்ணே...” செல் போன் ரிங் செய்தது. எடுத்தேன். அக்ஷதா. “என்னடா வீட்டுக்கு பத்திரமா போய் சேர்ந்தியா?” ஏசியை ஆன் செய்தேன். –இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்..

மணி இரண்டு. “அப்பத்தான் என்னோட ஸ்கூல்ல நான்..” -எந்த வாசல் வழி காதல் வந்ததென்று..-
மனி மூன்று “எல்லோரும் என்னத்தான் பார்த்திட்டு இருந்தாங்க. ஒரு பால். மூனு ரன் அடிக்கனும். நான் என்ன பண்ணினேன் தெரியுமா….”
மணி நாலு. “பாடேன் ப்ளீஸ்” “என்ன சொன்ன நீ? ஷாப்பிங் வந்தவங்க எல்லாம் ஓடிடுவாங்கன்னு சொன்னேல்ல. பாடமாட்டேன் போடா” “என்னது போடாவா?” “ம்ம்..” “சரி”
மனி நாலேமுக்கால். “ஓகே bye. சோம்பேறி காலைல லேட்டா வராத, ஒழுங்க டைமுக்கு எழுந்து வா.” “சரிங்க மேடம்.” “bye” “bye”

ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “ஹலோ..யாரு?” “அடப்பாவி அதுக்குள்ள கும்பகர்ணம் போட்டு தூங்கிட்டியா?” “ஹாங்..யாரு?” எனக்கு இன்னும் தூக்கம் கலைந்த பாடில்லை. “யாரா?போடா!” டொக்.

அடிப்பாவி. ரிங். ரிங். ரிங். அவள் ஆன்ஸர் பண்ணவில்லை.

ரிங். ரிங். ரிங். ரிங். “என்னடா கோபமா?” “இல்லடி” “டியா?” “ஆமா. நான் சொல்லுவேன்” “ம்ம்” “பாட்டு பாடலேன்னு கோபமா?” ஆகா இது தானா மேட்டரா. “இல்லடி. நீ பாடலன்னு சந்தோஷம் தான். பாரு தூங்கிட்டேன் பாரு. இல்லன்னா எனக்கு தூக்கம் வந்திருக்குமா?” “போடா.” “ப்ளீஸ் கோச்சுக்காதடா செல்லம்” “செல்லமா?” “ம்ம்ம்..நான் சொல்லுவேன்” “ம்ம்ம்..” “பாடேன் ப்ளீஸ்” “முடியாது” “ப்ளீஸ்.ப்ளீஸ்.ப்ளீஸ்” “சரி. ஒரு ஸ்டான்சா தான் பாடுவேன்” “ம்ம்..அமிர்தம் ஒரு சொட்டுன்னா என்ன புள் பாட்டில்ன்னா என்ன? அமிர்தம் அமிர்தம் தான?” “ஆரம்பிச்சுட்டான்” “பாடேன்” “ம்ம்” மௌனம். நிசப்தம். அமைதி. “ஹலோ. எனிபடி ஹோம்” “ம்ம்” “பாடலயா? வெக்கமா” “உன்கிட்ட எனக்கு என்னடா வெக்கம். பாடறேன் பாரு!ச்சீ. கேளு!” கட். போன்ல க்ரெடிட் முடிஞ்சது. அடப்பாவிகளா.

ரிங். ரிங். ரிங். ரிங். கதவைப் பூட்டும் போது பாத்ரூமின் ப்ளஷ் சத்தம் கேட்டது. அவசரமாக ஓடி வந்து போனை எடுத்தேன். “என்னடா ஆச்சு? ஏன்டா கட் பண்ணின?” “கட் ஆயிடுச்சு. க்ரெடிட் முடிஞ்சிருச்சு” “ஓ. பாத்தியா நான் பாடறது அவங்களுக்கே பிடிக்கல!” “ம்ம்” “ம்ம் ஆ” “இல்ல இல்ல. பாடேன்” (ஆட போங்கப்பா!) “ஊரு சனம் தூங்கிருச்சு…”

“டேய் ப்பாடு” விக்ரம் சிம்மக்குரலில் யாரையோ அழைத்தார். தியேட்டரில் சத்தம் காதைப் பிளந்தது. என்னுடைய காதுகளுக்கு அருகில் வந்தவள், “ஆமா, பாடுன்னா என்னடா?” என்றாள். எனக்கென்ன தெரியும்? புதுசா வந்திருக்கே தமிழகராதி அதுல வேணா பாக்கலாம். காதக்குடு என்றேன். சொல்லிமுடித்தவுடன் நறுக்கென்று கிள்ளினாள். “டர்டி மைன்டட்”. சத்தியமா அவ்ளோ அழகான ஸ்மைல் – வித் வெக்கம் யூ நோ!- நான் பார்த்ததேயில்ல. அவளுடைய கையை இறுக்கமாக பற்றிக்கொண்டேன். அவளுடைய கைகள் மிகவும் குளிர்ந்திருந்தது. என் கண்களை ஊடுறுவி பார்த்த அவள், என் தோளில் சாய்ந்து கொண்டாள்.


“எனக்கு வென்னிலா வித் பனானா ஸ்பிலிட்” என்றாள்.

பனானா அவள் உதடுகளில் சிக்கி மோட்சம் அடைந்து கொண்டிருந்தது. வெண்ணிலா ஐஸ்கிரீம் அவள் வாய்க்குள் சென்றும் உருகாமால் இருந்தது. நீங்களே சொல்லுங்கள் பனிக்குகைக்குள் ஐஸ்கிரீம் எப்படி உருகும்?

“வோய். உத வாங்கப்போற! என்னடா பாக்குற? ஒழுங்கா சாப்டு!” என்றாள் முட்டக்கண்ணை உருட்டியபடி. பயமாகத்தான் இருந்தது. இவள் எனக்கு யார்? ப்ரண்டா. கேர்ள் ப்ரண்டா. லவ்வரா? “வோய் முட்டகண்ணி. நீ யாரயாவது லவ் பண்ணிருக்கியா?” சர்வ சாதரணமாக உதட்டைப் பிதுக்கினாள். உண்மையில் பிதுக்கப்பட்டதென்னவோ என் இதயம் தான். மச்சம் மேலேயேறி மீண்டும் தன் இடத்துக்கு வந்து அமர்ந்தது. “ப்ச்..இல்லடா. நீ?” நானும் தோளை குலுக்கிக்கொண்டேன். ஒரு ஸ்கூப் ஐஸ்கிரீமை எடுத்து வாயில் வைத்துக்கொண்டவள், “வவ் வீலிங் வெவ்வடி இவுக்கும்?” என்றாள். “ம்ம்ம்..என்னம்மா? முழுங்கிட்டு சொல்லு” “ம்ம்ம்ம்” “இல்ல. லவ் பீலிங் எப்படி இருக்கும்?” என்றாள்.

“ம்ம்ம்” மறுபடியும் செமினாரில் விட்டது போல இருந்தது. “அதாவது நீ எப்பவெல்லாம் ப்ரீயா இருக்கியோ..லைக்..வேலை இல்ல..சும்மா உக்காந்திருக்க..நாட் பிசி அட்டால்..ங்கறப்போ சட்டுன்னு அவன் முகம் உனக்கு ஞாபகம் வரும். அப்படி வந்தா யூ ஆர் இன் லவ்! இன்பாக்ட் நீ வேலை செஞ்சுகிட்டிருக்கும் போதே உனக்கு அவன் முகம் ஞாபகம் வருதுன்னா, முத்திப்போச்சுன்னு அர்த்தம். அப்பாகிட்ட சொல்லிடு.” என்றேன். “ம்ம்ம்”

“ம்ம்ம்..அப்படீன்னா எனக்கு உன் முகம் தான்டா ஞாபகம் வருது!” என்றாள்.

சுகமாய் சுகமாய் கொள்ளையிடு. உயிரை மட்டும் விட்டுவிடு! சட்டென நனைந்தது நெஞ்சம்!-

“அப்பாகிட்ட சொல்லிடவா?” என்றாள்.

ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்” “ம்ம்”
“அழாதடா”
அவள் அழுது கொண்டே
“எனக்கு தெரியும்டா. உன்னால என்ன கல்யாணம் செஞ்சுக்க முடியாதுன்னு. அது தான் நான் ரொம்ப நாள் சொல்லாம இருந்தேன்” என்றாள்.

“அழாதடா”
“இல்லடா நான் அழல. அப்புறமா பேசறேன்.” “bye”
“ஏண்டா என்னாச்சு?”
“இடியட். அப்புறமா பேசறேன்னு சொல்றேன்ல” “bye”

ப்பா அவன் வீட்டுக்கு போய் பேசப்போறார்டா. எப்படியும் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் இருக்கும்”
“ம்ம்”

***

ன்னடா செமினார் முடிஞ்சதா. ப்ரெஸ்சர்ஸ் என்ன சொன்னாங்க. யாரும் புது பொண்ணு வரலையா? நல்லா சைட் அடிச்சிருப்பியே” என்றாள் நான் வந்ததும் வராததுமாக. நான் டைரியை வைத்து விட்டு, அவளைப் பார்த்தேன் “நான் சைட் அடிக்கறதில்ல” “சொன்னாங்க சொன்னாங்க. பேனா எங்கடா” “இந்தா” “கடிச்சியா” “இல்ல” “நீ கடிச்சிருப்ப உன்னால பேனாவையோ பென்சிலையோ கடிக்காம யோசிக்கவே முடியாதே. பொய் சொல்லாத!” ஷீ த்ரு அவே எ நாட்டி ஸ்மைல்.

(பேனாவை வாங்கி தன் மேஜை ட்ராயரில் போட்டுக்கொள்கிறாள். அங்கே நான்கைந்து பேனாக்கள் இருக்கின்றன முனை கடிபட்டு. தனக்குள் சிரிக்கிறாள்.)

“என்னைக்கு நிச்சயதார்த்தம்?” “டிசம்பர் 3”
“ம்ம்”
“டேய் சுப்பு. ஏண்டா சோகமா இருக்க? நாம பேசித்தான முடிவு எடுத்தோம்?”
“ஒன்னும் இல்ல.ஓகே. bye. நான் போறேன்.”

***

ரிங். ரிங். ரிங்.
“என்னடா தூங்கலயா?”
“ம்ம்”
“என்ன செஞ்சிட்டிருக்க?”
“சும்மா படுத்திருக்கேன்”
“சும்மாவா? அய்யே!”
“ஸ்டுபிட். டர்டி மைண்டட்.”
“ம்ம்”
……
“ஏதாவது பாடேன்”
“என்ன பாட்டு பாட?”
“ஏதாவது”
“ஏதாவதுன்னா எனக்கு தெரியாது. நானே ஒரு ஸ்டுபிட்”
“ம்ம்”
“சொல்லுடா என்ன பாட்டு பாடட்டும்?”
சொஞ்சநேரம் கழித்து..”ஊரு சனம் தூங்கிருச்சு..”
…..
“வை யூ லெட் மீ கோ?” என்றாள்.
“என்னடா?”
“நீ என்ன லவ் பண்ணதான? நான் வேறொருத்தன கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு சொன்னவுடனே நீ ஏன் தடுக்கல? வை யூ லெட் மீ கோ?” (ஆழுகிறாள்)
..
“அக்ஷதா. நீ ஏன் என்னை விட்ட? நான் முடியாதுன்னப்புறம் ஏன் நீ என்ன கம்பெல் பண்ணல? வை யூ லெட் மீ கோ?”
“என்ன பழி வாங்கறயா?”
“இல்ல பொறுக்கி. நான் கேக்கறேன்”

“அக்ஷதா. வில் யூ மேரி மீ?”
“எப்படிடா? அப்பா பேசிட்டாருடா.”
“சோ வாட். இன்னும் நிச்சயம் முடியலைல”
“சோ வாட்டா? எவ்வளவு ஈசியா சொல்ற. எத்தன வாட்டிடா நான் உங்கிட்ட கேட்டேன்”

“ம்ம்ம். bye”
“bye”

அழுகிறாள். அழுகிறாள். அழுதுகொண்டேயிருக்கிறாள். விடியும் வரை.
***

SMS சத்தம் கேட்டு போனை எடுத்தேன். அக்ஷதாவிடமிருந்து SMS. “ப்ளீஸ்டா இனிமே எங்கூட பேசாதடா. ப்ளீஸ்!” வெடித்துக் கிளம்பிய அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

***

ரிங். ரிங். ரிங். ரிங். “டாமிட். ப்ளீஸ் அக்ஷதா ஆன்சர் பண்ணுடா. ப்ளீஸ்” ஏசி குளிர் பொறுக்கமுடியவில்லை. ரசாயை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். மீண்டும் மீண்டும் அழுகை வெடித்து வெடித்து கிளம்பியது. ஐ மேட் எ மிஸ்டேக். ப்ளடி ஸ்டுபிட் மிஸ்டேக். எ மிஸ்டேக் ஐ ஆம் கோயிங் டு ரெக்ரட் பார் எவர் அன்ட் எவர். தலையை திருப்பி டிஜிட்டல் க்ளாகில் மணி பார்த்தேன். மணி நாலு என்றது. எத்தனை இரவுகள்? எழுந்து ஜன்னலுக்கு வந்தேன். எங்கும் நிசப்தம். திரைச்சீலையை இழுத்து வெளிச்சம் வராதபடி மூடினேன். சோனி ப்ளேயரை ஆப் செய்தேன். எங்கும் இருட்டு. டிஜிட்டல் க்ளாகில் மட்டும் இரண்டு புள்ளிகள் தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்றின. பின் மறைந்தன. தோன்..

பீஸில் வேலை எதுவும் ஓடவில்லை. எதிர் சீட் காலியாக இருந்தது. அக்ஷதா நோட்டீஸ் கூட கொடுக்காமல் ரிசைன் செய்து விட்டாளாம்.

டெஸ்க் போன் அடித்தது. என் பாஸ். “ஹலோ” “ஷால் வீ கோ? ஹால் நம்பர் 5.” “ம்ம்..ப்ரெஸர்ஸ் அகெய்ன்?” “ம்ம்..ஹ¥ எல்ஸ்?” “விசாந்த். ஐ யாம் பெட்அப் வித் திஸ், யூ நோ?”..

“சோ. ஆல் த ப்ராஸஸ் ஹாவ் டு கோ த்ரூ திஸ் லூப்.” நான் மீண்டும் செமினார் எடுத்துக்கொண்டிருந்தேன்.. “எக்ஸ்கியூஸ் மி சார்” ஒரு பெண் எழுந்து நின்றாள். “வாட்” “ஐ ஹாவ் எ டவுட் ஹியர் சார்” “சார்? ஐயாம் சுப்ரமணி. ப்ளீஸ் கால் மி சுப்பு. நோ சார், ப்ளீஸ்” “ஓகே” “ஸோ. நௌ வாட்ஸ் யுவர் டவுட், மிஸ்..?” “மிஸ். ப்ரியா. ப்ரியா சிங்கால்” “ம்ம்ம்..க்க்ம்ம்ம்..மே ஐ நோ ஹ¥ இஸ் திஸ் ‘சிங்கால்’, இப் யூ டோன்ட் மைண்ட்!” அங்காங்கே சிரிப்பலை எழுந்தது. அவளும் சிரித்தாள். க்யூட் அன்ட் ஸ்வீட். “ஆப் கோர்ஸ், மை டாட்!”

இன்பம் இன்பம் ஒரு துன்பம். துன்பம் மட்டும் பேரின்பம்

***

குரல்வலை: 111:1
தோன்றியது மறைந்துதான் ஆக வேண்டும். மறைந்தது தோன்றித்தான் ஆக வேண்டும். இது இயற்கையின் நியதி.

-முத்துசீனிவாசசுவாமிகள்.

7 thoughts on “தோன்றலும், பின் மறைதலும்

  1. my comments———————1/ so its abut a guy who is in luv with akshyatha, as per my understanding2/ ennakku oru unmai therinjaagonam, ithu real sambavama?3/ intha kadhiyil ennakku unro nalla therium: u prefer to have a sony mini music system and digital clock (in ur bed room) as u always wish…. :-)4/ aama intha kadaikku title > => aana kadaisi varai akshyatha vin ninaivu avanai vittu marraiya villaye ??

    Like

  2. நல்ல படைப்பு. ஆங்கில வார்த்தைகள் கொஞ்சம் குறைவாயிருந்திருக்கலாம், பட் நோ வொர்ரீஸ் 🙂

    Like

Leave a comment