யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 5

ஏப்ரல் 8 1985

ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த பேரிடருக்கு UCC -யே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நான்கு அம்சங்களைக்கொண்டது : உருப்படாத திட்டம், பழுதடைந்த தொழில்நுட்பம், பயிற்சியின்மை மற்றும் தொழிற்சாலையில் முறையான மேற்பார்வையின்மை.

அமேரிக்காவுக்கு இந்த வழக்கை எடுத்துச்சென்றதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை – அமேரிக்காவவுக்கு இதேபோல் பேரிடர்களில் இருக்கும் அனுபவம். இவ்வாறான சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுத்த பேரிடர்களுக்கு எதிராக அவர்களது சட்டம் கடுமையாக இருப்பதும், இதைப் பயன்படுத்தி ஒரு நல்ல மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் போப்பால் பேரிடர் உலகம் முழுதும் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சர்வதேசவிஷயமாக கருதப்பட்டது, அதனால் ஒரு சர்வதேசச்சந்தை இந்தியாவுக்கு தேவைப்பட்டது. வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) கூட ஒரு சந்தர்ப்பத்தில் “போப்பால் உலகத்தையே மாற்றிவிட்டது, அமேரிக்காவையும் வேறு தொழிற்சாலைகளும் இனி தானகவே மாறிவிடும்” என்று ஒத்துக்கொண்டார். இது இனி அமெரிக்கா இரட்டை தரம் (நியதி) – முதல் நியதி அவர்களுக்கு, இரண்டாவது அவர்கள் அல்லாத ஆனால் அவர்கள் தொழிற்தொடங்கியிருக்கும் மற்ற நாடுகளில், சொல்லப்போனால் இன்னும் முன்னேறாத நாடுகளில் – வைத்துக்கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்வதற்கு – உறுதிசெய்துகொள்ள – ஒரு வாய்ப்பளித்தாய் இருந்தது.

ஒரு நல்ல சிறந்த தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்தனர். எது நடந்ததோ அது நடந்து விட்டது அதை மாற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இதன் மூலம் கண்டறியப்பட்ட படிப்பினைகளை உலகத்தின் கவனத்துக் கொண்டுவரும் முயற்சியாக இந்த வழக்கு இருக்கும் என்று நம்பப்பட்டது. அமேரிக்க மக்களின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டுவருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் எவ்வளவு அபாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது -போப்பால் மக்களைப் போல- என்பதையும் அவர்களுக்கு உணரச்செய்யலாம்.

ஆனால் UCC -யின் எதிர்வினையோ இந்த நீதிமன்றம் வசதியற்றதாய் இருக்கிறது என்பதாய் இருந்தது. அமெரிக்கர்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் தேவையில்லாத ஒரு வழக்கில் -அதுவும் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட்டதொரு பேரிடரை- அநியாயத்துக்கு வீணடிக்கப்படுகிறது என்று கூறினர். மேலும் அவர்கள் சாட்சிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்றும் சாட்சியங்களோ போப்பாலில் இருக்கிறது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர்.













இறந்த 20000 மக்கள் சார்பாகவோ, நிரந்தரமாக வாழ்க்கைமுழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், அதிகாரபூர்வமாக எந்த நினைவுச்சின்னமும் வைக்கப்படவில்லை. தாயும் சேயும் இருக்கிற இந்த சிலை ருத் வாட்டர்மேன் (Ruth Watermann) என்பவரால் போப்பாலில் இருக்கும் கார்ப்பைடு தொழிற்சாலையின் வாசலில் வைக்கப்பட்டது.

டிசம்பர் 3 1985

ஒரு வருடம் கழித்து. நகரமே மிகுந்த கோபத்தில் இருந்தது. காலையில் மக்கள் கோவிலிலும், மசூதியிலும், தேவாலையங்களிலும் வணங்கினர். ஆனால் பிறகு பல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தர்னாவிலும் ஈடுபட்டனர். வாரன் ஆன்டர்சனின் உருவபொம்மைகள் தெருவெங்கும் கொழுத்தப்பட்டன. தொழிற்சாலையை சூறையாடவும் தீவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களும் தர்னாக்களும் ஒரு குறியீடாக மட்டுமே இருந்தன, இதனால் அவர்கள் பெரிதாக எந்த லாபத்தையும் அடையவில்லை.

ஆனால், இந்த நாள், இதை விட ஒரு முக்கியமான சம்பவத்தை தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்தது. கடைசியாக 1.8 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகை கொடுப்பது என்று முடிவு -UCIL- செய்யப்பட்டது. மேலும் அட்குறைப்பு செய்யப்பட்டது, தொடர்ந்து தொழிற்சாலையே மூடப்பட்டது.

ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பர். வேலையிழந்தவர்கள். வேலை செய்யமுடியாதவர்கள். வாயு கசவுக்குப்பின் வேலையிழந்தவர்கள் இருந்தனர். இன்னும் சிலர், காயங்கள் அவர்களை ஊனப்படுத்தி இனி வாழ்க்கையிலே என்றும் கடினமான வேலை செய்யமுடியாதவாறு செய்திருப்பதை, நாளடைவில் கண்டனர்.

யாரைக்குறை சொல்வது என்பதைக்கூட இந்தமாதிரியான பேரிடர்கள் குழப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் கைவிட்டபிறகு, அவர்கள் யார்மீது கோபப்படுவார்கள்? ஆண்டுகள் பறந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு ஆண்டு நினைவின் போதும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாமல் -ஏற்படுத்த முயற்சிக்காமல்- இருக்கும் போது, அவர்களுடைய கோபம் வாரன் ஆன்டர்சன் மேலிருந்து முதலமைச்சர், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மேல் திரும்பியது.

அதேசமயத்தில் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்துகொண்டிருந்தது? மறுவாழ்வுக்கான போர்டுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருமுனையிலும், விளம்பர போர்டுகளில், அன்று பிரதமமந்திரியாக இருந்த ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கே முதலுரிமை என்று சொல்லியவாறு கையசைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அரசு தயாரித்த திட்டங்கள், விளம்பரங்கள் மூலம் தினசரிகளில் திணிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் மேலிருந்த பார்வை நாளடைவில் மாறத்தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக பொதுமக்கள் பார்க்கத்தொடங்கினர். அவர்கள் தான் இழப்பீட்டு தொகை கேட்டு சுரண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். இழப்பீட்டு தொகை வழங்கப்படும் இடங்களில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை குற்றம்சாட்டுபவர்களாக இருந்தனர்.

கிட்டத்தட்ட எல்லா சட்டபத்திரிக்கைகளிலும் இழப்பீட்டுத் தொகை என்பது ஒரு அசிங்கமான வார்த்தையாக உருப்பெற்றது, இழப்பீட்டுத்தொகையை வழங்கப்போவது என்னவோ வேறுயாரோ. இழப்பீட்டுத் தொகை வழங்கப்போவது UCC தான் என்பதை அனைவரும் மறந்திருந்தனர் -மறக்கடிப்பட்டிருந்தனர். 20000 மக்கள் UCC-யின் கவனக்குறைவால் கொல்லப்பட்டிருந்த உண்மையை அனைவரும் மறந்திருந்தனர். 300,000 போப்பால் மக்கள் மீண்டு வரமுடியாத துயரங்களில் சிக்கிக் தவித்துக்கொண்டிருப்பதை அனைவரும் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருந்தனர்.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Making Of ஆவியும் பாவியும்.

எழுதின டுபாக்கூர் கதைக்கு மேக்கிங் வேறயா? இதெல்லாம் டூ மச். ரொம்ப ஓவர்ன்னு ஏம்ப்பா நெனக்கறீங்க. நான் எழுதின எல்லா கதையுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் (ஆமா இவரு பெரிய ஆர்.கே.செல்வமணி!). ஆனா இந்த கதை கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு செய்திகளை -தினமலரில் வெளிவந்தது – அடிப்படையாகக் கொண்டது. நிர்மல் வேறு, முத்து ஆவி மேட்டர வெச்சு கண்டிப்பா ஒரு கதை எழுதுங்கன்னு சொல்லியிருந்தார் (பாவம் அவர விட்டுருங்க. சொன்னது தப்பாய்யா!) ஆனால் உண்மையிலே பலசரக்கு கடை சமாச்சாரம் அதிர்ச்சிதான். என்னத்த சொல்றது. ஆனா சிலர், என்ன இப்படி எழுதறீங்க நம்புறமாதிரி இல்லியேன்னு சொன்னதால, சில அதாரங்களை (?!) சமர்ப்பிக்கிறேன். ஆதாரங்கள் தினமலரில் வெளிவந்த செய்திகள்.

ஆவி ஜோதிடம் பற்றிய செய்தி:

பலசரக்கு கடை சீடி பற்றிய செய்தி:

அப்புறம், இந்த கதைக்காக நான் போட்ட flowchart இது. (அடப்பாவி இதுவேறையா!) ம்ம்..என்ன பண்றது, இந்த கதை நான் readers கண்டிப்பா guess பண்ணக்கூடாதுங்கறதுல கண்டிப்பா இருந்தேன். எத்தன பேரு கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல.

இப்ப போறேன். Next meet பண்றேன்.

 

யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 4

டிசம்பர் 16 1984

டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி பலரும் பலவாறு யோசனை கூறினர். அதை மிகப் பெரிய ட்ரம்களில் அடைத்து அதன் தாய் கம்பெனிக்கே அனுப்பிடலாம். இல்லையேல், பெரிய குழாய்வழியாக காஸ்டிக் சோடா வாயுவை பயன்படுத்தி அதை நீர்த்தப்படுத்தலாம். இல்லையேல் அதை எரித்து (சோதனைக்கு உட்பட்டு) அதிகம் தீங்கில்லாத வேறொரு வாயுவாக மாற்றலாம். ஒருவழியாக இறுதியாக மிக்கை நீர்த்தப்படுத்தி செவின் (Sevin) என்ற பூச்சிகொல்லி மருந்தாக உருமாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இதை செய்யவிருக்கிற பல நிபுணர்கள் கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி, இதில் கிடைக்கும் பொருளாதார இலாபத்தை பற்றி ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இவ்வாறு மக்களுக்கு எடுத்துக்கூறினார்: “இந்த விசயத்தை மொத்தமாக பொருளாதார இலாபத்தை மனதில் வைத்து அனுகவேண்டும். எந்த ஒரு தொழில் நுட்ப சோதனையிலும் ஆபத்து கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆபத்தில்லாமல் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அடையமுடியாது. நாம் அபாயங்களை குறைக்க மட்டுமே முடியும்”. பீகாரின் முதலமைச்சர் ரேடியோவில் இந்த முறை – மிக்கை செவினாக மாற்றுவது – மிகவும் பாதுகாப்பனதும், மற்றும் சாத்தியமான ஒன்று என்று மக்களுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த செயல் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் சேதமும் தீங்கும் இல்லாமல் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

பாதுகாப்பு வழிமுறைகள் என்று சொல்லப்படுவது ஆறு வெவ்வேறான பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆறு பாதுகாப்பு அம்சங்களில் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் டிசம்பர் மூன்றாம் தேதி வேலைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த முறை அவை ஆறும் நன்றாக வேலை செய்கின்றன -தொடர்ந்து வேலை செய்யும் – என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எப்பொழுதும் -டிசம்பர் மூன்றாம் தேதிகூட – ஒழுங்காக வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கும், இதற்கு பொறுப்பானவர்கள் நினைத்திருந்தால். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஒழுங்காக வேலை செய்யவைக்க அவர்களுக்கு கொஞ்சநாட்கள் தான் பிடித்தது. இந்த ஐந்து பாதுகாப்பு அம்சங்களுடன், ஆறாவது அம்சமாக ஒன்று சேர்க்கப்பட்டது, அது : இவை அனைத்தையும் மீறி இதை செயல்படுத்தும் நாளன்று ஏதேனும் தவறு ஏற்பட்டால், தண்ணீர் தெளிக்க ஹெலிகாப்டர்கள் தயாராக நிறுத்தப்படும்.

டிசம்பர் பதினாறாம் தேதி, மிக்கை நீர்த்தப்படுத்தும் முயற்சிக்கு உறுதுனையாகவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கமும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட UCIL -ன் ஐந்து சீனியர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசர்கள் தொழிற்சாலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர், அலோசனைகள் வழங்குவதற்கு, ஆபரேசன் ·பெயித் (Operation Faith) குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இந்த முறை எந்த தவறும் நடக்கவில்லை. மிக் வெற்றிகரமாக நீர்த்தப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் போப்பாலுக்கு திரும்பி வரத் துடங்கினர். ஆனால் பொது மக்களின் தலைகளில் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இந்த நீர்த்தப்படுத்தும் செயல் மூலம் தயாரிக்கப்பட்ட செவினின் ரூபாய் மதிப்பு இரண்டரைக் கோடி. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட செவின் என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அது பரிமுதல் செய்யப்பட்டதா இல்லை சந்தையில் விற்கப்பட்டதா? ஆபரேஷன் ·பெயித் செய்லபடுத்தப்படுவதற்கு பொதுப் பணம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதன் மூலம் அடையப்பெற்ற இலாபம் என்ன ஆனது? அந்த இரண்டரைக்கோடி எங்கே சென்றது?

ஆபரேஷன் ·பெயித் நிறைய நிறைய நோக்கங்களைக் கொண்டது. அது மாநில அரசின் மக்களைக்-காக்கும் வேஷத்தை செவ்வனே பூர்த்தி செய்தது. மிகப்பெரிய வேலையை நாங்கள் எந்த விளைவுகளும் இன்றி செய்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்க வழி செய்தது. பாருங்கள் எங்கள் தொழிற்சாலையில் எந்தவித கோளாறும் இல்லை என்று UCC சொல்வதற்கு இது வாய்ப்பளித்தது. இந்த தொழிற்சாலை செவின் உற்பத்தி செய்வதற்காக கட்டப்பட்டது. அது எந்தவித பிரச்சனையும் இன்றி செய்யமுடிகிறது. நீங்களே பார்த்தீர்கள். தவறு எங்கே நடந்தது என்றால் இயந்திரங்களை இயக்குவதில் தான் இருக்கிறது. இயந்திரங்களை இயக்குவது இந்திய அதிகாரிகள் (UCIL) கையில் இருக்கிறது – என்று UCC கூறுவதற்கு இந்த செயல் வாய்ப்பளித்தது. மேலும் மத்திய அரசு, மற்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதன் மூலம் நல்ல சமிக்ஞை அளிக்க முடிந்தது. இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டை எந்தக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை.

கடைசியில் இந்த செயல் அனைவருக்கும் ஒரு திடமளித்தது – அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அதிகாரிகளுக்கு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஒரு துளி இலாபம் கூட கிடையாது. வேறு வழியில், மற்றுமொறு துயர சம்பம், இதே போல், பின்னாளில் நடந்தேறுவதற்கு அடித்தளமாக இந்த செயல் அமைந்தது.


பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் மிக ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொழிற்சாலைக்கு மிக அருகில் வசித்தவர்கள். கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், இந்தப் படத்தில் இருப்பதைப் போல, வாழ்க்கை முழுவதும் ஊனமாக இருக்கப்போகிற ஏதேனும் ஒருவர் இருக்கிறார்.

மார்ச் 29 1985

ந்த துயரச்சம்பவம் நடந்தேறிய உடனே, போப்பல் பல பணம்பறிக்கும் கும்பல்களுக்கு புகழிடமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, உலகத்தின் மிகப்பெரிய வழக்கில், மிகப்பெரிய ஒரு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வந்திருக்கும், வழக்கறிஞ்கர்களை சந்திக்க போப்பால் தயாராகவே இல்லை. பெற்றுத்தரும் இழப்பீட்டுத் தொகையில் 33 விழுக்காடு சம்பளம். அயிரக்கணக்கான பெருவிரல் ரேகைகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் 186,000 வழக்குகளை, பல அமெரிக்க மாவட்டங்களில் பதிவு செய்தனர்.

பாதிக்கப்பட்ட மக்களை இந்த “ambulance chasers” -களிடமிருந்து (ஆம். இந்த வழக்கறிஞர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்!) காப்பாற்ற இந்திய அரசு 29 மார்ச் அன்று ஒரு சட்டம் இயற்றியது. அது Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்பதாகும். இந்த சட்டம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் -மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிறாக ஒன்றும் செய்ய இயலாதவர்கள் – சார்பாக அரசு வாதாட -வழக்கு பதிவு செய்ய – வாய்ப்பளித்தது.

(தொடரும். அதிவிரைவில்!)

மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காந்தம் – 6

6

இரண்டாம் அத்தியாயம்.
முன்னும். பின்னும்.

1

2006. டிசம்பர் 31. லக்சம்பர்க்.

ஹோட்டல் சோ·பிடெல். அதிகாலை நான்கு மணி.

மிக மெல்லிய மஞ்சள் வெளிச்சம் அந்தப் பெரிய அறை முழுதும் அப்பிக்கிடந்தது. ஹீட்டரின் மெல்லிய சூடு கனத்த தரை விரிப்புகளுக்குள் ஒளிந்து கொண்டிருந்த கடைசி குளிர் காற்றையும் விரட்டிக்கொண்டிருந்தது. கனத்த மௌனம் வெளியே பரவிக்கிடந்த குளிர் போல அறையை சூழ்ந்திருந்தது. அறையின் ஓரத்தில் விலைஉயர்ந்த சீலைகளை உடுத்தியிருந்த ஜன்னல், அங்கிருந்த மிகப்பெரிய கட்டிலில் கனத்த கம்பளிக்குள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த மனிதனையே பொறாமையாகப் பார்த்தது. கட்டிலுக்கு அருகிலிருந்த மேஜையிலிருந்த டிஜிட்டல் கடிகாரம் 4:01 என்று காட்டியது. ரெடியோ உயிர்பெற்றது. கம்பளிக்குள் சிறு அசைவுகள் தென்பட்டன.

ட்ரிங். ட்ரிங். ட்ரிங். ட்ரிங்.
கம்பளிக்குள்ளிருந்து ஒல்லியான நீண்ட கை ஒன்று மிக மெதுவாக வெளியே வந்து கூவிக்கொண்டிருந்து டெலிபோனை எடுத்தது. “குட்மார்னிங் மிஸ்டர்.சிவா. திஸ் இஸ் யுவர் வேக் அப் கால். பான்ஜோயர்..” டொக். மறுபடியும் கை கம்பளிக்குள் சென்றுகொண்டது.

கனத்த மௌனம். அடுத்த இரண்டு நொடிகளில் அந்த உருவம் கம்பளியை விலக்கிக்கொண்டு எழுந்தது. அவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். முன் தலை வழுக்கை. பின்னால் நிறைய வெள்ளை முடி. கருப்பாய் இருந்தார். அடர்ந்த வெள்ளை மீசையும், பத்து நாள் கூர்மையான தாடியும் கொண்டிருந்தார். கண்களைத் திறக்காமல் மேஜை மேல் இருந்த தனது பிடிஏ வை எடுத்தது, ஆன் செய்தார். திரையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. 13 அல்லது 14 வயது இருக்கும். கண்களைத் திறந்தார்.வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் அந்தப் பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஷவரின் இளஞ்சூடான நீர் நெற்றியை நனைத்து அவரது கூர்மையான மூக்கில் இறங்கி, கழுத்தில் இருந்த புலி நகக் கயிற்றை சுத்தமாக நனைத்தது. ஒல்லியான ஆனால் திடகாத்திரமான தேகம்.

அடுத்த சில நிமிடங்களில் அவர் பளீர் வெள்ளை நிற சட்டைக்கும், பூட் கட் அடர் நீல கார்ப்பென்டர் ஜீன்ஸ¤க்கும் மாறியிருந்தார். தான் வைத்திருந்த ஒரு சாக்லேட் ரோலர் ஹஸ்பப்பீஸ் பேக்கேஜை நிமிர்த்திவைத்துவிட்டு, தனது சந்தன க்ரம்ப்ளரை திறந்து உள்ளே பாஸ்போர்ட் மற்றும் அத்தியாவசிய டாக்குமண்ட்ஸ்களை சரிபார்த்துக்கொண்டார். கருப்பு நிற ஐபாட் ஸ்·புள் ஒன்றை எடுத்து உயிரூட்டினார். அதன் கியூட் இயர் ஸ்பீக்கர்ஸை எடுத்து காதுகளுக்கு கொடுத்தார். ஐபாட் கார்ப்பென்டர் ஜீன்ஸின் முன் பாக்கெட்டில் தஞ்சம் அடைந்தது. மணி பார்த்துக்கொண்டார். ·ப்ளைட் 6:45 க்குத்தான். இன்னும் நிறைய நேரம் இருக்கிறது.

ஐபாடில் டிஎம்எஸ் “அழகென்ற சொல்லுக்கு முருகா” என்று உருகிக்கொண்டிருந்தார். கீழே சென்று, விமான நிலையத்திற்கு செல்வதற்கு, ஸட்டில் பஸ் வருவதற்குள் ஒரு காபி சாப்பிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டார்.

***

காலை மணி 9:00 ப்ராங்க்பர்ட் விமானநிலையம். அல்·ப்ரெடோ எஸ்ப்ரஸோ பார்.

லக்ஸம்பர்க்கிலிருந்து ப்ராங்க்பர்ட்டுக்கு கனெக்டிங் ·ப்ளைட். இனி சென்னை செல்வதற்கான அடுத்த ப்ளைட்டுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. சூடான எஸ்ப்ரஸோ டேபிளில் நுரை ததும்பிக்கொண்டிருந்தது. சிவா தனது க்ரம்ப்ளரைத் திறந்து உள்ளிருந்து தனது மடிக்கணினியை எடுத்து வை-·பையோடு கனெக்ட் செய்தார். தனது பேங்கின் இணையதளத்திற்கு சென்று கடைசியாக வயர் செய்யப்பட்ட தொகையை சரிபார்த்தார். தனது வாழ்நாளின் மொத்த சொத்து. பெருமூச்சு விட்டுக்கொண்டார். ஹாட்மெயில் லாக் இன் செய்தார். ஒரு புதிய மெயில். மெசேஜ் டைட்டில்: “தலைவா. ஏற்பாடுகள் தயார்.”

கணினியை மூடிவைத்தார். எஸ்ப்ரஸோவை எடுத்து மிக மெதுவாக நுரையை பருகினார்.

மேலே ·ப்ளைட் சார்ட்டில் எழுத்துக்கள் வேகமாக மாறியது. லுப்தான்சா. எம்.ஏ.ஏ. கவுண்டர் 4. 11:45.

***

புகை மூட்டமாக இருக்கிறது. அல்லது பனி மூட்டமா? இது என்ன இடம். நான் எங்கிருக்கிறேன். ·ப்ளைட் இன்னும் வரவில்லையா? அல்லது ·ப்ளைட் நடுவானத்தில் சிதறிவிட்டதா? நான் மேக கூட்டத்தில் நடக்கிறேனா? யார் அது? அதோ. அங்கே. இந்த பனி மூட்டத்தில் எனக்கு எதுவுமே தெரியவில்லை. யாரோ அங்கு நிற்பது போலத்தான் தெரிகிறது. நிழலாடுகிறது. ஹலோ யார் நீங்க? நான் அவனையே பின் தொடர்கிறேன். இல்லை அவளா? இல்லையில்லை அவன் தான். கிட்டே நெருங்கிவிட்டேன். பனி விலகுகிறது. அவன் சிரித்தவாறு நின்று கொண்டிருக்கிறான். வசீகரமான புன்னகை. என்னுடைய அதே கூர்மையான மூக்கு. முகத்தில் சுருக்கங்கள் இல்லை. சிறிய கண்கள். ஆம் எல்லோரும் சொல்லும் பவர்புள் ஐய்ஸ். பட் வெரி டிபரண்ட் ·பேஸ். சார்.

·ப்ளைட்டின் மிக மெல்லிய ஆனால் அழுத்தமான சத்தம். காதுகள் அடைத்துக்கொள்ளும் சுகமான அனுபவம். கண் திரையை விலக்கினேன். விமானப்பணிப் பெண். அழகாகச் சிரித்தாள். எனி சா·ப்ட் டிரிங்ஸ் சார்.ம்ம். எஸ். ஒன் க்ளாஸ் ஆப் ஆரஞ்ச் ஜூஸ் ப்ளீஸ். பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் ஹாய் என்றார்.

“ஐயாம் அபிஜித் சர்க்கார் ப்ரம் வெஸ்ட் பெங்கால்.” “க்ளாட் டூ மீட் யூ. ஐயாம் சிவா.” “நைஸ் டு மீட் யூ டூ” “சிவா. வாட் யூ டூ இன் ஜெர்மனி?” “ஐ வாஸ் ஹியர் ·பார் க்வயட் எ லாங் டைம். ·பார் தர்ட்டி இயர்ஸ். ஐ வ்வோன் ·ப்யூ ஸ்டீல் ப்ளான்ட்ஸ் ஹியர். ஜஸ்ட் அ விசிட் டு இன்டியா” “ஒ. ரியலி க்ரேட். ஐ ஜஸ்ட் கேம் ·பார் எ டூர்” “ஒ. தாட்ஸ் நைஸ் மிஸ்டர். அபிஜித்”

சிவா ஆரஞ்சு ஜீஸை சிறிது பருகினார். மறுபடியும் புகை மூட்டம்.

***

இமிக்ரேசன் பாரத்தை பூர்த்தி செய்து எதிரே இருந்த வலையில் வைத்தார் சிவா. பாத்ரூம் போவதற்கு எழுந்தார். “மிஸ்டர். அபிஜித், இ·ப் யூ குட் ப்ளீஸ்” “ய்யா. ஸ்யூர்” அபிஜித் எழுந்து வழிவிட்டார்.
அபிஜித் சிவா நடந்து செல்வதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு தனது சீட்டில் அமர்ந்து கொண்டார். சிவாவின் இருக்கைக்கு நேரே இருந்த வலைப்பவுச்சில் சிவாவின் இமிக்ரேசன் கார்ட் இருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு சட்டென்று எடுத்தார். பிரித்தார். மேலே பெயருக்குப் பக்கத்தில் : காளி மாணிக்கம் என்றிருந்தது. அபிஜித் சத்தம் போடாமல் இமிக்ரேசன் கார்ட்டை இருந்த இடத்தில் வைத்தார்.

***

“யூ லுக்ட் வெரி டிஸ்டர்ப்ட் வைல் யூ வேர் ஸ்லீப்பிங். எனி ப்ராப்ளம் மிஸ்டர். சிவா?” யோகர்ட்டின் கடைசி துளிகளையும் பருகிக்கொண்டே அபிஜித் கேட்டார். “நோ நோ. ஐயாம் பெர்பெ·க்ட்லி ஆல்ரைட். ஜஸ்ட் நாட் இன·ப் ஸ்லீப். தாங்க்ஸ் அபிஜித்” சிவா தனது ஸ்பூனில் கனிசமான ப்ரைட் ரைஸ்ஸை எடுத்துக்கொண்டிருந்தார். “எனிவே ஐ வில் கெட்டவுன் அட் பாம்பே. இட்ஸ் ரியலி எ ப்ளஸர் டு மீட் யூ சிவா” “மீ டூ அபிஜித்”

வெளியே வானம் மிகவும் பிரகாசமாக இருந்தது. சுத்தமாக. சிவாவுக்கு பிடித்தமான மெல்லிய நீல நிறத்தில்.

***
சென்னை. இரவு மணி பதினொன்று நாற்பது.

“அண்ணா ஏர்ப்போர்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது” அழகிய தமிழ் குரல் பயணிகளை வரவேற்றுக்கொண்டிருந்தது. சிவா இமிக்ரேசன் க்யூவில் நின்று கொண்டிருந்தார். அலுவலர் சிவாவின் பாஸ்போர்ட்டை வாங்கி பார்த்தார். மெதுவாக பக்கத்தில் இருந்த மற்றொரு அலுவலரிடம் பேசிக்கொண்டே எழுந்து நின்றார். பிறகு ஏதும் பேசாமல் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு “வெல்க்கம் ஹோம் சார்” என்று சொல்லி சிரித்தார், பிறகு பாஸ்ப்போர்ட்டில் ச்சாப் அடித்துக் கொடுத்தார்.

சிவா பாஸ்போர்ட்டை வாங்கிக்கொண்டு சிரித்து விட்டு வெளியே வந்தார். பாஸ்போர்ட்டை பிரித்து உள்ளேயிருந்த சிறிய பேப்பரை எடுத்தார். அதில் “தலைவா வருக” என்றிருந்தது. சிவா சட்டென்று அந்த பேப்பரை எடுத்து கசக்கி சுக்கலாக கிழித்து அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டார். திரும்பி அந்த அலுவலரைப் பார்த்தார். அந்த அலுவலர் இன்னும் சிவாவையே பார்த்துக்கொண்டிருந்தார். சல்யூட் அடித்தார்.

***

வெளியேறியவுடன் சிவா என்ற பெயர்பலகையைப் பார்த்தார். கூலிங் க்ளாஸை எடுத்து அணிந்து கொண்டார். வேகமாக நடந்தார்.
பெயர் பலகையை வைத்திருந்த ட்ரைவர் சிவாவிடமிருந்து ஒரு லக்கேஜை வாங்கிக்கொண்டு அவரோடு ஓட்டமும் நடையுமாக சென்றார்.சிறிது தூரத்தில் பார்க் செய்யப்பட்டிருந்த வெள்ளை ப்ரீமியர் பத்மினியில் சென்று ஏறிக்கொண்டார். ட்ரைவர் லக்கேஜை பின்னால் வைத்துவிட்டு ஓடோடி வந்து முன் சீட்டில் ஏறிக்கொண்டார். கதவை மூடினார். தொப்பியைக் கழற்றி சீட்டில் வைத்துவிட்டு, திரும்பி சிவாவைப் பார்த்தார். ட்ரைவரின் கண்கள் கலங்கியிருந்தன. நா தழுதழுத்தது. தலைவா என்றார். சிவா ஒன்றும் பேசாமல் கிளம்பலாம் என்று ஜாடை காட்டினார். ப்ரீமியர் ஸ்டார்ட் ஆனது.

காருக்குள் கண்ணாடிக்கு மேல் சூர்யா என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. சிவா சிரித்துக்கொண்டே, “இன்னும் இந்த பெயரை தமிழ்நாட்டில் யார் ஞாபகம் வெச்சிருக்காங்க சத்யா?” என்றார். “நிறைய பேர் இருக்காங்க தலைவா. உங்கமேல உண்மையான பாசமும் நன்றியும் இருக்கிற நிறைய பேர் இன்னும் தமிழ்நாட்டில இருக்காங்க தலைவா.”

தாம்பரம் மெயின் ரோட்டில் நுழைந்த ப்ரீமியர் பத்மினி வேகம் பிடித்தது.

***

(தொடரும்)

இன்சிடென்ட்ஸ்-7

பார்த்த ஞாபகம் இல்லையோ?

சிங்கப்பூர். ரா·பிள்ஸ் பிளேஸ். ·பிட்னஸ் பர்ஸ்ட்.

வாடா வாடா வாங்கிடா
வாய்ல பீடா போட்டுக்கடா
போடா போடா பொழச்சுப்போடா
புடவ வாங்கி கட்டிக்கோடா

என்று பாடிக்கொண்டே வியர்வை வழிய ட்ரெட்மில்லிலிருந்து இறங்கினேன். அவர் என்னைப் பார்ப்பதைப் போல உணர்ந்தேன். என்ன “அப்படி குர்ருன்னு பாக்குற” என்று வடிவேலு போல கேட்கவேண்டும் என்று நினைத்தேன். கேட்கவில்லை. அப்புறம் நாமாச்சு நம்ப ஐபாட் ஆச்சு நம்ப வொர்க் அவுட் ஆச்சுன்னு கொஞ்ச நேரம் இருந்துட்டு, சரி கிளம்பலாம்னு நினைக்கறப்போ, “ஹலோ” ன்னு ஒரு குரல். திரும்பிப்பாத்தா அதே நபர். நானும் ஹலோ என்று சொன்னேன். அவர் கொஞ்ச நேரம் தயங்கி பிறகு “நீங்க முத்து” தானே என்றார். ஆமா “நீங்க” என்றேன். “என்னைத்தெரியலையா. **** you man” என்று சொல்லி அப்போத்தான் டம்பிள்ஸ் அடிச்சிருந்த கையை மடக்கி ஒங்கி வயித்துல ஒரு குத்து விட்டார். ஹெஹே..நாங்களும் சிக்ஸ் பேக்ஸ் வர்றதுக்கு இப்பத்தான வொர்க் அவுட் முடிச்சோம்..அவர் விரல்கள் ஒன்னு ரெண்டு க்ராக் ஆயிருந்தாலும் ஆயிருக்கும்..சொல்லமுடியாது.”அடப்பாவி. இந்த குத்து குத்தறான். கெட்டவார்த்தையில வேறு திட்டறான். ரொம்ப தெரிஞ்சவனா இருப்பானோ” ன்னு நானும் என் மூளையில் கூகிள் செய்தும் அது MSN செர்ச் போல முற்றிலும் சம்பந்தமில்லாத ரிஸல்ட்களையே கொண்டுவந்து கொடுத்தது. ” இன்னும் தெரியலையா. ஐ வில் கில் யூ மேன்” என்று சொல்லி கழுத்தைப் பிடித்து “நான் தான் ப்ரகாஷ். மலேஷியா ப்ரகாஷ். ஏர் ஏசியா. கே எல் எக்ஸ்ப்ரஸ். சித்ரா” “ஓ எஸ். ஹவ் ஸ்டூப்பிட் ஆம் ஐ. நௌ ஐ ரிமெம்பர் யூ. ஓ மை ப்ரகாஷ். யூ லுக் சோ வெரி ****ing changed. யூ லுக் சோ டிபரென்ட்.” அப்புறம் கட்டிக்கொண்டோம்.

***

மலேஷியா. கோலாலம்பூர். கே.எல்.எக்ஸ்பிரஸ். டாசிக் செலாடான் ஸ்டேஷன்.

ன்று சனிக்கிழமை. த வெரி சேம் ஸ்டூபிட் சாட்டர்டே. நான் அந்த ஸ்டேஷனில் ட்ரெயினுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஒரு தமிழ் குடும்பம் வந்தது. ஒரு தாத்தா (அல்லது தாத்தா போல தோற்றமளித்தவர்) ஒரு அம்மா அப்புறம் ஒரு பெண். நேச்சுரலி, நான் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கிருந்த ஒரு அலுவலர் அவர்களுக்கு புத்ரஜெயாவில் இறங்கி சைபர்ஜெயாவுக்கு செல்வது எப்படி என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த தாத்தாவும் விடாமல் கேள்விகேட்டுக்கொண்டேயிருந்தார். நான் புத்ரஜெயாவில் தான் இறங்கவேண்டும். சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்ஸ¤ம் அங்கு தான் வரும். எனவே நான் தாத்தாவிடம் சென்று நான் உங்களை சைபர்ஜெயாவுக்கு பஸ் ஏற்றி விடுகிறேன். எனக்கு தெரிந்த நண்பர்கள் சிலர் இருந்தால் உங்களை பத்திரமாக இறக்கிவிட சொல்கிறேன் கவலைப்படாதீர்கள் என்றேன்.

அவருக்கு புத்ரஜெயாவில் வேலை கிடைத்திருக்கிறது என்றும் திங்கட்கிழமை வேலையில் சேரவேண்டும் என்றும் அதற்காகத்தான் இன்று சும்மா இடத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று போகிறேன் என்றார். மேலும் ரயிலில் செல்லும் போது எக்கச்சக்கமாக கேள்விகள் (எனக்கு பதில் தெரியுதோ இல்லியோ) கேட்டுக்கொண்டே வந்தார் அந்த தாத்தா. அந்த அம்மாவும் பெண்ணும் அமைதியாக அமர்ந்திருந்தனர். எனக்கு எப்படா புத்ரஜெயா வரும் என்றாகிவிட்டது. பத்து நிமிஷம். எப்பவும் சைபர்ஜெயாவுக்கு செல்லும் பஸ்தான் ரெடியாக நிற்கும். எங்கள் ஆபிஸ¤க்கு செல்லும் பஸ் கொஞ்சம் லேட்டாத்தான் வரும். எனவே வேகமாக அவரைக் கழட்டிவிட்டுவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.

ஆனால் அன்று சைபர்ஜெயாவுக்கு போகும் பஸ் ரொம்ப நேரமாக வரவில்லை. டைம். ரொம்ப நேரம் கழித்து வந்த பஸ் ஒன்றில் அவர்களை ஏற்றிவிட்டு நான் என் ஆபிஸ¤க்கு சென்றேன்.

***

புதன்கிழமை. புத்ரஜெயா கே.எல்.எக்ஸ்பிரஸ் ஸ்டேஷன்.

நான் வழக்கம்போல ட்ரெயினுக்கு வெயிட்டிங். சைபர்ஜெயா மக்கள் வந்தார்கள். கூடவே அந்த பெண். எந்த பெண்? அந்த தாத்தா வந்தாரே, அவரோடு வந்ததே அந்த பெண். அந்த பெண் என்னைப் பார்த்ததும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள்.(ஷீ மஸ்ட் பி சோ கிளவர் டு ரிமெம்பர் சச் எ ஸ்டூபிட் ·பேஸ்) ஆனால் சிரிக்கவில்லை டப்பென்று முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டாள். நான் அவளிடம் சென்று ஹாய் என்றேன். அவளும் ஹாய் என்றாள். பிறகு “நீங்க இங்க எங்க” என்றேன். அவள் கொஞ்ச நேரம் தயங்கிவிட்டு பிறகு “சாரிப்பா. அன்னிக்கு வந்தது என்னோட அப்பாதான். அவர் சொன்னமாதிரி அவருக்கு வேலை கிடைக்கல்ல, எனக்கு தான் வேலை கிடச்சது. நான் தான் திங்கட்கிழமை ஜாயின் பண்ணனும். அதுக்குதான் அவர் என்னக்கூட்டிட்டு இடத்த பாக்க வந்தார். அவர் ஏன் பொய் சொன்னார்னு தெரியல ஆனா சாரி” என்றாள். அவர் பொண்ணுக்குத்தான் வேலை கிடச்சிருக்குன்னு சொன்னா நூல் விட்ருவோம்னு நினைச்சிட்டாரோ? இல்லாட்டினா நூல் விடமாட்டோமா என்ன? “உங்க பேர்” “சித்ரா” “வாவ். நைஸ் நேம்”

அன்று ஆரம்பித்து எங்கள் நட்பு கே.எல்.எக்ஸ்பிரஸின் வேகத்தைவிட இன்னும் அதிவேகமாக சென்றது.

***

கே.எல். எக்ஸ்பிரஸ்.

க்ஸ்பிரஸ் அதிரடியாக சென்று கொண்டிருந்தது. ஐ லைக் திஸ் ட்ரெயின். ஒரு காரணம் இது நல்ல வேகம். இரண்டாவது இதன் அழகு. நல்ல spacious கூட. அன்று நான் கொஞ்சம் லேட்.

என்னருகில் வந்து அவர் உட்கார்ந்தார். ஹாய். ஹாய். ஐயாம் ப்ராகாஷ். ஓ. நைஸ் டு மீட் யூ. ஐயாம் முத்து. ஷேக் ஹேண்ட்ஸ். மௌனம். ஐயாம் வொர்க்கிங் அஸ் சம் டுபாகூர் மானேஜர் இன் ஏர் ஏசியா பசிபிக். ஓ தாட்ஸ் கிரேட். உங்களுக்கு சம்பளம் எப்படி பட்ஜெட் சம்பளமா இல்ல முழு சம்பளமா? அன்ட் பைதவே ஐயாம் வொர்க்கிங் அஸ் எ ஸ்டூபிட் புரோகிராமர் ·பார் ஹைடெக். ஐயாம் ·ப்ரம் கோயம்புத்தூர். ஐயாம் ·ப்ரம் மதுரை. ஓ மதுரையா நீங்க. பாத்தா அப்படித்தெரியல. (பின்ன எப்படித்தெரியுது பான் ஷாப்பில கல்லாக்கு பின்னாடி உக்காந்திருக்கிற ஷேட்டு மாதிரி தெரியுதா?)

நட்பு பற்றிக்கொண்டது. அவர் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார். கே. எல் -லில் ஏர் ஏசியா பசிபிக்ல ஏதோ மானேஜரா வேலை பாத்துக்கொண்டிருந்தார். அங்கு ஒரு மலேஷிய தமிழ் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு, அங்கேயே செட்டிலாகி, ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்டார். அவருக்கு இருந்த ஓரிரு இந்திய தமிழ் நண்பர்களில் நானும் எனது நண்பர் சரவணனும் இருவர்.

ஒரு நாள் திடீரென்று அவரது மகனுக்கு பிறந்தநாள் அதனால் கண்டிப்பாக வரவேண்டும் என்றார். முதலில் பிகு பண்ணிவிட்டு பிறகு சரி என்று போவதற்கு ஒத்துக்கொண்டோம்.

***

கோலாலம்பூர். செராஸ். மாலை எட்டு மணி.

ப்ராகாஷ் மகனின் பிறந்தநாள் விழா. விழா என்று சொல்லமுடியாது ஜஸ்ட் எ கொண்டாட்டம். தெரிந்த நபர்கள் சிலர் மட்டுமே வந்திருந்தனர். நானும் சரவணனும் ஆஜர். கொண்டுபோயிருந்த கேக் மற்றும் கிப்ட்டைக் கொடுத்துவிட்டு உள்ளே நின்று கொண்டிருந்தோம். வந்திருந்த அனைவரும் மலேஷியாவில் குடியேறியிருந்த தமிழ் மக்கள். எங்களிடம் விடாமல் இந்தியாவைப்பற்றியும் தமிழகத்தைப் பற்றியும் நிறைய விசயங்கள் கேட்டுக்கொண்டேயிருந்தனர். அவர்களில் நிறைய பேர் இந்தியாவுக்கு சென்றதில்லை. ஆனால் தமிழகத்திற்கு ஒரு முறையாவது சென்றுவிடவேண்டும் என்கிற ஆர்வம் அவர்களிடம் நிறைய இருக்கிறது.

அதோ அங்கிருக்கும் கும்பலில் அந்த தாத்தாவும் இருக்கிறார். என்னை ஏமாற்றிய தாத்தா. அப்புறம் அந்த அம்மா. இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள் என்று நினைக்கும் போதே “ஹாய் முத்து. வாட் எ சர்ப்ரைஸ். நீ என்ன இங்க” என்றொரு ஸ்வீட்டான குரல். சித்ரா. “சித்ரா நீ இங்க?” “இது என்னோட அக்கா வீடு. குழந்தை அக்காவோடது”

ப்ராகாஷ் வந்தார். சித்ராவையும் அவளுடைய பேமிலியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். தாத்தா ப்ராகாஷினின் மாமனார். தாத்தாவுக்கு என்னைப் பார்க்கவேமுடியவில்லை.

மறுமுறை இந்த வாழ்க்கையில் என்னை சந்திக்கவே போவதில்லை என்று நினைத்து அவர் அன்று அந்த பொய்யை சொல்லியிருக்கலாம். ஆனா உலகம் ரொம்ப -இப்ப ரொம்ம்ம்ம்ம்ம்ப- சின்னது.

***

நான் சிங்கப்பூர் வந்தது ப்ராகஷ¤க்கு தெரியாது. நான் புத்ரஜெயாவிலிருந்து ஐமோக்கா என்ற இங்கிலாந்து பேஸ்ட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது அவரிடமும் அவர் குடும்பத்திடமும் தொடர்பு விட்டுப்போய்விட்டது. நடுவில் நான் சிம் கார்ட் தொலைத்து வேறு வாங்கினேன்.

நீண்ட நாட்கள் கழித்து அவரை இங்கு ஜிம்மில் சந்திப்பேன் என்று நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. திடீரென்று சந்தித்த பொழுது அவரை சட்டென நினைவுக்கு கொண்டுவரமுடியவில்லை. அவர் நிறைய மெலிந்திருந்தது காரணமாக இருக்கலாம். இல்லை எனது ஞாபக சக்தி மழுங்கிவிட்டது கூட காரணமாக இருக்கலாம்.

***

* பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

(மற்ற இன்சிடென்ட்ஸ் பகுதிகள் தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.)

கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது புத்தகங்கள்.








Thanks: August.

இந்த பட்டியல் “ஆகஸ்ட்” என்கிற மாத இதழ் வெளியிட்டிருந்தது. இவைதான் வேறு புத்தகங்கள் இல்லை என்பது இல்லை. ஆனால் இந்த இருபது புத்தகங்களும் நல்ல புத்தகங்கள் என்பது தான் உண்மை.

இவற்றில் நான் மூன்று மட்டுமே படித்திருக்கிறேன். Catcher In The Rye, Midnights Chidren and Fountain Head. இவை மூன்றுமே மிக அருமையான Novels.

பின் குறிப்பு:அனானியின் பின்னூட்டம் மிகச்சரி. “கண்டிப்பாக படிக்க வேண்டிய இருபது ஆங்கில புனைவுகள்” என்று இந்த இடுகைக்கு தலைப்பு கொடுத்திருந்தேன். பல மொழிபெயர்ப்பு புத்தகங்கள் இருப்பதால் அவற்றை ஆங்கில புனைவுகள் என்று சொல்வது சரியில்லை (அபத்தம்!). எனவே தலைப்பை மாற்றிவிட்டேன்.

ஆவியும் பாவியும்

(சிறுகதை)

“நானும் கேள்விப்பட்டிருக்கேன்யா. எங்க ஊர்ல கூட பேசிப்பாய்ங்க. நான் ஒரு தடவ நேர்லயே பாத்திருக்கேன்.” என்றார் இன்ஸ்பெக்டர். “நீங்க நேர்ல பாத்திருக்கீங்களா? நான் ஆவிகளோட பேசவேசெஞ்சிருக்கேன்” என்றார் ஏட்டையா பெருமையாக. “அப்படியா? சும்மா ரீல் சுத்தாதயா” “இல்ல இன்ஸ்பெக்டர் சார். உண்மை நான் பேசிருக்கேன். சில ஆவிங்க என் கூட பேசும். இப்ப வேணும்னா செஞ்சு பாக்கலாமா?” இன்ஸ்பெக்டர் ஆழ்ந்து யோசித்தார். பிறகு “ம்ம்..செஞ்சு பாக்கலாம்”

டேபிளில் இருந்த பொருட்கள் யாவும் தங்கள் இருப்பிடத்தை தற்காலிகமாக இழந்தன. பூமிபந்து உட்பட. ஏட்டையா ஒரு சாக்பீஸை எடுத்துவந்து டேபிளில் கோடுகள் போட்டார். பிறகு அழகாக A B C என்று Z வரைப் போட்டார். பிறகு 1 2 3 என்று ஒன்பது வரை எண்கள் எழுதினார். லைட்கள் ஆப் செய்யப்பட்டன. இரண்டு மெழுகுவர்த்திகள் மட்டும் ஏற்றப்பட்டன. இன்ஸ்பெக்டருக்கு வேர்த்து விட்டது.

ஒரு தடித்த இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து ஒரு கட்டத்தில் வைத்தார் ஏட்டையா. ஒரு முனையை அவர் பிடித்துக்கொள்ள மறுமுனையை இன்ஸ்பெக்டர் பிடித்துக்கொண்டார். இருவரும் மவுனமாக அமர்ந்திருந்தனர்.

திடீரென்று நாணயம் HA HA HA HA என்று நகர்ந்த்து. “பாத்தீங்களா சார், எப்படி சிரிக்குதுன்னு” என்றார் ஏட்டையா.”யாருய்யா சிரிக்கிறா?” என்றார் இன்ஸ்பெக்டர் அப்பாவியாய். முறைத்த ஏட்டைய்யா, பின்னர் சற்று பவ்யமாக “காட்டேரி சார்” என்றார். “என்னது” என்று கிட்டத்தட்ட விழுந்தேவிட்டார் இன்ஸ்பெக்டர்.ஏட்டையா யார் நீ என்று கேட்டதற்கு நாணயம் K A T E R I என்று நகர்ந்தது. அதிர்ந்து போன ஏட்டையா “சாரி நாங்க உன்ன கூப்பிடல. நீ போயிடு” என்றார். நாணயம் N O என்று நகர்ந்தது. ஏட்டையா “தயவுசெஞ்சு போயிடு” என்றார்.

டேபிளுக்கு மேலிருந்த குண்டு பல்ப் சட்டென்று உடைந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் கீழே விழுந்து சுக்கல் சுக்கலாக உடைந்தது. இன்ஸ்பெக்டர் அரண்டு போய்விட்டார். ஒரே ஒட்டமாக ஓடி வெளியே சென்று நின்று கொண்டார். ஏட்டையாவும் பிற காண்ஸ்டபிள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் இங்கும் அங்கும் ஓடினர். பிறகு சுதாரித்து லைட்களைப் போட்டனர். ஸ்டேசனுக்கு உயிர் வந்தது.

வெளியே ஒரு ஸ்கூட்டர் வந்து நின்றது. அதிலிருந்து ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு ஆள் இறங்கினார். நேரே, வெளியே விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்த இன்ஸ்பெக்டரிடம் வந்து “சார்” என்றார். இன்ஸ்பெக்டர் திரும்பி தன் பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக : யாருய்யா நீ என்றார். “சார் என் பேரு மாணிக்கம் சார்” என்றார் வந்தவர்.

***

“உங்களுக்கு எத்தனவாட்டிடா சொல்றது? வேலைசெய்யுற பொண்ணுங்க மேல கையவெக்காதீங்கன்னு? அப்படியா கொழுத்து போய் அலயறீங்க? இந்ததடவ உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. யார் சொன்னாலும் நான் கேட்கப்போவது இல்ல. உங்க மூனு பேரையும் நான் டிஸ்மிஸ் செய்யறேன். உங்க சம்பளபாக்கிய அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மெண்ட்ல போய் வாங்கிக்கோங்க. இப்ப நீங்க போகலாம்.”

“இல்ல சார். இந்த தடவ..”

“என்னால ஒன்னும் செய்ய முடியாது சுந்தர். கெட் அவுட் நௌவ்”

மானேஜர் மாணிக்கத்தின் அறைக்கதவு படீரென்று சாத்தப்பட்டது. சுவர் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது போல இருந்தது. நெற்றியில் தோன்றிய வியர்வையை கர்சீப்பை எடுத்து துடைத்துக்கொண்டார். வெள்ளை வெளேர் என்ற கர்சீப். முனையில் அழகாக G என்று எம்ப்ராய்ட் செய்யப்பட்டிருந்தது. ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
“ஹலோ சார். ம்ம். சொல்லுங்க சார்” “ம்ம் அனுப்சுட்டேன் சார்” “இது நல்ல சந்தர்ப்பம். அவிங்களா வந்து மாட்னாய்ங்க. ஒன்னும் பிரச்சனை இருக்காது சார்.” “பொண்ணுங்க விசயம்ங்கறதனால யூனியனும் ஒன்னும் கண்டுக்காது.” “பாத்துக்கலாம் சார்” “ஓகே சார்” டொக். நீல நிற ரிசீவர் பத்திரமாக தன் இருக்கையில் சென்று சமர்த்தாக அமர்ந்துகொண்டது.

மாணிக்கம் சேரில் சாய்ந்து விட்டத்தை பார்த்தான். பேன் மிக மெதுவாக சுழன்றுகொண்டிருந்தது. எழுந்து சென்று பேனின் வேகத்தை அதிகப்படுத்தினான். மேஜையிலிருந்த ஓரிரு பேப்பர்கள் பறந்தன. AAA மோட்டார்ஸின் வவுச்சர் இவன் காலடிக்கு வந்தது.

சில நம்பர்கள் டயல் செய்து ரிசீவரை காதுக்கு கொடுத்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். ரிசீவரை படீரென்று சாத்தினான். அறையின் மூலையில் இருந்த மண்பானையில் கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டான். குளிர்ச்சியாகவே இல்லை. மண்பானையில் கூட டூப்ளிகேட் செய்வாய்ங்களோ என்று நினைத்துக்கொண்டான். மீண்டும் வந்து டயல் செய்தான். ரிங். ரிங். ரிங். ரிங். ரிங். “எங்கடி போன?” “அடுப்பில வேலையா இருந்தேங்க” “ம்ம்..ஏன் இப்படி மூச்சு வாங்குது உனக்கு..ஓடி வந்தியா?” “ஆமாங்க. நீங்க கிளம்பிட்டீங்களா?” “இல்லடி. இன்னும் நேரமாகும். இன்னைக்கு கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். நீ சாப்பிட்டு படு. எனக்கு எடுத்துவெக்க வேணாம்” “ம்ம்..சரிங்க. நான் பக்கத்து கோயிலுக்கு போயிட்டு வாரேன்” “ம்ம்.”

***

குளிர்ந்த காற்று முகத்தை இதமாக வருடிக்கொண்டிருந்தது. பின்னிரவில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்வது என்பது மிகவும் ரசிக்கத்தகுந்த ஒன்று. யாரைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. தெருவிலும் ரோட்டிலும் ஈ காக்கா இருக்காது. அதுவும் டிசம்பர் மாசத்து இரவு என்றால் பனிக்காற்று மேலும் அழகு சேர்க்கிறது. தனது வீடு இருக்கும் தெருவுக்கு திரும்பினான். தங்கம் பலசரக்கு கடைக்கு அருகிலே இருக்கும் பெட்டிக்கடை திறந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஒரு டீ சொல்லிவிட்டு காலியாக இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான். தெருவில் இரண்டொரு குடிமகன்களைத்தவிர யாரும் இல்லை. ஆங்காங்கே தெருநாய்கள். இந்த தெருநாய்களுக்கு விவஸ்தையே கிடையாது என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே டீயை வாங்கிக்கொண்டான். டீயின் இளஞ்சூடு உள்ளங்கையில் மிகவும் இதமாக படிந்தது. டீ மாஸ்டர் தன்னை கூர்ந்து பார்ப்பதைப் போல உணர்ந்தான்.

ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டுவிட்டு. பின்னால் வைத்திருந்த கவரை எடுத்து முழுதுமாக ஸ்கூட்டரை மூடினான்.. கேட்டின் கொண்டியை விடுவித்துக்கொண்டு உள்ளே சென்றான். இரும்பு கேட் மிகுந்த அபஸ்வரமாய் ஒலி எழுப்பியது. குளிருக்கு கேட்டுக்கு அருகே முடங்கிக்கிடந்த பூனை எழுந்து சலிப்பாக நெட்டிமுறித்துக்கொண்டது. பிறகு இவனை தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது.

கங்கா இந்நேரம் எழுந்து லைட்டப்போட்டிருப்பாளே? கதவைத்தட்டினான்.

இனி தட்டி பிரயோஜனம் இல்லை என்று பையில் வைத்திருந்த மாற்றுச்சாவியை சிகரெட் லைட்டரை வைத்து தேடி எடுத்து திறக்கமுயன்றான். பூனை இவனையே முறைத்துக்கொண்டிருந்தது.

வீடு இருட்டாக இருந்தது. சுவற்றைத்தடவி சுவிட்சை ஆன் செய்தான். இரண்டு சினுங்களுக்குப் பிறகு டியூப் லைட் உயிர் பெற்றது. கங்கா என்றழைத்தான். பதிலில்லை. செருப்பைக் கழற்றாமலே படுக்கையறைக்குச் சென்றான். அங்கு யாரும் இல்லை. சமயலறை. சமைத்து வைத்தவை வைத்தபடி அப்படியே இருந்தன. கங்கா என்று மிகச் சன்னமாக முனங்கினான்.

வெளியே வந்து படியில் உட்கார்ந்தான். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வியர்வை அரும்பியது. கைகள் நடுங்கியபடியே இருந்தன. மணி இரவு ரெண்டு. எங்கே போயிருப்பாள்? அவளது பழைய செருப்புக்கள் ஒரு மூலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக கிடந்தன, கவனிக்கப்படாமல், தூசி படிந்து.

***
“யாருய்யா நீ” என்றார் இன்ஸ்பெக்டர் தனது பயத்தை மறைக்கும் பொருட்டு எரிச்சலாக. “சார் என் பேரு மாணிக்கம் ” என்றார் வந்தவர்.

“என்ன பேரு சொன்ன? கங்காவா? ஒரு கம்ப்ளயண்ட் எழுதிக்கொடுத்திட்டு போ. நாளைக்கு காலையில பாக்கலாம்.” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டர் ஏட்டையாவைக் கைகாட்டினார். ஏட்டையா கொடுத்த பேப்பரில், எழுதமுடியாமல் மாணிக்கத்தின் கைகள் உதறல் எடுத்துக்கொண்டேயிருந்தன. மாணிக்கம் டேபிளில் உடைந்து கிடக்கும் பல்பையும், கிழே சுக்கலாக கிடக்கும் கெடிகாரத்தையும் வினோதமாக பார்த்துக்கொண்டேயிருந்தான்.

***

கங்கா ஓடாத. நில். இங்க வா. எங்க போற. போகாதடி. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். டக்கென்று முழித்தான் மாணிக்கம். ஓ எல்லாம் கனவா? என்று நினைத்தான்.கங்கா போன் அடிக்குது பார். வந்து எடுடி. ட்ரிங். ட்ரிங். பாதித்தூக்கத்தில் சென்று போனை எடுத்தான். ஹலோ. ட்ரிங். ட்ரிங்.ட்ரிங். ஹலோ.ஹலோ. அது தான் எடுத்தட்டன்ல. ட்ரிங்.ட்ரிங்.ட்ரிங். ஓ. காலிங்பெல்லா. சட்டென்று முழு நினைவுக்கு வந்தான். ஹாலைத்திரும்பிப் பார்த்தான். சுத்தம். கங்கா. ஓட்டமும் நடையுமாக போய் கதவைத்திறந்தான்.

ஏட்டையாவும். கான்ஸ்டபிளும் நின்றிருந்தார்கள். “சட்டைய போட்டுட்டு என் கூட வா” என்றார் ஏட்டையா. மாணிக்கம் அதிர்ந்தான். “எ..எ…எ..என்ன” “போய்..சட்டைய போட்டுட்டு வா.. சொல்றேன்”

“கோயிலுக்கு பின்னால இருக்கிற ஆத்துப்பாலத்தில உன் பொண்டாட்டி செத்துக்கிடக்குறா” என்றார் ஏட்டையா. சுசுகி இன்னும் வேகமெடுத்தது. மாணிக்கத்தின் உலகம் தலைகீழாக சுழன்றது. காண்ஸ்டபிளின் தோள்களை இறுக்கமாக பற்றிக்கொண்டான். ரோட்டில் வாகனங்கள் அனைத்தும் சத்தமின்றி நிசப்தமாக சென்றுகொண்டிருந்தன.

***

இரவு மணி ஏழு இருக்கும். சுசுகி மெதுவாக வந்து டீக்கடையின் முன்னால் நின்றது. இன்ஸ்பெக்டர் சுசுகியிலிருந்து இறங்கி ஸ்டாண்டிட்டு அதில் சாய்ந்து நின்றுகொண்டு ஸ்டைலாக ஒரு சிகரெட் எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஏட்டையா டீக்கடைக்குள் சென்று எதையோ வாங்கி பையில் வைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

இண்ஸ்பெக்டர் தங்கம் பலசரக்குக் கடையை நோட்டம் விட்டார். கங்கா ஏதோ வாங்கிக்கொண்டிருந்தாள். கடைக்காரர் கொடுத்த ஏதோ ஒன்றை சட்டென்று அவசரமாக வாங்கி பையில் போட்டுக்கொண்டாள். கொடுக்கும்போது கடைக்காரர் கங்காவின் கைகளில் கிள்ளியதை இண்ஸ்பெக்டர் கவனிக்காமல் இல்லை.

கங்கா கடையை விட்டு இறங்கி வேகவேகமாக பின்னால் திரும்பிப் பார்க்காமல் நடந்து சென்றாள். இன்ஸ்பெக்டர் மெதுவாக நடந்து பலசரக்குக் கடையில் ஏறினார். இன்ஸ்பெக்டரை பார்த்த பலசரக்கு கடைக்காரர் அதிர்ந்தார். இன்ஸ்பெக்டர் சிரிக்கவே. பலசரக்கு கடைக்காரரும் சிரித்தார். இன்ஸ்பெக்டர் என்ன என்றார் சிரித்துக்கொண்டே. “என்ன நடக்குது”. “ஒன்னும் இல்லீங் சார்” என்றார் கடைக்காரர் இன்னும் சிரிப்பை நிறுத்தாமல். உள்ளே திரும்பி “டேய் பையா சாருக்கு ஒரு சேர் போடுடா” என்றார்.

இன்ஸ்பெக்டர் உட்கார ஏட்டையா வந்து நின்றார். ஏட்டையா கடைக்காரரிடம் கையை நீட்ட. கடைக்காரர் “நேத்துதானே சார் கொடுத்தேன்” என்றார். “நேத்து கொடுத்தா இன்னைக்கு நீ சீடி கொடுக்கலையா” என்றார் இன்ஸ்பெக்டர் சற்று கடுமையாக. “எங்க சார்.. முன்ன மாதிரி இல்ல சார். காலெஜ் கேர்ல்ஸ் தான் கொஞ்சம் வருதுங்க. அப்புறம் இந்த மாதிரி சில பேமிலி பொண்ணுங்க” என்று கங்கா சென்ற திசையை நோக்கி கையைக் காட்டினார்.

“சரி நாளைக்கு சேர்த்து வித்துக்கோ இன்னைக்கு பணத்த குடு” என்று சொல்லிக்கொண்டே கீழிறங்கி சுசுகிக்கு வந்து டீக்கடைக்காரன் கொடுத்த டீயை வாங்கி சுவராஸ்யமாய் உறிஞ்சிக்கொண்டே கங்கா சென்ற திசையை நோக்கி பார்த்துக்கொண்டேயிருந்தார்.

***

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு கங்கா முதலில் பயந்தாள். பிறகு பார்த்துக்கொண்டிருந்த சீடியை நிறுத்திவிட்டு சீடியை எடுத்து கீழே இருந்த புத்தகத்துக்குள்ளே மறைத்து வைத்தாள். டீவியை ஆப் செய்து விட்டு, மெதுவாக சென்று கதவைத்திறந்தாள். இன்ஸ்பெக்டர்.

எதிர்பாராத சமயத்தில் இன்ஸ்பெக்டர் அவளை உள்ளே தள்ளிக்கொண்டு நுழைந்தார். இங்க அந்த மாதிரி சீடி நிறைய இருக்காமே என்று சொல்லிக்கொண்டே வீட்டை தேடுவது போல பாவனை செய்தார். பிறகு கதவைப் பூட்டி தாழ் போட்டார்.

“இல்ல சார் வந்து சார்..” என்று கங்கா முனகியதை அவர் கேட்கவேயில்லை.

***

காலிங்பெல் சத்தம் கேட்டு கங்கா திடுக்கிடவே செய்தாள். இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாக பேண்டை மாட்டிக்கொண்டார். கங்கா சேலையை சரிசெய்து கொண்டு வேறு வழியில்லாமல் கதவைத்திறக்க போனாள். இன்ஸ்பெக்டர் ஒளிவதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்.

கதவைத் திறந்தாள் கங்கா. நின்று கொண்டிருந்தது ஏட்டையா. “அம்மா. இன்ஸ்பெக்டர் இருக்காராமா? கொஞ்சம் வரச்சொல்லுங்கம்மா. அவசர கேஸ் ஒன்னு” என்றார் ஏட்டையா.

***

“ஏன்யா ஏட்டையா இவ்வளவு நாளாச்சு இந்த கேசில ஒன்னுமே பிடிபட மாட்டீங்குதே. கங்கா செத்து ஒரு மாசமாகுது. இன்னும் ஒரு லீட் கூட கிடைக்கலியேயா. எந்தப்பக்கம் போனாலும் ஒரே முட்டுச்சந்தா இருக்கே. நமக்கு வேண்டப்பட்ட பொண்ணு வேற” என்று சொல்லி இன்ஸ்பெக்டர் சற்று சீரியஸானார். ‘ஒருவேளை விசயம் தெரிஞ்சு கங்காவோட வீட்டுக்காரன் போட்ருப்பானோ” என்றார். ஏட்டையா “இருக்கலாம் சார். ஆனா தெரியறதுக்கு வாய்ப்பில்லையே. தெரிஞ்சாமாதிரியும் தெரியலையே. தெரிஞ்சிருந்தா அவன் எதுக்கு ராத்திரியோட ராத்திரியா கம்ப்ளயின்ட் பண்ண வரான்? அதுவும் உங்ககிட்ட” என்றார். முறைத்த இன்ஸ்பெக்டர் “அதுவும் சரிதான். எனக்கு மண்டைய குழப்புதுய்யா. ஒரு பீடி இருந்தா குடு” என்றார்.

ஏட்டையா “ஆவி ஜோதிடம் பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா சார்” என்றார். கொஞ்சம் அதிர்ந்த இன்ஸ்பெக்டர் “என்னது ஆவி ஜோதிடமா. அன்னிக்கு பட்டதே போதும்யா இனிமே ஆவிகளோட சங்காத்தமே வேணாம்” என்றாஎ இன்ஸ்பெக்டர். “ஆவி ஜோசியம் பாக்கலாம் சார் எங்கேயாவது லீட் கிடைக்க வாய்ப்பிருக்கு” என்றார் ஏட்டையா.

***

மீடியம் அமைதியாக இருந்தார். ஏதும் வந்ததற்கான அறிகுறிகள் அவ்வளவாக இல்லை. இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. திடிரென்று ஏதோ தெலுங்கில் ஏதோ பேசினார் மீடியம். வேங்கஒலிபேசுரா கொடுக்கா என்றார். பிறகு அமைதியானார். பிறகு ஏதோ சட்சட்சட்சட்சட்சட்சட்சட் என்றார். உண்மையிலே அது ஏதோ மொழி தான் என்று நினைத்து இன்ஸ்பெக்டர் பரிதாபமாக ஏட்டையாவைப் பார்த்தார். ஏட்டையாவுக்கும் ஏதும் புரிந்திருக்கவில்லை என்று அவரது குழம்பிய முகம் காட்டியது.

நீண்ட அமைதிக்குப் பிறகு மீடியம் சாந்தமானார். பிறகு இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் ஒன்றும் தேராது என்று நினைத்து எழுந்திருக்கையில் “இன்ஸ்பெக்டர்” என்ற பெண்குரல் அமைதியாக ஒலித்தது. இன்ஸ்பெக்டருக்கு புல்லரித்து விட்டது. திரும்பிப் பார்த்தார். “நான் தான் கங்கா வந்திருக்கிறேன்” என்றார் மீடியம்.

***

“என் புருஷனுக்கு என் மேல சந்தேகம் எப்பவுமே. உங்க கூட இருந்தப்பவும். இல்லாதப்பவும். நீங்க வந்து போக ஆரம்பிச்ச பிறகு இன்னும் அதிகமாகிருச்சு. எப்பப்பாத்தாலும் என் மேல சந்தேகம் சந்தேகம். நிறைய தடவ போட்டு அடிஅடின்னு அடிச்சிருக்கார். அழுது அழுது என் கண்ணீரே வத்திப்போச்சு. அன்னைக்கு கோயிலுக்கு போறேன்னு சொன்னப்ப சரின்னு சொன்னவர். நான் கோவிலுக்கு போனப்பிறகு என்னை கண்காணிக்க வந்தார். நான் கோவிலைச்சுற்றி விட்டு நீண்ட நேரமாக பாலத்தில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாலத்திலிருந்து குதித்து விடலாம் என்று கூட யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால் பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்த -இல்லை இல்லை நகர்ந்து கொண்டிருந்த- ஆற்றின் தாங்கமுடியாத துர்நாற்றத்தால் அந்த முடிவை தற்காலிகமாக நிறுத்து வைத்திருந்த போதுதான், அவர் வந்தார். யார எதிர்பார்த்து இங்க உட்கார்ந்திருக்க என்று கேட்டார். நான் ஒன்றும் இல்லை சும்மாதான் உட்கார்ந்திருக்கேன்னு சொல்லியும் அவர் கேட்கவில்லை. என் மீது அபாண்டமாக வார்த்தைகள் அள்ளி வீசினார். என் குடும்பத்தை கேவலமாக பேசினார். என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது..ஹக்..ஹக்..ஹக்..ஹக்..”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ். சோடா உடைக்கப்பட்டது. மீடியம் சோடாவைக் குடித்தார். “டொரினோ இல்லையா?” என்றார். இன்ஸ்பெக்டர் வெளியில் நின்று கொண்டிருந்த காண்ஸ்டபிளை கூப்பிட்டு வாங்கிவரச்சொன்னார். நீண்ட நேரம் மவுனமாக உட்கார்ந்திருந்தார் மீடியம். இன்ஸ்பெக்டர் அவரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். மீடியத்தின் கைகள் இழுத்துக்கொண்டன. விரல்கள் பிணைந்துகொண்டன. அவர் உடல் விரைத்தது. நாடி கட்டிக்கொண்டது. வார்த்தை வருவதற்கு மிகவும் கடினப்பட்டது. டஸ். டஸ். மஸ். கஸ். மஸ். கஸ். புர்..சர்..மங்.சங்.டஸ் டஸ் டஸ் புங்.. என்று வினோதமான ஒலியை எழுப்பிக்கொண்டிருந்தவர் சட்டென்று மென்மையான பெண் குரலுக்கு மாறினார்.

“என் குடும்பத்தை அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அதனால் தான் அவர் எனக்கு உறவினர் யாரும் இல்லாத இந்த ஊருக்கு அழைத்து வந்தார். எங்களுக்கு இங்கே யாரையும் தெரியாது. அது ஒரு வகையில் வசதியும் கூட. என் குடும்பத்தை தரக்குறைவாக பேசிய பொழுது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை அவரை விலக்கி நடக்க முற்பட்டேன். அவர் என்னைப்பிடித்து இழுக்கவே நான் திமிறினேன். என்னை இறுக்கமாக பிடித்துக்கொண்ட அவர் என்னை மிகுந்த கோபத்தோடு கீழே தள்ளி விட்டார். எதிர்பாராமல் கீழே விழுந்த நான் அருகில் இருந்த கல்லில் மோதி பாதி நினைவை இழந்தேன். அருகில் கிடந்த ஒரு கல்லை எடுத்து அவர்..அவர் அவர்..ஹக் ஹக் ஹக் ஹக் ஹக்”

டஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். டொரினோ உடைக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் எழுந்திருத்தார். “ஏட்டையா வண்டியஎடு.”

***

மாணிக்கம் கைது செய்யப்பட்டான். “நான் கொல்லவில்லை நான் கொல்லவில்லை” என்று அவன் கோர்ட்டில் கதறிக்கொண்டேயிருந்தான். சாட்சியங்கள் அவனுக்கு எதிராகவே இருந்தது.

***

epilogue.
———–

அந்த தெரு மிகவும் அமைதியாக இருந்தது. மிகவும் குறுகலாகவும் இருந்தது. நாய்கள் வழியிலே படுத்துக்கொண்டிருந்தன. கவனிக்காமல் விட்டால் மிதித்துவிட வாய்ப்பிருக்கிறது. மிதித்தால் அவைகளுக்கு கோபம் தலைக்குமேல் ஏன் காதுக்கு மேலேயே வரும். ஏட்டையா மிகவும் கவனமாக கடந்து சென்றார். ஒரு வீட்டின் முன் சென்று நின்றார். அந்த வீட்டின் சுவரில் காவி பூசப்பட்டிருந்தது. பிறகு மெதுவாக தட்டினார். சரியாக மூன்று தட்டுகளுக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. மீடியம். சபாஷ் என்று சொல்லிவிட்டு கைகளில் ரூபாய் நோட்டுக் கத்தை ஒன்றைத் திணித்தார். மீடியம் வாங்கிக்கொண்டு மிக மெதுவாக சிரித்தார். பிறகு ஹக் ஹக் ஹக் ஹக் என்றார்

கங்கா கோயிலைச் சுற்றி வந்தாள். மனதுக்கு ஏதோ போல இருந்தது. ஒரு புறம் நீண்ட துக்கமாக இருந்தது. ஏன் இந்த தவறை செய்ய ஆரம்பித்தோம் என்று வருந்தினாள். ஆற்றுப்பாலத்துக்கு அருகே சென்று அமர்ந்தாள். ஆற்றின் துர்நாற்றம் அவளது நிலையை மிஞ்சிவிட்டிருந்தது. ஏதும் பேசாமல் பாலத்திலே உட்கார்ந்திருந்தாள். ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாதது கொஞ்சம் வசதியாக இருந்தது. நீண்ட நேரம் தனிமையில் உட்காந்திருக்கவே விரும்பினாள். தன்னை முழுதாக அழித்துவிட விரும்பினாள். கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தன்னை கண்டதுண்டமாக வெட்டிப்போட்டுவிட மாணிக்கத்திடம் சொல்லவேண்டும். மாணிக்கம் மிகவும் நல்லவன். மாணிக்கம் என்னை மன்னிப்பியா? என்றாள் மனசுக்குள். தோளில் கைவிழ திரும்பிப்பார்த்தாள். ஏட்டையா. சிரித்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார். வாயில் சாராய நெடி.

***

நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன்

நரகம் என்னும் ஆற்றின் வழியாக நான் சொர்கத்திற்கு துடுப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்:
அழகிய மோகினி, இது இரவு.
துடுப்பு ஒர் இதயம்; அது கண்ணாடி அலைகளை ஊடுருவிச்செல்கிறது…

நீ தொலைத்த எல்லாமுமாய் நானிருக்கிறேன். நீ என்னை மன்னிக்க மாட்டாய்.
உன் வரலாற்றின் வழிநெடுகிலும் என் நினைவுகள் உதித்துக்கொண்டேயிருக்கும்.
மன்னிப்பதற்கு எதுவும் இல்லை. நீ என்னை மன்னிக்க மாட்டாய்.
என் ரணங்களை நான் என்னிடமிருந்தே மறைத்துக்கொள்கிறேன். என் ரணங்களை நான் மட்டுமே அறிவேன்.
எல்லாவற்றையும் மன்னிக்கலாம். நீ என்னை மன்னிக்க முடியாது.

எவ்வாறேனும், எப்படியேனும் நீ என்னுடையவளாகிவிட்டால், இந்த உலகத்தில் என்னால் சாதிக்க முடியாதது என்று ஏதேனும் இருக்குமா என்ன?

-Translated from The Country Without a Post Office by Agha Shahid Ali.

பின் தொடரும் நிழலின் குரல் : தருமம் மறுபடி வெல்லும்!

There are annoying misprints in history, but the truth will prevail!
—Nikolai Ivanovich Bukharin (1937)

“மிஞ்சும் சொற்கள்” என்ற கடைசி அத்தியாயத்தில் இவ்வாறு சொல்கிறார் அருணாச்சலம்:

ஆனால் ஒன்று மட்டும் நிபந்தனை விதித்தேன். தலைப்பு நான் சூட்டுவதுதான். ‘பின் தொடரும் நிழலின் குரல்’- புகாரினை, வீரபத்ரபிள்ளையை, என்னைப் பின் தொடர்ந்தது எங்கள் நிழல்கள் தாம். நிழலை ஒருவன் ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அது மறுபாதி. அது நம்முடன் இடைவிடாது உரையாடுகிறது. ஒளியைத் தன்முன் கண்டு நடக்கும் ஒவ்வொருவர் பின்னாலும் நிழல் தொடருகிறது. நிழலின் குரலை ஒரு போதும் நாம் புறக்கணித்துவிடக்கூடாது.

***

ஜெயமோகன் என்ற எழுத்தாளரை யார் எனக்கு அறிமுகம் செய்தது என்று எனக்கு நினைவில்லை. எஸ். ராமகிருஷ்ணன் எனக்கு விகடன் மூலம் அறிமுகமானார். ஆனால் ஜெயமோகன் எனக்கு எதேச்சையாக நூலகத்தில் சும்மா படிப்பதற்கு தமிழ் நூல் தேடிக்கொண்டிருந்த போது அறிமுகமாகியிருப்பார் என்று நினைக்கிறேன். குறிப்பாக ‘காடு’ நாவல். அதற்கப்புறம் ஜெயமொகனின் சிறுகதைத் தொகுப்பு. காடு நாவலில் தான் பின் தொடரும் நிழலின் குரல் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அன்றிலிருந்து இந்த நாவலைப் படித்துவிடவேண்டும் என்று தீர்மானமாய் இருந்தேன். ஏன் என்று எனக்கு தெரியாது. அதற்கப்புறம் மதுரை இலக்கியபண்ணையில் இந்தமுறை ஜெயமோகன் நாவல்கலைத் தேடியபோது எனக்கு கிடைத்தது ஒன்றே ஒன்று தான்: விஷ்ணுபுரம். ஏன் என்று யோசித்தேன். ஒருவேளை நிறைய மக்கள் ஜெயமோகனைப் படிக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் விஷ்ணுபுரத்தை வீட்டில் கொடுத்த போது, யாவரும் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கையைப் பார்த்து சற்று மிரளவே செய்தனர். அப்புறமும் தைரியமாக எடுத்து படித்தவர்களில் என் அப்பாவும் என் அண்ணனும். அதில் நூறு பக்கத்தைத் தாண்டியவர் என் அண்ணன் ஒருவரே. (என் அப்பாவும் அண்ணனும் நிறைய நாவல்கள் படிப்பவர்கள். என் அப்பா தமிழாசிரியர். என் அண்ணன் வழக்கறிஞர்). நான் இதற்கு முன்பு எழுதிய ஆயிரம் கால் இலக்கியம்-7 -ல் அசோகமித்திரன் அவர்களின் நேர்காணலில் அவர் ஒரு கேள்விக்கு அளித்த ஒரு பதிலில் : ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோர் நிறைய எழுதுகின்றனர். ஆனால் யார் படிக்கிறார்கள் என்று கேட்டிருந்தார். மிகச்சரியான கேள்வி. நியாயமான கேள்வி. இல்லையா?

இன்றைய பாம்ப்லட்(pamplet) உலகில் யார் எழுநூறு பக்க நாவல்களை படிக்க தயாரக இருக்கின்றனர்? அப்படியும் சொல்லிவிட முடியாது. பொன்னியின் செல்வனை மீண்டும் மீண்டும் பலமுறை படித்த -படிக்கின்ற! என் நண்பர் ஒருவர் சாப்ட்வேர் துறையில் இருப்பவர் தான்; பொன்னியின் செல்வனை, அதுவும் ஈ-புக், விடாமல் லேப்டாப்பைத் தூக்கிக்கொண்டே; படுக்கும் போது, உட்காரும் போது பாத்ரூமுக்கு தவிர; என்று எல்லாஇடங்களிலும் தூக்கிசென்று படித்து முடித்தார் – மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் வேறு மாதிரி. பின் தொடரும் நிழலின் குரல் (பி.நி.கு) வேறு மாதிரி. இரு நாவலையும் ஒப்பிடுதென்பதே அபத்தம். ஆனால் பக்கங்களின் எண்ணிக்கையில் மட்டுமே ஒப்பிடலாம். பொன்னியின் செல்வனில் ஒரு முடிச்சு எப்பொழுதும் இருந்து கொண்டேயிருக்கும். பிறகு காதல், நகைச்சுவை, வீரம் என்று சரியான அளவில் கலந்திருக்கும். ஆனால் பி.நி.கு தத்துவம் சார்ந்தது. தருக்கம் செய்வது. வாதடுவது. உண்மைகளை பொய்களை எடுத்து ஆராய்வது. அல்லது சிலர் சொல்லுவது போல ஒரு சார்பாக நின்று – அப்பொழுது வாதாடுவது. அலசுவது. இது சரி என்று சொல்வது. பிறகு இது சரியில்லை என்று சொல்லிவிடுவது. பிறகு அதுதான் சரி என்று சொல்வது. கடைசியில் அதுவும் சரியில்லை இதுவும் சரியில்லை இது தான் சரி என்று முடிவு சொல்லாமல் சொல்வது. சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் போல அல்ல.

வாதங்கள். வாதங்கள். பின்னர் மேலும் வாதங்கள். பின்னர் மேலும் மேலும் வாதங்கள். நம்மை குழப்பும் வாதங்கள். (பிறர் சொல்வது போல: குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வாதங்கள்.!) சில இடங்களில் ஏன் இப்படி-போதுமைய்யா போதும் என்று மூடிவைத்துவிட தூண்டும் வாதங்கள். பிறகு நாமே யோசித்துப் பார்த்து வேறு என்ன வாதங்கள் இருக்கின்றன என்ற எதிர்பார்ப்பில் அதே பக்கத்துக்குப் போகவைக்கும் வாதங்கள். தெளிந்த வாசகன் மட்டுமே கடைசிவரை செல்ல முடியும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவனை மட்டுமே கடைசி வரை கூட்டிச்செல்லும். படிக்க முடியவில்லையா? பிடிக்கவில்லையா? குழப்பமாக இருக்கிறதா? தயவு செய்து விலகிக்கொள். என்னுடைய ஆள் இல்லை நீ. உன்னை கண்டிப்பாக படிக்கவைக்கவேண்டும் என்ற ஆதங்கம் எனக்கு ஏதும் இல்லை. அதற்காக அத்தியாயங்கள் தோறும் முடிச்சுகள் வைக்க என்னால் முடியாது. முடிந்தால் படித்துக்கொள் என்று சவால் விடும் வாதங்கள்.

நான் நாவலை நூலகத்திலிருந்து எடுத்து ஒரு வாரம் வரையில் முன்னுரையிலேதான் இருந்தேன். நாவலின் முதல் அட்டையுடன் சேர்த்த பக்கத்தில் (வேறு பதிப்புகளில் எப்படி இருக்கிறது என்று தெரியாது. நான் படித்தது தமிழினி வெளியீடு!) பிட்ஸ்பர்க்கின் புகைப்படம் இருந்தது. எனக்கு அது பிட்ஸ்பர்க் தான் என்று என்னுடைய மேலாளர் சொல்லும்வரை தெரியாது. அப்படித்தான் இருக்கிறது எனது கம்யூனிச அறிவு. எனது பள்ளி நாட்களில் கொஞ்ச நாட்கள் (மாதம்!) நான் த.மு.எ.ச வின் உறுப்பினராக இருந்திருக்கிறேன். அவர்களது நூலகத்தில் (அவர்களது நூலகங்கள் அழகாக இருக்கும். அங்கு தான் எனக்கு முதன் முதலில் கணையாழியின் அறிமுகம் கிடைத்தது. மேலும் பல கம்யூனிச புத்தகங்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒன்றைக்கூட படித்ததில்லை என்பது வேறு விசயம். அனால் எனக்கு குமுதம் ஆனந்த விகடன் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்!) இரண்டு திருக்குறள்கலோடு ஆரம்பிக்கிறது நாவல். அருமையான குறள்கள்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

அறத்தாறிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

***

தை வீரபத்ரபிள்ளை என்பவரைச்சுற்றியே சுழல்கிறது. வீரபத்ரபிள்ளை மிகப்பெரிய படிப்பாளி. உலக இலக்கியங்களைப் படித்தவர். டிபிஎல்யு என்ற தொழிற்சங்கத்தில் உறுபினராக இருக்கிறார். அதை நிறுவிய கே.கே.எம் என்றவருடைய வலதுகரமாக இருக்கிறார். தொழிற்சங்கம் ஸ்டாலினை மையமாகக்கொண்டு இயங்கிவருகிறது. ஸ்டாலினால்காந்த இயக்கம் கம்யூனிசத்தை சார்ந்திருக்கிறது. வீரபத்ரபிள்ளைக்கு இருக்கும் வெளி உலகத்தொடர்பால் (குறிப்பாக ரஷ்யா) அவருக்கு புகாரின் என்பவரைப் பற்றிய உண்மைகள் கிடைக்கிறது. கார்பச்சேவ் காலத்தில்.

புகாரின் ஸ்டாலிக்கு வலதுகரமாக இருந்தவர். ஸ்டாலினின், குளக்குகள் என்ற ரஷ்ய விவசாய பெருங்குடிகளுக்கு, எதிரான நிலைப்பாடு புகாரினை கிளர்த் தெழச்செய்கிறது. ஸ்டாலினுடன் மாறுபட்ட கருத்து கொண்டவராகிறார். ஸ்டாலின் புகாரினை தேசத்துரோகி என்று பழி சுமத்துகிறார். புகாரின் தனது இளம் மனைவியான அன்னாவை விட்டுவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பெயரில் குற்றங்களை ஒப்புக்கொள்கிறார். ஸ்டாலின் புகாரினுக்கு மரண தண்டனை விதிக்கிறார். புகாரினின் மனைவி சைபீரியாவின் வதைமுகாம்களில் சிறைப்படுத்தப்படுகிறாள். அவள் ஐம்பது வருடங்கள் கழித்து புகாரின் சொல்லியிருந்த வாக்குமூலத்தை கார்ப்பச்சேவ் விசாரணையில் கூறி கதறுகிறாள். புகாரின் நிரபராதி என்று தீர்ப்புவழங்கப்படுகிறது.

இதை அறிந்துகொள்ளும் வீரபத்ரபிள்ளைக்கு ஸ்டாலின் மேல் மிகுந்த கோபம் உண்டாகிறது. ஸ்டாலிக்கு எதிராக குரல் கொடுக்க முயல்கிறார். கட்சி மறுக்கிறது. அவரிடம் உண்மைகளை மறைக்கும் படி மன்றாடுகிறது. பலனில்லை. வீரபத்ரப்பிள்ளையின் படித்த அகங்காரம் முந்திக்கொண்டுவிட்டது. புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் அல்ல. பணியாத வீரபத்ரப்பிள்ளை கட்சியை விட்டு துரோகிப் பட்டம் சுமத்தப்பட்டு தூக்கியெறியப்படுகிறார். வீரபத்ரபிள்ளை தனிமரமாகிறார். மொத்த கட்சியும் அவர் மீது புழுதி வாரியிரைக்கிறது. வீரபத்ரபிள்ளை குடிக்க ஆரம்பிக்கிறார். மனம் தடுமாறுகிறார். கடைசியில் அனாதையாக உயிர்விடுகிறார்.

கேகேஎம் என்பவர் கட்சியின் நிறுவனர். அவர் தான் கட்சியை வளர்த்தவர். பின்னர் சமீபகாலத்தில் பழைய கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் -விட்டுக்கொடுக்கமுடியாமல்- ஒட்டாத தண்ணீராக கட்சியென்ற தாமரை இலையில் இருக்கிறார். அவரை தூக்கியெறிய விரும்பிய கட்சி மேலிடம், அவருடைய வலது கரமாக அருணாசலம் என்பவரை பயன்படுத்திக்கொள்கிறது. அருணாசலம் தேர்ந்தெடுக்கப்பட, கேகேஎம் வெளியேறுகிறார். பிறகு அவரும் கட்சியால் தூற்றப்படுகிறார்.

அருணாசலத்துக்கு மன இறுக்கம். ஆனால் வேறு வழியில்லை. இந்த சமயத்தில் தான் வீரபத்ரபிள்ளையின் மகனைச் சந்திக்கிறார் அருணாசலம். வீரபத்ரபிள்ளை எழுதிய ஒரு சிறுகதைத் தொகுப்பு அவருக்கு கிடைக்கிறது. அதற்குப்பிறகு அவரைப் பற்றி விசாரிக்கும் பொழுது கட்சியில் வீரபத்ரபிள்ளை என்ற ஒருவர் இருந்ததற்கான அத்தாட்சியே இல்லாமல் இருக்கிறது. கேகேஎம் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிடுகிறார் (கேகேஎம் க்கு வலது கரமாக இருந்தவர் வீரபத்ரபிள்ளை). பிறகு வீரபத்ரபிள்ளை எழுதிய சிறுகதைக்கு முன்னுரை எழுதிய ஒருவரை பிடித்து அவருடைய தொடர்பு என்று கோர்த்து வீரபத்ரபிள்ளை என்பவரது உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்.

வீரபத்ரபிள்ளையின் நிழல் அருணாச்சலத்தை தொடருகிறது. அருணாச்சலம் கட்சி சவனியரில் வீரபத்ரபிள்ளை பற்றி எழுத மிகுந்த முனைப்போடு இருக்கிறார். கட்சி மோப்பம் பிடிக்கிறது. அருணாச்சலத்தை எச்சரிக்கிறது. அருணாச்சலம் மனம் பிறழ்கிறார். பைத்தியமாகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தையின் மீது கொண்ட பற்றின் காரணமாக அவர் மீண்டு வருகிறார். உண்மையைச் சொல்லப்போனால் மனைவி நாகம்மையின் மீது அவர் கொண்ட காதல் தான் அவரை மீட்டுகொண்டுவந்தது என்று எண்ணிக்கொள்ளலாம். (நான் எண்ணிக்கொண்டது!). இந்த பிரச்சனையில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ராமசாமி என்பவர். ராமசாமி என்பவர் தான் அருணாச்சலத்திற்கு வீரபத்ரப்பிள்ளை பற்றி சொன்னவர். வீரபத்ரபிள்ளையின் தீவிர அனுதாபி அவர். ராமசாமியின் வீட்டில் ஜெயமோகன் இருக்கும் போது அருணாச்சலம் முதன் முறையாக ராமசாமியை சந்திக்கிறார். முழுகதையையும் கேட்ட ஜெயமோகன் இதை நாவலாக தொகுத்து நமக்கு அருளியிருக்கிறார்.

இது தான் நாவலின் சாரம்சம். அடிச்சரடு. மல்லிகை இல்லாத நார். இதை சுற்றிலும் மல்லிகையாக ஜெயமோகனின் தத்துவம் மற்றும் தருக்கம். இங்கியல் மற்றும் மார்க்ஸிசம். ஸ்டாலின் மற்றும் லெனின். ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின். நான் மற்றும் எனது நிழல்.

***

னால் நிழல் என்று ஏன் பெயரிட்டார் என்று தான் எனக்கு விளங்கவில்லை. நிழல் நம்மை எதிர்த்து குரல் கொடுக்காது. நிழல் நம்மை கேள்வியும் கேட்காது. நிழல் நாம் செய்வதை மட்டுமே செய்யும். மிகுந்த இருட்டான இடங்களுக்கு சென்று விட்டால் நம்மை விட்டு அகன்று விடும். ஜெயமோகன் சொல்வதைப் போல “தன் முன் வெளிச்சத்தைக் கண்டு நடப்பவர்களை எப்பொழுதுமே நிழல் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது” என்பது மட்டும் முற்றிலும் உண்மை. ஆனால் எப்போதும் நம்மை விட்டு அகலாத ஒன்று மனசாட்சி மட்டும் தான். மனசாட்சி தான் எப்பொழுதும் நம்மை கேள்வி கேட்டுகொண்டேயிருக்கும். நிழல் என்பது வேறொன்றும் இல்லை மனசாட்சியே என்று வைத்துக்கொள்ளலாமா? இல்லை நிழல் என்பது வரலாறா? நாம் ஒவ்வொருவரின் பின்னேயும் வரலாறு பாலைவன மணல் போல காற்றால் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கிறது. அந்த வரலாறு கூறும் உண்மைகளை உணர வேண்டுமா?

***

நாவல் எழுதப்பட்ட விதமே அற்புதம். எனக்கு இந்த முறை புதிது. அதாவது நாவல் முழுதையும் ஒரே கதையாகக் கூறாமல். கதையாக, கட்டுரையாக, கடிதமாக, கவிதையாக, நாடகமாக கூறியிருப்பதுதான் சிறப்பு. வீரபத்ரபிள்ளையின் ஆளுமைகள் அனைத்தும் நாவலில் அப்படியே இடம்பெறுகின்றன. வீரபத்ரபிள்ளை கட்சித்தலைமைக்கு கடிதம் எழுதுகிறார். கட்சித்தலைமை அவருக்கு பதில் கடிதம் எழுதுகிறது. இந்த இரு கடிதங்களிலும் ஸ்டாலினின் சிறப்பு மற்றும் வெறுப்பு அலசப்படுகிறது. வீரபத்ரப்பிள்ளையின் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள் கதைக்கு மேலும் பலம் சேர்க்கின்றன. வாதத்தை பலப்படுத்துகின்றன. கதையினூடாக ஜெயமோகன் வருவது யதார்த்தத்தை கொண்டுவருகிறது. நாவலின் பின் புலத்தைக் காட்டுகிறது.

***

ம்யூனிசம் தோன்றி இத்தனையாண்டுகள் ஆகிவிட்டிருந்தும் அவர்களது கனவான பொன்னுலகம் அவர்களுக்கு கிடைத்ததா? ஸ்டாலின் என்னதான் சாதித்தார்?

ஸ்டாலினால கம்யூனிசத்துக்க அடிப்படையான நிலச் சீர்திருத்தத்தையே நடைமுறைப் படுத்த முடியல. ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொண்ணுபோட்டு விவசாய அமைப்பையே நாசம் பண்ணினது தான் பலன். அவர் காலத்தில தான் உலகத்திலேயே பெரிய தானியக் களஞ்சியங்களில ஒண்ணான உக்ரேய்னில பஞ்சம் வந்து பல லட்சம் பேர் இறந்தாங்க. இன்னைக்கும் உக்ரேன் மீளலை.

இன்றைக்கிருக்கின்ற கம்யூனிசத்தின் மீது பல கேள்விகள் தொடுக்கப்படுகின்றன. பழைய கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் கேகேஎம் பேசுகிறார். அவரை இன்றைய கம்யூனிசத் தொண்டர்கள் பழமைவாதி என்று முத்திரைக் குத்தி வெளியே அனுப்புகின்றனர். நிறுவனருக்கே இந்த நிலைமை. கட்சியும், தலைவர்களும் தங்களை மாறும் சமுதாயத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளவேண்டும் இல்லியா? தலைவர்கள் படிப்படியாக தரகு வேலை செய்யக் கற்றுக்கொள்கின்றனர்.

நம்ப சங்கத்தில இன்னிக்கு எந்த கிளைலடே தத்துவமும் வரலாறும் அரசியலும்
சொல்லித்தாறம்? இங்க கூடியிருக்குத கிளைச் செயலாளர்களில் எவனாவது ஒருத்தன் எந்திருச்சு இங்கியல்னா என்னன்னு ஒரு பத்து நிமிஷம் பேச முடியுமாடே? என்னடே எவனாவது இருக்கியளா?

சரித்திரம் முழுக்க மக்கள் முட்டாக் கும்பலாகத்தான் இருந்திருக்காங்க. அவங்களுக்கு எது நல்லதுண்ணு ஒருநாளும் அவங்களுக்கு தெரியாது. தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம்னு சொன்னவன் மடையன் இல்லை. தொழிலாளி வர்க்க ஜனநாயகம்னு சொல்ல அவனுக்கு தெரியாமலும் இல்லை. ஜனங்களால ஒரு மேலான அரசாங்கத்தை உண்டு பண்ணிக்க முடியாது. தனித்தனியா ஒவ்வொருத்தனும் யோக்கியமானவனாத்தான் இருப்பான். கூட்டாச்சேர்ந்தா அறிவு கெட்ட மந்தயா ஆயிடுவான். புத்தியுள்ளவன் இழுத்த இழுப்புக்கு போற மந்தை. ஜனங்களுக்கு அறிவு கிடையாது. அறிவுள்ள புரலட்டேரியந்தான் அவங்களை வழி நடத்தனும். கட்சியைத் தலைமை வழி நடத்தனும். தலைமையை தத்துவம் வழி நடத்தனும். அது ப்ளேட்டோ கண்ட கனவு. அதை நடைமுறைப் படுத்தியது கம்யூனிசம் மட்டும் தான்.

சிலவங்க கேட்கிறாங்க, முதலாளிகிட்டயிருந்து நம்ம சொத்த நாம எடுத்துக்கிட்டா
என்ன தப்பு எண்ணு. அத நாம போராடி எடுப்போம். அது நம்ம உரிமை. திருடினோம்னா அது முதலாளிக்க சொத்து, அவனுக்க உரிமை எண்ணு நாமளே சம்மதிக்கற மாதிரியாக்கும். பிறவு வர்க்கப் போராட்டம் இல்லை. திருட்டு போட்டிதான். அவன் நம்மைத் திருடுவான். நாம் அவனைத் திருடுவோம். யாரு சாமர்த்தியமா திருடுறானோ அவனுக்கு அதிகாரம். கடைசில தொழிலாளி ஜெயிச்சிட்டான்னு வச்சுக்க இன்னொரு திருடனுக்க ஆட்சிதானே வரும்? இன்னும்
பெரிய திருடனுக்க ஆட்சி. அதுதான் கம்யூனிசமா? சித்தாந்தம் படிச்சவன் தானேடே நீ? சொல்லு?

நாம் இப்ப எதுக்கு சங்கம் வெச்சிருக்கோம்? மனதைத் தொட்டுச் சொல்லு.
நாம தொழிலாளிக்கு உரிமைகளையா கத்துக் கொடுக்கறோம்? வர்க்கப் போராட்டத்துக்காவா அணி திரட்டறோம்? பாதிநாள் திருட்டுத் தொழிலாளிக்காக முதலாளி கிட்ட வக்காலத்து வாங்கிட்டிருக்கோம். இல்லன்னு சொல்லு பாக்கலாம்?

நீ தொழிலாளிக்க சம்பளம் வாங்கிட்டு சேவகம் செய்றவன் மாதிரி பேசுறே. நான் தொழிலாளியை வழிநடத்திட்டுப் போறவன் மாதிரி பேசுறேன்

நெஞ்சில தீ வெணும்டே அருணாச்சலம். அதை அணைய விட்டிரப்பிடாது. நீ இப்பம் செய்யிற ஆள் பிடிக்குத வேலைய எல்.ஐ.சி க்கு செய்தா இன்னைக்கு உனக்கு எத்தனை லட்சம் தேறியிருக்கும், சொல்லுடே. தீ வேணும்டே. பேச்சில
அதுக்கச் சூடு வேணும். அந்த சூடுதான் தொழிலாளிக்கு நம்மமேல நம்பிக்கையும்
மரியாதையும் உண்டாக்குது. அது நம்ம ஆசான்கள்கிட்டேயிருந்து நாம எடுத்துக்கிட்ட தீ. அறுபத்து மூணில இந்த சங்கில உள்ள தீயை நம்பித்தான் எனக்க பின்னால அறுபதினாயிரம் தொழிலாளர்கள் போராட்டத்துக்கு வந்தாங்க. பதினெட்டு பேர் குண்டடிபட்டு செத்தாங்க. பதினேழு மாசம் பட்டினி கிடந்தாங்க. தீ வேணும்டே. அதை அணைய விட்டுடாதே.

கதிர் என்ற இன்றைய கம்யூனிசத்தின் இளைஞர் சமுதாயத்தில் ஒருத்தர் இவ்வாறு வினா எழுப்புகிறார்:

மார்க்ஸியம் மதம் இல்லை. அருளுரையும் இல்லை. நாம் அதை வழிபட வேண்டிய அவசியம் இல்லை. மார்க்ஸியம் வந்து இப்ப நூறு வருஷம் ஆயாச்சு. அதோட பரிசோதனைக் காலம் முடிஞ்சாச்சு. இன்னமும் அது பூமிமேல அற்புதங்களை நடத்தும்னு நம்பிட்டிருக்கிறது மூடத்தனம். அதனால என்ன செய்யமுடியும் என்ன செய்யமுடியாதுன்னு இந்த நூறு வருஷ வரலாற்றிலிருந்து நாம படிக்கணும். மார்க்ஸியம் உருவாக்கின அரசாங்கங்களெல்லாம் பழைய சக்கரவர்த்திகளோட
அரசாங்கங்களைவிட மோசமானவைன்னு அப்பட்டமா தெளிவாயாச்சு. மார்க்ஸியத்தால ஒரு புதிய சமூக அமைப்பையோ, பொருளாதார அமைப்பையோ, கலாச்சார அமைப்பையோ உருவாக்க முடியாது. அப்படி அது உண்டு பண்ணிக் காட்டிய அமைப்புகளெல்லாம் ஏற்கனவே இருந்த அமைப்புகளை விட
மோசமானவை மட்டுமல்ல, அவை மோசமான பழைய அமைப்புகளோட நகல்கள். இனிமே இம்மாதிரிக் கனவுகளை ஒருத்தன் வெச்சிட்டிருந்தானா அவன் தொண்டனா கொடிபிடிகக்த்தான் லாயக்கு. ஆனா மார்க்ஸியம் உலகம் முழுக்க பல வெற்றிகரமான மாற்றங்களை உண்டு பண்ணியிருக்கு. ஒரு ஜனநாயக அமைப்பில, சுதந்திரப் பொருளாதார அமைப்பில, முக்கியமான ஒரு சக்தியா அது செயல்பட முடியும். முழுமையான மாற்று சமூகத்தை அது உருவாக்க முயலறப்பதான் பிரச்சனை
வருது. ஏன்னா மார்க்ஸியத்துக்கு அதுக்கான சக்தி இல்லை. எந்த சித்தாந்தத்துக்கும்
அந்த சக்தி கிடையாது. தெரிஞ்சும் தெரியாமலும் இயங்கக்கூடிய பல்லாயிரம், ஏன் பல கொடி சக்திகள் இணைஞ்சு சமூகமும் கலாச்சாரமும் பொருளாதார அமைப்பும் உருவாகுது. அதை எந்த சித்தாந்தமும் முழுமையா அணுகிட முடியாது. அதன் ஒரு பகுதியை மட்டும் தான் ஒரு சித்தாந்தம் தொட முடியும். அப்படி ஆய்வு செய்து அது முழுமையா நிரூபிச்ச உண்மைகளை முழு அபத்தமா ஆக்கக்கூடிய பல நூறு தளங்கள் மீதி இருக்கும். மார்க்ஸியம் தான் மானுடம் உண்டாக்கின சித்தாங்களிலேயே உபயோகமான சித்தாந்தமும் அதுதான். ஒரு பேச்சு வார்த்தை மேஜையில மார்க்ஸியம் ஏழைகளோட பிரதினிதியா உக்காந்து பேச முடியும்.
இன்னைக்கு தொழிலாளி வர்க்கம் அடைஞ்சிருக்கிற எல்லா லாபங்களும் மார்க்ஸியம் வழியா கிடச்சதுதான். மார்க்ஸியம் இல்லீன்னா உலகத்தில இருக்கிற எந்த வெல்பேர் ஸ்டேட்டும் கருணையோட இருக்க முடியாது. சமூக அமைப்பில சுரண்டப்பட்ட வர்க்கம் மார்க்ஸியக் கருத்தியலின் அடிப்படையில்தான் ஒன்று சேர்ந்து போராட முடியும். மார்க்ஸியத்தோட பணி இங்க தான். ஒன்று சேர்ந்து போராடரதுக்குத் தவிர்க்க முடியாத பெரும் கனவை அது உண்டு பண்ணித்தருது. அந்த கனவை தருக்கபூர்வமானதா மாத்தற தத்துவ அடிபப்டைகளை உருவாக்கிக்
காட்டுது. அந்த தருக்கம் தான் பேச்சு வார்த்தையில் தொழிலாளி வர்க்கத்தின்
மிகப்பெரிய துருப்புசீட்டு. எந்த தொழிலாளியும் பேச்சுவார்த்தைக்காக சாக மாட்டான். பெரிய கனவுகளுக்காத்தான் சாவான். தொழிலாளி சாகத்தயாரா இருந்தாதான் பேச்சுவார்த்தையில் ஏதாவது சாதிக்க முடியும். மார்க்ஸியத்தோட இடம் இதுதான்.

கொள்கை வேறு நடைமுறை வேறு. மேலே மத்தியில ஜகஜித்சிங் வருஷா வருஷம் அதை நடத்திக் காட்டுறாரே!

முற்றிலும் உண்மை. கட்சிகள் கொள்கை என்ற ஒன்றை எப்பொழுதோ உதறிவிட்டனர். இப்பொழுது இருப்பது survival of the fittest. அரசியல் பெரும் வியாபாரம். அதனால் தான் ஒரே கட்சி மாநிலங்களுக்கு மாநிலங்கள் வேறு வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டிருக்கின்றன. பல்வேறு கொள்கைகளை வைத்துக்கொண்டு அவர்களுக்கு மக்களைச் சந்திப்பதில் கூச்சம் ஏதும் இருப்பதில்லை. ஏனெனில் மக்களும் அப்படித்தானே? மக்கள் தானே கட்சி!

அருணாச்சலம் ஜெயமோகனை சந்திக்கும் போது நடைபெறும் உரையாடலில் ராமசாமி ஜெயமோகனை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார்:

இவரு முக்கியமான தமிழ் எழுத்தாளர். சமீபமா இவர்தான் ஸ்டார். பேரு ஜெயமோகன் தருமபுரியில் டெலிபோன்ல வேலை பார்க்கிறார்.ரப்பர்னு ஒரு நாவலும் திசைகளின் நடுவேன்னு ஒரு சிறுகதைத் தொகுப்பும் வந்திருக்கு. புதிசா பெரிசா ஒரு நாவல் எழுதிட்டிருக்கார் விஷ்ணுபுரம்னு பேரு

அப்படியா?! நிறைய நபர்களுக்கு ஜெயமோகன் யார் என்றே தெரியவில்லை என்பது தான் உண்மை. பாலாவின் நான் கடவும் என்ற படத்துக்கு வசனம் எழுதுவதனால் அவர் இனி பிரபலமாகக்கூடும். இந்த நாவல் வெளிவந்தது 99 என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எவ்வளவு பேருக்கு ஜெயமோகன் தெரிந்திருக்கும் என்று சொல்லத்தேவையில்லை. மேலும் எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை: இவ்வளவு அழகாக எழுதப்பட்ட இந்தப் புத்தகம் ஏன் பிரபலமாகவில்லை? ஏன் ஜெயமோகனோ ராமகிருஷ்ணனோ சாமன்ய இலக்கியத்தில் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லை? கல்கியைப் போல. பிரபஞ்சனைப் போல. ஜானகிராமனைப் போல. பார்த்தசாரதியைப் போல. இனிமேல் கிடைக்குமோ?

ஜெயமோகனைப் பற்றி அருணாச்சலம் கொண்டிருக்கும் கணிப்பு:

பிறரை எடுத்த எடுப்பிலே குறைத்து மதிப்பிடும் அந்த அகங்காரம் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று பட்டது. இந்த இளைஞன் தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய சுயமதிப்பு கொண்டவனாக இருக்ககூடும்.

நான் ஜெயமோகனை ஒரு முறை சந்திருக்கிறேன். அப்பொழுது அவர் நாங்கள் வைத்திருக்கும் கேமரா போனைப் பற்றி கேட்பதில் ஆர்வமாக இருந்தார். என் நண்பர் ஒருவர் மிகவும் கூச்சப்பட்டார்: இவ்வளவு புத்தகங்கள் எழுதிய இவரை விட நம்மிடம் நிறைய வசதிகள் இருக்கிறதே. ஜெயமோகனை படத்திலோ அல்லது நேரிலோ பார்ப்பவர்கள் கண்டிப்பாக இவர் தான் கொற்றவையை எழுதினார் என்றால் தலையில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள். ஏனெனில் அவரிடம் சித்தர் வேஷம் கிடையாது!

அருணாச்சலத்திடம் தோழர் தீர்த்தமலை கட்சியின் விதிகளைப் பற்றி வாதாடும் போது:

அம்பதுகளில் ரணதிவேதீஸிஸ் வந்தப்ப குமரி மாவட்டத்தில மட்டும் ஆயிரம் பேர் கட்சியை விட்டுப் போயிருக்காங்க. பயங்கரமான அடக்குமுறைகளில் கூட கட்சிக்காக ரத்தம் சிந்தின முன்னூறு பேர் நம்ம கட்சி ஜனநாயகத்தை ஏத்துக்கிட்டப்ப விட்டுட்டு போனாங்க. கட்சியைவிட்டுப் போனவங்களில சிலர்தான் தேறினாங்க. மீதியெல்லாம் ஆளுமை கெட்டு, குடிகாரர்களாகி உதவாக்கரைகளாகி, சீரழிஞ்சு போனாங்க. சிலர் பூர்ஷ¤வாக்களாகக்கூட ஆனாங்க. ஏன், இப்ப நக்சலைட் இயக்கம் வெடிச்சப்ப கட்சிய விட்டு எண்ணூறு பேர் விலகிப் போகலையா? அதில வேணுகோபாலனை எனக்கு நல்லாத் தெரியும். நாலு வருஷம் நானும் அவனும் ஒரே
ரூம்ல தங்கியிருக்கோம். என் நிழலா இருந்தான். அவன் படிச்ச புஸ்தகங்களுக்க பின்
அட்டை படிச்சவங்களே நம்ம கட்சியில குறைவு. பெரிய அளவில தேசிய அளவில போகப் போறான்னு நம்பினோம். இப்ப பேச்சிப்பாறை டாம் பக்கமா பிச்சை எடுக்கறான். என்னைப் போன வருஷம் செமினார் சமயத்தில் வழி மறிச்சு, ‘குட்மாரிங் தோழர், புரட்சி ஓங்குக. ஒரு அம்பது ரூபா கொடுங்க’ ன்னு கேட்டான். மனசுக்குள்ள நொறுங்கிப் போயிட்டேன். ஆனா என்ன செய்யமுடியும் சொல்லுங்க?

கட்சி முன்னகருறப்ப சிலர் உதிர்ந்தே ஆகணும். திரிபுவாதிகள், கோழைகள், சுயநலவாதிகள் உதிருவாங்க. சில சமயம் கட்சியைவிடப் பெரிசா தங்களோட ஈகோவை வைச்சிருக்கிற படிப்பாளிகளும், திறமைசாலிகளும் உதிர்ந்திடலாம். ஆனா
யாரா இருந்தாலும் உதிர்ந்தா உதிர்ந்தது தான். ஏன்னா கட்சிங்கறது புராணங்களில
சொல்றது போல ஒரு விராட புருஷன். நாமெல்லாம் அதன் உறுப்புகள். நாம அதை விட்டுப் பிரிஞ்சுட்டோம்னா அழுகி மட்கி இல்லாமப் போக வேண்டியதுதான்.

தருக்கம் தார்மீகத்தின் முன்பு மட்டுமே தோற்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய ஏகப்பட்ட கடிதங்களில் எனக்கு மிகவும் பிடித்தமான கடிதம் இது தான்:

ஜன்னலைத்திறந்து, பாதையில் போகும் பொறுக்கியை வேடிக்கை பார்க்கும் வீட்டு மனிதா, இது உனக்கு. வீடு உனக்கு பாதுகாப்பல்ல. ஏனெனில் உன்னிடம் என்ன உள்ளது? அர்த்தமற்ற பயங்களும், அசட்டு உணர்ச்சிகளும், கணந்தோறும் பழமைகொள்ளும் சில பொருட்களும், மலச்சிக்களும் தவிர? தெரு மனிதர்களை இகழாதே. உன்னால ஒரு போதும் அவர்களைப் புரிந்து கொள்ள முடியாது. எல்லை வகுக்கப்படாத எதையும் பார்க்கவோ உணரவோ உனக்கு அனுமதி இல்லை.
உனக்கு அத்தனையும் ரேசனில் வழங்கப்படுகின்றன. காலம், வெளி, ஒளி, நீர் எல்லாமெ. குடும்ப அட்டையை கையில் வைத்தபடி -குடும்பத்தலைவன் என்று குறிப்பிட்டிருப்பதன் அபத்தமான பெருமிதத்துடன் -மகிழ்ந்துபோன அத்மாவாக உன் வீட்டுக்குள் வாழ்கிறாய். கதவிடுக்கில் பீரிடுகிறது தெருவின் திறந்த காற்று. உன் ஆஸ்துமாவிற்கு அது எமன். மூடுடா கதவை.

என்னை மிகவும் பாதித்த கவிதை:

இன்னும் வாழ்பவன் அல்ல, ஆவியும் அல்ல,
இழிந்த விலங்கும் அல்ல, மனிதனும் அல்ல
இனம்காண முடியாத ஏதோ ஒன்றாய்…

-புஷ்கின் என்ற ரஷ்ய கவிஞர் எழுதிய கவிதை

புகாரின் ட்ராட்ஸ்கி ஸ்டாலின் ஆகிய மூவரைப் பற்றிய செய்திகள். புகாரின் சதியால் கொல்லப்பட்டார் என்று கேள்விப்பட்டுதான் வீரபத்ரபிள்ளையின் நிழல் கேள்வி கேட்க ஆரம்பித்தது என்றால், புகாரின் ஒன்றும் சதியில் சலைத்தவர் இல்லையே! புகாரின் லெனினுக்குப் பிறகு ட்ராட்ஸ்கி வந்துவிடக்கூடாது என்ற காரணத்தினால் தான் ஸ்டாலினை ஆதரித்தார். பிறகு பல கொலைகளை அவரும் ஸ்டாலினோடு சேர்ந்து நிகழ்த்தியிருக்கிறார். மிகில்னாய் ரயில் நிலயத்தில் சைபீரியாவின் கட்டாய வதை முகாம்களுக்கு சென்று கொண்டிருக்கும் விவசாயிகளைப் பார்க்கும் வரை அவரது நிழல் தூங்கிக்கொண்டுதான் இருந்தது. பிறகு ஸ்டாலினோடு எதிர்ப்பு வலுத்தபின்னர் அவரது ஈகோ முந்திக்கொண்டது. நிழல் விழித்துக்கொண்டது. அவரால் பின்வாங்க இயலவில்லை.

அதே நிலைதான் வீரபத்ரபிள்ளைக்கும். வீரபத்ரபிள்ளைக்கு தெரியும் புகாரின் ஒன்றும் மிக நல்லவர் இல்லை என்பது. ஸ்டாலினும் புகாரினும் சேர்ந்து நடத்திய அரசியல் படுகொலைகளை அவரும் அறிந்தவர் தான். எனினும் ஏதோ ஒன்று அவரது மனதுக்குள் புகுந்து கொண்டுள்ளது. அது ஈகோ மட்டுமே. வேற எதுவாகவும் இருக்க வாய்ப்பு இல்லை.

கீழே ட்ராட்ஸ்கி மற்றும் புகாரின் செய்த சதிகள் கூறப்படுகின்றன:

பிலிப்குஸ்மிச் மிரானோவ் செம்படையின் மகத்தான தளபதிகளில் ஒருவர். எட்டு வருடம் ட்ராட்ஸ்கியின் உயிர் நண்பராக இருந்தார். மிக எளிய கசாக்கு குடும்பத்தில் பிறந்து, ஜாரின் ராணுவத்தில் படைவீரராக இருந்தவர். ட்ராட்ஸ்கியால் செம்படையில் சேர்க்கப்பட்டார். அக்டோபர் புரட்சியில் கிரெம்ளினில் நுழைந்த முதல் படைப்பிரிவை நடத்தினார். 1921-ல் கசாக்குகளின் கிளர்ச்சியை அடக்கும்படி தென்முனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு எளிய கசாக்கு குலப் பொதுமக்களை செம்படை சூறையாடியதைக் கண்டு மனம் பொறாது ட்ராட்ஸ்கியிடம் வாதாடினார். செம்படையின் தளபதிகளை கட்டுப்படுத்த வேண்டும் இல்லையேல் கசாக்குகளை மொத்தமாக வெண்படை ஆதரவாளர்களாக மாற்றிவிடவே இம்மாதிரி நடவடிக்கைகள் உதவும் என்று முறையிட்டார். ட்ராட்ஸ்கி அதை ஏற்கவில்லை.
மிரானோவ் துரோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு சாரணைக்குட்படுத்தப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு உத்தரவிட்டது ட்ராட்ஸ்கிதான். இன்று ட்ராட்ஸ்கியின் இடத்தில் ஸ்டாலின். மிரானோவின் இடத்தில் புகாரின்.

ஏப்ரலில் மிகில்னாய் ரயில் நிலயத்தில் புகைவண்டி சிறிது நேரம் நின்றது. வெளியே
எட்டிப்பார்த்தேன். திறந்த வெளியில் கிழிசல் உடைகள் அணிந்த பல்லாயிரம் விவசாயிகள் படுத்துக்கிடந்தார்கள். அவர்களைச் சுற்றி கவச வண்டிகளினாலான வேலி. துப்பாக்கி ஏந்திய காவலர்கள். பனி அவர்கள்மீது திரையிட்டிருந்தது. காற்றில் அது விலகும் போது ஒட்டி உலர்ந்த உடல்கள் தெரிந்தன. மூட்டை முடிச்சுகள். ஊடாக…குழந்தைகள்; குளிரில் விறைத்து, நீலம் பாரித்த குழந்தைகள்! அவர்கள் சைபீரியாவிற்குப் போகும் குளக்குகள். பெரும்பாலானவர்கள் அங்கு திரட்டப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டிருப்பார்கள்.
ரயிலுக்காக வெட்டவெளியில் காத்திருக்கையில் மீதிப்பேர் சாவார்கள். சைபீரியாவுக்கு எத்தனை பேர் போய்ச்சேர்வார்கள் என்று கூற முடியாது. இதுவரை ஒன்றரை கோடி விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஒன்றரைக்கோடி உடல்களை குவித்துப் போட்டால் பீட்டர்ஸ்பர்க்கிலும் மாஸ்கோவிலும் உள்ள அனைத்து கட்டிடங்களையும்விட பெரிய பிணமலைகளாக இருக்கும்.

வீரபத்ரபிள்ளை எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்.

கடிதங்கள்

தபால் வசதி அனுமதிக்கப்படாத ஊர்களில்
பலநூறு கடிதங்கள் தினம்
எழுதப்படுகின்றன.
அவை காற்றில் குளிர்போல
கனத்து தொங்குகின்றன.
சிறு
காற்றில் வருடலில்
மழையாகி அவர்கள் மீதே விழுகின்றன.
குளிர்ந்து அவர்களைச்
சுற்றி இறுகிவிடுகின்றன.
கடிதங்களின் கடுங்குளிரில் அவர்கள் தூங்குகிறார்கள்.
அப்போது வெப்பமான காற்றை
அவர்கள் கனவு காண்கிறார்கள்
வானில் ஒளியாக
சொற்கள் பரவ
ஆத்மாக்கள் அவற்றை உண்ணும்
ஒரு மகத்தான தினத்தைக்
காண்கிறார்கள்
பின்பு விழித்தெழுந்து கண்ணீர் விடுகிறார்கள்
மறுநாள்
மீண்டும்
இறுகும் பனியை உடைத்தெழுந்து
கடிதங்களை எழுதத் தொடங்குகிறார்கள்.

இந்த கவிதை கண்டிப்பாக சைபீரிய வதைமுகாம்களில் பழி சுமத்தப்பட்டு தண்டனைகளை (பெரும்பாலும் மரண தண்டனை!) எதிர் நோக்கி காத்திருக்கும் மக்களை நினைத்து எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். கடிதங்கள் என்பவை அவர்களது தாகங்கள். விடுதலைத் தாகங்கள். ஆனால் யாரிடமிருந்து விடுதலை? விடுதலை வேண்டு புரட்சி செய்தவர்கள், புரட்சிக்கு தலைமைதாங்கியவர்கள் தான் விடுதலையை எண்ணி கனவு காண்கின்றனர். வெப்பமான காற்று சர்வாதிகாரம் இல்லாத பொன்னுலகம். ஆம் பொன்னுலகம். கம்யூனிசம் தோன்றி நூற்றாண்டாகிவிட்டபோதும் இன்னும் எங்கும் காணக்கிடைக்காத பொன்னுலகம். மகத்தான் தினமும் பொன்னுலகைக் காணும் தினமே! இங்கு அவர்களை மூடிக்கொள்ளும் பனி என்பது சர்வாதிகாரம். மீண்டும் மீண்டும் அடக்குமுறைகளை அவர்கள் உடைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். அடக்குமுறைகளை கட்டுகளை அவிழ்த்தெரிந்துகொண்டேயிருக்கிறார்கள், மீண்டும் வேறு புதிய கயிறால் கட்டப்படும் வரை.

யாருக்காக

யாருக்காக எழுதப்படுகின்றன கவிதைகள்?
இன்னும் சூரியன்
உதிக்கிறது
ஒளிபட்ட பனிப்பாறை போல
அவ்வளவு கடும் குளிருடன்.
எலும்பைத்
துளைக்கும் அதன் புன்னகை
மலர்கள் மலர்கின்றன.
தொடும்போதே உதிர்கின்றன.
இன்னும் மிச்சமிருக்கின்றன என நான்
அள்ளியள்ளித் திரட்டும் நம்பிக்கைகளை
உடைக்கிறது தூரத்து ஓலம்.
கையேந்தி நின்று ரொட்டிக்காக மன்றாடும்
இந்தச் சிறுகுழந்தை கேட்கவில்லை
யாருக்காக எழுதிக்கொண்டிருக்கிறேன்
இக்
கவிதைகளை என்று.

கேரள தலித் தலைவர் ஐயன்காளியும் காந்தியும் சந்தித்திக்கொண்டதாக சொல்லப்படுகிற கதை ஒன்றும் இடம்பெறுகிறது. காந்தியின் அகிம்சை நன்றாக அலசப்படுகிறது.

ஸ்டாலின் செய்தது தவறு என்றால் எங்கே தவறு நடந்தது?

மார்க்ஸின் தத்துவப்படி பொருளாதாரக் காரணிகளால இயல்பா புரட்சி வரணும். லெனின் அரசியல் நடவடிக்கை மூலம் புரட்சியைக் கொண்டுவந்தார். லெனின் ரஷ்யாவில நடத்தினது அதுதான். விழிப்புற்ற ஒரு சிறுபான்மையினர் அரசியல் நடவடிக்கை மூலமா புரட்சியைக் கொண்டுவந்து, பொதுவுடைமை சமூகத்தை உருவாக்க ஆரம்பிச்சாங்க. இது வால் நாயை ஆட்டிவைக்கிற மாதிரி. ரஷ்யாவில நடந்த சகல குளறுபடிகளுக்கும் காரணம் தடியால அடிச்சு பழுக்கவைக்க லெனின் செஞ்ச முயற்சிதான்.

இன்னைக்கு சுரண்டல் பிரம்மாண்ட வல்லமையா மாறியிருக்கு. அதுகிட்ட சாட்டையும் துப்பாக்கியும் இல்ல. அணுகுண்டும் கம்ப்யூட்டரும் இருக்கு. நம்மை ஏகாதிபத்தியம் அழிச்சிட்டிருக்கு. நம்ம வளங்கள் அழியுது. நம்ம உடல்கள் கெடுது. நம்ம கலாச்சாரம் சீரழியுது. ஏகாதிபத்தியம் இன்னைக்கு நம்மை பயமுறுத்தல. நம்மை அது மனோவசியம் பண்ணுது. நாம அதை விரும்பி வரவேற்றுத்
தலைமேலே தூக்கி வெச்சிட்டிருக்கோம். நீங்களும் நானும் சிந்திக்கிறதில கூட
ஏகாதிபத்திய விஷம் கலந்திருக்கு.

மார்க்ஸிசத்தில குறைகள் இருக்கலாம். அந்த குறைகளுக்காக நாம அதை நிராகரிச்சா பிறகு என்ன மிஞ்சும்? போராடத் தெரியாத மக்களா, அடிமைச் சவங்களா மண்மேல வாழறதா? மார்க்ஸிசத்தவிட தீவிரமான ஒரு போராட்ட ஆயுதம்
கிடைக்கிற வரை மார்க்ஸிசத்தை உலகம் கைவிட முடியாது. ஏன்னா மார்க்ஸிசம் ஒரு
எதிர்ப்பு சக்தி.

ஓநாயும் மனிதனும் சேர்ந்து வாழ்வது எப்படி? என்ற நாடகம் மிகவும் நன்றாக இருந்தது. மொத்த நாவலையுன் ஒரு நாடகத்தில் அடக்கி parody செய்தது போல இருந்தது. மகாபாரதம், வேதங்கள், கிறிஸ்தவம் என்று அனைத்தையும் ஜெயமோகன் ரஷ்ய கம்யூனிசத்தோடு ஒப்பிடுகிறார். நான் சிரித்ததைப் பார்த்து என் நண்பர் ஒருவர் எனக்கு வாசித்துக்காட்டு என்று சொல்லிவிட்டார். நாவல் படிக்க நேரமில்லை என்றால் கண்டிப்பாக இந்த ஒரு நாடகத்தை மட்டுமாவது படியுங்கள்! நாடகத்தில் வரும் கோழி கூட “ரிபப்ளிக்கோ! ரிபப்ளிக்கோ!” என்று கூவுகிறது.

***

னக்கு கம்யூனிசம் தெரியாது. நான் கட்சி சார்ந்தவனும் அல்ல. ஆனால் இந்த நாவல் எனக்கு கம்யூனிசத்தின் வேர்களை அறிய உதவியிருக்கிறது. கம்யூனிசத்தைப் பற்றிய நன்மைதீமைகளை அறிந்து கொள்ள உதவியிருக்கிறது. என் மனமும் புத்தியும் திறந்தேயிருக்கிறது. நான் கம்யூனிசத்தை சார்ந்தவனும் அல்லன். முதலாளித்துவத்தை சார்ந்தவனும் அல்லன். நான் கிடைக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். படித்துக்கொண்டிருக்கிறேன். என்னால் எந்த நிலைப்பாடுக்கும் வரமுடியவில்லை. இந்த நாவலைப் படித்த கம்யூனிஸ்ட் எவரும் கண்டிப்பாக கடும் கோபம் கொள்வார்கள். இல்லையேல் கோபம் கொள்வதைப் போன்று நடிக்கவாவது செய்வார்கள். வேறு என்ன செய்ய முடியும்? கம்யூனிசமும் கட்சிதானே? அதை நம்பியும் மக்கள் இருக்கிறார்களே? அரசியல் தொழிலாக ஆகிவிட்டது இல்லையா? கொள்கை என்ற ஒன்றை அனைத்து கட்சிகளும் தார்மீக உரிமையுடன் உடைத்து எறிந்து விட்டனரே! இந்த ஒரு விஷயத்தில் அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே கொள்கை. இதில் கம்யூனிசம் மட்டும் எப்படி விதிவிலக்காகும்? கட்சியை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு பெரிய இயக்கம். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறதா? கொள்கைகளுக்காக நாம் நமக்கு மிகவும் தேவையான ஒன்றை இலக்கத் தயராக இருக்கிறோமா? அப்படி இழக்கத்தான் வேண்டுமா? இழந்தால் மட்டும் நாம் என்ன சாதித்து விட முடியும்? இழக்காமல் என்ன சாதிக்கிறோம்? வரலாறு நாம் இழந்தாலும் இழக்காவிட்டாலும் இயங்கிக்கொண்டேதான் இருக்கிறது. எண்ணற்ற உயிர்களை தனி மனித கொள்கைகளுக்காக பலிவாங்கிக்கொண்டேதான் இருக்கிறது.

சைபீரியா வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்ட குளக்குகள் பற்றி ஒரு கம்யூனிஸ்ட் சொல்லும் போது: “அவர்களை கட்டாய உழைப்புக்கு அனுப்பி வைத்தோம். உழைக்கச்சொன்னால் யாவருக்கும் கஷ்டம் தான்” என்று வாதிடுகிறார். ஒரு விஷயத்தில் இரு வேறு விதமான பார்வைகள் எப்பொழுதுமே இருக்கின்றன. ஒருமுகமாக அல்லது ஒருசார்பாக ஒரு விஷயத்தை அனுகினால் அதன் உண்மையை நாம் அறியமுடியாமல் போய் விடும். Have an un-biased-view!

***

மேலும் படிப்பதற்கு வேறு சுட்டிகள்:

புகாரின்:
http://en.wikipedia.org/wiki/Nikolai_Bukharin
http://art-bin.com/art/obukharin.html
http://www.marxists.org/archive/bukharin/works/1938/trial/index.htm
http://www.fee.org/publications/the-freeman/article.asp?aid=545

புகாரினின் மனைவி:
http://en.wikipedia.org/wiki/Anna_Larina

ஸ்டாலின்:
http://en.wikipedia.org/wiki/Stalin

குளக்குகளும் சைபீரியா வதைமுகாம்களும்:
http://en.wikipedia.org/wiki/Kulak
http://www.economicexpert.com/a/Kulak.htm

கேரளாவின் அய்யன்காளி:
http://en.wikipedia.org/wiki/Ayyankali

ரணதிவே:
http://www.citu.org.in/btr%20.htm

கவிஞர் புஷ்கின்:
http://en.wikipedia.org/wiki/Aleksandr_Pushkin

எழுத்தாளர் குப்ரின்:
http://en.wikipedia.org/wiki/Alexander_Kuprin

தச்ஸ்தோய்:
http://en.wikipedia.org/wiki/Tolstoy

Nypei, Lie Groups and OBA

ந்தோனேசியாவின் பாலி தீவில் ஒரு நாள் நிசப்தத்தை வருடந்தோரும் அனுஷ்டிக்கிறார்கள். இந்த நாள் பாலியின் லூனார் புதிய வருடப்பிறப்பன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த மார்ச் பத்தொன்பதாம் தேதி. இதை சுய பரிசோதனை நாள் என்று எண்ணுகிறார்கள். அதனால் அதற்கு தடையாக வரும் வெளி சமாச்சாரங்கள் அனைத்தும் மறுக்கப்படுகிறது.

இந்த நாளில் – பொதுவாக இரைச்சல் மிகுந்து காணப்படும் – பாலி வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. வெளிநாட்டினர் -ஆஸ்திரேலியா பாலிக்கு சென்றிருந்த தனது சுற்றுலா மக்களுக்கு “தடையை சீரியசாக எடுத்துக்கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை அளித்திருக்கிறது – கூட வெளிவருவதில்லை. (பத்து வருடங்களுக்கு முன்னர் டூரிஸ்டுகளுக்கு இந்த தடையில்லை, அவர்கள் அன்றைக்கு வெறிச்சோடிக்கிடக்கும் வீதிகளை சுற்றிப்பார்க்களாம்) எந்த கடைகளும் – மிகச்சிறிய தெருவோரக் கடைகள் கூட- திறந்திருப்பதில்லை. எல்லோரும் வீட்டுக்குள்ளே இருக்கின்றனர். இரவு முழுதும் விளக்குகள் அனைந்தேயிருக்கின்றன. ரோந்து பணியாளர்களான Pecalangs மட்டுமே தெருக்களில் சுற்றித்திரிவார்கள். இந்த தினத்தை Nyepi என்று அழைக்கிறார்கள். பாலியின் பெரும்பான்மையான ஹிந்து மக்கள் இந்த நாளை புதுவருடப்பிறப்பாக அனுஷ்டிக்கிறார்கள்.

இவ்வாறு அமைதியாக இருக்கும் இந்த நாளுக்கு முந்தைய நாள் மிகுந்த இரைச்சல் மிகுந்ததாக இருக்கிறது. மக்கள் கெட்ட ஆவிகளை விரட்ட வீட்டில் தயாரித்த மூங்கிலிலான பீரங்கிகளை உபயோகித்து சுடுகின்றனர். ஒகோ-ஒகோ (ogoh-ogoh) என்று அழைக்கப்படும் இந்த கெட்ட ஆவிகள் தெருவெங்கும் இழுத்துவரப்பட்டு பிறகு கொழுத்தப்படுகின்றன.

பெரும்பான்மையான முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியா இந்த நாளுக்கு பொதுவிடுமுறை அளித்துள்ளது. அன்று மசூதிகளில் தொழுகைக்கு ஸ்பீக்கரில் அழைக்கும் குரல்கள் கூட நிறுத்தப்படுகின்றன.

மிக முக்கியமான விசயம்: இந்த Nypei நாளுக்கு மறுநாள் முத்த தினம் (kissing ritual) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தோனேசியாவின் ப்யூரிட்டன்களிடமிருந்து பாலியின் இளசுகள் வெற்றிகரமாக இன்று வரை இந்த தினத்தை காப்பாற்றி வந்திருக்கின்றனர். பாலிக்கு டூர் போகனும் என்று நினைப்பவர்கள் இந்த நாளை அனுசரித்து போங்கப்பா!

***

Lie Groups என்ற ஒன்றை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? நான் கேள்விப்பட்டதில்லை. கேள்விப்பட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும்! (Dint ring any bell!). சோபஸ் லை (Sophus Lie) என்ற நார்வேஜியன் கணிதமேதையின் நினைவாக இது பெயரிடப்பட்டது. Lie Groups இல் மிக எளிய உறுப்பினர் : வட்டம் மற்றும் கோலம்(இரண்டாவது எளிது!) . எப்படித் திருப்பினாலும் (சுழற்றினாலும்) ஒரே மாதிரியாக இருப்பது.

இந்த வாரம் E8 என்ற மிகக் குழப்பமானதும், மிகப் பெரியதுமான ஒரு வடிவத்தை வரைந்திருக்கின்றனர். It takes 57 co-ordinates to define a point on its surface and has 248 axes of symmetry. (இப்பவே கண்ணக்கட்டுதே!)

இந்த வடிவத்தை வரைவதற்கு கனித மேதைகளுக்கு 453,060 புள்ளிகள் தேவைப்பட்டதாம். மேலும் இந்த புள்ளிகளுக்கிடையே இருக்கும் உறவுகளையும் வகுத்தாகவேண்டும். எனவே அவர்கள் ஒரு அணியை வகுக்கவேண்டும். அதில் 453,060 நிறைகளும் (Rows) 453,060 நிரைகளும் (columns) இருக்கவேண்டும். மொத்ததில் 205 பில்லியன் புள்ளிகள் தேவைப்படுமாம். இதில் பல புள்ளிகள் வெறும் எண்கள் அல்லவாம் – polynomials (x,x2,x3..xn).

E8 வடிவம் பெற்றது String Theroy ஐ எளிதாக (Cost saving!) அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்செல்லும்.

***


கம்போடியாவின் காந்தி என்றழைக்கப்படும் Preah Maha Ghosananda தனது 78ஆவது வயதில் மார்ச் 12ஆம் தேதி காலமானார். நிறையமுறை nobel peace prize க்கு நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார்.இவர் ஒரு பௌத்த துறவி. கம்போடியாவின் அரசியலில் என்பதுகளில் இருந்தவருக்கு, ஆசை என்னவோ மக்களை நேரடியாக சென்று சந்தித்து அவர்களுக்கு அன்பின் வலிமை வரலாற்று சக்திகளைவிட உயர்ந்தது என்று போதிப்பதிலேதான் இருந்தது.

1992 இல் கம்போடியா முழுதும் மக்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்த Dhamma Yatra சென்றார். போல் பாட் கொன்றுகுவித்த புத்த பிட்சுக்களில் எஞ்சிய மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர்.

For the pure hearted one
Having clarity of vision,
Being freed from all sense desires
Is not born again into this world.

என்பதே அவரது slogan.
***

இந்த முறை MSDN Connection event க்குப் போயிருந்தேன். One Marina Boulevard இல் உள்ள Microsoft auditorium ல நடந்தது. செமினாருக்கு முந்தய free டின்னர் அருமை! செமினார் முடிந்ததற்கு அப்புறமும் சிலர் “hey still can eat!” என்று சொல்லி சாப்பிட்டதைப் பார்க்க முடிந்தது. என் நண்பன் ஒருவன் “நான் இந்த செமிஅனருக்கு வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று: free dinner” என்றான். உண்மைதான். எனக்கு ரொம்ப பக்கம்: from my office. அப்படியே நடந்து பக்கத்து லிப்ட் எடுத்துப் போக வேண்டும் அவ்வளவுதான்!

SOA and OBA (Office Business Application) என்ற தலைப்பில் முதல் செமினார். நமக்கு பலருக்கு SOA என்றால் நன்றாகத் தெரியும் – நம்முடைய மேனேஜர்கள் எல்லாம் வாய்கிழிய பேசும் ஒரு டாபிக். சிலருக்கு web service இன் உண்மையான பயன் கூட தெரியாது என்பது வேறு விசயம். அது சரி, மேனேஜர்களுக்கு அதெல்லாம் தெரியவேண்டுமா என்ன?.(மேனேஜர்கள் மன்னிக்கவும்). OBA என்பது எனக்கும் புதிய டாபிக் தான். (ஆனால் ஏற்கனவே word document கூட நெறைய சண்டை போட்டிருக்கேன். Designing a template and merging the bookmarks with values from database. இது dyanamic என்பதால் கொஞ்சம் கஷ்டம். ஆனால் WML helps a lot. word document ஐ XML வடிவத்தில் save செய்து. பிறகு XML file ஐ parse செய்து நமது bookmarks ஐ கண்டுபிடித்து database values அ அதில் இணைக்கவேண்டும். கொஞ்சம் கஷ்டம் தான். )

ஆனால் OpenXML வந்தபிறகு வேலை சுலபமாகி விட்டது. .Net Framework 3.0 வில் windowsbase.dll என்றொரு dll வருகிறது. அதை வைத்து எளிதாக word document ஐ parse செய்ய முடிகிறது. ஆனால் ஒரு glitch இருக்கனுமே! ஆம். இந்த dll VS2003 யோடு வேலை செய்யாது. அதாவது அட்லீஸ்ட் Framework2.0 வேணும்.

Office 2007 (Visual Studio Tools for Office 2007) இல் நிறைய புதிய templates வருகிறது. அவைகளை பயன்படுத்தி ஒரு word docuementஐயே web form போல treat செய்யலாம். so that end users can just open the word document and do whatever they wish (we can embed combobox or other controls even datagrid) and just save the document. document oriented projects (like insurance etc) க்கு helpfull ஆ இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

மேலும் Windows Home Servers பற்றிய அறிமுகமும் கிடைத்தது. backups and retrieving is made easy, that even Mums can do that – he said. Demo பார்ப்பதற்கும் எளிதாக இருப்பது போன்று தான் இருந்தது. ஆனால் demo எப்பொழுதும் அற்புதமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாதா என்ன?! ஒரு முக்கியமான விசயம் என்னவென்றால், backup retrieval, Ghost பயன்படுத்தியவர்களுக்கு retrieval லில் இருக்கும் சிரமம் தெரியும். you cannot retrieve a specific file. ஆனால் இங்கே backup file ஐ unzip (அப்படிதான் தெரிகிறது!) செய்தவுடன் folder structure கிடைத்துவிடுகிறது. பிறகு just select your file!

அடுத்தது, virtual application. Looks good. ஒரு இடத்தில் application (windows based) வைத்துக்கொண்டு வெறு எந்த configured PC யிலிருந்தும் உபயோகித்துக்கொள்ளலாம். No maintanence hazards. No used reports : it was ok untill you installed the new patch! அவங்களுக்கு தெரியாமலே நாம upgrade பண்ணிடலாம். அது மட்டுமில்லாமல் இரண்டு version வைத்துக்கொள்ளலாம். அதை செர்வரிலிருந்து control செய்யலாம். cool huh? But beware Micro$oft.

***

seafood பிரியர்களுக்கு: என் நண்பன் ஒருவன் இருக்கிறான், chinese கடைக்குப் போனால் போதும், வாந்தி எடுக்காத குறைதான். ஏதோ smell அடிக்குதுடா என்று சொல்லியே நமக்கு வாந்தி வர வெச்சுடுவான். ஒரு முறை நாங்கள் order பண்ண சிக்கன் fried rice இல் (அவன் எவ்வளவோ படிச்சு படிச்சு only chicken only chicken என்று சொல்லியும்) octopus ஒன்று இருந்தது. அதை spoonஇல் எடுத்தவன் எதிரே அமர்ந்திருந்த என்மீது வாமிட் எடுக்காத குறை! மற்றொரு நண்பர் இருக்கிறார்: ப்ரைட் ரைசில் யானையே படுத்துக்கிடந்தாலும் எடுத்து தனியே போட்டுவிட்டு அவர் பாட்டுக்கு கூலாக சாப்பிடுவார்.

நான் எத்தனை முறை மீன் சாப்பிட்டாலும் சாப்பிடுவது என்னவகை மீன் என்று எனக்குத் தெரியாது. சமயத்தில் விரால் மீனுக்கும் வஞ்சிர மீனுக்கும் கூட வித்தியாசம் தெரியாது. முன்னால் சொன்ன octopus நண்பன் (நம்ப கோனபாட்டில் தான்!) இரண்டையும் சரியாக கண்டுபிடிப்பான். அவர் விரால் மீனை ஒரு வெட்டு வெட்டுவார், வஞ்சிர மீன் என்றால் தொடக்கூட மாட்டார். ஏனென்று அவனுக்கே தெரியாது!

மீனின் வகைகள் தெரிந்து சாப்பிடுபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்கிறது நேஷனல் ஜியோகரபிக். மீனில் இருக்கும் omega 3 fatty acids எவ்வளவு நல்லதோ அதை விட கெட்டது மீனில் இருக்கும் mercury. அதனால் கவனமாக இருங்கள்.

High-Mercury Fish.
Tilefish
King Mackerel
Shark
Swordfish
Freshwater sport fish caught in contaminated waters.

***

ஏப்ரல் 22 2007 அன்று பூமி தினம் கொண்டாடப்படுகிறது (Earth Day). ஏற்கனவே Green Cities பல நாடுகளிடையே பிரபலமாகிக்கொண்டு வருகிறது. நாடுகள் போட்டிபோட்டுக்கொண்டு நவீன பசுமை நகர்களை உருவாக்கிக்கொண்டு வருகின்றன.

அன்று நாம் என்னவெல்லாம் செய்யலாம்:

முடிந்தல் ஆபிசுக்கு நடந்து செல்வது (மோட்டார் பைக், கார் என்று உபயோகிக்கக் கூடாது)
அல்லது Public Transport ஐ பயன்படுத்துவது.
வீட்டில் AC போட்டுக்கொள்ளாமல் படுத்துத் தூங்குவது.
Refrigirator ஐ ஆப் செய்வது.

மேலும் பல Tips க்கு
http://events.yahoo.com/earthday06/
http://www.epa.gov/water/citizen/thingstodo.html

நான் ஒரு பூந்தொட்டி வாங்கலாம் என்றிருக்கிறேன். (மொதல்ல வீட்டுக்கு முன்னுக்க இருக்கற பூச்செடிக்கு தண்ணி ஊத்துடா மடையா என்கிறது மனசாட்சி!)

***

Thanks : Economist, NGC