டிசம்பர் 16 1984
டாங்க் E16 -ல் இருந்த பதினைந்து டன் மிக் (MIC) இன்னும் திகிலூட்டவே செய்தது. அதை எப்படி விட்டொழிப்பது என்பதை பற்றி பலரும் பலவாறு யோசனை கூறினர். அதை மிகப் பெரிய ட்ரம்களில் அடைத்து அதன் தாய் கம்பெனிக்கே அனுப்பிடலாம். இல்லையேல், பெரிய குழாய்வழியாக காஸ்டிக் சோடா வாயுவை பயன்படுத்தி அதை நீர்த்தப்படுத்தலாம். இல்லையேல் அதை எரித்து (சோதனைக்கு உட்பட்டு) அதிகம் தீங்கில்லாத வேறொரு வாயுவாக மாற்றலாம். ஒருவழியாக இறுதியாக மிக்கை நீர்த்தப்படுத்தி செவின் (Sevin) என்ற பூச்சிகொல்லி மருந்தாக உருமாற்றம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
இதை செய்யவிருக்கிற பல நிபுணர்கள் கொண்ட குழுவின் தலைமை விஞ்ஞானி, இதில் கிடைக்கும் பொருளாதார இலாபத்தை பற்றி ஒரு பத்திரிக்கை சந்திப்பில் இவ்வாறு மக்களுக்கு எடுத்துக்கூறினார்: “இந்த விசயத்தை மொத்தமாக பொருளாதார இலாபத்தை மனதில் வைத்து அனுகவேண்டும். எந்த ஒரு தொழில் நுட்ப சோதனையிலும் ஆபத்து கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். நாம் ஆபத்தில்லாமல் எந்த ஒரு தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அடையமுடியாது. நாம் அபாயங்களை குறைக்க மட்டுமே முடியும்”. பீகாரின் முதலமைச்சர் ரேடியோவில் இந்த முறை – மிக்கை செவினாக மாற்றுவது – மிகவும் பாதுகாப்பனதும், மற்றும் சாத்தியமான ஒன்று என்று மக்களுக்கு நம்பிக்கையளித்துக்கொண்டிருந்தார். ஏனென்றால் இந்த செயல் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை பயன்படுத்தி எந்தவித பக்கவிளைவுகளும் சேதமும் தீங்கும் இல்லாமல் மிகவும் கவனமாக செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.
பாதுகாப்பு வழிமுறைகள் என்று சொல்லப்படுவது ஆறு வெவ்வேறான பாதுகாப்பு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த ஆறு பாதுகாப்பு அம்சங்களில் ஐந்து பாதுகாப்பு அம்சங்கள் டிசம்பர் மூன்றாம் தேதி வேலைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால் இந்த முறை அவை ஆறும் நன்றாக வேலை செய்கின்றன -தொடர்ந்து வேலை செய்யும் – என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் இவை எப்பொழுதும் -டிசம்பர் மூன்றாம் தேதிகூட – ஒழுங்காக வேலை செய்துகொண்டுதான் இருந்திருக்கும், இதற்கு பொறுப்பானவர்கள் நினைத்திருந்தால். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளையும் கட்டுக்குள் கொண்டுவர, ஒழுங்காக வேலை செய்யவைக்க அவர்களுக்கு கொஞ்சநாட்கள் தான் பிடித்தது. இந்த ஐந்து பாதுகாப்பு அம்சங்களுடன், ஆறாவது அம்சமாக ஒன்று சேர்க்கப்பட்டது, அது : இவை அனைத்தையும் மீறி இதை செயல்படுத்தும் நாளன்று ஏதேனும் தவறு ஏற்பட்டால், தண்ணீர் தெளிக்க ஹெலிகாப்டர்கள் தயாராக நிறுத்தப்படும்.
டிசம்பர் பதினாறாம் தேதி, மிக்கை நீர்த்தப்படுத்தும் முயற்சிக்கு உறுதுனையாகவும், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கமும், இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட UCIL -ன் ஐந்து சீனியர் அலுவலர்கள் விடுவிக்கப்பட்டனர். அமெரிக்க தொழில்நுட்ப ஆலோசர்கள் தொழிற்சாலைக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது, ஏனென்றால் அவர்கள் சாட்சியங்களை கலைத்து விடக்கூடும். ஆனால் அவர்களில் ஒருவர், அலோசனைகள் வழங்குவதற்கு, ஆபரேசன் ·பெயித் (Operation Faith) குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்த முறை எந்த தவறும் நடக்கவில்லை. மிக் வெற்றிகரமாக நீர்த்தப்படுத்தப்பட்ட பின்னர் மக்கள் போப்பாலுக்கு திரும்பி வரத் துடங்கினர். ஆனால் பொது மக்களின் தலைகளில் பல கேள்விகள் இருந்து கொண்டுதான் இருந்தன. இந்த நீர்த்தப்படுத்தும் செயல் மூலம் தயாரிக்கப்பட்ட செவினின் ரூபாய் மதிப்பு இரண்டரைக் கோடி. ஆனால் உற்பத்தி செய்யப்பட்ட செவின் என்னவாயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை. அது பரிமுதல் செய்யப்பட்டதா இல்லை சந்தையில் விற்கப்பட்டதா? ஆபரேஷன் ·பெயித் செய்லபடுத்தப்படுவதற்கு பொதுப் பணம் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், இதன் மூலம் அடையப்பெற்ற இலாபம் என்ன ஆனது? அந்த இரண்டரைக்கோடி எங்கே சென்றது?
ஆபரேஷன் ·பெயித் நிறைய நிறைய நோக்கங்களைக் கொண்டது. அது மாநில அரசின் மக்களைக்-காக்கும் வேஷத்தை செவ்வனே பூர்த்தி செய்தது. மிகப்பெரிய வேலையை நாங்கள் எந்த விளைவுகளும் இன்றி செய்து விட்டோம் என்று தம்பட்டம் அடிக்க வழி செய்தது. பாருங்கள் எங்கள் தொழிற்சாலையில் எந்தவித கோளாறும் இல்லை என்று UCC சொல்வதற்கு இது வாய்ப்பளித்தது. இந்த தொழிற்சாலை செவின் உற்பத்தி செய்வதற்காக கட்டப்பட்டது. அது எந்தவித பிரச்சனையும் இன்றி செய்யமுடிகிறது. நீங்களே பார்த்தீர்கள். தவறு எங்கே நடந்தது என்றால் இயந்திரங்களை இயக்குவதில் தான் இருக்கிறது. இயந்திரங்களை இயக்குவது இந்திய அதிகாரிகள் (UCIL) கையில் இருக்கிறது – என்று UCC கூறுவதற்கு இந்த செயல் வாய்ப்பளித்தது. மேலும் மத்திய அரசு, மற்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு இதன் மூலம் நல்ல சமிக்ஞை அளிக்க முடிந்தது. இந்திய அரசு வெளிநாட்டு முதலீட்டை எந்தக்காரணம் கொண்டும் இழக்கத் தயாராக இல்லை.
கடைசியில் இந்த செயல் அனைவருக்கும் ஒரு திடமளித்தது – அரசுக்கு, தொழிற்சாலைகளுக்கு, அதிகாரிகளுக்கு. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதனால் ஒரு துளி இலாபம் கூட கிடையாது. வேறு வழியில், மற்றுமொறு துயர சம்பம், இதே போல், பின்னாளில் நடந்தேறுவதற்கு அடித்தளமாக இந்த செயல் அமைந்தது.
பாதிக்கப்பட்ட மக்களில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு மக்கள் மிக ஏழை குடும்பத்திலிருந்து வந்தவர்கள், அவர்கள் தொழிற்சாலைக்கு மிக அருகில் வசித்தவர்கள். கிட்டத்தட்ட எல்லா குடும்பங்களிலும், இந்தப் படத்தில் இருப்பதைப் போல, வாழ்க்கை முழுவதும் ஊனமாக இருக்கப்போகிற ஏதேனும் ஒருவர் இருக்கிறார்.
மார்ச் 29 1985
இந்த துயரச்சம்பவம் நடந்தேறிய உடனே, போப்பல் பல பணம்பறிக்கும் கும்பல்களுக்கு புகழிடமாக அமைந்தது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு, உலகத்தின் மிகப்பெரிய வழக்கில், மிகப்பெரிய ஒரு இழப்பீட்டுத் தொகையை பெற்றுத்தர வந்திருக்கும், வழக்கறிஞ்கர்களை சந்திக்க போப்பால் தயாராகவே இல்லை. பெற்றுத்தரும் இழப்பீட்டுத் தொகையில் 33 விழுக்காடு சம்பளம். அயிரக்கணக்கான பெருவிரல் ரேகைகளை கையில் வைத்துக்கொண்டு, அவர்கள் 186,000 வழக்குகளை, பல அமெரிக்க மாவட்டங்களில் பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை இந்த “ambulance chasers” -களிடமிருந்து (ஆம். இந்த வழக்கறிஞர்கள் அமெரிக்காவில் இப்படித்தான் அழைக்கப்பட்டனர்!) காப்பாற்ற இந்திய அரசு 29 மார்ச் அன்று ஒரு சட்டம் இயற்றியது. அது Bhopal Gas Leak Disaster (Processing of Claims) Act என்பதாகும். இந்த சட்டம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின் -மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிறாக ஒன்றும் செய்ய இயலாதவர்கள் – சார்பாக அரசு வாதாட -வழக்கு பதிவு செய்ய – வாய்ப்பளித்தது.
(தொடரும். அதிவிரைவில்!)
மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
I thought you are working on traslating the entire book. ???
LikeLike
bharani:welcome. yes i am translating the entire book. but releasing patch by patch..:)
LikeLike