ஏப்ரல் 8 1985
ஏப்ரல் 8 1985 அன்று இந்திய அரசாங்கம் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனுக்கு எதிராக நியுயார்க் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் நடந்த பேரிடருக்கு UCC -யே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. குற்றம் நான்கு அம்சங்களைக்கொண்டது : உருப்படாத திட்டம், பழுதடைந்த தொழில்நுட்பம், பயிற்சியின்மை மற்றும் தொழிற்சாலையில் முறையான மேற்பார்வையின்மை.
அமேரிக்காவுக்கு இந்த வழக்கை எடுத்துச்சென்றதில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை – அமேரிக்காவவுக்கு இதேபோல் பேரிடர்களில் இருக்கும் அனுபவம். இவ்வாறான சுற்றுச்சூழல் அழிவுக்கு வழிவகுத்த பேரிடர்களுக்கு எதிராக அவர்களது சட்டம் கடுமையாக இருப்பதும், இதைப் பயன்படுத்தி ஒரு நல்ல மிகப் பெரிய இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம் என்பதை மறுக்கமுடியாது. மேலும் போப்பால் பேரிடர் உலகம் முழுதும் பாதிப்புகள் ஏற்படுத்தக்கூடிய சர்வதேசவிஷயமாக கருதப்பட்டது, அதனால் ஒரு சர்வதேசச்சந்தை இந்தியாவுக்கு தேவைப்பட்டது. வாரன் ஆன்டர்சன் (Warren Anderson) கூட ஒரு சந்தர்ப்பத்தில் “போப்பால் உலகத்தையே மாற்றிவிட்டது, அமேரிக்காவையும் வேறு தொழிற்சாலைகளும் இனி தானகவே மாறிவிடும்” என்று ஒத்துக்கொண்டார். இது இனி அமெரிக்கா இரட்டை தரம் (நியதி) – முதல் நியதி அவர்களுக்கு, இரண்டாவது அவர்கள் அல்லாத ஆனால் அவர்கள் தொழிற்தொடங்கியிருக்கும் மற்ற நாடுகளில், சொல்லப்போனால் இன்னும் முன்னேறாத நாடுகளில் – வைத்துக்கொள்ள முடியாதபடி பார்த்துக்கொள்வதற்கு – உறுதிசெய்துகொள்ள – ஒரு வாய்ப்பளித்தாய் இருந்தது.
ஒரு நல்ல சிறந்த தீர்ப்பையே அனைவரும் எதிர்பார்த்தனர். எது நடந்ததோ அது நடந்து விட்டது அதை மாற்ற முடியாது, ஆனால் குறைந்தபட்சம் இதன் மூலம் கண்டறியப்பட்ட படிப்பினைகளை உலகத்தின் கவனத்துக் கொண்டுவரும் முயற்சியாக இந்த வழக்கு இருக்கும் என்று நம்பப்பட்டது. அமேரிக்க மக்களின் கவனத்துக்கு இந்த வழக்கை கொண்டுவருவதன் மூலம் அவர்களது வாழ்க்கையும் எவ்வளவு அபாயங்களுக்கு மத்தியில் இருக்கிறது -போப்பால் மக்களைப் போல- என்பதையும் அவர்களுக்கு உணரச்செய்யலாம்.
ஆனால் UCC -யின் எதிர்வினையோ இந்த நீதிமன்றம் வசதியற்றதாய் இருக்கிறது என்பதாய் இருந்தது. அமெரிக்கர்களின் வரிப்பணமும் பொன்னான நேரமும் தேவையில்லாத ஒரு வழக்கில் -அதுவும் எங்கோ இருக்கும் ஒரு நாட்டில் ஏற்பட்டதொரு பேரிடரை- அநியாயத்துக்கு வீணடிக்கப்படுகிறது என்று கூறினர். மேலும் அவர்கள் சாட்சிகள் அனைத்தும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஆங்கிலமும் தெரியாது என்றும் சாட்சியங்களோ போப்பாலில் இருக்கிறது என்பதால் வழக்கை தள்ளுபடி செய்ய அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இறந்த 20000 மக்கள் சார்பாகவோ, நிரந்தரமாக வாழ்க்கைமுழுதும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும், அதிகாரபூர்வமாக எந்த நினைவுச்சின்னமும் வைக்கப்படவில்லை. தாயும் சேயும் இருக்கிற இந்த சிலை ருத் வாட்டர்மேன் (Ruth Watermann) என்பவரால் போப்பாலில் இருக்கும் கார்ப்பைடு தொழிற்சாலையின் வாசலில் வைக்கப்பட்டது.
டிசம்பர் 3 1985
ஒரு வருடம் கழித்து. நகரமே மிகுந்த கோபத்தில் இருந்தது. காலையில் மக்கள் கோவிலிலும், மசூதியிலும், தேவாலையங்களிலும் வணங்கினர். ஆனால் பிறகு பல தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட மக்களும் கண்டன ஆர்ப்பட்டங்களிலும் தர்னாவிலும் ஈடுபட்டனர். வாரன் ஆன்டர்சனின் உருவபொம்மைகள் தெருவெங்கும் கொழுத்தப்பட்டன. தொழிற்சாலையை சூறையாடவும் தீவைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களும் தர்னாக்களும் ஒரு குறியீடாக மட்டுமே இருந்தன, இதனால் அவர்கள் பெரிதாக எந்த லாபத்தையும் அடையவில்லை.
ஆனால், இந்த நாள், இதை விட ஒரு முக்கியமான சம்பவத்தை தன்னுள்ளே அடக்கிக்கொண்டிருந்தது. கடைசியாக 1.8 மில்லியன் டாலர் இழப்பீட்டுத்தொகை கொடுப்பது என்று முடிவு -UCIL- செய்யப்பட்டது. மேலும் அட்குறைப்பு செய்யப்பட்டது, தொடர்ந்து தொழிற்சாலையே மூடப்பட்டது.
ஒரு தொழிற்சாலையில் விபத்து நடந்தால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் வெவ்வேறு வகையைச் சார்ந்தவர்களாக இருப்பர். வேலையிழந்தவர்கள். வேலை செய்யமுடியாதவர்கள். வாயு கசவுக்குப்பின் வேலையிழந்தவர்கள் இருந்தனர். இன்னும் சிலர், காயங்கள் அவர்களை ஊனப்படுத்தி இனி வாழ்க்கையிலே என்றும் கடினமான வேலை செய்யமுடியாதவாறு செய்திருப்பதை, நாளடைவில் கண்டனர்.
யாரைக்குறை சொல்வது என்பதைக்கூட இந்தமாதிரியான பேரிடர்கள் குழப்பிவிடுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை எல்லோரும் கைவிட்டபிறகு, அவர்கள் யார்மீது கோபப்படுவார்கள்? ஆண்டுகள் பறந்து கொண்டிருந்தன, ஒவ்வொரு ஆண்டு நினைவின் போதும், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் யாரும் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தாமல் -ஏற்படுத்த முயற்சிக்காமல்- இருக்கும் போது, அவர்களுடைய கோபம் வாரன் ஆன்டர்சன் மேலிருந்து முதலமைச்சர், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் மேல் திரும்பியது.
அதேசமயத்தில் மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக என்ன செய்துகொண்டிருந்தது? மறுவாழ்வுக்கான போர்டுகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு தெருமுனையிலும், விளம்பர போர்டுகளில், அன்று பிரதமமந்திரியாக இருந்த ராஜீவ்காந்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கே முதலுரிமை என்று சொல்லியவாறு கையசைத்து சிரித்துக்கொண்டிருந்தார். அரசு தயாரித்த திட்டங்கள், விளம்பரங்கள் மூலம் தினசரிகளில் திணிக்கப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் மேலிருந்த பார்வை நாளடைவில் மாறத்தொடங்கியது. பாதிக்கப்பட்டவர்களை எதிரிகளாக பொதுமக்கள் பார்க்கத்தொடங்கினர். அவர்கள் தான் இழப்பீட்டு தொகை கேட்டு சுரண்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டப்பட்டனர். இழப்பீட்டு தொகை வழங்கப்படும் இடங்களில் இருக்கும் அதிகாரிகள் மக்களுக்கு ஆதரவாக இல்லாமல் அவர்களை குற்றம்சாட்டுபவர்களாக இருந்தனர்.
கிட்டத்தட்ட எல்லா சட்டபத்திரிக்கைகளிலும் இழப்பீட்டுத் தொகை என்பது ஒரு அசிங்கமான வார்த்தையாக உருப்பெற்றது, இழப்பீட்டுத்தொகையை வழங்கப்போவது என்னவோ வேறுயாரோ. இழப்பீட்டுத் தொகை வழங்கப்போவது UCC தான் என்பதை அனைவரும் மறந்திருந்தனர் -மறக்கடிப்பட்டிருந்தனர். 20000 மக்கள் UCC-யின் கவனக்குறைவால் கொல்லப்பட்டிருந்த உண்மையை அனைவரும் மறந்திருந்தனர். 300,000 போப்பால் மக்கள் மீண்டு வரமுடியாத துயரங்களில் சிக்கிக் தவித்துக்கொண்டிருப்பதை அனைவரும் சிறிது சிறிதாக மறந்து கொண்டிருந்தனர்.
(தொடரும். அதிவிரைவில்!)
மற்ற பாகங்கள் : தொடர்கள் தலைப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.