நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.
மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.
***
மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.
பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.
நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.
***
திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.
ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.
***