படம். புத்தகம். நியூஸ். கா·பி.

(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )

Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த பேரணிகள் (இந்தியாவில், கேரளாவில் கூட!) என்னை வியப்பில் ஆழ்த்தின. அவரை எதிர்த்து அன்று பேரணியில் பங்கு பெற்றவர்கள், அவருடைய நாவல்களை வாசித்திருப்பார்களா என்ற எண்ணம் என்னுள் எழுந்ததை, இங்கே நான் சொல்லியாகவேண்டும். வாசித்திருப்பார்களா? என்ன நாவல் வாசித்திருப்பார்கள்? Satanic Versus? Shame? Fury? Midnight’s Children? The Ground Beneath Her Feet? கடைசில இன்னொரு சாய்ஸ் All Of The Above? கண்டிப்பாக படித்திருக்கமாட்டார்கள் என்றே, நான் நினைக்கிறேன். அப்படியிருக்க ஏன் இத்தனை பேர் பேரணியில் பங்கு பெற்றார்கள்? யாரோ சொல்கிறார்கள் -சிறிதும் யோசிக்காமல், சற்றும் ஆராயாமல் – நாம் அவர்களின் கூத்துக்கு, like a puppet dancing to the strings (of politicians, religious gurus and cinema celebs), சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கிறோம்.

நான், இதுவரை சல்மான் ருஷ்டி எழுதிய ஒரே ஒரு நாவலைத்தான் படித்திருக்கிறேன், அது – The Ground Beneath Her Feet. அது ஒரு பிரமாதமான நாவல். I just loved the way he narrated. அவரைப் போல யாராலும் சீரியசாக காமெடி (அல்லது கேலி!) செய்ய முடியாது. சில விசயங்களில் அவர் என்னைப் போல, பட்டப்பெயர் வைபப்தில்!. கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் பெயர் வைப்பார், தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு பட்டப்பெயரும் வைத்துவிடுவார். பிறகு அந்தக்கதாப்பாத்திரத்துக்கு நாவல் தோறும் அதே பட்டப்பெயர் தான். நமக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரே மறந்துபோயிவிடும். Like Reverend Mother.

போனவாரம் தான் The Midnight’s Children படிக்க ஆரம்பித்தேன். என் deskஇல் இந்தப்புத்தகத்தைப் பார்த்த என்னுடைய boss, இதையா படிக்கிறாய்? 25 பக்கங்களைக்கூட உன்னால் படிக்க முடியாது. You will shoot that guy என்றார். நான் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு Salman Rushdieஐப் பிடிக்குமே என்று மட்டும் தான் சொன்னேன்.

ஆனால் அவர் சொன்னது உண்மை என்பதை மறுக்கமுடியாது. 25பக்கங்கள் என்ன, என்னால் 15 பக்கங்களைக்கூட தாண்ட முடியவில்லை. I just cant stand that “perforated sheet”. what a stupid and cruel imagination? எப்படி இப்படி யோசிக்கறார்? Captivity படத்தில் அந்த juice (அதாங்க கண்,காது,மூக்கு மற்றும் இத்தியாதிகள்!) கூட இப்படித்தான், எப்படி இவர்களால் இப்படி யோசிக்கமுடிகிறது? இது ஒருவகையான torture என்றால், perforated sheet வேறு வகையான torture. அது என்ன Perforated Sheet?

Perforated Sheet என்றால் ஓட்டை இருக்கிற துணி என்று அர்த்தம். கதையின் ஹீரோவின் தாத்தா காஷ்மீரில் ஒரு டாக்டர். அவர் அப்பொழுதுதான் தனது practiceஐ அந்த ஊரில் ஆரம்பித்திருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகளுக்கு நோய் கண்டவுடன், அந்த செல்வந்தர் தனது ஆஸ்தான மருத்துவர் வராததால் (அல்லது வேண்டுமென்றே!), ஹீரோவின் தாத்தாவை அழைக்கிறார். செல்வந்தரின் மகளுக்கு (Reverend Mother!) இரண்டு மூன்று செக்யூரிட்டிகள் (பெண்கள்!) இருக்கிறார்கள். டாக்டர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைகிறார். அந்த பெண் ஒரு துணிக்கு அப்பால் இருக்கிறார். துணியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதிர்ந்த டாக்டர், நோயாளி இப்படி துணிக்கு பின்னால் இருந்தால், நான் எப்படி பரிசோதிப்பது என்கிறார். அதற்கு அந்த தந்தை சொல்கிறார், அதற்கு தான் ஓட்டை வைத்திருக்கிறோமே! அவளுக்கு எந்த எந்த பாகங்களில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த அந்த பாகங்களை இந்த ஓட்டையில் வைப்பாள், நீங்கள் அந்தந்த பாகங்களை பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து கொடுக்கலாம்! வஞ்சனையில்லாம் அந்த பெண்ணுக்கு மாற்றி மாற்றி எல்லா பாகங்களிலும் நோய் வருகிறது. டாக்டரும் பரிசோதிக்கிறார். டாக்டர்கள் பெண்களைத் தொட்டு பரிசோதிப்பது, அவர்களது தொழில். ஆனால் அந்த அந்த பாகங்களை ஓட்டையில் வைத்துப் பரிசோதிப்பது தான், Cruel Imagination!

ஆனால் சில வாக்கியங்கள் எனக்கு பிடிக்கவே செய்தது. Reverend Motherக்கும் டாக்டருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் (ஒரு கிரிமினல் கவிஞரை வீட்டில் ஒளித்துவைத்ததற்கு), டாக்டர் “வாயை மூடு!” என்று சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்து, அந்த Reverend Mother, யாருடனும் பேசுவதில்லை. ஏற்கனவே கணத்துப்போயிருந்த அவரது உடல், இப்பொழுது யாருடனும் பேசாமல் இருக்கும் பொழுது, மேலும் மேலும் வேகமாக இன்னும் அதிகமாக, கணமாகிக்கொண்டே போனது. அவர் பேசாமல் தன்னுள்ளே அடைத்துவைத்துருக்கும் வார்த்தைகள், அவரை ஊதி பெரிதாக்கின.

Mumtaz noticed with concern that her mother was swelling, month by month. The unspoken words inside her were blowing her up

***

Midnight’s Childrenஐத் தூக்கிப்போட்டுவிட்டு (ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு,இதுல இது வேறையா!), Orhan Pamuk எழுதிய Istanbul Momories of a city படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தப்பிறகு தான் தெரிந்தது அது ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நாவல் போன்றது அல்ல என்பது. ரசித்து படிக்க வேண்டிய ஒன்று. எனக்கு Orhan Pamukக்கின் அந்த எளிமையான நடை பிடித்திருக்கிறது, அவ்வப்போது பளீரென மின்னல் போல வெளிப்படும் சிறு சிறு நகைச்சுவையும். இப்போதைக்கு மூன்று chapters மட்டுமே படித்திருக்கிறேன்.

***

பிறகு என்ன படிப்பது என்று தெரியாமல், 1001 books you must readஐப் பார்த்து, Philip Roth எழுதிய, The Plot Against America படிக்க ஆரம்பித்தேன். என்னால் படிக்கமுடியவில்லை. இரண்டு chaptersலையே நாக்கு வெளியே தள்ளிருச்சு. அவ்ளோ பெரிய பெரிய வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருந்தது. So, அதையும் கடாசிவிட்டு, வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். (அப்பொழுதுதான், பிரச்சனை நாவல்களில் அல்ல, என்னுடைய மூட் தான் சரியில்லை என்பது தெரிந்தது!In Cold Blood படித்துமுடித்தபிறகு கடந்த மூன்று வாரங்களாக ஒரு சில பக்கங்களை மட்டுமே படித்திருக்கிறேன்.) அப்பொழுதுதான் Libraryஇல் The Magic Of Thinking Big கண்ணில் பட்டது. கொஞ்ச காலத்துக்கு நாவல்களை தள்ளிவைத்துவிட்டு, self-help படிக்கலாம் என்றிருக்கிறேன். Lets see how it helps!

***

என்னுடைய நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள் (Comrades!) ஆகிவிட்டோம், மிக குறுகிய காலத்தில். எனக்கும் அவருக்கு நிறைய விசயங்கள் sync ஆகின்றன. என்னைப் போலவே அவருக்கும் மூன்று விசயங்கள் ரொம்பப்பிடிக்கும், புத்தகம். மூவீஸ். கா·பி.
ஒரு நாள் Bordersக்கு வெளியே அமர்ந்து, CoffeeBean கா·பியை (கா·பியை விட்டுவிடுகிறேன் என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரு ·ப்ரண்டிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இந்தக் பாழாய்ப்போன கா·பியை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.கண்டிப்பாக மிக விரைவில் விட்டுவிடுவேன்.) ரசித்துக்குடித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரதீபா பாட்டில் பற்றி பேச்சு வந்தது. அவர் இப்போ ஜனாதிபதி. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உண்மையிலே, மனதைத் தொட்டு சொல்லுங்கள், இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவி என்ற ஒன்று தேவைதானா? அவர்களுக்கு இவ்ளோ பெரிய அரண்மனையும், இவ்ளோ வேலையாட்களும் தேவைதானா? இதற்கும் ப்ரிட்டிஷ் ராஜ வம்சத்திற்கும் என்ன வித்தியாசம்? சரி அது ஒரு கவுரமான பதவி என்று வைத்துக்கொண்டால், அதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? போன்ற கணக்கிலடங்கா கேள்விகள் தீர்ந்து போன எங்கள் கா·பிக்கோப்பையை நிரப்பிக்கொண்டிருந்தன. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் அவரைப்பற்றி தினமும் ஒரு செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், இப்பொழுது ஏன் அவரைப் பற்றி ஒரு செய்தியும் வெளியிடுவதில்லை? அவர்கள் எங்கே போனார்கள்? அப்படியானால், அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யா? இதனால் தான் பத்திரிக்கை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நீங்களும் உங்கள் கருத்துச்சுதந்திரமும், பிறகு மிகப்பெரிய மண்ணாங்கட்டியும். எல்லாம் சந்தர்ப்பவாதம். (கொஞ்சம் யோசித்தால் சமீபத்தில் நடந்த எத்தனை பயங்கரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று விளங்கும்.) இப்போ சமீபத்தில் ஆந்திரா-முடிகொண்டாவில் நடந்த துப்பாக்கிசூட்டை இன்னும் எத்தனை நாட்கள் பத்திரிக்கைகள் ஞாபகத்தில் வைத்து follow-up செய்கின்றன என்று பார்ப்போம்.

***

பத்திரிக்கை சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த அன்று தான், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அதன் வலிமையையும் (the power of investigative journalism) கச்சிதமாக உணர்த்தும் All the presidents men என்றொரு படத்தைப் பார்த்தேன். அமெரிக்க ஜனாதிபதி Nixonஐ பதவி விலக வைத்த இரு பத்திரிக்கை நிருபர்களைப் (Bob Woodward மற்றும்
Carl Bernstein) பற்றிய படம் இது. (கடைசி வரைக்கும் நிக்சன் தான் ஊழல் –Watergate Scandal– செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால் ஊழல் செய்தவராக கருதப்படுகிறார்!)

இந்த investigationஐ இந்த இரண்டு நிருபர்கள் தான் செய்திருந்தனர் என்ற பொழுதிலும், இதற்கு பெரிதும் துணையாகவும், ஊக்கமாகவும், தூண்டுகோலகாவும் இருந்தது, The Washington Postஇன் Executive Editor, BenBradlee தான். நாடு முழுவதும் இந்த இரு ரிப்போர்ட்டர்களை நம்பாமல் (அல்லது நம்ப விரும்பாமல்!) இருந்த பொழுது, WhiteHouse மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கை செய்தபொழுதும், “I am going to stick with the boys!” என்று சொல்லி உண்மையை வெளிக்கொண்டுவந்தவர்.

இந்த investigationஐ முடித்தவுடன் Bob Woodward மற்றும் Carl Bernstein, நடந்த சம்பவங்களைத் தொகுத்து All the presidents men என்ற புத்தகமாக வெளியிட்டனர். புலிட்சர் பரிசு (1973) பெற்ற இந்த Non-Fiction புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான் All the presidents men என்ற திரைப்படம். An excellent movie. எனக்கு படங்களைப் பார்த்து முடித்தவுடன் அந்தப்படத்தில் வரும் ஹீரோ போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். For Example, காக்க காக்க பார்த்த பிறகு அசிஸ்டண்ட் கமிஷ்னர் (அதுவும் பாருங்கள், கமிஷ்னர் வேண்டாமாம். அசிஸ்டண்ட் கமிஷ்னர் தான் வேண்டுமாம்!) ஆக வேண்டும் என்று சீரியஸாக யோசித்தேன். படம் பார்த்துவிட்டு வந்து மறு நாள் காலையில் எழுந்து தன்டால் அடித்தது (இரண்டு நாட்களுக்கு மட்டுமே!) நினைவிருக்கிறது. என் நண்பர் தனக்கும் இதே போல ஒரு wierd behaviour இருப்பதை ஒத்துக்கொண்டபிறகு தான் எனக்கு ஓகே கூல் (நிறைய பேர் இப்படித்தான் இருக்காய்ங்க!) என்று தோன்றியது.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. Investigative Journalism. தமிழ்நாட்டில் நிறைய விசயத்தை investigate செய்யலாம். Like த்ரிஷாவை வைத்து விஜயும் அஜீத்தும் கில்லி ஆடுகிறார்களா? அதைத்தானே இங்கு investivative journalism செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்? இதுவா Investigative Journalism? இதை Paparazzi என்றல்லவா சொல்வார்கள்.

***

காந்தம்-9

முன்னும் பின்னும்.
4

இரவு வெக்கையாக இருந்தது. காற்று கொஞ்சம் கூட இல்லை. அந்த மொட்டைமலையில் இருந்த ஒற்றை ஆலமரம் என்ன செய்வதென்று தெரியாமல், தனக்கு கீழே குழுமியிருந்த சிறுவர்களை எரிச்சலோடு பார்த்தது. இன்றைக்கும் தூக்கம் போச்சா என்று அது நினைத்துக்கொண்டது போல.சிறுவர்கள் பல வயதில் இருந்தனர். ஒரு சில பெரிய பையன்கள் கூட அந்த கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் எல்லோரும் எதையோ எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தனர். அவர்கள் குழுமியிருந்த இடத்தில் நடுநாயகமாக சுள்ளிகளால் தீ மூட்டப்பட்டிருந்தது. அந்த தீ மிக மெதுவாக எரிந்துகொண்டிருந்தது. சிலர் கொண்டுவந்திருந்த சாக்கு பைகளை விரித்து படுத்து வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எண்ணுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தனர். அவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த சிலர் பாதியிலே எண்களை மறந்து விட்டு என்ன செய்வதென்று தெரியாமல் நேற்று பார்த்த நட்சத்திரம் இன்றும் அதே இடத்தில் இருக்கிறதா என்று தேடத்துடங்கினர். கூட்டத்திலிருந்து காளி எழுந்தான்.

படுத்துக்கொண்டிருந்தவர்கள் எழுந்து உட்கார்ந்து கொண்டார்கள். எல்லோரும் காளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். “என்ன படம்டா காளி? மகிழன் நடிச்ச படமா?” “இல்லை” “பின்ன?” “கணேசனா?” “ம்ம்” “பொறு பொறு நாஞ்சொல்றேன்” “ம்ம்” “மனோகரா.சரியா?” “இல்ல” “பின்ன?” “நடிக்கறத பார். பிறகு சொல்லு”

காளி குரலை கணைத்துக்கொண்டான். ஏதோ சண்டைக்கு தயாராக நிற்பவன் போல விரைத்து நின்றான். அவன் முகம் பரவசம் அடைந்தது போல இருந்தது.

“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?” “பராசக்தி டா. எனக்கு தெரியும். எனக்கு தெரியும்.” என்று கத்தினான் ஒருவன். கொஞ்சம் வளர்ந்திருந்த சிறுவர்கள் அவன் தலையில் நங்கென்று ஒரு குட்டு வைத்தனர், “சும்மா பாருடா அவசரக்குடுக்க” அவன் தலையைத் தடவிக்கொண்டே உட்கார்ந்தான். அவன் குட்டியவனை இரண்டுமுறை திரும்பி முறைத்தான்.


“சிங்கத்திருநாடே நீ சிலந்திக்காடாய் மாறியது எப்போது?
வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே..நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாள்களாக?
வீரப்பெண்களின் ஏடுகளை எழுதி எழுதி ஏற்றம் பெற்ற என்னருமைப் பொன்னாடே நீ வீதிகளிலே விபச்சாரிகளைத் திரியவிட்டு உன் விழிகளை மூடிக்கொண்டது ஏன்? ஏன்?
வானத்தை முட்டும் மாளிகைகள்! மானத்தை இழந்த மனிதர்கள்! உயர்ந்த கோபுரங்கள்! தாழ்ந்த உள்ளங்கள்!”

காளி கைகளை அசைத்து வீராவேசமாக பேச கூட்டம் ஆழ்ந்து ரசித்துக்கொண்டிருந்தது. சில சிறுவர்கள் கைத்தட்டிக்கொண்டனர்.

“நான் கோயிலிலே குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக.
பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷமாகி விட்டதை கண்டிப்பதற்காக.”

காளி தலையை தாழ்த்தி எறிந்து கொண்டிருந்த நெருப்பையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். அனைவரும் அமைதியாய் இருந்தனர்.

“பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பகதி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள்..ஓடினாள்..வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”

கைதட்டல் காதைப்பிளந்தது. அருகிலிருந்த மரத்திலிருந்த சிறுசிறு பறவைகள் முழித்துக்கொண்டன. இந்த வசனத்தை காளி நூறாவது முறையாக சொல்வதைக் கேட்ட ஆலமரம் தலையைச் சிலுப்பி தன் கொந்தளிப்பைக் காட்டியது. காற்று மெதுவாக வீசியது. சுள்ளிகள் தீர்ந்துபோய் விட்டமையால் நெருப்பு அணைந்து கரிய புகை மட்டும் மேலெழும்பிக்கொண்டிருந்தது.

தூரத்தில் இருட்டில் முடங்கிக்கிடந்த ஒரு தேசாந்திரி கண்கொட்டாமல் காளியையே பார்த்துக்கொண்டிருந்தார்.

***

ஆல் இந்தியா ரேடியோ. அகில இந்திய வானொலி நிலையம். செய்தி அறிக்கை தொடர்கிறது. காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட திருமதி.இந்திராகாந்தி, இன்று, இந்திரா காங்கிரஸ் என்ற புதிய தேசியக்கட்சியைத் தொடங்கினார். விவசாயத்துறை அமைச்சராக பதவிவகித்த திரு.ஜக்ஜீவன் ராம் இந்திராக காங்கிரஸ¤க்கு தலைவராக நியமிக்கப்பட்டார். நாளை மறுநாள் நடக்கவிருக்கும்..

“ம்ம்..அந்தம்மா தெகிரியமான பொம்பளையப்பா..யாரும் ஒன்னும் —-முடியாது” தனது வேட்டியின் மடிப்பில் ஒளிந்துகொண்டிருந்த பொடிட்டப்பாவை எடுத்து டப் டப் என்று அதன் தலையில் தட்டினார், வேலுச்சாமி. வேலுச்சாமியின் கைகள் மிகவும் மெலிந்திருந்தன. புறங்கையின் நரம்புகள் மிகத்தடிமனான சரடு போல ஓடிக்கொண்டிருந்தன. கைகளில் அடர்த்தியான சுருள்சுருளாக வெள்ளைமுடிகள். கண்கள் மிகவும் சிறுத்து ஒருவிதமான தளர்வோடு இருந்தன. சட்டையணியாத மார்பில் வெள்ளையும் கருப்புமாக முடிகள் மண்டிக்கிடந்தன. தலையில் முடி அடர்த்தியாக, சிறிதளவு கூட எண்ணெய் பார்க்காமல், சிக்காக இருந்தது. குடிக்கத்தண்ணீருக்கே பத்துமைல் தூரம் நடக்கும் போது, தலைக்கு எண்ணெய் முக்கியமா என்ன?

“யேவ், யாரது போறவ? அம்முத்தாயா?” “ம்ம்..ஆமாங் மாமோய். என்ன மாமனுக்கு இப்போத்தான் பொழுது விடிஞ்சுச்சாக்கும்?” “ஏபுள்ள. ….கழுவ தண்ணியில்லீன்னாலும் எகத்தாளத்துக்கு ஒன்னும் கொரச்சல் இருக்காது..எங்க போறவ விடுக்கு விடுக்குன்னு?” “ம்ம்ம்..கலெக்டராபீஸ¤க்கு கையெழுத்துப்போட போறேன் மாமா..வாறியளா?” “அடி……. எங்கடி போறவன்னா எகத்தாளம் கேக்குதா?” “மாமரத்துப்பட்டியில கல்லொடைக்க ஆள் தேடுறாகளாம் மாமோய்..அதான் போறேன்..பிள்ளைங்க வயிறு நிறையனும்ல..இன்னியும் மழைய நம்பி உக்காந்திருக்கமுடியாது மாமோய்..” “ம்ம்..மானம்பாத்து வாயப்பொளந்து கெடக்குற காடுக என்னக்கி மழதண்ணியப்பாக்கப் போதுகளோ தெரியல..போதாயி..போ..பொழப்பபாக்கனும்ல..அதுயாரு கூட ராக்கம்மாவா?” “ஆமா மாமோய்..அவுகளும் கல்லொடைக்கத்தாம் போயிருக்காக..என்னிய வரப்பெடாதுன்னுதான் சொன்னாக..ஹ்ம்..போனா கத்துவாக..நான் போறேன் மாமா” “அதுயாரு காளியா?” “ஆமா மாமா..டேய் காளி தாத்தா கூப்படறாக பாரு போய் என்னான்டு கேளு” “சரி மாமா நாங்க வாறோம். செத்த இந்த பயல பாத்துக்கோங்க..வெயில அலையவிடாதீக..”

காளி வேண்டாவெறுப்பாக நடந்து வந்து, வேலுச்சாமியின் அருகில் நின்றான். ஒன்றும் பேசாமல், என்ன என்பது போல பார்த்தான்.வேலுச்சாமி ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் பார்த்தவர், “மூக்கையன் கடையில போயி கொஞ்சம் பொடி நான் கேட்டேன்னு வாங்கியா..” என்றார். காளி, வேலுச்சாமியில் கையில் இருந்த காலி பொடிட்டப்பாவை வாங்கிக்கொண்டு ஓட்டம்பிடித்தான்.

***

“ம்ம்..மூக்கையன் கடையில இல்ல..அந்த அக்காதான் இருந்தாங்க..இந்தாங்க..” வேலுச்சாமி பொடி டப்பாவை வாங்கிக்கொண்டு, மீண்டும் இரண்டு மூன்றுமுறை அதன் தலையில் தட்டினார், பிறகு நிதானமாக, மூடியைத் திறந்து, பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து லாவகமாக அதிலிருந்து பொடியை இரண்டு விரல்களாலும் எடுத்தார், இரண்டு முறை கையை உதறினார். பிறகு இன்னொரு கையால், பொடி அடைத்து பொடி அடைத்தே பெரிதாகிப்போயிருந்த மூக்கின் வலது புறத்தை அடைத்துக்கொண்டு, இடது புறத்தில் பொடியைத் திணித்து, இரண்டு மூன்று முறை உறிஞ்சினார். காளி அந்த உறிஞ்சலில் தான் ஈர்க்கப்படுவதைப் போல உணர்ந்தான். எதற்கும் பக்கதிலிருந்த தூணைப் பிடித்துக்கொள்வது நல்லது என்று தோன்றியது அவனுக்கு. பிறகு இடதுபுறத்தை அடைத்துக்கொண்டு, வலது புறத்தில், அதே போல, மீதமிருந்த பொடியைத் திணித்து, உறிஞ்சிக்கொண்டார். கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த, காளியை பார்த்து, “என்னடா பாக்குற?” என்றார் சிரித்துக்கொண்டே, இப்பொழுது அவரது குரல் கணமாக இருந்தது போல தோன்றியது காளிக்கு. மீண்டும் வலது புறத்தையும் இடது புறத்தையும் ஒரு தடவை விரல்களால் அடைத்து, விடுவித்தார். பிறகு காளியிடம், “எங்க கைய காட்டு” என்றார். காளி முடியாது என்று மறுத்து ஓடப்பார்த்தான். வேலுச்சாமி லாவகமாக அவனைப் பிடித்து நிறுத்தினார், வலது கையை மடக்கி, அவனை இறுக்கமாக, ஓட விடாமல், பிடித்துக்கொண்டு, நன்றாக இறுக்கமாக மூடியிருந்த இடது கையை விடுவித்தார். உள்ளே கொஞ்சம் மூக்குப் பொடி இருந்தது. அதை தட்டிவிட்டார் வேலுச்சாமி. மூக்குப்பொடி மண்ணோடு கலந்தது. இன்னும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த பொடியை தனது அழுக்கான வேட்டியில் துடைத்துக்கொண்டார். “இந்த வயசில உனக்கு பொடி கேக்குதா?” “இல்ல தாத்தா, சும்மா எப்படி இருக்குன்னு..” “…பயலே..அதுக்கெல்லாம் இன்னும் வயசிருக்குடா..இப்படி உக்கார்”

காளி அங்கிருந்த திண்டில் ஏறி உட்கார்ந்து கொண்டான். சூரியன் உச்சத்திற்கு வந்திருந்தது. வெயில் பளபளத்தது. வெக்கை அந்த மடத்தை வெகுவாக ஆக்கிரமித்திருந்தது. ஆங்காங்கே காக்கைகள் கத்திக்கொண்டிருந்தன. எங்கும் தண்ணீர் வற்றிவிட்ட இந்த ஊரில் ஏன் காக்கைகள் இன்னும் சுற்றிக்கொண்டிருக்கின்றன என்று காளிக்கு புரியவேயில்லை. அந்த சமயம் பார்த்து “நச்” என்று ஒரு தும்மல் வந்தது அவனுக்கு. தும்மல், அந்த மடத்தின் தூண்களில் மோதி, விட்டத்தை அடைந்து, சுவற்றில் அறைந்து, உள்ளே சாந்தமாக, தூசியும் நூலாம்படையும் மண்டிக்கிடந்தும், எழுந்து ஓடாமல், இன்னும் அப்படியே எனக்கென்ன வந்தது என்று, உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரின் துதிக்கையில் பட்டு, வெளியே விழுந்தடித்துக்கொண்டு ஓடியது. தும்மலின் சத்தத்தால், சிறிதும் பாதிக்கப்படாமல், அங்கே உறங்கிக்கொண்டிருந்தனர், சில கடின உழைப்பாளிகள். வெகு சிலர், திரும்பிப்படுத்து, சிறு சலசலப்பை ஏற்படுத்தினர். மற்றபடி எப்பழுதும் போலவே அன்றும், அந்த ஊர் மிகவும் அமைதியாகவே இருந்தது.

காளி சிறுது தூரத்தில், நிலத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த ஒற்றை மாட்டுவண்டியயே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான். மாடு எங்கே சென்றிருக்கும்? அருகில் தேடினான். எங்கும் காணவில்லை. “நல்லா வசனம் பேசுவியாமே?” “ம்ம்..என்ன தாத்தா?” “நல்லா, சத்தமா, கணேசன் மாதிரி அழுத்தமா வசனம் பேசுவியாமே?” “ம்ம்ம்..பேசுவேன்..ஏன் தாத்தா,அந்த ஊர்ல, நாம தண்ணியெடுக்கப்போவமில்ல அந்த ஊர்ல மட்டும் எப்படி தண்ணியிருக்கு?” “ம்ம்” வேலுச்சாமி மடியிலிருந்து பீடி ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டார். வெளியேறிய பீடிப்புகையை அழுத்தமாக சுவாசித்தான் காளி. ஓசி பீடிப்புகை. “எங்க, மனோகரா கணேசன் மாதிரி பேசு பாப்போம்” “ஏன் நாமா நெதமும் அம்புட்டு தூரம் நடக்கனும்? அங்க இருக்குற தண்ணிய வாக்கா போட்டு இங்க கொண்டுவர முடியாதா?” வேலுச்சாமி மெலிதாக இருமினார். வெளியேறிய பீடிப்புகையை, மீண்டும் அழுத்தமாக உறிஞ்சிக்கொண்டான் காளி. “ஏந்தாத்தா முடியாதா?” வேலுச்சாமி கைகளால் காளியின் தலையை வருடினார். “ரொம்ப செலவாகும்டா..ரொம்ப செலவாகும்” “உங்களுக்கு ஒரு கால் எப்படி ஒடஞ்சது? சண்டையிலயா?” “ம்ம்” “வெட்டிட்டாங்களா?” “ம்ம்” “ஐயோ..எப்படி? கத்திய வெச்சா?” “ம்ம்” “எந்த சண்டையில?” “ம்ம்” “ம்ம் எந்த சண்டையில தாத்தா?” “ம்ம்” “துப்பாக்கி வெச்சிருந்திருப்பீங்கல்ல?” “ம்ம்” “பின்ன எப்படி அவங்கள் வெட்டவிட்டீங்க? துப்பாக்கிய வெச்சு சுட்டிருக்கலாம்ல?” “ம்ம்” வேலுச்சாமி மீண்டும் இருமுறை இருமினார். ஒன்றும் பேசாமல் கீழே கிடந்த சற்றே பெரிய கணமான கல்லையே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். “குமார் சொல்றான்..ம்ம்..குமார் சொல்றான்.. உங்க வீட்ல பட்டாளத்துல கொடுத்த துப்பாக்கி வெச்சிருக்கீங்களாம்” “ம்ம்ம்” “நெஜமா வெச்சிருக்கீங்களா?” “ம்ம்” மீண்டும் இருமினார். நெஞ்சை நீவி விட்டுக்கொண்டார். “எனக்கு காட்டுவீங்களா?” “ம்ம்” “போலாமா? இப்பவே?” இறுமினார். “போலாமா?” அமைதி. “தாத்தா கொஞ்ச நேரம் இங்கன உக்காந்திட்டிருக்கேன். நீ போய் வெளையாடு..போ..அப்புறமா போலாம்” “எனக்கு துப்பாக்கி அப்புறமா காட்டுவீங்களா?” “ம்ம்” “சத்தியமா?” “ம்ம்”

காளி எழுந்து, இடது காலை முன் வைத்து, பிறகு வலது காலை மெதுவாக எடுத்துவைத்து, நாட்டியமாடியபடி அழகாக ஓடுவதையே, வேலுச்சாமி பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் சோர்வாக இருந்த அவரது கண்கள், மிகமெதுவாக, மிகமிக மெதுவாக, மீதமிருந்த தன் பாதி வலதுகாலைப் பார்த்தன. தளர்வாக அருகிலிருந்த தூணில் சாய்ந்துகொண்டார். பீடியின் நெருப்பு வெறுமனே எறிந்துகொண்டிருந்தது, அங்கே படர்ந்திருந்த வெயிலைப்போல. வெறும் வெயிலைப் போல.

தூரத்தில், பாறையைத் தகர்க்கும் வெடியின் ஒலி நான்கு திசைகளிலும் பரவி, மிகச் சன்னமாக ஒலித்து அடங்கியது. எங்கோ பெயர் தெரியாத ஒரு பறவை புழுக்கம் தாங்க மாட்டாமல் மெதுவாக ஏதோ சொல்லியது. வேலுச்சாமியின் கண்கள் மூடிக்கொண்டன.

***

காளி யாருமில்லாத ஒரு சந்தில் நுழைந்தான். கூடவே குமார். பூட்டியிருந்த அந்த வீட்டின் வாசலில் அவனும் குமாரும் உட்கார்ந்துகொண்டனர். காளி டவுசர் பையில் கைவிட்டு, ஒரு சிறிய மடிக்கப்பட்டிருந்த தாளை எடுத்தான். உள்ளே அடர் அரக்கு நிரத்தில் கொஞ்சம் மூக்குபொடி. “கையிலயும் கொஞ்சம் வெச்சிருந்தேன், பட்டாளத்துத்தாத்தா பாத்திருச்சு. பட்டாளத்துல இருந்ததில்ல.சும்மாவா” என்று சிரித்துக்கொண்டான் காளி. “கொஞ்சம் போடுடா.தும்மவரும்டா” என்றான் குமார். காளி அவனைக் கண்டுகொள்ளாமல், பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் உபயோகித்து, இலாவகமாக மூக்குப்பொடியை எடுத்து, மூக்கில் வைத்துக்கொண்டான். அவ்வளவுதான். “ஐயோ அம்மா. எறியுதே.” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்” “அச்”

இரண்டு காக்கைகள் காளி தும்முவதையே, அருகிலிருந்த மரத்திலிருந்து வெறித்துக்கொண்டிருந்தன. ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டன.

***

ஓவியம்: ramki

(தொடரும்)

படம். புத்தகம். காபி

நேத்து Fitness-Firstல எடுத்த DVDஐ ரிட்டர்ன் பண்ணப்போ, அந்த ரிஷப்சனிஸ்ட் சொன்னாங்க, “Muthu, first time you are paying fine, isnt it? Else, you are always on time!” அப்படியா?!! இல்லீங்க்கா, நீங்க என்ன ரொம்ப புகழறீங்க, ஒரு தடவையோ அல்லது ரெண்டு தடவையோ தான் நான் ஒழுங்கா டைமுக்கு ரிட்டர்ன் பண்ணிருக்கேன், மத்த எல்லா தடவையும் கண்டிப்பா fine தான். இப்போ புதுசா, Fitness-First Raffles Placeல, அந்தப்பக்கம் ஓரமா கார்னர்ல ஒரு ட்ரட்மில் இருக்குல்ல, அது நான் கட்டின fineல வாங்கினதுதான்னு எல்லாரும் சொல்றாங்க, உங்களுக்கு தெரியுமா?

சொல்லப்போனா இந்தப்படத்தை எடுத்தேனேயொழிய, நான் பார்க்கவேயில்ல. வீட்டுக்கே எடுத்திட்டு போகல. இங்க ஆபீஸ்லயே என் டெஸ்க்லையே வெச்சிட்டு போயிட்டேன். அப்புறம் அது பாட்டுக்கு ஓரமா, எனக்கென்னன்னு உட்கார்ந்திருந்திச்சு, நேத்து என்னோட boss வந்து, DVDஐ எடுத்து படம் எப்படியிருந்துச்சுன்னு கேக்கறவரைக்கும், இந்த DVDஐ நான் மறந்தேபோயிட்டேன். AKEELAH AND THE BEE, தான் அந்த DVD. படம் பார்க்காமலயே ரெண்டு டாலர் fine கட்டினேன். ஞாபகமறதி அதிகமாயிட்டே வருது.

***

என் ப்ரண்ட் அஸ்வின் (சம்மன சாமியார்!) திடீர்னு போன் பண்ணி வாடா இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொல்வான். நாங்க எப்பவும் மீட் பண்ணும் Bordersல தான் இந்த saturdayவும் மீட் பண்ணினோம். வழக்கம் போல சில புத்தகங்களைப் புரட்டினோம். புதுசு புதுசா எழுதிட்டேயிருக்காய்ங்க. Kite Runnerஐ எழுதிய khaled hoseiniயின் Thousand Splendid Suns வந்திருக்கு. அது தான் அடுத்து வாங்கனும். சில புத்தகங்கள், தாமாகவே famous ஆகிவிடும். சில அதன் எழுத்தாளர்களின் புகழால் famous ஆகும், ஆனால் புத்தகத்தில் ஒன்றுமே இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, Catcher In The Rye மிக பிரபலமான புத்தகம். எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகங்களில் ஒன்று. மறுமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இந்தப் புத்தகம் வெளிவந்த பொழுது JDSalinger ஒன்றும் புகழ் பெற்ற எழுத்தாளர் கிடையாது. ஆனால் புத்தகம் Famous ஆனது. ஆனால் JDSalinger எழுதிய வேறொரு புத்தகமான, NineStories, JDSalingerக்காக famous ஆனது. ஆனால் NineStories அப்படி ஒன்றும் நல்ல புத்தகம் இல்லை. இந்த Thousand Splendid Suns, புத்தகம் எந்த வகை என்று தெரியவில்லை. பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எங்கெங்கு காணினும் HarryPotterஅடாங்கறமாதிரி, எல்லா புத்தகக்கடைகளிலும் (SAN’s bookshopல கூட!) குவிந்துகிடக்கிறது, DeathlyHallows. நான் இன்னும் வாங்கவில்லை. ஐம்பது டால்ர்களாமே?! குறையட்டும். மேலும், நான் இன்னும் HalfBlood Prince படித்து முடிக்கவில்லை. அதை படித்துமுடிக்கும் போது, PaperBack வந்துவிடும், விலையும் குறைந்துவிடும். எனக்கு Hard-Cover edition பிடிப்பதேயில்லை. (என்னிடம் எந்த நாவலுக்கும் hard-cover edition இல்லை!) யார் அதை -அவ்வளவு கணமாக- தூக்கிக்கொண்டு அலைவது? ஜெயமோகன் எழுதிய, கொற்றவை நாவலை, கொஞ்ச காலம் படிக்காமல் நிப்பாட்டிவைத்திருப்பதற்கு, ஒரு காரணம், பயமுறுத்தும் அதன் சுத்த தமிழ் உரைநடையாக இருந்தபொழுதிலும், அதன் கணமும் இன்னொரு முக்கிய காரணம் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் பேப்பர் பேக் வருவதேயில்லை. விஷ்ணுபுரத்திற்கோ, கொற்றவைக்கோ பேப்பர்-பேக் வந்துச்சுன்னா, அதன் எடையில் கணிசமான அளவு குறைய வாய்ப்பிருக்கிறது. படுத்துக்கொண்டு ஹாயாக, கையில் பிடித்துக்கொண்டு படிக்கலாம்.

அஸ்வின், ஏனோ RK Narayanan எழுதிய புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்தான். கிடைக்கவில்லை. அப்படியே எங்கயாவது சாப்டுட்டு, வீட்டுக்கு போயிருக்கலாம். படத்துக்கு போகலாம்னு SHAWக்கு போனோம்.

***

என்னோட வாழ்க்கையில, ஒரு சினிமாவுக்கு போயிட்டு, பாதில எழுந்துவந்ததுன்னா ஒரே ஒரு படம் தான். விஜய் நடித்த படம் அது. ரம்பா, தேவயாணி போன்ற நடிகையர் திலகங்களும் அதில நடிச்சிருந்தாங்க. பெயர் என்னன்னு மறந்துபோச்சு. ஆனா படத்தோட கரு ஞாபகம் இருக்கு : விஜயோட கனவில ரம்பா வருவாங்க. கூடவே அவங்களோட மச்சமும். பிறகு எல்லாருமா சேர்ந்து ரம்பாவ தேடிக்கண்டுபிடிப்பாங்க. ஒரு முக்கால்மணி நேரம் பாத்திருப்பேன், எங்க ஊர் மஹாராஜா தியேட்டரில, அப்புறம் விட்டேன் ஜூட். இதில் gate திறக்கமாட்டேன்னு சொன்னாய்ங்க. போடாங்கொய்யாலன்னுட்டு escape ஆகிட்டேன். torture படம்.

அதுக்கப்புறமா, ஓடி வந்ததுன்னா, இந்த சனிக்கிழமை பார்த்த படம் தான். Captivity. நான் உள்ளே போய் பத்து நிமிஷத்தில இதத்தான் நினெச்சேன். நம்ப ராஜ்மோகனையும் (ஜாக்குவார் தங்கம்!) கூட்டிட்டு வந்திருக்கலாமேன்னு. ரத்தத்தப் பார்த்தாலே அலறுகிறவன். இந்தப்படத்தில வரும் ஷ்பெஷல் ஜூஸைப் பார்த்தால் என்ன செய்திருப்பான்னு,எனக்கு ஒரே யோசனை. கண்டிப்பா பின்னங்கால் பிடறியில படற அளவுக்கு ஓடிருப்பான். அது என்ன ஸ்பெஷல் ஜூஸ்? காது, மூக்கு, கண்ணு, நாக்கு போன்ற (அதுக்கப்புறம் என்ன என்ன mix செஞ்சாருன்னு பாக்கல, நான் தான் இறுக்கமா கண்ண மூடிக்கிட்டன்ல!) இத்தியாதிகளை ஒரு மிக்ஸியில் போட்டு, அரைத்து அதை கட்டிப்போடப்பட்டிருக்கும் (கடத்தப்பட்டிருக்கும்!) பெண்ணுக்கு, வாயில் funnelஐ வைத்து ஊத்துவது. அஸ்வின் காதில போய் “மாமா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடல, எஸ்கேப் ஆயிரலாம்டா” ன்னு சொன்னேன், பய ரெடியா ஓகே சொன்னான். starbucks காபி குடித்துக்கொண்டிருந்த எனக்கு, சில சீன்களில், கிட்டத்தட்ட vomit வந்தேவிட்டது. சும்மாவே starbucks காபி அப்படித்தான் இருக்கும்.

***

கொஞ்சம் தலைவலி இருந்ததால, அன்னிக்கு starbucks காபி வாங்கினேன். இப்பவெல்லாம் ஓடு தண்ணி.அவ்ளோ பெரிய கப்புல. (அதையும் நான் குடிச்சிட்டேன்ங்கறது வேறு விசயம்!) அஸ்வின், sugar போடாம வாங்கிட்டு வந்திட்டான். என்னடா sugar போட்டியான்னு கேட்டேன்? என்னது தனியா நாம sugar போடணுமா? குடுக்கற காசுக்கு அவிங்க sugar கூட போட்டுத்தற மாட்டாய்ங்களான்னு அப்பாவியா கேட்டான்!

வாங்கிட்டு வந்திட்டு, seatல உக்காந்து, குடிச்சிட்டு, அவன் கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் குடிச்சுப்பாருடான்னு சொன்னேன். அவன் காபி டீ எதுவும் குடிக்கமாட்டான். அமுல் பேபி. பால் மட்டும் தான் சாப்டுவார். ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி பவுடர் தான் உபயோகிப்பார். என்கிட்டருந்து வாங்கி, காபிய ஒரு மடக்கு குடிச்சான். பிறகு, உரத்த குரலில், என்னடா கழனிதண்ணி (மாட்டுக்கு வெப்பாங்கல்ல!) மாதிரி இருக்குன்னான். எனக்கு முன்னாள் உட்கார்ந்திருந்த ஒரு சைனீஸ் பொண்ணு, அதுக்கு ஏன் நீ மாடு மாதிரி கத்தறங்கறமாதிரி பாத்தா!

வெளில வரும்போது, அவன்கிட்ட கேட்டேன், “ஏன்டா, நீ கழனிதண்ணி குடிச்சிருக்கியா?!”

இந்த தியேட்டருக்கு விதிக்கப்பட்ட சாபம் போல. இந்த தியேட்டரில் (இதே screen!) நான் இன்னொரு படமும் பாத்திருக்கிறேன். Shrek3. அதுவும் torture படம் தான். வேறுவிதமான torture.

***

என் ப்ரண்ட் ராஜ்மோகனுக்கு animation movies எதுவுமே பிடிக்காது. பிடிக்காது என்றால் கொஞ்சம் கூட பார்க்கமாட்டான். ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது, சேனல் மாத்தும் போது, தப்பித்தவறி ஏதாவது ஒரு சேனலில் ஏதாவது ஒரு அனிமேஷன் மூவி ஓடிக்கொண்டிருந்தால் போதும், உடனே அவனிடத்திலிருந்து வரும் கமெண்ட்: “போட்டாங்கடா பொம்மப்படம்!” என்னாது பொம்மப்படமா?

முன்பு, Cars படத்துக்கு அவனை நான் வலுக்கட்டாயமாக கூப்பிட்டேன். எப்படியும் அனிமேஷன் மூவி ஒன்றை, அவனைப் பார்க்கவைத்தே தீருவது என்ற கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருந்தேன். ஏன்னா, அவனும் பாக்கமாட்டான், வீட்ல DVD போட்டாக்கா நம்பளையும் பாக்கவிடமாட்டான். ஏதாவது சொல்லி கேலி பண்ணி நம்பள torture பண்ணுவான், torture. நான் எவ்வளவு கூப்பிட்டும், எவ்வளவு offer பண்ணியும் like, டிக்கெட் போடறேன், பாப்க்கார்ன் வாங்கித்தாரேன், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் வாங்கித்தாரேன், அன்னிக்கு dinner கூட நான் sponser பண்றேன்னு சொல்லியும் வரமாட்டேன்னுட்டான். அவ்வளவு மன உறுதி அவனுக்கு. (இல்லீன்னா, சகிப்புத்தன்மை இல்லீன்னு கூட வெச்சுக்கலாம்!). இந்த முறை Shrek3 க்கு கூப்பிட்டுப் போகலாம் என்றிருந்தேன். நல்லவேலை கூப்பிடல. அவன் வந்திருக்கமாட்டாங்கறது வேற விசயம், ஆனா வந்திருந்தான்னா, இனிமேல் பொம்மப்படமே (அவன் பாஷயில்!) தன் வாழ்நாளில் பார்த்திருக்கமாட்டான். ஆனா, cars படம் ரொம்ப நல்லாயிருந்தது. Superb Movie.

***

என்னுடைய நண்பர் (கேள்வியின் நாயகன்!), முன்பொருமுறை, முன்புன்னா கொஞ்ச மாசத்துக்கு முன்ன, கொடுத்திருந்த ஒரு DVDஐ இன்னும் பார்க்காமல் வெச்சிருந்தோம். ஏன்னா அது DVD-RIP fileங்கறதனால, என்னோட stupid Philiphs DVD Playerல ஓடல. அந்தப்படம் – Stay Alive. இப்ப புதுசா நம்ப ஜாக்குவார் தங்கம் ஒரு DVD player வாங்கியிருக்கார். Panasonic Music System. அதுல என்ன போட்டாலும் ஓடுது. ரொம்பநாளைக்கு முன்ன என்னோட இன்னொரு நண்பர் கொடுத்திருந்த ரெஹ்மான் பாடல் கலெக்ஷன் DVD, எதுலையுமே ஓடல. என்னோட DVD Player, என்னோட laptop, என் ப்ரண்டோட laptopன்னு எதுலையுமே ஓடல. என்னோட ப்ரண்ட், அந்த DVDஐ திருப்பி கேட்டப்போ, போயா போ, ஓடாத DVDஐக் கொடுத்திட்டு திரும்ப வேற கேக்கறையான்னு சொல்லிட்டேன். ஆனா பாருங்க அது -எதுலையுமே ஓடாத அந்த டுபாகூர் DVD கூட – அந்த Panasonic palyerல ஓடுச்சு. அதுதான் சொன்னேன், ஜாக்குவார் தங்கத்துக்கிட்ட, நீ டெய்லி, அமிர்தா ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வாறியே சப்பாத்தி, அதுல பில்லான்னு எழுதி, போட்டீன்னாக்க, தல நடிக்கிற, இன்னும் வெளிவராத, பில்லா படம் கூட ஓடும்டான்னு. அவன் மொறச்சு பாத்தான்.

இந்த Stay Alive படத்த அன்னிக்கு பாக்கறதுக்கு ஒன்னும் இல்லாம, ஓடாதுங்கற நம்பிக்கைல தான் அந்த playerல போட்டேன். ஆச்சரியம், ஓடிருச்சு. அப்புறம் தான் ரொம்ப feel பண்ணோம், பேசாம ஓடாமலே இருந்திருக்கலாம்னு. சுத்த waste movie. Game விளையாடுவாங்களாம், அந்த Gameல வர்ற பேய், விளையாடுறவங்க gameல எப்படி சாகறாங்களோ, அதே மாதிரி, exactly like that, கொல்லுமாம். ஓவர் பூ. ஆனா, எங்க கொள்கை எப்படீன்னா, படம் எவ்வளவு டுபாக்கூரா இருந்தாலும், கடைசி வரைக்கும் பாக்காம எழுந்திருக்க மாட்டோம். So, கடைசி வரைக்கும் பார்த்தோம்.
The Urban Legend மாதிரி ஏதாவது திருப்பம் வரும்மான்னும் பாத்துட்டேயிருந்தோம். Nothing.

***