(ஜனாதிபதி பதவி, ப்ரதீபாபாட்டீல், Salman Rushdie, பத்திரிக்கை சுதந்திரம், Investigative Journalism,Paparazzi )
Salman Rushdieக்கு KnightHood கொடுத்ததை எதிர்த்து, நடந்த பேரணிகள் (இந்தியாவில், கேரளாவில் கூட!) என்னை வியப்பில் ஆழ்த்தின. அவரை எதிர்த்து அன்று பேரணியில் பங்கு பெற்றவர்கள், அவருடைய நாவல்களை வாசித்திருப்பார்களா என்ற எண்ணம் என்னுள் எழுந்ததை, இங்கே நான் சொல்லியாகவேண்டும். வாசித்திருப்பார்களா? என்ன நாவல் வாசித்திருப்பார்கள்? Satanic Versus? Shame? Fury? Midnight’s Children? The Ground Beneath Her Feet? கடைசில இன்னொரு சாய்ஸ் All Of The Above? கண்டிப்பாக படித்திருக்கமாட்டார்கள் என்றே, நான் நினைக்கிறேன். அப்படியிருக்க ஏன் இத்தனை பேர் பேரணியில் பங்கு பெற்றார்கள்? யாரோ சொல்கிறார்கள் -சிறிதும் யோசிக்காமல், சற்றும் ஆராயாமல் – நாம் அவர்களின் கூத்துக்கு, like a puppet dancing to the strings (of politicians, religious gurus and cinema celebs), சந்தோஷமாக ஆடிக்கொண்டிருக்கிறோம்.
நான், இதுவரை சல்மான் ருஷ்டி எழுதிய ஒரே ஒரு நாவலைத்தான் படித்திருக்கிறேன், அது – The Ground Beneath Her Feet. அது ஒரு பிரமாதமான நாவல். I just loved the way he narrated. அவரைப் போல யாராலும் சீரியசாக காமெடி (அல்லது கேலி!) செய்ய முடியாது. சில விசயங்களில் அவர் என்னைப் போல, பட்டப்பெயர் வைபப்தில்!. கதையில் வரும் கதாப்பாத்திரங்களுக்கு முதலில் பெயர் வைப்பார், தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்துக்கு ஒரு பட்டப்பெயரும் வைத்துவிடுவார். பிறகு அந்தக்கதாப்பாத்திரத்துக்கு நாவல் தோறும் அதே பட்டப்பெயர் தான். நமக்கு, அந்த கதாப்பாத்திரத்தின் உண்மையான பெயரே மறந்துபோயிவிடும். Like Reverend Mother.
போனவாரம் தான் The Midnight’s Children படிக்க ஆரம்பித்தேன். என் deskஇல் இந்தப்புத்தகத்தைப் பார்த்த என்னுடைய boss, இதையா படிக்கிறாய்? 25 பக்கங்களைக்கூட உன்னால் படிக்க முடியாது. You will shoot that guy என்றார். நான் ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு Salman Rushdieஐப் பிடிக்குமே என்று மட்டும் தான் சொன்னேன்.
ஆனால் அவர் சொன்னது உண்மை என்பதை மறுக்கமுடியாது. 25பக்கங்கள் என்ன, என்னால் 15 பக்கங்களைக்கூட தாண்ட முடியவில்லை. I just cant stand that “perforated sheet”. what a stupid and cruel imagination? எப்படி இப்படி யோசிக்கறார்? Captivity படத்தில் அந்த juice (அதாங்க கண்,காது,மூக்கு மற்றும் இத்தியாதிகள்!) கூட இப்படித்தான், எப்படி இவர்களால் இப்படி யோசிக்கமுடிகிறது? இது ஒருவகையான torture என்றால், perforated sheet வேறு வகையான torture. அது என்ன Perforated Sheet?
Perforated Sheet என்றால் ஓட்டை இருக்கிற துணி என்று அர்த்தம். கதையின் ஹீரோவின் தாத்தா காஷ்மீரில் ஒரு டாக்டர். அவர் அப்பொழுதுதான் தனது practiceஐ அந்த ஊரில் ஆரம்பித்திருக்கிறார். அங்கிருக்கும் ஒரு மிகப்பெரிய செல்வந்தரின் மகளுக்கு நோய் கண்டவுடன், அந்த செல்வந்தர் தனது ஆஸ்தான மருத்துவர் வராததால் (அல்லது வேண்டுமென்றே!), ஹீரோவின் தாத்தாவை அழைக்கிறார். செல்வந்தரின் மகளுக்கு (Reverend Mother!) இரண்டு மூன்று செக்யூரிட்டிகள் (பெண்கள்!) இருக்கிறார்கள். டாக்டர் அந்த பெண்ணின் அறைக்குள் நுழைகிறார். அந்த பெண் ஒரு துணிக்கு அப்பால் இருக்கிறார். துணியில் ஒரு ஓட்டை இருக்கிறது. அதிர்ந்த டாக்டர், நோயாளி இப்படி துணிக்கு பின்னால் இருந்தால், நான் எப்படி பரிசோதிப்பது என்கிறார். அதற்கு அந்த தந்தை சொல்கிறார், அதற்கு தான் ஓட்டை வைத்திருக்கிறோமே! அவளுக்கு எந்த எந்த பாகங்களில் பிரச்சனை இருக்கிறதோ, அந்த அந்த பாகங்களை இந்த ஓட்டையில் வைப்பாள், நீங்கள் அந்தந்த பாகங்களை பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து கொடுக்கலாம்! வஞ்சனையில்லாம் அந்த பெண்ணுக்கு மாற்றி மாற்றி எல்லா பாகங்களிலும் நோய் வருகிறது. டாக்டரும் பரிசோதிக்கிறார். டாக்டர்கள் பெண்களைத் தொட்டு பரிசோதிப்பது, அவர்களது தொழில். ஆனால் அந்த அந்த பாகங்களை ஓட்டையில் வைத்துப் பரிசோதிப்பது தான், Cruel Imagination!
ஆனால் சில வாக்கியங்கள் எனக்கு பிடிக்கவே செய்தது. Reverend Motherக்கும் டாக்டருக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் (ஒரு கிரிமினல் கவிஞரை வீட்டில் ஒளித்துவைத்ததற்கு), டாக்டர் “வாயை மூடு!” என்று சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்து, அந்த Reverend Mother, யாருடனும் பேசுவதில்லை. ஏற்கனவே கணத்துப்போயிருந்த அவரது உடல், இப்பொழுது யாருடனும் பேசாமல் இருக்கும் பொழுது, மேலும் மேலும் வேகமாக இன்னும் அதிகமாக, கணமாகிக்கொண்டே போனது. அவர் பேசாமல் தன்னுள்ளே அடைத்துவைத்துருக்கும் வார்த்தைகள், அவரை ஊதி பெரிதாக்கின.
“Mumtaz noticed with concern that her mother was swelling, month by month. The unspoken words inside her were blowing her up“
***
Midnight’s Childrenஐத் தூக்கிப்போட்டுவிட்டு (ஏற்கனவே இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு,இதுல இது வேறையா!), Orhan Pamuk எழுதிய Istanbul Momories of a city படிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் படித்தப்பிறகு தான் தெரிந்தது அது ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய நாவல் போன்றது அல்ல என்பது. ரசித்து படிக்க வேண்டிய ஒன்று. எனக்கு Orhan Pamukக்கின் அந்த எளிமையான நடை பிடித்திருக்கிறது, அவ்வப்போது பளீரென மின்னல் போல வெளிப்படும் சிறு சிறு நகைச்சுவையும். இப்போதைக்கு மூன்று chapters மட்டுமே படித்திருக்கிறேன்.
***
பிறகு என்ன படிப்பது என்று தெரியாமல், 1001 books you must readஐப் பார்த்து, Philip Roth எழுதிய, The Plot Against America படிக்க ஆரம்பித்தேன். என்னால் படிக்கமுடியவில்லை. இரண்டு chaptersலையே நாக்கு வெளியே தள்ளிருச்சு. அவ்ளோ பெரிய பெரிய வாக்கியங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் இரண்டு மூன்று முறை படிக்கவேண்டியிருந்தது. So, அதையும் கடாசிவிட்டு, வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். (அப்பொழுதுதான், பிரச்சனை நாவல்களில் அல்ல, என்னுடைய மூட் தான் சரியில்லை என்பது தெரிந்தது!In Cold Blood படித்துமுடித்தபிறகு கடந்த மூன்று வாரங்களாக ஒரு சில பக்கங்களை மட்டுமே படித்திருக்கிறேன்.) அப்பொழுதுதான் Libraryஇல் The Magic Of Thinking Big கண்ணில் பட்டது. கொஞ்ச காலத்துக்கு நாவல்களை தள்ளிவைத்துவிட்டு, self-help படிக்கலாம் என்றிருக்கிறேன். Lets see how it helps!
***
என்னுடைய நண்பர் ஒருவர் தான் எனக்கு இந்த புத்தகத்தைப் பரிந்துரை செய்தார். நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள் (Comrades!) ஆகிவிட்டோம், மிக குறுகிய காலத்தில். எனக்கும் அவருக்கு நிறைய விசயங்கள் sync ஆகின்றன. என்னைப் போலவே அவருக்கும் மூன்று விசயங்கள் ரொம்பப்பிடிக்கும், புத்தகம். மூவீஸ். கா·பி.
ஒரு நாள் Bordersக்கு வெளியே அமர்ந்து, CoffeeBean கா·பியை (கா·பியை விட்டுவிடுகிறேன் என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஒரு ·ப்ரண்டிடம் வாக்குறுதி கொடுத்திருக்கிறேன். இந்தக் பாழாய்ப்போன கா·பியை ஒவ்வொரு முறை குடிக்கும் போதும் குற்ற உணர்ச்சி மேலிடுகிறது.கண்டிப்பாக மிக விரைவில் விட்டுவிடுவேன்.) ரசித்துக்குடித்துக்கொண்டிருக்கும் போது, ப்ரதீபா பாட்டில் பற்றி பேச்சு வந்தது. அவர் இப்போ ஜனாதிபதி. ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் உண்மையிலே, மனதைத் தொட்டு சொல்லுங்கள், இந்தியாவுக்கு ஜனாதிபதி பதவி என்ற ஒன்று தேவைதானா? அவர்களுக்கு இவ்ளோ பெரிய அரண்மனையும், இவ்ளோ வேலையாட்களும் தேவைதானா? இதற்கும் ப்ரிட்டிஷ் ராஜ வம்சத்திற்கும் என்ன வித்தியாசம்? சரி அது ஒரு கவுரமான பதவி என்று வைத்துக்கொண்டால், அதற்கு அரசியல்வாதிகள் எதற்கு? போன்ற கணக்கிலடங்கா கேள்விகள் தீர்ந்து போன எங்கள் கா·பிக்கோப்பையை நிரப்பிக்கொண்டிருந்தன. அவர் ஜனாதிபதி ஆவதற்கு முன்னர் அவரைப்பற்றி தினமும் ஒரு செய்தி வெளியிட்டு வந்த பத்திரிக்கைகள், இப்பொழுது ஏன் அவரைப் பற்றி ஒரு செய்தியும் வெளியிடுவதில்லை? அவர்கள் எங்கே போனார்கள்? அப்படியானால், அவர்கள் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் பொய்யா? இதனால் தான் பத்திரிக்கை மீதும் கருத்துச் சுதந்திரத்தின் மீதும் எரிச்சல் எரிச்சலாக வருகிறது. நீங்களும் உங்கள் கருத்துச்சுதந்திரமும், பிறகு மிகப்பெரிய மண்ணாங்கட்டியும். எல்லாம் சந்தர்ப்பவாதம். (கொஞ்சம் யோசித்தால் சமீபத்தில் நடந்த எத்தனை பயங்கரங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன அல்லது மறக்கடிக்கப்பட்டிருக்கின்றன என்று விளங்கும்.) இப்போ சமீபத்தில் ஆந்திரா-முடிகொண்டாவில் நடந்த துப்பாக்கிசூட்டை இன்னும் எத்தனை நாட்கள் பத்திரிக்கைகள் ஞாபகத்தில் வைத்து follow-up செய்கின்றன என்று பார்ப்போம்.
***
பத்திரிக்கை சுதந்திரம் என்று நாங்கள் பேசிக்கொண்டிருந்த அன்று தான், பத்திரிக்கைச் சுதந்திரத்தையும் அதன் வலிமையையும் (the power of investigative journalism) கச்சிதமாக உணர்த்தும் All the presidents men என்றொரு படத்தைப் பார்த்தேன். அமெரிக்க ஜனாதிபதி Nixonஐ பதவி விலக வைத்த இரு பத்திரிக்கை நிருபர்களைப் (Bob Woodward மற்றும்
Carl Bernstein) பற்றிய படம் இது. (கடைசி வரைக்கும் நிக்சன் தான் ஊழல் –Watergate Scandal– செய்ததாக ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவருக்கு அளிக்கப்பட்ட மன்னிப்பை ஏற்றுக்கொண்டதால் ஊழல் செய்தவராக கருதப்படுகிறார்!)
இந்த investigationஐ இந்த இரண்டு நிருபர்கள் தான் செய்திருந்தனர் என்ற பொழுதிலும், இதற்கு பெரிதும் துணையாகவும், ஊக்கமாகவும், தூண்டுகோலகாவும் இருந்தது, The Washington Postஇன் Executive Editor, BenBradlee தான். நாடு முழுவதும் இந்த இரு ரிப்போர்ட்டர்களை நம்பாமல் (அல்லது நம்ப விரும்பாமல்!) இருந்த பொழுது, WhiteHouse மன்னிப்பு கேட்க்காவிட்டால் வழக்கு தொடர்வோம் என்று எச்சரிக்கை செய்தபொழுதும், “I am going to stick with the boys!” என்று சொல்லி உண்மையை வெளிக்கொண்டுவந்தவர்.
இந்த investigationஐ முடித்தவுடன் Bob Woodward மற்றும் Carl Bernstein, நடந்த சம்பவங்களைத் தொகுத்து All the presidents men என்ற புத்தகமாக வெளியிட்டனர். புலிட்சர் பரிசு (1973) பெற்ற இந்த Non-Fiction புத்தகத்தை அடிப்படையாக எடுக்கப்பட்டது தான் All the presidents men என்ற திரைப்படம். An excellent movie. எனக்கு படங்களைப் பார்த்து முடித்தவுடன் அந்தப்படத்தில் வரும் ஹீரோ போல இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன். For Example, காக்க காக்க பார்த்த பிறகு அசிஸ்டண்ட் கமிஷ்னர் (அதுவும் பாருங்கள், கமிஷ்னர் வேண்டாமாம். அசிஸ்டண்ட் கமிஷ்னர் தான் வேண்டுமாம்!) ஆக வேண்டும் என்று சீரியஸாக யோசித்தேன். படம் பார்த்துவிட்டு வந்து மறு நாள் காலையில் எழுந்து தன்டால் அடித்தது (இரண்டு நாட்களுக்கு மட்டுமே!) நினைவிருக்கிறது. என் நண்பர் தனக்கும் இதே போல ஒரு wierd behaviour இருப்பதை ஒத்துக்கொண்டபிறகு தான் எனக்கு ஓகே கூல் (நிறைய பேர் இப்படித்தான் இருக்காய்ங்க!) என்று தோன்றியது.
இந்தப்படத்தைப் பார்த்த பிறகு பத்திரிக்கையாளராக வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. Investigative Journalism. தமிழ்நாட்டில் நிறைய விசயத்தை investigate செய்யலாம். Like த்ரிஷாவை வைத்து விஜயும் அஜீத்தும் கில்லி ஆடுகிறார்களா? அதைத்தானே இங்கு investivative journalism செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்? இதுவா Investigative Journalism? இதை Paparazzi என்றல்லவா சொல்வார்கள்.
***