Ram And Shantaram

(Ram, Shantaram, Rang De Basanti, Satham Podathae, Rajinikanth)

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை – விகடனில் தொடராக வெளிவந்த தேசாந்தரியில் என்று நினைக்கிறேன் – புராதாண சின்னங்களை பாதுகாப்பது பற்றி எழுதியிருந்தார். அவற்றைப் பாதுகாப்பதில் வெளிநாட்டினர் காட்டும் அக்கறையையும் நாம் காட்டும் அக்கறையையும் ஒப்பிட்டுப் பார்த்து, மிகுந்த வருத்தத்துடன், நாம் ஏன் அவற்றைப் பாதுகாப்பதில் ஆர்வம் எடுத்துக்கொள்வதில்லை என்று வியப்பாக கேட்டிருந்தார்.

இராமாயணம் புனைவாக இருக்கலாம் இல்லையேல் உண்மையாகக் கூட இருக்கலாம். யாருக்கு தெரியும்? யார் proove செய்யமுடியும்? எல்லா பிரச்சனைகளுக்குமே இரு தரப்பான வாதங்கள் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றன. இப்படியும் வாதாடலாம். அப்படியும் வாதாடலாம். அதானால் தானோ என்னவோ நமது நாக்கிற்கு எழும்பு என்பதே கிடையாது. எப்படி வேண்டுமானாலும் வளையும். நமக்கிருக்கும் கொள்கைகள் கணக்கிலடங்காதவை. அந்த கொள்கைகளையெல்லாம் கண்டிப்பாக மற்றவர்கள் மீது திணித்துத்தானாக வேண்டுமா? ராமர் பாலம் என்பது ராமர் கட்டினதோ அல்லது ராவணன் கட்டினதோ அல்லது ரஜினிகாந்த் கட்டினதோ, எப்படி இருந்தாலும் அது ஒரு புராதண சின்னம். Historical Place. அதை ஏன் இடிப்பானேன்? நமது புராதாண சின்னங்களை நாமே பாதுகாக்காவிட்டால் யார் தான் பாதுகாப்பது?

***

நேற்று மதியம் நன்றாக பருப்பு மற்றும் கத்தரிக்காய் புளிக்குழம்பை ஒரு கட்டு கட்டிவிட்டு, அரை மயக்கத்தில் டீவி பார்த்துக்கொண்டிருந்த பொழுது, HBOவில் Davinci Code ஓடிக்கொண்டிருந்தது. என் மனைவி (எனக்கு திருமணம் முடிந்துவிட்டது. This sep 13th. Very sorry Girls! 🙂 ) DaVinci Code படத்தை பார்த்ததில்லை. எனவே நான் அந்தக் கதையை – கர்த்தருக்கு மனைவி உண்டு என்பதையும் அவர்களுக்கு குழந்தை இருந்திருக்கிறது என்பதையும்* – விளக்கிக் கூற அவளும் ஆர்வமாகி பார்க்க ஆரம்பித்தபொழுது, வேறு வழியின்றி நான் ஒவ்வொரு காட்சியாக விளக்கத் தொடங்கினேன். எனக்கிருக்கும் பழக்கம் என்னவென்றால் படத்தின் முடிவு twistingஆ இருந்தா, அந்த முடிவைப் பற்றி கொஞ்சம் கூட hint கொடுக்கமாட்டேன். (நானே என் சொந்த அறிவால் -இருக்கும் பட்சத்தில்!- என்னிடம் கதை கேட்பவர்களை மேலும் குழப்பிவிடுவேன்! அந்த twist வரும்பொழுது அவர்கள் முகத்தில் காணக்கிடைக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை மிகவும் ரசிப்பேன்.) எனக்கு மதிய தூக்கம் சுத்தமாக போய்விட்டது. இரண்டாவது முறை பார்த்த பொழுதும் DaVinci Code நன்றாகத்தான் இருந்தது.

நான் மலேசியாவில் இருந்த பொழுது, இந்த Davinci Code நாவல், கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக, Fiction Listஇல் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டிருந்தது. இந்த நாவலை Bangsar MPHஇல் வாங்கி ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். Opus Deiயும் Knights Of the Templarஉம், Priory Of Sionஉம் என்னை மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தின. Internetஇல் தேடியபொழுது இவையாவும் உண்மையே என்பது போல வாதங்கள் மற்றும் ஆதாரங்கள் (?!) நிறைய கிடைத்தன. எதை நம்புவது?

Rang De Basantiஇல் சித்தார்த்தின் அப்பா சித்தார்த்தைப் பார்த்து SMS generation என்று திட்டுவார். அதென்ன SMS generation? Any speech that goes beyond 2 or 3 sentences becomes a lecture! அதே போலத்தான் என் மனைவியும், படத்தில் சேர்ந்தார் போல ரெண்டு நிமிஷம் யாராவது பேசிக்கொண்டிருந்தால், தூக்கம் வருது என்று பெரிய்ய்ய கொட்டாவி விட ஆரம்பித்துவிடுவாள். உஷாராக அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

சும்மா கதை கேட்டால் பரவாயில்லை, அதில் நிறைய சந்தேகங்கள் வேறு கேட்பாள். படத்தின் logicக்கில் டைரக்டர் விட்ட ஓட்டைகளை, நான் தான் பெரும்பாலும் அடைத்துக்கொண்டிருப்பேன். (Like Sivaji.) இல்லையென்றால், என்ன பெரிய இங்கிலீஷ் படம், நம்ப தமிழ் படம் மாதிரிதான் எடுக்கறாய்ங்க, என்று ஈசியாக சொல்லிவிடுவாள்.

இந்தப்படத்தைப் பார்த்த பிறகு, அவள் மிகுந்த வியப்பில் ஆழ்ந்துபோனாள். எப்படி இத அந்த மக்கள் ஒத்துக்கிட்டாங்க? சண்டை போடலியா? என்று கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

ஒரு மதத்தின், ஆணிவேரையே சாய்த்துப்பார்க்கக் கூடிய conceptஐ கொண்டது இந்தப்படம். யோசித்துப் பாருங்கள், ராமர் பத்தி இதேபோலதொரு controversial படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் என்னவாகியிருக்கும்?

சகிப்புத்தன்மை என்கிற ஒன்று இருக்கிறதில்லையா? அதேபோல கருத்துச் சுதந்திரம் என்கிற ஒன்றும் இருக்கிறதில்லையா? ஒருவர் ராமர் இருக்கிறார் என்று சொன்னால் மற்றவருக்கு அதை மறுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா?

***

சத்தம் போடாதே என்றொரு படம் பார்த்தோம். நன்றாக இருந்தது. அந்த சென்னை600028 இல் அந்த cricket teamஇல் இருந்த ஒரு பையன் (captain நூல் விடும் அந்த பெண்ணிற்கு – அந்தப் படத்தில வர்ற கிரிக்கெட் captainப்பா, மாட்டிவிட்ருவீங்க போல- அண்ணனாக நடித்தவர்..பெயர் மறந்துபோச்சு) தான் இதில் ஹீரோ. நன்றாக நடித்திருக்கிறார். பத்மப்ரியாவும் (Girlsன்னா மட்டும் பெயர ஞாபகம் வெச்சிக்கோ!) நன்றாக நடித்திருந்தார் (இவரு பெரிய சிவாஜிகணேஷன், சர்டிப்பிகேட் கொடுக்கறாரு!). யுவன்ஷங்கர் ராஜாவின் இசை அருமை. Like in Ram. ஆனால் வஸந்துக்கு இந்த கேஸ் ஸ்டவ்வை வெடிக்கவைப்பதில் அப்படி என்னதான் ஆசையோ தெரியவில்லை. Easyயான solution இல்ல?

மொத்தத்தில் படம், அமைதியான நிசப்தமான, சற்றே மர்மம் நிறைந்த, இரவு போல. அனுபவித்து ரசிக்கலாம், அமைதியாக, கொஞ்சம் திகிலோடு. தியேட்டரில் சென்று படம் பாருங்கள் -என்னைப்போல வேலை வெட்டியில்லாமல் இருந்தால். Rerecording superb.

***

நிறைய புத்தகங்களை மாற்றி மாற்றி படிக்க எடுத்தேன். George Orwell எழுதிய 1984, joseph heller எழுதிய Catch 22, mark haddon எழுதிய the spot of bother, friedman எழுதிய world is flat. இதில் 1984 நன்றாக இருந்தது. science fiction. கொஞ்சம் பிடிபட ஆரம்பித்த பொழுது, தொலைத்துவிட்டேன். (என்னது புத்தகத்தை தொலச்சியா? டாக்ஸில வந்தபோது தொலச்சுட்டேன். அப்படியே எழுந்துவந்துட்டேன்.) எதேதோ புத்தகங்கள் படிச்சிட்டு, கடைசில shantaramல வந்து நிக்கறேன். இதில் கிட்டத்தட்ட 200 பக்கங்கள் படிச்சிட்டேன். so far so good. shantaram இப்பொழுது திரைப்படமாக எடுக்கப்படுகிறது. Johny Depp Shantaramஆக நடிக்கிறார்.

இது ஒரு உண்மை கதை. Gregory David Roberts என்கிற ஒரு ஆஸ்திரிலேய கைதி (கொள்ளை மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்) , ஜெயிலில் (Victoria – maximum security prison) இருந்து தப்பித்து, இந்தியா வந்து, பாம்பேயில் பெயரை Shantaramஆக மாற்றிக்கொண்டு, வாழ்ந்தவர். பாம்பேயில் இருந்த பொழுது பல நிழல் உலக தாதாக்களிடம் தொடர்பு வைத்திருந்தவர்.

நம்ம ஊர் போலீஸ் பேசாம அவர aproover ஆக சொல்ல வேண்டியது தான? நிறைய தாதாக்களை arrest செய்யலாமே?!

***

Shantaramஇல் ஒரு வரி வரும். (p. 150)

A dream is a place where wish and fear meet. When the wish and the fear are exactly the same, we call the dream, a nightmare.

உண்மைதானோ? இந்த நாவலில் எனக்கு மிகவும் பிடித்தமான விசயம் என்னவென்றால் : அவசரமில்லாத நிதானமான descriptive narration. பாம்பேயிலிருந்த பொழுது ஒவ்வொருவரையும், ஒவ்வொரு விசயத்தையும் கூர்ந்து கவனித்திருக்கிறார். எல்லோரையும் அழகாக வர்ணிக்கிறார். Exactly like a honest narration, you know or atleast it appears like that, atleast to me. மேலும் ஆங்காங்கே அவர் தெளித்து செல்லும் philosophical thoughts. நம்மை நிறுத்தி, நிதானமாக யோசிக்க வைக்கின்றன. நிதானமாக.

***

* – As told in the novel Davinci Code written by Dan Brown.

4 thoughts on “Ram And Shantaram

  1. Nice one Muthu!!! Congrats on your marriage.//ராவணன் கட்டினதோ அல்லது ரஜினிகாந்த் கட்டினதோ//Good take on this topical matter.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s