சில மாதங்களுக்கு முன் சிவஸ்ரீ அவர்கள் எழுதிய “செத்தாலும்” என்கிற சிறுகதையை படிக்க நேர்ந்தது. அது காலச்சுவடில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை ஒரு பெண்ணைப் பற்றியது. அந்தப் பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக தற்கொலைக்கு முயற்சி செய்வாள். ஆனால் அவள் விஷ மருந்து குடித்திருந்த நிலையில், குற்றுயிரும் குலை உயிருமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கடின போராட்டத்தற்குப் பிறகு காப்பாற்றப்படுவாள். அந்த சிறுகதையில் சிவஸ்ரீ, அந்தப் பெண் உயிர் பிழைப்பதற்குள் என்னென்ன வகையில் கஷ்டப்படுகிறாள் என்பதை நிதானமாக அழகாக நகைச்சுவையாக சொல்லியிருந்தார். கதையைப் படிப்பவர்களுக்கு தற்கொலை ஆசை, அதுவும் விஷ மருந்து குடித்து தற்கொலை செய்துகொள்ளும் ஆசை கண்டிப்பாக வராது, என்றே எனக்கு தோன்றியது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. எனவே சிவஸ்ரீ அவர்களுக்கு ஒரு ஈமெயில் அன்றே அனுப்பினேன். அவரிடமிருந்து உடனே பதில் வந்தது. சில நாட்கள் கழித்து அவர், ஜனாதிபதி கையால் விருது வாங்கிய செய்தியும் பேப்பரில் வந்திருந்தது.
ஒரு சில வாரங்களுக்கு முன் ஏதும் படிக்க கிடைக்காமல், Paulo Coelho எழுதிய, veronika decides to die என்கிற புத்தகத்தை எடுத்தேன். இந்த புத்தகம் ரொம்ப நாட்களுக்கு முன்னால் வாங்கியது, படிக்காமல் வைத்திருந்தேன். Paulo coelho ஒரு brazilian எழுத்தாளர். அவரது The Alchemist என்கிற நாவல் மிகவும் பிரபலமானது. எனக்கு மிகவும் பிடித்தமான நாவலும் கூட. இன்று வரை, புத்தகம் வாசிக்காத எனது நண்பர்கள் யாவருக்கும் பிறந்தநாள் பரிசாக நான் முதலில், இந்த நாவலைத்தான் கொடுத்திருக்கிறேன். எப்படியும் ஒரு ஐந்து காப்பியாவது இந்த நாவலை நான் வாங்கியிருப்பேன். இந்த நாவலே ஒரு தழுவல் தான். ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் வரும் ஒரு கதையை அடிப்படையாக வைத்து, Paulo coelho இதனை அருமையாக எழுதியிருப்பார். Laurence Fishburne (The Matrix) இந்த நாவலை படமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. அந்த எழுத்தாளர் எழுதிய Veronika decides to die, என்கிற நாவலை நான் வாசிக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அந்த நாவல், சிவஸ்ரீ அவர்களின் கதையின் சாயலைக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். சாயல் என்று சொல்லிவிட முடியாது, ஆரம்பம் கிட்டத்தட்ட 80% அதே போலத்தான். மூன்று அத்தியாயங்களுக்கு மேலே, படிக்க பிடிக்காமல் மூடி வைத்து விட்டேன்.
ஒரு ஐடியாவின் ஒரிஜினாலிட்டி எங்கே இருக்கிறது என்பதை அதன் ஒரிஜினலைப் பார்க்கும் வரையில் யாருக்கும் தெரிவதில்லை. கமலஹாசனின் குருதிப்புனல் படத்தில் வரும் “every one has a breaking point” வசனம் எனக்கு மிகவும் பிடித்தமானது. ச்சே கமலஹாசன் எப்படி யோசிக்கிறார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதே வசனத்தை The Shawshank Redemption திரைப்படத்தில் பார்க்க நேர்ந்தது. இப்போ நாம எங்கெங்கோ படித்ததை பகிர்ந்து கொள்கிறோம் இல்லியா? அது போல அவர் எங்கெங்கோ பார்த்ததை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். ஆனால் நாம் courtesy இன்னார் என்று சொல்லிவிடுகிறோம், அவர் சொல்வதில்லை அவ்வளவு தான் வித்தியாசம்.
***
கற்றது தமிழ் திரைப்படத்தை முன்வைத்து சாருநிவேதிதா எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். Georges Bataille வின் சில வரிகளை மேற்கோள் காட்டிவிட்டு, படத்தை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்றும் பிரபாகரனின் கஷ்டங்களை மட்டும் எடுத்திருந்தால் ஒரு விதமான குரூர அழகியல் கிடைத்திருக்கும் இப்பொழுது அது மிஸ்ஸிங் என்று எழுதியிருந்தார். குரூர அழகியல் சார்ந்த திரைப்படங்கள் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது இரண்டு படங்கள். ஒன்று ஆறிலிருந்து அறுபது வரை. மற்றொன்று பொற்காலம். ஆனால் இந்த கற்றது தமிழ் திரைப்படம் குரூரமானது என்ற வகையில் ஒத்துக்கொள்ளலாமே தவிர, குரூர அழகியல் என்றெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அழகாய் இருப்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கிறதல்லவா? வன்முறையை மற்றும் காழ்ப்புணர்ச்சியை தூண்டிவிடும் இந்த திரைப்படம், நானும் எனது படமும் தமிழை முன்வைத்து வரலாற்றில் இடம் பெறுகிறோமா இல்லையா பார், என்பது போன்ற சவாலுக்காக எடுக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. Like அம்முவாகிய நான் திரைப்படத்தில் வரும் வசனத்தைப் போல, “you stand in history!”. அம்முவாகிய நான் திரைப்படத்தைப் பற்றி பிரிதொரு முறை பேசலாம்.
கற்றது தமிழ் ஒரு வகையில் தடை செய்யப்படவேண்டிய திரைப்படம். Boys என்ற திரைப்படத்தை தடைசெய்தவர்கள் இதை தடை செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. அன்றைக்கு மதன், தனது திரைப்பார்வையில், இந்த திரைப்படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்ட பொழுது, அவர் மென்துறை சார்ந்த மக்களின் மீது தீராத பாசம் வைத்திருப்பது போலவும் அவர்களுக்காக தான் பரிதாப்படுவதாகவும் சிலாகித்து மிகவும் வருத்தத்தோடு (கவனிக்க, சிலாகித்து பின் வருத்தத்தோடு!) சொல்லியிருந்தார். அவர் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை, இப்படியொரு படத்தை எடுத்தபிறகு.
அந்த அன்னை அன்னை பாடலும், அந்த call center பையனும், பிராபாகர் அவனை படுத்தி வைத்த பாடும் (நம்மையும் சேர்த்துதான்!) இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் நிற்கிறது. “அன்னை அன்னை” பாடலை நீ பாடிக்காட்டு பார்ப்போம் என்பான் பிரபாகர் இதெல்லாம் ஒரு சவாலாய்யா? நாங்க என்ன இங்கிலாந்தில் இருந்தா இறங்கி வந்திருக்கோம்? இன்றைக்கு இருக்கும் blog மக்களில் பெரும்பாலானோர் மென்துறையை சார்ந்தவர்களே!
அவர்கள் தமிழை வளர்க்கிறார்களோ
(தமிழை யாரும் வளர்க்க முடியாது, தமிழ் தான் எங்களை வளர்க்கிறது!) இல்லியோ, எப்படியேனும், ஜெயமோகனையோ, ராமகிருஷ்ணனையோ, கிராவையோ, சுராவையோ, கல்கியையோ, பாரதியையோ ஆதவனையோ சிவஸ்ரீ யையோ பற்றி எழுதிக்கொண்டுதானே இருக்கிறார்கள்? எனக்கு தெரிந்த ஒரு ஆங்கில blogger, பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறார்.
“அன்னை அன்னை” பாடலை என்னால் பத்து நிமிடங்களில் மனப்பாடம் செய்யமுடியும், என்னைப் போல..no i think its enough!
படத்தில் வரும் ஒரு முட்டாள் தனமான டயலாக் இப்பொழுதுதான் எனக்கு ஞாபகம் வந்தது: “ஏன்டா இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் வந்த தமிழைப் படித்த எனக்கே இரண்டாயிரம் ரூபாய் தான் சம்பளம். இப்ப வந்த கம்ப்யூட்டர் படிச்ச உனக்கு இரண்டு லட்சம் சம்பளமா?” (correcta ஞாபகம் இல்லை!)
இவ்வாறான பொறுப்பற்ற வசனங்கள் ஒரு சாரர் மீது கோபத்தையும் வன்மத்தையும் கட்டவிழ்த்து விடுவதால் தான் இந்த படத்தை தடை செய்திருக்க வேண்டும் என்கிறேன்.
அது சரி, Georges Bataille வை சாருநிவேதிதா ழார் பத்தாய் என்கிறாரே, என்ன விதமான உச்சரிப்பு இது? இப்படித்தானா உச்சரிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.
***
“செத்தாலும்” கதையை நான் படித்தது இல்லை. ஆனால், paulo coelho அதைக் copy அடித்திருக்க வாய்ப்பு இல்லை 🙂 veronica decides to die நல்ல கதை. நீங்கள் முழுதாகப் படித்துப் பார்க்கலாம்.
LikeLike
அனானி: கண்டிப்பாக படிக்கிறேன். வருகைக்கு நன்றி.
LikeLike