படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

ரிக்கி பாண்டிங்,ரஜினிகாந்த், IBN-CNN, ஜல்லிக்கட்டு, மும்பை மானபங்கம்

There’s a breathless hush in
the class tonight
Ten to make and the match to win
A bumping pitch and a
blinding light.
An hour to play, and
the last man in.
And it’s not for the sake of a
ribboned coat.
Or the selfish hope of a
season’s fame,
But his captain’s hand on
his shoulder smoke
Play up! Play up! And play
the game!

Henry Newbolt எழுதிய இந்த கவிதையை Ricky Ponting மனப்பாடம் செய்யவேண்டும். மனப்பாடம் செய்தால் மட்டும் போதாது, இதன் அர்த்தத்தையும் புரிந்துகொள்ளவேண்டும். விளையாட்டு என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் திடலில் ஒருவருக்கு ஒருவர் மரியாதை கொடுக்கவேண்டும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

Chak de India திரைப்படத்தை BCCI சாருக்கானுக்கு ப்ரத்தியேகமாக போட்டுக்காட்டலாம். மேலும் சாருக்கானுடன் ஒரு சந்திப்பையும் ஏற்பாடு செய்யலாம். நடந்து முடிந்த சிட்னி டெஸ்ட் ஆஸ்திரேலியாவின் தெருச்சண்டை மனோபாவத்தை உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்தது, ஆஸ்திரேலியாவின் மீது தீராத காண்டிலிருக்கும் மற்ற அணிகளுக்கு, மகிழ்ச்சியைத் தருவதாக இருந்திருக்கும்.

Peter English என்கிற ஆஸ்திரிலேய எடிட்டர், crickinfoவில் எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்:

“Somebody probably a preschool teacher, needs to explain simply to Ricky Ponting
about the damages that has been caused by his team during the Sydney Test”

ஆனால், விளையாட்டு விளையாட்டு தான், போர் இல்லை, என்கிற விசயத்தை இந்தியர்களாகிய நாம் சொல்வதற்கு தகுதி உடையவர்களா என்பதையும் இந்த நேரத்தில் சிந்திக்க வேண்டும். டோனி வீடு தாக்கப்பட்டதை இந்த நேரத்தில் நாமெல்லாம் நினைவில் கொள்ளவேண்டும்.

எனவே மேலே கொடுக்கப்பட்ட Henry Boltஇன் கவிதையை, ரிக்கி பாண்டிங் படிக்க வேண்டும். படித்து விட்டு, அவர் இந்தியர்களுக்கும் தாரளமாக forward செய்யலாம்.

ஆனாலும் கங்கூலி அவுட் ஆனது, கொஞ்சம் ஓவர்தான். அவுட் இல்லை என்று தீர்மானமாக நின்ற கங்கூலியைப் பார்த்து ரிக்கி பாண்டிங் கோஷ்டி சிரித்தது மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது. அம்பையர்களே நீங்கள் தூங்குங்கள் தவறில்லை. Afterall, then and there, every one takes a nap, during his work. ஆனால் தூங்கி எழுந்தபின், third umpire, என்கிற ஒருவர் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

***

BCCI, கடைசி மேட்சை கேன்சல் செய்யப்போகிறது, என்கிற அறிவிப்பு வெளியானதும், அவர்கள் எவ்வளவு பணம் ஸ்பான்ஸர்ஸ¤க்கு கொடுக்க வேண்டியது இருக்கும் என்கிற எண்ணம் எல்லார் மனதிலும் உதித்தது. எல்லாரும் ஒவ்வொரு கணக்கு போட்டனர். ஆனால் அந்த கணக்கில் என்னுடைய 25$ சேர்க்கப்பட்டிருந்ததா என்று தெரியவில்லை. நானும் தானயா subscribe பண்ணிருக்கேன்? எனக்கு யார் பணத்தை திருப்பி தருவா? என்கிற குழப்பம் என்னுள் இருந்தது. என் நண்பர்கள் யாவரும் அப்படி திருப்பித் தருவதற்கு வாய்ப்புகள் ரொம்பவும் கம்மி என்றே சொன்னார்கள். எனக்கு புரியவில்லை, ஏன் என்னுடைய பணமும் தானே முக்கியம். இந்த முறை பார்த்துவிடலாம் என்கிற ஆவலோடு இருந்தேன், ஆனால் BCCI மேட்ச் நடக்கும் என்கிற முடிவுக்கு சென்று விட்டது, கொஞ்சம் ஏமாற்றம் அளித்தது. ஆனால் ஆஸ்திரிலேயாவின் ரெக்கார்ட்டை இந்தியா முறியடிக்கப்போகிறது (மறுபடியும்!) என்கிற நினைப்பு வரும் பொழுது அந்த ஏமாற்றம் மறைந்து விடுவது என்னவோ உண்மைதான்.

Over Confidence! நமக்கு சூடு சொரணை இருக்கா இல்லியாப்பா?

இன்னிக்கு பட்டிமன்றத்துல கூட ராஜா சொன்னார்: இந்தியா ஜெயிக்கறதுக்கு ரொம்ப கஷ்டப்படுது, அப்படி ஜெயிக்கறமாதிரி போனாக்கூட பக்னர் வந்து பக்குன்னு அமுக்கிடறார்

***

ரஜினிகாந்த் ஷங்கர் படத்தில் மீண்டும் நடிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சி. அவர் முதல்வனிலே நடித்திருக்க வேண்டியது. ஷங்கரின் தாக்கம் ரஜினியிடம் நிறையவே இருக்கிறது இப்பொழுது. He is aiming big, bigger than ever before. முதல்வனில் ரஜினி நடித்திருந்தால், பத்து வருஷத்தில் கண்டிப்பாக நிறைய மாற்றங்கள் நடத்திருக்கும். இந்நேரத்துக்கு ஒரு international ஹீரோவாக வளர்ந்திருப்பார். ரம்யாகிருஷ்ணனோடு அதிகமா ஆசைபடற ஆம்பள ஆப்பாயில் போடத்தெரியாத பொம்பளன்னு தத்துவம் பேசிக்கொண்டிருந்திருக்க மாட்டார்.

இப்பொழுதுதான், ரஜினிகாந்தை வடக்குப்பக்கத்து மக்கள் திரும்பிப்பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். (அவங்க திரும்பிப் பார்த்தா என்ன, பாக்காட்டி நமக்கென்ன?) CNN-IBNல வந்த ஒரு செய்தி:

The third contender is ultimate style king Rajnikanth. It will be a travesty to
call him the ageing style king, because he showed in Sivaji-The Boss that age
just has nothing to do with it. For one, you cannot make out he is ageing. And
two, does it matter?

The film turned out to be a big blockbuster,
packing cinema halls even in the north. He can fight, sing and dance just as
well as the youngest Kapoor on the block — Ranbir ‘Saawariya’ Kapoor — if not
better: the kid can learn a few things from Rajnikanth.

அடெங்கப்பா “learn a few things from Rajnikanth” இதற்கு முன்னர் ரஜினிகாந்துக்கு இந்திய அளவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது, தளபதி படத்தின் போது என்று தான் நான் நினைக்கிறேன். Filmfare அட்டையில் வெளிவந்த ரஜினிகாந்தின் அந்த புகைப்படம் தான், என்னுடைய, இதுநாள் வரையிலான favourite. அந்த படம் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள்.

ஒரு வைட் பைஜமா குர்தாவில் அழகாக கைகளை மடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பார் ரஜினிகாந்த்.

***

CNN-IBN Indian of the year Listஇல் ரஜினிகாந்த் மற்றும் கங்கூலி ஆகிய இருவரும் வந்தது இனிய அதிர்ச்சி. இவர்கள் இருவரின் மீதும் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. இவர்கள் இருவரின் போராட்ட குணம் அனைவருக்கும் ஒரு பாடம். எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல், மீண்டும் எழுந்து வர முடியும் என்று நிரூபித்தவர்கள் இவர்கள் இருவரும். நான் ஓட்டு போட்டுட்டேன்.

ஆனால் ரஜினிகாந்தை CNN-IBN லிஸ்டில் சேர்த்தது, தெற்கு பக்கத்து மக்களையும் கவர வேண்டும் என்கிற வியாபார தந்திரமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

***

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த பொழுது எழுத ஆரம்பித்த பதிவு இது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கம் செய்யப்பட்டு விட்டது. எதுக்கு இந்த வீண் பந்தா? ஏன் ஜல்லிக்கட்டுக்கு தடை? இந்தியாவிலே ஒரே ஒரு இடத்தில் தான் இது நடக்கிறது அதையும் காலி செய்து விடலாம் என்கிற நோக்கமா? இது ஆண்டாண்டு காலமாக நடக்கும் வீர விளையாட்டு. இதில் வீரம் எங்கிருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் கேட்டார். என்னது? வீரம் இல்லியா? இந்த விளையாட்டை டீவியில் பார்ப்பதற்கு கூட வீரம் வேண்டுமப்பா. உயிர் போகிறதே என்று கவலைப்படுகிறீர்களா? அடா அடா என்னே உங்களது மக்களின் மீது இருக்கும் பாசம்? உங்கள் பாசம் என்னை வியப்படைய வைக்கிறது. மற்ற எல்லவற்றையும் சரிசெய்தாகிவிட்டது. இது தான் பாக்கி. இந்த ஜல்லிக்கட்டை நிறுத்தி விட்டால், இந்தியாவில் உயிர் சேதமே இருக்காதா? இது வீர விளையாட்டு. தமிழர் குணங்களில் எஞ்சி நிற்கும் ஒரு சில குணங்களில் இதுவும் ஒன்று. நம்மாளு இலவசத்துக்கும் க்யூவில நிப்பான், மாட்ட அடக்கறதுக்கும் க்யூவில நிப்பான். எங்களை பாதுகாத்துக்க எங்களுக்கு தெரியும். நாட்ல காயர்லாஞ்சிக்கு தீர்ப்பு கிடைச்சாச்சான்னு பாருங்கப்பு.

***

ஜல்லிக்கட்டுக்கு தடைன்னு மட்டும் வேகவேகமா தீர்ப்பு எழுதத் தெரியுதுல? அதே தீர்ப்ப அதே வேகத்தோட, பம்பாயில் பெண்களை ஒரு கும்பலே மானபங்கம் செஞ்சதே, அத ஒரு வாரத்துக்குள்ள கண்டுபிடிக்கனும்னு, இல்லீன்னா சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்னு தீர்ப்பு எழுதச்சொல்லுங்க பார்ப்போம்? முடியாது. ஆயிரெத்தெட்டு ரூல்ஸ் இருக்கு. கைது செய்யப்பட்டவங்களுக்கு பெயில் கிடைக்குது. காயர்லாஞ்சி என்ன ஆச்சு? கேஸ் நடத்துக்கிட்டே இருக்கு. ஏன், இந்த மாதிரி கேஸ்ஸ¤க்கு கூட வேகமா தீர்ப்பு எழுத முடியாதா? ஒன்னுமே புரியல.

இன்னிக்கு, இன்னவரைக்கும் மும்பை கேஸ்ல கண்டுபிடிச்சத, ரேணுகா சவுத்ரி விசாரிக்க போகிறார். என்ன நடக்குதுன்னு பாப்போம்.

***

பத்திரிக்கைகளின் வேலை ஒரு செய்தியை எழுதுவதோடு மட்டுமே முடிவடைவதில்லை. அதை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். இப்பொழுது ப்ளாகர்களே செய்திகளை பதிவு செய்கிறன்றனர். பத்திரிக்கைகளின் வேலை, செய்திகளை follow-up செய்வது. பின்ன என்ன இதுக்கு நம்பர் ஒன் புலனாய்வு இதழ்ன்னு அட்டையில போடனும்?

எத்தன மறக்கப்பட்ட கேஸ்கள்? அவையெல்லாம் என்ன ஆயிற்று?

***

2 thoughts on “படம்-நியூஸ்-புத்தகம்-கா·பி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s