படித்த முட்டாள்களே, ப்ளீஸ் உங்கள் முட்டாள் தனத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள்.
True Known என்றொரு முட்டாள், ஏதோ ஒரு தேவையில்லாத விசயத்தை தொகுத்து மீண்டும் மீண்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். அவரது IP Addressஐ கண்டுபிடித்து cyber-crimeஇல் புகார் செய்வது அவ்வளவு ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. (புகார் செய்தால் ‘போப்பா போய் பிள்ளைகள படிக்கப்போடு’ என்று சொல்வார்கள் என்பது நிச்சயம்!) அது எனக்கு தேவையில்லாத வேலையும் கூட. அவர் தான் ஏதோ பொழுதுபோகாமல் அனுப்புகிறார் என்றால், அதற்கு பதிலாக ccயில் இருக்கிற எல்லாரும் “remove my mailid” என்று ccயில் இருக்கிற மற்ற எல்லோருக்கும் “reply all” போட்டால் என்ன அர்த்தம்? உங்கள் சம்மதத்தை கேட்டுக்கொண்டா எல்லாரும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் remove my id ன்னு சொன்னா உங்க ஈமெயில் ஐடியை நீக்கி விடவா போகிறார்கள்? Be sensible. ஏன் இப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் சகட்டுமானிக்கு spam அனுப்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சுத்த சின்னபிள்ள தனமால்ல இருக்கு. True Known அனுப்பறது ஒரு மெயில், இவிங்க பதிலுக்கு அனுப்புறது நாப்பதிரெண்டு மெயில். கஷ்டம்.