கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .
***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:
மழை என்னும் பிராணி
திடீரென
விழித்த தூக்கத்தில்
உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை
என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்
-த அகிலன்
ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.
***
ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
It is necessary for the sake of maintaining peace and security in the country
மார்ச் 30 2008
This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to
do something about it. It is not a publicity stunt
நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
***