வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

 

***
Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!

***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
“It is necessary for the sake of maintaining peace and security in the country”
DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008
“This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to do something about it. It is not a publicity stunt”
DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s