கட்டமைப்பு-கட்டுரை- Barnes-திருவிளையாடல்

தீராநதியில் ஜமாலன் எழுதிய கட்டுரையிலிருந்து:

கிரிக்கெட்டின் அடிப்படையே காலனிய ஆளும் தன்னிலைகளும், ஆளப்படும் தன்னிலைகளும் ஒருங்கிணைவதற்கான ஒரு புள்ளியை உருவாக்கி ஆளப்படும் தன்னிலைக்குள், ஆளும் தன்னிலையை உயர்ந்ததாக கட்டமைக்கும் படிநிலைப் பண்புதான்.

?! உடு ஜூட்

கிரிக்கெட்டில் உருவாக்கப்படும் “தேசபக்தி” போன்ற உணர்வுகள் உண்மையில் ஒருவகை “தேசவெறி”யையே கட்டமைக்கின்றன. இந்த தேசவெறி இன்றைய அரசியல் சூழலுக்கான தேவையை நிறைவு செய்கிறது. இன்னும் குறிப்பாகக் கூறினால், ஒருவன் தன்னை இந்தியனாக உணர்வதற்கான வெளியாக இது கட்டமைக்கப்பட்டுள்ளது. தேசபக்தி போர்க்காலச் சூழலிலேயே ஒரு குடிமகனுக்கு வெறியாக மாறும். கிரிக்கெட் என்பது ஒரு போராக அதிலும் தொலைக்காட்சி கட்டமைக்கும்..

எத்தன கட்டமைப்பு..?! இந்த கட்டுரையை ஏன் இப்படி கட்டமைக்கிறார்கள்!?

***
Julian Barnes (A History of the world in 10 1/2 chapters) எழுதிய East Wind என்கிற East German swimmers பற்றிய ஒரு கதை(Newyorker) படித்தேன். Medalகளுக்காக போட்டிபோடும் swimmers-இன் உடல் நலம் அவர்கள் சாப்பிட்ட மருந்து மாத்திரைகளால் எப்படி மாற்றம் அடைகிறது என்பதை அழகாக கூறியிருந்தார். Medals are just metals! இப்படியெல்லாம் செஞ்சு medal வாங்கணுமா என்ன? இந்தியா medal வாங்காமலிருப்பதே நல்லது! (அப்பாடா காரணம் கண்டுபிடிச்சாச்சு!)

இந்த கதையில் வரும் ஒரு line: (after Berlin wall came down)
Andrea had come out with nothing more than a relay medal at some forgotten championship in a country that no longer existed.

***

இளமையும் அதிகாரமும் ஒன்றுதான்
இருக்கு இருக்கு
என்று சொன்னால்
இல்லை என்று அர்த்தம்!

ஹி ஹி..
க்க்ர்ர்ர்ர்..

***

அரசு பதில்களில் ஒரு கேள்வி-பதில், இந்த வாரம் குமுதத்தில் பதிப்பிக்கப்பட்டிருந்த எல்லா ஜோக்குளையும் மிஞ்சி விட்டது:

கே: இரண்டு முறைகளுக்கு மேல் முதல்வர் ஆக மாட்டேன் என்கிறாரே சரத்குமார்?
: ஆமாம். அதற்குமேல் நேரம் இருக்காது. மூன்று முறை பிரதமர் ஆக வேண்டும். அதற்குப்பிறகு அமெரிக்காவுக்கு வேறு ஜனாதிபதி ஆக வேண்டும்!

***

சும்மா எதேச்சையாக extremetracking-ஐ புரட்டிக்கொண்டிருந்த பொழுது இந்த Link கிடைத்தது:
(பி.கு: எனக்கு எப்பொழுதுமே தற்புகழ்ச்சி பிடிப்பதில்லை!)

எனக்குப் பிடித்த தமிழ் blogகளில் இதுவும் ஒன்று.
நன்றாக எழுதுகிறார். இவர்
தன்னுடைய பகுப்புகளில்
ஒன்றிற்கு “எரிச்சல்” என்று பெயர் வைத்திருந்ததை வெகுவாக
ரசித்தேன். சிறுகதை தொடர்கதை எல்லாம் எழுதுகிறார்.
பின் தொடரும் நிழலைப்
பற்றிய இவரது பதிவு
எனக்குப் பிடித்தமானது()

நன்றி வேதன்!

***

ஜெயா Max-இல் உண்மையில நல்ல பாடல்கள் போடுகிறார்கள். அவரகளது “Minimum பேச்சு Maximum பாட்டு” என்கிற விளம்பரம் மிகச்சரியே! ஆனால் நடு நடுவே : அம்மா அழைக்கிறார் என்கிற கட்சி commercial தான் கடுப்படிக்கிறது.

***

கவனித்துப்பார்த்ததில் எல்லா சானலிலும் காமெடி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. வீட்டுக்கு வீடு லூட்டி என்கிற ஒரு தொடர். சகிக்க முடியவில்லை. இந்த பாலக்காட்டு மாதவன் ஸ்டைல் வசனத்தை விடவே மாட்டார்களா?! போகுகிற போக்கைப் பார்த்தால், இன்னும் கொஞ்ச நாட்களில் பிரபல ஆயல் மொழி காமெடி நாடகங்கள் எல்லாம் தமிழில் டப் செய்யப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். விஜய் டீவியின் பெயரை விஜயனீஷ் (விஜய்+சைனீஸ்) என்று மாற்றி விடலாம், அவ்வளவு சைனீஸ் படங்கள்! மேலும் இன்னொரு பெயர் சிபாரிசு: ரி-விஜய்.

திருவிளையாடல் நாடகம் இன்னொரு மொக்க. ராதாரவிக்கு நாரதர் வேடம் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை. நாரதர் என்றால் கண்களில் குறும்புத்தனம் வேண்டாமா?! சிவனாக நடிப்பவருக்கு திருவிளையாடல் படத்தை திரும்பத்திரும்ப போட்டுக்காட்டி சிவாஜியை போல நடிக்கவேண்டும் என்று டைரக்டர் குச்சி வைத்து மிரட்டியிருக்கவேண்டும்! திருவிளையாடலை மீண்டும் எடுப்பது என்பது மிகவும் நல்ல Idea. ஆனால் இந்த காலத்துக்கு ஏற்றார்போல யோசித்து கொஞ்சம் மாற்றியிருக்கலாம். சுவராஸ்யமாக இருந்திருக்கும். இது அறுபது வயது தாத்தா “உன்னாலே உன்னாலே” படத்துக்கு வந்து பேக்கு பேக்குன்னு முழிக்கிற மாதிரி இருக்கு!

***

2007-இல் Internet Advertising Revenue எவ்வளவு தெரியுமா? $21 Billion, இது டீவியின் வழியாக வரும் விளம்பர வருவாயில் மூன்றில் ஒரு பங்காகும். 2011-இல் இந்த Internet advertising revenue மூன்று மடங்கு அதிகரிக்குமாம்.

Internet advertising பற்றி Rothenberg எழுதியிருப்பதை இங்கே பாருங்கள்.

***
ப்ரவீன் என்கிற என்னுடைய நண்பர் ஒருவர் அவ்வப்போது Facts and Figures என்று சில fwd அனுப்பிக்கொண்டிருப்பார்.

Pravin’s Facts and Figures:
150 Crores – Net box office revenue of his 2007 releases Chak De ! India and Om Shanti Om.

36 Crore – Earnings from 36 episode of Kya Aap Paanchi pass se Tez Hain ?

21 – Last year Khan endorsed 21 brands more than any one in TV.

300 Crore – Khan’s investment in the IPL team Calcutta Knight Riders.

42 – Age of Sharukh Khan .It’s really unbelievable with his six pack abs.

***

Infosys : Campus Placements withdrawn.

எனக்கு தெரிந்த ஒரு பையன் இன்று என்னை சந்திக்க வந்திருந்தான். 2007-ல் BE ECE முடித்தவன். நல்ல precentage வைத்திருக்கிறான். Infosys-ல் Campus placement கிடைத்திருக்கிறது. Appointment order எல்லாம் கொடுத்தாயிற்று. காலேஜ் முடித்துவிட்டு, பல கனவுகளோடு Infosys campus-க்குள் நுழைந்தவனுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. Training பிறகு அவர்கள் வைக்கும் test-களில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே தொடரமுடியும் என்று அவர்கள் கூறினார்கள். சும்மா கொஞ்ச நஞ்ச test கிடையாது. கிட்டத்தட்ட 20 test-கள். மூன்று மாதங்கள். பிறகு இவனை இங்கு வேலை செய்ய லாயக்கில்லை என்று சொல்லி infosys வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

இவனை மட்டுமில்லை, இவனுடைய batch-இல் 156 பேர், கடைசியில் Infosys வேலைக்கு எடுத்துக்கொண்டது வெறும் 36 பேரை மட்டுமே! மீதமிருக்கும் 120 பேரும் வேலைக்கு லாயக்கற்றவர்களா? அது நீங்கள் campus interview நடத்தும் போதே தெரியாதா? என்னங்கய்யா இது?! ஒருவர் இருவர் என்பது வேறு விசயம், 120 நபர்களா? இதில் வேறு பிரச்சனை இருக்கிறது.

இவன் இவனது, college-க்கு வந்த முதலாவது கம்பெனியில் place ஆகியிருந்திருக்கிறான். இன்னும் பல company-கள் அதற்கு பிறகு வந்திருக்கின்றன. ஆனால் according to rules, Infosysஇல் place ஆனதால், பிற கம்பெனி interview-களை இவன் attend செய்ய முடியவில்லை. Infosys முதலிலே இவ்வளவு நபர்களை மட்டும் select செய்தால் போதும்னு நினைச்சிருந்தாங்கன்னா வேற company-யில் இவன் place ஆகியிருக்ககூடும் இல்லியா? இவனுக்கு பிறகு மத்த companyயில் (பிற சின்ன கம்பெனிகள் உட்பட) placeஆன இவனது நண்பர்கள் எல்லோரும் settle ஆகி விட்டிருக்கின்றனர்.

இப்பொழுது இவன் resumeஇல் Infosys இருக்கிறது. மூன்று மாதம் training இருக்கிறது. Interviewவுக்கு போகும் இடத்தில் எல்லாம் இதைப்பற்றிய குடைச்சல்கள். இன்னும் வேறு வேலை கிடைத்தபாடில்லை. என்னுடைய batchஇலும் (2001) இதே போல நடந்தது. பல கம்பெனிகள் தங்களது appointment order-களை withdraw செய்துகொண்டன.

படித்து முடித்து புது வேலையில் சேர ஆவலோடு வரும் students இது போன்ற சரிவுகளிலிருந்து மீள்வது மிகுந்த சிரமம். இதோ டிசம்பர் வரையில் time போச்சு. இப்ப வேலை தேடினா experience கேக்கறாங்க. அடுத்த freshers batch (2008) வெளிவந்துவிட்டது.

என்ன செய்யப்போகிறோம் என்கிற அந்த பையனின் கலக்கம் ஒரு வேலை கிடைத்தால் மட்டுமே நீங்கும்.
Freshers recruitment இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.

Government, considering the future of the students, have to enforce some restrictions and laws towards companies hiring in the campus. Also colleges must not allow these companies (must have some withdrawn/placement ratio) in to their campus in future.

சுஜாதா குறிப்பிட்ட நாபகோவின் சிறுகதை: எனக்கு புரியவில்லை

நாபகோவ் எழுதிய சிறுகதை ஒன்றை சுஜாதா கணையாழியில் 1966ஆம் வருடம் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒரு அப்பா, ஒரு அம்மா; ஒரே மகன் பைத்தியமாகி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆஸ்பத்திரி வேறு ஊரில் இருக்கிறது.

பெற்றோர்களுக்கு ஒரு தினம் ஆஸ்பத்திரியிலிருந்து டெலிபோன் வருகிறது. பையன் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உடனே புறப்பட்டு வரும்படியும். உடனே என்றால் மறுதினம் தான் போக முடியும்; அதற்குள் என்ன நேர்ந்துவிடுமோ என்று கவலைக் கடலில் இரவெல்லாம் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்போது:

டெலிபோன் மணி அடிக்கிறது. பதற்றத்துடன், பயத்துடன் அதை எடுக்கிறார் அப்பா.

“ஹென்றி இருக்கிறானா?” என்கிறது ஒரு பெண் குரல்.
“ஹென்றி என்று இங்கு ஒருவரும் இல்லை; தப்பு நம்பர்” என்று வைத்துவிடுகிறார்.

மறுபடியும் சில நிமிஷம் கழித்து டெலிபோன் அடிக்கிறது.
“ஹென்றி இருக்கிறானா?” அதே பெண்.
“மிஸ், உனக்கு என்ன நம்பர் வேண்டும்?”
“5365849”
“என் நம்பர் 5365840- ஒன்பதுக்கு பதில் சைபரைச் சுழற்றுகிறாய் போலிருக்கிறது”
“ரொம்ப தாங்க்ஸ்” என்று அந்த பெண் வைத்துவிடுகிறாள்.

கதையில் இன்னும் ஒரு வரி தான் இருக்கிறது.
சில நிமிஷம் கழித்து மீண்டும் டெலிபோன் மணி அடிக்கிறது.

நாபகோவின் புத்திசாலித்தனம் புரிகிறதா?

***
எனக்கு புரியவில்லை. புரிந்தவர்கள் கொஞ்சம் சிரமமெடுத்து, இந்த மரமண்டைக்கு புரியவைக்கவும்.

ஆட்டோ, மீட்டர் மற்றும் Chetan Bhagat

ஒரு ரூபாய் கொடுத்தால்
ஐந்து ரூபாய் கொடுக்கும்
வள்ளல்
பஸ் கண்டக்டர்!

என்ன பண்றது, சென்னையில பஸ்ல போக ஆரம்பிச்சுட்டேன். எவ்ளோ நாள் தான் ஆட்டோவுக்கு 100 ரூபாய் 150 ரூபாய்ன்னு அழறது? சும்மா கொஞ்ச நஞ்சமெல்லாம் கேக்கறதில்ல நம்ப ஆட்டோக்காறங்க. MMDA Colonyயிலருந்து Central Stationக்கு 150 ரூபாயாம். கேட்டா, பெட்ரோல் விலை கூடிப்போச்சாம்? எவ்வளவுய்யா கூடியிருக்கு? அஞ்சு ரூபாய் தானே? நுங்கம்பாக்கத்துக்கு 80 ரூபாயாம்! பஸ்ல டிக்கெட் நாலு ரூபாய். எல்லா ஆட்டோக்களிலும் மீட்டர் பாக்ஸ் இருக்கிறது. அதுவும் டிஜிட்டல். மினிமம் 14 ரூபாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. (முதல் இரண்டு கிலோமீட்டர்களுக்கு) மேலும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஆறு ரூபாய் வசூலிக்கப்படவேண்டும் என்பது சட்டம். அப்படியா வசூலிக்கப்படுகிறது? ஏன் இதை யாருமே வலியுறுத்தவில்லை? வலியுறுத்தினா மட்டும் கேட்ருவாய்ங்களா என்ன?.

மீட்டர் போடுவதில் ஆட்டோக்காரர்களுக்கு என்ன பிரச்சனை? கட்டுபிடியாவதில்லை என்று ஒரு ஆட்டோக்காரர் சொன்னார். கட்டுபிடியாகவில்லையா?! எடுத்துக்காட்டாக: இப்பொழுது வடபழனியிலிருந்து டீநகருக்கு மினிமம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 80 ரூபாய்க்கும் மேலே வசூலிக்கப்படுகிறது. டீநகரிலிருந்து வடபழனிக்கு 6.6 KM. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 55 ரூபாய். ஒரு லிட்டர் பெட்ரோல் சராசரியாக 35 கிலோமீட்டர் கொடுக்கிறது (Bajaj autorickshaw). கூட்டிக்கழிச்சு பாத்தா (ராஜ் டீவியில அண்ணாமலை பாத்தேன்!) fuel price just 11 rupees only. ஆட்டோக்காரர்கள் வசூலிக்கும் தொகையில் மீதமிருக்கும் 65 ரூபாய் யாருக்கு? எங்கே போகிறது?

ஒழுங்கா முறையா சட்டப்படி கட்டணம் வசூலித்தால், அவர்களுக்கு கிடைக்கும் பணம் : 41 ரூபாய். 11 ரூபாய் fuel price கழிச்சா, மீதம் 30 ரூபாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு எத்தனை சவாரி எடுப்பார்கள்? 20 சவாரி? ஏன் ஆட்டோக்காரர்கள் மீட்டர் போட மறுக்கிறார்கள்? சென்னையிலிருக்கும் bloggers யாராவது, இதை ஒரு case study பண்ணலாம்.

***

சென்னையில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பொழுது நடந்த ஒரு சம்பவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. அது ஒரு நல்ல மழை நாள். இரண்டு மூன்று நாட்களுக்கு விடாது மழை அடித்த நாட்கள் அவை. அன்று கண்டிப்பாக நான் அலுவலகம் சென்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம். மழை அடித்து சற்று ஓய்ந்திருக்கிறது. ஆனால் இன்னும் விட்டபாடில்லை. சைதாப்பேட்டைக்கு பக்கமிருந்து நுங்கம்பாக்கத்துக்கு ஆட்டோ எடுக்கவேண்டும். அந்த ஆட்டோக்காரர் அன்று கேட்ட தொகை (ஆறு வருடங்களுக்கு முன்) 170 ரூபாய். வேறு வழியின்றி ஏறிக்கொண்டேன். உள்ளே ஏற்கனவே இரண்டு பேர் உட்கார்ந்திருக்கிறார்கள். ஓ shareஆ என்றேன், சற்றே தப்பிச்சோம்டா feelingல. இல்ல 170 ரூபாய் நீ (சென்னையில குப்ப கொட்டிட்டு மரியாதை எதிர்பார்த்தால் கிடைக்குமா) மட்டும் தான் கொடுக்கனும், அவங்களுக்கு வேற ரேட் என்றார். நான் ஒன்னும் சொல்லவில்லை.

கொஞ்ச நேரத்தில் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, அவரே பேச ஆரம்பித்தார். “இப்படி அநியாயமா வாங்குற காச நான் வீட்டுக்கு எடுத்துட்டு போக மாட்டேன். என் புள்ளைக நல்லா இருக்க வேண்டாமா? வீட்டுக்கு போறதுக்கு முன்னையே உங்கிட்ட எக்ஸ்ட்ரா வாங்குன காச குடிச்சே தீத்திருவேன்” பயங்கர calculative, extra காசை மட்டும் தான் குடிப்பாராம். அது சரி, குடிச்சா மட்டும் புள்ளைங்க நல்லா இருப்பாங்களா?

***

நேற்று நுங்கம்பாக்கம் Landmark சென்றிருந்தேன். சும்மா browsing என்று தான் நினைத்து சென்றிருந்தேன். நான் ஐந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த புத்தககடைகளிலே மிக பெரியது Landmark தான். அந்த பிம்பம் இன்னும் என் மனதில் அப்படியே இருந்தது. மிகப்பெரியது என்கிற பிம்பம். ஆனால் இப்பொழுது Landmarkக்கு உள்ளே நுழைந்தவுடன் என்னது இது, stationary shop மாதிரி இருக்கு என்றே நினைக்கத் தோன்றுகிறது. Singaporeஇன் PageOne, மற்றும் Malaysiaவின் TimeSquareஇல் இருக்கும் Bordersஐ பார்த்த பிறகு அப்படித்தான் தோன்றும். அதே போலத்தான் Hotel Arunachalaவும். அப்ப ஏதோ பெரியதாய் தோன்றியது, இப்ப சும்மா சர்வ சாதாரணமாய் தோன்றுகிறது.

தாழ்தளை பேருந்து, சொகுசு பேருந்து, automatic ticketing என்று எவ்வளவோ புதிதாக வந்துவிட்டது. ஆனாலும் பஸ்கள் கூட்டமாகத் தான் செல்கின்றன. 100 feet ரோட்டில் அவ்வளவு traffic. Like ஏதோ race நடக்கிற மாதிரி.இந்தப்பக்கம் ஒரு பஸ் வருது, இந்தப்பக்கம் லாரி வருது, நான் உட்கார்ந்திருந்த ஆட்டோ இரண்டுக்கும் நடுவே செல்ல பார்க்கிறது. என்னையும் என் மனைவியையும் signalஇல் நிறுத்தி இறங்கிக்கொள்ள சொல்கிறார். நானும் இறங்குகிறேன். அங்கே ஒரு traffic police நிற்கிறார். எனக்கு பகீர் என்றது. அவர் ஒன்னுமே சொல்லவில்லை, அடித்து பிடித்து சிக்னலை க்ராஸ் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. 100feet ரோட்டில் நிறைய இடங்களில் traffic police இல்லை. சிக்னல் கரெக்ட்டாக தவறாக வேலை செய்கிறது. அல்லது அவ்வாறே design செய்யப்பட்டிருக்கிறது. red signal விழும் போது நிறைய பேர் காத்திருக்கிறார்கள். green சிக்னல் விழும் போது, ஒன்றிரண்டு பேர் மட்டுமே நிற்கிறார்கள். அப்ப எப்படி மக்கள் ஒழுங்கா traffic rules follow பண்ணுவாங்க?

***

GetIt service மிகவும் உபயோகமாக இருந்தது. வீட்டில் internet வேலைசெய்யவில்லை, நாளை flightஇல் மதுரைக்கு போகவேண்டும். ஒரு கால் to GetIt. எங்கள் வீட்டுக்கு அருகே இருக்கும் Travel Agent address அடுத்த இரண்டு நிமிடங்களில் கிடைக்கிறது. நடந்து சென்று கூலாக டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம். அப்புறம் Airtelஇன் 7 days 75 rupees internet. Just one SMS. 75 rupees deducted from your account. settings received. save it. then browse using whatever you have. Laptop or PC. DataCable இல்லீன்னா Bluetooth இருந்தா போதும். Just like that! No application. Nothing.

***
Landmarkஇல் சில புத்தகங்கள் வாங்கினேன்:

1. கணையாழி கடைசிப்பக்கங்கள் – சுஜாதா – 1965-1998
2. ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் – சுஜாதா
3. ஜே.ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி
4. திக் திக் திக் – இந்திரா சௌந்தர்ராஜன்
5. சனிக்கிழமை விபத்து – ”
6. யாரென்று மட்டும் சொல்லாதே – ”

costlyயாகத்தான் இருந்தது. Landmarkஇல் தமிழ் புத்தகங்கள் நல்ல கலெக்சன்ஸ் இல்லை என்றே நினைக்கிறேன். சுஜாதாவும் பாலகுமாரனுமே நிறைந்து கிடக்கின்றனர். வேற எங்கே வாங்கலாம்? second hand bookshops? இல்லீன்னா நல்ல கலெக்சன்ஸ் இருக்கக்கூடிய பெரிய கடைகள்? ஒரு mobile library பத்தி கேள்விப்பட்டேன். விபரம் தெரிந்தவர்கள் துப்பு கொடுக்கவும்.

***

இப்பொழுது the 3 mistakes of my life – chetan bhagat படித்துக்கொண்டிருக்கிறேன். Atlast we have realised and started using our strengths என்றே சொல்லவேண்டும். IPL ஒரு மிகச்சிறந்த உதாரணம். பல வெள்ளக்காரன் நொள்ளக்காரனெல்லாம் கையக்கட்டிட்டு உக்காந்திருந்தத பாக்க முடிஞ்சது, மனசுக்கு சந்தோஷமா இருந்தது.

Landmarkஇல் இந்த புத்தகம் அதிகமாக தென்பட்டது. இவரது மற்ற பழைய புத்தகங்களும் மீண்டும் விற்க ஆரம்பித்துவிட்டன என்று நினைக்கிறேன். Five point someone கூட ஆங்காங்கே தென்பட்டது. புத்தகத்தின் விலை 95 ரூபாய்.

இந்த புத்தகத்தில் வரும் ஒரு dialogue.
“they (australia) have twenty million people. we have one billion, growing at two percent a year. Heck, we create an Australia every year. Still they cream us. Something is wrong about this”

இதற்கு பதில் அடுத்த சில பக்கங்களில் ஒரு Australia playerஇன் வழியாக கிடைக்கிறது:
“right now you (India) rely on talent more than training. You have a big population, a tiny number of them are born excellent. Like Tendulkar, or may be like Ali (a little boy in the story, who has some hyper-reflex-kinda gift)”

கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.
***