காந்தம்

காந்தம் என்கிற எனது நாவலை நான் எழுத ஆரம்பிக்கும் முன்னர் (சென்னையில் இருந்த பொழுது) ஒரு சாம்பிளாய் நான் எழுதிய கவிதை நடை கதை. ஒரே ஒரு அத்தியாயம் தான் எழுதினேன். அப்புறம் உரைநடைக்கு மாறிவிட்டேன். இன்று வீடு மாற்றும் பொழுது கண்டெடுத்த என் டைரியில் இதைப் பார்த்தேன்.

திக்கெட்டும்
கும்மிருட்டு
வரிசையாய்
குடிசைகள்.
நித்திரையில்
மக்கள்
சுறுசுறுப்பாய்
சந்திரன்.

வெளிச்சமாய்
விட்டில் பூச்சி.
துணை தெடும்
பல்லி
ரத்தம் கேட்கும்
கொசு.
ரத்தம் கேட்கும்
கொசு.
அள்ளிக் கொடுத்த
மேகம்.
ஓய்ந்து போன வானம்
தெருவெல்லாம்
குட்டை.

சளக்..சளக்..
குட்டை தள்ளாடியது.
ஒடுங்கிய குஞ்சாய்
சிறுமி.
தெருவிளக்கு
விடுமுறை
எடுத்துக்கொண்டதால்
இவள்
தடுமாறி நடந்தால்
பதற்றமாய் தெடினாள்.
‘அப்பா’
நடுங்கியது குரல்.
எங்கும்
பரவியது
பயரேகை.

நாய்கள்
தூக்கம் கலைத்தன.
எழுந்து நின்று
வெறித்தன

வேகமானாள்
சிறுமி.
‘அப்பா’
அழத் துடங்கினாள்.

கால் இடறி
கீழே விழுந்தாள்
ஒரு கால்
மேல்
கிடந்தாள்.

‘டேய்..’
உளறினான்
ஊரறிந்த
குடிமகன்.

சிறுமி
மகிழ்ச்சியானாள்
முகத்தை
உற்று நோக்கினாள்
‘அப்பா’
அசைவில்லை.

குட்டையில்
நீர்
அள்ளினாள்.
முகம் துலைத்தவனின்
முகத்தில்
அடித்தாள்.

பிதற்றினான்
பித்தன்.
கடமை அறியா
கயவன்.

‘அப்பா’
பயமாயிறுக்கிறதப்பா.
அம்மா
புரண்டு அழுகிறாள்
தம்பி பிறக்கப் போகிறானாம்.
நீ வாப்பா’

சிந்தனையில்லாதவன்
செவிமெடுக்கவில்லை.
போதையில்
காதை இழந்தவன்.

பயனில்லாததால்
புறப்பட்ட இடத்திற்கே
புறப்பட்டாள் சிறுமி.

அமைதியாய்
வீடு.
ஆறுதலாய்
பக்கத்துவீட்டு
பாட்டி
அம்மா
தூங்கிக்கொண்டிருந்தாள்.

‘உனக்கு
தம்பி பிறந்திருக்கிறானம்மா’
உள்ளே ஓடினாள்
சிறுமி.

கருப்பாய்
அழகாய்
குழந்தை.

குனிந்து
உச்சி முகர்ந்தாள்.
கண்ணத்தில்
முத்தமிட்டாள்.
அருகில்
அமர்ந்தாள்.

அழ்ந்த
உறக்கத்தில் இருந்தான்
ஆளப்பிறந்தவன்.

ஓலகஞாநியண்ணனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

ரஜினிக்கு நீங்கள் எழுதிய பகிரங்கக் கடிதம் கண்டேன். “உதறுதில்ல” என்கிற உங்களது நக்கலை வெகுவாக ரசித்தேன். வாழ்த்துக்கள்.

இந்த வார அதிர்ச்சி : திமுக கலைஞர் பற்றி ஓ பக்கங்களில் ஏதும் இல்லாதது
என்று நீங்களே உங்கள் ஓ பக்கங்களைப் பற்றி அதிர்ச்சி தெரிவித்துக்கொள்கிறீர்கள். உங்கள் அதிர்ச்சி கிடக்கட்டும் விடுங்கள், அது யாருக்கு வேண்டும்? அப்படி நீங்களே உங்கள் ஓ பக்கங்களில் திமுக வரவில்லை என்று அதிர்ச்சியடைகிறீர்கள் என்றால், திமுகவை பற்றியும் கலைஞரைப் பற்றியும் ஒவ்வொரு ஓ பக்கங்களிலும் எழுதிக்குவித்துக்கொண்டு வருகிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களுக்கு திமுகவையும் கலைஞரையும் பிடிக்கவில்லை (அல்லது உங்களுக்குள் ஏதோ ஒரு மனஸ்த்தாபம்) என்கிற ஒரே காரணதுக்குக்காகத்தானே வாரா வாரம் எழுதுகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத ஒரே காரணதுக்காக, நீங்கள் வாரா வாரம் எழுதிக்கிழிக்கும் பத்தியை படிக்கும் எங்களுக்கு அதில் விசயம் இருக்கிறதா இல்லையா என்று கூட நினைத்துப்பார்க்காமல், கலைஞரையும் திமுகவையும் அட்டாக் செய்யும் ஒரே நோக்கத்தோடு நீங்கள் எழுதுகிறீர்கள். ஒலகஞாநியண்ணே சாதரண வெகு ஜனப் பத்திரிக்கையின் பத்தி எழுத்தாளரான நீங்களே இவ்வளவு அரசியல் பண்ணும் பொழுது உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வைத்திருக்கும் ரஜினி எவ்வளவு அரசியல் பண்ணுவார்?

ரஜினி அரசியலை சினிமாவுக்கு பயன்படுத்தறார் என்கிறீர்கள், நீங்கள் அரசியலை உங்கள் பத்திக்கு பயன்படுத்துகிறீர்கள். என்ன வித்தியாசம், சொல்லுங்க ஒலகஞாநியண்ணே. ஒரு தளம் கிடைத்துவிட்டது, கையில் பேனாவும் இருக்கிறது, இடஒதுக்கீடு பிரச்சனைக்கப்புறம் நாமளும் பெரிசா ஏதும் எழுதல, என்பதற்காக அப்பாடா ரஜினி மாட்டினாரு, வாய்யா வாய்யா வாய்யான்னு எழுதாதிங்க ஒலகஞாநியண்ணே.

மேலும் அதே பத்தியில்

இந்த வார பூச்செண்டு : ரஜினிக்கு அழுத்தமான கதையுடன் ஒரு படத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு அளித்ததற்காக

என்று பத்தி முழுக்க அவர்மீது சேற்றை வாரி இரைத்துவிட்டு, இந்தாப்பா பூச்செண்டு சேறு வாசனை நல்லாருக்காது, பூச்செண்ட முகர்ந்து பாத்துக்கன்னு ஏன் கொடுக்கனும்?

குசேலன், “ஞாநி” அவர்களது தங்கக் கைகளால் பூச்செண்டு வாங்கும் அளவிற்கா நன்றாக இருக்கிறது. தருமி கேட்டது மாதிரி “என் பாடலில் எவ்வளவு பிழைகள் இருக்கின்றனவோ அவ்வளவை நீக்கிவிட்டு மீதம் இருப்பதற்கு பரிசு கொடுங்கள் மன்னா” என்றது போல, படத்திலிருக்கும் ஆபாசத்தையும், அபத்தத்தையும் நீக்கிவிட்டு, மற்றவைக்கு பூச்செண்டு கொடுப்பாராம். பத்தி முழுவதும், குசேலனை தாக்குகிறார், பிறகு பூச்செண்டாம்.

ரஜினியை மானங்கெட பேசிவிட்டு, அதே பத்தியில் பூச்செண்டு தரவேண்டிய அவசியம் என்ன? இப்ப உங்க பேனா உதறுதில்ல?

உங்கள மாதிரி அரசியல் பண்ண அவருக்கு சாமர்த்தியம் பத்தல. இருந்துச்சுன்னா நீங்க சொன்னது போல, கர்நாடகவை எதிர்த்து பேசிட்டு உடனே “எடியூரப்பா இன்று குளித்துவிட்டு வந்ததால் அவருக்கு பூச்செண்டு” என்று ரஜினி பேசியிருக்கக்கூடும்.

மேலும் உங்களைப் போல அவர் இவ்வாறெல்லாம் பேசியிருக்கலாம்:


இந்த வார குட்டு: ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடகா எதிர்ப்பதால், எடியூரப்பாவுக்கு ஒரு கில்லும், வாட்டாளுக்கு ஒரு கொட்டும்.

இந்த வார பூச்செண்டு: பெங்களூரில் IT கம்பெனிகள் நடத்தி தமிழர்கள் பலருக்கும் வேலை கொடுப்பதால், எடியூரப்பாவுக்கு ரோஸ் பூச்செண்டு, வாட்டாளுக்கு லாவண்டர் பூச்செண்டு. “

இப்படியெல்லாம் உங்களைப் போல ரஜினி பேசிருந்தாருன்னா, அவர் பிழைச்சுக்கிடுவார். அந்த சாமர்த்தியம் பத்தலண்ணே, ஞாநியண்ணே. கொஞ்சம் அவருக்கு சொல்லிக்கொடுங்க.

அரசியலில் நீங்கள் குரல் கொடுத்த பொழுதெல்லாம் அதையொட்டி உங்கள் படம் தயாரிகிக்கொண்டிருப்பது வழக்கம்” என்று பேனா கிடைத்த மெத்தனத்தில் எழுதியிருக்கிறீர்கள்.

எத்தனை முறை ரஜினி தனது படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்னர் அரசியல் பேசியிருக்கிறார்? Data கொடுக்கமுடியுமா ஒலகஞாநியண்ணே? சந்திரமுகிக்கு முன்னால் பேசினாரா? “நான் குதிரை” என்று அவர் பேசியது அரசியலா? சிவாஜி வெளியீட்டுக்கு முன்னர், அவர் அரசியல் பேசினாரா? பாட்சா படம் ஜனவரியில் ரிலீஸ் ஆனது, அவர் ஜெயலலிதவை எதிர்த்து எப்பொழுது பேசினார்? அவர் அரசியல் பேசித்தானா அவர் படம் ஓட வேண்டும்? எனக்கு தெரிந்த எத்தனையோ பெண்கள் குடும்பம் சகிதமாக சிவாஜி ரிலீஸ் தேதியன்னைக்கு தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்கள். அவர்கள் அரசியலில் துளியும் ஆர்வம் இல்லாதவர்கள்.

முதன் முதலில் பொது பிரச்சனையில் தெளிவாகப் பேசியது ஒகேனக்கல் பிரச்சனையில் தான்
ஓகோ அப்படி! இப்ப யார் எப்பப்ப டெளிவா பேசறாங்கங்கறத தேர்ந்தெடுக்கிற பொறுப்பு உங்களோடதா? சொல்லவேயில்ல! இனி மேலும், இந்த வாரம் டெளிவா பேசினவருக்கு ஒரு பூச்செண்டு. டெளிவா பேசாவதங்களுக்கு கொட்டுன்னு ஒரு பகுதி ஆரம்பிச்சிருங்க சார். செம ஐடியா!

எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க சொல்லவில்லை” என்று ரஜினி பல்டி அடித்ததாக சொல்லுகிறீர்கள்.
அப்படீன்னா எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கச்சொன்னாருன்னு சொல்றீங்களா? நீங்களே உக்காந்து யோசிச்சிட்டு சொல்லுங்க, எல்லா கன்னடகாரர்களையும் உதைக்க முடியுமா? ஒலகஞாநின்னு பேரவெச்சுக்கிட்டு இப்படி அசட்டுதனமா பேசினா எப்படி? எல்லா கன்னடகாரர்களையும் உதைக்கறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்? கால் வலிக்குமா வலிக்காதா?

“குசேலன் பட வெளியீட்டை கர்நாடகாவில் தடை செய்ய முனைந்ததுதான் உங்கள் பல்டிக்கு காரணம்” என்கிறீர்கள்.
கண்டுபிடிச்சுட்டாருய்யா நம்ப ஒலகஞாநியண்ணே. ஆமா அதுக்குத்தான். இது தான் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே! என்ற சொல்லை உங்களை போல ஒலகஞானம் கொண்ட பத்தி எழுத்தாளர் உபயோகிக்கலாமா? நெஞ்சில் கையை வைத்து சொல்லுங்கள், நமக்கு தண்ணீர் வராததற்கு அவர்கள் மட்டும் தானா காரணம்? நீங்கள் தெருக்களில் குழாயடி சண்டைகளை பார்த்ததில்லையா? ஏன் சென்னையில் லாரி தண்ணீர் பிடிக்க சென்றதில்லையா? ஆமா ஆமா திமுக பற்றிய செய்திகளை பூதக்கண்ணாடி வைத்து நாள்தோறும் தேடிக்கொண்டிருந்தால், எப்படி இதற்கெல்லாம் நேரம் இருக்கும்? நம்ப தெருவில, இந்த பக்கம் தெருவில வர்ற அடிகுழாய் தண்ணிய அந்தப் பக்கம் தெருவில இருக்கிற மக்களுக்கு கொடுக்க மாட்டேங்கறாங்க ஒலகஞாநியண்ணே. அப்ப அவங்கள என்ன சொல்லுவீங்க? தமிழ்த்தெரு-வெறியர்கள்? மேலும் ஒரு ஐடியா சார். கப்புன்னு பிடிச்சுக்கோங்க: இந்தவாரம் குழாயடி சண்டை போட்டவர்களுக்கு கொட்டு. குழாயடி சண்டை போடாதவர்களுக்கு பூச்செண்டு.

பத்து பேரை தனியாளாக அடித்துப் போடுவது…எல்லாம் திரையில் தான் சாத்தியம்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நடிகர்கள் அப்படித்தாண்ணே. நீங்க உண்மையிலே ரஜினி திரும்பி மொறச்சு பாத்தா தீக்குச்சி பத்திக்கும்னு நினைச்சீங்களாண்ணே? ஐயோ பாவம். இந்தமாதிரியான குற்றச்சாட்டு, நாங்கள் பள்ளிக்கூடம் படிக்கும் போது, ரஜினிரசிகர்களுக்கும் கமல் ரசிகர்களுக்கும் இடையே நடக்கும் சண்டைக்குத்தான் பயன்படுத்துவோம். ஒலகஞாநியண்ணே இத தன்னோட ஒலகபத்தியில எழுதியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு.

“அது யாரோ ஒரு ரைட்டர் ஒரு படத்துல எழுதிய வசனம். அதை நான் பேசியிருக்கேன். அதை உண்மைன்னு நீங்க எடுத்துக்கிட்டா நான் என்ன செய்யறது” என்று சொல்லுகிறீர்கள். எவ்வளவு நேர்மையான, சரியான பதில் ! இதைப் பல வருடங்கள் முன்பே நீங்கள் சொல்லியிருந்தால் இப்போது வந்திருக்கும் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு வந்திராதே.” என்கிறீர்கள்.

ஒலகஞாநியண்ணே, அவர் இப்பொழுது சொல்ல என்ன நேரம் வந்துவிட்டது? சினிமாவிலிருந்து விலக்கிக்கொள்கிறாரா? அடுத்து அதிக பொருட்செலவில் தயாராகப் போகும் ரோபோ லைனில் இருக்கிறது. அவர் இந்த கேள்வியை படத்தில் வைத்திருக்கவே தேவையில்லை. வாசுவை பார்த்து ஒரு கண்ணசைவு செய்தால் போதும். அப்படியிருக்க அவர் இந்த வசனத்தை படத்தில் வைக்கவேண்டிய அவசியம் என்னவென்று கொஞ்சம் யோசிச்சீங்களா? சின்ன பிள்ளை மாதிரி குதிக்கிறீங்க? இவர் அஞ்சு வருசத்துக்கு முன்ன இத சொல்லிருந்தாலும், இன்னும் அஞ்சு வருசத்துக்கு முன்னால சொல்லிருந்தா எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லியிருப்பீங்க.

“நான் வந்தா என்ன வராட் என்ன ? நீங்க உங்க வேலையைப் பாத்துகிட்டுப் போக வேண்டியதுதானே” என்கிறீர்கள். மக்கள் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கொண்டுதான் இருந்தார்கள். நீங்கள்தான் வந்து அரசியல் டயலாக் பேசி உங்கள் பக்கம் கவனத்தைத் திருப்பினீர்கள்.

இது அபத்தமோ அபத்தம். சின்னப்பிள்ளைகள் சண்டையிட்டுக்கொள்வதைப் போல.”நான் பேசாட்டுக்கு பேசாட்டுக்கு தாம்ம்மா இருந்தேன், இவந்தான் என்னய கிள்ளிவெச்சுட்டான்னு” சொல்றமாதிரி. அட்லீஸ்ட் உங்களோட பத்தி ஞானத்தையாவது யூஸ் பன்ணியிருக்கலாமே?!

சுந்தர்ராஜனின் இன்னொரு கேள்விக்கு படத்தில் பதிலே இல்லை. வயசுப் பொண்ணுங்க கிட்ட வந்து `பழகிக்குங்க’ என்று பேசும் கேவலத்தைப் பற்றிக் கேட்கிறார். பதிலே இல்லை.

பழகிக்கங்கன்னு சொல்றதுல அப்படி என்ன கேவலம் இருக்குன்னு எனக்கு புரியலண்ணே. அது ஒரு காமெடிக்குத்தானே வெச்சாங்க? ஓகோ படத்துல வர்றதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கிற ஆளா நீங்க? இது கேவலம்ன்னா இதவிட கேவலமா வேற எந்த படத்திலயும் இதுவரைக்கும் எதுவுமே வரலீங்களா ஒலகஞாநியண்ணே? குமுதம் “மூன்று பக்கங்களுக்கு மிகாமல் ரஜினியை பற்றி எழுதவும்” அப்படீன்னு சொன்னாங்களா? எதையெதையோ பிடிச்சு எழுதியிருக்கீங்க gap fill பண்ணியிருக்கீங்க?

சூப்பர் ஸ்டர் இமேஜ் ஒகேனக்கல் வெள்ளத்தில் அடித்துப்போய்விட்டது” ஆமாப்பா, சொல்ட்டாரு கேட்டுக்கங்க. இப்ப “ரஜினி தூற்று” வெள்ளத்தில் நம்ப ஒலகஞாநியண்ணே பிச்சுக்கிணு போறாரு. எத்தனை பேர் படிச்சிருப்பாங்க. ரஜினி பத்தி எழுதிருக்காருன்னு. என்னோட பழைய boss கூட கேட்டார்: தலைவரை பத்தி யாரோ ஞாநிங்கறவரு ஏதோ எழுதிருக்காராமில்ல, இன்னைக்கு குமுதம் படிக்கனும்.

சார், ஞாநிசார், ஒலகஞாநிசார், பேமஸ் ஆகிட்டீங்க சார். வாழ்த்துக்கள்.

என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய..

Basics first. ஒகேனக்கல் பிரச்சனைக்கும் நடிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?

*

திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் எந்த நிலையில் வைத்திருக்கிறோம் என்பதைப் பற்றிய மறு ஆய்வுக்கான நேரம் வந்துவிட்டதென்றே நான் நினைக்கிறேன். சொல்லிக்கொள்ளலாம், எங்களுக்கு அவர்கள் just heroes என்று. ஆனால் அதே ஹீரோ நமக்கு பிடிக்காத அல்லது நம் அறிவுக்கு எட்டிய அளவிற்கு நியாயமில்லாத செயல்களை செய்யும் பொழுது நமக்கு கோபம் வருகிறது. ஆனால் அதே போல வேறொரு ஹீரோ செயல்படும் பொழுது நமக்கு கோபம் வருவதில்லை. அந்த தனிப்பட்ட ஹீரோவின் மீது மட்டும் நமக்கு ஏன் கோபம் வருகிறது? அவருக்கு நம் மனதில் தனியானதொரு இடம் இருக்கிறது என்று அர்த்தம், இல்லியா?

*

ரஜினிகாந்த் ஒகேனகல் பிரச்சனையில் மன்னிப்பு கேட்டிருக்கிறார், அல்லது காலில் விழுந்திருக்கிறார், அல்லது குரங்கு பல்டி அடித்திருக்கிறார் அல்லது என்னமோ செய்திருக்கிறார், இதில் யாருக்கு என்ன பிரச்சனை? முதலில் கன்னட பிரச்சனையில் அவர் பேசியதே, உங்களை நினைத்து பயந்து தானே! எங்கே பேசாமல் போய்விட்டால் தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்களோ (அல்லது தனது சம்பாதிப்பு தடைப்படுமோ!) என்கிற காரணத்தினால் தானே. அமேரிக்காவிலோ அல்லது சிங்கப்பூரிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டில் வாழும் NRIகளான நீங்கள், உங்கள் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே வைத்து சொல்லுங்கள் பார்ப்போம், எந்த தருணத்திலாவது நீங்கள் தங்கி பிழைப்பு நடத்தும் நாட்டுக்கு ஆதரவாக, உங்கள் தாய்நாட்டுக்கு எதிராக குரல் நீங்கள் கொடுப்பீர்களா? கன்னடத்திற்கு தமிழ்நாட்டிற்கும் இடைய இருக்கக்கூடிய இந்த பிரச்சனை ரஜினிகாந்துக்கு ஒரு தர்மசங்கடம். இங்கேயும் பகைச்சுக்கமுடியாது, அங்கேயும் பகைச்சுக்க முடியாது. அங்கே அவரது இரத்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் இருக்கின்றனர். இங்கே அவரது ரசிகர்கள் (மற்றும் சொத்துக்கள், மேலும் இனி சம்பாதிக்கப்போகும் சொத்துக்கள்) இருக்கின்றனர். மேலும் ரஜினிகாந்தின் உண்மையான மனநிலையை அவர் மட்டுமே அறிவார். மற்றவர்கள் சொல்லுகிற படி காசுக்காக சுயமரியாதையை இழப்பவராக இருக்கலாம், அல்லது என்ன செய்வது என்கிற தர்மசங்கடத்தில் அவர் இவ்வாறு செய்திருக்கலாம். யாரறிவார்?

*

ரஜினிகாந்த் எதற்காக குரல் கொடுத்தார்? கலவரத்தை தூண்டுபவர்களை உதைக்கவேண்டும் என்று யாருக்காக சொன்னார்? தர்மசங்கடத்தில் சொன்னாரோ அதர்மசங்கடத்தில் சொன்னாரோ, சொன்னாருல்ல? நமக்காகத்தான சொன்னார்? தமிழர்களுக்காகத்தான் குரல் கொடுத்தார்? பின் விளைவுகளை பற்றி யோசித்தாரா? (சாரி கேட்டுக்கிட்டா போச்சுன்னு யோசிச்சாரோ என்னமோ?!) அதற்கு வாட்டாள் என்ன சொன்னார்? அவர் எப்படி கன்னடத்துக்குள் வருகிறார் என்று பார்ப்போம், அவரது படங்கள் எப்படி இங்கே திரையிடப்படுகிறது என்று பார்ப்போம் என்று சொன்னார் அல்லவா? நமக்காக குரல் கொடுத்த அவருக்கு பிரச்சனை வருகிறது என்கிற பொழுது நாம் என்ன செய்தோம்? ரஜினிகாந்துக்கும் ராமதாஸ¤க்கும் நடந்த பிரச்சனைகளில் நாம் என்ன செய்தோம்? காற்று போன பலூன் என்று திரு.ராமதாஸ் அவரை புகழ்ந்த பொழுது, இன்று அவரை தமிழனத்துரோகி என்று வர்ணிப்பவர்கள் அவருக்காக என்ன செய்தார்கள்? இல்லை என்ன செய்ய முடியும்? படம் பார்க்கிறோம் படம் பார்க்கிறோம் என்று சொன்னால், thats just for our entertainment. அதும் திருட்டு வீசிடியில் பார்த்துவிடுகிறோம். அதை தவிர அவருக்கு என்ன நாம் செய்திருக்கிறோம்? அப்படியும் பாபா படம் தோழ்வியைத்தானே தழுவியது. நாம் அவரை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ஆடுகிறோம் என்றால் பாபா படம் பிச்சுக்கிட்டில்லா ஓடிருக்கனும்? பாபா படப்பெட்டியை தூக்கிக்கொண்டு ஓடிய பொழுது “நல்ல சினிமா” (அவர்களுடைய பிரச்சனை) என்று தானே சும்மா பார்த்துக்கொண்டிருக்கிறோம்? நாம் அவரை நமது entertainmentக்காக மட்டும் உபயோகிப்போம், ஆனால் அவர் நமக்கு முதல்வரைப் போல நல்ல (?!) காரியங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தால் எப்படி? அவர் யோசிப்பாருல்ல. என்னடா இப்படி தமிழ்நாட்ட நம்பி நம்ம நாட்ட பகைச்சுக்கிட்டோமே, இப்ப என்ன பண்றது. இவிங்க சும்மா சும்மா தலைவர் தலைவர்ன்னு தான் சொல்றாய்ங்க, கண்டிப்பா மத்த எல்லாரையும் (சிவாஜி, டிஆர், பாக்யராஜ், ராமராஜன்) கவுத்தத போல நம்மையும் கைவிட்டுருவாய்ங்கன்னு நினைப்பாருல்ல. நினைக்கறதில்ல என்ன தப்பு? மேலும் அன்றைக்கு, ஒகெனக்கல் பிரச்சனையில் எல்லா நடிகர்களும் அவேசமாக பேசிவிட்டு பிரச்சனையை பெரிதாக முடிக்கிவிடும் தருணத்தில், தமிழக அரசு எதற்காக ஜகா வாங்கியது? எதற்காக தேர்தல் முடியட்டும் என்று காத்திருந்தது? குசேலன் பட ரிலீசுக்கு முன்னால் ரஜினி மன்னிப்பு கேட்டது சுயநலம் என்றால் இது எந்த வகை? நீங்க தேவைப்படும் போது பிரச்சனைய கிளப்புவீங்க. மேடை போடுவீங்க. ஊர்வலம் போவீங்க. வேண்டாம்னு நினைச்சா பிரச்சனைய மூட்டகட்டிட்டு, இன்னொருநாள் பாத்துக்கிடலாம்னுட்டு போவீங்க. நாங்க எங்க businessஅ இழக்கனுமா? அப்படீன்னு கூட அவர் நினைத்திருக்கலாம். யோசித்திருக்கலாம். நியாயம் இருக்குல்ல?

*

குசேலன் படத்தில் இருந்த அந்த அரசியல் வசனத்தை நீக்கிவிட்டதாக படித்தேன். அந்த வசனம்: எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்ட்டா வருவேன்னு சொன்னீங்கல்ல, (ரஜினி தன் வாழ்நாளில் தான் பேசிய வசனத்துக்காக ரொம்பவும் வருந்துகிறார் என்றால் அது இந்த வசனமாகத்தான் இருக்கவேண்டும்)அது ஏன் சொன்னீங்க? (என்ன மயித்துக்கு சொன்னன்னு சுந்தர்ராஜன் கேட்ப்பார்) ரஜினி: அது அந்த திரைப்படத்தின் வசனகர்த்தா எழுதிக்கொடுத்த வசனம். நான் பேசினேன். நீங்க தவறா புரிஞ்சுக்கிட்டா நான் என்ன பண்றது. (இது கரெக்டான வசனம் இல்லை. என் ஞாபகத்தில் இருந்தது)

இந்த வசனத்தை ஏன் நீக்கவேண்டும்? ரசிகர்களின் மனது புண்படுகிறதாம். நிறைய கடிதங்கள் வந்தனவாம். அடச்சே! திருந்தவேமாட்டீங்களாப்பா? அவரு தான் சொல்லிட்டாருல்ல. அப்புறம் வசனத்தை நீக்குவதால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது? ரசிகர்கள் சங்கடப்படவில்லை. ரஜினியின் ரசிகர்கள் விசித்திரமானவர்கள். எத்தன அடிச்சாலும் தாங்குவாங்க. அவங்க ரொம்ப நல்லவங்க. மற்றவர்கள் ரஜினியை கேவலமாக பேசுகிறார்களே என்கிற காரணத்தால் மட்டுமே, அவர்கள் வசனத்தை நீக்கவேண்டும் என்று விரும்பியிருப்பார்கள்.

*

எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. குசேலன் படம் ரிலீஸ் ஆவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் தான் ரஜினி கன்னட மக்களிடம் மன்னிப்போ சாரியோ பூரியோ கேட்டிருக்கிறார். இப்படி கேட்பதால், தன்னுடைய படம் ஓடுவதற்கு ஏதும் பிரச்சனை வந்துவிடக்கூடாது என்று தான் இப்படி பல்டி அடிக்கிறார் என்பதை நேத்து பிறந்த குழந்தை கூட சொல்லும். அது ரஜினிக்கு தெரியவில்லையா? நம்மை முழு சுயநலவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள் என்பதை அவர் யோசிக்கவில்லையா? அப்படியா, அவ்வளவு மோசமாகவா அவருடைய அலோசகர்கள் இருக்கிறார்கள்?

அதாவது; நாம் நம் குடும்பத்தினருடன் இன்று சண்டை போட்டுக்கொள்ளலாம், நாளை சேர்ந்துவிடலாம். சாரி கேட்கத்தேவையில்லை. அடுத்தவனுடன் சண்டையிட்டால், கண்டிப்பாக சாரி கேட்டுத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் மூக்கை உடைப்பான்.

அப்பா அம்மாவுடன் சண்டை போட்டாலும் பரவாயில்லை, அடுத்தவனுடன் சமாதனமாக போய்விடுவது உசிதம். அப்பா அம்மாவை எப்படின்னாலும் சரி கட்டிடலாம். என் செல்ல அப்பா என்றோ என் செல்ல அம்மா என்றோ இல்லை என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய அப்பா அம்மா என்றோ ஏதோ ஒன்றை சொல்லி சரிக்கட்டிடலாம். சரிக்கட்டிடலாம்.

*

அதனால் தான் சொல்கிறேன், திரைப்படங்களையும் திரைக்கலைஞர்களையும் நாம் மறுமதிப்பீடு செய்யவேண்டிய முக்கியமானதொரு தருணத்தில் இருக்கிறோம். இல்லையேல் ரஜினி நாளைக்கு அவருடைய மகளிடமோ மனைவியிடமோ மருமகனிடமோ சாரி கேட்டால் கூட நாம் அவரது போஸ்டர்களை கிழிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம்.

*

200வது பதிவு : Randy Pausch

இது என்னுடைய 200வது பதிவு. என்னுடைய மொக்கை பதிவுகளை வாசித்து கடுப்பாகி பின்னூட்டம் இட்டவர்களுக்கும், அப்படியே அப்பீட்டாகிய ரொம்ப நல்லவர்களுக்கும், என்ன பண்றது நம்ப ஆளாகிட்டான்னு சும்மானாச்சுக்கும் பாராட்டியவர்களுக்கும், என் பதிவுக்கு தொடுப்பு கொடுத்து இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆக்சிஜன் செலுத்திய அன்பர்களுக்கும் நன்றிகள் பல பல!

*

Randy Pausch எழுதிய The Last Lecture என்கிற புத்தகத்தை இப்பொழுது படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே மூச்சாக படித்து மூடிவைத்துவிடக்கூடிய புத்தகம் அல்ல அது. Randy Paush-ஐ பற்றி ஒரே நொடியில் நீங்கள் தெரிந்து கொண்டு விடலாம் எனினும், நானும் அவரை பற்றி குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

கார்னகி மெல்லான் (Carnegie Mellon) யுனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்டிஸ்ட்டாக வேலை செய்து கொண்டிருந்தவர் Randy Pausch. ஒவ்வொரு விரிவுரையாளருக்கும் தனது பணி நிறைவுரும் (retirement) தருணத்தில் கடைசி லெக்சர் என்றொரு சடங்கு உண்டு. அது தான், அவர் அந்த கல்லூரியில் தரும் கடைசி லெக்சர். ஆனால் Randy Pauschக்கோ இந்த கடைசி லெக்சர் தான், அவருடைய வாழ்நாளின் கடைசி லெக்சர்.

Randy Pausch, Terminal Pancreatic Cancerஆல் பாதிக்கப்பட்டவர். August 2007இல் இன்னும் மூன்று மாதம் தான் என்று மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர். Randy Pausch போராடினார். தான் ஆசையாய் காதலித்து மணந்த மனைவியையும், மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு போகக்கூடாது என்று தன்னால் முயன்றவரை போராடினார். ஆனால் முடிவில் விதி வென்றது.

குழந்தைகள் வளரும் பொழுது அவர்களை நெறிப்படுத்த தான் இருக்கமாட்டோமே என்று வருந்தினார். ஆனால் அவர்களின் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளை இப்பொழுதே அவர்களுக்கு சொல்லிவிடலாம் என்றால் கூட, அதை முழுவதுமாக கேட்டு புரிந்துகொண்டு அத்தனையையும் உள்வாங்கிக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் இன்னும் குழந்தைகளே!

தான் கூற நினைக்கும் அறிவுரைகளையும், தனது அனுபவங்களையும் தனது கனவுகளை எப்படி தன்னால் அடையமுடிந்தது என்பதையும் வீடியோவில் பதிந்து வைத்துக்கொள்ளலாம் என்ற அவரது மனைவியின் யோசனையை அவர் நிராகரித்தார். வீடியோவில் தான் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் குழந்தைகளுக்கு சாதாரண அறிவுரையாக போய்விடும், நானூறு பேர்களின் முன்னால், படித்த லெக்சரர்களின் முன்னால் பேசினால், அவர்களது அமோதிப்பும் சேர்ந்து, குழந்தைகளிடம் சரியாக போய்ச்சேரும் என்று நினைத்து, தனது வாழ்நாள் சாதனைகளை (சாதனைகள் தான், அவரது புத்தகத்தை இல்லையெனில் அவரது லெக்சர் வீடியோவை பாருங்கள்!) ஒன்று திரட்டி ஒரு presentationஇல் தனது கல்லூரியில் The Last Lectureஆக கொடுத்தார். அவரது Topic: Really achieving your childhood dreams!

சாதனை என்பது என்னவென்றால், நினைத்ததை முடிப்பது. கனவுகளை நனவாக்குவது. நம்மில் எத்தனை பேருக்கு அது முடிந்திருக்கிறது? தனது கனவுகளை நிறைவேற்றிவிட்டதாக கூறும் Randy Pauschஇன் The Last Lectureஐ இங்கே பாருங்கள்!

Randy Pausch – July 25 2008இல் உயிர் நீத்தார்.

மொத்தமாக புத்தகத்த படித்துவிட்டு மேலும் சொல்லுகிறேன்.

*

நிஜ ஸ்பைடர்மேன் and other rants !

அலைன் ராபர்ட் (Alain Robert) என்கிற ப்ரெஞ்சு “ஸ்பைடர்மேன்” உலகத்தின் 85 உயரமான கட்டிடங்களை (including Eiffel Tower in Paris) வெறும் கையை உபயோகித்து ஏறி சாதனை (?) புரிந்திருக்கிறார். இவர் நாளை சிங்கப்பூர் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு, சிங்கப்பூரில் இருக்கும் ஏதோ ஒரு கட்டிடத்தை ஸ்பைடர்மேன் போல ஏறி சாதனை புரியப்போகிறார். எந்த கட்டிடம் என்பது ரகசியம். நாளை பொறுத்திருந்து பாருங்கள்.

46 வயதான இவர் இதற்கு முன்னர், 1997இல் Great World City என்கிற 18 மாடி கட்டிடத்தை ஏறி கடந்திருக்கிறார். பிறகு 2000இல் ரா·பிள்ஸ் ப்ளேஸ்-இல் இருக்கும் 63 தளங்களைக் கொண்ட யூனியன் பேங்க் கட்டிடத்தில் ஏறிக் கொண்டிருக்கும் பொழுது, 23வது மாடியில் வைத்து கைது செய்யப்பட்டார். “ஜன்னல்களை திறக்க முடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை, போலீஸ் இரண்டு மாடிகளின் ஜன்னல்களை திறந்து விட்டனர். நான் ஏறமுடியாமல் மாட்டிக்கொண்டேன்!” என்று வருத்தத்துடன் சொன்னார் அவர்.

பெட்ரோனாஸ் ட்வின் டவர் (Petronas Twin Tower), Taipei 101 மற்றும் சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ் பில்டிங் போன்ற கட்டிங்களையும் ஏறியிருக்கிறார்.

*

மேலும் தற்போது சிங்கப்பூர் வந்திருக்கும் மற்றொரு நபர்: Jimmy Wales. யாரென்று தெரிகிறதா? விக்கிபீடியாவின் நிறுவனர். இந்த முறை நான் இந்தியா சென்றிருந்த பொழுது, புதிய சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்துக்கு வெளியே படியில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தபொழுது, என்ஸைக்ளோபீடியாக்களை விற்றுக்கொண்டிருக்கும் (விற்க முயற்சிசெய்யும்) சிலரைப் பார்த்தேன். எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. இந்த மாதிரியான என்சைக்ளோப்பீடியாக்களை இன்னும் யாரெனும் வாங்குகிறார்களா என்ன? இதை விற்பதனால் இவர்களுக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது? ஒரு மாதத்திற்கு எத்தனை விற்பார்கள்? இது என்சைக்ளோப்பீடியா என்று தெரிந்திருப்பவர்களுக்கு கண்டிப்பாக இணையத்தை பற்றியும் தெரிந்திருக்கும். இணையத்தை தெரிந்தவர்களுக்கு விக்கிப்பீடியாவை கண்டிப்பாக தெரிந்திருக்கும். தெரிந்தால் அவர்கள் காசு கொடுத்து என்சைக்ளோப்பீடியாவை வாங்குவார்களா?

விக்கிப்பீடியாவை 263 மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்களாம். இணையத்தை பயன்படுத்தும் மொத்த மக்கள் தொகையில் 31 விழுக்காடு ஆகும். மொத்தம் 253 மொழிகளில் இயங்கிவருகிறது விக்கிபீடியா.
Encyclopedia Britannicaவில் இருக்கும் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக மூன்று தவறுகள் இருக்கிறது என்றும், அதே போல விக்கிப்பீடியாவின் ஒவ்வொரு கட்டுரையிலும் சராசரியாக நான்கு தவறுகள் இருக்கிறது என்றும் Scientific journal Nature – கூறுகிறது.

Whats Jimmy Wales philosophy?
“Imagine a world in which every single person on the planet is given free access to the sum of all human knowledge”

*

Georgia Crisis பற்றிய செய்திகளை புரட்டிக்கொண்டிருந்த பொழுது, இந்த வரிகளை படிக்க நேர்ந்தது: அதே சமயத்தில் புஷ் CNN-இல் ரஷ்யாவை கண்டித்தும் “we will stand behind Georgia” என்றும் கொஞ்சம் கூட சிரிக்காமல் பேசிக்கொண்டிருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது? Man, you Rock! எத்தனை பேர் பின்னால் தான் நீங்கள் நிற்பீர்கள்? இந்த சந்தர்ப்பத்தில் நெல்லை கண்ணன் அவர்கள் விஜய் டீவியின் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் சொன்னது என் நினைவுக்கு வருகிறது: “உலகத்தை சிவப்பாக்கிக் கொண்டிருக்கும் மாளிகைக்கி வெள்ளை மாளிகை என்று பெயரிட்டிருப்பது விந்தையாக இருக்கிறது!”

“The moral of the story, though, is quite simple. The same western governments that supported the invasion of Iraq under the slogan of “regime change” and recently recognised the unilateral declaration of independence of Kosovo – another group of European ethnic rebels – are now telling Russia to stop doing similar things in Georgia.”

நச்!

*
ஆட்டோகிராப் ஒரு தத்துவ ஆய்வு என்கிற cheran’s autograph and the antinomies of Totality என்கிற கட்டுரையின் தமிழாக்கத்தை உயிர்மையில் படித்தேன். மற்றொரு angle.

அவள் இவனுடைய கற்பிதம்தான் என்பதும், அவளுடைய குணங்கள் தமிழ் சினிமாவின் மரபிற்கு ஏற்றது போல் திரிக்கப்படுகின்றன என்பதும், அவளுடைய சமூகச் சூழலைக் கதாநாயகனுக்கு சாதகமாகத் திரைப்படம் விவரிப்பதில் உறுதியாகிறது. அவளுடைய தரவாட் மாளிகையைப் பார்க்கும்போது, அவள் தாய்வழிச் சமூகத்தை முதன்மைப்படுத்தும் நாயர் குலத்தில் பிறந்தவள். அந்தக் குலத்தில் விதவை என்ற நிலைக்கே இடம் கிடையாது. மிகவும் மோசமான சூழலில்கூட, அதாவது அந்தக் குலத்தைச் சார்ந்த ஆண்கள் அதிகமாகப் போரிலே இறந்த சூழலிலும், கயிறு (1978) என்ற தகழி சிவ சங்கரனின் நாவலில் வருவது போல, நம் பூதிரி குலத்தில் பிறந்த ஆண்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுடன் நியோகம் செய்து, பிள்ளைகளைப் பெற்ற பிறகு, அவர்களுக்கு வெகுமதி அளித்து விடை பெறச் சொல்லுவதுதான் அந்தச் சமூகத்தின் வழக்கம். மேலும் இந்த முறையில் தந்தைக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. மாறாக தாய் மாமனுக்குத்தான் ஆண் பிள்ளைகளை வழிநடத்தும் அதிகாரம் தரப்படும். சொத்துகள் எப்பொழுதும் தாயிடமிருந்து மகளுக்குச் செல்லுமே தவிர, மகனுக்குச் செல்லாது. இதனால், தம்பூராட்டிக்குத்தான் அதிகாரம் அதிகமே தவிர இந்தத் திரைப்படத்தில் வருவது போல தம்பூரானுக்குக் கிடையாது.

அதாவது, ஆட்டோகிராஃப்பில் லத்திகாவின் தந்தைக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. அவளுடைய தாயையோ நாம் பார்ப்பதே கிடையாது. இதனால் சுயத்திற்கும் மற்றதிற்கும் இருக்கும் கற்பித ஒற்றுமைகளை வரையறுப்பதற்காக, நிஜமான அடிப்படைக் கலாச்சார வித்தியாசங்கள் வெளியேற்றப்படுகின்றன. மேலும், லத்திகாவின் தந்தையும், கணவனாக அவளுக்கு அமைபவனும், அவர்களுடைய அடியாட்களும் தமிழர்களை ‘பட்டி அல்லது நாய்’ என்று கூறி ஒதுக்கும் மலையாள வெறியர்களாக நிறுத்தப்படுகின்றனர். அதாவது, ‘மலையாளி ஒரு கொலையாளி’ என்று வர்ணித்து மலையாளிகளுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் அந்த மாதிரியான இனவெறிக் கூறுகள் செயல்படாதது போல், திரைப்படம் செயல்படுகிறது. இந்த மாதிரியான இனவெறிகள் ஒன்றொடு ஒன்று முட்டிக் கொள்ளும்போது, எதிர் இனத்தைச் சார்ந்த ஆண்களின் மீது வெறுப்பு எவ்வளவு கூடுகிறதோ அந்த அளவுக்கு அந்த இனத்தின் பெண்களின் மீது ஈர்ப்பு கூடுவது சகஜம். இதனால், அந்தப் பெண்கள் உள்பட அந்த எதிர்-இனத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம் சுய-இனத்தின் வேட்கைக்கு ஏற்றார் போல் கற்பிதம் செய்யப்படுவார்கள். இறுதியில், லத்திகா, அவளுடயை தந்தை, மற்றும் அவளுடைய கணவன் என்ற மூவரையுமே, தமிழன் செந்திலின் கற்பிதத்தை நிலைநிறுத்துவதற்காக, இந்தப் படத்தின் கதையாடல் காயடித்துவிடுகிறது.”

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=26
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=49

*

*
Btw, Happy Independence Day!

தமிழன் என்று சொல்லடா என்கிற நல்ல நிகழ்ச்சி ஒன்றை விஜய் டீவியில் பார்க்க முடிந்தது. Good Job Vijay!

பார்க்காதவர்கள் கண்டிப்பாக வருத்தப்படத் தேவையில்லை, இனி வரும் வாரங்களில் இந்த நிகழ்ச்சியை மீண்டும் மீண்டும் மறு ஒளிபரப்பாக போட்டு தேய் தேய்ன்னு தேச்சு, தமிழன் என்று சொல்லடான்னு கோபிநாத் சொன்னா, மொத அவன கொல்லுடான்னு சொல்லுறஅளவுக்கு ஆக்கிடும் விஜய் டீவி!

ஜெயமோகன் வெளியிட்டுள்ள (அவரது நண்பர் கிருஷ்ணன் அனுப்பிய) இந்த கடிதத்தை பார்த்தீர்களா?

*

Update:

Alain Robert (The original “SpiderMan” atlast, climbed 45-storey 176m high Suntech city tower one on Saturday (16Aug2008).