பாலய்யா

இன்னிக்கு மதிய சாப்பாட்டப்ப ஒரு தெலுங்கு பையனும் சாப்பிட வந்திருந்தான். கூட அவனோட ப்ரண்ட் ஒருத்தன். அவனும் தெலுங்கு தான். அதெப்படியோ காது காதுன்னு பேசிட்டே காதும் காதும் வெச்ச மாதிரி தெலுங்கு பசங்க எல்லாம் ஒன்னுமன்னா ஆயிரானுங்க. மதிய சாப்பாடு முடிச்சிட்டு கீழே இறங்கி வந்தோம்னா, ஒரு கும்பலா உக்காந்து பேசிட்டு இருப்பாய்ங்க. பூராம் தெலுங்கு பசங்க. கிட்டத்தட்ட அந்த ஏரியால இருக்குற எல்லா தெலுங்கு பசங்களும் உக்காந்து விஜயசாந்தி கட்சி லேதய்யா..சிரஞ்சீவி காதுய்யான்னு அரசியல பிரிச்சு மேஞ்சுட்டிருப்பாய்ங்க. நீங்க பக்கத்துல போய் நின்னிங்கனாக்க: அரே யார்..லஞ்ச் ·பினிஸ்ட்ன்னு கேப்பாய்ங்க. இந்த “யார்”-அ ஏன் கட்டிட்டு அழறாய்ங்கன்னு தெரியமாட்டேங்குது. நமக்கு “யார்”-அ கேட்டாலே கிர்ருன்னு ஏறுது.

அப்படி அவன் கூட பேசிட்டிருக்கும் போதுதான், நம்ப பாலய்யா பத்தின டாபிப் வந்தது. எனக்கு பாலய்யாவ ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர மாதிரி ஒரு ஆக்ஷன் ஹீரோ இனி பிறந்துதான் வரனும். நம்ப விஜயகாந்தே அட இப்படி செஞ்சிருக்கலோமோன்னு யோசிக்க வெக்கற அளவுக்கு அவரோட படங்களில innovation, creativity போன்றவைகளை அள்ளி தினிச்சு பாக்கறவங்களை திக்குமுக்காட வெச்சிருவார்.

எடுத்துக்காட்டுக்கு இந்த வீடியோ பாருங்க:

மேலும் அவர் சம்பந்தமான எல்லா வீடியோக்களையும் நீங்க பாக்கலாம். Time back guarantee!

இப்போ இந்த செய்தி ஏன் தேவையில்லாம வந்ததுன்னா: அவரு எலெக்ஷன் campaign ஆரம்பிக்கிறாராம்.

எனக்கு ஒரு ஆசை: அவரு ஒரு நேரடி தமிழ் படத்துல நடிக்கனும். அப்பத்தான் நம்ப ஹீரோக்கள் அடங்குவாங்க. காளை படத்துல சிம்புவோட அந்த intro scene இருக்கெ அப்பப்பா. அதப்பாத்துட்டு பாலைய்யாவே ஆடிப்போயிட்டாராம். அதெப்படிங்க, verticalஆ குளத்து தண்ணீலருந்து ரௌடிகளை பொரட்டிப்போட்டு வெளியில வந்து கொஞ்ச நேரம் அப்படியே காத்துல நின்னு, 360 டிகிரில காமெராவ சுத்தவிட்டு, பிறகு அப்படியே horizontalஆ குளத்து படிக்கு வந்து ஸ்லோ மோஷனில நடக்கமுடியும்னு பாலய்யா பாக்குறவங்களையெல்லாம் நோண்டி நோண்டி கேட்டிட்டிருந்தாராம்.(அதென்னங்க சார் பெரிசு, அவங்க அப்பா இந்த வயசிலயும் என்னம்மா டான்ஸ் ஆடுவார் தெரியுமா? சும்மா சொடக்கு போட்டுக்கிட்டே ·போன எடுத்து ஹலோ யார் பேசறதுன்னு கேப்பார், தெரியுமா ? அவர் பேசினா பரபரப்புக்கும் தெரியுமா? நீங்க கத்துக்கனும் சார்!) காளைல, சிம்பு முடி கிடியெல்லாம் ஒரு ரேஞ்சா predator alien மாதிரி வெச்சிருந்தாரா, காளையும் ஏதோ super powered alien படந்தான்னு நெனச்சுட்டேன்.

Depressing news is epidemic.

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். கிட்டத்தட்ட என்னத்த கண்ணய்யா ரகம். எல்லாவற்றிலும் ஒரு தவறைக் கண்டுபிடித்து வாழ்க்கை நாசமா போயிட்டிருக்குன்னு சொல்லுவார். பேசாம எல்லாரும் மாடு மேய்க்கப் போகனும்னு சொல்லுவார். அப்பமட்டும் வாழ்க்கை சுபிக்சமா இருக்குமா என்ன? ஏதாவது ஒரு மெயில ·பார்வேர்ட் பண்ணிக்கிட்டேயிருப்பார். அவருக்கு மட்டும் எப்படித்தான் இந்த மெயில் எல்லாம் கிடைக்குதோ தெரியல. பெட் பாட்டில்னால இன்னும் கொஞ்ச நாள்ல உலகமே அழியப்போறது. பெப்ஸி குடிக்கிறதால தொண்டைப்புண் வந்து குடல் பூராம் வெந்துபோறது. லாப்டாப் அதிகநேரம் யூஸ் பண்ணினா விரல்கள் எல்லாம் சூம்பிப்போறது. செல்போன்ல நிறைய நேரம் பேசினா மூளையில கண்ணுக்குத்தெரியாத புழுக்கள் உருவாவறதுன்னும் சகட்டுமேனிக்கு டெய்லி ஒரு மெயில் அனுப்பிச்சுட்டேயிருப்பார்.

இப்போ ஜாப் லாஸ். அங்க பத்தாயிரம் பேருக்கு வேலை போச்சு. இங்க ஆயிரம் பேர தூக்கிட்டாங்க. இங்க முன்னூறு பேருக்கு பிங்க் ஸ்லிப் கொடுத்தாச்சுன்னு ஒரே depressing மெயில்ஸ். அதத்தான் நாங்களும் பாக்கறோமில்ல. வேறு மெயில் அனுப்பிச்சுட்டு அதுக்கு நடுவுல இது போல ஒரு மெயில் அனுப்பிச்சா கூட பரவாயில்லீங்க. டெய்லி retrenchment மெயில் தான்.

இன்னிக்கு அவரு ஆபீஸ¤க்கு வந்திருக்காரு, இன்டர்நெட் பூராம் துலாவியிருக்கிறாரு; ஒரு ஜாப் லாஸ் மெயில் கூட கண்ணில படல. என்ன செய்றதுன்னு புரியாம யோசிச்சார் மாப்ள. அப்போத்தான் அவரோட ·ப்ரண்ட் “நோ ஜாப்..” ன்னு இவருக்கு ஒரு மெயில் அனுப்பிச்சிருக்கார். நம்ப மாப்ள அப்பாடா இன்றைய பொழுது இனிதே கழிந்ததுன்னு அந்த மெயில டப்புன்னு ·பார்வேர்ட் பண்ணிட்டார். அப்புறம் நிதானமா படிச்சதுக்கப்புறம் தான் தெரிஞ்சது, அது நிஜமான job இல்லையாம், எப்பவும் schedule பண்ணிவெச்சிருக்கிற Batch Jobs தானாம். ஏதோ data problemனால இன்னிக்கு ஓடலையாம். அதத்தான் அவரோட நண்பர் : “No jobs run today”ன்னு மெயில் அனுப்பிச்சிருக்கார்.

Friend, please dont spread depressing news. Depressing news makes a depressing environment. And that is not good for anyone. Take it easy. Every one is in the same boat. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால்.

Britannica just dont get it!

இந்த செய்தியை பார்த்தீர்களா?

Britannica president Jorge Cauz ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
“If I were to be the CEO of Google or the founders of Google I would be very [displeased] that the best search engine in the world continues to provide as a first link, Wikipedia,” he said.”Is this the best they can do? Is this the best that [their] algorithm can do?”

விக்கிப்பீடியாவின் வெற்றி ரகசியகங்கள் என்று கணக்கிட்டால்:
1. விக்கிப்பீடியாவில் பிரிட்டானிக்காவை விட மிக மிக மிக அதிகமான கட்டுரைகள் (5 மில்லியனுக்கும் மேல்) இருக்கின்றன.
2. கட்டுரைகள் விஸ்தாரமானவை.
3. விக்கிப்பீடியா எண்னற்ற reference (also see) கொடுக்கிறது. (யாரோ ஒரு புண்ணியவான் என்னுடைய பருத்திவீரன் விமர்சனத்தை பருத்திவீரனின் விக்கிபீடியா கட்டுரையில் referenceஆக இணைத்துள்ளனர். இது தான் விக்கிப்பீடியாவின் பலம்)
4. நிறைய பேர் தொடர்ந்து கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது.
5. எல்லாவற்றையும் விட: இலவசம்.

மேலும் தகவல்களுக்கு.

கூகிள் search, அது தேடிக்கொண்டுவரும் பக்கங்கள் எவ்வளவு புராதானமானவை, எவ்வளவு உண்மையானவை; எவ்வளவு eliteஆனவை என்பதை கண்டுகொள்வதில்லை, its so simple; அந்த பக்கங்களுக்கு எவ்வளவு பேர் link கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் முக்கியம்.

Britannicaவின் புதிய யுக்தி:
He said the encyclopedia had set a benchmark of a 20-minute turnaround to update the site with user-submitted edits to existing articles, which are written by the encyclopedia’s paid expert contributors.
இப்போவாவது உணர்ந்துகொண்டார்களே. But too late.

இந்த யுக்தியால் Britannicaவிற்கு நிறைய புது articles வருகிறது என்று வைத்துக்கொண்டாலும்; ஒரு நாளைக்கு ஆயிரம் பக்கங்கள் வருகிறது என்றால், அதை எப்படி சரி பார்க்கப் போகிறார்கள்? எவ்வளவு நபர்களை இந்த வேலைக்கு நியமிப்பார்கள்? விக்கிப்பீடியாவின் வெற்றி அவர்கள் வெளியிடும் கட்டுரைகள் எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பதில் இல்லை; எந்த அளவிற்கு verifiableஆக இருக்கிறது என்பதே. Britannica just dont get it.

ஆனால் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு விக்கிப்பீடியா அவ்வளவாக உதவுவதில்லை; அதற்கு பிரிட்டானிக்காவைத்தான் நாட வேண்டியிருக்கிறது என்கிற வாதம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கே பார்த்தால் ஆனால் அதற்கும் வழி இருக்கிறது:
Scholarpedia
Citizendium (We aim at reliability and quality, not just quantity என்று சொல்கிறார்கள்! )

ஆனாலும் பிரிட்டானிக்கா இன்னும் எந்த தைரியத்தில் “Premium Membership : Free Trial” option வெச்சிருக்குன்னு கொஞ்சம் கூட புரியல! யாராவது அவங்களுக்கு உலகத்துல என்ன நடக்குதுன்னு எடுத்து சொல்லுங்கப்பா.

மேலும் இந்த வீடியோவை பாருங்கள். (A comparison video)

கடைசிக் கேள்வி:
பிரிட்டானிக்காவில் விக்கிபீடியா பற்றிய entry இருக்கிறதா? 🙂

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய்?

கம்ப்யூட்டர்களே இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பாய் என்றொரு 50% மொக்க 50% interesting கேள்வியை என் நண்பர் ஒருவர் என்னிடம் இன்று மதிய சாப்பாட்டின் போது கேட்டார். அவர் கேட்டதற்கும் இப்போ ஆங்காங்கே கமுக்கமாக வாரி வழங்கப்பட்டுக்கொண்டிருக்கும் pink slipகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! சும்மா just like that கேட்டார்.

நான் கம்ப்யூட்டர் பார்த்த பொழுது பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.(ஐயையோ ஸ்கூல் ஸ்டோரியா?!) நான் மேத்ஸ் பயாலஜி மேஜர் என்பதால் கம்ப்யூட்டர் எனக்கு பாடம் இல்லை. மேலும் மேத்ஸில் வரும் ஒரு சாப்ட்டர் கம்ப்யூட்டருக்கே என் தலை சுற்றும். என்னங்கடா ஒரே ஒன்னு ஜீரோவ வெச்சு ஏதேதோ வித்த காட்டுறாய்ங்கன்னு நினைப்பேன். அப்பொழுதெல்லாம் பின்நாட்களின் இந்த கம்ப்யூட்டர்களை கட்டிக்கொண்டுதான் அழப்போகிறேன் என்று என் மரமண்டைக்கு தெரிந்திருக்கவில்லை. டாக்டர் ஆகப்போகிறேன் என்று தான் சத்தியமாக நினைத்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனை டாக்டர் என்று தான் என் பள்ளி நண்பர்கள் சிலர் அழைப்பார்கள். அப்படி அழைத்த சிலர் டாக்டர் ஆகிவிட்டார்கள் என்பது வேறு விசயம்! அவன் பிற்காலத்தில் அண்ணாயுனிவர்சிட்டியில் எலக்ட்ரானிக்ஸ் முடித்துவிட்டு இப்பொழுது அதற்கும் சம்பந்தமில்லாத மானேஜ்மெண்ட் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது வேறு ஒரு விசயம்.

பதினோறாம் வகுப்பில் எங்களுக்கு கம்ப்யூட்டர் முன்னால் உட்காருவதற்கு கொடுக்கப்பட்ட நேரம் வெறும் ஐந்து நிமிஷம். அதுவும் ப்ரிண்ஸ் ஆப் பெர்சியா தாஸ் கேம் விளையாடினோம். விளையாடினேன். அதற்கப்புறம் எனக்கும் கணினிக்குமான உறவு நயந்தாரா சிம்புவின் உறவைப்போல ஆகிவிட்டது; ஓப்பன் விண்டோ சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படிப்பை நான் தேர்ந்தெடுக்கும் வரை.

இப்பொழுதெல்லாம் கம்ப்யூட்டர் இல்லாத வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. கம்ப்யூட்டரை விட்டுத்தள்ளுங்கள் இன்டர்நெட் இல்லையென்றால்?

ஒரு வேளை கம்ப்யூட்டர் என்கிற ஒன்றே இல்லாமல் இருந்திருந்தால்?

1. பல்டாக்டர்: டாக்டர் கனவுகளோடு இருந்தாலும் எனக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை, மயிரிலையில் டாக்டர் ·ப்ர·பஷன் என்னிடமிருந்து தப்பியது. இன்று உயிரோடிருக்கும் பல பேஷண்டுகளும் தான். ஆனால் எனக்கு பிடிஎஸ் கிடைத்தது. பல் டாக்டர். ஹோமியோபதி கிடைத்தது. அப்பாவுக்கு ஒரே குழப்பம். எனக்கு குழப்பமில்லை. பல் டாக்டர் படிக்கவும் ஹோமியோபதி படிக்கவும் எனக்கு விருப்பமில்லை. அப்பா அருகிலிருந்த ஒரு டாக்டரிடம் ஆலோசனை கேட்டார். எங்க அப்பா கேட்ட கேள்வி: பல் டாக்டருக்கு படித்துவிட்டு, மாஸ்டர் டிகிரி படிப்பதற்கு இருதய ஸ்பெஷலிஸ்ட் தேர்வு செய்ய முடியுமா என்பதே? Apparantly, முடியாது என்பது பின் நாளில் தெரிந்தது. ஏனென்றால் பல் என்பது வேறு; இருதயம் என்பது வேறு இல்லியா? பல் பிடுங்கும் பொழுது பிரச்சனை ஆகிவிட்டால் பல்லோடு போச்சு! ஒருவேளை நான் கம்ப்யூட்டர் படிக்கவில்லை என்றால், பல் டாக்டராக ஆகியிருந்திருப்பேன். ஹொமியோபதி மருத்துவராக ஆகியிருக்க வாய்ப்பில்லை. ஹோமியோபதி மருத்துவ ரீடர்ஸ் மன்னிக்கவும். Somehow it didnt look interesting.

2. வாத்தியார்: எனக்கு வாத்தியாராக வேண்டும் என்கிற ஆசையும் நிறைய உண்டு. இப்பொழுது கூட. I think the reason is my father, oppurtunity to interact with kids and you’ll get a lot of free time. புத்தகங்கள் படிப்பதற்கு உபயோகிக்கலாம். மற்றொரு காரணம் : You can be a hero among your students. காமெடியனாகத்தான் நிறைய வாத்தியார்களை மாணவர்கள் வைத்திருக்கிறார்கள் என்றாலும், வெகு சில வாத்தியார்களை தங்கள் மானசீக mentorஆக வைத்திருக்கும் மாணவர்கள் நிறைய பேர் உண்டு. என் அப்பாவை அவரது மாணவர்கள் வைத்திருந்ததை போல. ஏன் எனக்கே அவ்வாறான mentors உண்டு! அதனால் வாத்தியாரக ஆகி இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். அப்படியே ஒரு கவர்மெண்ட் வாத்தியாராக ஆகியிருந்தால், பொங்கலுக்கு பம்ப்பர் பரிசாவது கிடைத்திருக்கும். இன்கிரிமெண்டல் எல்லாம் ஜெட் வேகத்திற்கு உயர்ந்திருக்கிறதாமே?

3. அரசியல்வாதி: நான் ஸ்கூல் படிக்கும் பொழுது என்னுடைய ஹிஸ்டரி மேடம் என்னை பிற்காலத்தில் நீ ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவாய் என்பார். நிறையதடவை அவ்வாறு கூறியிருக்கிறார். சீரியஸாக. நான் மேடை நாடகங்கள் நடித்ததற்காக இருக்கலாம். இயற்கையாகவே இருக்கும அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கலாம். இல்லை ஓவர் வாயாகக்கூட இருக்கலாம். ஆனால் அவர் அப்படி தான் சொன்னார். எனக்கு அரசியல் மீது நாட்டம் இருக்கிறதா? கொஞ்சம் இருக்கிறது என்பது உண்மைதான்; அனால் கிடைக்கக்கூடிய அடி உதை குத்துகளை நினைத்தால்; எஸ்கேப். ஒருவேளை கம்ப்யூட்டர் படிக்கவில்லையென்றால், ஊரிலே வாத்தியாராக ஆகி, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அரசியல்வாதியாக ஆகியிருக்கக்கூடும். யார் கண்டார்கள்? எங்க ஊர் பெரிய அண்ணனிடம் தர்ம அடிகள் கூட வாங்கியிருக்க வாய்ப்புண்டு.

4. எழுத்து: நான் பள்ளிக்கூடம் படிக்கும் பொழுது எனது எட்டாம் வகுப்பில் என் அப்பா எழுதிக்கொடுத்த ஒரு நாடகத்திற்கு க்ளைமேக்ஸ் மாற்றி அமைத்தது தான் எனது முதல் எழுத்துப் பணி. அதற்கப்புறம் ஒரு நாடகம் எழுதியிருக்கிறேன். என அப்பாவின் நாடகத்தை தழுவி. சில பல கவிதைகள் எழுதி பலரை படுத்தியிருக்கிறேன். பிறகு என்ஜினியரிங் காலேஜ் வந்த பிறகு இவற்றையெல்லாம் சில வருடங்கள் மறந்தே போனேன். பிறகு சென்னைக்கு வேளைக்கு வந்த பிறகு மீண்டும் தற்செயலாக நடந்த ஒரு சம்பவத்தை வைத்து “அறை நண்பன்” என்கிற கதை ஒன்றை எழுதினேன். த்ரில்லர். என் நண்பர்கள் அனைவருக்கும் அது பிடித்திருந்தது. பாராட்டினர். ஆனால் அதுதான் அவர்களுக்கு வினையாகிவிட்டது. ஆடினவன் காலும் எழுதினவன் பேனாவும் (கீ போர்டும்) சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க, அது உண்மைதான். கூட சேர்த்து எழுதினவன பாராட்டின நண்பனும் சும்மா இருக்கமுடியாதுன்னு சேத்துக்கோங்க. அடுத்தடுத்து எழுதி காமிச்சு அவன வாசிக்கவெச்சு, அவன ஊர விட்டே ஒட வெப்போமில்ல. நல்லாயிருக்குடா மச்சான் எனக்கு வயிறு கலக்குற மாதிரி இருக்கு, கொஞ்சம் போயிட்டுவரவான்னு அவன் எஸ்கேப் ஆக பாத்தாக்கூட விட மாட்டோமில்ல, என்ன பிடிச்சது? எந்த இடத்தில பிடிச்சதுனு கேள்விகள் கேப்போமில்ல. பிறகு சென்னையில் இருக்கும் போதே: நிறைய சிறுகதைகள், ஒரு நாவல் (நசீர்), காந்தம் என்று நிறைய எழுதிவிட்டேன். ஒரு வேளை முழுநேர பாக்கெட் நாவல் எழுத்தாளனாக இருந்திருக்கக்கூடும். யார் கண்டா தாடி கீடியெல்லாம் வெச்சுக்கிட்டு “எழுத்து பித்தர் முத்து” ன்னு கூட ஆகியிருந்திருப்பேன்.

நீங்கள் கம்ப்யூட்டர் இல்லாவிடில் என்ன செய்துகொண்டிருப்பீர்கள்?

இதை தொட‌ர‌வேண்டும் என்றும் இதுக்கெல்லாம் ச‌ரியான‌ ஆள் அவ‌ர் தான் என்றும் என‌க்கு ந‌ம்ப‌த்த‌குந்த‌ வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவித்த‌தாலும் நான் ப்ர‌காஷை அழைக்கிறேன்.

மேலும்:

பாஸ்ட‌ன் பாலா
பொன்ஸ்
ல‌க்ஷ்ம‌ண்
பினாத்தல்கள் (I loved Thirumangalam Millionaire)
siva

புது வலைப‌திவ‌ர்:
செந்தில் (சூர்யா ப‌திவுக‌ள்)
Bala

லென்ஸ்

(காளை, சட்டங்கள்,சிவாஜி,ஷங்கர்,கமல்)

காளை என்றொரு படம் வண்ணத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ அப்படி ஒரு நாராச ஹீரோயிஸம். பஞ்ச் பாடல் வேறு. வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை..வேண்டாம், இத்தோட நிப்பாட்டிக்குவோம்.

சோ·பாவையும் டீவியையும் வேறு இடத்திற்கு மாற்றியாச்சு. வாஸ்து மாற்றினாலாவது வண்ணத்திரையில் அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் பாக்கக்கூடிய படம் போடுவார்களா? இதுக்கு இது பே சானல் வேறு.

***

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் எனது நண்பன் ராஜேஷ¤ம் சும்மா நாட்டு நடப்பை (பொழுது போகலைன்னா வேறு என்ன பண்ண முடியும்?) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது? அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன? என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்றாமல் வேறு யார் இயற்றுவார்கள்? என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது? அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது? தடைசெய்யத்தான் வேண்டுமா? வால்-மார்ட் இங்கே கடை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பது? ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது? திறக்கவேண்டாமா வேண்டுமா என்று யார் முடிவு செய்வது?

ஒரு பகுதியினர் இவ்வாறு வாதாடுகின்றனர். அதாவது, அபார்ஷனை தடுப்பதற்கோ அல்லது ஹோமோக்களை தடுப்பதற்கோ ஏன் சட்டங்களை உபயோகிக்கிறீர்கள்? உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது? அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள்? மேலும் ஒரு சாரரை திருப்திப்படுத்துவதற்காக ஏன் இவ்வளவு பண நாசம் செய்யவேண்டும்?

சரி. அபார்ஷனையே எடுத்துக்கொள்வோம். அபார்ஷனை தடுப்பதா வேண்டாமா என்கிற முடிவுக்கு அரசு எப்படி வர முடியும்? என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும்? அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன? அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும்? எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை எக்கேடோ கெட்டுப்போங்கன்னு அரசு சும்மா இருக்க முடியாது, அப்படி இருந்தாலும், அபார்ஷனை தடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் போகிறது.

***

அபார்ஷனை தடுக்கக்கூடாது என்றால், போதைப்பொருள் கடத்துவதையும் தடுக்காமல் விட்டுவிடலாமா? சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம், மற்றும் பழக்கம், இந்த தண்டனையால் வெகுவாக குறைந்திருக்கிறதாம். சட்டத்தினால் தானே இது சாத்தியப்பட்டது?

***

இந்த காளை, குசேலன், வில்லு அப்படியே இந்த டைரக்டர் பேரரசுக்கும் ஒரு தடையை விதித்தால் நான் (மற்றும் ரொம்ப பேர்) ரொம்ப சந்தோஷமா இருப்பேன்! படத்துல “வெட்டி கூறுபோடுங்கடா, சாரு எடுங்கடா” அப்படின்னு சும்மா கத்திக்கினே கெடக்கானுங்க. ஊறுகா கம்பெனி வெச்சிருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். கஷ்டம்.

***
இந்த குசேலன் மசேலன் தசாவதாரம் கொசாவதராம் எடுக்கறவங்க எல்லாம் No Country For Old Men படம் பாருங்கப்பா. கண்டிப்பா பாத்திருப்பீங்க தெரியும், பாத்துட்டு இதெல்லாம் இந்த ஜனங்களுக்கு புரியாதுப்பான்னு எங்கள முட்டாள்களா நெனச்சிருப்பீங்கன்னும் தெரியும். மிக குறுகிய அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு த்ரில்லர் படம் கொடுக்கமுடியுமா?

ஏன் நம்ப உலக நாயகர்களுக்கு தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்க தோன்றவில்லை?

***
சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்கிற படத்தை சமீபத்தில் கொஞ்சம் பார்த்தேன். அதில் சிவாஜியே பாதிரியாராகவும் பின்னர் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருப்பார். அவ்வாறு நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா? யாருக்கு சொல்லவேண்டும்? மேலும் சில புராண படங்களில் அவரே துணி துவைப்பவராகவும் பின்னர் அவரே கடவுளாகவும் வருவார். ஆண்டாளை வளர்த்தவராகவும் பின்னர் கிருஷ்ணராகவும். கடவுள் மனித ரூபத்தில் வந்தால் கூட பரவாயில்லை, அந்த கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் அவரே நடிப்பார். ஏன்? அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செலவில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா? இந்த படத்தின் திரைக்கதைக்கு விகடன் அவார்ட் வேற. ஆர்ட்டுக்கு கொடுத்தார்கள், ஓகே. திரைக்கதைக்கா?

***
இந்த ஷங்கர் இன்னொருத்தர். மிகப் பிரமாண்டமா அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பார். ஆனால் உண்மையில், அவரது பாடலில் தான் சயின்ஸ் பிக்ஷன் இருக்கும். பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்தி ஒன்பது ரோபோக்களுக்கு ஒவ்வொரு பார்ட்ஸ¤க்கும் ஒரு பெயிண்ட் அடித்து background-ல பாரீஸ் சாய்ந்த கோபுரத்தை கண்ணாடியில் செய்து, அதில் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் நடனமாட விடுவார். சாரி:ரஜினியை வேகவேகமாக நடக்கவைப்பார்.

சயிண்டிஸ்ட் ஏனய்யா ஆயிரம் ரோபோக்களோடு நடனமாட வேண்டும்?

***

யுனிகோட் தட்டச்சு!

இது தான் என்னுடைய முதல் யுனிகோட் தட்டச்சு முயற்சி!
It took more than 15 mins to type this sentence! Grr.

உதவிக்கு இந்த விடியோவை பார்க்கவும்.

மேலும் இந்த பக்கம் எந்த எந்த விசைகளுக்கு எந்த எந்த எழுத்துக்கள் என்று தெரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

கொஞ்சம் கஷ்டம்தான்!