(காளை, சட்டங்கள்,சிவாஜி,ஷங்கர்,கமல்)
காளை என்றொரு படம் வண்ணத்திரையில் காட்டப்பட்டது. ஐயோ அப்படி ஒரு நாராச ஹீரோயிஸம். பஞ்ச் பாடல் வேறு. வந்துட்டான்டா வந்துட்டான்டா காளை..வேண்டாம், இத்தோட நிப்பாட்டிக்குவோம்.
சோ·பாவையும் டீவியையும் வேறு இடத்திற்கு மாற்றியாச்சு. வாஸ்து மாற்றினாலாவது வண்ணத்திரையில் அட்லீஸ்ட் ஒரு பத்து நிமிஷம் பாக்கக்கூடிய படம் போடுவார்களா? இதுக்கு இது பே சானல் வேறு.
***
கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நானும் எனது நண்பன் ராஜேஷ¤ம் சும்மா நாட்டு நடப்பை (பொழுது போகலைன்னா வேறு என்ன பண்ண முடியும்?) விவாதித்துக்கொண்டிருந்தோம். அப்போது என் நண்பன் ஏன் இந்த அரசு எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைக்கிறது? அபார்ஷன் யார் பண்ணா என்ன பண்ணாட்டினா இவங்களுக்கு என்ன? என்றான். எனக்கு இது என்ன கேள்வி, இவ்வாறான சட்டங்களை அரசு இயற்றாமல் வேறு யார் இயற்றுவார்கள்? என்கிற மிக முக்கியமான சந்தேகம் வந்தது. ஹோமோக்களை யார் தடைசெய்வது? அல்லது தடைசெய்வதை யார் தடைசெய்வது? தடைசெய்யத்தான் வேண்டுமா? வால்-மார்ட் இங்கே கடை திறப்பதற்கு யார் எதிர்ப்பு தெரிவிப்பது? ரிலையன்ஸ் ·ப்ரஷ் வடக்கன்பட்டியில் கடை திறப்பதை யார் எதிர்ப்பது? திறக்கவேண்டாமா வேண்டுமா என்று யார் முடிவு செய்வது?
ஒரு பகுதியினர் இவ்வாறு வாதாடுகின்றனர். அதாவது, அபார்ஷனை தடுப்பதற்கோ அல்லது ஹோமோக்களை தடுப்பதற்கோ ஏன் சட்டங்களை உபயோகிக்கிறீர்கள்? உங்கள் சட்டங்களை அமுலுக்கு கொண்டுவருவதினால் எவ்வளவு பண விரயம் ஏற்படுகிறது? அதற்கு எங்களது வரிப்பணத்தையல்லவா உபயோகிக்கிறீர்கள்? மேலும் ஒரு சாரரை திருப்திப்படுத்துவதற்காக ஏன் இவ்வளவு பண நாசம் செய்யவேண்டும்?
சரி. அபார்ஷனையே எடுத்துக்கொள்வோம். அபார்ஷனை தடுப்பதா வேண்டாமா என்கிற முடிவுக்கு அரசு எப்படி வர முடியும்? என் நண்பனைப் போல ஒரு சாரர் அபார்ஷனை தடுக்கக் கூடாது என்கின்றனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், எனது இன்னொரு நண்பன் அபார்ஷன் செய்வதை தடுக்கவேண்டும் என்கிற கோரிக்கை என்னவாகும்? அவன் மட்டும் வரிப்பணம் கட்டவில்லையா என்ன? அப்படீன்னா அரசு என்ன செய்ய வேண்டும்? எனக்கு இதுக்கும் சம்பந்தமில்லை எக்கேடோ கெட்டுப்போங்கன்னு அரசு சும்மா இருக்க முடியாது, அப்படி இருந்தாலும், அபார்ஷனை தடுக்கவேண்டும் என்று நினைப்பவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் போகிறது.
***
அபார்ஷனை தடுக்கக்கூடாது என்றால், போதைப்பொருள் கடத்துவதையும் தடுக்காமல் விட்டுவிடலாமா? சிங்கப்பூரில் போதை பொருள் கடத்தினால் மரண தண்டனை விதிக்கப்படும். போதைப்பொருள் புழக்கம், மற்றும் பழக்கம், இந்த தண்டனையால் வெகுவாக குறைந்திருக்கிறதாம். சட்டத்தினால் தானே இது சாத்தியப்பட்டது?
***
இந்த காளை, குசேலன், வில்லு அப்படியே இந்த டைரக்டர் பேரரசுக்கும் ஒரு தடையை விதித்தால் நான் (மற்றும் ரொம்ப பேர்) ரொம்ப சந்தோஷமா இருப்பேன்! படத்துல “வெட்டி கூறுபோடுங்கடா, சாரு எடுங்கடா” அப்படின்னு சும்மா கத்திக்கினே கெடக்கானுங்க. ஊறுகா கம்பெனி வெச்சிருந்திருப்பாய்ங்கன்னு நினைக்கிறேன். கஷ்டம்.
***
இந்த குசேலன் மசேலன் தசாவதாரம் கொசாவதராம் எடுக்கறவங்க எல்லாம் No Country For Old Men படம் பாருங்கப்பா. கண்டிப்பா பாத்திருப்பீங்க தெரியும், பாத்துட்டு இதெல்லாம் இந்த ஜனங்களுக்கு புரியாதுப்பான்னு எங்கள முட்டாள்களா நெனச்சிருப்பீங்கன்னும் தெரியும். மிக குறுகிய அளவில் கேரக்டர்களை வைத்துக்கொண்டு, இப்படி ஒரு த்ரில்லர் படம் கொடுக்கமுடியுமா?
ஏன் நம்ப உலக நாயகர்களுக்கு தாரே ஜமீன் பர் போன்ற படங்களை எடுக்க தோன்றவில்லை?
***
சிவாஜி நடித்த வெள்ளை ரோஜா என்கிற படத்தை சமீபத்தில் கொஞ்சம் பார்த்தேன். அதில் சிவாஜியே பாதிரியாராகவும் பின்னர் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருப்பார். அவ்வாறு நடிக்க வேண்டியதன் அவசியம் என்ன? இரண்டு கேரக்டர்களையும் (பாதிரியார் சாது, இன்ஸ்பெக்டர் tough) ஆக்கிட் கொடுத்து பிச்சு உதருகிறேனா பார் என்று சொல்வதற்கா? யாருக்கு சொல்லவேண்டும்? மேலும் சில புராண படங்களில் அவரே துணி துவைப்பவராகவும் பின்னர் அவரே கடவுளாகவும் வருவார். ஆண்டாளை வளர்த்தவராகவும் பின்னர் கிருஷ்ணராகவும். கடவுள் மனித ரூபத்தில் வந்தால் கூட பரவாயில்லை, அந்த கேரக்டருக்கும் இந்த கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது, ஆனால் அவரே நடிப்பார். ஏன்? அதேதான் கமலும் செய்தார். இனியும் செய்வார். இவ்வளவு பொருட்செலவில், ஏன் இத்தனை மேக் அப் மெனக்கெட்டு நடிக்கவேண்டும். அதான் ஜாக்கிசான் கேட்டாராம்: உங்க ஊர்ல நடிகர்களுக்கு பஞ்சமா? இந்த படத்தின் திரைக்கதைக்கு விகடன் அவார்ட் வேற. ஆர்ட்டுக்கு கொடுத்தார்கள், ஓகே. திரைக்கதைக்கா?
***
இந்த ஷங்கர் இன்னொருத்தர். மிகப் பிரமாண்டமா அதிக பொருட்செலவில் சயின்ஸ் பிக்ஷன் படம் எடுப்பார். ஆனால் உண்மையில், அவரது பாடலில் தான் சயின்ஸ் பிக்ஷன் இருக்கும். பதினைந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொன்னித்தி ஒன்பது ரோபோக்களுக்கு ஒவ்வொரு பார்ட்ஸ¤க்கும் ஒரு பெயிண்ட் அடித்து background-ல பாரீஸ் சாய்ந்த கோபுரத்தை கண்ணாடியில் செய்து, அதில் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் நடனமாட விடுவார். சாரி:ரஜினியை வேகவேகமாக நடக்கவைப்பார்.
சயிண்டிஸ்ட் ஏனய்யா ஆயிரம் ரோபோக்களோடு நடனமாட வேண்டும்?
***
தலைவா… கட்சி ஆரம்பிச்சிட்டீங்க போலிருக்கே…. நான் தான் உங்க கொ.ப.சே. …..
LikeLike