என் உயிர்த் தோழன் – 2

2

அவன் ரொம்ப நேரம் வரலைன்னவுடனே எனக்கு அழுகையா வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன் இல்லாட்டா எப்படி? பஸ் லேட்டோ? பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டானோ? என் மண்டை குழம்பிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில் வந்தான். லூசு மாதிரி ஒரு பேண்ட் ஒரு சர்ட் போட்டுட்டு வந்தான். நான் இன்னைக்கு ரெட் சுடி போட்டிருந்தேன். முன்ன ஒரு தடவ சனிக்கிழமை ஸ்பெஷல் க்ளாஸ¤க்கு நான் போட்டுட்டு வந்திருந்தப்போ நல்லாயிருக்குன்னு சொன்னான். நேரே வந்து ப்ரோகிராம் ஸ்கெடியூல் செக் பண்ணிட்டு. ஸ்டேஜூக்கு ஏறிட்டான். ஏதோ கையில பேப்பர் வெச்சிருந்தான். எடுத்து கடகடன்னும் வாசிக்க ஆரம்பிச்சிட்டான். வரவேற்புரை. அவங்க அப்பா எழுதிக்கொடுத்திருக்கனும். இந்த லூசுக்கு இப்படியெல்லாம் எழுத தெரியாது. என் கூட அதிகமா பேசவேயில்ல. பேசும்போது கையவெச்சு மூக்க பொத்திக்கிட்டேதான் பேசினான். முதல்ல ஷீபாதான் குளிக்காம வந்திட்டா போலன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் மூக்குல அழகா பெரிய ஒரு பரு. சார் அதனால தான் மூக்க பொத்திக்கிட்டே பேசியிருக்கார். பர்சனாலிட்டி கொறஞ்சு போச்சுன்னா? நான் தான் சொன்னேன் : பரு இருந்தாலும் நல்லாத்தான் இருக்க. கைய எடுத்துட்டு நார்மலா பேசுன்னு. அதுக்கபுறமும் மூக்க மூடிட்டேதான் பேசினான்.

“எனக்கும் கவி அரங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஸ்டேஜுக்கு வரணும்”
“வாட்? நெவர். என்ன ஒரு தடவை அவமானப் படவெச்சது பத்தாதா?”
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். ஜஸ்ட் வந்து உக்காரு போதும்.”
“வேற யார் யார் வர்றா?”
“ஐ ஹேவ் ஆஸ்க்ட் ஹிந்தி ஜீ அன்ட் சயின்ஸ் மேடம்”
“லூசா நீ? உன் சாய்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“யெஸ். இங்க இருக்கிற யாருக்குமே கவிதைன்னா என்னன்னு தெரியாது. பின்ன யார கூப்பிட்டா என்ன? நான் எனக்கு பிடிச்சவங்கள கூப்படறேன். யூ ஆர் கம்மிங்”

கூப்பிட்டது மட்டுமில்லாம என்னைத்தான் நடுவில உக்காரவெச்சான். ஆனா அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. என்னை கூப்பிட்டதுக்கு அவன் க்ளீனா காரணம் சொன்னான்: க்ளாஸ் லீடர். சரியான ஆள் தான் நம்மாளு.

(நடு ராத்திரியில எழுந்து லைட்டப்போட்டு டைரிய தேடிக்கண்டுபிடித்து. நம்மாளு என்கிற வார்த்தையை ஒன்றும் தெரியாதவாறு பேனாவை வைத்து அடிக்கிறாள். டைரியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

ஆனா பிடிச்சவங்களைக் கூப்பிடறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது.

“சித்தார்த்”
(மேத்ஸ் புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான்)
“என்னோட ஆட்டோகிராப் புக்.”
“ஓ. ஓகே”
வாங்கி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியாவிடம் கொடுக்கிறான். மேத்ஸ் புக்கில் மூழ்கிப்போகிறான்.
..
“சூர்யா..ஒரு நிமிஷம்..நான் என் டீட்டெய்ல்ஸ் கொஞ்சம் ·பில் பண்ணிக்கொடுக்கிறேன். ஆட்டோகிராப் புக்க கொஞ்சம் கொடேன்”
“ஓகே ரம்யா. இந்தா”

“சித்தார்த்”
(இப்போ பயாலஜி புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான் சித்தார்த்)
“என்னொட ஆட்டோகிராப் புக்”
“ஓ ஓகே”


“ஹே நான் தான் முதல்ல எழுதப்போறேன்”
“யெஸ் யெஸ் சித்”

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ வாஸ் ஹேப்பி. ஐ வான்டட் ஹிம் டு ·பில் அப் பர்ஸ்ட்.

(நடு ராத்திரியில் எழுந்து ஆட்டோகிராப் புக்கை திறந்து பார்க்கிறாள். முதல் பக்கத்தில் “Unshared is an ocean” என்று எழுதப்பட்டு சித்தார்த் என்று கிறுக்கப்பட்டிருந்தது)

“சூர்யா. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கவா?”
“ஓ ஸ்யர் ரம்யா” சூர்யா எழுந்துகொண்டான்.
“சித்தார்த்”
“என்ன ரம்யா?”
“தமிழ் கட்டுரை போட்டிக்கு போறியா இல்லியா?”
“அதான் போகலைன்னு சொன்னேன்ல”
“போயேன் ப்ளீஸ்”
“ஐ டோன்ட் வாண்ட் டு பார்டிசிபேட். எனக்கு எக்ஸாம் தான் முக்கியம்”
“எக்ஸாக் இருக்கட்டும் நீ நல்லா பண்ணிடுவ. இது எல்லா ஸ்கூலுக்கும் நடக்கிற போட்டி.நீ போயேன் ப்ளீஸ். நீ கலந்துக்கிட்டினா நீ தான் பர்ஸ்ட் வருவ.”
“ரம்யா..”
“எனக்காக போயேன் ப்ளீஸ்”

“எனக்காக. ஐ வாண்ட் டு சீ யூ வின். ப்ளீஸ்”

சொன்னோம்ல. சொன்னோம்ல. எட்டு ஸ்கூளுக்கு நடந்த போட்டில அவன் தான் பர்ஸ்ட் வாங்கினான். ஹி இஸ் ஸ்மார்ட். தலைப்பு ஏதோ பெண்ணிய முன்னேற்றமாம். பன்னிய முன்னேற்றம்னு தலைப்பு கொடுத்திருந்தாக்கூட அவன் தான் பர்ஸ்ட் வாக்கிருப்பான். அவனுக்கு கொடுத்த பரிசை என்னிடம் கொடுத்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். பிறகு சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன். ஒரு ஷீல்ட். அவன் பெயர் போட்டது. இப்பொழுது என்னிடம் தான் இருக்கிறது. எப்பொழுதும் என்னிடம் தான் இருக்கும்.

“ரம்யா”
“ஹாய் சித்தார்த்”
“எக்ஸாம் எப்படி எழுதின?”
“குட். நல்லா எழுதினேன். நீ”
“நானும் நல்லா எழுதியிருக்கேன்” “இன்னைக்கு ·பேர்வெல் பார்ட்டிக்கு வருவேல்ல”
“கண்டிப்பா. என்ன கேள்வி இது?”
“இல்ல லேட் ஆயிடும். உங்க அவ்வா விடுவாங்களா?”
“விடுவாங்க”
“வீட்டுக்கு போயிட்டு வருவியா?”
“ம்ம். யூனி·பார்மோட இருக்கவேண்டாம்னு நினைக்கிறேன்”
“ம்ம்”
“நீ வீட்டுக்கு போறியா?’
“ஆமா.”
“பஸ்ல போகனுமே. போயிட்டு வந்திடுவியா?”
“சுதாகரும் வர்றான். ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்திடுவோம்”
“என்ன ட்ரெஸ் போடப்போற?”
“என்ன போடட்டும்?”
“என்ன கேட்டா?”
“சரி ஏதாவது போட்டுக்கிறேன்”
….
“ரெட் டீசர்ட் போடு. க்ரீம் பேண்ட் போடுவியே அதப் போடு”
“ம்ம் சரி தொவைச்சிருக்கான்னு தெரியல பாக்குறேன்”
..
“நான் என்ன போடட்டும்?”
“என்ன போடப்போற?”
“சொல்லேன்..”
“ரெட் சுடி போடேன்”

அவன் அப்படி பார்த்ததை நான் பார்த்ததில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல இருந்தது. நான் எப்பொழுது அவன் பக்கம் பார்த்தாலும் அவன் என் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் குணிந்தே உட்கார்ந்திருந்தேன். ·பேர்வெல் பார்ட்டியில் அவனை திடீர்னு பேசச்சொல்லிட்டாங்க.

“சித்தார்த். எப்படி இப்படி பேசுற?”
“நல்லாயிருந்துச்சா?”
“ரொம்ப நல்லாயிருந்துச்சு”
“யூ லுக் குட்”
“வாட்” (ஸ்மைல். மைல்ட் வெக்கம். கீழே குனிந்துகொள்கிறாள்)
“சுடி நல்லாயிருக்கு”
“ம்ம்” (வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்)

பார்ட்டி முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரிவைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை. இராவகிவிட்டது. அவனோடு தனியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். முடியவேயில்லை. அவன் எங்கே போனாலும் என் கண்கள் அவனையே பின் தொடர்ந்தன. சாப்பிட்டுவிட்டு கை கழுவச்செல்லும் போது அவன் வருவதைப் பார்த்தேன். மெதுவாக கை கழுவினேன். மிக மெதுவாக. என்னருகில் வந்தவன் சிரித்தான். இருட்டில் நாங்கள் இருவர் மட்டும். எனக்கு இருதயதுடிப்பு அதிகரித்தது. கைகழுவிக்கொண்டான். கர்சீப் தேடினான். இல்லை. என்னிடம் கை நீட்டினான். என் கர்சீப்பை கொடுத்தேன். முகத்தில் ஒற்றிக்கொண்டு பின் கைகளைத் துடைத்தான். மீண்டும் என்னிடம் கொடுத்தான். சிரித்தான். போகலாமா என்றான்.

“எக்ஸாம் எல்லாம் முடிச்சதுக்கப்புறம் உன்னையெல்லாம் பாக்கவேமுடியாதுல்ல”
“ஏன் சித்தார்த் எப்போவேணுன்னாலும் வீட்டுக்கு வா. நீ தான் வந்திருக்கியே”
“அது இப்போ. ஸ்கூல் முடிச்சாச்சுன்னா உன்ன பாக்கவர்றதுக்கு சரியான காரணம் நான் சொல்லனும். இல்லியா?”

அவன் பஸ்ஸ்டான்டுக்கு போகணும். என் வீடு பஸ்ஸ்டாண்ட் தாண்டித் தான் இருக்கு. அதனால நான் லக்ஷ்மி, சௌமியா, வாணி, சூர்யா எல்லாரும் நடந்தே வந்தோம். அவன் சௌமியாவுடன் தான் பேசிக்கொண்டே வந்தான். என்னிடம் பேசவேயில்லை. நானும் வாணியும்தான் பேசிக்கொண்டே வந்தோம். “ரம்யா” என்றொரு குரல் கேட்கவே திரும்பிப்பார்த்தேன். அப்பா. ஸ்கூட்டரில். நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் என் பார்வையில் புள்ளியாகித்தேயும்வரை நான் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.எனக்கு அழுகையாக வந்தது. ஐ க்ரைட். நாங்கள் ·பேர்வெல் பார்ட்டி முடித்துவிட்டோம். ·பேர்வெல்.

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s