என் உயிர்த் தோழன் – 3

3

“சித்தார்த்”
சித்தார்த்திடம் பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மி, கணேஷ் எல்லாரும் விலகிக்கொண்டார்கள்.
“ரம்யா”
“நல்ல மார்க் கிடைக்கலையா”
“ம்ம். பரவாயில்ல. 1120”
“ம்ம் நானும் தான்” “ஐ ஹோப் ஐ வில் கெட் மெடிக்கல்”
“எனக்கு கிடைக்காது”
“ம்ம்..”
..
..
“எங்க ஜாயின் பண்ணப் போற”
“தியாகராஜா. கம்ப்யூட்டர் சயின்ஸ்”


“எப்ப பார்க்கலாம்?”
“டைம் கிடைக்கும் போது”

“நான் மதுரை மெடிக்கல் காலெஜில தான் சேருவேன். சென்னை போகமாட்டேன்.”
“ம்ம். போகாத.”

“எப்ப பார்க்கலாம்?”
“எப்பவேணுமின்னாலும்”

“அழாத ரம்யா”
“ம்ம்”

..

“இங்க தான இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”
“ம்ம்”
“உங்க அண்ணன் வர்றார்”
“ம்ம். எப்போ பார்க்கலாம்?”
“அழாத. கண்ண துடைச்சுக்கோ. உங்க அண்ணன் வர்றார்.”

“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்ல மார்க் தான வாங்கிருக்கீங்க?”
“இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கிருக்கலாம்”

என் அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு வந்தபிறகு, யாருமற்ற தனிமையில் அந்த மரத்தினடியில் அவன் நின்றுகொண்டிருந்ததைத் தான் நான் கடைசியாகப் பார்த்தேன். அவன் உடைந்துபோயிருந்தான். ஐ வாண்டட் டு பி வித் ஹிம் ·பார் எ வைல்.

நான் மெடிக்கல்காலேஜில் சீட் கிடைத்ததை பற்றி அவனுக்கு தான் முதலில் லெட்டர் போட்டேன். congrats என்று பதில் லெட்டர் வந்தது. பிறகு புதன் கிழமை தோறும் எனக்கு அவனிடமிருந்து லெட்டர் வரும். நான் ஒவ்வொரு ஞாயிறும் அவனுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணுவேன். சும்மா என்ன படிச்சோம் என்ன பார்த்தோம்னு. எனக்கு சினிமா பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் அவன் சொல்லுகிற சினிமா செய்திகளை சும்மா கேட்டுக்கொள்வேன். ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட் இன் சினிமா. எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்காது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்கூலிலே அவன் நிறைய தடவை என்னிடம் கேட்டிருக்கிறான். உண்மையிலே நீ சினிமா பாக்கமாட்டியா இல்ல சும்மா சொல்றியான்னு. எனக்கு பாடல்களும் தெரியாது. ஆனால் எனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும். பாடறியேன் படிப்பறியேன் தான் என்னுடைய ·பேவரிட் சாங். ஏனென்றால் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. அவன் லெட்டர் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அவனை பார்க்கவேண்டும் போல இருக்கும். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவனுடைய லெட்டரில் ஒரு சின்ன வெற்றிடம் கூட விடாமல் ஏதாவது எழுதியிருப்பான். எங்கள் பள்ளி ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளி ஆண்டுவிழாவுக்கு பழைய பாட்ச் மாணவர்களை அழைப்பார்கள். வாராவாரம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்று லெட்டரில் எழுதிக்கொண்டு வந்தோம். இருவருக்குமே ரொம்ப நாள் கழித்து பார்க்கப்போகிறோம் என்கிற ஆவல் இருந்தது. ஐ வாஸ் ஹைலி எக்ஸைட்டட்.

“ஹே சித்தார்த் வந்துட்டான். அங்க பாரு”
“ஹே ஆமா”
எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. புல்லரித்தது. கழுத்து சூடாக ஆனது. கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டேன். கைவிரல்கள் சில்லிட்டிருந்தன. அவனைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். இங்கதான இருக்கோம் எப்பவேனா பாத்துக்கலாம்னு சொன்னான். இப்ப ஒன்பது மாசம் ஆச்சு. எனக்கு கண்கள் கலங்கின. கொஞ்சம் குண்டாகிவிட்டான் போல. தலையில் முடி நிறைய வைத்திருந்தான். அதே சிரிப்பு. அதே சோடாபுட்டி. எங்களை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. என்னடா ஹேர் ஸ்டைல் இதுன்னு பயாலஜி மேடம் கேட்டாங்க. பக்கத்தில இருந்த ஷீபா அப்பாஸ் ஹேர்ஸ்டைல் மேம் என்றாள்.

இரவாகியது. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுதேவிட்டேன்.

“சித்தார்த்”
“ஹாய் ஷீபா. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். ரம்யா கூட ஏன் பேசமாட்டேன்ற?”
“பேசினேனே.”
“பொய் சொல்லாத. அவ அழறா”

“பேசறேன்”
“ஏன் இப்படி பண்ற?”

கிளம்பும் முன் என்னிடம் வந்தான். ஏதோ சும்மானாச்சுக்கும் பேசற மாதிரி பேசினான். கிளம்பறேன்னு கிளம்பிட்டான். எனக்கு கோபம் கோபமா வந்தது. அழுகை அழுகையா வந்தது. போடா லூசு. போடா லூசுன்னு திட்டிட்டேயிருந்தேன். ஐ ஹேட் ஹிம். பார்க்கப்போறோம் பேசப்போறோம்ன்னு எத்தனை நாள் காத்திருந்தேன். அன்று தான் வீட்டில் அவ்வாவிடம் முதலில் கோபப்பட்டேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவ்வா சாப்பிட வற்புறுத்தவே “போறீங்களா இல்லியா?” ன்னு கத்திட்டேன். அவ்வா முகம் வாடிப் போச்சு. போயிட்டாங்க. சாரி அவ்வா.

பிறகு அடுத்த புதன் கிழமை அவனிடமிருந்து லெட்டர் வந்தது. பேச என்னவோ போல இருந்ததாம். இடியட். இதெல்லாம் ஒரு காரணமா? நீ ஏன் பேசலன்னு என்கிட்ட கேட்டான். அவன் பேசாட்டி என்ன? நான் ஏன் அவன் கிட்ட பேசல? தாட் டே கேம் அன் வென்ட். ஜஸ்ட் லைக் தட். ஜஸ்ட் லைக் தட்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நோ கான்ட்டாக்ட்ஸ். லெட்டர் தொடர்பு நின்று போய்விட்டது. ஏன் எதற்கு என்கிற கேள்வி இல்லை. ஜஸ்ட் லைக் தட். நான் இரண்டு முறை லெட்டர் போட்டேன். சும்மா ஏனோ தானோன்னு பதில் எழுதினான். முன்னெல்லாம் கேப் விடாம எழுதறவன் இப்போ ஒரு பக்கம் தான் எழுதினான். இப்போ கொஞ்ச நாளா அதுவும் இல்ல. எனக்கும் எக்ஸாம்ஸ். ப்ராக்டிக்கல்ஸ். டெட்பாடீஸ். ஐ வாஸ் டோட்டலி ஆக்குப்பைட்.

“ரம்யா”
“ஐரினா? என்னப்பா?”
“யாரோ உன்ன பார்க்கவந்திருக்காங்கடி”
“குளிச்சிட்டிருக்கேன். வர்றேன்னு சொல்லு ஐரின்”

மணி இரவு ஏழாகிறது. இன்னேரம் யார் என்னைப் பார்க்க வந்திருப்பா? அண்ணன்? மெதுவாக படிகளில் இறங்கினேன். வானம் இன்னும் இருட்டவில்லை. குளித்து முடித்து வந்ததால் கழுத்தில் மீதமிருந்த நீர்த்துளிகளில் காற்று மோதி அவற்றை உடைத்து நொறுக்கியது. ஜில்லென்று இருந்தது. ஐ ·பெல்ட் ·ப்ரஸ். யார் வந்திருக்கிறா? எங்கே என்று தேடினேன். ஹ¥ இஸ் தட்? செல்வா?

(தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s