5
மீண்டும் அவனுடைய அப்பா.
“சார்..சீ.சாரி.. அங்கிள்..நான் ரம்யா பேசறேன். சித்தார்த் இருக்கானா..சீ..இருக்காங்களா”
“அடடே..ரம்யாவா? அப்ஸர்வேசன் நாட்புக்க நீயே வெச்சுக்குவியாம். அப்புறம் காலேஜில வந்து வாங்கிக்கிறானாம்”
“அப்சர்வேசன் நோட்? ஓ..ஓகே அங்கிள். சித்தார்த்..”
“சித்தார்த்துக்கு நேத்துலருந்து கொஞ்சம்..கொஞ்சம் என்ன நெறயவே டயரியா..ஆஸ்பத்திரியில இருக்கான்.டாக்டர் ஒரு நாள் தங்கிட்டு போங்கன்னு சொல்லிருக்கார்..நான் இப்போதான் வீட்டுக்கு வந்தேன். நீ கால் பண்ணுவ.. பண்ணினா ஒன்னும் அப்ஸர்வேசன் நோட்டுக்கு ஒன்னும் அவசரமில்லன்னு சொல்லச்சொன்னான்”
“அங்கிள்..சித்தார்த்.. இப்போ எப்படி இருக்கான்?”
“அதான் சொன்னேனே நல்லாயிருக்கான்ம்மா..பத்துபதினோறு மணிக்கெல்லாம் டிஸ்சார்ஜ் பண்ணிருவாங்கன்னு நினைக்கிறேன்”.
“அங்கிள்..அங்கிள் எந்த ஹாஸ்பிடல்?”
“திருமங்கலம். தருண் கிளினிக்ம்மா”
“ஓகே அங்கிள். தாங்க்ஸ்”
“அம்மா”
“நான் சிந்து வீட்டுக்கு போயிட்டு வரட்டுமா?”
“ஏன்? இந்நேரத்திலயா?? நீ போக மாட்டியே? அவ தான எப்பவும் வருவா?”
“ம்ம். அவளுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலையாம். டயரியாவாம்”
“என்னாச்சு அவளுக்கு? அண்ணன அவ வீட்ல ட்ராப் பண்ணச்சொல்றேன். போயிட்டுவா”
“அவ்வா”
“நான் சொல்லிக்கிறேன்”
அண்ணன எப்படி சமாளிக்கிறதுன்னு நான் யோசிச்சிட்டிருந்தப்போதான், அவனே என்னை தெருமுக்கில இறக்கிவிட்றதா சொன்னான். நல்லதாப்போச்சு. சிந்து வீட்ல இருந்து கொஞ்ச தூரத்தில தான் இருக்கு க்ளீனிக். அக்சுவலா எங்க ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. ம்ம்..நாங்க படிச்ச ஸ்கூலுக்கு பக்கத்தில தான் இருக்கு. சிந்துவீட்டுக்கு போயிட்டு அவளையும் கூட்டிட்டு போகலாமா? இல்ல நாமளே தனியா போகலாமா? சிந்துவக்கூப்பிட்டா அவ நீ எதுக்கு இவ்ளோ மெனக்கெடுறன்னு கேப்பா. என்ன பதில் சொல்றது. நானே தனியா போறதுன்னு முடிவெடுத்தேன்.
“இங்க சித்தார்த்ன்னு..”
“நேர போய் லெப்ட்ல திரும்பும்மா. ரூம் நம்பர் 89”
“சரிங்க”
நான் வேகவேகமா நடந்து திரும்பறதுக்கும் கௌரி என் மேல மோதறதுக்கும் கரெக்ட்டா இருந்தது.
“அக்கா. நீங்க எங்க இங்க?”
“கௌரி..நீ”
“இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை தானே சும்மா தான இருக்கேன்னுட்டு அப்பா கூட ஹாஸ்பிட்டல் வந்தேன்”
“ஓ..ஓகே”
“அக்கா யூ வில் பி சர்ப்ரைஸ்ட். உங்களுக்கு ஒன்னு தெரியுமா?”
“என்ன?”
“சித்தார்த் ஞாபகம் இருக்கா? ஸ்கூல்ல உங்க ப்ரண்ட்”
“ஆங்… ஞாபகம் இருக்கு”
“அவர் இங்க தான் இருக்கார். டயரியா. போய் பாருங்க ரூம் நம்பர் 89”
“ஓ இஸ் இட்?” “ஓகே நான் போய் பாக்கறேன்”
“ஓகே அக்கா. BYE.”
“BYE”
…
“ஆமா அக்கா நீங்க எதுக்கு வந்தீங்க..”
“ம்ம்..சும்மா தான்..”
கௌரியோட அப்பாதான் இங்க டாக்டர். என்னை ரொம்ப நல்லா தெரியும். எல்லார் கிட்டயும் உண்மை சொல்லிருந்தாக்கூட ஒன்னும் இல்ல. ஹ்ம்ம்..யாராவது பாத்து கேட்டா என்ன சொல்றது?
டக் டக் டக்
வாம்மா..நீ..
நான் ரம்யாம்மா..சித்தார்த்தோட க்ளாஸ்மேட்..
ஓ..உள்ளவாம்மா..எப்படிம்மா இருக்க
நல்லாயிருக்கேன்ம்மா
சித்தார்த் இங்க இருக்கறது அதுக்குள்ள உங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருச்சா.
ஜஸ்ட் இந்த ஹாஸ்பிடலுக்கு வந்தேன்..கௌரி சொன்னா..
ஓ..கௌரி சொன்னால? இங்க தான் இவ்ளோ நேரம் இருந்தா..இப்போத்தான் தூங்கினான்..வயிறு பெயின் இருக்கும் போல..எழுப்பட்டும்மா
..
எழுப்பட்டும்மா
..
நீ அவன் காலேஜ் க்ளாஸ்மேட்டா?
..
உங்க வீடு எங்க இருக்கு? தூங்கறான்..எழுப்பட்டுமா..
சித்தார்த் ரொம்பவும் ஒல்லியான மாதிரி இருந்தது. முகம் ரொம்பவும் டயர்டா இருந்தது. நான் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அவனுடைய அம்மா பேசியதை நான் கவனிக்கவில்லை. என் கவனம் முழுவதும் சித்தார்த் மேலேயே இருந்தது. ஏன் எனக்கு அழுகை வருகிறது. அழக்கூடாது. அவன் கைகளைப் பிடித்தேன். ஜில்லென்றிருந்தது. அவன் நல்லா தூங்கிட்டிருந்தான். எழுப்பறேன்னு தான் சொன்னாங்க. ஆனா எழுப்பவில்லை. கைகளில் பள்ஸ் பார்த்தேன். வயிறை தொட்டுப்பார்த்தேன். அவனுடைய அம்மா பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள். பிறகு மீண்டும் பல்ஸ் பாக்குற சாக்கில அவன் மணிக்கட்டில ஒரு கிள்ளு கிள்ளினேன். டப்புன்னு முழிச்சுப்பாத்தான். என்னைப் பார்த்தவுடனே பயந்தே போயிட்டான். பிறகு வந்துட்டியா? நல்லாயிருக்கியாங்கற மாதிரி ஒரு சிரிப்பு சிரிச்சான். அவ்வளவுதான். எனக்கு அது போதும். தூங்கி நல்லா ரெஸ்ட் எடுடான்னு சொன்னேன். சொல்லல.
சிந்துவின் வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாக சென்றேன். அந்த தெரு கொஞ்சம் குறுகலான தெரு. காலையில் இட்லி வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போல
இருந்தது. நான் வேகத்தை கூட்டினேன். இங்கிருந்து பார்க்கும் பொழுது சிந்துவின் வீடு தெரியும். தெரிந்தது. பக்கத்தில் எங்களுடைய காரும் தெரிந்தது.
அமைதியாக உள்ளே நுழைந்தேன். அண்ணன் உட்கார்ந்திருந்தான். சிந்து என்னைப் பாவமாகப் பார்த்தாள். அண்ணன் கிளம்பலாமா என்றான்.
ட்ரிங்
ட்ரிங்
ட்ரிங்
ஹலோ
ரம்..
தயவுசெய்து இனிமே கால் பண்ணாத ப்ளீஸ்
டக்
அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் மீண்டும் கால் செய்த பொழுது, என் அருகில் வீட்டில் இருக்கும் எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். ஐ விஷ் ஆர் நாட் ஐ டோல்ட் த சேம் எக்ஸாக்ட் ஸ்டுபிட் லைன்ஸ். சித்தார்த்.. சித்தார்த்.. என்னை மன்னிச்சிடுடா ப்ளீஸ். மன்னிப்பியா. ப்ளீஸ். நான் ஹாஸ்டல்ல தங்கல அதுக்கப்புறம். அப்பா என்னை தினமும் காரில ட்ராப் செஞ்சு ஈவினிங் பிக் அப் பண்ணிடுவார். ஒரு நாள் காலேஜில இருந்து அவன் வீட்டுக்கு நான் டயல் செஞ்சேன். அவனுடைய அப்பா எடுத்தார்.
ஹலோ
ஹலோ
சித்தார்த்
சித்தார்த் இல்லியேம்மா. வெளில போயிருக்கான்.
சரி அங்கிள்.
ஒரு நாள் என்னைத் தேடி ஈவினிங் காலேஜுக்கு வந்திருக்கான். நான் தான் காலேஜில தங்குறது இல்லியே. நான் இல்லைன்னு சொன்னதா என் ப்ரண்ட் சொன்னா. ரொம்ப நேரம் அந்த மரத்தினடியில இருக்கிற அந்த பெஞ்சிலே உட்கார்ந்திருக்கிறான். நான் எப்பொழுதும் அங்கே பார்க்கும் அணிலிடமாவது ஏதாவது அவன் சொல்லிருக்கலாம். மறுநாள் நான் அந்த அணிலை நான் தேடிச்சென்றேன்.
துக்கம் தொண்டையை அடைக்க மீண்டும் அவன் வீட்டுக்கு டயல் செய்தேன். இந்த தொலைபேசி உபயோகத்தில் இல்லை. நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும். மீண்டும் டயல் செய்தேன். மீண்டும் அதே மெசேஜ். அந்த மரத்தினடியில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சித்தார்த் ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ் இப்போ வாடா. ப்ளீஸ்டா. என்னம்மா க்ளாஸ¤க்கு போகலையான்னு கேட்டது அந்த அணில்.
(தொடரும்)