7
கொஞ்ச நாட்களுக்குள்ளாகவே நானும் முத்துவும் நண்பர்கள் ஆகிவிட்டோம். அவன் கம்ப்யூட்டர் துறையைச் சார்ந்தவனாம். தற்சமயம் சிங்கப்பூரில் வாழ்ந்து வேலை பார்த்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். நாங்கள் இருவரும் கொஞ்சம் பெர்சனல் தகவல் பறிமாறிக்கொண்டோம். எனக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. பிறகு அவனுடைய அப்ரோச் எனக்கு பிடித்திருந்தது. நாங்கள் இருவரும் வாரம் ஒரு முறை சாட் செய்வோம். சில நேரங்களில் அவனே என்னை அழைப்பான். நான் ·ப்ரியாக இருந்தால் நான் அழைப்பேன். நான் அழைக்கும் பொழுது அவன் எனக்கு ரிப்லை பண்ணதே இல்லை. லுக்ஸ் லைக் ஹி இஸ் வெரி பிஸி. கேட்டால் ·ப்ரண்ட்ஸோடு அங்கே போயிருந்தேன். இங்கே போயிருந்தேன் என்பான். இல்லீன்னா அந்த புத்தகம் படிச்சேன் இந்தப் புத்தகம் படிச்சேன்னு சொல்லுவான். அதுவுமில்லீன்னா ஏதாவது படம் பாத்துட்டு இருப்பான். ஹி மேக்ஸ் ஹிம்செல்ப் பிஸி. இப்போ புதுசா கதை எழுத ஆரம்பிச்சிருக்கானாம்.
இன்னிக்கு கூட ஒரு கதை அனுப்பிச்சான். கிணறு. நல்லாத்தான் இருந்தது. எத்தனை தூரம் பழகினாலும் அவன் ஒரு முறை கூட எனது ·போன் நம்பரை கேட்க்காமலிருந்தது எனக்கு பிடித்திருந்தது. கேட்டால் கொடுத்திருப்பேனா என்பது சந்தேகம் தான். ஒரு வேளை அவன் கேட்டிருந்தால் எங்களது நட்பு முறிந்து கூட போயிருக்கும். இதை நட்பு என்று சொல்லலாமா என்று எனக்கு தெரியவில்லை. பட் ஐ ·பீல் லை திஸ் இஸ் நாட் ·ப்ரண்ட்ஷிப். இது ஒரு அறிமுகம் அவ்வளவே. என் ஆர்குட் முகவரியில் என் ·போட்டா இருக்காது. அது போல அவன் ஆர்க்குட் முகவரியிலும் ·போட்டா இல்லை. அவர் ·ப்ரபைல்ஸ் ஆர் ரெஸ்ட்ரிக்டட்.
ஒரு நாள் அதிகாலை மூன்று மணி இருக்கும் எனது ரூம் கதவு தட்டப்பட்டது. மெதுவாக மிக மெதுவாக. லைக் சம் டைம்ஸ் யூ டோன்ட் வாண்ட் டு டிஸ்டர்ப் சம் ஒன் ஸ்லீப். பட் யூ ஹேவ் காட் நோ சாய்ஸ். மீண்டும் மெதுவாக கதவு தட்டப்படும் ஓசை. நான் படுக்கையிலிருந்து எழுவதற்கும் செல்·போன் வைப்ரேட் ஆவதற்கும் சரியாக இருந்தது. அந்த நிசப்தத்தில் செல்·போன் டேபிளில் வைபிரேட் ஆகும் சத்தம் கொஞ்சம் திகிலூட்டுவதாகவே இருந்தது. செல்போனை எடுப்பதா கதவைத் திறப்பதா என்று நான் யோசித்துக்கொண்டிருக்கையில் மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை. இந்த முறை கொஞ்சம் பலமாக. நான் செல்போனை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தேன்.
ஹலோ
அண்ணா? என்ன இந்த நேரத்தில?
கதவைத் திறந்தேன்.
சித்தப்பா. சித்தி.
சித்தி என்னாச்சு?
சித்தி: லைன்ல அண்ணனா? பேசு பேசு..
…
…
எப்போண்ணா?
…
ம்ம்
..
ம்ம்
..
ம்ம்
சித்தி.. (சித்தி ·போனை வாங்குகிறார்)
..
எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகிலிருந்த சோ·பாவில் உட்கார்ந்துகொண்டேன். கால்கள் லேசாக உதறுவதைப்போல இருந்தது. கைகளை இறுக்கமாக கட்டிக்கொண்டேன். பற்கள் கூட தாமாகவே ஆடுவதைப் போல இருந்தது. மெல்ல நடுங்குவதைப் போல. கிழேயே குணிந்திருந்தேன். இருதயம் நழுவி விழுவதைப்போல இருந்தது. இந்த உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் யார் என்று கேட்டால், சட்டென்று நான் பதில் சொல்வேன்: அவ்வா. இன்று அவ்வா தவறிவிட்டார். நான் பக்கதில் இல்லை. தூரத்தில் கூட இல்லை. ரொம்ப ரொம்ப தூரத்தில் இருக்கிறேன். எனக்கு அழுகைவரவில்லை. ஆனால் மனதை பிசைவது போல ஒரு இனம்புரியாத என்னவென்று தெரியாத ஒரு உணர்ச்சி. இதே போன்றதொரு வலியை உணர்ச்சியை நான் ஏற்கனவே ஒரு முறை அனுபவித்திருக்கிறேன். அதற்கு காரணமும் அவ்வாதான்.
நான் அழுகாமல் இருந்தது சித்தியை பயமுறுத்தியிருக்க வேண்டும். அவர் அன்று என்னுடனே தங்கிவிடுகிறேன் என்று சொன்னார். சித்தப்பா மட்டும் கிளம்பி வீட்டுக்கு சென்று விட்டார். சொல்லமறந்துவிட்டேன் நான் வீடு மாறிவிட்டேன். எங்கள் யுனிவர்சிட்டிக்கு பக்கத்திலிருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தற்சமயம் தங்கியிருக்கிறேன். யுனிவர்சிட்டிக்கும் ஹாஸ்பிட்டலுக்கும் இந்த வீடு தான் சௌகரியம். வீடு எனச் சொல்லமுடியாது. ஸ்டுடியோ அப்பார்ட்மெண்ட்.
மறுநாள் சித்தி சென்றுவிட்டார். எனக்கு அன்று நைட் டூட்டி. டூட்டி முடித்து மறுநாள் காலை பதினோறு மணிக்கு வீட்டுக்கு வந்தேன். வீடே சூணியம் போல இருந்தது. எங்கும் வெறுமை படர்ந்திருந்தது. என் கம்ப்யூட்டர் டேபிளில் உட்கார்ந்து காலைநீட்டு கைகளை கட்டி உட்கார்ந்தேன். என்னுடைய பழைய ·போட்டோக்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். என்னுடைய சில போட்டோக்களை என்னுடன் நான் எடுத்துவந்திருந்தேன். அமெரிக்கா கொஞ்சம் பழகிய பிறகு அவற்றை ஸ்கேன் செய்து என் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்திருந்தேன். அந்த போட்டாக்களில் என் குடும்பம் முழுவதும் இருக்கும். எல்லா போட்டோவிலும் அவ்வா இருப்பார். அண்ணன் கல்யாணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள். அவ்வாவை போட்டோவில் பார்க்க பார்க்க மீண்டும் அதே வலி என்னுள் எழுந்தது. துக்கம் தாளாது இருதயம் வெடித்துவிட வாய்ப்பிருக்கிறதா? அந்த ·போட்டோக்களுடன் எனது பள்ளிக்காலத்து போட்டோக்கள் சிலதும் இருக்கின்றன. ஒரு படத்தில் என் விரல்கள் தாமாகவே நடுங்கின. என் உடம்பு முழுதும் ஒரு அதிர்வு படர்ந்து அடங்கியது. கம்ப்யூட்டர் திரையில் சித்தார்த்தும் நானும் சிறு பிள்ளைகளாக நடனமாடிக்கொண்டிருந்தோம். கண்ணீர் கண்ணங்களில் வழிந்தது. அடுத்த போட்டோ அவ்வாவும் நானும் மட்டும். அவ்வாவின் மடியில் நான் படுத்துக்கொண்டிருப்பதைப் போல. அவ்வாவின் முகம் மிக அழகாக இருந்தது. ஷீ இஸ் ஆன் ஏஞ்சல். என்னுடைய துக்கம் பீறிட்டு எழுந்தது. ஓ வென கதறி அழுதேன். கட்டிக்கொள்ள யாரும் இல்லை. மௌனமாக என்னை வெறித்துப்பார்த்த கம்ப்யூட்டரைத் தவிர.
ஸ்கைப் அழைத்தது. ஒரு முறை. இரு முறை. மூன்றாம் முறை. நிமிர்ந்து பார்க்க விருப்பமின்றி டேபிளிலே படுத்திருந்தேன். செல்போன் அடித்தது. என் ஷிப்ட் தோழி. அவளுக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கிறதாம். அவளுடைய ஷிப்ட்டை நான் கவனித்துக்கொள்ள முடியுமா என்றாள். ஐ நீட் எ சேஞ்ச். வீடு பக்கத்தில் இருப்பதில் இது ஒரு சிக்கல். சரி என்றேன்.
கிளம்புவதற்கு முன் யார் என்னை ஸ்கைப்பில் அழைத்திருந்தது என்று பார்க்கலாம் என்று மானிட்டரை ஆன் செய்தேன். ஸ்க்ரீன் உயிர்பெற்றது. முத்து. நிறைய தடவை பிங் பன்னியிருந்தான். கடைசியில் “I need an urgent help! Can you help me pleae? PING ME ONCE YOU ARE ONLINE” என்றிருந்தது.
(தொடரும்)