என் உயிர்த் தோழன் – 4

4
“ஹாய் ரம்யா”
“ஹாய் செல்வா? என்ன இந்தப்பக்கம்”
“சும்மா வந்தேன். வரலாமில்ல”
“ஓ ஸ்யர்”

“உட்காரலாமா?”
“ஓ ஸ்யர்”

“என்ன பண்ணிட்டிருந்த”
“சும்மா..ஜஸ்ட் லைக் தட்”

“சாப்பிட்டாச்சா”
“இப்போ போகலைன்னா எனக்கு சாப்பாடு கிடைக்காது”
“இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடாம டயட்ல இரேன்”

“கேர் ·பார் ஆன் ஐஸ்க்ரீம்”
“ஐஸ்க்ரீம்? நோ செல்வா. ஐ ஹாவ் டு கோ “
“ஜஸ்ட் டென் மினிட்ஸ். ப்ளீஸ்”
“பட்..”
“ப்ளீஸ் ரம்யா.”

“எங்க?”
“ஜஸ்ட் உன் காம்பஸ்ல இருக்கிற க்வாலிட்டி ஐஸ்க்ரீம்முக்கு போவோம்”
….

வழியிலெங்கும் சும்மா எதுனாச்சும் பேசிக்கொண்டே வந்தான். எனக்கு எரிச்சலாக இருந்தது. யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொன்னதும் என் மனதின் ஓரத்தில் சித்தார்த்தாக இருக்குமோ என்கிற ஆசை இருந்தது. நல்லவேளை ஐஸ்க்ரீம் பார்லர் வேகமாக வந்துவிட்டது.

நான் உள்ளே கால் எடுத்து வைத்ததும், டப் என்றொரு சத்தம் கேட்டது. பலூன் வெடிக்கும் சத்தம். ஹ¥ய் என்று சத்தம். பின் ஹாப்பி பர்த் டே டூ யூ பாடல். கடையில் இருந்த நீல நிற திரையை விலக்கிக்கொண்டு சௌமியா, கணேஷ், இந்திரா, கோபால், ஷீபா எல்லோரும் வந்தனர். கடைசியாக சித்தார்த் வந்தான். இன்று எனக்கு பர்த்டே.

எல்லோரும் சென்று விட்ட பிறகு, சித்தார்த் என்னை காலேஜ் ஹாஸ்டலில் விட்டுவிட வந்தான்.
இருவரும் ஹாஸ்டலுக்கு வெளியே மரத்தினடியில் இருந்த பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“எப்படி இருக்க”
“ம்ம்..அஸ் யூ ஸீ”
“யூ ஹேவ் ச்சேஞ்ச்ட் எ லாட்.”
“யூ டூ”
“குட். யூ லுக் குட்.”
“இஸ் இட்? ஓவ் ஓக்கே. அப்பைத்தான் என்னோட கேர்ஸ் ப்ரண்ட்ஸ¤ம் சொல்றாங்க”
“அய்யே..ரொம்ப அலட்டிக்காத..அப்புறம்”
“நத்திங்”
“உன்னோட கேர்ள் ப்ரண்ட்ஸ¤க்கு மத்தில என்னோட பர்த்டே கூட ஞாபகம் வெச்சிருக்கிற”
“ம்ம். ஐ வில்”
“சாப்பிட்டியா”
“இன்னும் இல்ல”
“வீட்டுக்கு எப்படிப் போவ?”
“உனக்கென்ன கவலை?”
“சொல்லுடா”
“வண்டி”
“தள்ளுவண்டியா?”
“ஆமா உங்கப்பா இழுக்கற தள்ளுவண்டிதான்”
“அப்பாவ ஏன் இழுக்கற”
“நான் எங்க இழுக்கறேன். உங்க அப்பா தான் இழுக்கறார் தள்ளுவண்டி”
“ஸ்டுபிட்”
“ம்ம் சரி”
….
….
“நீ என்ன சாப்பிடுவ?”
“என்னவேணுன்னாலும் சாப்பிடுவேன்”
“இன்னிக்கு உங்க கேண்டீன்ல என்ன போடுறாங்க? டெட் பாடி பார்ட்ஸ்ல செஞ்ச ப்ரியாணி தான?”
“உன் மூஞ்சி. ச்சை. உவ்வே”
“மூஞ்சிய கோணலா வெச்சாத்தான் நீ நல்லாயிருக்கிற”
“வாட்” (கோணலா ஒரு சிரிப்பு)
“ஒண்ணுமில்ல”
“அது” (கோணல் சிரிப்பு இன்னும் மாறவில்லை. இமைகள் ஒரு முறை தாழ்ந்து நிமிர்கின்றன. கண்கள் சிரிக்கின்றன.)
“சரி நான் கிளம்பறேன்”
“கிளம்பு” (மெல்லிய சிரிப்பு)
“வர்றேன்”
“வராத” (மிக மெல்லிய சிரிப்பு)
“போயிடுவேன்”
“போகாத”
..
“வா”
..
“உக்காரு”
“உன் வார்டன் திட்டப்போறாங்க”
“திட்டமாட்டாங்க”
“ம்ம். என்ன சொல்லு”
“ஒண்ணுமில்ல”
“இப்பவும் புக்ஸ கட்டிட்டு தான் அழறயா?”
“ம்ம். வாட் எல்ஸ்”
“பாய் ப்ரண்ட்ஸ் வெச்சுக்க வேண்டியதுதான”
“அது இருக்காங்க ரொம்பபேர்”
“ம்ம்ம்.”
“யார செலக்ட் பன்றதுன்னு தான் தெரியல”
“ம்ம்ம்”
“என்ன ம்ம்?”
“யாரையாவது செலக்ட் பண்ணிக்கோ”
“அது எங்களுக்கு தெரியும். ப்ராஸஸ் பண்ணிட்டிருக்கேன்”

“சரி. உனக்கு எத்தனை கேர்ள் ப்ரண்ட்ஸ்”
“மூனு”
“அடப்பாவி. அசால்ட்ட சொல்ற”
“இதுல என்ன இருக்கு”
“பேர் சொல்லு”
“உனக்கெதுக்கு”
“சொல்லுடா”
“முடியாது”
“சொல்லுடா”
“முடியாது போடி”
..
“நான் போட்டா?”
“ம்ம்”
“வார்டன் திட்டுவாங்க”
“ம்ம்” “ஒழுங்கா சாப்பிட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்கு”
“ம்ம்”
“என்னோட வீட்டு போன் நம்பர் வேணுங்கறவங்க கேட்டு வாங்கிக்கலாம்.”
“ஹை போன் வாங்கியாச்சா”
“ம்ம்”
“சரி நான் ஞாயித்துக்கிழமை வீட்டுக்கு வரும்போது எனக்கு போன் பண்ணு”
“ம்ம்”
“யர்லி மார்னிங்..ஆறு மணிக்குள்ள பண்ணு”
“ம்ம்..என்னது ஆறு மணியா. நோ சான்ஸ்.”
“என்னோட பேசணும்னு நினைக்கறவங்க காலைல ஆறு மணிக்குள்ள பேசுங்கப்பா”
..
“சரி நான் கிளம்பறேன்”
“சென்று வா மகளே”
..
..
“ரம்யா”
“என்ன? போகவிடமாட்டியே”
“க்ரீட்டிங் கார்ட்”
“தாங்க்ஸ். தாங்க்ஸ் எ லாட். இந்த பர்த்டேய நான் என்னைக்குமே மறக்கமாட்டேன்”
“ரொம்ப சென்டிமெண்ட்டா ஆகாத”
“ம்ம்” (கீழே குணிந்து கொள்கிறாள்.)
“சரி. வார்டன் உள்ள விடலன்னா என்ன பண்ணுவ. கிளம்பு.”
“ஏன் உன் வீடு பக்கத்துல தான இருக்கு”
“அடிப்பாவி. வீட்ல உத வாங்க வைக்க பாக்குறயா?”
“சரி. நான் கிளம்பறேன். உன் தள்ளுவண்டிய பாத்து பத்திரமா உருட்டிட்டு போ.”
“சரிங்க மேடம். நீங்க உங்க டெட் பாடிஸ பத்திரமா பாத்துக்கோங்க”

எல்லா ஞாயிறும் சித்தார்த் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எங்கள் வீட்டுக்கு கால் பண்ணுவான். அஸ் யூஸ்வல் எங்களுக்கும் சிக்னல் இருந்தது. ஒரு கால். ஒரு ரிங். ரெண்டாவது கால். ரெண்டு ரிங். மூணாவது கால். மூணு ரிங். எங்கள் வீட்டில் சித்தார்தை நன்றாக தெரியும் என்றாலும், ஒரு த்ரிலுக்காகத்தான் சிக்னல் வைத்துக்கொண்டோம். மேலும் சித்தார்த் தான் என்று தெரிந்துவிட்டால் அவ்வா, என்னடி ஆம்பள பையனுடன் இப்படி பேச்சு என்று திட்டுவார்கள் இல்லியா? அதற்கு முந்தைய ஞாயிறு வரை லேட்டாக எழுந்திருக்கும் நான், இப்பொழுதெல்லாம் கரெக்ட்டாக ஆறு மணிக்கு எழுந்துவிடுவது அம்மாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவ்வாவுக்கும் தான். எழுந்து ஏதோ நாட்டு நடப்புகளில் ஆர்வம் இருப்பவள் போல பேப்பரை எடுத்துக்கொண்டு ·போனைப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். கரெக்ட்டாக ஆறு மணிக்கு ஒரு மணி அடிக்கும்.

ட்ட்ரிங்

ஹலோ சார்
ஹலோ மேடம்
எப்படி சார் இருக்கீங்க
நல்லாயிருக்கேன் மேடம்
என்ன பண்றீங்க சார்
குளிறுது நல்லா போர்வைக்குள்ள இருக்கேன்.
எனக்கும் குளிறுது
எப்படி போச்சு இந்த வாரம்
உன் தொல்லையில்லாம ரொம்ப நல்லா போச்சு
அப்படியா? ஹரிஷ் எப்படி இருக்கான்?
அவன பத்தி இப்போ என்ன?
சரி விடு கேக்காட்டி ஹரிஸ் பத்தி ஏதும் கேக்கலையேன்னு வருத்தப்படுவியேன்னுதான் கேட்டேன்
ச்சேஞ் த டாபிக்
ம்ம் இந்த வாரம் என்ன இன்ட்ரஸ்டிங்..?
பொறுடி..ப்ரண்ட்ம்மா..ம்ம்..ஆமா சிந்து தான்..
அடிப்பாவி.
கண்டுகிடாத..அப்புறம் என்னடி இவ்ளோ வேகமா எழுந்திட்ட..

ஒரு வாரம் ·போன் கால் வரவில்லை. மணி ஆறாச்சு. ஆறரை ஆச்சு. எனக்கு பொறுக்கமுடியவில்லை. அவன் நம்பருக்கு நானே டயல் செய்துவிட்டேன். என் வீட்ல அவனை நன்றாக தெரிந்தாலும், அவன் வீட்ல என்னை அவ்வளவாக தெரியாது. அவன் அப்பா எடுத்தார்கள். டப் என்று கட் செய்துவிட்டேன். பயம். என்ன செய்வது? என்ன செய்வது? நீங்கள் இது மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தீர்கள் என்றால் தான் உங்களுக்கு இது புரியும். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

எனக்கிருக்கும் ஒரே சாய்ஸ். மீண்டும் கால் செய்வது தான். அதுவும் வேகமாக செய்யவேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டில் எல்லோரும் எழுந்து விடுவார்கள். அப்புறம் பேசவே முடியாது. அப்புறம் அடுத்த வாரம் தான். மீண்டும் டயல் செய்தேன். என் விரல்கள் நடுங்கின. சித்தார்த் எடுத்திருடா. ப்ளீஸ்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 3

3

“சித்தார்த்”
சித்தார்த்திடம் பேசிக்கொண்டிருந்த லக்ஷ்மி, கணேஷ் எல்லாரும் விலகிக்கொண்டார்கள்.
“ரம்யா”
“நல்ல மார்க் கிடைக்கலையா”
“ம்ம். பரவாயில்ல. 1120”
“ம்ம் நானும் தான்” “ஐ ஹோப் ஐ வில் கெட் மெடிக்கல்”
“எனக்கு கிடைக்காது”
“ம்ம்..”
..
..
“எங்க ஜாயின் பண்ணப் போற”
“தியாகராஜா. கம்ப்யூட்டர் சயின்ஸ்”


“எப்ப பார்க்கலாம்?”
“டைம் கிடைக்கும் போது”

“நான் மதுரை மெடிக்கல் காலெஜில தான் சேருவேன். சென்னை போகமாட்டேன்.”
“ம்ம். போகாத.”

“எப்ப பார்க்கலாம்?”
“எப்பவேணுமின்னாலும்”

“அழாத ரம்யா”
“ம்ம்”

..

“இங்க தான இருக்கப்போறோம். பாத்துக்கலாம்”
“ம்ம்”
“உங்க அண்ணன் வர்றார்”
“ம்ம். எப்போ பார்க்கலாம்?”
“அழாத. கண்ண துடைச்சுக்கோ. உங்க அண்ணன் வர்றார்.”

“என்ன ஆச்சு? ரெண்டு பேரும் நல்ல மார்க் தான வாங்கிருக்கீங்க?”
“இல்லண்ணா. இன்னும் கொஞ்சம் அதிகம் வாங்கிருக்கலாம்”

என் அண்ணன் என்னை அழைத்துக்கொண்டு வந்தபிறகு, யாருமற்ற தனிமையில் அந்த மரத்தினடியில் அவன் நின்றுகொண்டிருந்ததைத் தான் நான் கடைசியாகப் பார்த்தேன். அவன் உடைந்துபோயிருந்தான். ஐ வாண்டட் டு பி வித் ஹிம் ·பார் எ வைல்.

நான் மெடிக்கல்காலேஜில் சீட் கிடைத்ததை பற்றி அவனுக்கு தான் முதலில் லெட்டர் போட்டேன். congrats என்று பதில் லெட்டர் வந்தது. பிறகு புதன் கிழமை தோறும் எனக்கு அவனிடமிருந்து லெட்டர் வரும். நான் ஒவ்வொரு ஞாயிறும் அவனுக்கு லெட்டர் போஸ்ட் பண்ணுவேன். சும்மா என்ன படிச்சோம் என்ன பார்த்தோம்னு. எனக்கு சினிமா பார்க்கிற வழக்கம் இல்லையென்பதால் அவன் சொல்லுகிற சினிமா செய்திகளை சும்மா கேட்டுக்கொள்வேன். ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட் இன் சினிமா. எனக்கு சினிமா பார்ப்பது பிடிக்காது என்பது அவனுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஸ்கூலிலே அவன் நிறைய தடவை என்னிடம் கேட்டிருக்கிறான். உண்மையிலே நீ சினிமா பாக்கமாட்டியா இல்ல சும்மா சொல்றியான்னு. எனக்கு பாடல்களும் தெரியாது. ஆனால் எனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்பது அவனுக்கு தெரியும். பாடறியேன் படிப்பறியேன் தான் என்னுடைய ·பேவரிட் சாங். ஏனென்றால் அது மட்டும் தான் எனக்கு தெரியும்.

ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. அவன் லெட்டர் எனக்கு கிடைக்கும் பொழுதெல்லாம் எனக்கு அவனை பார்க்கவேண்டும் போல இருக்கும். அவனுக்கு எப்படி இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அவனுடைய லெட்டரில் ஒரு சின்ன வெற்றிடம் கூட விடாமல் ஏதாவது எழுதியிருப்பான். எங்கள் பள்ளி ஆண்டுவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. பள்ளி ஆண்டுவிழாவுக்கு பழைய பாட்ச் மாணவர்களை அழைப்பார்கள். வாராவாரம் இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இன்னும் ரெண்டு வாரம் இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் இருக்கிறது என்று லெட்டரில் எழுதிக்கொண்டு வந்தோம். இருவருக்குமே ரொம்ப நாள் கழித்து பார்க்கப்போகிறோம் என்கிற ஆவல் இருந்தது. ஐ வாஸ் ஹைலி எக்ஸைட்டட்.

“ஹே சித்தார்த் வந்துட்டான். அங்க பாரு”
“ஹே ஆமா”
எனக்கு கைகள் நடுங்க ஆரம்பித்தன. புல்லரித்தது. கழுத்து சூடாக ஆனது. கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டேன். கைவிரல்கள் சில்லிட்டிருந்தன. அவனைப் பார்த்தேன். ஒன்பது மாதங்கள் கழித்து அவனைப் பார்த்தேன். இங்கதான இருக்கோம் எப்பவேனா பாத்துக்கலாம்னு சொன்னான். இப்ப ஒன்பது மாசம் ஆச்சு. எனக்கு கண்கள் கலங்கின. கொஞ்சம் குண்டாகிவிட்டான் போல. தலையில் முடி நிறைய வைத்திருந்தான். அதே சிரிப்பு. அதே சோடாபுட்டி. எங்களை நோக்கி வேகவேகமாக வந்துகொண்டிருந்தான். அவன் என்னைப் பார்த்தது போலவே தெரியவில்லை. என்னடா ஹேர் ஸ்டைல் இதுன்னு பயாலஜி மேடம் கேட்டாங்க. பக்கத்தில இருந்த ஷீபா அப்பாஸ் ஹேர்ஸ்டைல் மேம் என்றாள்.

இரவாகியது. என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் என்ன தப்பு செஞ்சேன். எனக்கு அழுகை அழுகையாக வந்தது. அழுதேவிட்டேன்.

“சித்தார்த்”
“ஹாய் ஷீபா. எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேன். ரம்யா கூட ஏன் பேசமாட்டேன்ற?”
“பேசினேனே.”
“பொய் சொல்லாத. அவ அழறா”

“பேசறேன்”
“ஏன் இப்படி பண்ற?”

கிளம்பும் முன் என்னிடம் வந்தான். ஏதோ சும்மானாச்சுக்கும் பேசற மாதிரி பேசினான். கிளம்பறேன்னு கிளம்பிட்டான். எனக்கு கோபம் கோபமா வந்தது. அழுகை அழுகையா வந்தது. போடா லூசு. போடா லூசுன்னு திட்டிட்டேயிருந்தேன். ஐ ஹேட் ஹிம். பார்க்கப்போறோம் பேசப்போறோம்ன்னு எத்தனை நாள் காத்திருந்தேன். அன்று தான் வீட்டில் அவ்வாவிடம் முதலில் கோபப்பட்டேன். எனக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை. அவ்வா சாப்பிட வற்புறுத்தவே “போறீங்களா இல்லியா?” ன்னு கத்திட்டேன். அவ்வா முகம் வாடிப் போச்சு. போயிட்டாங்க. சாரி அவ்வா.

பிறகு அடுத்த புதன் கிழமை அவனிடமிருந்து லெட்டர் வந்தது. பேச என்னவோ போல இருந்ததாம். இடியட். இதெல்லாம் ஒரு காரணமா? நீ ஏன் பேசலன்னு என்கிட்ட கேட்டான். அவன் பேசாட்டி என்ன? நான் ஏன் அவன் கிட்ட பேசல? தாட் டே கேம் அன் வென்ட். ஜஸ்ட் லைக் தட். ஜஸ்ட் லைக் தட்.

இரண்டு மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. நோ கான்ட்டாக்ட்ஸ். லெட்டர் தொடர்பு நின்று போய்விட்டது. ஏன் எதற்கு என்கிற கேள்வி இல்லை. ஜஸ்ட் லைக் தட். நான் இரண்டு முறை லெட்டர் போட்டேன். சும்மா ஏனோ தானோன்னு பதில் எழுதினான். முன்னெல்லாம் கேப் விடாம எழுதறவன் இப்போ ஒரு பக்கம் தான் எழுதினான். இப்போ கொஞ்ச நாளா அதுவும் இல்ல. எனக்கும் எக்ஸாம்ஸ். ப்ராக்டிக்கல்ஸ். டெட்பாடீஸ். ஐ வாஸ் டோட்டலி ஆக்குப்பைட்.

“ரம்யா”
“ஐரினா? என்னப்பா?”
“யாரோ உன்ன பார்க்கவந்திருக்காங்கடி”
“குளிச்சிட்டிருக்கேன். வர்றேன்னு சொல்லு ஐரின்”

மணி இரவு ஏழாகிறது. இன்னேரம் யார் என்னைப் பார்க்க வந்திருப்பா? அண்ணன்? மெதுவாக படிகளில் இறங்கினேன். வானம் இன்னும் இருட்டவில்லை. குளித்து முடித்து வந்ததால் கழுத்தில் மீதமிருந்த நீர்த்துளிகளில் காற்று மோதி அவற்றை உடைத்து நொறுக்கியது. ஜில்லென்று இருந்தது. ஐ ·பெல்ட் ·ப்ரஸ். யார் வந்திருக்கிறா? எங்கே என்று தேடினேன். ஹ¥ இஸ் தட்? செல்வா?

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 2

2

அவன் ரொம்ப நேரம் வரலைன்னவுடனே எனக்கு அழுகையா வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு அவன் இல்லாட்டா எப்படி? பஸ் லேட்டோ? பஸ்ல இருந்து கீழே விழுந்துட்டானோ? என் மண்டை குழம்பிக்கிட்டே இருந்துச்சு. கடைசியில் வந்தான். லூசு மாதிரி ஒரு பேண்ட் ஒரு சர்ட் போட்டுட்டு வந்தான். நான் இன்னைக்கு ரெட் சுடி போட்டிருந்தேன். முன்ன ஒரு தடவ சனிக்கிழமை ஸ்பெஷல் க்ளாஸ¤க்கு நான் போட்டுட்டு வந்திருந்தப்போ நல்லாயிருக்குன்னு சொன்னான். நேரே வந்து ப்ரோகிராம் ஸ்கெடியூல் செக் பண்ணிட்டு. ஸ்டேஜூக்கு ஏறிட்டான். ஏதோ கையில பேப்பர் வெச்சிருந்தான். எடுத்து கடகடன்னும் வாசிக்க ஆரம்பிச்சிட்டான். வரவேற்புரை. அவங்க அப்பா எழுதிக்கொடுத்திருக்கனும். இந்த லூசுக்கு இப்படியெல்லாம் எழுத தெரியாது. என் கூட அதிகமா பேசவேயில்ல. பேசும்போது கையவெச்சு மூக்க பொத்திக்கிட்டேதான் பேசினான். முதல்ல ஷீபாதான் குளிக்காம வந்திட்டா போலன்னு நினைச்சேன். அப்புறம் தான் தெரிஞ்சது அவன் மூக்குல அழகா பெரிய ஒரு பரு. சார் அதனால தான் மூக்க பொத்திக்கிட்டே பேசியிருக்கார். பர்சனாலிட்டி கொறஞ்சு போச்சுன்னா? நான் தான் சொன்னேன் : பரு இருந்தாலும் நல்லாத்தான் இருக்க. கைய எடுத்துட்டு நார்மலா பேசுன்னு. அதுக்கபுறமும் மூக்க மூடிட்டேதான் பேசினான்.

“எனக்கும் கவி அரங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ ஸ்டேஜுக்கு வரணும்”
“வாட்? நெவர். என்ன ஒரு தடவை அவமானப் படவெச்சது பத்தாதா?”
“நீ ஒன்னும் செய்யவேண்டாம். ஜஸ்ட் வந்து உக்காரு போதும்.”
“வேற யார் யார் வர்றா?”
“ஐ ஹேவ் ஆஸ்க்ட் ஹிந்தி ஜீ அன்ட் சயின்ஸ் மேடம்”
“லூசா நீ? உன் சாய்ஸ் எல்லாம் வித்தியாசமா இருக்கு”
“யெஸ். இங்க இருக்கிற யாருக்குமே கவிதைன்னா என்னன்னு தெரியாது. பின்ன யார கூப்பிட்டா என்ன? நான் எனக்கு பிடிச்சவங்கள கூப்படறேன். யூ ஆர் கம்மிங்”

கூப்பிட்டது மட்டுமில்லாம என்னைத்தான் நடுவில உக்காரவெச்சான். ஆனா அவன் பக்கத்தில உட்கார்ந்திருந்ததால எனக்கு ஒன்னும் தெரியல. என்னை கூப்பிட்டதுக்கு அவன் க்ளீனா காரணம் சொன்னான்: க்ளாஸ் லீடர். சரியான ஆள் தான் நம்மாளு.

(நடு ராத்திரியில எழுந்து லைட்டப்போட்டு டைரிய தேடிக்கண்டுபிடித்து. நம்மாளு என்கிற வார்த்தையை ஒன்றும் தெரியாதவாறு பேனாவை வைத்து அடிக்கிறாள். டைரியையே பார்த்துக்கொண்டிருக்கிறாள்.)

ஆனா பிடிச்சவங்களைக் கூப்பிடறேன்னு சொன்னது எனக்கு பிடிச்சிருந்தது.

“சித்தார்த்”
(மேத்ஸ் புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான்)
“என்னோட ஆட்டோகிராப் புக்.”
“ஓ. ஓகே”
வாங்கி பக்கத்தில் அமர்ந்திருக்கும் சூரியாவிடம் கொடுக்கிறான். மேத்ஸ் புக்கில் மூழ்கிப்போகிறான்.
..
“சூர்யா..ஒரு நிமிஷம்..நான் என் டீட்டெய்ல்ஸ் கொஞ்சம் ·பில் பண்ணிக்கொடுக்கிறேன். ஆட்டோகிராப் புக்க கொஞ்சம் கொடேன்”
“ஓகே ரம்யா. இந்தா”

“சித்தார்த்”
(இப்போ பயாலஜி புக்கிலிருந்து நிமிர்ந்து பார்க்கிறான் சித்தார்த்)
“என்னொட ஆட்டோகிராப் புக்”
“ஓ ஓகே”


“ஹே நான் தான் முதல்ல எழுதப்போறேன்”
“யெஸ் யெஸ் சித்”

எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஐ வாஸ் ஹேப்பி. ஐ வான்டட் ஹிம் டு ·பில் அப் பர்ஸ்ட்.

(நடு ராத்திரியில் எழுந்து ஆட்டோகிராப் புக்கை திறந்து பார்க்கிறாள். முதல் பக்கத்தில் “Unshared is an ocean” என்று எழுதப்பட்டு சித்தார்த் என்று கிறுக்கப்பட்டிருந்தது)

“சூர்யா. கொஞ்ச நேரம் இங்க உக்காந்துக்கவா?”
“ஓ ஸ்யர் ரம்யா” சூர்யா எழுந்துகொண்டான்.
“சித்தார்த்”
“என்ன ரம்யா?”
“தமிழ் கட்டுரை போட்டிக்கு போறியா இல்லியா?”
“அதான் போகலைன்னு சொன்னேன்ல”
“போயேன் ப்ளீஸ்”
“ஐ டோன்ட் வாண்ட் டு பார்டிசிபேட். எனக்கு எக்ஸாம் தான் முக்கியம்”
“எக்ஸாக் இருக்கட்டும் நீ நல்லா பண்ணிடுவ. இது எல்லா ஸ்கூலுக்கும் நடக்கிற போட்டி.நீ போயேன் ப்ளீஸ். நீ கலந்துக்கிட்டினா நீ தான் பர்ஸ்ட் வருவ.”
“ரம்யா..”
“எனக்காக போயேன் ப்ளீஸ்”

“எனக்காக. ஐ வாண்ட் டு சீ யூ வின். ப்ளீஸ்”

சொன்னோம்ல. சொன்னோம்ல. எட்டு ஸ்கூளுக்கு நடந்த போட்டில அவன் தான் பர்ஸ்ட் வாங்கினான். ஹி இஸ் ஸ்மார்ட். தலைப்பு ஏதோ பெண்ணிய முன்னேற்றமாம். பன்னிய முன்னேற்றம்னு தலைப்பு கொடுத்திருந்தாக்கூட அவன் தான் பர்ஸ்ட் வாக்கிருப்பான். அவனுக்கு கொடுத்த பரிசை என்னிடம் கொடுத்தான். நான் வேண்டாம்னு சொன்னேன். பிறகு சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன். ஒரு ஷீல்ட். அவன் பெயர் போட்டது. இப்பொழுது என்னிடம் தான் இருக்கிறது. எப்பொழுதும் என்னிடம் தான் இருக்கும்.

“ரம்யா”
“ஹாய் சித்தார்த்”
“எக்ஸாம் எப்படி எழுதின?”
“குட். நல்லா எழுதினேன். நீ”
“நானும் நல்லா எழுதியிருக்கேன்” “இன்னைக்கு ·பேர்வெல் பார்ட்டிக்கு வருவேல்ல”
“கண்டிப்பா. என்ன கேள்வி இது?”
“இல்ல லேட் ஆயிடும். உங்க அவ்வா விடுவாங்களா?”
“விடுவாங்க”
“வீட்டுக்கு போயிட்டு வருவியா?”
“ம்ம். யூனி·பார்மோட இருக்கவேண்டாம்னு நினைக்கிறேன்”
“ம்ம்”
“நீ வீட்டுக்கு போறியா?’
“ஆமா.”
“பஸ்ல போகனுமே. போயிட்டு வந்திடுவியா?”
“சுதாகரும் வர்றான். ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு போயிட்டு ட்ரெஸ் ச்சேஞ் பண்ணிட்டு வந்திடுவோம்”
“என்ன ட்ரெஸ் போடப்போற?”
“என்ன போடட்டும்?”
“என்ன கேட்டா?”
“சரி ஏதாவது போட்டுக்கிறேன்”
….
“ரெட் டீசர்ட் போடு. க்ரீம் பேண்ட் போடுவியே அதப் போடு”
“ம்ம் சரி தொவைச்சிருக்கான்னு தெரியல பாக்குறேன்”
..
“நான் என்ன போடட்டும்?”
“என்ன போடப்போற?”
“சொல்லேன்..”
“ரெட் சுடி போடேன்”

அவன் அப்படி பார்த்ததை நான் பார்த்ததில்லை. என்னையே பார்த்துக்கொண்டிருந்தது போல இருந்தது. நான் எப்பொழுது அவன் பக்கம் பார்த்தாலும் அவன் என் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தான். நான் குணிந்தே உட்கார்ந்திருந்தேன். ·பேர்வெல் பார்ட்டியில் அவனை திடீர்னு பேசச்சொல்லிட்டாங்க.

“சித்தார்த். எப்படி இப்படி பேசுற?”
“நல்லாயிருந்துச்சா?”
“ரொம்ப நல்லாயிருந்துச்சு”
“யூ லுக் குட்”
“வாட்” (ஸ்மைல். மைல்ட் வெக்கம். கீழே குனிந்துகொள்கிறாள்)
“சுடி நல்லாயிருக்கு”
“ம்ம்” (வேறு பக்கம் திரும்பிக்கொள்கிறாள்)

பார்ட்டி முடிஞ்சு ரொம்ப நேரம் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். எங்கள் பிரிவைப் பற்றி யாருக்கும் கவலையிருப்பதாக தெரியவில்லை. இராவகிவிட்டது. அவனோடு தனியாக பேசவேண்டும் என்று நினைத்தேன். முடியவேயில்லை. அவன் எங்கே போனாலும் என் கண்கள் அவனையே பின் தொடர்ந்தன. சாப்பிட்டுவிட்டு கை கழுவச்செல்லும் போது அவன் வருவதைப் பார்த்தேன். மெதுவாக கை கழுவினேன். மிக மெதுவாக. என்னருகில் வந்தவன் சிரித்தான். இருட்டில் நாங்கள் இருவர் மட்டும். எனக்கு இருதயதுடிப்பு அதிகரித்தது. கைகழுவிக்கொண்டான். கர்சீப் தேடினான். இல்லை. என்னிடம் கை நீட்டினான். என் கர்சீப்பை கொடுத்தேன். முகத்தில் ஒற்றிக்கொண்டு பின் கைகளைத் துடைத்தான். மீண்டும் என்னிடம் கொடுத்தான். சிரித்தான். போகலாமா என்றான்.

“எக்ஸாம் எல்லாம் முடிச்சதுக்கப்புறம் உன்னையெல்லாம் பாக்கவேமுடியாதுல்ல”
“ஏன் சித்தார்த் எப்போவேணுன்னாலும் வீட்டுக்கு வா. நீ தான் வந்திருக்கியே”
“அது இப்போ. ஸ்கூல் முடிச்சாச்சுன்னா உன்ன பாக்கவர்றதுக்கு சரியான காரணம் நான் சொல்லனும். இல்லியா?”

அவன் பஸ்ஸ்டான்டுக்கு போகணும். என் வீடு பஸ்ஸ்டாண்ட் தாண்டித் தான் இருக்கு. அதனால நான் லக்ஷ்மி, சௌமியா, வாணி, சூர்யா எல்லாரும் நடந்தே வந்தோம். அவன் சௌமியாவுடன் தான் பேசிக்கொண்டே வந்தான். என்னிடம் பேசவேயில்லை. நானும் வாணியும்தான் பேசிக்கொண்டே வந்தோம். “ரம்யா” என்றொரு குரல் கேட்கவே திரும்பிப்பார்த்தேன். அப்பா. ஸ்கூட்டரில். நான் வண்டியில் ஏறிக்கொண்டேன். அவன் என் பார்வையில் புள்ளியாகித்தேயும்வரை நான் அவனைப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.எனக்கு அழுகையாக வந்தது. ஐ க்ரைட். நாங்கள் ·பேர்வெல் பார்ட்டி முடித்துவிட்டோம். ·பேர்வெல்.

(தொடரும்)

என் உயிர்த் தோழன் – 1

(குட்டித் தொடர்கதை)

1

“என்னாச்சு ரம்யா? ஏன் ரொம்ப நாளா ஸ்கூலுக்கு வரல?”
“ம்ம்..உடம்புக்கு முடியலடா”
“ஜான்டீஸா”
“ம்ம்ம்ம்”
“இப்போ சரியாப்போச்சா”
“ம்ம்”
“ஏன் சரியாவே பேசமாட்டேன்ற?”
“ஒன்னுமில்லடா” “இந்தச் செயின் நல்லாயிருக்கா?”
“சூப்பரா இருக்கு. புதுசா?”
“ம்ம் அவ்வா வாங்கிக் கொடுத்தாங்க”
“ஜான்டீஸ் வந்ததுக்கா?”

சித்தார்த் கேட்டப்போ எனக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஒரு நாள் அவனுக்கு புரியும்.

“இன்னிக்கு ரிகர்சல் எப்படி இருந்தது?”
“சூப்பரா இருந்தது”
“நான் நடிச்சது பிடிச்சிருந்தா?”
“நீ நடிச்சத விட, அந்த மைக் கீழ விழுந்தப்போ நீ கொடுத்த ரியாக்ஷன் நல்லா இருந்தது”

நல்லா நடிக்கிறான். நல்லா பேசறான். நல்லா படிக்கிறான். எங்க அப்பாவுக்கு இவன ரொம்ப பிடிக்கும். என்கிட்ட நிறைய தடவை அவன பத்தி பேசியிருக்கிறார், ஸ்கூலுக்கு வரும் பொழுதெல்லாம் இவன் கிட்ட பேசாம போனதேயில்ல.அவன் கைய பிடிச்சுக்கிட்டு நின்னு பேசிட்டிருப்பார். அவனுடைய நண்பர்கள் என் அப்பா வருவதைப் பார்த்தவுடன் “டேய் உன்னோட மாமா வர்றாருடா” என்று என் காதுபடவே கிண்டல் செய்கிறார்கள். சித்தார்த் ரொம்ப நல்லவன் இதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொண்டதைப் போலவே தெரியவில்லை.

“அப்பா”
….
“அப்பா”
“என்னடா?”
“இனிமே ஸ்கூலுக்கு வரும்போது சும்மா சும்மா சித்தார்த்தோட பேசாதீங்கப்பா”
“ஏன்?”

“பசங்க கிண்டல் பண்றாங்களா?”

“சரி. இனிமே தேவைன்னா மட்டும் பேசறேன்”

ஆனால் இன்றும் அப்பா பள்ளிக்கு வந்திருந்தபோது சித்தார்த்திடம் பேசியதைப் பார்த்த செல்வா வேண்டுமென்றே நான் க்ளாஸ¤க்கு வரும்பொழுது, சித்தார்த்தைப் பார்த்து “டேய் சித்தார்த் மாமா வந்திருந்தாரே. என்ன சொன்னார்?” என்று கேட்டுத்தொலைத்தான். இடியட். நான் தான் க்ளாஸ் லீடர் என்றாலும், கிட்டத்தட்ட அவன் தான் க்ளாஸ் லீடர். நான் உப்புக்குச்சப்பானி. ப்ரிண்ஸி எதுன்னாலும் ரெண்டு பேரையும் சேத்துதான் கூப்பிடுவாங்க.

“மேடம்”
“என்னாச்சு ஆயா?”
“ப்ரின்ஸி மேடம் சித்தார்த்தையும் ரம்யாவையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க”
..
“சித்தார்த், ரம்யா போயிட்டுவாங்க”
..

நான் தான் ஏதும் பேசவில்லை என்றால், அவனாவது ஏதாவது பேசியிருக்கலாம். எங்கள் க்ளாஸிலிருந்து பிரின்ஸி ரூம் ரொம்ப தூரம். அட்லீஸ்ட் இன்னைக்கு அப்படி தோன்றியதா? இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை. அவன் இன்றைக்கு ஷ¥ போடவில்லை. வெறும் செறுப்பு தான் போட்டிருந்தான். டை கட்டவில்லை. இன் செய்யவில்லை. ஏன் இப்படி இருக்கிறான்? அதுவும் இன்று ப்ரின்ஸி ரூமுக்கு வேற போனோம். அது சரி. இவன் தான் ஸ்கூலுக்கு செல்லப்பிள்ளை ஆச்சே. எல்.கே.ஜில இருந்து ஒரே ஸ்கூல்ல படிச்சா இப்படித்தான் ஆகும். பெரிய தாதான்னு நினைப்பு. ஆனா ரொம்ப திமிர். ப்ரின்ஸி இந்தமுறை குழந்தைகள் தினவிழாவை நாங்கள் தான் (+2) நடத்தவேண்டும் என்று சொல்லிவிட்டார். திமிர் பிடிச்சவன் போகும் போதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. வரும் பொழுதும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நான் அவனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவனும் என்னை திரும்பிப் பார்க்கவில்லை.

“ரம்யா. நாங்க இந்தப்பாட்டு செலக்ட் செஞ்சிருக்கோம்”
வெல்வெட்டா வெல்வெட்டா..
மன்மதன் கல்வெட்டா..
“ச்சீ என்ன பாட்டுடி இது? இது ·பிப்த் பசங்களுக்கா?”
“அப்ரூவ் பண்றியா இல்லியா?”
“நான் அப்ரூவ் பண்றனா இல்லியாங்கறது வேற விசயம். சித்தார்த் அப்ரூவ் பண்ணனும்”
“நீ போய் அவன் கிட்ட கேளு.. சரின்னுடுவான்”
“என்ன விளையாடுறியா? இந்த பாட்ட நான் அவன் கிட்ட போட்டு காட்டனுமா?”
“யெஸ்”
“நெவர்”
“லைன்ஸ் தான் அப்படி இருக்கும். ஆனா டான்ஸ¤க்கு இந்த பாட்டு கரெக்ட்டா இருக்கும். ஸீ த பீட்ஸ்..”
..
“என்னவோ சொல்ற..சரி டேப் ரிக்கார்டர கொடு..நீயும் கூட வா..”

நான் போய் அவன் கிட்ட இந்தப்பாட்ட போட்டு காண்பிச்சேன். அவன் ஒன்னுமே சொல்லல. தூக்கிட்டு ஓடிறுன்னு மட்டும் தான் சொன்னான். ஷீபா ஏதோ சொல்ல ஆரம்பிச்சா.. வேற பாட்டு செலக்ட் பண்ணுங்க ப்ளீஸ்ன்னு டக்குன்னு சொல்லிட்டான். அவ வாய மூடிட்டு வந்தா. நாங்க திரும்பி நடந்து வரும் போது கோபால் அவன் கிட்ட ஏதோ சொல்லிருக்கான். அவன் முறைச்சானாம். ஷீபா தான் கேட்க சொன்னான்னா எனக்கு எங்க போச்சு அறிவு. முண்டம். கண்டிப்பா சித்தார்த் ஒத்துக்கமாட்டான்னு தெரியும். பட் ஐ ஜஸ்ட் வாண்டட் டு நோ வாட் ஹீ திங்க்ஸ்.

“எக்ஸ்க்யூஸ்மி மிஸ்”
“யெஸ் கம் இன் சித்தார்த்”



“என்னாச்சு சித்தார்த்”
“நத்திங் மிஸ்”

..
“என்னாச்சுடீ உன் ஆளுக்கு”
“என் ஆளா? உதைப்பேன்”
“என்னம்மோ எல்லாரும் கீழ குணிஞ்சு குணிஞ்சு பாக்குறாங்க?”
“ஆமா..என்னாச்சுடி?”

அவன் பக்கத்து ஊரிலிருந்து பஸ்ஸில் பள்ளிக்கு வருபவன். இன்று கொஞ்சம் லேட். இன்று என்ன இன்று எப்போதுமே அவன் லேட் தான். ப்ரிண்ஸி சித் லேட்டா வந்தா மட்டும் கண்டுகொள்ளாது. அவனை மட்டும் போகச்சொல்லிடும். பணிரெண்டாவது படிக்கிற எருமைமாடு லெட்டா வந்தா போகச்சொல்றதா? ஏன்னா அவன் ஸ்கூலோட ஹீரோ. இன்னிக்கு பஸ்ஸ¤ல ரன்னிங்க்ல இறங்கிருக்கான். கீழ விழுந்துட்டான். ஸ்கூல்ல ஹீரோன்னா, விழுந்தா ரத்தம் வராதா? முழங்கால் எல்லாம் ரத்தம். மிஸ் அங்கிட்டும் இங்கிட்டும் ஓடுது. எல்லோரும் என்ன என்னன்னு பாத்தாங்க. நான் கண்டுக்கிடல. எனக்கென்ன வந்தது?

“சித்தார்த் என்ன ஆச்சு?”
“நத்திங். ஐ யாம் ஓகே ரம்யா”
“கால்ல காயமா?. பஸ்ல விழுந்துட்டியா?”
“ம்ம்..சும்மா ஒன்னுமில்ல..”


(கோபால் சித்தார்த்தின் காதில் ஏதோ சொன்னான்)
“ஏய் ஏன் அழற?”
“உன் மூஞ்சி. நான் எங்க அழறேன்” “லஞ்ச் கொட்டிடுச்சாமே”
“ம்ம்”
“எங்க கூட வந்து சாப்பிடேன்” (மெதுவாக மூக்கை உறிஞ்சுகிறாள்)
“நீ தயிர் சாதமும் பொட்டுகடலையும் தான கொண்டு வந்திருப்ப?”
“வேணாட்டிப்போ”
..

ஆனா இன்னிக்கு அம்மா மோர் குழம்பு கொடுத்திருந்தாங்க. பொட்டுக்கடலை எப்பொழுதும் கொண்டுவருவேன் என்பது உண்மைதான் என்றாலும் அது எனக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் தான். சாப்பாட்டுக்கு போய் யாராவது பொட்டுக்கடலையை தொட்டுக்கொள்வார்களா? இடியட். ஆனா நான் தினமும் பொட்டுக்கடலை கொண்டுவருகிறேன் என்பது அவனுக்கு எப்படி தெரியும்? நான் கூப்பிட்டப்போ வராதவன் சௌமியா கூப்பிட்டப்போ சாப்பிட வந்தான். நண்பர்களையும் அழைத்து வந்திருந்தான். எங்க பதினாலு வருட பழக்கத்தில் இன்றைக்குத்தான் கேர்ள்ஸ¤ம் பாய்ஸ¤ம் ஒன்றாக க்ளாஸில உட்கார்ந்து சாப்பிட்டோம். எல்லோரிடமும் கொஞ்சம் கொஞ்சம் வாங்கிக்கொண்டான். என்னுடைய மோர் குழம்பை வாங்கி சாப்பிடவேயில்லை. நானும் கொடுக்கவில்லை. ஏன் சாப்பிடும் பொழுது ஆட்காட்டி விரலை தனியாக நீட்டிக்கொள்கிறான்? ஸ்டைல்ன்னு நினைப்பு! தடாலடியாக என்னுடைய ஸ்நாக்ஸ் பாக்ஸை அவனே எடுத்து திறந்துவிட்டான். கொஞ்சம் பொட்டுக்கடலை எடுத்து சாப்பிட்டான். அந்த சிவப்பு ஸ்நாக்ஸ் பாக்ஸை ரொம்ப நேரம் கைகளில் மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தான். கைகளில் நீள நீளமாக நகம். வெட்டுவானா மாட்டானா? சோடாபுட்டி. சோடாபுட்டி.

“ரம்யா”
“ஆங் என்ன?”
“எங்களோட நாடகத்தில ஒரு நர்ஸ் வேஷம் இருக்கு. நீ நடிக்கிறியா?”
“என்னது நானா?”
“நடிக்கனும்.”
“ஏய் ஸ்டுபிட்டா நீ? இத்தன வருஷத்தில ஒரு நாளாவது நான் ஸ்டேஜ்க்கு பக்கமாவது போயிருக்கனா?”
“போயிருக்க. என்னோட யூகேஜில டான்ஸ் ஆடுற மாதிரி போட்டோ இருக்கு. பாக்குறியா?”
“இடியட் அது யூகேஜில. இப்போ என்னால முடியாது”
“எப்போ பாத்தாலும் படிச்சுட்டுதான இருக்க. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்டா வந்து சும்மா நடியேன்”
“முடியாது”
“உன்ன நான் நடிக்க கூட்டிட்டு வருவேன்னு சொல்லிருக்கேன்”
“நீ சொன்னா? நோ.”

அவன் அப்படி மூஞ்ச வெச்சுக்கிறத பாக்க சகிக்கல. ரொம்ப பாவமா இருந்துச்சு. ஆனா இது நாள் வரைக்கும் நான் டான்ஸ்க்காகவோ ட்ராமாவுக்காகவோ ஸ்டேஜ் ஏறினதே இல்லை. எனக்கு ரொம்ப பயம். ஒரு தடவை இங்கிலீஸ் மேம் ரொம்ப வற்புறுத்தி கூப்பிட்டும் வரமுடியாதுன்னுட்டேன். இன்னைக்கு சித் கூப்பிட்டதும் என்ன செய்யறதுன்னு தெரியல. ஆனா இவன் இப்படி என்கிட்ட கேட்டதேயில்ல. பயமாகவும் இருக்கு. என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டோட ரிக்வஸ்ட தட்டவும் முடியல.

“ஹேய் ரம்யா வாட் எ சர்ப்ரைஸ்”
“சும்மா வந்தேன்”
சித்தார்த் ஓடி வந்தான்.
“ஹே ரம்யா தேங்க்ஸ்.”
தமிழம்மாவிடம் திரும்பி “அம்மா அந்த நர்ஸ் வேஷம்” என்றான்

தமிழம்மா எனக்கு கொஞ்சம் பெரிய டயலாக் கொடுத்தாங்க. கோர்ட் சீன். நான் நர்ஸாக வந்து சித்தார்த்துக்கு ஆதரவாக சாட்சி சொல்லவேண்டும். இது கொஞ்சம் பெரிய டயலாக். சித்தார்த் பக்கத்திலிருந்தே சொல்லிக்கொடுத்தான். என்னால் எவ்வளவு பெரிய கட்டுரையையும் எளிதாக மனப்பாடம் செய்து விட முடியும். ஆனால் இந்த நாடகம். வாசிக்கும் பொழுது நன்றாக சித்தார்த்திடம் சொல்லிவிடுகிறேன். ஆனால் ரிகர்சல்லுன்னு வர்றப்போத்தான் உதறுது.

“கனம்..க்க்” “க்க்கோர்ர்ட்டார் அவர்களே”
“ரம்யா பயப்படாம சொல்லு”
“எதிரே நிற்கும் ப்ராக்கியூஸ்டர்..”
சிரிப்பு.
“ரம்யா ஒரு தடவை நல்லா டயலாக்க பாரு. ஏன் கை நடுங்குது உனக்கு”

என்னால முடியல. ஒரே ஓட்டமா ஓடி வந்துட்டேன். சித்தார்த் பின்னால ரம்யா ரம்யான்னு கத்தறது கேட்டது. க்ளாஸ¤க்கு வந்து ஒரே அழுகை. ஷீபாவும் வாணியும் தான் தேற்றினார்கள். சித்தார்த் அன்றைக்கு க்ளாசுக்கு வரவேயில்லை. அவன் மேல எனக்கு கோபம் கோபமா வந்தது. எனக்கு ஒன்னும் கோபம் வரலை. நான் ஏன் கோபப்படனும்? அவன் கூப்பிட்டதுக்கு ட்ரை பண்ணினேன். அவ்ளோதான்.

“கௌரி தட் வாஸ் ·பெண்டாஸ்டிக்”
“தாங்க்ஸ்”
“டான்ஸ் ரொம்ப ரொம்ப நல்லா இருந்துச்சு. இல்ல ரம்யா”
“ம்ம்”
“உனக்கு க்ளாஸிக் தான் வரும்னு நினைச்சேன். வெஸ்டர்னும் பிச்சு உதறுர”
கௌரி வழிகிறாள்.
“உன்னொட ஸ்டெப்ஸ் எல்லாத்துலயும் ஒரு நளினம் இருந்துச்சு. இல்ல ரம்யா?”
“ம்ம்”
“சித்தார்த் ஷேல் வி மூவ் டு நெக்ஸ்ட் க்ளாஸ்”

இருக்கும். இருக்கும். அது என்ன இல்ல ரம்யான்னு என்னைய கேக்குறது? விழாவுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கிறது. இன்னிக்கு மத்தவங்க ப்ரோகிராம்ஸ் எல்லாத்தையும் பென்ச்மார்க் பண்ணனும்னு நான் தான் சொன்னேன். அது தான் தப்பா போச்சு. இவன் என்னடான்னா போற வர்ற இடத்துலயெல்லாம் வழியறான். நல்லா இருந்துச்சுன்னா நல்லாயிருந்துச்சுன்னு சொல்லவேண்டியதுதான. அது என்ன நளினமா இருந்துச்சுன்னு வழியல் வேண்டிக்கிடக்கு? சரியான வழிஞ்சான் கோஷ்ட்டி. நானும் அவனும் பேசிக்கிட்டே நடக்கிறத பாத்த செல்வா அங்கிருந்து கத்தினான்: சித்தார்த் கொடுத்துவெச்சவண்டா நீ. இன்னிக்கு சித்தார்த் ரொம்ப சிரிச்சான். வழிஞ்சான். லூசு. அவன் சிரிச்சா அழகாயிருக்கும். ஆனா சிடுமூஞ்சி. சிரிக்கவே சிரிக்காது.

“என்னடி இன்னும் சித்தார்த்த காணோம்?”
“வந்திருவான்”


“செல்வா. சித்தார்த் எப்போ வருவான்?”
“தெரியல ரம்யா. வந்திருக்கனும். நேத்து டெகரேட் பண்ணிட்டு லேட்டாத்தான போனான். வந்திருவான்”
“ப்ரிண்ஸி எப்போ ப்ரோகிராம் ஸ்டார்ட் பண்றதுன்னு கேக்கறாங்க”
“ஸ்டார்ட் பண்ணலாமே!”

“சித்தார்த் வரட்டும் மேடம். வந்திருவான்”

(தொடரும்)

Muthu In France

த‌ற்சம‌ய‌ம் வேலை நிமித்த‌மாக‌ ஃப்ரான்ஸ் வ‌ந்திருக்கிறேன். என் ம‌னைவியையும் குழ‌ந்தையையும் அழைத்து வ‌ந்திருக்கிறேன். ஒரு மாத‌ம் இங்கே த‌ங்கியிருப்பேன் என்று நினைக்கிறேன். நான் தங்கியிருக்கும் இட‌ம் Saint Quentin . இன்னும் phone ந‌ம்ப‌ர் வாங்க‌வில்லை. யாராவ‌து ப‌க்க‌த்தில் இருக்கீங்க‌ளாப்பா? ரொம்ப‌ மொக்க‌ போட‌ மாட்டேன். பாரீஸ் கூட்டிட்டுட்டுபோன்னு ப‌டுத்த‌மாட்டேன். சும்மா வெளில‌ இருந்து ஆத‌ர‌வு த‌ந்தாப்போதும். This Saint Quentin town is cold and unusually quite.