இந்தக் கட்டுரையைப் படித்தீர்களா? The Beautiful Tree வாங்கவேண்டும். என்னை இந்தப் புத்தகத்தை வாங்கவைப்பதினால் இந்தக் கட்டுரை வெற்றிபெற்றுவிட்டது என்று வைத்துக்கொள்ளலாமா?
அதிருக்கட்டும், இந்திய அரசுப் பள்ளிகளின் நிலை நன்றாக இருக்கிறதா? என்னைக் கேட்டால் Higher Secondary கொஞ்சம் தேவலாம். என் அக்காவே +1, +2 அரசு பள்ளியில் தான் படித்தவர். அவர் பதிநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் மதிப்பெண்கள் வாங்கினார். ஆனால் அரசு பள்ளிகளில் படிக்கும் எத்தனை மாணவர்கள் இதே போல அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்? மிக மிக குறைவாகத்தான் இருக்கமுடியும்.
எலிமென்டரி பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நான் டியூசன் எடுக்கும் காலத்தில் எங்களிடம் ஒரு மாணவன் வந்தான், அவன் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அவனுடைய அப்பா என் அண்ணனிடம் இவன எப்படியாவது எட்டாவது பாஸ் பண்ண வெச்சிருங்கன்னு கெஞ்சிட்டுப் போனார். எங்களிடம் வந்தபொழுது அந்த பையனுக்கு தமிழ் எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரியாது. ஆங்கிலம் கேட்கவே வேண்டாம்.அதே சமயத்தில் எங்களிடம் அருகிலிருந்த சில மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்களும் இருந்தார்கள். அவர்களில் மூன்றாம் வகுப்பு மாணவன் இவனை விட நன்றாக தமிழும் ஆங்கிலமும் ஏன் ஹிந்தியும் கூட வாசித்தான். மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவனுடைய கல்வி முறை வேறு. அரசு பள்ளி மாணவனுடைய கல்வி முறை வேறு. அவன் மாதா மாதம் நூற்றிஎன்பது ரூபாய் கட்டவேண்டும். இவனுக்கு அது இல்லை. ஆனால் அவனுக்கு சொல்லித்தந்த ஆசிரியர்கள் வெறும் ஆயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்கினார்கள். இவனுக்கு சொல்லித்தரும் வாத்தியார்கள் கண்டிப்பாக ஐயாயிரம் ரூபாய், ஏன் அதற்கு மேலும், சம்பளம் வாங்குவார்கள். அப்புறம் ஏன் இருவருக்குள் இந்த அதீத வித்தியாசம்?
இன்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைவாகவே சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் தனியார் பள்ளிகளின் கல்வித்தரம் அரசுப் பள்ளிகளை விட நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு தானாகவேண்டும். அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களை விட மிக மிக அதிகமான சம்பளம் வாங்குகிறார்கள். பம்பர் போனஸ் வேறு கிடைக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மிக மிக குறைவாக இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா இல்லையா?
எங்கே இருக்கிறது பிழை? எனக்கு புரியவில்லை.
என்னுடைய கனவு: மிக குறைந்த கட்டணத்தில் உயர்தர கல்வித்தரம் அளிக்கும் பள்ளிகளை உருவாக்கவேண்டும் என்பதே. சிரிக்காதீர்கள். கனவு. உயர்தர கல்வித்தரம் கொடுக்கவெண்டும் என்றால் அவ்வாறான ஆசிரியர்களைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். அவர்கள் அதிக சம்பளம் கேட்ப்பார்கள், இல்லியா?
உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பவர்கள், அதிக சம்பளம் கேட்ப்பார்கள் = True.
அதிக சம்பளம் வாங்குபவர்கள், உயர்தர கல்வி கற்றுக்கொடுப்பார்கள் = Looks logically true.
நம்மிடம்(அரசு பள்ளிகள்) அதிக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே இருக்கிறார்கள், கண்டிப்பாக அவர்கள் உயர்தர கல்வி கற்றுத்தந்துதானாக வேண்டும்? ஏன் அவ்வாறு செய்வதில்லை? எங்கேயிருக்கிறது பிழை?