ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

By M K Bhadrakumar
அசலைப் படிக்க.

முன்னொரு காலத்தில் நாம் பிரபாகரனை உருவாக்கினோம். சிறுவனாக இருந்த அவரை எங்கிருந்தோ நாம் தேர்ந்தெடுத்தோம். அவரிடத்தில் நம்மைக் கவர்ந்த விசயம் – அவருக்கு அரசியல் தெரியாது என்பது. அவர் பயந்தசுபாவமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் ஆயுதங்களின் மேல் மோகம் கொண்டவராகவும் ராணுவ ஆட்சியில் நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். அவருடைய இத்தகைய குணாதிசயங்கள் அப்பொழுது நம் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.

அது என்னவென்றால் இலங்கையில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த ஜெயவர்தனேயின் அரசை அவமானப்படுத்துதல். அதன்மூலமாக இந்தியப்பெருங்கடலில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்தியாவை மதிக்காமல் நடந்தால் என்னென்ன ஆபத்துக்களைச் சந்திக்க நேரிடும் என்கிற பாடத்தை இலங்கைக்கு கற்றுக்கொடுப்பது. ஜெயவர்தனே மேலை நாடுகளின் மேல் அதீத கவர்ச்சி கொண்டவராக இருந்தார் மேலும் அவர் ஆக்ஸ்·போர்டில் வரலாறு படித்தபோது மன்றோ டாக்டரின் என்கிற ஒன்றை படிக்காதது போலவே இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறார். மேலும் இஸ்ரேலியர்களுடனும் அமெரிக்கர்களுடனுமான அவரது இணக்கமான போக்கு நமக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. இது நமது கொள்ளைப்புரத்திலே நடந்துகொண்டிருப்பது நமக்கு மிகுந்த எரிச்சலைத் தருகிறது.

எனவே நாம் பிரபாகரனை ஊக்கப்படுத்தினோம் ஜெயவர்தனேயின் போலிக் கவுரவத்தில் துளைபோடுவதற்கு நாம் அவரைப் பயன்படுத்தினோம். டெக்கானின் சீக்கியத் தலைவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே போல.

காலம் சென்றது. கொலும்பு அரசின் மேற்கத்தியப்போக்கின் மேல் நமக்கு வேறொரு இணக்கமான பார்வை உருவாகியிருந்த பொழுது, பிரபாகரனின் தேவை முடிவடைந்துவிட்டதாகவே நாம் கருதினோம். மேலும் ஜெயவர்தனேயை அடியோடு வெறுத்த நமது அகந்தை கொண்ட தலைவர் இப்பொழுது ஆட்சியில் இல்லை. புதிதாக வந்திருக்கும் மென்மையான தலைவர் முந்தையவரின் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கவில்லை.

மாறிவிட்டிருந்த நமது கொள்கைகளுக்கு இணங்கவேண்டும் என்று பிரபாகரனின் கைகளை நாம் முறுக்கினோம். ஆனால் அதற்குள்ளாக பிரபாகரன் ஒரு முழுமையான ஆண்மகனாக வளர்ச்சி அடைந்துவிட்டிருந்ததை நாம் மறந்துவிட்டிருந்தோம்.

நமது அச்சுறுத்தல்களையும் நமது நிர்பந்தங்களையும் அவர் எதிர்த்தார்.நாம் மேலும் அவரை நிர்பந்தித்து அடிபணியவைக்க நாம் முனைந்த பொழுது அவர் நம்மை திருப்பி அடித்தார். அவர் கொலைகாரர்களை அனுப்பி நம் பாசத்துக்குறிய தலைவரைக் கொன்றார். அதன் பிறகு அவர் நமது ஜென்ம விரோதியாக மாறிப்போனார்.

ஆனாலும் நாம் அவரை ஏதும் செய்யமுடியவில்லை. அவர் மிகுந்த வலுவடைந்துவிட்டிருந்தார். அவரது மக்களிடையே ஒரு முடிசூடா மன்னராக மாறிப்போனார். நாம் பொறுத்திருந்தோம். பொறுமையாக காத்திருந்தோம். நாம் தான் எருமை போல பொறுமை உள்ளவர்கள் ஆயிற்றே. நம்முடைய வரலாறு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டது. நம்மைப் போல பொறுமைசாலிகளாக இருக்க யாரால் முடியும் சொல்லுங்கள்? நமது அண்டவெளிகளில் பரவியிருக்கும் மதம் நமக்கு பொறுமையையும், உணர்ச்சிவசப்படாமல் இருக்கவும் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாம் நமது நேரத்திற்காக காத்திருந்தோம்.

அப்புறம் அந்த நாளும் வந்தது. நாம் நமது வேலையை முடித்துக்கொள்ள பிரபாகரனின் எதிரிகளோடு கூட்டு வைத்துக்கொண்டோம். திட்டம் போட்டோம். அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கினோம். அவர்களுக்கு கொல்வதற்கான பயிற்சிகளை முறையாக அளித்தோம். நமது உளவுநுட்பங்களை உபயோகித்து அவர்களை சரியாக வழிநடத்தினோம். பிரபாகரன் தப்பிப்பதற்கு உண்டான வழிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக அடைத்தோம். அதற்கப்புறம் பிரபாகரனின் கழுத்தில் கயிறு இறுகும் வரை பொறுமையாக காத்திருந்தோம்.

இன்று அவர் இல்லை. நம்பினால் நம்புங்கள் அவருடைய சாவில் நமக்கு எந்த பங்கும் இல்லை. அவர் எங்கு எப்பொழுது இறந்தார் என்பது இனி மர்மத்தில் சூழப்பட்ட புதிராகவே இருக்கும். நமக்கு தெரிந்தவற்றை நாம் வெளியிடுவோமா என்ன?

நமக்குத் தெரிந்ததெல்லாம் பிரபாகரனின் இறப்பு செய்தி உலகத்தின் காதுகளுக்கு எட்டி அது முழித்துக்கொண்டபொழுது இந்தியாவின் தெற்குப்பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் மே 13 அன்று தேர்தல் முடிந்துவிட்டிருந்தது என்பது மட்டுமே. இல்லையென்றால் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்னவாகியிருக்கும்? ஜனநாயகம் விசித்திரமானது.

சிங்கள மக்கள் இந்தியாவின் நண்பர்கள். நமது முதல்தர மக்களும் அவர்களது முதல்தர மக்களும் ஒரே மொழிகளைப் பேசுபவர்கள். இருவருக்கும் ஆங்கிலம் நன்றாக வரும். இருவரும் கோல்· நன்றாக விளையாடுவார்கள். இருவருக்கும் சில்லென்ற பியர் ரொம்பவும் பிடிக்கும். எனவே நாம் அவர்களை இந்தநேரத்தில் வாழ்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நமது கைகளில் ரத்தம் இருப்பது உண்மைதான். அது ஒரு சபிக்கப்பட்ட சங்கடம். ஆனால் நமது கைகளில் ரத்தம் இருப்பது நமது வரலாற்றில் முதல்முறை அல்லவே.

எங்கள் வார்த்தைகளை நம்புங்கள். நீண்டகாலம் நீடிக்கக்கூடிய தீங்குகள் ஏதும் நடந்துவிடாது. ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

-M K Bhadrakumar
(Ambassador M K Bhadrakumar was a career diplomat in the Indian Foreign Service. His assignments included the Soviet Union, South Korea, Sri Lanka, Germany, Afghanistan, Pakistan, Uzbekistan, Kuwait and Turkey
Thanks: Asia Times Online )

அசலைப் படிக்க.

4 thoughts on “ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை.

  1. Is it ரத்தம் கறைகளை விட்டுச்செல்வதில்லை or ரத்தம் கறைகளை விடாமல் செல்வதில்லை?

    Like

  2. ந‌வ‌நீத்: புரிஞ்சுதா?! குட் :)பாலா: ந‌ன்றி பாலா. விரைவில் எழுத‌றேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s