யார் முழித்திருக்கப் போகிறார்கள் – 9 (முடிந்தது)

3 டிசம்பர் 2005

இந்த தேதி நம்மில், இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தவிற வேறு எதையாவது நினைவு படுத்துகிறதா?

ஆனால் மிகவும் முக்கியமான நாள் இது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னர் சிறு குழந்தைகள் – சிறுவர்களும் சிறுமிகளும் – மிகுந்த நச்சுத்தன்மை கொண்ட ஒரு வாயுவால் பாதிக்கப்பட்டனர். இன்றைக்கு இந்த சிறுமிகளும் சிறுவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அளவிற்கு வழந்திருப்பார்கள். பிறக்கப்போகும் இந்த குழந்தைகள் குறைகளோடு பிறப்பார்களா? விஷவாயுவின் நச்சுத்தன்மை பாதிக்கப்பட்டவர்களின் உடல்களில் இருந்துகொண்டு பிறக்கப்போகும் குழந்தைகளை பாதிக்குமா? இது வரை மறுக்கப்பட்ட இந்த விசயத்தை புள்ளிவிபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவருமா?

போப்பால் பேரிடர் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறதா?மார்ச் 21 2001 அன்று கைவிடப்பட்ட அந்தத் தொழிற்சாலையின் வளாகத்தில் தீப்பிடித்துக்கொண்டது. அந்தத் தீ அருகில் இருந்த 32 குடிசைகளை சிதைத்தது. அங்கு வாழ்ந்தவர்கள் மிளகாய் எறிந்து கருகும் வாடையை சுவாசித்ததாகச் சொன்னார்கள். அவர்கள் கண்களிலிருந்து நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எறிந்துகொண்டிருந்த தீ அவர்களை முச்சுத்திணறடித்தது அவர்கள் சுவாசிக்க இயலாமல் தொண்டை அடைக்க டிசம்பர் 3 1984 ஐ நினைவுகூர்ந்தனர். வரலாறு திரும்பியது.

பிப்ரவரி 2001இல் டவ் கெமிக்கல்ஸ் (DOW) என்கிற மிசிக்கனைச் சேர்ந்த நிறுவனம் 11.6 பில்லியன் டாலர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கி உலகின் இரண்டாவது பெரிய ரசாயனத் தொழிற்சாலையாக மாறியது. ஆனால் டவ் போப்பாலில் நடந்து முடிந்த துயரச்சம்பவத்துக்கு எந்த அளவிலும் பொறுப்பேர்க்க முடியாது என்று கூறிவிட்டது. கொடுக்கப்பட்ட 470 மில்லியன் டாலர் தான் இறுதியான இழப்பீட்டுத் தொகை, UCC அதைக் கொடுத்துவிட்டது எனவே அது சம்பந்தமான எந்த இழப்பீடும் இனி நாங்கள் கொடுக்கமாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. டவ்வின் முக்கியமான மேலாளார் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நாங்கள் மனித நேயத்துக்காக மட்டுமே சில விசயங்களை செய்துகொண்டிருக்கிறோம், இதைக் கொண்டு நாங்கள் இழப்பீடு தருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம் என்று குழம்பிக்கொள்ள வேண்டாம்”.

ஆனால் இதே நிறுவனம் டெக்ஸாஸில் இருக்கும் UC நிறுவனத்தை வாங்கி ஒருவருடத்துக்குள் அப்பொழுது UCயின் மேல் தொடரப்பட்டிருந்த அஸ்பெஸ்டாஸ் சம்பந்தப்பட்ட வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டது. இதனால் இந்த நிறுவனத்துக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டமானது. டவ் டெக்ஸாஸில் இருந்த UCஐ வாங்குவதற்கு முன்னர் இந்த வழக்கு சம்பந்தமாக ஏதும் இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை அதனால் தான் நாங்கள் வாங்கியவுடன் நடந்துகொண்டிருந்த வழக்குக்கு பொறுப்பேற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையும் கொடுத்தோம், ஆனால் போப்பாலில் நடந்தது வேறுமாதிரி. அங்கு ஏற்கனவே நாங்கள் வாங்குவதற்கு முன்னரே ஒரு இழப்பீட்டுத் தொகை கொடுக்கப்பட்டாயிற்று என்று நிஜத்தை எதிர்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டது.

அதேசமயத்தில் 23 மே 2002 இல், இந்திய அரசின் சார்பாக, சிபிஐ போப்பாலின் நீதிமன்றத்திடம் ஒரு கோரிக்கையை வைத்தது:வாரன் ஆன்டர்சன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கிரிமினல் குற்றங்களைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்பதே அது. பத்துவருட கடுங்காவல் தண்டனைக்கு உரியதான கொலைக்குற்றத்திலிருந்து கீழிறக்கி இரண்டு வருட தண்டனை மட்டுமே கொடுக்கக்கூடிய குற்றங்களை மட்டுமே சுமத்தவேண்டும் என்கிற கோரிக்கை அது.

29 ஆகஸ்ட் 2002 அன்று நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. ஆன்டர்சனைக் கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைமறைவாகிவிட்ட அவர் இதுவரையில் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை.எனவே தண்டனையைக் குறைக்கவேண்டும் என்கிற கோரிக்கை முட்டாள்த்தனமானது என்றது நீதிமன்றம். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு நிதிக்குக் கிடைத்த பெரிய வெற்றி என்று கொண்டாடப்பட்டது.

இந்தத் துயரசம்பவம் நடந்து இருபது ஆண்டுகள் ஆனபொழுது எல்லோருடைய மனநிலையும் கொண்டாட்டத்துக்கு மாறியிருந்தது. மார்ச் 2004 அன்று அமெரிக்க ·பெடரல் கோர்ட் UCCயை பாதிப்படைந்த இடத்தை சர்வதேசத் தரத்தில் சுத்தாமாக்க முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. மத்தியப்பிரதேச மாநில அரசும் மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் இந்தமாதிரியான வேலை செய்வதற்கு தங்களிடம் பணமோ தொழில்நுட்பவசதியோ இல்லையென்று சொல்லிவிட்டது. ·பெடர்ல் நீதிமன்றம், ஒரு அந்நிய நாட்டின் நிறுவனம் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் இவ்வாறான சுத்தப்படுத்தும் காரியம் செய்வதை இந்தியா அனுமதிக்கிறதா என்று கேட்டிருந்தது. கொஞ்சம் இழுபறிக்குப் பிறகு ஜந்தர் மந்தரில் துயரசம்பவத்தில் தப்பிப்பிழைத்த மக்கள் மகிழ்ச்சியுறும் வகையில் இந்திய அரசாங்கம் இதற்கு ஒப்புக்கொண்டது.

இதுவொரு முக்கியமான முடிவு. ஒரு பன்னாட்டு நிறுவனம் ஒரு “மூன்றாம் உலகத்தை” சேர்ந்த நாட்டில் தான் செய்து விட்ட தவறுக்கு பரிகாரம் செய்ய வற்புறுத்தப்பட்டது இதுவே முதல்முறை. 1989 இல் கொடுத்த இழப்பீட்டுத் தொகைக்குப் பிறகு நடந்துமுடிந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்கத் தேவையில்லை என்கிற UCCயின் வாதம் இனி ஒருபோதும் செல்லாது.

19 ஜீலை 2004 அன்று மேலுமொரு வெற்றி கிடைத்தது.இந்திய உச்சநீதி மன்றம் மீதமிருக்கும் இழப்பீட்டுத்தொகையான 1500 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட 5,66,876 மக்களும் பிரித்துக்கொடுக்குமாறு வழியுறுத்தியது. நீதிக்காக இருபது வருடங்கள் காத்திருப்பது மிகவும் தாமதமான ஒன்று என்பது நம்மில் பலருக்குத் தோன்றலாம், ஆனால் பாதிப்படைந்த மக்களுக்கு இது பல சோதனைகளுக்குப் பிறகு போராடிய அவர்களது மன உறுதிக்குக் கிடைத்த வெற்றி.

Wall Street Journalஇல் அமெரிக்க கார்பரேட் நிறுவனங்களின் பல மேலாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருவதாக சொல்லப்பட்டது. முதன்முறையாக அமெரிக்க நிறுவனம் ஒன்று வளர்ந்துவரும் மூன்றாம் உலகத்தில் தான் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறது என்று அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர்.

இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்ட அன்று, UCCயின் பங்குகள் இரண்டு டாலர்கள் உயர்ந்தது. நிறுவனத்தின் சொத்து அப்படியே இருக்கிறது என்று மக்கள் சந்தோஷமாகத்தான் இருந்தார்கள். சராசரியாக பாதிப்படைந்த ஒரு நபர் வெறும் 500 டாலர்கள் மட்டுமே பெற்றதை நினைத்து அவர்கள் யாரும் வறுத்தப்படவில்லை. இந்த 500 டாலர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச்செலவுக்குக் கூட போதாது என்பது அவர்களுக்குத் தெரியாதா என்ன?

லாப நோக்கோடு அலையும் கார்பரேட் நிறுவனங்கள் ஒரு காலத்தில் உலகையே அடிமையாக்கிவிடும் என்கிற அபாயகரமான உண்மையை நம்மில் பலரும் வசதியாக மறந்துவிடுகிறோம். நிறுவனத்தின் வெற்றிக்கு முன்பு மனிதநேயம் பொருட்டேயல்ல என்கிற படு பயங்கர தத்துவத்தை நாம் தீனி போட்டு வளர்த்துவருகிறோம்.

பூச்சிக்கொள்ளி மருந்துகளால் கேன்சர் வரும். எனவே அவை அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகச் சுதந்திரமாக அது விற்கப்படுகிறது. டர்ஸ்பன் (Dursban) என்கிற பூச்சிக்கொள்ளி மருந்து குழந்தைகளுக்கு மூளை பாதிப்பை உண்டாக்கும் என்பதை தெரிந்திருந்தும் DOW நிறுவனம் அதை கவலைப்படாமல் சுதந்திரமாக விற்றுவருகிறது. டூபான்ட் (DuPont) நிறுவனம் ஓசோன் படலத்தை சிதைத்து தோல் கேன்சரை உருவாக்கும் chloroflurocorbans என்கிற ரசாயனத்தை உருவாக்கத்தான் செய்கிறது. பாலூட்டும் அன்னை தன் குழந்தைக்கு டையாக்ஸினை அவளறியாமலே புகட்டிக்கொண்டிருக்கிறாள். நம் உடலை நாமே கடுப்படுத்தவியலாத ஒரு புதிய வன்முறையை நாம் உருவாக்கிவிட்டோம்.

“ரசாயன தொழிலில் ஒரு ஹிரோஷிமா” வான போப்பால் ஒரு முக்கியமான அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. தொழிலாளர்களால் வழிநடத்தப்பட்டு ஒரு தன்னார்வ புரட்சி இயக்கமாக வளர்ந்து போராட்ட குணத்தையும் எதிர்ப்பு சக்தியையும் தன்னுள் அடக்கி வருடங்கள் பல கடந்த பின்னும் அந்த இயக்கம் இன்னும் அதே மூர்க்கத்துடன் இயங்கி வருகிறது.

போப்பால் தன் பெண்களை அவர்களது சிறையிலிருந்து மீட்டுக்கொண்டுவர ஒரு காரணியாக இருந்தது. அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பூங்காக்களில் கூடி போராட்டத்துக்கான வழிமுறைகளை ஆராய்ந்தனர்.அநீதிக்கு எதிராக தொடர்ந்து போராடும் ஒரு அணியை அவர்கள் உலகம் முழுவதிலும் உருவாக்கிவிட்டிருந்தனர். அவர்கள் தங்களது குரல்கள் சத்தமாகவும் சுத்தமாகவும் ஒலிக்கவேண்டும் என்று விரும்பினர். அதையே செய்தும் காட்டினர்.

சுற்றுப்புற சூழ்நிலைக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசாகக் கருதப்படும் Goldman Environment பரிசு, பாதிப்படைந்த மக்களின் நீதிக்கு போராடியதற்காக, ரஷிடா பி (Rashida Bi) மற்றும் சம்பா தேவி சுக்லா(Champa Devi Shukla) ஆகிய இரு பெண்களுக்கும் ஏப்ரல் 2004 இல் கொடுக்கப்பட்டது.

விருது வழங்கும் விழாவில் இந்த இரு பெண்களும் கீழ் வருமாறு பேசினர்:
டவ் நிறுவனம் தான் இன்னும் நீண்டுகொண்டிருக்கும் அந்த துயரசம்பவத்துக்கு பொறுபேர்க்க வேண்டும் என்கிற தீர்ப்பு வந்த அந்த நாள் உலகம் முழுவதும் இருக்கும் சாமான்ய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்.அந்த நாளில் இருந்து நச்சுத்தன்மை மிகுந்த ரசாயனத்தை தயாரிக்கும் எந்த நிறுவனமும் மனிதநேயத்துக்கு முன் லாப நோக்கத்தை முன்வைப்பதைப் பற்றி ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கும். நாங்கள் அடிபனிந்து போகிறவர்கள் அல்ல. இந்த உலகத்தின் வாழ்வாதாரத்தையும் உயிரின் ஆதாரத்தையும் அச்சுறுத்தும் எவரையும் நாங்கள் எதிர்த்துப் போராடுவோம். அதன்மூலம் நாங்கள் இருட்டை வென்றிடுவோம்.

குரல்கள்:
போப்பாலில் நடந்த துயரசம்பவத்துக்கு ஈடாக போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை மட்டுமே ஒப்பிடமுடியும். இந்த சம்பவம் நடந்த அன்று போப்பால் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் வெளியாகிய 45 டன் MICஇல் போஸ்ஜீன்(phosgene) சிறிதளவு கலந்திருக்கிறது. போஸ்ஜீன் முதலாம் உலகயுத்தத்திலும், இரண்டாம உலக யுத்தத்திலும் மேலும் ஈரான் – ஈராக் யுத்தத்திலும் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசாயனத்தின் தன்மையையும் அது கனிசனமான அளவு சுற்றுப்புறத்தில் கலந்திருப்பதையும் கருத்தில் கொண்டு ஆராய்ந்தால், இதனுடைய விளைவுகள் இன்னும் பல காலத்துக்கு தொடர்ந்துகொண்டிருக்கும். திட்டவட்டமான ஒரு இழப்பின் மதிப்பீட்டுக்கு வர இயலாது என்பது உண்மை.
18 டிசம்பர் 1984 அன்று டெல்லி அறிவியல் கழகம் பத்திரிக்கைகளுக்கு அளித்த ஒரு அறிக்கை.

டிசம்பர் 3

இறந்துவிட்டவர்களை நினைவு கூர்வதோடு மட்டுமில்லாமல், வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்களின் நீதிக்காகவும் இனி பிறக்கப்போகும் குழந்தைகளின் நலனுக்காவும் போராட வேண்டும் என்கிற உறுதியை இந்த நாளில் நாம் எடுக்கவேண்டும்.

**
(முடிந்தது)
மூலம்: BHOPAL GAS TRAGEDY- THE WORST INDUSTRIAL DISASTER IN HUMAN HISTORY By SUROOPA MUKHERJEE.

யார் முழித்திருக்க போகிறார்கள் – 8

UCCயுடன் சேர்த்து UCILம் வழக்கிலிருந்து கழட்டிவிடப்பட்டது. நீதிமன்றம் இறுதி தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பங்கு மிக முக்கியம் என்று கூறியது. இதற்கு என்ன அர்த்தம் என்றால்: UCILக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும்.

குரல்கள்:
பன்னாட்டு நிறுவனங்கள் வேலையில்லாத்திண்டாட்டத்தைக் குறைப்பதற்காகத் தான் வளர்ந்துவரும் நாடுகளில் தொழில் ஆரம்பிக்கின்றன என்று யாரும் சொல்வதில்லை. பிறகும் ஏன் அவர்கள் குறைந்த கூலி கிடைக்கும் இடத்தில் தொழில் ஆரம்பிக்கிறார்கள்? லாபம் அதிகம் கிடைக்கும் என்ற ஒரே நொக்கத்துடன் மட்டுமே. ஆனால் இந்தக் காரணத்தைத் தவிர வேறொரு காரணமும் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளில் பாதுகாப்புத் தர விதிகள் மிகவும் குறைவாக இருக்கும், மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால் அதற்கான இழப்பீட்டை மிகவும் மலிவாக முடித்துவிடலாம் என்பதே.
Philip Knightley in London Newsletter, Indian Express 30 Dec 1984

இழப்பீட்டுத்தொகைக்கு எதிராக பலதரப்பட்ட குழுக்களும் போராட்டங்களை நடத்தின. வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது கேட்கப்பட்ட தொகை 3 பில்லியனாக இருக்கும் பட்சத்தில் இந்திய அரசாங்கம் ஏன் வெறும் 470 மில்லியன் டாலருக்கு ஒப்புக்கொண்டது என்ற கேள்வி திரும்ப திரும்ப கேட்கப்பட்டது.

மேலும் குற்றம்,பொறுப்பு போன்ற விசயங்களை நீதிமன்றம் எவ்வாறு மறந்தது என்ற கேள்வியுடனும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தன. ஒரு விஷவாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கப்பட்ட பொழுது அதன் சம்பந்தமான சட்டதிட்டங்கள் ஏன் தெளிவாக கடுமையாக பின்பற்றப்படவில்லை என்ற கேள்வியை UCCயிடமோ, UCILஇடமோ அல்லது குறைந்தபட்சம் மத்தியபிரதேஷ் அரசிடமோ கூட நீதிமன்றம் முன்வைக்கவில்லை என்பது தான் மிகவும் வேதனையான விசயம். சமுதாயம் விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக கொடுக்கப்படவேண்டிய தொகையைப் பற்றி மறந்துவிட்டது போலவே இருந்தது.

வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் இழந்துவிட்ட அந்த மக்களுக்கு உடல்நலம் குறித்த சலுகைகள் தேவைப்படும். அவர்களின் வாழ்க்கைமுறையை செப்பனிடவேண்டும். அவர்கள் தங்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை நன்றாக வாழவேண்டும். இவற்றில் ஒன்றைக்கூட யாரும் கவனத்தில் கொள்ளவில்லை.

UCC கொடுத்த 470 மில்லியன் டாலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியாக, முறையாக பிரித்துக்கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் உறுதியளிக்குமா? உறுதியளிக்கமுடியுமா? சந்தேகம் தான். காரணம் ரொம்ப சிம்பிள். பாதிக்கப்பட்ட மக்களை வகைப்படுத்த எந்த சூத்திரமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே. மேலும் நீண்டகால நிவாரணத்திட்டம் என்ற ஒன்றும் அரசாங்கத்தின் மனதில் இல்லை. கடைசி சோகம் என்னவென்றால்- இழப்பீட்டுத் தொகை முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடையவில்லை என்பதே. பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தலா 25000 ரூபாய் பெற்றனர். அதில் பத்தாயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணாமாக கொடுக்கப்பட்டது என்று கழித்துக்கொள்ளப்பட்டது. காலதாமதமாக கிடைத்த பணத்துக்கு வட்டியும் கொடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தங்களது ஏழ்மையிலே வாழ்ந்தனர் – அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. மறக்கப்பட்டு. காலம் முழுதும் ஊணமாக்கப்பட்டு.

உண்மையை வெளிக்கொனரும் வாய்ப்பு இந்திய கோர்ட்டிடம் இருந்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களின் மத்தியில் போப்பால் பேரிடரை என்றும் மறவாமல் செய்திருக்கமுடியும். வராலறையும் அவ்வரலாறு நமக்களிக்கும் படிப்பினைகளையும் மறப்பதென்பது மிகவும் ஆபத்தான விசயம். போப்பாலின் உண்மை நிலவரம் இவ்வாறு மறைக்கப்படிருக்கும் பொழுது, இதே போல பேரிடர் எங்கு எப்பொழுது நடக்கும் என்பதை யாரரிவார்?

குரல்கள்:
போப்பால் பேரிடர் மாதிரியான துயரசம்பவங்கள் அமெரிக்காவில் நடந்திருந்தால் இந்நேரம் அதற்கான தீர்வுகள் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயம் இல்லை. நிறுவனம் இதற்குப் பொறுப்பேற்று தீர்வு காணாவிடில், அமெரிக்க அரசாங்கமே தீர்வைக் கொண்டுவந்திருக்கும், பிறகு அந்தத் தீர்வுக்கான பணத்தை மூன்று மடங்காக நிறுவனத்திடம் கறந்திருக்கும். அமெரிக்காவில் இருக்கும் நிறுவனங்களின் மேலாளர்கள் ஒவ்வொருக்கும் இது தெரிந்திருக்கும்.இது ரசாயன விஷ கழிவுகளை வெளியேற்றினால் நிறுவனத்துக்குக் கிடைக்கும் பக்கவிளைவுகள் என்பதை அவர்கள் நன்று அறிவார்கள்.
Curtis Moore, former Attorney to US Senate

1990-91

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பூகம்பம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வலியும் வேதனையும் துன்பமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருவதுதான். கடைசியாக, விஷவாயு மட்டுமே தங்கள் வாழ்க்கையைப் பாதிக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.இதே அளவுக்கு வேதனை தரக்கூடிய விசயம் என்னவென்றால், இவர்களை சந்தேகப்பார்வையுடன் பார்க்கும் சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதே. பாதிக்கப்பட்ட மக்களில் நிறைய பேருக்கு இரட்டிப்பு அடி. படிப்பறிவும் இல்லாமல் வேலைவாய்ப்பும் இல்லாமல் சேரிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வரும் அவர்களை சமுதாயம் ஏற்கனவே ஒரு சுமயாக கருதிக்கொண்டிருந்தது. இப்பொழுது இந்த நகரம் அவர்களை புல்லுருவிகளாகவும் எண்ணியது. ஆபரேஷன் பெயித் (Operation Faith) முடிந்ததுக்கப்புறமும் தொடர்ந்துவரும் சில பிரச்சனைகளால் நிர்வாகக்கோளாறுகள் இன்னும் நிறைய இருந்தன. 1991ஆன் ஆண்டில் மத்தியபிரதேஷ் அரசாங்கம் போப்பாலின் முகத்தை அழகு படுத்த விரும்பியது. அழகு படுத்தும் வேலை துவங்கியது. பூங்காக்களை சீரமைப்பது, சாலைகளை ஒழுங்குபடுத்துவது மற்றும் தெருக்களுக்கு விளக்கேற்றுவது.

இதில் வெகு சில பணிகளே விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிக்கு சென்றடைந்தது. இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் சமுதாயத்தின் அடித்தட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களது மண் மற்றும் ஓலைக் குடிசைகளை இருட்டும், திறந்திருக்கின்ற சாக்கடைகளின் துர்நாற்றமுமே சூழ்ந்திருந்தன. சராசரியாக ஒரு குடும்பம் ஒரு மாதத்துக்கு 150 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கமுடிந்தது. சமைப்பதற்கு பெண்கள் கரித்துண்டுகளையும் மாட்டு எருக்களையுமே பயன்படுத்தினர். விஷவாயுக்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களது கண்களும் நுரையீரலும், புகைகக்கும் மண் அடுப்புகளில் மீண்டும் எரிந்தன.

குரல்கள்:
ஜூன் 16 1984 இல் ராஜ் குமார் கேஸ்வனி IRaj Kumar Keswani) எழுதிய கட்டுரையில் அவர் கீழ்வருமாரு கூறியிருக்கிறார்”போஸ்ஜின் (phosgene) என்கிற ரசாயனத்தை பயன்படுத்துவது தொழிற்சாலையில் வேலைசெய்யும் பணியாளர்களையும் தொழிற்சாலைக்கு அருகில் குடியிருக்கும் மக்களையும் மிகவும் பாதிக்கும்” (கேஸ்வனி தான் தொழிற்சாலையின் பாதுகாப்பைக் குறித்து முதலில் அபாயச்சங்கு ஊதியவர்.
Radhika Ramaseshan in Economic and Political Weekly, 22-29 Dec 1984

1975இல் M.N.Buch, என்ற போப்பாலின் IAS அதிகாரி, மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் நகரத்துக்கு வெகு தூரத்தில் தொழிற்சாலையை இடமாற்ற யோசனை கூறியிருந்தார். ஆனால் அந்த IAS அதிகாரி தான் கடைசியில் இடமாற்றப்பட்டார். இப்பொழுது அழகு படுத்தும் முயற்சியில் இந்த சேரி குடிசைகளும் இடமாற்றப்பட்டன. நிறைய குடிசைகள் இடித்து தள்ளப்பட்டன. மக்கள் நகரத்துக்கு அப்பால் 12-14 கி.மீ தள்ளி குடியேறினர்.

இவற்றுள் ஒன்று லால் இம்லி வாலி மஸ்ஜித் கி பஸ்தி (Lal Imli Wali Masjid Ki Basti). 26 மே 1991 அன்று, நகர அதிகாரிகள், 200 காவல்துறையினரின் துணையுடன், 75 குடிசைகளை தகர்த்தெறிந்தனர். மற்றுமொருமுறை விஷவாயுக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் திக்கு தெரியாமல் ஓடத்துடங்கினர். ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொற்ப தொகையான ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் 15 மூங்கிலும், 5 பாயுகளும் மற்றும் 10மீ பிளாஸ்டிக் ஷீட்களும் வழங்கப்பட்டன. நகரத்துக்கு வெளியே அவர்கள் 12 அடிக்கு 25 அடியில் குடிசைகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறன ஒரு மாற்று இடத்தில் – புதிய காந்தி நகர் – கடைகள் இல்லை. பேருந்து நிறுத்தம் இல்லை. பக்கத்தில் மருத்துவமணை இல்லை. அங்கு வாழும் மக்கள் அனைவருக்கும் தண்ணீர் கொடுப்பதற்கு ஒரே ஒரு அடிகுழாய் மட்டுமே இருந்தது.

இந்த இடம் பெயர்தல் நினைத்ததை விடவும் கடுமையானதாக இருந்தது. இடைக்கால நிவாரணம் கிடைக்கவேண்டும் என்றால் அவர்கள் தங்கின ஏதாவது ஒரு வார்டில் அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும். குடியிருப்பு மாறிய பிறகு அவர்கள் தங்களது பதிவுகள் கேன்சல் செய்யப்பட்டன. இந்த மாதிரியான ஒரு மிகப்பெரிய இடம்பெயரும் நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மக்களுக்குள் இருந்த ஒற்றுமையைக் குலைத்தது. புதிய குடியிறுப்புக்கு அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டியதாயிற்று.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்க்கை முற்றிலுமாக மாறியிருந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உடலில் ஏற்பட்டுவிட்ட நிறைய மாற்றங்களோடு போராட வேண்டியிருந்தது. அவர்களால் கவனத்தை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. வேறு எந்த கடினமான வேலையையும் செய்யமுடியவில்லை. நிறைய பேர் கடினமான உடல் உழைப்பை நம்பியிருந்தவர்கள். மூட்டைதூக்குவது, கட்டுமான பணிகளில் ஈடுபடுவது இல்லையேல் வண்டி இழுப்பது போன்ற வேலைகளைதான் அவர்கள் செய்து வந்தனர். விஷவாயுவால் பலகீனம் அடைந்துவிட்ட அவர்கள் சம்பாதிக்கும் திறனை இழந்தார்கள். நாளடைவில் அவர்கள் மிகவும் ஏழ்மையான நிலையை அடைந்துவிட்டிருந்தனர். நெசவு தொழிலிலோ அல்லது பேப்பர் ஆலைகளிலோ, புகைகக்கும் ரயில் நிலையங்களிலோ வேலை செய்தவர்கள், அபாயகரமான பைபர்களுடனும், நச்சு புகைகளிலும் வருந்தினர். மாதத்தில் 15 அல்லது 20 நாட்கள் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதியுற்றனர். உடல் ஒத்துழைக்காத பட்சத்தில் அவர்கள் தங்கள் சுயகவுரத்தை இழந்தனர், கடும் மன உழைச்சலுக்கு ஆளாகினர்.

விபத்தில் தப்பித்தவர்கள் விஷவாயு பீதி என்று குறிப்பிடப்பட்ட நோயால் அவதியுற்றனர்.ஏதோ ஒரு வாயுவை சுவாசித்த பொழுதோ அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்ட பொழுதோ அவர்கள் மிகுந்த பீதிக்குள்ளானர்கள். இந்த பிரச்சனைகள் மனோதத்துவம் சார்ந்தது என்று பெரிதும் ஒதுக்கப்பட்டுவிடும். அவர்களை யாரும் நோயாளிகளாக பாவிக்கக்கூட தயங்கினர். அவர்களை யாரும் புரிந்துகொள்ளவில்லை. முயற்சிக்கவும் இல்லை.

மருத்துவமனைகள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களை வரையறுக்க சில அறிகுறிகளை வகைப்படுத்தியிருந்தன. அந்த அறிகுறிகளைக் கொண்டிருந்தவரை அவர்கள் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர் என்று குறித்துக்கொண்டனர். அவருக்கு அத்தாட்சி சாண்றிதழும் வழங்கப்படும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இடைக்கால நிவாரணமோ அல்லது உணவோ கிடைக்கும். ஆனால் இடைக்கால நிவாரணமான 200 ரூபாயைப் பெறுவதற்கு அவர்கள் பல்வேறு கடினமான நடைமுறைகளை கடக்க வேண்டியிருந்தது. இந்த கடினமான நடைமுறைகளை எளிதாக்க -மனதளவிலும், உடலளவிலும்- யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனுபவிக்கும் கஷ்டத்தை யாரும் நினைத்துப்பார்க்ககூட இல்லை.

வளர்ந்துவரும் தொழிற்துறை சார்ந்த சமுதாயத்தில் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை குறித்து யாரும் அவ்வளவாக சிந்திப்பதில்லை. கார்பைடு தொழிற்சாலை வேலைவாய்ப்பு வழங்கி அதன்மூலம் கடைநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை ஓரளவேனும் உயர்த்தும் என்றே யோசித்தனர். மாநில அரசும் இந்த ஒப்பந்தத்தில் ஒரு பங்குதாரரே. இந்த ஆர்வத்தில் யாருக்கும் தொழிற்சாலையை மக்கள்தொகை அதிகமாக இருக்கும் இடத்தில் நிறுவக்கூடாது என்கிற சிந்தனை உதித்ததாக தெரியவில்லை. திட்டமிடுதலின் போது வளர்ச்சியினோடு பொறுப்புணர்ச்சியும் வந்திருக்கவேண்டும். ஆனால் காலவேகத்தில் பொறுப்புணர்ச்சி என்ற விசயம் பின் இருக்கையையே பிடிக்கமுடிந்தது. எதுவும் அவர்களுக்கு அபாயகரமாகத் தோண்றவில்லை, சேரிகள் மட்டுமே மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

விஷவாயுவால் பாதிக்கப்பட்ட சேரிவாழ் மக்கள், பாதிப்பு ஏற்படுத்திய கார்பைடு தொழிற்சாலையால் சிறிதளவு கூட பயன்பெறவில்லை என்பது மிகவும் அபூர்வமான விசயம் ஆகிவிடுகிறது. அவர்களுக்கு தொழிற்சாலை மீண்டும் வேலை கொடுக்கவில்லை. அவர்கள் தினக்கூலிகளாக தங்களது வேலையைத் தொடர்ந்தனர். பீடி சுற்றுபவர்களாகவும், செருப்பு தைப்பவர்களாகவும், வீட்டுவேலை செய்பவர்களாகவும் காலந்தள்ள வேண்டியிருந்தது. அவர்கள் மிகவும் அடித்தட்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

அதேசமயத்தில் சட்டம் தன் வேலையை செய்துகொண்டிருந்தது. அக்டோபர் 3 ஆம் தேதி 1991 அன்று, திருத்தப்பட்ட தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 12 நபர்கள் (UCC மற்றும் UCIL) மீதும் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

(தொடரும்)
thanks : swaroopa mukarjee

சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.

(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)

ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.

*
உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: “அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது” என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.

*
எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் “உன்னைப்போல ஒருவன்” படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.

*
சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?

அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க?

இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப் ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.

இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?

இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.

*

இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.

*

காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ்.

தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் “Please remember Prakashraj” அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.

உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

*

மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்
http://readnshared.com
http://chillicode.wordpress.com

நேரம் கிடைத்தால் படியுங்கள். A poor guy’s chronicle with IRCTC.CO.IN என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.

*

உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது போபால் துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?
*
ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:

தமிழக அரசு 14″ வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க
வந்த
இலவச தொலைக் காட்சி
பெட்டியின் பெட்டிக்கு
இலவசமாக வழங்கப்பட்டதா
விமான டிக்கெட்?

ஷாப்பிங் மால்கள் தோறும்
பெரிய பெரிய
எல்சிடி பெட்டிகளின்
பெட்டிகளைப் பார்த்ததும்
கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள
தானகவே குப்பைக்கு வந்தது
நம் இலவச பெட்டியின்
பெட்டி!

நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.

*

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. I liked the title “Floored”. இது தானாப்பா உங்க டக்கு?
*