சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.

(ஈரம், உன்னைப் போல் ஒருவன், தேக்கடி சம்பவம், எ வெடனஸ்டே, ப்ராகாஷ்ராஜ், காஞ்சிவரம், சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சிப் பெட்டி)

ஈரம் படம் பார்த்தேன். அரத பழசான கதை. புரியாத புதிர் ரீமேக். ஆனால் எடுக்கப்பட்ட விதத்தில் கொஞ்சம் புதுமை. அவ்வளவே. எப்போத்தான் முன்னும் பின்னும் ஓடுற ப்ளாஷ்பேக் உத்திய விடப் போறாங்களோ தெரியல. புதுசா யோசிங்கப்பா.

*
உன்னைப்போல் ஒருவன் பார்க்கவில்லை. எ வெட்னஸ்டே பாத்திருக்கிறேன். நஷ்ருதின் ஷா போல எளிமையாக கண்டிப்பாக கமலால் பண்ணமுடியாது என்று நான் நினைத்திருந்தேன். அதே போலவே எங்கோ யாரோ எழுதியிருந்தார்கள்: “அமெரிக்க ஆங்கிலம் பேசுவது சற்று நெருடலாக இருக்கிறது” என்று. சொன்னேன்ல கமலால் சாமான்யனாக நடிக்க இயலாது. உலக நாயகனுக்கு சாமான்யனாக நடிப்பதில் என்ன கஷ்டம் என்று தெரியவில்லை.

*
எ வெட்னஸ்டே படம் முன்பு பார்த்தபொழுதே எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. நஷ்ருதின் ஷா அழகாக நடித்திருந்தார். யதார்த்தமாக இருந்தார். ஆனால் கதையில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. மறுபடியும் ஷங்கர் ·பார்முலா தான். என் நண்பர் “உன்னைப்போல ஒருவன்” படம் பார்த்துவிட்டு நீங்க பார்த்துட்டீங்களா? கண்டிப்பாக பாருங்கள். நல்ல மெசேஜ் என்றார். வாட் மெஸேஜ்? யாருக்கு? சி க்ளாஸ¤க்காம். நீங்க எந்த க்ளாஸ் சார் என்றேன். திருதிருவென்று முழித்தார். சரி என்ன மெஸேஜ் அதயாவது சொல்லுங்க என்றேன். இவன் கிட்ட வாயக்கொடுத்தது தப்போன்னு நினைச்சிருப்பார். பிறகு நிதானமாக, பாம் வெக்கிற தீவிரவாதிகளுக்கு நாம பாம் வெச்சிட்டா எல்லாம் சரியாயிடும்ன்னு சொன்னார். சனிபெயர்ச்சி கூடவான்னு கேட்டேன்? மறுபடியும் திருதிருன்னு முழித்தார்.

*
சரி அதான் படத்தில் மெஸேஜ் சொன்னாங்கல்ல? பார்த்தீங்கல்ல? அப்புறம் அத ·பாலோ பண்ணாம விடிஞ்செந்திருச்சதும் பொட்டிதட்ட வந்துட்டீங்க? ஏன்னா இயல்பு வாழ்க்கையில இது முடியாதுன்னு தான? இயல்பு வாழ்க்கையில முடியாத ஒன்ன படமா எடுத்தா அது எப்படி மெஸேஜ் சொல்றதா கணக்கிலவரும்?

அப்படியே மெஸேஜ் கொடுக்கிற படம் வந்தாலும், அதால என்ன லாபம்? உக்காந்து கொஞம் யோசிங்க ப்ளீஸ். சுமார் எத்தன வருஷமா சினிமா எடுக்கறாங்க? அதுல எத்தன ஹீரோக்கள் அடிமைகளைப் பற்றியும், மக்களாட்சி பற்றியும், ஜனநாயகம் பத்தியும் மெஸேஜ் சொல்றாங்க. அட ஷங்கர் மட்டுமே ஏழெட்டு படம் எடுத்திருப்பார். என்ன மாறியிருக்கு இங்க?

இன்னும் படகு தேக்கடியில கவிழத்தான செய்யுது. நான் இதுவரை தேக்கடிக்குப் போனதில்ல. ஆனா ஆழமான ஏரின்னு தெரியும். அப்படியிருக்க போட்ல பயனம் செய்றவங்களுக்கு லை·ப் ஜாக்கெட் கொடுக்கனும்னு தெரியாதா? இப்போ தெரியும். ஆனா நாமளே நாளைக்கு தேக்கடிக்கு போனோம்னா லை·ப் ஜாக்கெட் கேப்போமான்னு கூட தெரியாது. கொடுத்தாலும் வாங்கி மாட்டிப்போமான்னும் தெரியாது. ஏன்னா நாம மெஸேஜ உள்வாங்கிக்கிற லட்சனம் அப்படி.

இன்னும் சத்துணவு அறையில தீப்பிடித்து பல மொட்டுக்கள் கருகின் நிகழ்வு எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது? அது சம்பந்தமாக போடப்பட்ட அரசு ஆனைகள் எத்தனை இன்றும் கடைப்பிடிக்கப்படுகிறது?

இதக்கூட விடுங்கப்பா. எத்தனை பேர் ஹெல்மெட் போட்டுட்டு வண்டியோட்டுறோம்? நம்மளோட பர்சனல் சே·ப்டியில இருக்கிற அக்கறை அவ்வளவுதான்.

*

இத்தனை படத்துல வர்ற மெஸேஜ் நமக்கு பத்தாதுன்னு சனி பகவான் என்ன மெஸேஜ் சொல்றாருன்னு வேற பாக்கவேண்டியிருக்கு. கஷ்டம் தான். படத்தில நல்ல மெஸேஜ் இருக்குன்னு யாராவது சொன்னா பத்திக்கிட்டு தான் வருது.

*

காஞ்சிவரம் பார்த்தேன். விஜய் டீவில கொஞ்ச நாளைக்கு முன்ன பார்த்தேன். ப்ரகாஷ்ராஜ் தேசிய விருது வாங்குவாருன்னு நெனச்சுக்கூட பாக்கல. ஏனோ எனக்கு அந்தப்படத்தில வர்ற காரெக்டர் தெரியல. படம் முழுதும் எனக்கு ப்ரகாஷ்ராஜ் தான் தெரிஞ்சார். வாழ்த்துக்கள் ப்ரகாஷ்ராஜ்.

தேசியவிருது வாங்கினப்போ மட்டும் ஞாபகம் வெச்சிருப்பாங்க அப்புறம் மறந்திருவாங்கன்னு பேட்டியில சொல்லியிருந்தாரு, என்னோட அவுட்லுக் கேலன்டரில வருஷம் முழுக்க ரிமைன்டர் “Please remember Prakashraj” அப்படின்னு போட்டுவெச்சிருக்கேன். நீங்களும் ஒரு remainder போட்டுவெச்சுக்கங்க. அதான் நிறைய ப்ரீ கூட இருக்கே.

உங்க பேனர்ல இன்னும் நல்ல படங்கள் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். (தேசிய விருதுக்கும் இந்த கோரிக்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை)

*

மேலும் இரண்டு வலைப்பூக்களில் அவ்வப்போது எழுதுவருகிறேன்
http://readnshared.com
http://chillicode.wordpress.com

நேரம் கிடைத்தால் படியுங்கள். A poor guy’s chronicle with IRCTC.CO.IN என்கிற பதிவை படிக்க சிபாரிசு செய்கிறேன்.

*

உரையாடல் போட்டிக்கு நான் எழுதிய சிறுகதை ஒன்று இன்னும் முடிக்கப்படமால் அப்படியே இருக்கிறது. யார் முழித்திருக்கப்போகிறார்கள் என்கிற எனது போபால் துயரசம்பவம் பற்றிய தொடரையும் முடித்துவிட எண்ணியிருக்கிறேன். நீங்க படிச்சாலும் படிக்காம போனாலும் முடிக்கிறது எனது கடமையில்லியா?
*
ரொம்ப நாளுக்கு முன்னர் என் நண்பர் ஒருவர் அனுப்பிய போட்டோ கீழே:

தமிழக அரசு 14″ வண்ணத் தொலைக்காட்சி என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. அதானால் என்ன என்று கேட்பவர்களுக்கு: இந்த படம் என் நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் தனது செல்·போனில் படம்பிடித்தது.

சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க
வந்த
இலவச தொலைக் காட்சி
பெட்டியின் பெட்டிக்கு
இலவசமாக வழங்கப்பட்டதா
விமான டிக்கெட்?

ஷாப்பிங் மால்கள் தோறும்
பெரிய பெரிய
எல்சிடி பெட்டிகளின்
பெட்டிகளைப் பார்த்ததும்
கழிவிறக்கம் தொற்றிக்கொள்ள
தானகவே குப்பைக்கு வந்தது
நம் இலவச பெட்டியின்
பெட்டி!

நீங்களும் உங்களுக்கு தோன்றும் வரிகளை கவிதை என்று நினைத்துக்கொண்டு இங்கே பின்னூட்டம் அளிக்கலாம்.

*

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்து முன்னூரு வருஷம் ஆச்சுன்னாலும், போனவாரமோ எப்பவோ பக்கத்துல உக்காந்திட்டிருக்கிற சில மக்கள் இந்தியாதான் இப்போ நம்பர் ஒன்னுன்னு பெருமை பிடிபடாம பேசிட்டிருந்தாங்க. இன்னிக்கு The Tabla வில ஹர்ஷா போக்லே எழுதிய இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. I liked the title “Floored”. இது தானாப்பா உங்க டக்கு?
*

6 thoughts on “சிங்கப்பூர் வந்த இலவச தொலைக்காட்சி பெட்டி ,சினிமாவில் மெஸேஜ் மேலும் சில.

  1. I have seen many of our people bring things in a cardboard box(attai petti). May be someone used the TV box. About “Bopal”, trust me there are some silent readers out there. Continue when you get time…Ag

    Like

  2. I know few people who have brought ‘Government of Tamilnadu 14″ Colour TV’ to Singapore. Out of them few has 32″ LCD TV in their living room and keeping this FREE TV as a secondary TV in their bed room.What is the use of providing free colour TV to poor people? To make them much much more LAZY AND FOOLISH?I heard that Government of Tamilnadu is going to offer FREE CABLE Connection too… Is it so? Are the TV and CABLE connection considered as very essential to poor people?

    Like

Leave a comment