Earth close to Mars and Moon : NASA chat room

செவ்வாய் கிர‌க‌த்தை அருகில் காண்ப‌த‌ற்கு இன்று ந‌ல்ல‌ ச‌ந்த‌ர்ப்ப‌ம். உப‌யோகித்துக்கொள்ளுங்க‌ள். செவ்வாய் ம‌ட்டும‌ல்ல‌; நில‌வு கூட‌ அருகில் தெரியும். இந்த‌ வ‌ருட‌த்தின் மிக‌ப்பெரிய‌ நிலா இன்று தான் தெரியும்.

இத‌ற்கு முன் 2003 இல் செவ்வாய் கிர‌க‌ம் ந‌மக்கு இன்னும் மிக‌ அருகில் இருந்திருக்கிற‌து. 2003 இல் நம‌க்கும் செவ்வாய்க்கும் இடையே இருந்த‌ தூர‌ம் வெரும் 56 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தான். இது க‌ட‌ந்த 60,000 வ‌ருட‌ங்க‌ளில் இதுவே ந‌ம‌க்கும் செவ்வாய்க்குமான‌ மிக‌ குறைந்த‌ தூர‌ம்.
இப்பொழுது ஜ‌ன‌வ‌ரி 2010 இல் செவ்வாய் பூமியிலிருந்து 99 மில்லிய‌ன் கிலோமீட்ட‌ர் தூர‌த்தில் இருக்கும்.

பூமி சூரியனைச் சுற்றி வ‌ர‌ ஒரு ஆண்டு ஆகிற‌து; ஆனால் செவ்வாய் சூரிய‌னைச் சுற்றி வ‌ர‌ இர‌ண்டு ஆண்டுக‌ள் ஆகிற‌து. என‌வே ஒவ்வொரு இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளில் பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். கிட்ட‌த்த‌ட்ட‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒருமுறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும்.

இது தொட‌ர்பான‌ கேள்விக‌ள் உங்க‌ளுக்கு இருந்தால் நாசாவின் இந்த‌ இணைய‌ ப‌க்க‌த்துக்கு வாருங்க‌ள். அவ‌ர்க‌ள் ஒரு சாட் ரூம் ஏற்பாடு செய்திருக்கிறார்க‌ள்.

சிங்க‌ப்பூரில் ச‌யின்ஸ் சென்ட‌ர் ஒவ்வொரு வெள்ளிக்கிழ‌மை இர‌வு 7:50 இல் இருந்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரை இல‌வ‌ச‌மாக‌ டெல‌ஸ்கோப் மூல‌ம் அன்று தெரியும் ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளையும் கிர‌க‌ங்க‌ளையும் பார்க்க‌லாம். நான் சாட்ட‌ர்ன் (Saturn) பார்த்திருக்கிறேன். இன்று ச‌யின்ஸ் சென்ட‌ர் போவ‌தாக‌ ப்ளான் இருக்கிற‌து.

Also read: செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

செவ்வாயைக் (வெறும் க‌ண்க‌ளில் கூட‌) காணுங்க‌ள்!

இருட்டின‌ பிற‌கு நீங்க‌ள் வெளியே (ஷாப்பிங் மால்க‌ளுக்குள் இல்லாமல்) திரிந்துகொண்டிருந்தீர்க‌ள் என்றால் கிழ‌க்குப்ப‌க்க‌ம் கொஞ்ச‌ம் சிவ‌ப்பு நிற‌த்தில் பிர‌காச‌மான‌ ஒரு ந‌ட்ச‌த்திர‌ம் தெரிவ‌தைக் க‌ண்டிருக்க‌க்கூடும். ஆனால் அது ந‌ட்ச‌த்திர‌ம் அல்ல‌; அது ஒரு கிர‌க‌ம். சிவ‌ப்பு என்று சொன்ன‌வுட‌ன் நிறைய‌ பேர்க‌ளுக்கு அந்த‌ கிர‌க‌த்தின் பெய‌ர் என்ன‌வென்று தெரிந்திருக்கும்: செவ்வாய். பூமியும் செவ்வாயும் சூரிய‌னைச் சுற்றிக்கொண்டிருப்ப‌தால் ஒவ்வொரு ஒன்ற‌ரை வ‌ருட‌ங்க‌ளுக்கு ஒரு முறை பூமி செவ்வாயைக் க‌ட‌ந்து செல்லும். இன்னும் தெளிவாக‌ சொல்ல‌ப்போனால் உள் சுற்றில் வேக‌மாக‌ ப‌ய‌ணிக்கும் கார் ஒன்று வெளிச்சுற்றில் மெதுவாக‌ப் ப‌ய‌ணிக்கும் காரை எப்ப‌டிக் க‌ட‌ந்து செல்லுமோ அதே போல‌ உள்சுற்றில் இருக்கும் பூமி வெளிச்சுற்றில் இருக்கும் செவ்வாயைக் க‌ட‌க்கும்.

பூமி செவ்வாயைக் க‌ட‌க்கும் பொழுது செவ்வாய் சூரிய‌ன் இருக்கும் திசைக்கு எதிர் திசையில் இருக்கும். என‌வே சூரிய‌ன் உதிக்கும் பொழுது ம‌றையும்; சூரிய‌ன் ம‌றையும் பொழுது உதிக்கும். இந்த‌ ச‌மய‌த்தில் ந‌ம‌க்கு இர‌ண்டு சாத‌க‌மான‌ விச‌ய‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌: செவ்வாய் பூமிக்கு வெகு அருகில் இருக்கும் அதனால் டெலஸ்கோப்க‌ளில் மிக‌ப்பெரிதாக‌த் தெரியும்; இர‌வு முழுவ‌தும் தெரிவ‌தால் ந‌ம‌து சௌக‌ரிய‌த்துக்கு செவ்வாயை டெல‌ஸ்கோப் மூல‌ம் பார்த்துக்கொண்டே இருக்க‌லாம். (என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ரிட‌ம் டெல‌ஸ்கோப் இருக்கிற‌து. அதிக‌ ச‌க்தி வாய்ந்த‌ டெல‌ஸ்கோப் இல்லை என்றாலும் ஓர‌ள்வு பார்க்க‌லாம். இங்கே ச‌யின்ஸ் சென்ட‌ரில் டெல‌ஸ்கோப் க‌டை ஒன்று இருக்கிற‌து. எப்பொழுது போனாலும் அந்த‌க் க‌டையில் க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ரைத் த‌விர‌ யாருமே இருக்க‌மாட்டார்க‌ள். க‌ல்லாவில் உட்கார்ந்திருப்ப‌வ‌ர் மிக‌வும் வ‌ய‌தான‌வ‌ர். விசாரித்த‌தில் அவ‌ருக்கு டெல‌ஸ்கோப் ப‌ற்றி எங்க‌ளுக்குத் தெரிந்த‌ அள‌வே தெரிந்திருந்த‌து!)

இது போல‌ பூமியும் செவ்வாயும் அருகே அருகே இருப்ப‌து இன்னும் கொஞ்ச‌ நாட்க‌ளில் ந‌ட‌க்க‌ப்போகிற‌து: ஜ‌ன‌வ‌ரி 29 2010.

அத‌னால் தான் “Beauty with out borders” என்னும் த‌ள‌ம் Hello Red Planet என்று ஒரு புரோகிராம் ஆர‌ம்பித்திருக்கிற‌து. இத‌ன் நோக்க‌ம் எல்லோரையும் டீவி ம‌ற்றும் ஷாப்பிங் மால்க‌ளில் இருந்து வெளியேற்றி செவ்வாயை காண‌ வைப்ப‌து. டெல‌ஸ்கோப்பில் பார்ப்ப‌தால் செவ்வாய் மிக‌ மிக‌ப் பெரிதாக‌ தெரியும் என்று யாரும் நினைத்து ஏமாந்து விடாதீர்க‌ள்; ஆனால் செவ்வாயில் இருக்கும் ப‌னிப்பாறைக‌ளைக் காண‌முடியும் என்று சொல்கிறார்க‌ள். இங்கு ச‌யின்ஸ் சென்ட‌ர் வெள்ளிக்கிழ‌மை திற‌ந்திருக்கும்; எல்லாருக்கும் இல‌வ‌ச‌ அனும‌தி. நானும் ம‌னைவியும் குழ‌ந்தையும் போக‌லாம் என்று நினைத்திருக்கிறேன்.

நீங்க‌ள் டெல‌ஸ்கோப் உப‌யோகித்துப் பார்த்தீர்க‌ள் என்றால் நீங்க‌ள் க‌ண்ட‌ காட்சியை குழுவுக்கு தெரிய‌ப‌டுத்தினால் அவ‌ர்க‌ள் உலக‌ம் முழுவ‌திலும் கிடைக்கும் த‌க‌வ‌ல்க‌ளை திர‌ட்டுவார்க‌ள். ம‌ற்ற‌ எல்லோரும் போல‌த்தான் நீங்க‌ளும் செவ்வாயைப் பார்த்தீர்க‌ள் என்ப‌தையும் நீங்க‌ள் உறுதிப்ப‌டுதிக்கொள்ள‌ முடியும்.

இந்த‌ முறை இந்தியா வ‌ந்திருந்த‌பொழுது இந்த‌ காவ‌லூரில் இருக்கும் observatoryக்குப் போக‌வேண்டும் என்று நினைத்திருந்தேன். முடிய‌வில்லை. இங்கு தான் ஆசியாவிலே மிக‌ப் பெரிய‌ டெல‌ஸ்கோப் இருக்கிற‌தாம்! காவ‌லூருக்குப் ப‌க்க‌த்தில் இருக்கும் ந‌ண்ப‌ர்க‌ளே த‌வ‌றாம‌ல் செவ்வாய் கிர‌க‌த்தைப் பார்த்து என‌க்குத் தெரிவியுங்க‌ள் ப்ளீஸ்.

சென்னையில் ச‌யின்ஸ் சென்ட‌ர் இருக்கிற‌தா என்று தெரிய‌வில்லை; அல்ல‌து உள்ளூர் அமெச்சூர் அஸ்ட்ரோன‌ம‌ர் குழு ஏதும் இருக்கிற‌தா என்றும் என‌க்குத் தெரிய‌வில்லை. அப்ப‌டி இருந்தால் என‌க்குத் தெரிவியுங்க‌ள். மேலும் சென்னை அல்லாத உங்க‌ள் ஊரில் இப்ப‌டி ஏதும் குழு இருந்தாலும் தெரிவியுங்க‌ள்.

கூகிள் செய்த‌தில் இந்த‌ குழு ஒன்று சென்னையில் இருப்ப‌து தெரிய‌வ‌ந்த‌து.

Name: TANASTRO (Tamilnadu astronomy association)
Address: C/o, B.M.Birla planetaium, Gamdhi Mandapam road.Chennai
Contact: President .Proff.P.Devados
Phone: 24416751
Email: Tanastro@yahoo.com
URL: Website
Members: 90

எறும்பின் சாப‌ம் ம‌ற்றும் பாம்பு செய்த‌ பூஜை

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் பிபிசி நாலெட்ஜ் சான‌லில் ஒரு டாக்குமென்ட‌ரி பார்த்தேன். தென் அமெரிக்காவில் ம‌லை சூழ்ந்த‌; எளிதில் யாரும் சென்றுவிட‌முடியாத‌ தூர‌த்தில் ஒரு இன‌ ம‌க்க‌ள் வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். ஐரோப்பாவிலிருந்து இரு ந‌ப‌ர்க‌ள் ஏற‌முடியாத‌ ம‌லைக‌ளையும் க‌ட‌க்க‌முடியாத‌ க‌டின‌மான‌ பாதைக‌ளையும் க‌ட‌ந்து வெகு நாட்க‌ள் ப‌ய‌ண‌ம் செய்து அந்த‌ ம‌லை உச்சியை அடைகின்ற‌ன‌ர். அங்கு த‌ங்கியிருந்து அந்த‌ ம‌க்க‌ளுட‌ன் ப‌ழகுகின்ற‌ன‌ர். ப‌ய‌ண‌ம் செய்த‌ அந்த‌ இரு ஐரோப்பிய‌ர்க‌ளுள் ஒருவ‌ர் தாவ‌ர‌விய‌ல் நிபுண‌ர்.

அந்த‌ ப‌ழ‌ங்குடியின‌ருள் ப‌ல‌ர் இன்ன‌மும் ந‌க‌ர‌ங்க‌ளைப் பார்க்காத‌வ‌ர்க‌ள்; அந்த‌ காட்டைவிட்டு வெளி வ‌ராத‌வ‌ர்க‌ள். ஆங்கில‌ ம‌ருத்துவ‌ம் ம‌ற்றும் ஆங்கில‌ ம‌ருந்துக‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. நோய்க‌ளைப் ப‌ற்றியும் தெரியாது. ந‌ம‌க்கு தெரியாவிடில் நோய்க‌ளே இல்லை என்ப‌தாகிவிடுமா? அவ‌ர்க‌ளுக்கும் நோய்க‌ள் இருக்கின்ற‌ன‌. ஆனால் அவ‌ர்க‌ளுக்கு நோய்களின் பெய‌ர்க‌ளும் அவ‌ற்றின் பாதிப்புக‌ளும் தெரிய‌வில்லை. அங்கிருக்கும் ம‌க்க‌ளில் சில‌ருக்கு கான்ச‌ர் இருந்தும்; அவ‌ர்க‌ளுக்கு அது தெரியாது.

ப‌ல‌ நோய்க‌ளால் ம‌க்க‌ள் மாண்டாலும் அது ஏதோ சாப‌த்தால் தான் ந‌ட‌க்கிற‌து என்று ந‌ம்பிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுடைய‌ ம‌ருத்துவ‌ம் மூலிகை ம‌ருத்துவ‌ம் ம‌ட்டுமே. தாவ‌ர‌விய‌லார் அவ‌ர்க‌ள‌து மூலிகை ம‌ருத்துவ‌ம் ப‌ற்றி விசாரிக்க‌; அவ‌ர்க‌ள் எடுத்துக்காட்டும் ஒவ்வொரு இலையையும் அவ‌ர் அறிந்திருக்கிறார்; ஆனால் அந்த‌ இலைக‌ளுக்கு அவ‌ர்க‌ள் இருப்ப‌தாக‌ச் சொல்லும் ம‌ருத்துவ‌குண‌ம் ஏதும் இல்லை என்று இவ‌ர் சொன்னாலும் அவ‌ர்க‌ள் ந‌ம்ப‌வில்லை.

அங்கிருக்கும் நான்கு மாத‌ குழந்தை ஒன்றுக்கு க‌ழுத்தில் ஒரு வ‌கையான‌ வீக்க‌ம் இருக்கிற‌து. அது ஒரு கிரிக்கெட் பால் அள‌வுக்கு பெரிதாக‌வும் இருக்கிற‌து; கெட்டியாக‌வும் இருக்கிற‌து. இது ஒரு வ‌கையான‌ நோய்; இந்த‌க் குழ‌ந்தையை குண‌ப்ப‌டுத்த‌ ந‌க‌ர‌த்துக்கு கூட்டி சென்று ம‌ருத்துவ‌ம் பார்க்க‌வேண்டும் என்றும் இந்த‌க் குழ‌ந்தையை ந‌க‌ர‌த்துக்கு அழைத்துச் செல்ல‌ என‌க்கு அனும‌தி தாருங்க‌ள் என்று அவ‌ர் கேட்கிறார். அத‌ற்கு அவ‌ர்க‌ள் ம‌றுத்துவிடுகின்ற‌ன‌ர்.

மேலும் இது ஒரு நோய் இல்லை என்றும் இந்த‌ மாதிரியான‌ வீக்க‌ம் ஒரு வ‌கையான‌ எறும்புக‌ளின் சாப‌த்தால் வ‌ருகிற‌து என்றும் அவ‌ர்க‌ள் கூறுகின்ற‌ன‌ர். இத‌ற்குப் ப‌ரிகார‌மாக‌ எறும்புக‌ளை நோக்கி பிரார்த்த‌னை செய்து ஒரு வ‌கையான‌ இலையை அரைத்து சாறு எடுத்து வீக்க‌த்தின் மீது கொஞ்ச‌ கால‌ம் விட்டுக்கொண்டிருந்தால் ச‌ரியாகிவிடும் என்றும் சொல்கின்ற‌ன‌ர். ந‌ம‌து தாவ‌ர‌விய‌லாரின் பேச்சை யாரும் கேட்கிற‌மாதிரி தெரிய‌வில்லை.

தாவ‌ர‌விய‌லாரும் அவ‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ அந்த‌ இலையைத் தேடி க‌ண்டுபிடிக்கிறார். இலையைக் க‌ண்டுபிடித்த‌ நொடியில் அந்த‌ இலைக்கு ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லையென்ப‌தை அறிகிறார். இதை நிரூபிக்க‌ அந்த‌ இலைக‌ளை சாறு எடுத்து அந்த‌க் குழ‌ந்தையின் க‌ழுத்திலிருக்கும் வீக்க‌த்தில் விடுகிறார். கொஞ்ச‌ நேர‌த்தில் வீக்க‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ வ‌ற்றிப்போகிற‌து.

தாவ‌ர‌விய‌லாருக்குத் தெரியும் அந்த‌ இலையில் ஏதும் ம‌ருத்துவ‌ குண‌ம் இல்லை என்ப‌து; என‌வே வீக்க‌ம் குறைந்தது ஒரு த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சியே என்ப‌தையும் அறிகிறார். வீக்க‌ம் ப‌ல‌ நாளாக‌ இருந்திருக்கிற‌து; ஏதோ ஒரு கார‌ண‌த்துக்காக‌ பின் கொஞ்ச‌ நாட்க‌ளுக்குப் பிற‌கு வ‌ற்றிப்போகிற‌து. இலைக்கும் வீக்க‌ம் குறைந்த‌துக்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை.

ஆனால் இந்த‌ த‌ற்செய‌ல் ச‌ம்ப‌வ‌த்தால் அங்கிருக்கும் ம‌க்க‌ளுக்கு மூலிகை ம‌ருத்துவ‌ம் மேல், மேலும் தீவிர‌மான‌ ந‌ம்பிக்கை உருவாகிற‌து. இதைத் தொட‌ர்ந்து இன்னும் ப‌ல நோய்க‌ளை இதே போன்ற‌தொரு மூலிகை ம‌ருத்துவ‌ம் குண‌ப்ப‌டுத்தும் என்று அவ‌ர்க‌ள் உறுதியாக‌ ந‌ம்புவ‌த‌ற்கு இது போன்ற‌ த‌ற்செய‌ல் நிக‌ழ்ச்சிக‌ள் உத‌வுகின்ற‌ன‌.

*

கொஞ்ச‌ நாட்க‌ளுக்கு முன் என் ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் என‌க்கு ஒரு ஈமெயில் அனுப்பியிருந்தார். என‌க்கு ம‌ட்டும‌ல்ல‌ என்னுட‌ன் சேர்ந்து இன்னும் ப‌ல‌ருக்கும் அந்த‌ மெயில் அனுப்ப‌ப்ப‌ட்டிருந்த‌து. அது சூரிய‌கிர‌க‌ண‌த்தின் பொழுது பூக்க‌ளைக் கொண்டு சிவ‌னுக்கு பூஜை செய்த‌ பாம்பைப் ப‌ற்றிய‌து. அதாரம் இருக்கிற‌து. பட‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌. சாம்பிளுக்கு அவ‌ர் அனுப்பிய‌ ஒரு ப‌ட‌ம் இங்கே:

அவ‌ரைச் ச‌ந்தித்த‌ பொழுது ஏன் இவ்வாறான‌ மெயில்க‌ளை எல்லோருக்கும் அனுப்பியிருக்கிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; என‌க்கு வ‌ந்த‌து உங்க‌ளுக்கு ஃபார்வேர்ட் செய்தேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னார். பிற‌கு ஏன் இதையெல்லாம் ந‌ம்புகிறீர்க‌ள் என்று கேட்ட‌பொழுது; கொஞ்சநேர‌ம் ம‌ழுப்பிய‌வ‌ர் பிற‌கு ச‌ட்டென்று, உன‌க்கு ந‌ம்பிக்கை இல்லையென்றால் அது உன்னுட‌ன் என்று கோப‌மாக‌ச் சொன்னார்.

*

ச‌ரி தான்; அதையே நானும் திரும்ப‌க் கேப்பேன்ல‌?

ஐந்து குர‌ங்குக‌ளும் சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தாவும்

ஒரு கூண்டில் ஐந்து குர‌ங்குக‌ள் இருப்பதாக‌ வைத்துக்கொள்ளுங்க‌ள். அந்த‌க் கூண்டிற்குள் ஒரு வாழைப்ப‌ழ‌ம் தொங்க‌விட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ஏதுவாக‌ சில‌ ப‌டிக்க‌ட்டுக‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன‌.

குண்டில் அடைக்க‌ப்ப‌ட்ட‌ கொஞ்ச‌ நேரத்துக்குள் ஏதாவ‌து ஒரு குர‌ங்கு அந்த‌ வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்காக‌ ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது முத‌ல் ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம்; நீங்க‌ள் எல்லாக் குர‌ங்குக‌ளின் மீதும் குளிர்ந்த‌ ஐஸ் போல‌ இருக்கும் நீரை பீய்ச்சி அடியுங்க‌ள்.

கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் வேறு ஏதாவ‌து ஒரு குர‌ங்கு வாழைப்ப‌ழ‌த்தை எடுப்ப‌த‌ற்கு ப‌டிக‌ளை நோக்கிப் போகும். அது ப‌டியைத் தொட்ட‌து தான் தாம‌த‌ம் உட‌னே ஏற்க‌ன‌வே செய்த‌து போல‌ எல்லாக் குர‌ங்குளின் மீதும் ஐஸ் போல‌ குளிரான‌ த‌ண்ணீரைப் பீய்ச்சி அடிக்க‌வேண்டும்.

இப்ப‌டி செய்ய‌ச் செய்ய‌ கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து வாழைப்ப‌ழ‌த்தை எடுக்க‌ ஏதாவ‌து ஒரு குர‌ங்கு ப‌டியைத் தொட‌ப்போனால் ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் அதைத் த‌டுக்கும்.

இப்பொழுது குளிர்ந்த‌ நீரை நிறுத்திவிடுங்க‌ள். ஒரு குர‌ங்கை வெளியே எடுத்துவிட்டு ஒரு புதுக்குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். புது குர‌ங்கு கூண்டிற்குள் சென்ற‌ உட‌னேயே வாழைப்ப‌ழ‌த்தைப் பார்க்கும்; பார்த்த‌ உட‌ன் அதை எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும். ஆனால் ம‌ற்ற‌ ப‌ழைய‌ குரங்குக‌ள் எல்லாம் சேர்ந்து இந்த‌ப் புதுக்குர‌ங்கை எடுக்க‌விடாம‌ல் த‌டுத்து அடிக்கும். ஏன் அடிக்கிறார்க‌ள் என்று புரியாத‌ புதுக் குர‌ங்கு; கொஞ்ச‌ நேர‌ம் க‌ழித்து மீண்டும் அந்த‌ப் ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும். மீண்டும் அடி விழும். இப்பொழுது அந்த‌க் குர‌ங்குக்கு ஒன்று ம‌ட்டும் புரிந்து விடும்; ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போனால் அடி விழுவ‌து நிச்ச‌ய‌ம். எனவே எடுக்க‌ப் போகாது.

இப்பொழுது மீண்டும் ஒரு ப‌ழைய‌ குர‌ங்கை கூண்டிலிருந்து அக‌ற்றி விட்டு மேலும் ஒரு புதிய‌ குர‌ங்கை உள்ளே விடுங்க‌ள். இந்த‌ப் புதிய‌ குர‌ங்கு ப‌ழ‌த்தைப் பார்த்த‌தும் எடுக்க‌ ப‌டிக‌ளை நோக்கி ஓடும்; அப்பொழுது ம‌ற்ற‌ குர‌ங்குக‌ள் எல்லாம் சேர்ந்து புதுக்குர‌ங்கை அடித்து உதைக்கும். ஆச்ச‌ரிய‌ம் என்ன‌வென்றால் போன‌ த‌ட‌வை உள்ள‌ வ‌ந்த‌ புதுக்குர‌ங்கும் சேர்ந்து கொண்டும் இந்த‌முறை உள்ள‌ வ‌ந்த‌ குர‌ங்கை அடிக்கும்; ஏன் அடிக்கிறோம் என்று தெரியாம‌லே!

மூன்றாவ‌து புதுக் குர‌ங்கை மாற்றிய‌ உட‌ன்; வ‌ழ‌க்க‌ம் போல‌ அது ப‌ழ‌த்தை எடுக்க‌ப் போகும் பொழுது ம‌ற்ற‌ எல்லா குர‌ங்குக‌ளும் அதை அடிக்கும். அடிக்கிற‌ நான்கு குர‌ங்குக‌ளில் இர‌ண்டு குர‌ங்குக‌ளுக்கு நாம் ஏன் ப‌டிக‌ளில் ஏற‌க்கூடாது என்றோ; நாம் ஏன் அப்ப‌டி ஏறுகிற‌ குர‌ங்கை அடிக்கிறோம் என்றோ தெரியாது!

இப்ப‌டியாக‌ நான்காவ‌து ஐந்தாவ‌து குர‌ங்குக‌ளை புதுக்குர‌ங்குக‌ளால் மாற்றிய‌பின் முத‌லில் ஐஸ் த‌ண்ணீர் தெளிக்க‌ப்ப‌ட்ட‌ எந்த‌க் குர‌ங்குக‌ளும் இப்பொழுது இல்லை; ஆனால் புதிதாக‌ வ‌ந்த‌ எந்த‌க் குர‌ங்கும் ப‌டிக‌ளுக்குப் ப‌க்க‌த்தில் கூட‌ப் போகாது. ஏன்? அவைக‌ளைப் பொறுத்த‌வ‌ரை அது அப்ப‌டித்தான் ரொம்ப‌ நாளாக‌வே இருக்கிற‌து!

*

இன்று ம‌திய‌ சாப்பாட்டின் போது என் ச‌க‌ அலுவ‌ல‌ர் ஒருவ‌ர் “இன்று சூரிய‌ கிர‌க‌ண‌ம் என‌வே மூன்று ம‌ணிக்குள் சாப்பிட்டு விடுங்க‌ள். அத‌ற்குப் பிற‌கு ஐந்த‌ரை ம‌ணி வ‌ரையில் சாப்பிட‌க்கூடாது” என்று சொன்னார். ஏன் என்று கேட்டால், ப‌திலில்லை! ஆனால் சாப்பிட‌க்கூடாது என்று ம‌ட்டும் தெரியும்!! கார‌ண‌ம் தெரியாவிட்டாலும் சாப்பிட‌க்கூடாது என்ப‌தில் ம‌ட்டும் அவ‌ர் தெளிவாக‌ இருந்தார்.

*

இது ந‌ம்பிக்கை சார்ந்த‌ விச‌ய‌ம் அல்ல‌; அறிவிய‌ல் பூர்வ‌மான‌ விச‌ய‌ம். நீங்க‌ள் கெடுவ‌து ம‌ட்டுமில்லாம‌ல் அடுத்த‌வ‌ரையும் கெடுக்காதீர்க‌ள்.

*
இந்த‌க்  கொழுவியில் இதைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து:
Science Popularisation Association of Communicators and Educators (SPACE), a Delhi-based organisation working to make science and astronomy popular among youngsters, is taking people to Varkala in Kerala to watch the eclipse.

“We have a team of 70 people both from scientific and non-scientific community including some children. We will be doing several experiments like recording temperature, humidity, wind speed and ambient light during the eclipse. We are carrying several telescopes, solar filters and high resolution camera to catch the eclipse,” said Sachin Bhamba, astronomer with SPACE.

SPACE has also initiated a study about impact of solar eclipse on people.

“There are all kind of superstitions around a solar eclipse — like you should not eat or drink during an eclipse. We are taking 35 people to Varkala and will make them do every routine thing during the eclipse. They will be later asked to share the changes they felt during the celestial activity. We will publish a study based on the data so that people cast away all false beliefs related to eclipse,” said Bhamba.

சூரிய‌ கிர‌க‌ண‌த்தைப் ப‌ற்றித்தெரிந்து கொள்ள‌ இந்த‌ கொழுவியைப் பாருங்க‌ள்.

*

சூரிய‌கிர‌க‌ணாந‌ந்தா யார் என்று இன்ன‌மும் நீங்க‌ள் என்னிட‌ம் கேட்க‌மாட்டீர்க‌ள் என்றே நினைக்கிறேன்.

*