300. 2 States

ரொம்ப நாள் ஆச்சு நான் நாவலோ கதையோ சிறுகதையோ படித்து. புதினத்தைக் கொஞ்ச காலம் ஒதுக்கிவைத்துவிட்டு புதினம் அல்லாத புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம் கார்ல் சாகன் என்கிற விஞ்ஞானி. கிட்டத்தட்ட நம்ம சுஜாதா மாதிரி. என் நண்பர் சஜித் எனக்கு கார்ல் சாகனின் த காஸ்மோஸ் (ப்ரபஞ்சம்) என்கிற வீடியோவைக் கொடுத்தார். ப்ரபஞ்சத்தைப் பற்றிய எளிய அறிமுகம். சுஜாதா எழுதிய ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் போல.

இது புத்தகமாகவும் வந்தது. கண்டிப்பாகத் தேடிப்பிடித்து படியுங்கள். வீடியோ கிடைத்தாலும் பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்குக் காண்பியுங்கள். படிக்கச் சொல்லுங்கள்.

காஸ்மோஸ் பற்றியும் நான் படித்த மற்ற புத்தகங்களைப் பற்றியும் மற்றொரு நாள் எழுதுகிறேன் இப்பொழுது நான் சமீபத்தில் படித்த சேட்டன் பகத் எழுதிய 2 states பற்றிப் பார்ப்போம். சேட்டன் பகத்தின் The three mistakes of my life பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். மேலும் 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு சேட்டன் பகத் உலக அளவில் மிகவும் பிரபலமாகியிருக்கிறார்.

மெதுவாக ஆங்கில நாவல்கள் படிக்கத்துவங்கும் கார்பரேட் இளைஞர்கள் பெரும்பாலும் சேட்டன் பகத்தின் எல்லா புத்தகங்களையும் படித்திருக்கின்றனர். 3 இடியட்ஸ் பிரச்சனைக்குப்பிறகு அவர்கள் சேட்டன் பகத் வஞ்சிக்கப்பட்டதாகவே நினைக்கின்றனர். எனக்கென்னவோ அப்படித் தெரியவில்லை சேட்டன் பகத் ஒப்பந்தந்தத்தில் கையெழுத்துப்போட்டிருக்கிறார்.

ஒப்பந்தம் இங்கே இருக்கிறது. முழு ரைட்ஸ¤ம் கொடுத்திருக்கிறார். நிபந்தனையற்ற ரைட்ஸ். படிக்காமல் கையெழுத்துப்போட்டாரா?

2 states நாவல் நான் வேலை செய்யும் அலுவலகத்தில் நான் மேற்குறிப்பிட்டது போன்ற புதிதாகச் சேர்ந்த ஒரு இளைஞர் படிக்கச்சொல்லி எனக்கு கொடுத்தார். நான் அவருக்கு பதிலுக்கு shantaram கொடுத்தேன். Shantaram is a tough read.

சிங்கப்பூரிலிருந்து பாரீஸ் வரும் வழியில் இரண்டே மணிநேரத்தில் இந்த நாவலைப் படித்து முடித்தேன். நாவல் என்று சொல்லுவது சரியாக இருக்காது; சற்றே பெரிய கதை என்று சொல்லலாம். அஸ் யூஸ்வல் இதும் ஒரு feel good, அதென்ன வார்த்தை, ம்ம்ம்ம்…பைங்கிளிக் கதை. ஸீரோ டிகிரியைப் பற்றி நான் எழுதிய விமர்சனத்தைப் படித்து விட்டு கடுங்கோபம் கொண்ட ஒருவர் என்னுடைய நசீர் கதையை பைங்கிளிக்கதை என்றுதான் ஏளனமாகக் குறிப்பிட்டார்! 😦

ஹீரோ பஞ்சாபி. ஹீரோயின் தமிழ் பிராமின். இருவரும் ஐஐஎம்மில் படிக்கின்றனர். இருவரும் காதல் வருகிறது. செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். திருமணம் பற்றி யோசித்து விட்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடுதான் திருமணம் என்று முடிவு செய்கின்றனர். பிறகு ஹீரோ ஹீரோயினின் வீட்டுக்கு சென்று அனைவரையும் தன்பால் ஈர்க்கிறார். ஹீரோயினும் அ·தே செய்கிறார். நடுவில் மேலும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். பிறகு கடைசியில் திருமணம் முடிகிறது.

ஒரு பாலிவுட் மசாலாவுக்குத் தேவையான அனைத்தும் இதில் இருக்கிறது. தமிழில் சூர்யா ஜோதிகா நடித்த படம் ஒன்று இதே போல் ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன் வந்துவிட்டது. என்ன அவர்கள் ஐஐஎம்மில் படிக்கவில்லை. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளவில்லை. அவ்வளவே.

நாவலில் தமிழ்நாடு பற்றியும் தமிழ்நாட்டு மக்களைப் பற்றியும் ஏகத்துக்கும் எழுதியிருக்கிறார் சேட்டன் பகத். இதோ சில:

The first thing I noticed, excuse my shallowness was that almost ninety percent of the people were dark complexioned. Of these ninety percent, eighty percent had dabbed talcum that gave them a grey skin tone. I understood why Fair & Lovely was invented.

Most women at the conveyor belt looked like Ananya’s mother; I couldn’t tell one from the other. They all wore tones of gold,

 First, the sign in every shop was in Tamil. The Tamil font resembles those optical illusion puzzles that give you a headache if you stare at them long enough. Tamil women, all of them, wear flowers in their hair. Tamil men don’t believe in pants and wear lungis even in shopping districts. The city is filled with film posters. The heroes’ pictures make you feel even your uncles can be movie stars. The heroes are fat, balding, have thick moustaches and the heroine next to them is a ravishing beauty. Maybe my mother had a point in saying that Tamil women have a thing for North Indian men.

The driver stopped the auto. He craned his neck out of the auto and folded his hands. ‘What?’ I gestured. ‘Thalaivar,’ he said, pointing to the poster. I looked out. The poster was for a movie called Padayappa. I saw the actors and recognised only one. ‘Rajnikant?’ The auto driver broke into a huge grin.

 Any impressions of Tamil men being timid (influenced by Ananya’s father) evaporated as I felt a driver tap my back

Be careful, your building is vegetarian. No alcohol also.’ ‘Really?’ ‘Yes, people here are like that. For them, anything fun comes with guilt,’ he said as the lift doors shut

The Tamil sense of humour, if there is any, is really an acquired taste.

‘ ‘One tip, never leave before your boss,’ he said and winked at me. He laughed, and I didn’t find it funny at all. I want to see what a Tamil joke book looks like.

Tamilians love to irritate non-Tamil speakers by speaking only in Tamil in front of them. This is the only silent rebellion in their otherwise repressed, docile personality.

பாவம் ஜெயராம் வட நாட்டவராகப் பிறந்திருக்க வேண்டும்.

உலகின் பிரபலமான எரிமலைச் சீற்றங்கள்

ஐஸ்லாந்தின் எரிம‌லையிலிருந்து வ‌ரும் புகை(ப்ப‌ட‌ங்க‌ள்) பார்ப்ப‌த‌ற்கு அழ‌காக‌ இருக்க‌லாம் ஆனால் அத‌னுடைய‌ விளைவுக‌ள் க‌டுமையான‌தாக‌ இருக்கும். ஏற்க‌ன‌வே ப‌ல‌ விமான‌ங்க‌ள் கான்ச‌ல் செய்ய‌ப்ப‌ட்டுவிட்ட‌ன‌. மீண்டும் விமான‌ நிலைய‌ங்க‌ள் எப்பொழுது திற‌க்கும் என்று தெரிய‌வில்லை. திற‌ந்தாலும் ப‌ய‌ண‌ம் செய்ய‌ இய‌லாம‌ல் போன‌ ப‌ய‌ணிகளுக்கு மீண்டும் எப்பொழுது ப‌ய‌ண‌ம் செய்ய‌ சீட் கிடைக்கும் என்ப‌தும் தெரிய‌வில்லை. இது மெதுவாக‌ அர‌சிய‌லாக‌வும் மாறிக்கொண்டிருக்கிற‌து.

பிரிட்ட‌னுக்குத் திரும்ப‌ முடியாம‌ல் த‌விக்கும் த‌ங்க‌ள் ம‌க்க‌ளை அழைத்து வ‌ர ராய‌ல் நேவியைப் பய‌ன்ப‌டுத்த‌ப்போவ‌தாக‌ச் சொல்லியிருக்கிற‌து.(மிக‌ விரைவில் தேர்த‌ல் வ‌ருவ‌தால்!) த‌ற்காலிக‌மாக‌ சில‌ ப‌ணி நீக்க‌ங்கள் செய்ய‌ நேரும் என்று ப்ரிட்டிஷ் ஏர்வே ப‌ய‌முறுத்தியிருக்கிற‌து. ஐஸ்லாந்திலும் புகை சூழ்ந்துள்ள‌ ம‌ற்ற‌ ப‌குதிக‌ளிலும் ஆசிட் ம‌ழையும் குடி த‌ண்ணீர் பாதிக்கும் அபாய‌மும் இருப்ப‌தாக‌வும் தெரிகிற‌து. ஆனால் உல‌கில் இதுவ‌ரை ந‌ட‌ந்த‌ எரிம‌லை வெடிப்புக‌ளைப் பார்க்கும் பொழுது இது ஒன்றும் அவ்வ‌ள‌வு பெரிதாக‌த் தெரிய‌வில்லை. இதுகாரும் உல‌கில் வெடித்த‌ ந‌ம‌க்கு தெரிந்த‌ வ‌ர‌லாறில் எரிம‌லைக‌ளைப் ப‌ற்றிப் பார்ப்போம்.

La Garita Caldera, Colorado

Colorado எரிம‌லை மொத்த‌ம் 1200 க்யூபிக் மைல் லாவாவைக் க‌க்கியிருக்கிற‌து. அந்த‌ வெடிப்பிலிருந்து வ‌ந்த‌ சாம்ப‌ல் இன்னும் ப‌டிந்திருப்ப‌தை ப‌ட‌த்தில் காண‌லாம். இது ந‌ட‌ந்த‌து 28 மில்லிய‌ன் வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னால். உடைந்து போன‌ எரிம‌லை அடிப்ப‌குதி 21 பை 45 மைல்க‌ளாம்.

Tambora, Indonesia

நெருப்பு வ‌ளைய‌ம் என்று இந்தோநேசியாவைச் சொல்லுவார்க‌ள். அந்த‌ அள‌வுக்கு எரிம‌லைகளும் பூக‌ம்ப‌ங்க‌ளும் நிறைந்த‌ பூமி இது. த‌ம்போரா என்கிற‌ சும்பாவா என்னும் தீவிலிருக்கிற‌ எரிம‌லை 1815இல் வெடித்த‌போது அது தான் அதிக‌ப‌ட்ச‌ ம‌ர‌ண‌ங்களையும் இழ‌ப்புக‌ளையும் கொடுத்த‌ எரிம‌லைச் சீற்ற‌மாக‌ இருந்த‌து. காற்றில் கல‌ந்த‌ எரிம‌லைச் சாம்ப‌ல் அமெரிக‌காவையும் ஐரோப்பாவையும் க‌டுமையாக‌ப் பாதித்த‌து. அவ‌ர்க‌ளுக்கு ச‌ம்ம‌ரே வ‌ர‌வில்லை. வெப்ப‌நிலை மிக‌வும் குறைந்து போய் க‌டும் வ‌ர‌ட்சி ப‌ர‌விய‌து. ப‌த்தொன்ப‌தாம் நூற்றாண்டின் க‌டுமையான‌ வ‌ர‌ட்சி இது தான். எரிம‌லைச் சீற்ற‌த்தால் ப‌லியானோர் எண்ணிக்கை 70,000. இது ப‌க்க‌விளைவுக‌ளில் உயிர் இழ‌ந்தோரின் எண்ணிக்கையைச் சேர்க்காத‌து.

Krakatau, Indonesia

1883இல் ஜாவா மற்றும் சுமாத்ராவுக்கு இடையே இருக்கும் Krakatoa வில் எரிமலை வெடித்தது. எரிமலையின் சீற்றம் மூவாயிரம் மயில்களுக்கு அப்பால் இருக்கும் மொரீசியஸில் வசிக்கும் மக்களுக்குக் கேட்கும் அளவுக்கும் படு பயங்கரமாக இருந்ததாம்.200 மெகாடன் டிஎன்டி சக்தி கொண்டது இந்த வெடிப்பு.ஓகே எல்லாரும் செய்யும் ஒப்பிடலையே நானும் செய்கிறேன்.ஹீரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டு போல 13,000 மடங்கு சக்திவாய்ந்தது.ஐரோப்பா முழுவதும் சிவப்பு நிற சாம்பலை இது அள்ளித்தெளித்தது. இதுவே எட்வார்ட் மன்ச் வரைந்த The Scream என்னும் ஓவியத்துக்கு காரணமாக இருந்தது.

Katmai, Alaska

1912இல் Katmaiஇல் இருக்கும் Novarupta என்கிற எரிமலை அறுபதி மணிநேரத்துக்கும் மேலாக புகை கக்கியது. 40 சதுர மைல்கள் சாம்பலை இது கக்கித்தீர்த்தது.இது தான் நமக்கு தெரிந்த வரலாற்றில் மிகவும் சக்திவாய்ந்த எரிமலையாகும். செயின் ஹெலனின் சீற்றத்தை விட நாற்பது மடங்கு சக்திவாய்ந்தது. ஆனால் யாரும் வாழாத பகுதியில் இந்த எரிமலை இருப்பதால் உயிரிழப்பு ஏதுமில்லை. எரிமலை வெடிப்புக்குப் பின் எரிமலையைச் சூழ்ந்த பகுதியை பூங்காவாக மாற்றினர். 1915இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எஞ்சியிருக்கும் பாதிப்பைக் காட்டுகிறது.

Pinatubo, Philippines

இருபதாம் நூற்றாண்டில் காட்மாய்க்கு அப்புறம் இரண்டாம் இடத்திலிருக்கும் மிகுந்த சக்திவாய்ந்த எரிமலை சீற்றம் இதுதான்.ஆனால் உயிரிழப்பு மிக அதிகம். 1991இல் ·பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்கரையோரம் இருக்கிற Luzon என்கிற தீவின் Mount Pinatubo என்கிற எரிமலை வெடித்தபொழுது ஏற்பட்ட உயிரிழப்பு மொத்தம் 800. எரிமலை வெடித்த பொழுது மிகச்சரியாக அதே நேரத்தில் புயல் ஒன்று தாக்கியது. விளைவு: சாம்பல் மற்றும் லாவா தீவு முழுவதும் மழையெனப் பொழிந்து நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றது. இயற்கையின் சக்தி வினோதமானது.

Kilauea, Hawaii

ஹவாய் தீவு ஒன்றோடு ஒன்று தொடர்புடைய எரிமலைகளால் ஆனது. ஆனால் அவையெல்லாம் தூங்கியபடிதான் இருந்தன. ஆனால் 1983இல் Kilauea குமுற ஆரம்பித்தது. இன்று வரை நிறுத்தவில்லை. இதனால் பூமியின் மிகவும் சுறுசுறுப்பான எரிமலை என்று பெயரெடுத்திருக்கிறது இந்த எரிமலை. Kilauea என்றாலே துப்புவது அல்லது பரப்புவது என்று அர்த்தமாம். எரிமலையிலிருந்து புறப்படும் குழம்பு பசிபிக் பெருங்கடலில் சென்று இணைகிறது. இது மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக மாறிவிட்டதாம். சூரிய அஸ்தமனத்தின் பொழுது எரிமலைக் குமுறலைப்பார்க்க மக்கள் கூடிவிடுவார்களாம்.

Mount St. Helens, Washington

அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான இந்த எரிமலைச்சீற்றம் அதன் மூதாதயர்களை விட சிறியதாக இருந்தாலும் இது மூன்று பில்லியன் இழப்பை ஏற்படுத்தி 57 பேரைக்கொல்லவும் செய்தது. நூறு வருடங்களாகத் தூங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை 1980இல் சீற்றம் கொண்டது. இதன் புகை 80,000 அடிக்கு உயர்ந்தது.

Eyjafjallajokull, Iceland

Eyjafjallajokull எரிமலையிலிருந்து வெளியேறிய புகையும் சாம்பலும் மிக உயரத்தில் எழும்பி தெற்கு பக்கமாகத் திரும்பி இங்கிலாந்தின் பகுதிகளிலும் ஐரோப்பாவின் பகுதிகளிலும் சென்று தேங்கியது. இதனால் கண்டம் முழுவதும் விமானப்போக்குவரத்து பாதித்தது.

மேலும் சில எரிமலைச் சீற்றங்கள்:
Mt. Pelee Martinique 1902,
Ruiz Columbia 1985,
Unzen Japan 1792,
Laki Iceland 1783,
Kelut Indonesia 1919,
Galunggung Indonesia 1882,
Vesuvias Italy in 1631 & 79 CE.
Yellow stone

Thanks: Newsweek.

செவ்வாய் கிர‌க‌த்தில் ம‌ண்ச‌ரிவு

HiRIS கொடுத்துள்ள‌ செவ்வாய் கிர‌க‌த்தின் இந்த‌ ப‌ட‌த்தில் மூன்று ம‌ண் ச‌ரிவுக‌ள் தெரிகின்றன‌. அட்ட‌காச‌மான‌ ப‌ட‌ம்.

இட‌துப‌க்க‌ம் உறைந்து போன‌ கார்ம‌ன் டை ஆக்சைடு த‌ரையை மூடியிருப்ப‌தைக் காண்கிறோம். சிவ‌ப்புக் நிற‌த்தில் செங்க‌ல் செங்க‌லாக‌த் தெரிவ‌து ஒரு உய‌ர‌மான‌ ம‌லையின் செங்குத்தான‌ ஒரு ப‌குதி. நாமும் கீழ்நோக்கி செங்குத்தாக‌ப் பார்ப்ப‌தால் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் ம‌க‌வும் குறைவாக‌த் தெரிகிற‌து. ஏமாந்துவிடாதீர்க‌ள் உண்மையில் இந்த‌ ம‌லையின் உய‌ர‌ம் 700 மீட்ட‌ர். வ‌ல‌து ப‌க்க‌த்தில் சாம்ப‌ல் நிற‌த்தில் த‌ரை தெரிகிற‌து. அவை ப‌சால்டிக் பாறையின் ம‌ண் துக‌ள்க‌ள். இந்த‌ப் ப‌ட‌த்த‌, செவ்வாய் என்று சொல்லாம‌ல், யாரிட‌மாவ‌து காட்டினால் (முக்கிய‌மாக‌ பூமியின் வ‌ட‌க்கு ப‌குதியில் வாழ்ப‌வ‌ர்க‌ளிட‌ம்; அவ‌ர்க‌ள் தானே ப‌னிப்பொழிவுக‌ளையும் ப‌னிக்க‌ட்டிக‌ளையும் ச‌ர்வ‌சாதார‌ண‌மாக‌ப் பார்ப்ப‌வ‌ர்க‌ள்; நாம் அபிராமி மாலுக்குத்தான் போக‌ணும்) இது பூமி என்றே தான் சொல்லுவார்க‌ள்!

மேலும் அப்பொழுதுதான் நிக‌ழ்ந்துவிட்டிருக்கிற‌ ம‌ண் ச‌ரிவினால் ஏற்ப‌ட்ட‌ புகை மூட்ட‌த்தையும் நாம் காண‌லாம். புகை மூட்ட‌த்தின் நிழ‌லும் தெரிகிற‌து. நிழ‌லின் மூல‌ம் சூரிய‌னின் கோண‌த்தையும் அறிந்துகொள்ள‌லாம். இத‌ன் மூல‌ம் புகையின் உய‌ர‌த்தைக் க‌ண‌க்கிட‌லாம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் வ‌ட‌க்குப் ப‌குதியில் இது நிக‌ழ்ந்திருக்கிற‌து. த‌ற்போது செவ்வாயின் இந்த‌ப் ப‌குதியில் வ‌ச‌ந்த‌கால‌ம். கெட்டியாகிவிட்ட‌ ம‌ண‌ல் பாறைக‌ளின் இடையே குளிர் கால‌த்தில் புகுந்து உறைந்து போன‌ கார்ப‌ன் டை ஆக்சைடு வ‌ச‌ந்த‌ கால‌த்தில் சூரிய‌ வெப்ப‌த்தால் உருகிவிடுகிற‌து. இத‌னால் ம‌ண் பாறைக‌ள் கீழே விழும்பொழுது இது போன்ற‌ ச‌ரிவுக‌ள் நிக‌ழ்கின்ற‌ன‌வாம்.இந்த‌ வ‌ருட‌த்தில் மேலும் சில‌ ப‌ககுதிக‌ளில் இது போன்ற‌ ம‌ண் ச‌ரிவுக‌ள் நிக‌ழ்ந்திருப்ப‌தைக் க‌ண்டுபிடித்திருக்கின்ற‌ன‌ர்.அற்புத‌ம்.

செவ்வாய் கிர‌க‌த்தின் ம‌ற்ற‌ எந்த‌ப் ப‌ட‌த்தினிலும் இல்லாத‌ ஒரு விச‌ய‌ம் இந்த‌ப் ப‌ட‌த்தை சிற‌ப்பான‌தாக்குகிற‌து. உறைந்த‌ கார்ப‌ன் டை ஆக்சைடு ப‌டிந்த‌ த‌ரை, மலையின் செங்குத்தான‌ ப‌குதி; மீண்டும் ம‌ண‌ல் நிறைந்த‌ பாறைக‌ள் ம‌ண் ச‌ரிந்து விழுந்த‌தால் ஏற்ப‌ட்ட‌ புகை; இவைய‌னைத்தும் ஒரு சேர‌ மிக‌வும் தெளிவாக‌ இருக்கிற‌து.

ம்ம் செவ்வாயில் நிறைய‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ட‌க்கின்ற‌ன‌!

PS: இவ்வ‌ள‌வு ப‌னிக்க‌ட்டி இருந்தா செவ்வாய்(க்கு ஜ‌ல‌)தோஷ‌ம் ஏன் பிடிக்காது? இத‌த்தான் ந‌ம்மாளுக‌ சாட்டிலைட் உத‌வி இல்லாம‌லே அந்த‌க் கால‌த்திலே சொல்லிருக்காங்க‌ப்பா!

இந்தியா வானாராய்ச்சித் திட்ட‌ம் 2025

(என்னால் முடிந்த‌ வ‌ரைக்கும் Space Mission ஐ த‌மிழ் ப‌டுத்தியிருக்கிறேன். வேறு ந‌ல்ல‌ சொல் பிர‌வாக‌ம் இருந்தால் சொல்ல‌வும்.)

இஸ்ரோ (ISRO) த‌ள‌த்துக்கு அடிக்கடி செல்லாவிடினும் எப்ப‌வாவ‌து போவ‌து வாய்க்கும். இந்த‌ முறை சென்ற‌ ‌ பொழுது (ப‌ராக் ஒபாமாவின் திட்ட‌ங்க‌ளைப் பார்த்த‌பின்!) த‌ள‌ம் முற்றிலுமாக‌ மாற்றிய‌மைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. மேலும் இந்தியாவின் அடுத்த‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளின் வானாராய்ச்சித் திட்ட‌மும் இருந்த‌து. மேலோட்ட‌மான‌ பார்வை.

1. கிராம‌ப்புற‌ங்க‌ளை இணைக்க‌வும், பாதுகாப்பைப் ப‌ல‌ப்ப‌டுத்த‌வும், அலைபேசிக‌ளின் ப‌ய‌ன் திற‌னை அதிக‌ரிக்க‌வும் சாட்டிலைட்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து.

2. த‌ட்ப‌வெட்ப‌ நிலைக‌ளை ஆராய்வ‌த‌ற்கு ஏதுவாக‌ மிக‌ நுண்ணிய‌ ப‌ட‌ங்க‌ளை எடுப்ப‌த‌ற்கான‌ தேவைக‌ளை நிறைவேற்றுவ‌து.

3.சூர்ய‌ ம‌ண்ட‌ல‌த்தையும் பிர‌ப‌ஞ்ச‌த்தையும் மேலும் புரிந்துகொள்ள‌ இன்னும் புதிய‌ வ‌ழிமுறைக‌ள் க‌ண்டுபிடிப்ப‌து.

4. கோல்க‌ளை ஆராய்வ‌து.

5. அதிக‌ ப‌லுவைத் தூக்க‌க்கூடிய‌ ராக்கெட் செலுத்திக‌ளை வ‌டிவ‌மைப்ப‌து. (அமெரிக்காவும் இதே போன்ற‌தொரு மிஷ‌ன் வைத்திருக்கிற‌து! ஆனால் அவ‌ர்க‌ள் சொல்லும் அதிக‌ ப‌லு வேறு ந‌ம‌து அதிக‌ ப‌லு வேறு)

6. மீண்டும் மீண்டும் பய‌ன்ப‌டுத்த‌க்கூடிய‌ ராக்கெட் செலுத்திக‌ளை வ‌டிவ‌மைப்ப‌து.

க‌டைசியாக‌

7. ம‌னித‌னை விண்வெளிக்கு அனுப்புவ‌து!

விக‌ர‌ம் ச‌ர‌பாய் ISRo வை நிறுவும் பொழுது அவ‌ர‌து நோக்க‌ங்க‌ள் மிக‌வும் தெளிவாக‌ இருந்த‌ன‌. ந‌ம் வானாராய்ச்சியின் நோக்க‌ம் வ‌ள‌ர்ச்சிய‌டைந்த‌ நாடுக‌ளுட‌ன் போட்டிபோட்டுக்கொண்டு நில‌வுக்கோ அல்ல‌து ம‌ற்ற‌ கிர‌க‌ங்க‌ளுக்கோ ம‌னித‌னை அனுப்புவ‌து அல்ல‌. ந‌ம‌து வானாராய்ச்சியின் மூல‌ம் ச‌ராச‌ரி ம‌னித‌னுக்கும் ப‌ய‌ன் இருக்க‌வேண்டும். ந‌ம்மைப் போன்ற‌ வ‌ள‌ர்ந்து வ‌ரும் நாடுக‌ளின் ம‌க்க‌ள் வ‌ரிப்ப‌ண‌ம் மிக‌வும் ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்க‌வேண்டும் என்ப‌தே.

ஐம்ப‌து ஆண்டுக‌ள் ஆச்சு. அவ‌ர‌து நோக்க‌ம் கிட்ட‌த்த‌ட்ட‌ நிறைவேறியும் விட்ட‌து. க‌ட‌ந்த‌ ப‌த்து வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ம‌து GDP யும் வ‌ள‌ர்ந்து வ‌ருகிற‌து. ச‌ம்பா சாகுப‌டியிலிருந்து பேர‌ழிவுக‌ளைக் க‌ண்ட‌றிவ‌து வ‌ரை நாம் முன்னேறிவிட்டோம். அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு முன்னேறுவ‌து மிக‌ அவ‌சிய‌ம்.

அடுத்த‌ ப‌தினைந்து ஆண்டுக‌ளில் ம‌னித‌னை விண்வெளிக்கு அனுப்பும் தொழில்நுட்ப‌மும் (நில‌வுக்கோ அல்ல‌து செவ்வாய்க்கோ!) திற‌னும் நாம் பெற்றிருக்க‌வேண்டும். அப்பொழுதுதான் நாம் ப‌தினைந்து ஆண்டுக‌ள் கழித்து வ‌ள‌ர்ச்சிய‌டைந்து விட்ட‌ நாடுக‌ளில் ஒன்றாக‌ இருக்க‌முடியும். இன்னும் வானாராய்ச்சியில் எத்த‌னையோ ப‌டிக‌ட்டுக‌ள் ஏற‌ வேண்டியிருக்கிற‌து.

ந‌ம் கால‌த்துக்குள் வேறொரு ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌த்துக்கு ந‌ம் (ந‌ம்!) விண்க‌ள‌ங்க‌ள் போவ‌தைப் பார்க்க‌வேண்டாமா?

எரிமலை புகை விமானங்களுக்கு ஏன் மிகவும் அபாயகரமானது?

ஐஸ்லாந்தில் இருக்கும் Eyjafjallajoekull எரிமலை கக்கும் புகையால் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இருக்கும் ஏனைய விமானநிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. சென்ற வியாழக்கிழமையிலிருந்து ஐரோப்பா முழுவதும் கிட்டத்தட்ட 64000 விமானங்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மில்லியன் கணக்கில் பயணிகள் ஏதும் செய்ய இயழாமல் தவிக்கின்றனர். பயணிகளுக்காக வருத்தப்படும் இந்நேரத்தில், விமானங்கள் தடை செய்யப்பட்டது சரியானதே என்று தோன்றுகிறது; ஏனென்றால் எரிமலைப் புகை விமானிகளின் பார்வைத்திரனைப் பாதிப்பதோடு மட்டுமில்லாமல் இன்னும் பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

எரிமலைப்புகை பார்ப்பதற்கு சாதாரண மேகம் போலவே இருப்பதுதான் மிக முக்கியமான பிரச்சனை.கண் பார்வைக்கு மட்டுமில்லை ராடார் பார்வைக்கும் அப்படித்தான் தெரியும்.கண்ணுக்கு எரிமலையின் சாம்பல் தெரியாமல் போனாலும் அவற்றுள் மறைந்திருக்கும் ரசாயனங்கள் விமானத்திற்கு பாதகம் ஏற்படுத்தும்.

விமானத்தின் ஜெட் இஞ்சின் வழியாக உள்ளே புகும் காற்றில் எரிமலைப்புகை இருந்தால் அது எஞ்சினை பழுதடையச்செய்யும். எரிமலை புகையில் இருக்கும் சாம்பலில் பவுடர் போலவும் சின்னச்சின்ன மணல் துகள் போலவும் இக்ஜீசியஸ் பாறைகள் கலந்திருக்கின்றன. விமானத்தின் ஜெட் இஞ்சினின் உள் இருக்கும் வெப்பநிலை 1832 ·பாரன்ஹீட் டிகிரீஸ். இந்த வெப்பநிலையில் அந்த இக்னீசியஸ் பாறைகள் சட்டென உருகிவிடும்.

டர்பைன் வேன்ஸ் (turbine vanes) என்கிற பாகம் தான் விமானத்தை செலுத்தும் ப்ரப்பலருக்குச் செல்லும் காற்று விகிதத்தை கட்டுப்படுத்துகிறது. இந்த டர்பைன் வேன்ஸில் உருகிய இக்னீசியஸ் பாறைகள் ஒட்டிக்கொண்டு இன்ஜினை சுத்தமாக நிறுத்திவிடும்.

குறைந்த அளவில் இந்த எரிமலைப் புகை விமானத்தின் மின் சக்தியை பாதித்து விமான கட்டுப்பாட்டுத் தளத்தை பாதித்துவிடும் அபாயம் இருக்கிறது. எரிமலைப்புகை மேகத்தை சாதாரண மேகம் தான் என்று நினைத்து உள்ளே சென்றுவிட்ட பிறகு பார்வை கடுமையாகப் பாதிப்படைந்து விமானிகள் விமானத்தின் வழித்தடத்தை சரியாக கணிக்க இயலாமலும் போய்விடும்.

சில சம்பவங்கள்:
1. 1980இல் 727 மற்றும் DC-8 விமானங்கள் தனித்தனியாக வாஷிங்டனில் இருக்கும் செயின் ஹெலன் எரிமலையிலிருந்து வந்த புகையில் மாட்டிக்கொண்டன. விமானத்தின் முன் கண்ணாடி உடைந்து போனது. இரண்டு விமானங்களும் பாதுகாப்பாகத் தரையிறங்கின.

2.1982 இல் இந்தோனேசியாவில் இருக்கும் Galunggung என்கிற எரிமலைப்புகையில் பல 747கள் சிக்கிக்கொண்டன. கோலாலம்பூரிலிருந்து ஆஸ்திரேலியா சென்றுகொண்டிருந்த ஒரு விமானத்தில் நான்கு என்ஜின்கள் செயலிழந்து விட்டன. 36000 அடியிலிருந்து 12500 அடிவரை திடுமென கீழிறங்கிய அந்த விமானத்தின் இன்ஜின் பிறகு முழித்துக்கொண்டது. என்ஜின் பழுதடைந்தாலும் பாதுகாப்பாகத் தரையிறங்கியது அந்த விமானம்.

3.1989இல் புத்தம்புதிய 747-400 Anchorageஇல் இருக்கும் Mt.Redoubtஇன் புகையில் சிக்கிக்கொண்டது. புகை என்ஜினுக்குள் சென்றவுடன் புகையாக மாறினாலும் விமானம் பாதுகாப்பாக Anchorageஇல் தரையிறங்கியது.

இதுபோன்ற சம்பவங்களால் பாதுகாப்பாக விமானங்களை தடைசெய்வது சரியான முடிவாகத்தோன்றுகிறது. எனினும் இன்று ஜெர்மனியின் லுப்தான்சாவும், டச்சின் KLM, ப்ரான்சின் ஏர் ப்ரான்ஸ் மற்றும் ப்ரிட்டிஷ் ஏர்வேஸ் சோதனை விமானங்களை அனுப்பியது. ஏதும் பிரச்சனை ஏற்படவில்லை. விமானங்கள் பறக்கத்தயாராக இருக்கின்றன.

போனவருடம் recessionஇல் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்தே இன்னும் பல விமான கம்பெனிகள் மீண்டு வராத நிலையில் இப்பொழுது இந்த எரிமலை குழப்பக்கங்கள் அவர்களுக்கு மேலும் பெரிய இழப்பை ஏற்படுத்தும். ஒரு நாளுக்கு 200 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணித்திருக்கின்றனர்.

தற்பொழுது எரிமலைப்புகை வடகிழக்காக திரும்பியிருப்பதால் நாளை மதியம் ஐரோப்பாவில் சில விமானநிலையங்கள் திறக்கப்படலாம் என்று நம்புகின்றனர். நாளை மதியம் Eurocontrol ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்திருக்கிறது. அதற்கப்புறமே முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Boston.com வெளியிட்டிருக்கும் அற்புதமான படங்கள் இங்கே இருக்கின்றன.

Thanks:MSNBC

என‌க்கு பிடித்த‌ சில‌ சினிமா காட்சிக‌ள்-3

Se7en படத்தில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான காட்சி இது. க்ளைமேக்ஸ். ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தமான மூன்று நடிகர்கள் இருக்கும் காட்சி இது. கெவின் ஸ்பேஸி, மார்கன் ·ப்ரீமேன் மற்றும் ப்ராட் பிட்.

எனக்குத் தெரிந்து அந்நியனுக்கான இன்ஷ்பிரேஷன் ஷங்கருக்கு இந்தப்படத்திலிருந்து தான் கிடைத்திருக்க வேண்டும். அந்நியனின் ஒரு பகுதி மட்டும். அந்நியன் கொலைகள் செய்வதற்கான காரணமும் அவன் கொலை செய்யும் முறையும் இந்தப்படத்தில் அப்படியே இருக்கின்றன. செவன் கிறிஸ்தவ மத நம்பிக்கையைச் சார்ந்தது. அந்நியன் இந்து மத நம்பிக்கையைச் சார்ந்தது. நான் அப்பவே சொன்னேன் அந்நியனின் ஒரு பகுதி மட்டும்தான் என்று. அந்நியனின் மீதமிருக்கும் பகுதி: மல்டிபில் பர்சனாலிட்டி. ஷிட்னி ஷெல்டன் எழுதிய டெல் மி யுவர் ட்ரீம் நாவல் படித்துப்பாருங்கள். அந்நியன் போதும். காக்க காக்கவுக்கும் இந்தப்படத்துக்கும் ஒரு முக்கியமான சம்பந்தம் உண்டு. படம் பாருங்கள் தெரியும். ப்ராட் பிட்டுக்கு மிக முக்கியமானதொரு படம் இது.

இந்தப்படத்தில் நிறைய காட்சிகள் மிக நன்றாக இருக்கும். அதில் எனக்குப் பிடித்த எனக்குக் கிடைத்த காட்சிகள் சில:

Title:

மார்கன் ·ப்ரீமேன் ப்ராட் பிட்டின் வீட்டுக்கு டின்னர் சாப்பிட வருவார். அப்பொழுது ப்ராட்பிட்டின் வீட்டுக்குப் பக்கத்தில் மெட்ரோ ரயில் பாதை இருக்கும். ஒவ்வொரு முறை ரயில் போகும் போதும் ப்ராட் பிட்டின் வீடு ஆடும். டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது ரயில் போக டின்னர் டேபிள் ஆட மார்கன் ·ப்ரீமேன் ஒரு கமென்ட் அடிப்பார்: “a nice soothing house..” என்று சொல்லிவிட்டு அவ்வளவு அழகாகச் சிரிப்பார். Thats what I call acting! அருமையான படம்.

ஜோதிடம் ஒரு மிகப்பெரிய பொய்!

எனக்கு ஜோதிடத்தின் மீது என்றைக்குமே நம்பிக்கை இருந்ததில்லை. நியூஸ்பேப்பரில் வரும் ராசிபலன்களை விளையாட்டுக்கு மட்டுமே படித்திருக்கிறேன். நியூஸ்பேப்பரிலோ பத்திரிக்கைகளிலோ வரும் ராசிபலன் மற்றும் வருடபலன் கணிப்புகளைப் போன்ற அபத்தம் ஏதுமில்லை.

ஏன் இப்பொழுது இதைப்பற்றி எழுதவேண்டும் என்கிற கேள்வி எழுகின்றதானால், நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்ததுதான் இப்பொழுதுதான் நேரம் கிடைத்திருக்கிறது.(மீண்டும் படியுங்கள்: நேரம் வரவில்லை; நேரம் கிடைத்தது:) ). ஆண்டு தொடங்கியவுடன் வருட பலன்களையும் ஜாதகங்களையும் தோஷ நிவர்த்திகளையும் தேடி ஓடுபவர்களைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

ஜோதிடம் பொய். சுத்தப் பொய். உங்களிடம் யாராவது ஜோதிடம் பற்றிச் சொல்கிறார்கள் என்றால் உங்களிடம் ஏதோ ஒன்றை விற்க முயற்சிக்கிறார்கள் என்று தான் அர்த்தம். உங்களை ஏமாற்றுகிறார்கள்.

ஏன் பொய்? விளக்கமாகச் சொல்கிறேன்.

ஜோதிடம் என்பது என்ன?

ஜோதிடத்தில் நிறைய வகைகள் இருக்கின்றன. கிரகநிலை ஜோதிடம்.ஜென்ம ராசி சக்கரத்தில் சந்திரனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள். சிலர் சூரியனின் நிலையைக்கொண்டு கணிக்கிறார்கள்.சிலர் ஜோதிடம் கணிப்பதற்கு பிறந்த நேரம் மிக முக்கியம் என்கிறார்கள். சிலர் பிறந்த மாதம் முக்கியம் என்கிறார்கள்.இன்னும் பலப் பல வகை.இவர்கள் வைத்திருக்கும் வகைகள் வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை மொத்தமாக மிஞ்சிவிடும் போல இருக்கிறது. மொத்தத்தில் ஜோதிடம் கணிக்கும் எல்லாரும் ஒரே ஒரு அனுமானத்தில் தான் வேலை செய்கிறார்கள், அது: அண்டத்திலிருந்து ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம் எல்லோரையும் ஆட்டிப்படைக்கிறது என்பது தான்.

இந்த சக்திக்கு பலர் பல அறிவியல் விளக்கங்கள் அளிக்கிறார்கள்.புவி ஈர்ப்பு சக்தி என்கிறார்கள். மின்காந்த சக்தி என்கிறார்கள். இன்னும் சிலர் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்றும் அதை அளக்க முடியாது என்றும் விவரிக்க முடியாது என்றும் சொல்கிறார்கள். ஆனால் கடைசியில் பார்த்தீர்களேயானால் இந்த சக்திகள் எல்லாம் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் அவை நம் மீது செலுத்தும் சக்தியையுமே குறிக்கின்றன.

கிரகங்களின் சக்தி என்று ஒன்று இருப்பது உண்மையானால் அதை அளக்க முடியும்.தனிமனிதன் மீதிருக்கும் அதன் சக்தியை அளக்கமுடியவில்லை என்றாலும் ஒரு கும்பல்(!) மீதிருக்கும் சக்தியையாவது அளக்கமுடியவேண்டும் இல்லையா? இன்றிலிருந்து சரியாக இன்னும் பத்துவருடங்களுக்குப் பிறகு வெப்பநிலை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாகச் சொல்லமுடியாது ஆனால் வெயிலடிக்கும் என்று தோராயமாகச் சொல்லமுடியும். ஆனால் இதையும் ஸ்டாட்டிஸ்டிக்ஸைப் பயன்படுத்தி சோதிக்கமுடியும். இந்த கணிப்பைக்கூடச் சரிபார்க்கமுடியும் இல்லியா?

முதலில் ஜோதிடர்கள் சொல்வது போல கிரகங்களும் நட்சத்திரங்களும் நம்மைப் பாதிக்குமா என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு அவர்கள் சொல்வது போல எந்த சக்தியும் இல்லை இருக்கவும் முடியாது என்பதைப் பற்றிப்பார்ப்போம். பிறகு ஜோதிடர்கள் அந்த சக்தியை அளக்கமுடியும் என்று சொல்வது உண்மைதானா என்று பார்ப்போம்(ஒரு க்ளு தருகிறேன்: அவர்கள் சொல்வது பொய்!) அப்புறம் ஜோதிடம் எப்படி மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் தடுக்கிறது என்பதையும் பார்க்கலாம்.

கொஞ்ச நேரத்துக்கு சும்மானாச்சுக்கும் கிரகங்களின் ஏதோ ஒரு சக்தி பூமியில் இருக்கும் நம்மைப் பாதிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அந்த சக்தி என்னவாக இருக்கமுடியும்?

மூளையைத் திறந்து வைத்துக்கொண்டு யோசிப்போம். நமக்கு இருக்கும் சாய்ஸ் ரொம்பவும் கம்மி.

கிரகங்கள் பனிக்கட்டிகள், பாறைகள், உலோகங்களால் மற்றும் இன்னபிறவற்றால் ஆனவை. அவை நம்மைப் பாதிக்கக்கூடிய சாத்தியம் மிகமிகமிகமிக குறைவு ஏனென்றால் அவை பூமியிலிருந்து தொலைதூரத்தில் இருக்கின்றன. அடிப்படை இயற்பியல்.

தெளிவாகச் சொல்லவேண்டும் என்றால் அடிப்படையில் மொத்தம் நான்கு சக்திகளே இருக்கின்றன. அவை புவி ஈர்ப்பு சக்தி, மின் காந்த சக்தி, பிறகு கடின சக்தி (strong force) மற்றும் சன்ன சக்தி(week force). இதில் கடைசி இரண்டு சக்திகள் அணு அளவில் மட்டுமே வேலைசெய்யும். அதுவும் இந்த கடினசக்தி என்பது தூரத்தைப்பொருத்து மாறுபடும். கொஞ்ச பில்லியன் மீட்டர்கள் வந்துவிட்டீர்கள் என்றால் இந்த சக்தி காணாமலே போய்விடும்.

நமக்கும் கிரகங்களுக்குமிடையேயான தூரம் பில்லியன் மீட்டர்ஸைத் அசாத்தியமாகத் தாண்டுவதால் கடைசி இரண்டு சக்திகளும் இங்கு செல்லாது செல்லாது.

எனவே நமக்கு இப்பொழுது புவி ஈர்ப்பு சக்தியும் மின்காந்த சக்தியும் மட்டுமே இருக்கின்றன.

புவி ஈர்ப்பு சக்தி மிகப்பெரிய அளவில் (சூரிய மண்டலம்) எப்படி வேலை செய்கிறது என்பது நமக்குத் தெரியும்.அடிப்படையில் புவி ஈர்ப்பு சக்தி இரண்டு விசயங்களைச் சார்ந்தது. ஒரு பொருளின் எடை மற்றும் அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பது.பொருளின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதன் புவி ஈர்ப்பு விசை அதிகமாகும். அதேபோல நீங்கள் அந்த பொருளுக்கு பக்கத்தில் போகப் போக அதன் புவி ஈர்ப்பு விசை அதிகரிக்கும்.

சரி தான் ஆனால் இதை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் எண்களை உபயோகிப்போம்.ஜூப்பிடர் சந்திரனை விட 25,000 மடங்கு எடை அதிகம் கொண்டது. உண்மையில் இது ரொம்ப அதிகம். ஆனால் அதே சமையத்தில் ஜூப்பிடர் சந்திரனை விட 1500 மடங்கு அதிக தூரத்தில் இருக்கிறது. இப்பொழுது புவிஈர்ப்பு விசை யாருக்கு அதிகம் இருக்கும்? சந்திரனுக்குத் தான்; தூரம் அதிகமாக அதிகமாக புவி ஈர்ப்பு விசை மிகவும் குறைந்து விடும்.

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனையில் கிரகங்களின் புவி ஈர்ப்பு சக்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது சந்திரனுடன் ஒப்பிடப்பட்டது. சந்திரனின் சக்தி ஒன்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மற்ற கிரகங்களின் சக்தி எவ்வளவு இருக்கும் என்பதை தெளிவாக விளக்குகிறது கீழிருக்கும் அட்டவணை.

Planet Mass
(10^22 kg)
Distance
Gravity
(Moon=1)
Tides
(Moon=1)
Mercury 33 92 0.00008 0.0000003
Venus 490 42 0.006 0.00005
Mars 64 80 0.0002 0.000001
Jupiter 200,000 630 0.01 0.000006
Saturn 57,000 1280 0.0007 0.0000002
Uranus 8,700 2720 0.00002 0.000000003
Neptune 10,000 4354 0.00001 0.000000001
Pluto ~1 5764 0.0000000006 0.00000000000004
Moon 7.4 0.384 1.0 1.0

(Thanks: Phil Plait)

பார்த்தீர்களா? கிரகங்கள் நம்மீது செலுத்தும் புவி ஈர்ப்பு சக்தி மிக மிக குறைவு. புவி ஈர்ப்பு விசை தான் ஜோதிடர்களின் கணிப்புக்கு உதவியாக இருக்கிறது என்றால் சந்திரன் தானே எல்லா கிரகக்களை விடவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும்? இல்லையே!

இதையே பிடித்துக்கொண்டு சந்திரனுக்குத்தன் சக்தி இருக்கிறதே; அதை வைத்தும் நாங்கள் ஜோதிடம் கணிப்போம் என்று சொல்லாதீர்கள். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவனை ஒப்பிட்டுப்பார்ப்பதற்குத்தான். உண்மையில் சந்திரனின் சக்தியும் மிகவும் குறைவுதான்.

எனவே புவி ஈர்ப்பு விசை இல்லை. மின் காந்த சக்தியாக இருக்குமோ?ஒருவேளை அப்படி இருக்குமோ?

புவி ஈர்ப்பு விசை எடையையும் தூரத்தையும் பொருத்தது என்றால் மின் காந்த சக்தி மின் சக்தியையும் தூரத்தையும் பொருத்து மாறுபடும். பிரச்சனை என்னவென்றால் இந்த மிகப்பெரிய பொருள்களான கிரகங்களுக்கு மின் சக்தியே இல்லை என்பது தான்.மின் சக்தி எல்க்ட்ரான்களிடமிருந்தும் ப்ரோட்டான்களிடமிருந்தும் வருகிறது. எதிர் சக்திகள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும்; எனவெ ஒன்று இல்லாமல் இன்னொன்றைப் பார்ப்பது என்பது முடியாத காரியம். எனவே கிரகங்கள் நியூட்ரல் சார்ஜ் கொண்டவை. அவைக்கு மின்சக்தியே கிடையாது.

சிற்சில காரணங்களால் சில கிரகங்களுக்கு காந்த சக்தி இருப்பதுண்டு. ஆனால் மீண்டும் இதுவும் தூரத்தைப் பொருத்து மாறும்.ஜூப்பிடரின் காந்த சக்தி மிக அதிகம். ஆனால் அது பூமியிலிருந்து மிகவும் தூரமாக இருக்கிறது. எனவே நம்மீது எந்தவித பாதிப்பையும் அதனால் உண்டுபண்ண முடியாது.மேலும் சூரிய குடும்பத்தில் சூரியனுக்குத்தான் அதிக காந்த சக்தி இருக்கிறது. சூரியனின் மேற்பரப்பில் ஏற்படும் வெடிப்புகளால் மின் சக்தி கொண்ட அணுக்கள் மிக அதிகமாக வெளிப்படும் பொழுது அவை பூமியின் காந்த சக்தியை பாதிக்கக்கூடும்.1989இல் இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

எப்படிப்பார்த்தாலும் மற்ற கிரகங்களின் காந்த சக்தி சூரியனின் காந்த சக்தியோடு ஒப்பிடும் பொழுது மிக மிகக் குறைவு. சூரியனுக்கல்லவா முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் ஜோதிடத்தில் சூரியனை விட மற்ற கிரகங்களுக்கு தானே முக்கியத்துவம் அதிகம் இருக்கிறது?

மிஸ்டர் சூரியனார் இதில் ஏதோ சதி இருக்கிறது!

நமக்கு கொஞ்சமாவது பக்கத்தில் இருக்கும் கிரகங்களே நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பொழுது பல லட்சம் ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்? சுத்தம். ஒளியாண்டு என்பது ஒளி ஒரு ஆண்டில் கடக்கும் தூரம். அடிப்படை இயற்பியலின் படி ஒளியின் வேகத்தை எந்தப்பொருளாலும் எட்ட முடியாது. ஒளி ஒரு ஆண்டுக்குக் கடக்கும் தூரம் எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை பத்து ட்ரில்லியன் கிலோமீட்டருக்கு சற்றே குறைவு. நமக்கு மிக அருகே இருக்கிற நட்சத்திரம் ப்ராக்ஸிமா செந்தௌரி 4.3 ஒளியாண்டு தூரத்தில் இருக்கிறது. அவைகளிலிருந்து எந்த சக்தியும் நம்மை வந்தடையாது.

புவி ஈர்ப்பு விசை என்றால் சந்திரன் தான் எல்லா கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.மின்காந்த சக்தி என்றால் சூரியன் தான் மற்ற கிரகங்களை விடவும் முக்கியமானதாக இருக்கவேண்டும்.

இரண்டுமே இல்லையே.

பிறகு எந்த சக்தி? நமக்கு மீதமிருக்கும் சக்திகள் குறைந்து கொண்டே வருகின்றன.

ஜோதிடர்களின் நம்பிக்கை என்னவென்றால் இவை தவிர அறிவியலுக்கு தெரியாத ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது தான். ஆனால் அந்த நம்பிக்கையும் பிரகாசமாக இல்லை.

எல்லா சக்திகளும் தூரத்தைப் பொருத்து மாறுபடும்.இது அடிப்படை அறிவியல். ஒரு பொருள் நமக்குத் தூரமாக இருக்கிறது என்றால் அது நமக்குப் பக்கத்தில் இருக்கும் பொருளைவிட மிகவும் கம்மியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஆனால் ஜோதிடர்கள் எல்லா கிரகங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்துகின்றன என்கின்றனர். எனவே ப்ளூடோவும் வீனஸ¤ம் ஒரே மாதிரியான பாதிப்பையே ஏற்படுத்தும். ஜோதிடர்களின் கூற்றுப்படி கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்புக்கும் அவைகளின் தூரத்துக்கும் சம்பந்தமேயில்லை. அதே போல் கிரகங்களின் எடையும் ஒரு பொருட்டே இல்லை. இல்லையென்றால் ஜூப்பிடர் அல்லவா சக்திவாய்ந்தாக இருக்க வேண்டும். மெர்க்குரி எல்லாம் ஆட்டைக்கே வராது!

இது சரியாகப்படவில்லையே! விண்கற்கள்? விண்கற்கள் பாறைகளாலும் உலோகங்களாலும் ஆனவை.அவை மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சூரியனைச்சுற்றி வருகின்றன.இவற்றுள் பெரும்பாலனவை மற்ற கிரகங்களை விட பூமிக்குத்தான் மிக அருகில் இருக்கின்றன. எனவே அவைகளும் நம்மைப் பாதிக்கவேண்டுமே?பிரச்சனை என்னவென்றால் விண்கற்கள் நிறைய-மிக நிறைய இருக்கின்றன.100 மீட்டர் அகலமுள்ள விண்கற்கள் நம் சூரியகுடும்பத்தில் மட்டும் எவ்வளவு இருக்கின்றன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு பில்லியன்.இவை மிக மிக அதிகம்.பல கிரகங்களுக்குச் சமம். ஜோதிடர்கள் இவைகளையும் ஏன் சேர்த்துக்கொள்ளக்கூடாது?கன்ஸிடர் பண்ணுங்கப்பா.

வான் ஆராய்ச்சியாளர்கள் பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் 150 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்திருக்கின்றனர். நிச்சயம் அவை ரொம்ப தூரத்தில் இருக்கின்றன. ஆனால் ஜோதிடர்களுக்குத்தான் தூரம் ஒரு பிரச்சனையில்லியே? எனவே இந்த கிரகங்களும் நம்மீது பாதிப்பை உண்டுபண்ணவேண்டும்.150 கிரகங்கள் என்பது இது வரை கண்டுபிடிக்கப்பட்டவை. இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் நம் பால்வெளியில் மட்டும் மொத்தம் பில்லியன் கிரகங்கள் இருக்கின்றன.கிரகங்கள் எல்லா இடத்திலும் நீக்கமற நிறைந்து இருக்கின்றன. அவைகளையும் ஏன் ஜோதிடர்கள் சேர்த்துக்கொள்ளக்கூடாது?

இப்படி யோசியுங்கள். கிரகம் தங்களது தாய் நட்சத்திரத்தை சுற்றி வரவேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிவார்கள். எனவே அவர்கள் வைத்திருக்கும் டேட்டாவை வைத்து இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே என்று கணிக்கிறார்கள். பின் நாளில் அது உண்மையுமாகிறது. 50 வருடங்களுக்கு முன் வரை ஏன் ஒரு ஜோதிடர் கூட “அடடா இப்பத்தான் மைன்ட்ல ஸ்ட்ரைக் ஆச்சு..இங்கே ஒரு கிரகம் இருக்கவேண்டுமே” என்று கணிக்கவில்லை?ஏனென்றால் அவர்களால் முடியாது. அவர்கள் வைத்திருக்கும் டேட்டா ஒன்றுக்கும் ஆகாதது. அதற்கு அர்த்தமேயில்லை.

ஜோதிடர்களின் விதிப்படி (தூரமும் எடையும் பொருட்டே அல்ல) இந்த கண்டுபிடிக்கப்படாத பில்லியன் கிரகங்களின் பாதிப்பு எல்லாம் சேர்ந்தால் அது நமது சூரிய குடும்பத்தின் கிரகக்களின் பாதிப்புகளை சும்மா ஊதித்தள்ளிவிடவேண்டும். ஒரு அணுகுண்டு வெடிக்கும் பொழுது அது எப்படி ஊசி விழும் சத்தத்தை விழுங்கி விடுகிறதோ அது போல.

எனவே நாம் கீழ்க்கண்ட ஒரு முடிவுக்கு வரலாம்.
1. நமக்குத் தெரிந்த சக்தி இருக்கிறது;ஆனால் அது ஜோதிடத்துக்கு உதவாது.
2. நமக்குத் தெரியாத சக்தி ஒன்று இருக்கிறது அது இயற்பியலின் எல்லா விதிகளையும் மீறிவிடுகிறது.அப்படியானால் பில்லியன் விண்கற்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத (ஆனால் உண்மையில் இருக்கின்ற) பில்லியன் கிரகங்களும் ஜோதிடத்தில் இருக்கவேண்டும். இவை சூரிய மண்டலத்தில் இருக்கும் கிரகங்கள் ஏற்படுத்தும் பாதிப்பை ஊதித்தள்ளிவிட வேண்டும். ஆனால் (இப்பொழுது) ஜோதிடத்தில் இது இல்லை.

எனவே தெரிந்த சக்தியும் இல்லை தெரியாத சக்தியும் இல்லை.

பிறகு ஜோதிடம் என்பது என்ன? பொய்.ஏமாற்று வேலை.

(மேலும்)

ப‌ராக் ஒபாமா: செவ்வாய் கிர‌க‌த்துக்கு ம‌னித‌னை அனுப்பிவைப்போம்

2025க்குள் நில‌வைத் தாண்டி மேலும் செல்ல‌ விண்க‌ல‌ம் க‌ண்டுபிடித்துவிடுவோம் என்று ப‌ராக் ஒபாமா கூறியுள்ளார். ப‌ல‌ ப‌ட்ஜெட் க‌ட்டிங்குகளுக்கு அப்புற‌ம் இது நாசா விஞ்ஞானிக‌ளின் வ‌யிற்றில் பாலை வார்க்கும் ஒரு செய்தியாகும். பூமிக்குப் ப‌க்க‌த்தில் நில‌வை விட‌ தொலைவில் இருக்கும் விண்க‌ல்லுக்கு முத‌லில் ம‌னித‌னை அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயைச் சுற்றி வ‌ர‌ ம‌ட்டும் அனுப்புவ‌தும் பிற‌கு செவ்வாயில் ம‌னித‌ன் இற‌ங்குவ‌த‌ற்கு விண்க‌ல‌ம் அனுப்ப‌வும் திட்ட‌ம் இருப்ப‌தை ஒபாமா இன்று அறிவித்திருக்கிறார். விரைவில் செவ்வாயில் ம‌னித‌ன் த‌ரையிற‌ங்கி ப‌ல‌ ஆராய்ச்சிக‌ள் செய்வ‌தை பார்க்க‌முடியும் என்று நினைக்கிறேன். கென்ன‌டி 1961 இல் இன்னும் ப‌த்து வ‌ருட‌ங்க‌ளில் ம‌னித‌னை நில‌வுக்கு அனுப்புவோம் என்று சொன்ன‌தையும் 1969இல் ம‌னித‌ன் நில‌வுல் கால‌டி எடுத்துவைத்த‌தும் நினைவிருக்க‌லாம்.

இன்னும் எத்த‌னை கால‌த்துக்குத் தான் ராக்கெட்டிலே ப‌ய‌ண‌ம் செய்துகொண்டிருப்ப‌து? 2025க்குள் வார்ம்ஹோல் க‌ண்டுபிடித்து ட‌க்குன்னு மார்ஸுக்கோ வேறு தூர‌மான‌ கிர‌க‌ங்க‌ளுக்கோ அல்ல‌து தொலைவில் இருக்கும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கோ சென்றுவிட‌வேண்டுமெ. வார்ம்ஹோல் என்ப‌து அண்ட்த்தில் இருக்கும் ஒரு குறுக்குப்பாதை. ஒரு இட‌த்தில் இருந்து வெகு வெகு தூர்த்தில் இருக்கும் ம‌ற்றொரு இட‌த்திற்கு எளிதாக‌ செல்ல‌ உத‌வும் ஒரு பால‌ம்.

வார்ம் ஹோல் இன்னும் ஆதார‌ப்பூர்வ‌மாக‌க் க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட‌வில்லை. ஆனால் ஜென‌ர‌ல் ரிலேட்டிவிட்டியின் ப‌டி வார்ம் ஹோல் என்ப‌து சாத்திய‌மே. கார்ல் சாக‌ன் எழுதிய‌ கான்ட்டாக்ட் நாவ‌ல் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? அல்ல‌து ஜோடி ஃபாஸ்ட‌ர் ந‌டித்த‌ கான்ட்டாக்ட் ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? அதில் வார்ம்ஹோல் ப‌ய‌ன் ப‌டுத்தித்தான் ந‌ம் சூரிய‌ குடும்ப‌த்திலிருந்து லைரா ந‌ட்ச‌த்திர‌க்குடும்ப‌த்தில் இருக்கும் வேகா என‌ப்ப‌டும் ந‌ட்ச‌த்திர‌த்துக்கு போவார் ஜொடி ஃபாஸ்ட‌ர்.

இன்னும் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ வேண்டுமாயின் இர‌ண்டு ப‌ரிமான‌த்தில் அண்ட‌த்தை மேலும் கீழுமாக‌ வ‌ளைந்து இருக்கும் ஒரு துணிபோல‌ நினைத்துக்கொள்ளுங்க‌ள்; மேலிருக்கும் துணியின் மேலேயே ப‌ய‌ண‌ம் செய்து கீழிருக்கும் துணியை அடைவ‌த‌ற்குப் ப‌திலாக‌, மேலிருக்கும் துணியில் ஒரு துளையை ஏற்ப‌டுத்தி கீழிருக்கும் துணிக்கு ட‌க்கென்று செல்ல‌முடியும‌ல்ல‌வா? அந்த‌ துளையும் துளை ஏற்ப‌டுத்திக்கொடுக்கும் பாதையும் தான் வார்ம்ஹோல். எப்ப‌டி ஒரு புழு மாம்ப‌ழ‌த்தைத் துளைத்து ம‌ற்றொரு புற‌ம் வ‌ருகிற‌தோ அது போல‌!
 

மேலே இருப்ப‌து லோர‌ன்ட்சிய‌ன் வார்ம்ஹோல் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் நாம் பார்த்த‌ ஒரு வ‌கையான‌ பால‌ம். இன்னும் யாரும் க‌ண்டுபிடிக்க‌வில்லை என்ப‌தை நினைவில் கொள‌க. க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு நோப‌ல் ப‌ரிசு நிச்ச‌ய‌ம்!