மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.
ஏர் இந்தியாவின் பரிட்சையில் பாஸாகியும் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தன்னை ஏர் இந்தியா நிராகரித்து விட்டதாக தமிழ்நாட்டிலிருந்து திருநங்கை ஷானவி பொன்னுச்சாமி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒரு மாதம் கழித்து சமூக நீதி அமைச்சகம் காபினட்டுக்கு திருத்தப்பட்ட மசோதாவை அனுப்பியது. அதில் பொதுத்துறையையும் பகுதி ஐந்தில் இணைத்தது. இந்த திருத்தம் வேலை வாய்ப்பு சம்பந்தமான எந்த விஷயத்திலும் – புதிய ஆள் சேர்க்கை, பதவி உயர்வு போன்றவை -பாகுபாடு கூடாது என்று சொல்லியிருக்கிறது.
ஷானவி பொன்னுச்சாமிக்கு நேர்ந்தது ஒன்றும் புதிதல்ல. திருநங்கைகளின் ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப்பின் ஒரு பெரிய நீண்ட வரலாறு இருக்கிறது.
இந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு (ப்ரித்திகா யாசினி) நேர்ந்ததும் இதுதான். தமிழ்நாடு போலீஸ் ஆள்சேர்க்கைக் குழுவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த ஆர்டருக்கு அப்புறமே விஷயம் தீவிரமடைந்தது.
2016இல் நிறவேற்றப்பட்ட மூன்றாம்பாலினரின் உரிமை பாதுகாப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் பிறகே நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் மூன்றாம் பாலினருக்கான அலுவலகங்களுக்கான விதிகளையும், பல நல திட்டங்களையும் அறிமுகபடுத்தியது. மேலும் மூன்றாம் பாலின ஊழியர்களை மற்ற உழியர்கள் / முதலாளிகள் கேலி பேசியும் பிற வழிகளில் துன்புறுத்துவதையும் தடுத்து, அவ்வாறு செய்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அறிவுறுத்தியிருக்கிறது.
மனாபி பண்டோபதியே என்கிற திருநங்கை இந்தியாவின் முதல் கல்லூரி தலைமை ஆசிரியராக 2015இல் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அந்தப் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு தாங்கமுடியாத மன உளைச்சல் என்று காரணம் காட்டி ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு அவ்வாறான மன உளைச்சல் கொடுத்தது யார்? உடன் வேலை செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும் தான். என்றாலும் அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. அவர் தலைமை ஆசிரியராகத் தொடர்கிறார்.
மூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அவர்களது உரிமைகளையும் மரியாதையையும் சட்டம் கொண்டு பாதுகாப்பதன் மூலமே நடைபெறும். சட்டம் இயற்றுவது முதல் படி என்றாலும் அதை செயல்முறைப்படுத்தவேண்டும். இந்த மசோதா தேசிய கவுன்சில் அமைத்து மூன்றாம் பாலினருக்காக உருவாக்கப்படும் கொள்கைகளை கண்கானிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேசிய கவுன்சில் ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியிறுத்தியது. ராஜ்ய சபாவில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நடைபெறலாம்.