மிஷ்கினின் லேட்டஸ்ட் படம். ஆனால் இதில் டைரக்டரில்லை. நடிகன்.அவரிடம் அசிஸ்டெண்டாக இருந்த அவரது தம்பி ஆதித்யா படத்தை இயக்கியிருக்கிறார். மிஷ்கின் கதை திரைக்கதை எழுதியிருக்கிறார். ஆனந்த யாழை மீட்டிய ராம் மீண்டும் நடிகராகியிருக்கிறார். காணாமல் போன பூர்ணா ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். அஜல் குஜால் சாரி அரோல் கொரலி இசை அமைத்திருக்கிறார்.
ஓகே. மங்காவுக்கு இன்றோடு – மாலை ஆறு மணியோடு – பரோல் முடிகிறது. மீண்டும் ஜெயிலுக்குப் போக வேண்டும். டென்சனாக இருக்கிறான். மறுபடியும் அந்த நரகத்திற்குள் போக வேண்டுமே என்கிற ஆத்திரம் இருக்கிறது அவனுக்கு. பொதுவாகவே மங்கா ஆத்திரக்காரன். தாய் இறந்துவிட்ட பிறகு தாய்மாமனே மங்காவை வளர்க்கிறார். தாய்மாமன் கூடவே இருந்து மங்கா பைத்தியக்காரன், ஏதாவது செஞ்சு ஜெயில் தண்டனையை கூட்டிக்கப்போறான் என்று அவனைப் பாதுகாத்து எப்படியாவது எந்த வித அசம்பாவிதமும் சண்டையும் இல்லாமல், மாலை ஆறு மணிக்கு ஜெயிலில் கொண்டு போய் விட்டு விட வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் மங்காவோ நிஜ பைத்தியக்காரன். தாய்மாமனிடம் நீ கக்கூஸ் போறத இன்னொருத்தன் பாத்திருக்கானா, ஜெயில்ல பாப்பான்னு சொல்றான். சூப்பர் டயலாக். அதனால் ஐயோ மீண்டும் போய் அடைபடப் போகிறோமே என்கிற வெறி வேறு. மாமா என்ன கெஞ்சினாலும் காதில் விழமாட்டேனென்கிறது. வெளில போகலாம் என்று காரில் கிளம்புகின்றனர். பிச்சை ஒரு பார்பர். இரண்டு பிள்ளைகள், மனைவியின் வயிற்றில் இன்னொன்று. நிறை மாதம். மனைவியின் தம்பி ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யப்போகிறான், கையெழுத்து போட்டுட்டு வாழ்த்திட்டு வருவோம் வாங்க என்று மனைவி அழைத்ததும், தன் ஓட்டை ராஜ்தூத்தில் கம்பீரமாக இரண்டு பிள்ளைகளுடனும் நிறைமாத மனைவியுடனும் ஒரே பைக்கில் செல்கிறார். இவர் டீ நகர் ட்ராபிஃக் போலீஸ்கிட்ட மாட்டிக்கொடுத்திருக்கனும், இவரு கைய முறிச்சு, மனைவியை கீழ தள்ளி ரோட்லயே பிள்ள பெற வெச்சு, ரெண்டு பிள்ளைகளோட கால உடச்சு, கடைசில இவரையே ஜெயில்ல போட்ருப்பாங்க. மங்காவும் பிச்சையும் ஒரே ஜெயில்ல இருந்திருப்பாங்க. ஹூம். ஆனா பிச்சையின் ராஜ்தூத்தில் மங்காவோட கார் மோதிவிடுகிறது. பிச்சை கண்டபடி எல்லோரையும் திட்டிவிடுகிறார். ஓங்கி அடித்தும் விடுகிறார். அடித்தாரா இல்லியா என்பது லெஜண்ட். மங்காவின் முகத்தில் ரத்தம் வர, உடன் இருப்பவர்கள, அடிவாங்குனவனுக்கே இவ்ளோ ரத்தம் வருதே, அடி கொடுத்த கைப்பிள்ளையை சும்மா விடலாமா என்று ஏற்றிவிட, தாய்மாமா டேய் மங்கா அவன் அடிக்கலடா என்று வாதிட, மங்கா அடித்தவனின் கையை வெட்டாமல் மாலை ஜெயிலுக்குள் போகமாட்டேன் என்று சபதமெடுக்கிறார். பிச்சையின் கதியும் அவரது குடும்பத்தின் கதியும் என்னானது? மங்கா மாலை பரோலை முடித்து ஜெயிலுக்கு போனானா? பிச்சையின் மச்சானின் கல்யாணம் நடந்ததா? படம் முடியும் போது உங்களுக்கு தலைவலி வந்ததா? மீதியை படம் பார்த்து கதை தெரிஞ்சுக்கவும்.
ராமும் மிஷ்கினும் பொருத்தமாகவே இருந்தனர். பூர்ணா கொஞ்சம் ஓவர் ஆக்ட் ஆனால் படத்தின் காமெடி மூடுக்கு செட்டானார். படத்தை ப்ளாக் காமெடின்னு சொல்றாங்க. மிஷ்கின் கொஞ்சம் கறுப்பா இருக்கறதனாலேயும் கொஞ்சம் காமெடி இருக்கிறதாலேயும் அப்படி சொல்லிருப்பாங்களோ. டீக்கடையில் ராஜ்தூத் மாடல் நம்பர் கேக்கும் இடம் மட்டுமே குபீர். மற்றபடி கபீர். (ஒரு ஃப்லோல வந்திருச்சு)
ஆனால் கடைசிக்காட்சியில் குழந்தை அழும் சத்தம் கேட்ட உடன் பழைய பாரதிராஜா படத்தில ஹீரோயின் அப்படியே ஸ்டில்லக்கொடுத்து நிக்கிற மாதிரி ரெண்டு பேரும் அப்படியே கெடப்பதெல்லாம் ரணகளம். நான் என்னவோ ப்லிம் சிக்கிக்கிருச்சோன்னு நெனச்சேன். அரோல் கொரலியின் இசையில் மிஷ்கினே பாடியிருக்கும் தங்ககத்திபாட்டு செம என்று சொல்ல ஆசைதான். தம்பி படம்ங்கறதால ஓவர் அட்ராசிட்டியா இருக்கு. ஸ்மியூல்ல பாடி பழகியிருப்பாரோ? ஒய் பாஸ்?
படத்திலேயே எனக்கு பிடிச்ச கதாப்பாத்திரம் தாய்மாமாதான். சூப்பர் காஸ்டிங்.
இன்னும் பாக்கலீன்னா, பாருங்க. மெர்சல்லாம் பாத்தீங்கல்ல? அப்ப இதப் பாக்கலாம்.