முந்தைய செய்தி.
ஈரானில் க்ரீன் நசிம் என்று அவர் அறியப்படுவார். இவர் ஒரு சோஸியல் மீடியா ஸ்டார் – நிறைய பேர் இவரை யூட்யூபில், இன்ஸ்டாகிராமில் பின் தொட்ர்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு வேறு முகம். வேகன் டயட்டைப் பரப்புபவராகவும், விலங்குகள் நல ஆர்வளராகவும் அறியப்படுபவர். அவருக்கு மக்களுடன் உரையாட ஒரு ப்ளாட்பார்ம் அமைத்துக்கொடுத்த யூட்டிபின் மேல் இவர் தீராக் கோபம் கொண்டிருந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை மதியம் நசிம் நஜஃபி அஃக்டம், சான் ப்ருனோ, கலிஃபோர்னியாவில் இருக்கும் யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார், மூன்று நபரைச் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.
அஃக்டம் பற்றிய விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யூட்யூபின் தாய் நிறுவனமான கூகுள் இருக்கும் மௌண்டன் வ்யூ, கலிஃபோர்னியாவில், இந்த சம்பவம் நடந்து 11 மணி நேரத்துக்கு முன்பு, காரில் அவர் தூங்கிக்கொண்டிருந்த பொழுது போலீஸ் அவரை விசாரணை செய்திருக்கிறது. அவரது லைசன்ஸை வைத்து அவரது குடும்பம் அவரை சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்திருப்பது போலீஸுக்கு தெரிய வந்திருக்கிறது.
அஃக்டம் போலீஸிடம் தனக்கு குடும்பத்துடன் சில பிரச்சனைகள் இருக்கிறது என்றும், கலிஃபோர்னியாவுக்கு வேலை தேடி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். போலீஸுக்கு இவர் அபத்தானவர் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டது.
முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இவர், இவரது பல வீடியோக்களில் ஈரானில் இருக்கும் உர்மியா நகரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். அங்கு மக்கள் டர்கிஷ் மொழி பேசுவது போல இவரும் சில வீடியோக்களில் டர்கிஷ் பேசியிருக்கிறார். இவர் டர்கிஷ், ஆங்கிலம் மற்றும் பெர்சியன் மொழிகளில் யூட்யூப் பக்கங்கள் வைத்திருக்கிறார். இவரது குடும்பம் பஹாய் என்கிற நம்பிக்கையைப் பின்பற்றுகிறது என்றும், முஸ்லிம் நாடான ஈரானில் இது கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய பல வீடியோக்கள் – கலர்ஃபுல்லானவை – ஈரானில் வைரல் ஆகியிருக்கின்றன.
அவரை விட்டுவிட்ட பிறகு போலீஸ் அஃக்டமின் வீட்டுக்கு ஃபோன் செய்து அவர் நலமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அப்பொழுது யூட்யூபின் மேல் அவருக்கு இருக்கும் கோபத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது ஃபோன் காலில் யூட்யூப் அஃக்டம் கோபப்படும்படி ஏதோ செய்திருக்கிறது என்றும் அதனால் கூட அஃக்டம் கலிஃபோர்னியாவுக்கு வந்திருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் ஆனால் அவர் அதைப் பெரிய விசயமாக சொல்லவில்லை என்றும் போலீஸ் சொல்கிறது.
செவ்வாய்கிழமை காலை அவர் அருகிலிருக்கும் துப்பாக்கி சுடப் பழகும் இடத்துக்கு சென்றுவிட்டு, மதியம் யூட்யூபின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு, யூட்யூம் அலுவலர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்குள் நுழைந்திருக்கிறார்.
போலீஸ் தகவல் வந்து இரண்டு நிமிடத்தில் யூட்யூப் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அவர்கள் வந்த பொழுது அஃக்டம் இறந்துவிட்டிருந்தார். அவர் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்த 9 மிமி செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி அருகில் கிடந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவுக்குள் யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் அவரது பக்கங்களையும் வீடியொக்களையும் பொதுமக்கள் பார்வையிலிருந்து அகற்றிவிட்டது.
அவரது பெர்சனல் வலைதளத்திலும் அவர் போஸ்ட் செய்த வீடியோக்களிலும் யூட்யூப் பற்றிய புகார்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.
டெலிக்ராம் என்கிற ஈரானில் மிகவும் பிரபலமான சோசியல் மீடியாத் தளத்தில் அவர் கடைசியாக பதிவிட்டது பூக்களுக்கு மத்தியில் அவர் நிற்கும் அவருடைய சிறிய வயது ஃபோட்டோ. தலைப்பு ஏதும் இல்லை
–