காவிரி பிரச்சனையின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் பூனாவிற்க்கு மாற்றப்பட்டது. இது தமிழர்களூக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுகளால் கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு சித்தம் தெளிவாகி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்து விடுவாரென நம்புவோம். அப்படியே சனி ஞாயிற்றுக் கிழமைகளிளும் சீரியல் ஒளிபரப்பும் சேனல்களையும் தமிழ்நாட்டிலிருந்து உப்புமாவையும் தடை செய்ய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட சிலர் டுவிட்டரிலும் முகநூலிலும் அனல் பரக்க ஆவேசமாக முழங்கினர். இவர்கள் கோரிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளூம் என்றும் நம்புவோமாக.
Yet another high scoring game, yet another dramatic end!
197 என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்ஞாப் அணியிடம் தோல்வியடைந்தது. ப்ரீத்தி ஜிந்தா ஆனந்த நடமாட, ரசிகர்கள் ஆர்பரிக்க, அஷ்வின் T20 போட்டிகளில் தன் value என்ன என்பதை நிரூபித்தார். எதிர்பாராத விதமாக கெயிலை களமிரக்கியது, சரியான நேரத்தில் ராயுடுவை ரன் அவுட்டாக்கியது, மோஹிட் சர்மாவுக்கு தைரியமாக கடைசி ஓவரை கொடுத்தது ஏன்று அனைத்தும் master stroke.
அஷ்வினும் தோனியும் எதிரெதிர் அணியினர் என்று விளையாடும் நிலை சென்னை ரசிகர்களை சற்று எரிச்சலையடைய வைத்திருந்தாலும், this is the beauty of IPL என்ற எதார்த்தத்தை உணர்ந்தாக வேண்டும். இருவரும் டாஸ் நேரத்தில் சந்தித்துக் கொள்ளூம் போது உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே என்று சென்னை ரசிகர்கள் சோகமாக பாடியிருக்க கூடும். டாஸ் வென்ற தோனி பஞ்ஞாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அணிகள் மாறியிருந்தாலும் இருவரும் தத்தமது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால் போட்டி சுவாரசியமாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு வீனாகவில்லை.
கே.எல்.ராகுலும் கெயிலும் அடித்த அடியில் சென்னை பவுலர்கள் சிக்கித் திணறினார்கள். பவர்ப்ளே (6வது ஓவர்) முடிவில் பஞ்ஞாப் அணி 75 ரன்கள் எடுத்திருந்தது. ஒன்பதாவது ஓவரின் முடிவில் நூறு ரன்களை தாண்டியிருந்தது. கெயில் தான் இன்னமும் Universal Boss என்பதை உரக்கச் சொன்னார். Darling of IPL and a nightmare to every bowler,
கெயில் புயல் இன்னமும் ஓயவில்லை. ஏலத்தில் தன்னை எடுக்காத அணியிணர்க்கு ஒரு message அனுப்புவதாகவே இருந்தது அவரது இன்றைய innings.
பொதுவாகவே இடதுகை ஆட்டக்காரர்களிடம் ஒருவித தனி ஸ்டைல் & ஆக்ரோஷம் இருக்கும். அவர்களின் கட் ஷாட்டுகளும் புல் ஷாட்டுகளும் வலதுகை ஆட்டக்காரர்களின் ஷாட்டுகளை விட பார்ப்பதற்க்கு மிகவும் பிரம்மிப்பானவை. டேவிட் வார்னர், மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட், மைக்கெல் ஹாஸி, குமார் சங்ககாரா, கங்கூலி, கேரி சோபர்ஸ், ஜெயசூர்யா, சயீத் அன்வர் என புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரர்கள் பலர். இவர்களுக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. It’s always going to be tough to adjust the line and length. இவ்வரிசையில் கெயில் சற்று வித்தியாசமானவர். Footwork அவ்வளவாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் அதிகமான power இருக்கும். நின்ற இடத்திலேர்ந்து சிக்ஸ்ர் அடிப்பார்.
Back to the game again, கடைசி நான்கு ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சென்னை அணி ஓரளவு பதற்றம் அடையாமல் ஆடியது. ப்ராவோ மற்றும் ஹர்பஜன் விக்கெட்டுகள் கையில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆரம்பந்தொட்டு பேட்டிங்கில் வேகம் இல்லை. விஜயும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது பேட்ஸ்மென் இருக்கும் போது சென்னை அணி சற்று defensive ஆக விளையாடியது.
அதிக ரன்கள் இலக்காக இருக்கும் போது முன்பு சிறப்பாக ஆடிய ப்ராவோவை ஏன் முன்பாக ஆட அனுப்பவில்லை, ஜடேஜாவை அனுப்பியது ஏனென்ற கேள்விகள் வராமலில்லை. தல தோனியின் 5 சிக்சர்களும் 6 பவுன்ரிகளும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல்.
வடிவேவுக்கு பாடி ஸ்டாராங் பேஸ்மெண்ட் வீக் – சென்னை அணிக்கு பேட்டிங் ஸ்டாராங் போலிங் வீக்.
இந்நிலை சற்று மாறும் என நம்புவோமாக.
For fighting till the last ball, for hitting the maximum number of sixes in the last overs in IPL, for keeping his opponents in their toes, that’s Dhoni for you. கெத்தாக விளையாடிய தல தோனிக்கு ஒரு பெரிய விசிலுடன்,
ஹரிஹரன்
முந்திய பகுதிகள்:
ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.