சென்னை சூப்பர் கிங்ஸின் புது வீட்டின் “கிருஹப்ரவேசம்” இனிதாக முடிந்தது! தன் புது வீடான பூனாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி கண்டது.
பூனாவில் நடைபெற்ற போட்டியைக் காண சென்னை ரசிகர்களை சூப்பர் கிங்ஸ் அணி “விசில் போடு எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயிலில் ஆழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. உணவு, தங்கும் இடம் மற்றும் நுழைவு சீட்டு என அனைத்தும் இலவசம். இது போல கடந்த காலத்தில் ஒரு அணி தன் ரசிகர்களூக்காக மெனக்கெட்டு ஏற்ப்பாடு செய்திருக்குமா என்பது சந்தேகமே. IPL போட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்துக்கு மாறுவது இது முதல் தடவையல்ல. 2010ல் தெலுங்கானா பிரச்சைனையின் காரணமாக டெக்கான் சார்ஜஸ் அணியின் போட்டிகள் அனைத்தும் ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுபோல் எந்த அணியும் தன் ரசிகர்களுக்காக முயற்ச்சியில் இறங்கியதில்லை, especially when money is the driving factor in IPL. ரசிகர்களூக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இணக்கத்தை/நெருக்கத்தை சென்னை அணி போல எந்த அணியும் ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.
You can take away CSK matches from Chennai, but you cannot take away CSK from Chennai fans!
ஒரு வேளை திருவிளையாடல் திரைப்படத்தை இப்போது எடுத்திருந்தால் “பிரிக்க முடியாத்து என்னவோ?” என்ற கேள்விக்கு “சென்னை சுப்பர் கிங்சும் ரசிகர்களும்” என்ற பதில் வந்திருக்கலாம்.
Well done CSK!
சென்ற போட்டியின் போது காயமடைந்த தோனி இம்முறை களமிளங்குவாரா என்ற சந்தேகம் இருந்தாலும் தல தோனியைக் காண 21 மணி நேரம் பயணம் செய்த ரசிகர்கள் ஏமாற்றமடையவில்லை. மணிக்கொருதரம் தமிழில் ட்வீட்டும் திருபஜன் சிங் என்ற ஹர்பஜனும், முரளி விஜயும் வெளியேற, ரெய்னாவும் கரன் சர்மாவும் களமிறங்கினர். டாஸ் வென்ற ரகானே சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். Win the toss and ask the opponent to bat first seems to be the new trend these days. தன் போலர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையா அல்லது பின்னால் எந்தவொரு இலக்கையும் சந்திக்கலாம் என்ற தன் பேட்ஸ்மென் மீதுள்ள நம்பிக்கையா? தெரியவில்லை.
முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய வாட்சனுக்கு இரண்டு முறை அதிர்ஷமடித்தது. ராகும் த்ரிபாதி இருமுறை வாட்சன் கொடுத்த catch-சை தவறவிட, அதற்கு ராஜஸ்தான் 98 ரன்கள் நஷ்டயீடு கட்ட வேண்டியிருந்தது. Catches win matches என்பார்கள் – குறிப்பாக டி20 போட்டிகளில் யாரோ ஒருவரின் மேலான்மை இருக்கும். அது பவுலர்களாகவும் இருக்கலாம், பேட்ஸ்மென்களாகவும் இருக்கலாம். வந்த வாய்ப்பை தவற விட்டால் போட்டியை இழக்க வேண்டியது தான். ஒரிரண்டு ஓவர்களில் போட்டியின் சூழலே மாறும் தன்மையுடையது டி20 போட்டிகள். ரெய்னா ஒரு பக்கம் பவுண்ரிகளாக அடிக்க வாட்சன் மறுபக்கம் சிக்ஸர்களாக வீசினார். அடுத்துதடுத்த வந்த ஓவர்களில் வாட்சன் சிக்ஸர்களும் பவுண்ரிகளும் தெரிக்கவிட, 6 ஓவர்களின் சென்னை அணி 69 ரன்கள் எட்டியது.
சென்ற முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வாட்சன் சென்னை அணிக்கெதிராக சதமடிக்க, இந்த முறை, சென்னை அணிக்காக விளையாடி ராஜஸ்தான் அணிக்கெதிராக சதமடித்தார். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற யுக்தியை ஏலத்தின் போது கையாண்ட சென்னை அணி கிட்டத்தட்ட அனைவரையும் குறைந்த விலைக்கு வாங்கியது. வாட்சனை 4 கோடிக்கு வாங்கிய போது சென்னை அணியை அதன் ரசிகர்களே கேலி செய்தனர். அதே ரசிகர்களின் மனநிலை இன்று மாறியிருக்கும்! அவர் அடித்த 6 சிக்ஸர்களும் 9 பவுண்ரிகளும் spotless!
நேற்றைய போட்டியில் சதமடித்த கெயிலும் சரி, இன்றைய போட்டியில் சதமடித்த வாட்சனும் சரி,
ஏலத்தில் எடுத்தாரா ஒறுத்தல் அவர்
நாண சதமடித்து விடல்
என்று IPL குறள் வழி age is just a number என்பதை தன் பழைய அணிக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றனர்.
ஏலத்தின் போது பெரிய அளவில் எதிர்பார்புடன் வாங்க்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட்டும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் பெரிய அளவில் கைகொடுகாதது ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். பேட்டிங்கில் முனைப்புடன் விளையாடாது, வந்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது என்று மேலும் சொதப்பல்கள். கோலிக்கு நிகராக கருதப்பட்ட ரஹானே பவர்ப்ளே 6 ஓவர்களில் 5 பவுளர்களை மாற்றியது சற்று ஆச்சரியத்தை தருகிறது. 205 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 140 ரன்களுக்கு சுருண்டது.
மற்ற அணிகள் கிட்டத்தட்ட ஒரே ஆட்டக்காரர்களை தன் வெற்றிக்காக நம்பியிருக்க, சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிகளிளும் ஒவ்வொரு ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியடைய வைத்திருக்கும்.
தோனியும் இளைய தளபதி விஜய் போல ஒரு தடவை முடிவெடுத்தா தன் பேச்சை தானே கேட்க மாட்டார் – தன் set ஆன அணியில் மாற்றத்தை கொண்டுவர விரும்பமாட்டார். டூப்பிளசி, டேவிட் வில்லி போன்ற வீரர்களூக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே எனத்தோன்றுகிறது. இனி வரும் போட்டிகளில் எவ்வகையான மாற்றத்தை கொண்டுவருவார் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அது வரை, வாட்சனின் சததிற்காகவும், table toppers CSK காகவும், ஒரு பெரிய விசிலுடன்.
ஹரிஹரன்.
முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.