கோரோனா வைரஸ் ஒரு Black Swan Eventஆ? பில் கேட்ஸ் இது வரை எவ்வளவு பணம் ஆராய்ச்சிக்காகவும், கல்விக்காகவும், பொதுதொண்டுக்காகவும் கொடுத்திருக்கிறார்? இதுவரையில் இந்த உலகத்தில் எவ்வளவு கொள்ளைநோய்கள் வந்திருக்கின்றன? எத்தனை மக்கள் இறந்திருக்கிறார்கள்? மேலே உள்ள வீடியோவில் பார்க்கலாம்! #coronavirus #corona #virus #BillGates #BlackSwanEvent #NicolasTaleb #pandemic #epidemic
Category: Science
CORONAVIRUS திட்டமிடப்பட்ட சதியா? பார்ட் #1
#CORONAVIRUS எப்படி பரவுகிறது என்று பல புரளிகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் உண்மையா? #5Gtower கொரோனாவை பரப்புகிறதா? #BillGates பண்ண திட்டமிட்ட சதியா? எது உண்மை? பல பகுதிகளாகப் பார்ப்போம்.
Coronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு
இந்த வீடியோ வைரஸ்களின் அனாடமியை விவரித்து, அது நம் உடம்பினுள் செல்லும் பொழுது என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதையும் அதை எப்படி நம் உடல் எதிர் கொண்டு அழிக்கிறது என்பதையும், வைரஸுக்கு மருந்து இல்லை எனும் போது, தடுப்பூசியில் இருக்கும் மருந்து என்ன என்பதையும் எளிதாக சிம்பிள் கிராப்க்ஸ் கொண்டு விளக்குகிறது.
தலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி
நெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.
சரி பட்டாம்பூச்சிக்கு வருவோம்.
இந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது.
முட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது? நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது? ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை.
அந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு.
எறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி.
அப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும்.
இப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா? நாம தலையிலிருந்தல்லவா வந்தோம்? நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.!!எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி.

இப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.
இந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை.
–
பிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch?v=XmtXC_n6X6Q
பிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.
பிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.
பிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.
IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது
ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.
சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.
- ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
- 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
- NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.
மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.
இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.
ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.
ரப்பர் பொம்மைகளில் சேரும் தண்ணீரில் நுண்ணுயிர்கள்
உங்கள் குழந்தைகளின் குளியல் நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான அந்த அழகிய வாத்து பொம்மைக்குப் பின்னால் ஒரு அசிங்கமான உண்மையிருக்கிறது. குழந்தைகள் இந்த பொம்மையை வாயில் வைத்து விளையாடுவார்கள். உள்ளே தேங்கியிருக்கும் தண்ணீரை மற்ற குழந்தைகளின் மீது பீய்ச்சி அடித்தும் விளையாடுவதுண்டு.
ஆனால் உள்ளே யக்கியாக ஏதோ ஒன்று இருக்கிறது – அது பெரும்பாலும் கண், காது மற்றும் வயிற்றுக் கோளாறு ஏற்படுத்தும் பாதோஜெனிக் பாக்டீரியாவாக இருக்கும்.
அமெரிக்க மற்றும் சுவிஸ் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் இந்த மாதிரியான ரப்பர் பொம்மைகள் நுண்ணுயிர்கள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கும் என்று கண்டுபிடித்திருக்கின்றனர்.
ஐந்தில் நான்கு பொம்மைகளிலிருந்து வெளியேறும் தண்ணீரைச் சோதித்துப் பார்த்தபொழுது Legionella பாக்ட்டீரியா அதிலிருந்தது. ஆராய்ச்சியாளர்கள் 19 விதமான பொம்மைகளைச் சோதித்துப் பார்த்ததில் வாத்து பொம்மையில் ஒரு செமீ ஸ்கொயர் பரப்பளவில் 75 மில்லியன் பாக்ட்டீரியாக்கள் இருந்தன. இது மிக மிக அதிகமான எண்ணிக்கை. ரப்பர் பொம்மையிலிருக்கும் பாலிமர் வெளியேற்றும் கார்பன், பாக்ட்டீரியாவுக்கு சத்துணவு.
ரப்பர் வாத்துகளை தயாரிப்பதற்கு விலை உயர்ந்த நல்ல தரமான பாலிமர்களைப் பயன் படுத்தினால் பாக்ட்டீரியா மற்றும் பூஞ்சையின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம் என்கின்றனர்.
ரப்பர் பொம்மைகள் மட்டுமே வீட்டில் உபயோகப்படுத்தும் பொருட்களில் பாக்டீரியாக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடம் இல்லை. கடந்த வருடம் ஜெர்மனியில் நடந்த ஆராய்ச்சியில் கிச்சனில் பாத்திரம் கழுவ உபயோகப்படும் ஸ்பாஞ் கூட கிருமிகளின் கூடாரம் என்று கண்டுபிடித்திருக்கின்றனர். வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட 14 அழுக்கான ஸ்பாஞ்களில் 350 வகையான பாக்ட்டீரியா இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதே அளவு அடர்த்தியுடன் பாக்ட்டீரியாக்களை மனிதக் கழிவுகளில் பார்க்கலாம். இந்த உலகில் வேறு எந்த இடத்திலும் இவ்வளவு அடர்த்தியாக பாக்ட்டீரியாக்களைப் பார்க்க முடியாது என்று மார்க்கஸ் ஈகர்ட் (Markus Egert) என்ற ஜெர்மானிய நுண்ணுயிரியல் விஞ்ஞானி கூறுகிறார்.
நமக்கும் நெருக்கமான இன்னொரு பொருள் இதே போல பாக்ட்டீரியாக்களைக் கொண்டிருக்கிறது: செல் ஃபோன்.
சராசரியாக ஒரு செல் ஃபோனில் எவ்வளவு பாக்டீரியாக்கள் இருக்கின்றன என்பது ஆராய்ச்சிக்கு ஆராய்ச்சி வெறுபட்டாலும், சராசரி செல் ஃபோனில் டாய்லட் சீட்டைவிட பத்து மடங்கு பாக்ட்டீரியாக்கள் இருக்கின்றன என்று 2012இல் அரிசோன பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் விஞ்ஞானி சார்லஸ் கெர்பா கூறுகிறார். மேலும் அவர் டாய்லட் சீட்டை விட அழுக்கான இடங்கள் வீட்டில் நிறைய இருக்கின்றன என்று கூறுகிறார்.
கொஞ்சமாவது சுத்தமான இடம் வீட்டில் டாய்லட் சீட்டாகத் தான் இருக்கும். பொதுவாக டாய்லட் சீட்டை விட 200 மடங்கு அதிகமான பாக்ட்டீரியாக்களை கட்டிங் போர்டில் பார்க்கலாம் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.
ரோபோட் மீன்
மீன் தான். ஆனால் உடம்பில் பேட்டரி இருக்கிறது. புளுக்கள் பிடிக்காது. 🙂
என்னை SoFiஐ அறிமுகம் செய்ய அனுமதியுங்கள். சோஃபி (Sophie) போல ஆனால் Soft Robotic Fish என்பதன் சுருக்கம். SoFi MIT விஞ்ஞானிகளால் அறிமுகம் செய்யப்பட்டது.
SoFi போன்ற ரோபோடிக் மீன்கள் கடல் வாழ் உயிரினங்களை மனிதன் ஏற்படுத்தும் அழிவிலிருந்தும் தட்ப வெட்ப மாற்றங்களினால் அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினங்களையும் பாதுகாக்க உதவும். ஒன்றரை அடி நீளம் உள்ள இந்த ரோபோட் மீன் ஒரு நொடிக்கு முக்கால் அடி நீளம் நீந்தக் கூடியது. மேலும் அறுபது அடி ஆழம் வரையும் நீந்தும். இது பயாலஜிஸ்ட்களுக்கு ஒரு மீனின் பார்வையில் மாறிக் கொண்டிருக்கும் கடல் வாழ் உயிரினங்களை லைவ்வாகக் காட்டும்.
எம் ஐ டி விஞ்ஞானிகள் டைவிங் மீதான காதலையும் ரோபோட்டிக்ஸ் மீதான காதலையும் ஒன்றிணைத்து இந்த ரோபோவை உருவாக்கியிருக்கின்றனர். தொடர்பு சாதனங்களை உருவாக்குவதுதான் கடினமான வேலையாக இருந்தது என்று குழுவின் தலைவர் ராபர்த் ஹட்ஸ்மேன் கூறுகிறார். தொடர்புக்கு பொதுவாக கேபில் வேண்டும், ஏனென்றால் ட்ரோனில் (பறக்கும் ரோபோட்டுகள்) பயன்படுத்தப்படும் ரிமோட் சிக்னல் தண்ணீரில் வேலை செய்யாது. ஆனால் ஒலி அலைகள் வேலை செய்யும்!
ஆராய்ச்சிக் குழுவினர் டைவருக்கும் (நீந்துபவர்) ரோபோட் மீனுக்கும் இடையே உயர் சுருதியில் ஒலி அலைகளை அனுப்பினர். ஒரு சிஸ்டம் அதை டீகோட் செய்து நீந்துபவருக்கு தகவல் அனுப்பும். SoFi இப்பொழுது நீந்திக் கொண்டிருக்கிறது என்று. அல்லது இருபது டிகிரி திரும்பவும் என்று SoFiக்கோ நீந்துபவரிடமிருந்து உத்தரவு கொடுக்க முடியும்.
வீடியோ பார்க்க இங்கே க்ளிக்கவும்.
போய் வாருங்கள் Stephen Hawking
Obituary:
Stephen Hawking அறிவியலின் மிகச்சிறந்த தூதுவர்
Stephen Hawking இறப்பினால் அறிவியல் உலகம் ஒரு விஞ்ஞானியை மட்டும் இழக்கவில்லை, அது பொதுமக்களுக்கான தனது மிகச் சிறந்த தூதுவரை இழந்து விட்டது.
அவருடைய அறிவும், கவர்ச்சியும் – ஏன் அவரது ஊனமும் கூட – அவரை இவ்வுலகத்தின் சமகாலத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானியாக்கியது. அவரும் அவருக்குக் கிடைத்த இடத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அறிவியலின் தேவையையும் அன்றாட வாழ்வில் அறிவியலுக்கு இருக்கும் முக்கியமான பங்கையும் பொதுமக்களிடம் கொண்டு சென்றார். அதை விட அறிவியலுக்கு அரணாக இருந்தார் என்பதே மிகச் சரி.
எளிதில் புரிந்து கொள்ள இயலாத அண்டவியலைச் சாதாரணப் பொதுமக்களுக்குப் புரியும் படியும், அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு ஆர்வத்தை தூண்டும் விதமாக ஏழுதியதே அவரது சிறப்பு. உதாரணத்திற்கு 1988இல் அவர் எழுதிய A Brief History Of Time.
ஓரளவிற்கு ஆர்வமிருந்தால் போதும் ஒரே மூச்சில் இந்தப் புத்தகத்தைப் படித்து விடலாம். படித்து முடிக்கும் பொழுது நீங்கள் விஞ்ஞானியாகியிருக்க மாட்டீர்கள்தான், ஆனால் விஞ்ஞானியாவதற்கு மிக முக்கியத் தேவையான அந்த பேரார்வம் உங்களிடம் வந்திருக்கும். அவருடைய இந்தப் புத்தகத்தை இளவயதில் படித்து அகத்தூண்டுதல் அடைந்து வானியற்பியல் படித்து முழுநேர விஞ்ஞானியானவர்கள் பலர். நானும் நினைத்திருக்கிறேன்: இந்தப் புத்தகத்தை என் பதின் பருவத்தில் படித்திருக்க வேண்டும் என்று. Better late than never தான் இல்லையா? 😉
எயின்ஸ்டினைப் போல் அவர் ஒரு ஜீனியஸ் இல்லை என்று சிலர் சொல்லுவார்கள். Leonard Susskind எழுதிய Blackhole War என்கிற புத்தகம் Hawkins உடன் நடந்த அறிவியல் வாக்குவாதம் பற்றியதே.
Hawking கருந்துளையில் எந்த ஒரு விஷயமும் கரைந்து போகும் என்று சொன்னார். Susskind இது அறிவியலின் அடிப்படையே மாற்றிவிடும் என்றார். எந்த ஒரு விஷயமும் மற்றொரு விஷயமாக மாற்றம் பேருமே தவிர என்றைக்கும் கரைந்து காணாமல் போகாது என்றார். இறுதியில் Susskind வென்றார். இப்போதைக்கு. அறிவியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை. இப்போதைக்கு இவ்வளவு தான் தெரியும். இன்னும் பத்து வருடங்களில் ஹாக்க்கின்சின் புத்தகத்தை படித்து யாராவது இன்ஸ்பையர் ஆகி விஞ்ஞானியாக வளர்ந்து கரிந்துளையை ஆராய்ச்சி செய்து Hawking தான் சரி என்று சொல்லலாம்.
அண்டத்தின் மீது தீராத காதல் கொண்ட Hawking ஒரு முறை ஜீரோ புவி ஈர்ப்பு விசையில் பயணம் செய்தார். அண்டத்தில் மனித இனம் பயணம் செய்து வேறு கிரகங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால் மனித இனம் அழிவது உறுதி என்றார் அவர். அவருடைய நாடி நரம்பு இரத்தம் புத்தி அனைத்தும் அண்டமே நிரம்பியிருந்தது.
அவர் ஜீனியஸ் இல்லை என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஜீனியஸ் என்ற ஒரு விஷயம் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவர் மிகச் சிறந்த விஞ்ஞானி இல்லை. ஆனால் இப்படிஸ் சொல்பவர்கள் ஒரு விஷயத்தை வசதியாக மறந்து விடுவார்கள் – அது Hawking அறிவியலுக்கு செய்த மகத்தான தொண்டு – அறிவியலை மக்களுக்கு கொண்டு சென்றது. இதுவே அவரது மகத்தான பணி. விலை மதிப்பில்லாத ஒன்று. வெகுசிலரே இதை செய்திருக்கிறார்கள்.
பல நூற்றாண்டுகள் பின் நோக்கி போய்க்கொண்டிருக்கும் இந்த உலகத்துக்கு இவரைப்போல இன்னும் நிறைய அறிவியல் தூதுவர்கள் தேவை. ஆனால் இவரது இடத்தை இன்று நிரப்புவதற்கு யாரும் இல்லை என்பதே உண்மை.
போய் வாருங்கள் Stephen Hawking. We’ll miss you.
Darwin Day 2013
For people in Singapore! Today Afternoon! Sorry for late post!
மதம் – குழந்தைகளின் மீதான வன்முறை
The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)
நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்
நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!
யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))
இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!
நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:
ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?
***
சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.
Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.
Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.
God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)
மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை
என்று சொல்கிறார் Hitchens.
பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.
எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?
ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.
அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!
பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!
***
நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.
அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.
சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.
சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்
என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.
***
நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?
1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?
(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)
***
சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.
அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.
முற்றிலும் உண்மை. 🙂
***