IPL விசில் போடு – 10: And the Juggernaut rolls on…

நேற்று பூனாவில் நடைபெற்ற சன்ரைசர்ஸ்க்கெதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

Following the recent trend, வெற்றி தோல்வி என மாறி மாறி கண்ணாமூச்சி காட்ட, சென்னை அணி 11ஆம் தேதி ஜெய்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. டாஸில் வென்ற தொனி ஆச்சரியமாக பேட்டிங் தெர்வுசெய்தார். அணியின் management அறிவுரை என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொண்டது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிட்சில் ஏகப்பட்ட விரிசல்கள் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். பின்னர் பவுலிங் செய்ய வரும்போது சுழல்பந்து வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு காரணமாகவும் இருக்கலாம்.

Par score 160 என்று இருக்கையில் சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. இதில் ராஜஸ்தான் அணி தானமாக கொடுத்த 10 வைட் ரன்கள் அடக்கம். தொடர்ந்து பேட்டிங் செய்த வந்த ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் முதல் மூன்று பந்தில் 3 பவுன்ரிகள், அடுத்து  ஓவரிலும் 2 பவுன்ரிகள் 1 சிக்ஸர் என அதிரடி துவக்கம் தந்தார். பவர் ப்ளேவின் முடிவில் 52 ரன்கள் குவிக்க ஆட்டம் சூடுபிடித்தது. நடுவில் கொஞ்சம் விக்கட்டுகள் விழ கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவையிருக்க ப்ராவாவோனின் ஓவரில் தோனி ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். கடைசி 2 ஓவரில் 28 ரன்கள் தேவையிருந்தது.

டி20 போட்டிகளில் கடைசி 5 ஓவர்களை death overs என்பார்கள். இந்த ஓவர்களில் ஆட்டத்தின் போக்கே மாற வாய்ப்புண்டு. 19வது ஓவரை வீச வந்த டேவிட் வில்லி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த போட்டியை மறக்க முயலுவார். கர்னாடகா ரஞ்சி வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 2 சிக்ஸர்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அந்த ஓவரில் மொத்தம் 16 ரன்கள் குவித்தது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவோவின் ஓவரில் ஜாஸ் பட்லர் ஒரு இமாலய சிக்ஸருடன் 2 ரன்களாக மூன்று முறை எடுக்க ராயல்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

You can’t win just because you are talented, you need to execute well.

சென்னை அணி இதை நன்றாக உணர்ந்திருக்கும். வழக்கமாக உணர்ச்சிவசப்படாத Captain Cool தோனி அன்று பேட்டியில் சென்னை அணி பவுலர்களை வருத்தெடுத்ததை பார்த்த பலரின் புருவங்கள் உயர்ந்திருக்கும்.

Will Dhoni’s reaction fire up the CSK bowlers என்ற கேள்வியுடன் ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான இன்றைய போட்டி மற்றொறு masterclass.  Not just a contest between table toppers, but a contest between the best bowling unit and the best batting unit என்பதால் சுவாரசியத்திர்க்கு பஞ்சமில்லை.  டாஸ் வென்ற தோனி வழக்கம் போல் பவுலிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக ஒதுங்கியிருந்த தீபக் சகார் உள்ளே வர பவுலிங் கொஞ்சம் வலுவடைந்தது.

ஆரம்பமே அமர்க்களமாக அமைய நான்காவது ஓவரில் தீபக் சகாரின் பந்தில் அலெக்ஸ் ஹால்ஸ் அவுட். இரண்டாவது விக்கட்டுக்கு தாவனும் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் வில்லியம்சன்னும் சேர்ந்து 123 ரன்கள் குவித்தனர். நியுசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் இன்னொரு Mr. Cool. மிக துல்லியமான திட்டமிடல், தன் அணி வீரர்களின் திறமையை முழுவதும் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றல், அலட்டிக்கொள்ளாத attitude என்று கேப்டன் பதவிக்கான முழுத்தகுதியும் உள்ளவர்.

நம் எம்.ஜி.யாரைப் போல் ஓடி ஓடி உழைக்கனும் என்று பாடியவாரே விளையாடுவார் என்று நினைக்கத் தோன்றும்.

ஸ்டைர்க் ரேட் 130 முதல் அதிகபட்சமாக 135 இருக்கும். ஆனால் பவுண்ரிகளும் சிக்ஸர்களூம் அதிகம் இருக்காது. பல சந்தர்ப்பங்களில் டேவிட் வார்னரை விட மிக சிறப்பாக அணியை வழிநடத்துகிறார். இன்னிங்ஸ் முடிவில் சன்ரைசர்ஸ் அணி 179 ரன்கள் குவித்திருந்தது.

பின்னர் விளையாட வந்த சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராயுடுவும் வாட்சனும் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆந்திராவுக்கே  கோங்குராவா என்று அம்பத்திபாகுபலிராயுடு வந்த ஓவ்வொறு பந்தையும் திருப்பதி லட்டாக மாற்றியது தான் highlight. ஒரு பக்கம் வாட்சன் விளாச மறுபக்கம் சன்ரைசர்ஸ் அணியின் ஒவ்வொறு ஸ்டார் பவுலர்களையும் பதம் பார்த்தார். 7 பவுண்ரிகளும் 7 சிக்ஸர்களும் பறக்க வெறும் 62 பந்துகளில் டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார்.

சென்னை அணியைப் பொருத்தவரை மும்பை இந்தியனஸ் அணியிடமிருந்துகளவாடியவீரர்கள் அனைவரும் மிகச் சிறந்த வீர்களாக உருமாரியது கொஞ்சம் அதிசயம். ப்ராவோ, டுவைன் ஸ்மித், ராயுடு, ஹர்பஜன் சிங் என அனைவரும் சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரை low capital with high returns என்ற முதலீடு வகையைச் சேர்ந்தவர்கள். யாரும் சோடை போனதில்லை.

எந்த ஒரு நிறுவனம் தன் ஊழியர்கள் மீது உண்மையான நம்பிக்கை வைத்து ஊக்கமும் அளிக்கின்றதோ அந்த அளவுக்கு அந்த ஊழியர்கள் தங்கள் திறனை வெளிக்கொணர்வார்கள்.

இதற்கு சென்னை அணியும் ராயுடு, வாட்சன் போன்ற வீரர்கள் சிறந்த உதாரணம். தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு பவுண்ரியும் சிக்ஸரும் தெரிக்க விட, சென்னை அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ddfsmuoxkaepamy

சன்ரைசர்ஸ் அணியைப் பொருத்த வரை புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, ரஷீத் கான், சித்தார்த் கவுல் என IPL போட்டிகளின் ஆகச் சிறந்த பவுலர்கள் இருந்தாலும் இந்த வருடத்தில் அவர்களுக்கெதிறாக மூன்று அணிகளின் வீரர்கள் (க்ரிஸ் கெய்ல், ரிஷப் பந்த், அம்பத்தி ராயுடு) சதமடித்திருப்பது விசித்திரம்.

கிட்டத்தட்ட ப்ளேஆஃப் சுற்றுக்கு தேர்வான நிலையில், இதே நாளில் நடந்த மற்றொறு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றதன் மூலம் சென்னை அணி தனது ப்ளேஆஃப் தேர்வை உறுதி செய்ததுசூரியன் கிழக்கில் உதிக்காமல் கூட போகலாம் ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போகாது என்று ரசிகர்கள் ட்வீட்டியது நியாயமானதே.

For yet another clinical performance, சென்னை அணிக்கும் ராயுடுவுக்கும் ஒரு சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 9: Kings, for a reason
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

போராடுவோம்

இருட்டில் வாழ்கிறாய் நீ
குருட்டு நம்பிக்கையோடு
வெளிச்சம் தேடித் தேடி
வெறகில் வெந்து சாவாய்
காணிக்கை பேரில் இங்கு
கல் சிலைக்கு
லஞ்சம் கோடி
கோடி குமியுது
உண்டியலில்
நாட்டில் ஆனால் பஞ்சம்

நிற்த்தாலும் மதத்தாலும்
பிரிந்துவிட்டோம்
மனிதாபிமானத்தை
நாமெல்லாம்
மறந்துவிட்டோம்
காசின் திருவிளையாடல் கண்டு
நாம் மயங்கி விட்டோம்
அடையாளம் நாம்
தொலைத்துவிட்டோம்
உரிமையை
இழந்துவிட்டோம்
நாம் இறந்துவிட்டோம்

அலட்சியம்
ஏழையின் உயிரென்றால்
அலட்சியம்
பணந்தான் நோயின்
மருத்துவம்
மருத்துவமணையின் அரசியல்

உதவிசெய்யத் தகுதி இருந்தும்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊனமாக நிற்கிறாய்
ஊமைகள் வாழுமிடத்தில்
வார்த்தைகளை விற்கிறாய்
வார்த்தைகளை விற்கிறாய்

நிலம் நீர் எங்கள் உரிமை
போராடுவோம்
எங்கள் வறுமைகள் ஒழிய
போராடுவோம்
புது புரட்சி உருவாக்கப்
போராடுவோம்
எங்கள் தலைமுறை காக்கப்
போராடுவோம்
எங்கள் கண்கள் தூங்கும் வரைப்
போராடுவோம்
எங்கள் இறுதி மூச்சுவரைப்
போராடுவோம்

போராடுவோம்
போராடுவோம்
போராடுவோம்
நாங்கள்
போராடுவோம்

*
ரஞ்சித்து ஆசம்யா ஆசம்..#காலா

IPL விசில் போடு – 9: Kings, for a reason

நேற்று பூனாவில் நடைபெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கெதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

முன்பு 3ஆம் தேதியில் கோல்கத்தாவுக்கெதிரான போட்டியில் 6 விக்கட் வித்தியாசத்தில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. Yet another sublime perfornance from the Kolkata boys! கிட்டத்தட்ட ஏனோ தானோ என்று விளையாடியது சென்னை. 20 ஓவர்களில் 177 ரன்களை மட்டுமே சென்னை அணியால் எடுக்க முடிந்தது. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், சென்னை அணியின் புது கர்ணப்பிரபு ஆசிப் தயவில், 18வது ஓவரில் கொல்கத்தா அணி வெற்றிவாகை சூடியது.

8 வருடங்களாயினும் mystery spinner ஆகவே வலம் வரும் சுனில் நரேன், நிடஹாஸ் கோப்பைக்கு பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் விளையாடும் தினேஷ் கார்திக், அணியின் ஆணிவேராக ஆன்ரே ரசில், 19 வயதுக்கு உட்பட்ட உலகப்கோப்பை கதாநாயகர்கள் சிவம் மவி மற்றும் ஷுப்மன் கில் என அந்த அணியில் ஹீரோக்களுக்கு பஞ்சமில்லை. ஓவ்வொரு போட்டிகளிலும் determination தெரிகிறது. Not just on the papers, களத்திலும் ஒரு balanced அணியாக விளையாடுகிறார்கள்.

இந்த IPL போட்டிகள் கிரிகெட்டையும் மட்டுமல்ல சிலசமயம் வாழ்க்கை பாடத்தையும் சேர்த்தே சொல்லித்த்தருகிறது.

கோல்கத்தா அணியின் புதுவரவு ரிங்கு சிங். உத்திரப்பிரதேச ரஞ்சிக் கோப்பை பேட்ஸ்மேன். அப்பா வீட்டுக்கு வீடு எரிவாயு சிலிண்டர் எடுத்துச் செல்லும் சாதாரண ஊழியர். திருமண வயதில் மகள். வருமானம் பெரிதாக இல்லாவிட்டாலும் மகனின் ஆர்வத்தையும் திறமையும் அறிந்து தான் கஷ்டபட்டாலும் பரவாயில்லை மகனின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நினைக்கும் typical middle class அப்பா. இம்மாதிரியானவர்களை பார்க்கும் போது நல்லா விளையாடுயா என்று எதிரணி ரசிகர்கள் கூட ஆதரிப்பார்கள். கஷ்டப்பட்டு அடிமட்டத்திலிருந்து மேலெழும்பி வந்தவர்களின் டிசைன் அப்படி.

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டி தனிரகம். சென்னை ரசிகர்கள் BP மாத்திரையுடன் போட்டிகளை காணவந்தது சசிக்காமல், பொருத்தது போதும் மனோகரா பொங்கி எழு என்று தோனி வசனம் சொன்னாறோ என்னவோ, சென்னையின் சர் ஜடேஜாவும் அணியின் புது தமிழ் புலவர் ஹர்பஜனும் பெங்களூர் பேட்ஸ்மென்களை பந்தாடினர்.

சென்னை அணியில் டூப்ளெசி, கரண் சர்மா, ஆசிப் ஆகியோருக்கு பதில் டேவிட் வில்லி, பழைய கர்ண பிரபு சர்துல் தாகூர் மற்றும் துருவ் ஷோரே. டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். கிட்டத்தட்ட எல்லா அணிகளும், போட்டி எங்கு நடந்தாலும் சரி, டாஸ் வென்றவுடன் பவுலிங் தேர்வு செய்வது வழக்கமாகிவிட்டது.

டாஸ் ஒன்றே போட்டியின் முடிவுகளை நிர்ணயுக்குமாயின் அந்த போட்டியில் யார் விளையாடினால் என்ன என்ற கேள்வியே பலர் மனதில் இப்போது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் டிகாக்குக்கு பதிலாக டிவில்லியர்ஸ். புது தெம்புடன் கலக்குவார் என்று எதிர்பார்புடன் காத்திருந்த ரசிகர்களூக்கு ஏமாற்றமே. மெக்கல்லம் சொற்ப்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, கோலி ஜடேஜாவின் முதல் பந்தில் கிளீன் போல்ட். உண்மையிலேயே நாம் தான் விக்கெட் எடுத்தோமா என்று அதிர்ச்சியில் இந்த விக்கெட்டை கொண்டாடுவதா வேண்டாமா என்று திருதிருவென விழித்த ஜடேஜாவின் நிலைமை பரிதாபமாக இருந்தது.

வெளிய வா, கவனிக்கறேன் என்பது போல் கோலி முறைக்க, நான் இல்லீங்க அண்ணா என்று ஜடேஜா பார்வையால் கெஞ்ச, தொலைக்காட்சி வர்ணணையாளர்கள் முதல் கடைக்கோடி ரசிகர்கள் வரை டிவிட்டரிலும் முகநூலிலும் ஜடேஜாவை வைத்து ஒரு நையாண்டி தர்பாரே நடத்தினர்.

பார்தீவ் பட்டேல் மற்றும் டிம் சவுத்தி தவிர்த்து அனைவரும் ஒரு இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய காப்டனின் அணி இப்படி IPL போட்டிகளில் கைப்பிள்ளை போல் இருப்பது ஆச்சரித்திலும் ஆச்சரியம். Stronger in papers but a punch bag in field doesn’t suit you RCB! வெறும் மூன்று பேட்ஸ்மென்களை வைத்து போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி தல என்றுசில பெங்களூர் ரசிகர்கள் சமூகவளைதளங்களில் புலம்புவது நியாமாகவே தோன்ருகிறது. Poor playing XI selection, not being able to manage the given resources, not being able to guide the team to victory என்று கேப்டன் கோலியின் மேல் ஏகப்பட்ட புகார்கள். இதையெல்லாம் தாண்டி கோலிக்குள் இருக்கும் பேட்ஸ்மெனும் அவதிக்குள்ளாவது தான் பரிதாபம்.

அடுத்து வந்த டிவில்லியர்ஸும் ஹர்பஜன் பந்தில் ஆட்டமிழந்தார். மியூச்சுவல் பண்ட் விளம்பரத்தின் இறுதியில் வரும் “Mutual Fund Investments are Subjected to market risk” என்று சொல்பவரின் வேகத்தை விட தோனி வேகமாக ஸ்டம்பிங் செய்தார். With a reaction timeof 0.16 seconds, தோனியின் வேகம் சிலிர்க்க வைக்கிறது.

dccbmf6wkaa3qyw

கொலி மற்றும் டிவில்லியர்ஸ்ஸின் விக்கெட் விழுந்தவுடன் கிட்டத்தட்ட 8 ஓவருக்குள்ளேயே ஆட்டம் முடிந்தது என்று ரசிகர்கள் ஆர்பரித்தனர். 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் வந்த சென்னை துவக்க ஆட்டக்காரர்கள் முன்பு போல் சிறப்பாக விளையாடவில்லை. உமேஷ் யாதவும் செகாலும் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.

ராயுடுவுன் ரெய்னாவும் ஒரளவு போட்டியை கட்டுக்குள் கொண்டுவர கடைசி 3 ஓவர்களில் 22 ரன்கள் தேவையாக இருந்த போது கொண்டுவந்த BP மாத்திரைகளை சென்னை ரசிகர்கள் எடுக்க தயாரானார்கள். அதுக்கெல்லாம் அவசியம் இல்லை என்று போல 18ஆவது ஓவரை வீச வந்த செகாலை தோனி பதம் பார்த்தார். இரண்டாவது பந்தில் அடித்த சிக்ஸர் மிட்விக்கெட் பவுண்ரியை தாண்டி ரசிகர்களிடம் சிக்கியது. மூன்றாவது பந்து வைட். ஒரு சுழர் பந்து வீரர் வைட் பந்து வீசுவது கிரிமினல் குற்றமாகவே பார்க்கபடுகின்றது. கோலிடம் அதிகாரம் இருந்தால் செகலை 7 வருடம் கடுங்காவல் சிறையில் தள்ளுவார் போலும். அடுத்து வந்த நான்காம் ஐந்தாம் பந்துகளும் சிக்ஸர்களாக பறக்க, கடைசி பந்தில் ப்ராவோ சிங்கிள் எடுக்க, சென்னை தன் அபிமான எதிரியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

dccbo4pxuaexnry

Technically a win or two should guarantee CSK to playoffs, ஆனால் ரசிகர்களை பொருத்தவரையில் யாரிடம் ப்ளேஆப் போட்டிகளில் விளையாடப் போகிறோம் என்றே பேச்சு. ஜடேஜாவும் ஹர்பஜனும் சேர்ந்து கூட்டாக 5 விக்கெட்டுகளை எடுத்தது சென்னைக்கு பெரிய ஆருதலாக இருக்கும். புது வரவு டேவிட் வில்லி மிக வேகமாக அதே சமயம் துல்லியமாக பந்துவீசுகிறார். இருந்தாலும் பவுலிங் விஷயத்தில் consistant ஆக இருப்பார்களா என்பதை அடுத்து வரும் சில போட்டிகளின் முடிவுகள் சொல்லும்.

சென்னையின் அடுத்த போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்க இந்த இடைப்பட்ட காலத்தில் மற்ற அணிகள் எவ்வாறு விளையாடுவார்கள் என்பதை சென்னை அணி மட்டுமில்லாது ரசிகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்கள். அதற்கேற்றவாறு சென்னை அணியும் தன் வியூகங்களை மாற்றும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

அதுவரை, சர் ஜடேஜாவுக்காகவும் ஹர்பஜனுக்காகவும் சூப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 8: Paradise lost… Paradise regained

Master of heart beat has done it again. பூனாவில் நடைபெற்ற டில்லிக்கெதிரான போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.

முன்பு 28ஆம் தேதியில் மும்பைக்கெதிறான போட்டியில் 8 விக்கட் வித்தியாசத்தில் மும்பை அணி இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வென்றது. பங்குபெற்ற 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வி என்ற நிலையில் கிட்டத்தட்ட இனி வரும் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் களத்தில் இறங்கியது மும்பை. கறை நல்லது என்று தோனி முடிவெடுத்தாரோ என்னவோ! ஆட்டம் ஆரம்பம்ந்தொட்டு ஒரு தோய்வு இருந்தது உண்மை. The contest clearly lacked a punch. தோற்றாலும் பரவாயில்லை, lets give a chance to young talents என்று தோனி நினைத்திருக்கலாம். கடைசி 2 ஒவர்களில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில், சென்னை அணியின் கர்ண பிரபு சர்துல் தாக்கூர் 19ஆம் ஓவரில் தன் தயாள குணத்துடன் 17 ரன்களை வாரி வழங்கினார். கதம் கதம் முடிந்தது முடிந்தது என்று பாபா ரஜினியின் வசனத்துடன ரசிகர்கள் வெளியேற, மும்பை 2 பந்துகள் மீதமிருக்க வெற்றி கண்டது.

நேற்றைய போட்டியில் எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம். தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று கம்பீர் அணித் தலைவர் பதவியிலிருந்து வெளியேர டில்லி அணிக்கு ஸ்ரெயஸ் ஐயர் புது காப்டனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டித்தொடரின் இடையே அணித்தலைவர் பொறுப்பு மாற்றப்படுவது இது முதல் தடவையல்ல. இருந்தாலும் கம்பீர் விஷயத்தில் கொஞ்சம் வித்தியாசம். களத்தில் இறங்கும் 11பேர் கொண்ட அணியிலிருந்தும் விலகி தன் வருட ஊதியம் (கிட்டத்தட்ட 2.8 கோடி) முழுவதும் அணிக்கு திருப்பி அளிக்க முடிவுசெய்துள்ளார். Take a bow Gambhir!

புது தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் பதவியேற்றதும் அதிரடி காட்டி கோல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் தனியொருவராக 93 ரன்கள் குவித்தார்.

சில நேரங்களில் சிலருக்கு பொறுப்புகள் அளிக்கப்படும் போது, அவர்கள் தங்களின் அணியை இன்னும் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்வார்கள்.

விராட் கோலி விஷயத்திலும் அவ்வாறே நடந்தது.

As the young guns lock horns with the old boys, போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்ற எண்ணம் பொய்யாகவில்லை. டில்லி அணி அதே 11பேருடன் விளையாட, சென்னை அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள். தாகூர், பில்லிங்ஸ், தீபக் சகார் மற்றும் இம்ரான் தாஹீர் வெளியேற, லுங்கி, கே எம் ஆசிப், கரன் சர்மா, டூப்ளெசி உள்நுழைந்தனர். டாஸ் வென்ற ஸ்ரேயஸ் சென்னை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

ஆரம்பமே அமர்களம் என்பது போல முதல் பந்திலேயே வாட்சனுக்கு life! அதன் பின் டூப்ளெசியும் சேர்ந்து கலக்க, பவர் ப்ளேயின் முடிவில் 56 ரன்கள் குவித்திருந்தது. டூப்ளெசியும் ரெய்னாவும் வெளியேற, அம்பத்தி “பாகுபலி” ராயுடு தன் பங்கிற்க்கு டில்லி பவுலர்களை பதம் பார்த்தார். Yet another master class from Dhoni – கடைசி 5 ஓவர்களில் மட்டும் 74 ரன்களை தோனியும் ராயுடுவும் குவித்தனர். Turning the clock என்பார்கள். தொனியின் விஷயத்தில் இந்த வாசகம் 100% பொருந்ததும். அடித்த 5 சிக்ஸர்களூம் simply brutal! ஏழு எட்டு வருடங்களூக்கு முந்திய தோனியை கண் முன் கொண்டுவந்தது. சில நேரங்களில் பேட்டின் நுனியில் பட்டு சிக்ஸர்கள் கிடைப்பதுண்டு. இவைகளை top edge என்பார்கள். அவ்வாறாக இல்லாமல் அத்தனையும் சரியான தீபாவளி சரவெடி.

ராயுடு IPL போட்டிகளுக்கு முன் தன் விக்கெட் யாருக்கும் கிடையாது, ரன் அவுட் தான் என்று வேண்டுதல்களோடு வந்தாரோ என்னவோ. கடந்த 4 போட்டிகளில் 3 முறை ரன் அவுட். அவ்வாறு அவுட் ஆகும் போதும் “பரவாயில்ல விடு தல, நீ நின்னு கலக்கு” என்று சொல்லாமல் சொல்லிச் செல்கிறார். இந்த ராயுடு புதுசு.

பார்ப்பவர்களுக்கு இது கிரிக்கெட் டீமா, அல்லது விக்ரமன் படமா என்ற சந்தேகம்.

அடுத்து பேட் செய்ய வந்த டில்லி போட்டியை தாரை வார்க்க தயாராக இல்லை. இரண்டு விக்கெட்டுகள் எடுத்தாலும், தாகூர் இல்லாவிட்டால் என்ன நானிருகிறேன் என்று தன் 3 ஓவர்களில் 43 ரன்களை கே.எம்.ஆசிப் தாராளமாக அள்ளி வழங்கினார். கேரளாவிலிருந்து புது வரவு. நம்மட போலர் வல்லிய போலர் என்ற நினைப்பிலிருந்த சேட்டன்களின் நினைப்பில் டில்லி வீரர்கள் கதக்களி ஆடியதை பார்க்க கொஞ்சம் பரிதாபமாகவே இருந்தது.

ஐந்தாவது விக்கடுக்கு ரிஷப் பந்தும் விஜய் சங்கரும் சேர்ந்து 88 ரன்கள் குவிக்க, சிக்ஸர்களூக்கும் பவுண்ரிகளூக்கும் பஞ்சமில்லை. Specialist death bowler ப்ராவொவையும் விட்டு வைக்கவில்லை. ஒரு பக்கம் ரிஷம் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் குவிக்க, 19வது ஓவரில் ப்ராவோவின் பந்துகளை சிக்ஸர்களாக விஜய் சங்கர் தெரிக்க விட, நிடஹாஸ் கோப்பையின் கெட்ட நிகழ்வுகள் ரசிகர்கள் மனதிலிருந்து அகலும் என்று நம்புவோமாக. கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவை என்ற நிலையிலும் விடாது முயர்ச்சித்த விஜய் சங்கர் கிட்டத்தட்ட வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையளித்தார். Well done young man! இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் பளிச்சென்று தெரிகிறார்கள்.

dcfc4ocu0aaa5tc1

சென்னையை பொருத்தவரை லுங்கி நம்பிக்கையளிக்கிறார். ஹர்பஜன் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை அதிகம் கொடுக்கவில்லை – economy rate is not bad. மற்ற போலர்கள் அதிகம் சோபிக்க வில்லை. கரன் சர்மாவுக்கு ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை. இந்த கேள்வியை கிரிக்கெட் வர்ணணையாளர்களூம் மறந்தது ஏனோ தெரியவில்லை! பவுலிங் மற்றும் பீள்டிங்கில் சென்னை அதிக கவனமாக இருக்க வேண்டும் – loopholes are getting bigger and bigger. ஒரு வேளை அடுத்த போட்டியில் டூப்ளெசிக்கு பதிலாக டேவிட் வில்லி களமிறங்கினால் நல்லதென தோன்றுகிறது.

வாட்சன் மற்றும் தல தோனியின் மற்றொறு கலக்கலான ஆட்டதிற்க்கும், table toppers சென்னை சூப்பர் கிங்க்ஸுக்கும் சேர்த்து,

ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:
IPL விசில் போடு – 7: The name is Dhoni
IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 7: The name is Dhoni

Yet another high scoring game! Yet another last over drama! சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன் வெற்றிக் கொடியை பெங்களூரிவிலும் நாட்டியது.

எப்படி மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டியில் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ, அவ்வாறே ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டிகளிலும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். சார், ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கும் பெங்களூருவுக்கும் என்ன சம்மந்தம்? யாராவது ஒரு கர்னாடகா ரஞ்சிக் கோப்பை வீரரை காட்டுங்கள் என்று நீங்கள் கேட்கலாம் – indeed you are right. கிட்டத்தட்ட எல்லா அணிகளும் இப்படித்தான். பெயரளவில் மட்டுமே தங்கள் ஊர்களை தாங்கி வருகின்றது. Welcome to IPL. அப்படியென்றால் சென்னை – ராயல் சாலஞ்சர்ஸ் போட்டிகளில் ஏன் சார் இவ்வளவு டென்ஷன்? தெரியவில்லை. ஒரு வேளை “அவங்க தண்ணி கொடுக்காத பசங்க சார்” என்று சென்னை ரசிகர்கள் விளக்கம் கொடுக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆட்டம் ஒரு classic T20 battle. ஒரு டி20 போட்டியின் சாமுத்ரிகா லட்சனங்கள் அத்தனையும் அடக்கம். சிக்ஸரிகளும் பவுண்ரிகளும் பறக்க, சில ரசிகர்கள் பிராத்தனைகளில் இறங்க, கடைசி ஓவரில் டென்ஷன் ஏற, அந்த டெப்ஷனில் அம்பையர்கள் சொதப்ப, சிறாஜ் வைடாக பந்துகளை போட, போட்டி அதகளம்.

dbppis4u0aat55i

டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு செய்தார். டூபெளசியும் கரன் சர்மாவும் வெளியேற, ஹர்பஜனும் இம்ரான் தாஹீரும் உள்நுழைந்தனர். ராயல் சாலஞ்சர்ஸ் அணியில் கிரிஸ் வோக்ஸுக்கு பதிலாக காலின் க்ராண்ட்ஹோம்.

ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டிகாக்கும் டிவில்லியர்ஸ்ஸும் மிகச்சிறப்பாக விளையாடினர். சில பேட்ஸ்மென்களின் ஆட்டத்தை பார்க்கும் போது இவர்கள் கிரிக்கெட் விளையாடவே பிறந்தார்களா எனத்தோன்றும். விவியன் ரிச்சர்ட்ஸ், கவாஸ்கர், குண்டப்ப விஸ்வனாத், சச்சின் டெண்டுல்கர், கோலி வரிசையில் டிவில்லியர்ஸையும் சேர்க்கலாம்.

கர்ணன் கவச குண்டகங்களொடு பிறந்தது போல் இவர்கள் ஹெல்மெட் பேட் சகிதம் பிறந்தார்களோ என்னவோ.

டிவில்லியர்ஸ் அடித்த சிக்சர்கள் அனைத்தும்  நின்று பேசும் அவர் புகழை. அவர் அடித்த 8 சிக்ஸர்களில் ஒன்று அரங்கத்தின் வெளியே சென்று கானாமலே போனது. அனேகமாக பெங்களூரில் தடுக்கி விழுந்தால் தென்படும் ஏதாவது சாப்ட்வேர் இஞ்சினியர் மேல் விழுந்திருக்கலாம.

ஒரு சமயத்தில் சென்னை அணிக்கு இலக்கு 230லிருந்து 240 வரை இருக்கும் என்று கூட தோன்றியது. சரியான நேரத்தில் இம்ரான் தாஹீர் டிவில்லியர்ஸ் விக்கட்டை எடுக்க அட்டத்தின் momentum சற்று கட்டுக்குள் அடங்கியது. பின்னால் வந்த மந்தீப் சிங்கும் வாஷிங்டன் சுந்தரும் தன் பங்குக்கு விளாச 20ஆம் ஓவரின் முடிவில் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 205 ரன்கள் குவித்தது.

இந்த ரன் குவிப்பை வேறொறு கோனத்தில் பார்க்கும் போது டி20 போட்டிகள் கடந்த சில ஆண்டுகளில் கொண்டுவந்த பரிணாம வளர்ச்சிகள் தான் காரணமோ எனத் தோன்றுகிறது. சிறிய மைதானம், பவுலர்களுக்கு சற்றும் உதவாத பிட்ச், lightning fast outfield என அனைத்தும் பேட்ஸ்மென்களுக்கு ஆதரவான ஒரு அம்சங்கள். இதன் காரணமாக பெங்களூரு போன்ற மைதானத்தில் 190 என்பதே ஒரு par score. இதன் காரனமாக டி20 என்றால் என்ன? Is it a sheer exhibition of muscle strength? என்ற கேள்வி வராமல் இல்லை. இதன் அடுத்த பரிணாம நிலை என்னவாக இருக்கும் என்பதை யாரெனும் கணிக்க முடியுமா என்பதே அடுத்த கேள்வி. காலமே இதற்கு விடை கூறட்டும்.

dbtfcgmwkaizr4s

டி20 போட்டிகளில் திறமை இருந்தாலும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ராயல் சாலஞ்சர்ஸ் அணியைப் பொருத்தவரை சற்று அதிர்ஷ்ட்டமில்லா அணியென்றே தோன்றுகிறது. பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும் நாரோடு சேர்ந்த பூவும் நாரும் என்பதற்கேற்ப்ப கோலி, டிவில்லியர்ஸ் போன்ற தலை சிறந்த ஆட்டக்காரர்களின் முயற்சி அனைத்தும் வீனாவது கொஞ்சம் துரதிஷ்டம் தான்.

சென்னையின் வாட்சன், ரெய்னா, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஜடேஜா 9 ஓவர்களுக்குள் வெளியேற சென்னை 74 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் ஏற ஆரம்பித்தது. ஐந்தாவது விக்கட்டுக்கு ராயுடுவும் தோனியும் 100 ரன்கள் சேர்க்க ரசிகர்கள் கொஞ்சம் கூல் ஆனார்கள். கடைசி 5 ஓவர்களில் கிட்டத்தட்ட 70 ரன்கள் தேவையிருக்க தோனி தான் டி20 போட்டியின் முடிசூடா மன்னன் என மற்றொறு முறை அறிவித்தார். ஒவ்வொறு ஓவரிலும் கணக்காக இலக்கை வைத்து ரன் குவிக்க, சிக்ஸர்கள் பறக்க சின்னசாமி அரங்கமே அதிர்ந்தது.

தன் impact bowlers உமேஷ் யாதைவையும் செகாலையும் 13  ஓவருக்குள்ளேயே தங்களின் 4 ஓவர்களை முடித்தது ஏனென நெட்டிசன்கள் புலம்பாமல் இல்லை. சென்னையைப் போலவே ராயல் சேலஞ்சர் அணியின் பவுலிங் சொதப்பல்கள் அப்பட்டமாகவே வெளிப்பட்டது. 18வது ஓவரில் ராயுடு ரன் அவுட்டாக, காலன் கரிகாலன் ப்ராவோ தன் பங்கிற்க்கு 20வது ஓவரில் ஒரு பவுன்ரியும் சிக்சரும் விளாச, தோனி தன் trademark (2011ஆம் உலககோப்பை இறுதிப்போட்டி) ஷாட்டுடன் ஒரு சிக்ஸர் அடிக்க, இரண்டு பந்துகள் மீதமிருக்க சென்னை அட்டகாசமான வெற்றி கண்டது.

dbptclevmaanqp_

Nothing like beating the opponent in their own backyard!

சென்னை சூப்பர் கிங்ஸ் மறுபடியும் table toppers. தங்களின் தொடர் வெற்றியை தக்கவைக்க முனைவார்கள். ராயல் சாலஞ்சர் அணி playoff தகுதிசுற்றுக்கு தகுதிபெறுவது சந்தேகமே எனத்தோன்றுகிறது. கிட்டத்தட்ட பாதி போட்டிகள் முடிவடைந்த நிலையில் இனி எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற முனையவேண்டும்.

தல தொனியின் மற்றொறு கலக்கல் ஆட்டத்திற்காக ஒரு சுப்பர் விசிலுடன்,

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!
IPL விசில் போடு – 5: பைசா வசூல்!
IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
IPL விசில் போடு – 3
IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!
IPL – விசில் போடு – 1

ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே!

இனி சென்னை சூப்பர் கிங்ஸின் போட்டிகளூக்கு முன் “பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்பிணி பெண்கள் பார்க்க வேண்டாம்” என்ற எச்சரிக்கை அறிக்கை வெளியிட வெண்டும். கடந்த ஆண்டுகளைப் போலவே இம்முறையும் கடைசி பந்து வரை போட்டியை இழுத்து ரசிகர்களை நுனி நாற்காலியில் உட்கார வைத்து, தங்கள் நகங்களை கடிக்க வைத்து, Masters of the heartbeat என்று அவர்களை முகநூலில் வழக்கம் போல கதற வைத்தார்கள்.

In the battle of Southern spices, it is always the Andhra flavor that adds more taste.

ஆந்திராவுக்கே ஊருகாயா என்று ராயுடு விளாச, சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசஸ் அணியை வென்றது.

உடல் நிலை காரணமாக இம்ரான் தாஹிர் வெளியேற டூப்ளெசிக்கு வாய்ப்பு கிடைத்தது. ஹைதராபாத் அணியில் ஷிகார் தவான் வெளியேற மற்றொறு ஆந்திரா வீரர் ரிக்கி புய்க்கு வாய்ப்பு கிடைத்தது. டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். முன்பு நடந்த போட்டி போல் அல்லாமல் மிக மெதுவாக கணக்கை துவக்கியது சென்னை. இந்த வருடம் நடந்த IPL போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் ஆக குறைவான் ரன்களை, அதாவது 27 ரன்களை மட்டுமே எடுத்தது. பத்தாவது ஓவரின் முடிவில் வெறும் 50 ரன்களே எடுத்திருந்தது. அந்த நிலையில் 20வது ஓவரின் முடிவில் 120 ரன்களாவது எடுக்குமா என்றே தோன்றியது.

Hats off to the Sunrisers bowlers, முதல் 10 ஓவர்களில் மிக துல்லியமாக பவுலிங் செய்தனர். துவக்க ஆட்டக்காரராக வந்த டூப்ளெசியாலும் வாட்சனாலும் நிறைய பந்துகளை connect செய்ய முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியை பொருத்த வரை, பவர்ப்ளே ஓவர்களில் இரண்டாவது ஆக குறைவான  economy rate உடையவர்கள். புவவேஷ்வர், ரஷீத் கான், பில்லி ஸ்டான்லேக், கிரிஸ் ஜோர்டான் போன்ற சிறந்த சர்வதேச பவுலர்களையும், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, பசீல் தம்பி போன்ற உள்ளூர் பவுலர்களும் அந்த அணியில் உள்ளது மிக சிறப்பான ஒன்றாகும்.

குறிப்பாக ரஷீத் கான் – comes with a very high expectation. ஆப்கானிஸ்தானுக்கும் சுழற்பந்து பவுலிங்கிற்கும் என்ன connection என்று நீங்கள் கேட்டால் டி20 போட்டிகளில் அவர்களின் கடந்த ஆண்டு சாதனைகளை பார்க்க வேண்டும். இந்த ஆண்டு நடந்த ஏலத்தில் சன்ரைசர்ஸ் அணி ரஷீத் கான் (9 கோடி), மொஹமத் நபி (1 கோடி), பஞ்சாப் அணி முஜீப் உர் ரெஹ்மான் (4 கோடி), ராஜஸ்தான் அணி ஜகீர் கான் (60 லட்சம்) ஆகிய சுழர் பந்து வீரர்களை வாங்கியது. That’s a nice way to recognize an associate nation!

கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு – ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீரர்களுக்கு சென்ற இடமெல்லாம் வாய்ப்பு.

ஆஸ்திரேலிய வீரர்களூம், தென் ஆப்ரிக்க வீரர்களூம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த IPL போட்டிகளில் ஆப்கானிஸ்தான் வீரர்களூம் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மிகப் பெரிய மாற்றம்!

Returning back to today’s wonderful contest, ராயுடு 37 பந்துகளில் 79 ரன்களை விளாசித் தள்ளினார். அவர் அடித்த ஒனபது பவுண்ரிகளும் நான்கு சிக்ஸர்களும் – treat to the eyes. தன் பங்கிற்க்கு Mr. IPL ரெய்னாவும் 54 ரன்களை குவிக்க விறுவிறுப்பு கூடியது. 3வது விக்கட்டுக்கு இருவரும் 112 ரன்கள் சேர்த்தனர். அதன் பின் வந்த தோனியும் தன் பங்கிற்க்கு ஒரு சிக்ஸரும் மூன்று பவுண்ரிகளூம் அடிக்க 182 ரன்களை சென்னை அணி குவித்தது. கடைசி 11 ஓவர்களில் மட்டும் சென்னை அணி 141 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த சன்ரைசர்ஸ் அணி தீபக் சகாரின் பந்தில் சிக்கித் திணறியது. வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு விக்கட்டுகளை வீழ்த்தினார் சகார். There is always a connection between CSK and uncapped seamers! மன்ப்ரீத் கோனி, மோஹித் சர்மா வரிசையில் தீபக் சகார் மற்றும் ஷர்துல் தாகூரையும் சேர்க்கலாம். It’s not about spending big money, but about finding talents என்பதே சென்னையின் யுக்தியாக இருந்து வருகிறது!

பின்னால் வந்த சன்ரைசர்ஸ் அணியின் கேன் வில்லியம்சன் தான் டேவிட் வார்னருக்கு சற்றும் சளைத்தவரல்ல என்பதை நிருபித்தார். 51 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றியின் விளிம்பிற்க்கு தன் அணியை அழைத்துச் சென்றார். 18 மற்றும் 19 ஓவர்களில் கேன் வில்லியம்சனும் யூசப் பதானும் வெளியேர, 19 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்து வந்த ரஷீத் கான் கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் பவுன்ரிகளூம் விளாச, சென்னை ரசிகர்கள் முகத்தில் டென்ஷன் டென்ஷன் டென்ஷன் ! கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில் ப்ராவொவின் துல்லியமான யார்கரில் ஒரே ஒரு ரன் மட்டுமே எடுக்க, சென்னை ரசிகர்கள் மூச்சு விட ஆரம்பித்தனர்!

Yet another match, yet another hero – இந்த வழியில் ராயுடுவிம் சகாரும் திருப்புமுனை தந்தனர்!  Loss against a quality team is a pride – பாராட்டுக்கள் சன்ரைசர்ஸ் அணி. 2013ஆம் வருடத்திற்க்குப் பிறகு வார்னரும் தாவனும் ஒன்றாக களமிறங்காத முதல் போட்டி என்ற நிலையில் தங்கள் திறனில் பெருமை கொள்ளலாம்!

dbzthmuvqaq-suy

For another nail biting finish and for bringing back the excitement, ஒரு பெரிய விசிலுடன்

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 5: பைசா வசூல்!

சென்னை சூப்பர் கிங்ஸின் புது வீட்டின்கிருஹப்ரவேசம்இனிதாக முடிந்தது! தன் புது வீடான பூனாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலாக வெற்றி கண்டது.

பூனாவில் நடைபெற்ற போட்டியைக் காண சென்னை ரசிகர்களை சூப்பர் கிங்ஸ் அணி  “விசில் போடு எக்ஸ்பிரஸ்” என்ற சிறப்பு ரயிலில் ஆழைத்துச் சென்றது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. உணவு, தங்கும் இடம் மற்றும் நுழைவு சீட்டு என அனைத்தும் இலவசம். இது போல கடந்த காலத்தில் ஒரு அணி தன் ரசிகர்களூக்காக மெனக்கெட்டு ஏற்ப்பாடு செய்திருக்குமா என்பது சந்தேகமே. IPL போட்டிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொறு இடத்துக்கு மாறுவது இது முதல் தடவையல்ல. 2010ல் தெலுங்கானா பிரச்சைனையின் காரணமாக டெக்கான் சார்ஜஸ் அணியின் போட்டிகள் அனைத்தும்  ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது. ஆனால் இதுபோல் எந்த அணியும் தன் ரசிகர்களுக்காக முயற்ச்சியில் இறங்கியதில்லை, especially when money is the driving factor in IPL. ரசிகர்களூக்கும் தனக்கும் இடையில் இருக்கும் இணக்கத்தை/நெருக்கத்தை சென்னை அணி போல எந்த அணியும் ஏற்படுத்தியதில்லை என்றே கூறலாம்.

You can take away CSK matches from Chennai, but you cannot take away CSK from Chennai fans!

ஒரு வேளை திருவிளையாடல் திரைப்படத்தை இப்போது எடுத்திருந்தால் “பிரிக்க முடியாத்து என்னவோ?” என்ற கேள்விக்கு “சென்னை சுப்பர் கிங்சும் ரசிகர்களும்” என்ற பதில் வந்திருக்கலாம்.

Well done CSK!

சென்ற போட்டியின் போது காயமடைந்த தோனி இம்முறை களமிளங்குவாரா என்ற சந்தேகம் இருந்தாலும் தல தோனியைக் காண 21 மணி நேரம் பயணம் செய்த ரசிகர்கள் ஏமாற்றமடையவில்லை. மணிக்கொருதரம் தமிழில் ட்வீட்டும் திருபஜன் சிங் என்ற  ஹர்பஜனும், முரளி விஜயும் வெளியேற, ரெய்னாவும் கரன் சர்மாவும் களமிறங்கினர். டாஸ் வென்ற ரகானே சென்னை அணியை பேட் செய்ய அழைத்தார். Win the toss and ask the opponent to bat first seems to be the new trend these days. தன் போலர்கள் மீதுள்ள நம்பிக்கையின்மையா அல்லது பின்னால் எந்தவொரு இலக்கையும் சந்திக்கலாம் என்ற தன் பேட்ஸ்மென் மீதுள்ள நம்பிக்கையா? தெரியவில்லை.

முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்திருக்க வேண்டிய வாட்சனுக்கு இரண்டு முறை அதிர்ஷமடித்தது. ராகும் த்ரிபாதி இருமுறை வாட்சன் கொடுத்த catch-சை தவறவிட, அதற்கு ராஜஸ்தான் 98 ரன்கள் நஷ்டயீடு கட்ட வேண்டியிருந்தது. Catches win matches என்பார்கள் – குறிப்பாக டி20 போட்டிகளில் யாரோ ஒருவரின் மேலான்மை இருக்கும். அது பவுலர்களாகவும் இருக்கலாம், பேட்ஸ்மென்களாகவும் இருக்கலாம். வந்த வாய்ப்பை தவற விட்டால் போட்டியை இழக்க வேண்டியது தான். ஒரிரண்டு ஓவர்களில் போட்டியின் சூழலே மாறும் தன்மையுடையது டி20 போட்டிகள். ரெய்னா ஒரு பக்கம் பவுண்ரிகளாக அடிக்க வாட்சன் மறுபக்கம் சிக்ஸர்களாக வீசினார். அடுத்துதடுத்த வந்த ஓவர்களில் வாட்சன் சிக்ஸர்களும் பவுண்ரிகளும் தெரிக்கவிட, 6 ஓவர்களின் சென்னை அணி 69 ரன்கள் எட்டியது.

சென்ற முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய வாட்சன் சென்னை அணிக்கெதிராக சதமடிக்க, இந்த முறை, சென்னை அணிக்காக விளையாடி ராஜஸ்தான் அணிக்கெதிராக சதமடித்தார். சின்ன கல்லு பெத்த லாபம் என்ற யுக்தியை ஏலத்தின் போது கையாண்ட சென்னை அணி கிட்டத்தட்ட அனைவரையும் குறைந்த விலைக்கு வாங்கியது. வாட்சனை 4 கோடிக்கு வாங்கிய போது சென்னை அணியை அதன் ரசிகர்களே கேலி செய்தனர். அதே ரசிகர்களின் மனநிலை இன்று மாறியிருக்கும்! அவர் அடித்த 6 சிக்ஸர்களும் 9 பவுண்ரிகளும் spotless!

நேற்றைய போட்டியில் சதமடித்த கெயிலும் சரி, இன்றைய போட்டியில் சதமடித்த வாட்சனும் சரி,

ஏலத்தில் எடுத்தாரா ஒறுத்தல் அவர்

நாண சதமடித்து விடல்

என்று IPL குறள் வழி age is just a number என்பதை தன் பழைய அணிக்கு சொல்லாமல் சொல்லிச் சென்றனர்.

dbp9hmbwsaahtcu

ஏலத்தின் போது பெரிய அளவில் எதிர்பார்புடன் வாங்க்கப்பட்ட ஜெயதேவ் உனாட்கட்டும், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்சும் பெரிய அளவில் கைகொடுகாதது ராஜஸ்தான் அணிக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். பேட்டிங்கில் முனைப்புடன் விளையாடாது, வந்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டது என்று மேலும் சொதப்பல்கள். கோலிக்கு நிகராக கருதப்பட்ட ரஹானே பவர்ப்ளே 6 ஓவர்களில் 5 பவுளர்களை மாற்றியது சற்று ஆச்சரியத்தை தருகிறது. 205 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் 140 ரன்களுக்கு சுருண்டது.

மற்ற அணிகள் கிட்டத்தட்ட ஒரே ஆட்டக்காரர்களை தன் வெற்றிக்காக நம்பியிருக்க, சென்னை அணியின் ஒவ்வொரு போட்டிகளிளும் ஒவ்வொரு ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சியடைய வைத்திருக்கும்.

தோனியும் இளைய தளபதி விஜய் போல ஒரு தடவை முடிவெடுத்தா தன் பேச்சை தானே கேட்க மாட்டார் – தன் set ஆன அணியில்  மாற்றத்தை கொண்டுவர விரும்பமாட்டார். டூப்பிளசி, டேவிட் வில்லி போன்ற வீரர்களூக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே எனத்தோன்றுகிறது. இனி வரும் போட்டிகளில் எவ்வகையான மாற்றத்தை கொண்டுவருவார் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அது வரை, வாட்சனின் சததிற்காகவும், table toppers CSK காகவும், ஒரு பெரிய விசிலுடன்.

ஹரிஹரன்.

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

IPL விசில் போடு – 3

IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

IPL – விசில் போடு – 1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

ஃபன்றி/Fandry – ஒரு நிமிட பார்வை

சாய்ராட் என்கிற மிகப்பிரபலமான மராத்தி மொழி திரைப்படத்தைப் பார்க்காதவர்கள் உடனடியாகப் பார்த்துவிடவும். நாகராஜ் மஞ்சுளே இயக்கிய இந்தத் திரைப்படம் சாதிய அடுக்குகளையும், சாதி பொதுமக்களுக்குத் தரும் போதையையும், அந்த போதையினால் அவர்கள் யாரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள் என்பதையும் அழகாக ஒரு கத்தியை எடுத்து மெதுவாக உங்கள் நெஞ்சில் பொறுமையாக இறக்குவதைப் போல இறக்கும். பாடல்கள் எல்லாம் இளையராஜா ரகம். இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் நாங்கள் இளையராஜாவின் ரசிகர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ராட்டுக்கு முந்திய படம் தான் ஃபன்றி (Fandry). ஃபன்றி என்று உச்சரிப்பு ஆனால் உண்மையில் பன்றி என்று தான் அர்த்தம். உண்மையில் மராத்திக்கும் தமிழுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. மராத்தி திராவிட மொழி என்று ஒரு தியரி இருக்கிறது. ஆனால் தமிழுக்குத்தான் மராத்தி நெருக்கம். சிவாஜியின் (நடிகர் சிவாஜி இல்லை. சிவாஜி படத்தில் நடித்த சிவாஜி ராவ் ரஜினியும் இல்லை. சத்ரபதி சிவாஜி) தம்பி வெங்கோஜி தஞ்சாவூரில் அமைத்த ராஜ்ஜியத்தால் தஞ்சாவூர் மராத்தியார்கள் என்கிற பிரிவு உண்டானது. அப்போ நடந்த மொழிப்பரிமாற்றத்தில் பன்றி இடமாறியிருக்கக்கூடும். பன்றிக்கு தமிழ் ஆதிச் சொல் ஒன்று இருக்கிறது. வராகம். ஒரு நிமிடம் ஆச்சா? 🙂

ஜப்யா என்கிற தீண்டத்தகாத டீன் ஏஜ் சிறுவன் ஒரு தலையாக தன்னுடன் படிக்கும் ஷாலு என்கிற மேல் சாதி டீன் ஏஜ் சிறுமியைக் காதலிக்கிறான். அவனுடைய அப்பா அந்த ஊரில் மற்றவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டு சொற்ப வருமானத்தில் வாழ்கிறார். ஜப்யாவுக்கு இரண்டு அக்காக்கள். முதல் அக்காவுக்கு திருமணம் முடிந்து வீட்டோடு வந்துவிடுகிறார். இரண்டாவது அக்காவிற்கு திருமண ஏற்பாடாகிறது. ஜப்யாவின் காதல் நாளுக்கு நாள் முற்றிக்கொண்டே போகிறது.

அதே ஊரில் சைக்கிள் கடை வைத்திருக்கும் நாகராஜ் மஞ்சுளே (டைரக்டர்) ஜப்யாவுக்கு ஆதரவாக இருக்கிறார். அந்தப் பெண் ஜப்யாவை லவ் பண்ண வேண்டுமென்றால்: கருப்பாக இருக்கும் ரெட்டைவால் குருவியைப் பிடித்து, அதை எரித்து அந்த சாம்பலாக்கி அதை ஷாலுவின் மேல் தூவினால் மட்டுமே நடக்கும் என்று கூறுகிறார். ரெட்டைவால் குருவியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது பையனுக்குத் தெரியவில்லை.

ரெட்டைவால் குருவியை ஜப்யா தேடி அலைகிறான். ஜப்யாவுக்கு ஜீன்சும் டீ சர்ட்டும் போட வேண்டும் என்று ஆசை ஆனால் காசில்லை. குச்சி ஐஸ் செய்து நாகராஜின் சைக்கிள் கடையில் சைக்கிள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு டவுனுக்குப் போய் அதை விற்று, ஜீன்ஸ் வாங்க பணம் சேர்க்கிறான். ஒரு முறை அப்படிச் செல்லும் போது, ஒரு பறவை விற்கும் கடையைப் பார்க்கிறான். உள்ளே ரெட்டைவால் குருவி இருக்கும் என்று நினைத்து, அவசரமாக சைக்கிளை அருகே நிற்கும் வேனில் சாய்த்து நிறுத்தி விட்டு, உள்ளே ஓடோடுகிறான். வேன் ரிவெர்ஸ் எடுத்து, சைக்கிளை நசுக்கி விடுகிறது. ஜீன்ஸ் கனவு டமால்.

அந்த கிராமத்தில் திருவிழா வருகிறது. அந்தக் கிராமம் பன்றியைத் தீட்டாகக் கருதுகிறது. ஒரு முறை பள்ளியில் ஷாலுவின் அக்காவை பன்றி தீண்டிவிடுகிறது. ஷாலு, உடனே அக்காவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுகிறாள். அக்கா தீட்டு நீங்க, குளிக்கிறாள். அம்மா தீட்டு நீங்க கோமியம் தெளிக்கிறாள். ஷாலுவும் வாலண்டியராக தனக்கும் தெளிக்கும் படி கேட்டு வாங்கிக்கொள்கிறாள்.

அந்த திருவிழாவில் தேர் தூக்கும் பொழுது, ஒரு பன்றி தேர் தூக்குபவரைத் தீண்டி விடுகிறது. தேர் தூக்குபவர் பதறிப் போய் தேரை விட்டுவிடுகிறார். அபசகுனம் ஆகி விடுகிறது. ஊர் தலைவர் ஜப்யாவின் அப்பாவை அழைத்து அந்தப் பன்றியைப் பிடிக்கச் சொல்கிறார். ஜப்யாவின் அப்பா இன்னும் ரெண்டு நாளில் திருமணம் இருக்கிறது என்றும் பிடிக்க முடியாது என்றும் கூறுகிறார். ஊர் தலைவர் வேணுமின்னா பணம் தருகிறேன் என்று சொல்கிறார். பணத்தை வாங்கிக்கொண்ட ஜப்யா,தான் மட்டும் எப்படிப் பிடிப்பது என்று கேட்க, உன் குடும்பத்தை அழைத்துக்கொள் என்று சொல்கிறார் தலைவர்.

காலை மொத்த குடும்பமும், மணப்பெண் உட்பட பன்றி பிடிக்கக் கிளம்புகிறது. ஜப்யா ஷாலுவின் கண்களில் பட்டுவிடாமல் ஒளிந்து கொள்கிறான். அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் சென்றபிறகு, நிம்ம்திப் பெருமூச்சு விட்டு வெளியே வருகிறான். ஒரு கும்பல், பன்றி பிடிக்க பன்றிக் குடும்பம் என்று கேலி செய்கிறது. ஒரு கிரிக்கெட் மேட்சை ரசிப்பது போல அவர்கள் இந்தக் குடும்பம் பன்றி பிடிப்பதை ரசிக்கிறார்கள். ஒருவன் ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட்டோ கூடப் போடுகிறான்.

ஒரு வழியாக பன்றியை கார்னர் செய்து விடுகிறார்கள், கயிற்றை பன்றியின் கழுத்தில் போட ரெடியாகும் பொழுது, தேசிய கீதம் ஒலிக்கிறது. அப்படியே நின்று விடுகின்றனர். பன்றிக்குத் தெரியுமா அது தேசிய கீதம் என்று? பன்றி ஓடி விடுகிறது.

பன்றியைப் பிடிக்கவைத்து, தங்களைப் பன்றியைப் போல நடத்தும் இந்த தேசத்தின் தேசிய கீதம் அவர்களுக்குமானதா?

ஓடிய பன்றியைத் தேடி குடும்பமே நாயாய் பேயாய் ஓடுகிறது. பள்ளி மதியச் சாப்பாட்டுக்கு மணியடித்து விடுகிறது. ஷாலு வந்து விடுவாளே என்று பயந்து ஓடி ஒழிந்து கொள்கிறான். பன்றியைக் காணாது செம கடுப்பில் இருக்கும் ஜப்யாவின் அப்பா ஜப்யாவை வெறி கொண்டு தேடத் தொடங்குகிறார். ஒழிந்துகொண்டிருக்கும் ஜப்யா கருப்பான ரெட்டைவால் குருவியைக் காண்கிறான். மெதுவாக ஓசையெழாமல் அமர்ந்து குருவியை அடிக்க, குருவியின் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டே, ஒரு சிறு கல்லை எடுக்கக் குனிகிறான். ஜப்யாவின் அப்பா அவனைத் தேடிக்கொண்டு வந்துவிடுகிறார். கடுங்கோபத்தில் வந்தவர், அவனை வெளியே இழுத்துவந்து ஊர் முன்னிலையில், ஷாலு முன்னிலையில் அடித்துத் துவைக்கிறார். ஷாலு எள்ளி நகையாடுகிறாள். ஜப்யா கூனிக்குறுகிப்போகிறான்.  நீண்ட கஷ்டத்திற்குப் பிறகு குடும்பம் பன்றியைப் பிடிக்கிறது. ஷாலு இதை அனைத்தையும் தன்னுடன் இருப்பவளுடன் கேலி பேசி ஹைஃபை செய்து ஒரு விளையாட்டு போல ரசிக்கிறாள்.

மணப்பெண்ணும் ஜப்யாவும் ஒரு கட்டையில் பன்றியைத் தொங்கப்போட்டுக்கொண்டு தூக்கிக்கொண்டு போகிறார்கள். ஊர் நின்று வேடிக்கை பார்க்கிறது. ஷாலுவும் தான். ஒரு கும்பல் அவர்களை கேலி பேசிக்கொண்டு கூடவே வருகிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த ஜப்யா, கடும் சினம் கொண்டு அவர்களைத் தாக்கத் தொடங்குகிறான். பிறகு கடைசியாக ஒரு கல்லை எடுத்து அவர்களின் மீது எறிகிறான். அந்தக் கல் வேகமாக காற்றில் பயணித்து காமெராவின் லென்சை உடைக்க வருகிறது. அதோடு படம் முடிகிறது.

ஜப்யா கல் எறிந்தது உங்கள் மீதும் என் மீதும் தான். ஒரு நிமிடம் ஆச்சா?

IPL விசில் போடு – 4: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காவிரி பிரச்சனையின் காரணமாக சென்னையில் நடக்கவிருந்த போட்டிகள் அனைத்தும் பூனாவிற்க்கு மாற்றப்பட்டது. இது தமிழர்களூக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்வுகளால் கர்னாடகா மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு சித்தம் தெளிவாகி காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தண்ணீரை திறந்து விடுவாரென நம்புவோம். அப்படியே சனி ஞாயிற்றுக் கிழமைகளிளும் சீரியல் ஒளிபரப்பும் சேனல்களையும் தமிழ்நாட்டிலிருந்து உப்புமாவையும் தடை செய்ய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட சிலர் டுவிட்டரிலும் முகநூலிலும் அனல் பரக்க ஆவேசமாக முழங்கினர். இவர்கள் கோரிக்கைகளையும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளூம் என்றும் நம்புவோமாக.

Yet another high scoring game, yet another dramatic end!

197 என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்ஞாப் அணியிடம் தோல்வியடைந்தது. ப்ரீத்தி ஜிந்தா ஆனந்த நடமாட, ரசிகர்கள் ஆர்பரிக்க, அஷ்வின் T20 போட்டிகளில் தன் value என்ன என்பதை நிரூபித்தார். எதிர்பாராத விதமாக கெயிலை களமிரக்கியது, சரியான நேரத்தில் ராயுடுவை ரன் அவுட்டாக்கியது, மோஹிட் சர்மாவுக்கு தைரியமாக கடைசி ஓவரை கொடுத்தது ஏன்று அனைத்தும் master stroke.

அஷ்வினும் தோனியும் எதிரெதிர் அணியினர் என்று விளையாடும் நிலை சென்னை ரசிகர்களை சற்று எரிச்சலையடைய வைத்திருந்தாலும், this is the beauty of IPL என்ற எதார்த்தத்தை உணர்ந்தாக வேண்டும். இருவரும் டாஸ் நேரத்தில் சந்தித்துக் கொள்ளூம் போது உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே என்று சென்னை ரசிகர்கள் சோகமாக பாடியிருக்க கூடும். டாஸ் வென்ற தோனி பஞ்ஞாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

அணிகள் மாறியிருந்தாலும் இருவரும் தத்தமது பலங்களையும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால்  போட்டி சுவாரசியமாகவே அமையும் என்ற எதிர்பார்ப்பு வீனாகவில்லை.

கே.எல்.ராகுலும் கெயிலும் அடித்த அடியில் சென்னை பவுலர்கள் சிக்கித் திணறினார்கள். பவர்ப்ளே (6வது ஓவர்) முடிவில் பஞ்ஞாப் அணி 75 ரன்கள் எடுத்திருந்தது.  ஒன்பதாவது ஓவரின் முடிவில் நூறு ரன்களை தாண்டியிருந்தது. கெயில் தான் இன்னமும் Universal Boss என்பதை உரக்கச் சொன்னார். Darling of IPL and a nightmare to every bowler,

கெயில் புயல் இன்னமும் ஓயவில்லை. ஏலத்தில் தன்னை எடுக்காத அணியிணர்க்கு ஒரு message அனுப்புவதாகவே இருந்தது அவரது இன்றைய innings.

பொதுவாகவே இடதுகை ஆட்டக்காரர்களிடம் ஒருவித தனி ஸ்டைல் & ஆக்ரோஷம் இருக்கும். அவர்களின் கட் ஷாட்டுகளும் புல் ஷாட்டுகளும் வலதுகை ஆட்டக்காரர்களின் ஷாட்டுகளை விட பார்ப்பதற்க்கு மிகவும் பிரம்மிப்பானவை. டேவிட் வார்னர், மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிரிஸ்ட், மைக்கெல் ஹாஸி, குமார் சங்ககாரா, கங்கூலி, கேரி சோபர்ஸ், ஜெயசூர்யா, சயீத் அன்வர் என புகழ் பெற்ற இடதுகை ஆட்டக்காரர்கள் பலர். இவர்களுக்கு பந்து வீசுவது அவ்வளவு எளிதல்ல. It’s always going to be tough to adjust the line and length. இவ்வரிசையில் கெயில் சற்று வித்தியாசமானவர். Footwork அவ்வளவாக இருக்காது, ஆனால் ஒவ்வொரு ஷாட்டிலும் அதிகமான power இருக்கும். நின்ற இடத்திலேர்ந்து சிக்ஸ்ர் அடிப்பார்.

Back to the game again, கடைசி நான்கு ஓவர்களில் 67 ரன்கள் தேவை என்ற நிலையிலும் சென்னை அணி ஓரளவு பதற்றம் அடையாமல் ஆடியது. ப்ராவோ மற்றும் ஹர்பஜன் விக்கெட்டுகள் கையில் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆரம்பந்தொட்டு பேட்டிங்கில் வேகம் இல்லை. விஜயும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. கிட்டத்தட்ட ஒன்பது பேட்ஸ்மென் இருக்கும் போது சென்னை அணி சற்று defensive ஆக விளையாடியது.

image 20180411 1339007944988610149401853..jpg

அதிக ரன்கள் இலக்காக இருக்கும் போது முன்பு சிறப்பாக ஆடிய ப்ராவோவை ஏன் முன்பாக ஆட அனுப்பவில்லை, ஜடேஜாவை அனுப்பியது ஏனென்ற கேள்விகள் வராமலில்லை.    தல தோனியின் 5 சிக்சர்களும் 6 பவுன்ரிகளும் சென்னை ரசிகர்களுக்கு பெரிய ஆறுதல்.

வடிவேவுக்கு பாடி ஸ்டாராங் பேஸ்மெண்ட் வீக்சென்னை அணிக்கு பேட்டிங் ஸ்டாராங் போலிங் வீக்.

இந்நிலை சற்று மாறும் என நம்புவோமாக.

For fighting till the last ball, for hitting the maximum number of sixes in the last overs in IPL, for keeping his opponents in their toes, that’s Dhoni for you. கெத்தாக விளையாடிய தல தோனிக்கு ஒரு பெரிய விசிலுடன்,

ஹரிஹரன்

 

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2

IPL விசில் போடு – 3


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

IPL விசில் போடு – 3

ஹரிஹரன்

3

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன்வரவேற்கிறது.
1095 நாள் காத்திருப்பு ஒருவழியாக முடிந்தது! இத்தனை காலம் காத்திருந்த பலனாக சென்னை ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக இந்த போட்டி அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வென்று சேப்பாக்கம் தன் கோட்டை என நிருபித்தது. Welcome back to the den Lions!
ஆனால் இந்த போட்டியை முழுமையாக ஏனோ ரசிக்க முடியவில்லை. அரங்கத்தில் போட்டியை காணவந்த சில ரசிகர்கள் தாக்கப்பட்டனர். போட்டியின் போது சென்னை வீரர் டூபெளிசியின் மீது செருப்பு வீசப்பட்டது. சென்னை இதுவரை பார்த்திராத காட்சிகள் இவை. கோல்கத்தா மற்றும் இன்னும் சில வட இந்திய நகரங்களில் இவ்வாறு நடந்ததுண்டு.
சாதாரண கிரிக்கெட் ரசிகனுக்கும் இந்த நிகழ்வகளுக்கும் தொடர்பிருக்காது என நாம் சொன்னலும் knowledgeable crowd என அனைவராலும் பாராட்டப்படும் சென்னை மக்களுக்கு இது ஒரு களங்கம். 1999 ஆண்டு சென்னையில் நடந்த பாக்கிஸ்த்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எதிரணி வென்றாலும் எழுந்து நின்று கைதட்டி பாரட்டிய நிகழ்ச்சி தான் கண் முன் வந்து சென்றது. இந்த நிகழ்வுகளின் காரணமாக சென்னையில் போட்டி தடைபடாது என நம்புவோமாக. Hope good sense will prevail.
Coming back to the splendid contest, சென்னை ஒரு புது ஹீரோவை அடையாளம்கண்டுகொண்டது.இங்கிலாந்து வீரர் சாம்பில்லிங்ஸ் அதிரடியை காட்டசார் ஜடேஜா முத்தாய்ப்பாய் சிக்கர் அடித்து வெற்றியை உறுதி செய்தார். சாம்பில்கிங்ஸ் இன்னமும் ஒருவளர்ந்து வரும் வீரராகவே இங்கிலாந்தில் கருதப்படுகிறார். இருந்தாலும்தம்பி வா, தலைமையேற்கவா என்று இங்கிலாந்துவாரியம் அவருக்கு காப்டன்பதவிக்கு அழைப்புகொடுக்கலாம்.
சென்னை மாதிரியானமைதானத்தில் டாஸ் ஒருமுக்கியமான விஷயமாகக் கருதப்படுகின்றது. ஆட்டம் செல்லச் செல்ல பிட்ச்மெதுவடையும். அவ்வாறு இருக்கையில் டாஸ் வென்றஅணி வழக்கமாக பேட்டிங்செய்யும். ஏனேன்றால், அடுத்துபந்து வீசும்போது பிட்ச்சுழற்பந்துக்கு சாதகமாகஇருக்கும். டாஸ் வென்றதோனி ஆச்சிரியமாக பவுலிங் தேர்வு செய்தார்.எதிரணியில் நிறைய அதிரடிஆட்டக்காரர்கள் இருப்பது ஒருகாரணமாக இருக்கலாம்.இதனால் ரன் இலக்குகை குறிவைத்து ஆடுவது எளிது என்று நினைத்திருக்கலாம்.இரண்டாவதாக சென்னை மைதானத்தில் இரவு பனிப்பொழிவு அதிகம்.அதனால் பவுலர்ககளுக்கு இரண்டாவது இன்னிங்ஸில்பந்து வீசுவது கடினம் என்று நினைத்திருக்கலாம்.
கோல்கத்தா தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடினர்.ஒரு பக்கம் விக்கட்டுகள் சரிந்தாலும் பத்து ஓவர்களில்கிட்டத்தட்ட 90 ரன்களுக்கு மேல் எடுத்தனர். பின்னால்வந்த ஆன்ரே ரசல் பதினோரு சிக்சர்களை அடித்து அரங்கத்தை அதிரவைத்தார்.
மேற்க்கிந்திய வீரர்கள் அதிரடி ஆட்டப்பிரியர்கள்.தொடக்ககாலந்தொட்டு தன்அபார ஆட்டத்திறனால் எதிரணி வீரர்களை குலை நடுங்கச்செய்வர். 2000வருடத்திற்க்குப்பின் இரங்குமுகந்தான். அடுத்து வரும் உலக கோப்பை தகுதி சுற்றில் ஸ்காட்லேண்ட் ஜிம்பாப்வே அணிகளுடன் மொதும் பரிதாபமான சூழ்நிலை. ப்ராவோ,போலார்ட், சாமுவேல்ஸ்,கெயில், ஆன்ரே ரசல், சுனில்நரேன் போன்ற சிறந்த வீரர்கள்இருந்தும் சிறந்த அணியாகத் திகழாதது துரதிஷ்டவசம்.
நவக்கிரஹம் போல தனியாகபலனை தருவார்கள், கூட்டாக/அணியாக அல்ல.
சென்னை அணியின் முரளிவிஜய் மறுபடியும் மிஸ்ஸிங். போட்டிக்கு இரண்டு நாள் முன்பாக நாம் எடுத்த கருத்துகணிப்பில் பெரும்பாலானொர் முரளி விஜய் வரவேண்டுமென்று பதிவு செய்தார்கள்.


ஆனால் சென்ற போட்டியில் களமிறங்கிய ராயுடுவும் வாட்சனும் நானும் ரவுடி தான் என்று நினைதார்களோ என்னவோ, கொல்கத்தா பவுளர்களை பதம் பார்த்தார்கள். முரளி விஜய் இனி களமிரங்குவது சிரமமென தெரிகிறது. சாம் பில்லிங்ஸ், ப்ராவோ மற்றும் ஜடேஜா கைகொடுக்க சென்னை ஒரு பந்து மிதமிருக்க வெற்றி கண்டது.

Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ.


Opening and lower order looks formidable now. சென்னை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்துவது நல்லது. காயமடைதொரின் என்னிக்கை வேறு கூடுகிறது. அனேகமாக playing XI போல் Injured XI வருமோ என்னவோ

தல தோனியின் அதிரடி ஆட்டத்தை காணவந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றந்தான். அடுத்த போட்டியில் தல கலக்குவார் என்ற நம்பிக்கையுடன், welcome once again lions.
சூப்பர் விசிலுடன்,
ஹரிஹரன்

முந்திய பகுதிகள்:

IPL விசில் போடு -1

IPL விசில் போடு – 2


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும்இந்திரா சொளந்திரராஜன்.