அம்பேத்கர் : காவியாகி மீண்டும் நீலத்திற்கு திரும்பினார்

நீங்கள் மேலே காண்பது, படௌன் நகரில் உத்திரப்பிரதேசத்தில், காவிமயமாகி காட்சிதரும் அம்பேத்கர் சிலை. அப்புறம் பி எஸ் பி கட்சிப் பிறமுகர் ஒருவர் அதை நீலத்திற்கு மாற்றுகிறார்.

இதற்குமுன்னர், யோகி அதியநாத்தின் அரசாங்கம், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் என்கிற பெயரில் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்ற முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

மகனின் காதுகுத்தை நடத்தலாமா எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசர்?

மகனின் காதுகுத்தை நடத்தலாமா என்று கணவன் மனைவியிடமோ அல்லது மனைவி கணவனிடமோ கேட்பது வழக்கம், ஆனால் எலெக்‌ஷன் கமிஷன் ஆபீசரிடம் கேட்பது?

கர்நாடகாவில் இந்த தேர்தல் நேரத்தில், என்ன்வெல்லாம் செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்கிற தெளிவில்லாததால், பொதுமக்கள் எலெக்‌ஷன் கமிஷனரை சாதாரண விசயத்துக்குக் கூட அனுகுகின்றனர். கல்யாண ஏற்பாடு செய்யலாமா, காது குத்தலாமா, தங்கம் வாங்கலாமா, பேர்வைப்பு வைபவம் செய்யலாமா, பிறந்தநாள் கொண்டாடலாமா என்பன போன்ற கேள்விகள் எலெக்‌ஷன் கமிஷனுக்கு வருகிறதாம்.

இவ்வாறான விழாக்களுக்காக வாங்கப்படும் பரிசுகள், நகைகள், பொருட்கள் பொதுவாக கட்சிகள் மக்களுக்கு ஓட்டுப்போடக் கொடுப்பதால், இவ்வாறான குழப்பம் ஏற்பட்டிருக்கிறதாம்.

சீஃப் எலெக்‌ஷன் ஆபிசர் சஞ்சீவ் குமார் குடும்ப விழாக்களை நடத்த அனுமதி வாங்கத் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.

IRNSS-1I – ISROவின் புதிய சாட்டிலைட் நாளை வின்னில் பறக்கிறது

ஸ்ரீஹரிகோட்டோ நாளை வியாழக்கிழமையன்று புதிய வழிசொல்லி (Navigation) செயற்கைக்கோளை வின்னில் ஏவத்தயாராகி வருகிறது. இந்த மாதத்தில் வின்னில் ஏவப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் இது.

சென்னையிலிருந்து 80 கிமீ தொலைவிலிருக்கும் சதிஷ் தாவன் வானாராய்ச்சி மைய்யத்திலிருந்து இந்த செயற்கைக்கோள் செலுத்தப்படும். 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.

US GPSக்கு இணையாக வழிசொல்லி செயற்கோள்களை இந்தியாவின் இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது. இது பொதுமக்களுக்கும் மிலிட்டரிக்கும் இருக்கும் இடத்தைப் பற்றிய டேட்டாவைக் கொடுக்கும்.


  • ஒரு நபரின் (அல்லது பொருளின்) இடத்தையும், நேரத்தையும், பயனிக்கும் வழியையும் கண்டுபிடிக்க உதவும் சிக்னல்களை அனுப்பும். இப்பொழுது நாம் உபயொகப்படுத்தும் ஜிபிஎஸ் அமெரிக்காவினுடைய செயற்கொள்களால் நமக்குக் கிடைக்கிறது.
  • 1,425 எடையுள்ள இந்த செயற்கைக்கோள் 1A விலிருந்து 1G வரை, ஜுலை 2013லிருந்து ஏப்ரல் 2016வரை அனுப்பட்ட இந்தியாவில் பிற 7 செயற்கைக்கோள்களுடன் இது இணைந்து கொள்ளும்.
  • NavICயின் எட்டாவது செயற்கைக்கொளான இது, PSLV ராக்கட்டில் அனுப்பப்படும்.

மார்ச் 29 அன்றுதான் தொடர்புக்கான செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியது. இது அனுப்பிய மூன்றாம் நாள் தன்னுடைய சுற்றுக்கு சென்றுவிட்டது, ஆனால் எந்த சிக்னல் அனுப்புவதை நிறுத்திக்கொண்டது.

இந்த செயற்கைக்கோள்கள் பத்துவருடம் வேலை செய்யும் என்று நம்பப்பட்டது ஆனால் IRNSS-1A வின் ருபீடியம் அடாமிக் கடிகாரம் அனுப்பிய இரண்டாவது ஆண்டே வேலை செய்யாமல் போய்விட்டது.

ஒரு நபரின் தற்போதைய இடத்தையோ அல்லது நேரத்தையோ சரியாக 24 மணி நேரமும் கணக்கிட இந்த ஏழு செயற்கைக்கோள்களும் சரியாக வேலைசெய்ய வேண்டும்.

கூகுள் ஹோம் ஸ்பீக்கர்ஸ் இந்தியாவில் அறிமுகம்

கூகுள் செவ்வாயன்று “பேசுவதை கேட்டு வேலை செய்யும்” (வாய்ஸ் ஆக்டிவேட்டட் ஸ்பீக்கர்ஸ்) ஸ்ப்பீக்கர்களான ஹோம் மற்றும் ஹோம் மினியை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இதற்குப்பின்னால் இருக்கும் தொழிநுட்பம் கூகுள் அஸிஸ்டெண்ட். நீங்கள் உங்கள் ஆன்ட்ராய்டு ஃபோனில் ஓகே கூகுள் என்று சொன்னவுடன் உங்கள் உத்தரவிற்காகக் காத்திருக்கிறேன் மன்னா என்று முழித்துக்கொண்டு நீங்கள் தேடச்சொல்லுவதை தேடிக்கொண்டு வருகிறதே , அதே தான்.

இந்த சாதனம் அமேசானின் எக்கோவுடன் போட்டிபோடும். ஹோம் மற்றும் ஹோம் மினியின் விலை ₹9,999 மற்றும் ₹4,499 ஆகும். இவை ஆன்லைனில் தற்சமையம் ஃபிலிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும். 750 பிற கடைகளில் ரிலையன்ஸ் டிஜிட்டல் உட்பட் கிடைக்கும்.


இந்த மாதிரியான சாதனங்கள் பற்றிய கட்டுரையையும் படித்துவிடுங்கள்.

அந்த விளம்பரம் அலெக்சா என்ன பேச முடியும் என்பதைப் பற்றியதாக இருந்தாலும் – நிறைய டிஜிட்டல் உதவியாளர்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் மூலம் நம் வீட்டிற்குள் வந்துவிட்ட இந்தக் கால கட்டத்தில், முக்கியமான கேள்வி, அலெக்சாவால் நாம் பேசுவதிலிருந்து என்னவெல்லாம் ஒட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும் என்பதே.

அலெக்சா, நீ என்ன ஒட்டுக் கேட்கிறாய்?


ட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..

முதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து (!) குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா?


பிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்


ட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ?


சிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா?


ஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ஆர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்


வெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம


பூனம் யாதவ் : ஏழ்மைப் பலுவை தூக்கியெறிய பலு தூக்குவதே வழி!

தொடர்புடைய செய்தி:

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்


நேற்று பூனம் யாதவ், இங்கிலாந்தின் சாரா டேவிஸை வென்று பலுதூக்கும் போட்டியில் இரண்டாவது பதக்கத்தை வென்றார். 2014 க்ளாஸ்கோ போட்டிகளில் இவர் வெண்கலம் வென்றார்.

22 வயதான பூனம் யாதவுக்கு ஏழ்மையை விட்டு வெளியேற பலு தூக்குவது ஒன்றே வழியாகயிருந்திருக்கிறது. வாரனாசிக்கு அருகிலிருக்கும் சண்டமாரியிலிருக்கும் இவருடைய குடும்பத்தில் இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பேர். மூன்று பெண்கள். ஒரு பையன். சிறிய விவசாயியான இவரது தந்தை விவசாயத்திலிருந்து வரும் சொற்ப வருமானத்தில் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும்.

வாரனாசியிலிருக்கும் STC (சாய் ட்ரெயினிங் செண்டர்) யில் தான் முதலில் இவரது அக்கா சஷி பலுதூக்குவதற்கு பயிற்சி எடுத்துகொண்டிருந்தார். அரசாங்க வேலை வாங்கிவிட வேண்டும் என்பது அவரது பெருங்கனவாக இருந்தது. பூனம் ஒரு வருடம் கழித்து அந்த செண்டரில் சேர்ந்தார். பிறகு அவரது தங்கையும் – பூஜா – சேர்ந்துகொண்டார். இந்த மூன்று வீராங்கனைகளுக்கும் சரியான சாப்பாட்டை சத்தான உணவை, அவரது தந்தையால் தனது சொற்ப வருமானத்தை வைத்து கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்களுள் மிக்ச்சிறந்தவரான பூனத்தை மட்டும் அவர்கள் தயார்படுத்த ஏகமனதாக முடிவுசெய்தனர்.

“அவருக்கு திறமை இருக்கிறது என்று நாங்கள் அறிந்து கொண்டபிறகு அவருக்கு முடிந்தவரை நாங்கள் சப்போர்ட் செய்ய முடிவெடித்தோம். விட்டிலிருக்கும் எருமை மாட்டின் பாலை கொஞ்சம் பணம் கிடைக்குமே என்று விற்போம், பூனத்துக்காக நான் கொஞ்சம் பாலை மறைத்து வைத்து அவருக்கு கொடுப்பேன். என் சாப்பாட்டை கொஞ்சம் எடுத்து வைத்து அவருக்கு அதிகமான உணவு தேவைப்படுவதால் அவருக்கு கொடுத்திருக்கிறேன்” என்கிறார் பூனத்தின் அக்கா சாஷி. குடும்பத்தினரின் தியாகம் வீண் போக வில்லை. 2014ஆம் ஆண்டு பூனம் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார். தொடர்ந்து காமல்வெல்த்திலும் வெண்கலம் வென்றார்.

பூனத்திற்கு வெற்றிகள் குவிந்தன. 2015இல் காமல்வெல்த் சாம்பியன்சிப்ஸை வென்றார். 69கிலோ பிரிவுக்கு முன்னேறி 2017 காமன்வெல்த்தில் மொத்தம் 217கிலோ தூக்கி வெள்ளி வென்றார்.

காமன்வெல்த் போட்டிகளே அவருடைய குறிக்கோளாய் இருந்தது. போட்டிகளுக்காக கிளம்பும் சில நாட்களுக்கு முன், “என் குடும்பத்திற்கு நான் நிறைய செய்யவேண்டும். நிறைய வெற்றிகளைப் பெற்று அவர்களைப் பெருமை அடையச் செய்யவேண்டும்” என்று பூனம் சொன்னார்.

மேலும் பல வெற்றிகள் பெற தங்க மங்கை பூனம் யாதவை குரல்வலை வாழ்த்துகிறது.

காமன்வெல்த் போட்டிகள் : இந்தியாவுக்கு மேலும் மூன்று தங்கம்

XXI காமன்வத் போட்டிகளில், நேற்று இந்தியாவுக்கு தங்கநாள், இந்தியா வீராங்கனைகள் மூன்று தங்கங்களை அள்ளினர்.

  • இந்த அதிரடியால் இந்தியா காமன்வெல்த் போட்டிகளில் நான்காவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. இந்தியா மொத்தம் 7 தங்கமும், 2 வெள்ளியும், 3 வென்கல பதக்கங்களை இன்றுவரை அள்ளியிருக்கிறது.
  • பூனம் யாதவ், பெண்கள் பிரிவின் 69 கிலோ பலுதூக்கும் போட்டியில், தங்கம் வாங்கினார். பலுதூக்கும் போட்டியில் இந்தியா மொத்தம் 5 தங்கங்களை வென்றது. விகாஸ் தாகூர் ஆண்கள் பிரிவின் 94 கிலோ போட்டியில் வென்கலம் வென்றார்.
  • 16வயது மனு பகேர் பத்து மீட்டர் சூட்டிங்கில் தங்கம் வென்றார். ஹீனா சிது வெள்ளி வென்றார். ரவிக்குமார் வெண்கலம் வென்றார்.
  • பெண்கள் டேபில் டென்னிஸ் அணியான மனிகா பத்ரா, மதூரிகா பட்கர் மற்றும் மௌமா தாஸ், நடப்பு சாம்பியனான சிங்கப்பூரை வென்று முதல் தங்கப்பதக்கத்தை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்தனர்.

மேலும்:

  • ஹாக்கியில் இந்திய ஆண்கள் அணி வேல்ஸ் அணியை 4-3 என்கிற செட் கணக்கில் வென்றது. பெண்கள் பிரிவு இங்கிலாந்தை 2-1 என்கிற செட் கணக்கில் வென்றனர். இருவரும் செமி ஃபைனல் போகிறார்கள்.
  • பாக்சர் மேரி கோம் செமி ஃபைனல் செல்கிறார். அவருக்கான பதக்கம் உறுதியாயிற்று.

பூனம் யாதவ்

ஹீனா சிது, மனு பக்கேர்


IPL விசில் போடு -2 : திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

-ஹரிஹரன்

2

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு!

CSK is back with a bang! 2018 IPL முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்க்கடித்து தனது வருகையை பதிவு செய்தது.

அதென்ன சார் சொந்த மண்? தோனியும் ரெய்னாவும் பாக்கிஸ்தான் வீரர்களா என்று நீங்கள் கேட்டால் உங்களுக்கு IPL பற்றி இன்னும் புரிதல் வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். உங்கள் ஊரில் உங்களுக்கு எதிராக ஒரு வெளிநாட்டவர் விளையாடினால் கூட உங்கள் கண் முன்னே ஐம்பதாயிரம் பேர் அந்த வெளினாட்டவருக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். அப்போது உங்களுக்கு அது தன்னுடைய சொந்த மண் என்ற உணர்வு எப்படி வரும்?

damyvovwkaab32m3939227663761785487.jpg

காலன், கரிகாலன் ப்ராவோ தன் விஸ்வரூபத்தைக்காட்ட, ஜாதவ் நீ கேலி செய்த ஆள் நானில்லை என்று சொல்லாமல் சொல்ல, தன் அபாரமான ஆற்றலை CSK   வெளிக்கொணர்ந்தது. ஏழு சிக்ஸர்கள் எடுத்த எரிமலை என நீ அன்போடு அழைக்கப்படுவாய் ப்ராவோ என்று நெட்டிஸன்கள் கொண்டாட , மங்களகரமாக சென்னை தன் அக்கௌண்டை துவக்கியது.

சென்னை சூப்பர் கிங்ஸை பொருத்தவரையில் நாம் அந்த அணியை உலகின் பிரசிதிப்பெற்ற Manchester United அணியுடன் ஒப்பீடு செய்யலாம்.

Value for money, huge fan base என அனைத்தும் சூப்பர் கிங்ஸுக்குப் பொருந்தும். ஏலத்தின் போது யார் யாரை கேலி செய்தார்களோ அவர்கள் தான் நேற்றய போட்டியில் பிளந்து கட்டினார்கள்.

டாசில் வெற்றி பெற்ற தோனி பவுலிங்கை தேர்வு செய்தார். Playing XI எனப்படும் களமிறங்கும் வீரர்கள் பெயர்களை பார்த்த போது அனைவரும் கொஞ்சம் அதிர்ச்சியானது உண்மைதான். மூன்று நான்கு வீரர்களை தவிர்த்து impact players யாரும் இல்லை. கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி பார்த்தால் கூட ஆக்ரோஷமாக ஆடும் வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. Is this a winning team என்ற கேள்வி வராமல் இல்லை. ஒட்டுமொத்தமாக தோனியை நம்பியே அணியை அமைத்திருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிந்தது.

 2015 ஆண்டு வரை தோனி தன் அணியில் ஆக்ரோஷமாக ஆடும் தொடக்க ஆட்டக்காரர்களை களமிரக்குவார். ஒரு solid lower down இருக்கும். சுழர் பந்தில் அஷ்வின் கலக்குவார். அத்தனையும் மிஸ்ஸிங்.

குறிப்பாக அஷ்வின், கிளிக்கு இறக்கை முளைச்சுடுத்து ஆத்த விட்டு பறந்துபோயிடுத்து என்று ரசிகர்கள் முகநூலிலும் டுவிட்டரிலும் புலம்பியது நியாயமானதே.

ஏழு பவுலர்கள் தேவையா தல என்ற கேள்வி தோனிக்கு மட்டுமில்லை சென்னை அணியின் மங்களம் சார் ஸ்டீபன் பிளமிங்கையும் யோசிக்கவைத்திருக்கும். Anyways, இது நமது முதல் போட்டி. வீரர்களை சோதனை அடிப்படையிலேயே தேந்தெடுத்திருப்பார்கள் என நம்புவோமாக.


ஸ்கோர்கார்ட்

Batting

bowling


எது எப்படியோ இந்த வெற்றி இரண்டு வருடங்களாக ஏங்கித்தவித்த ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மும்பை இந்தியனஸ் அணி எப்போதுமே ஆரம்பத்தில் வாமன அவதாரம் எடுத்து பின் ஒரே அடியில் இறுதியில் எதிரணியை வெல்லும். அதனால் இந்த தோல்வி அவர்களுக்கு துளியும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது. காண்டாகி அம்பானி ஜியோவில் கைவைப்பாரோவென்ற கலவரம் கிரிக்கெட் பார்க்காதவர்கள் கண்களில் தெரிந்தது. 

போட்டிகள் செல்லச்செல்ல போட்டித்தன்மை மாறமாற அணிகளும் தங்களின் யுக்த்திகளை மாற்றும். ஓரிரு வாரங்களில் அணிகளின் உண்மையான பலமும் பலவீனங்களும் தெரியவரும். சென்னை சூப்பர் கிங்ஸும் தன் பங்கிர்க்கு எவ்வாறு தன் யுக்திகளை கையாளும் என்பதை பொருத்துத்தான் பார்க்க வேண்டும். அதுவரை,

இன்னும் பலமான விசிலுடன்.

ஹரிஹரன்

முந்திய பகுதிகள்: IPL விசில் போடு -1


ஹரிஹரன்: சொந்த ஊர் சென்னை. படித்தது கோவையில். வேலை சிங்கையில். வேலை நேரம் போக நாடி நரம்பில் ஊறியிருப்பது கிரிக்கெட். நாவல், சிறுகதையிலும் சிறிது நாட்டம். விருப்பி வாசிப்பது Sidney Sheldon மற்றும் இந்திரா சொளந்திரராஜன்.

யூட்டியூப் வீடியோ பதிவாளரின் வைரல் வெறி : யூட்டியூப் துப்பாக்கி சூடு

முந்தைய செய்தி.

ஈரானில் க்ரீன் நசிம் என்று அவர் அறியப்படுவார். இவர் ஒரு சோஸியல் மீடியா ஸ்டார் – நிறைய பேர் இவரை யூட்யூபில், இன்ஸ்டாகிராமில் பின் தொட்ர்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு வேறு முகம். வேகன் டயட்டைப் பரப்புபவராகவும், விலங்குகள் நல ஆர்வளராகவும் அறியப்படுபவர். அவருக்கு மக்களுடன் உரையாட ஒரு ப்ளாட்பார்ம் அமைத்துக்கொடுத்த யூட்டிபின் மேல் இவர் தீராக் கோபம் கொண்டிருந்தார்.

கடந்த செவ்வாய்கிழமை மதியம் நசிம் நஜஃபி அஃக்டம், சான் ப்ருனோ, கலிஃபோர்னியாவில் இருக்கும் யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார், மூன்று நபரைச் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.

அஃக்டம் பற்றிய விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யூட்யூபின் தாய் நிறுவனமான கூகுள் இருக்கும் மௌண்டன் வ்யூ, கலிஃபோர்னியாவில், இந்த சம்பவம் நடந்து 11 மணி நேரத்துக்கு முன்பு, காரில் அவர் தூங்கிக்கொண்டிருந்த பொழுது போலீஸ் அவரை விசாரணை செய்திருக்கிறது. அவரது லைசன்ஸை வைத்து அவரது குடும்பம் அவரை சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்திருப்பது போலீஸுக்கு தெரிய வந்திருக்கிறது.

அஃக்டம் போலீஸிடம் தனக்கு குடும்பத்துடன் சில பிரச்சனைகள் இருக்கிறது என்றும், கலிஃபோர்னியாவுக்கு வேலை தேடி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். போலீஸுக்கு இவர் அபத்தானவர் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டது.

முப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இவர், இவரது பல வீடியோக்களில் ஈரானில் இருக்கும் உர்மியா நகரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். அங்கு மக்கள் டர்கிஷ் மொழி பேசுவது போல இவரும் சில வீடியோக்களில் டர்கிஷ் பேசியிருக்கிறார். இவர் டர்கிஷ், ஆங்கிலம் மற்றும் பெர்சியன் மொழிகளில் யூட்யூப் பக்கங்கள் வைத்திருக்கிறார். இவரது குடும்பம் பஹாய் என்கிற நம்பிக்கையைப் பின்பற்றுகிறது என்றும், முஸ்லிம் நாடான ஈரானில் இது கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய பல வீடியோக்கள் – கலர்ஃபுல்லானவை – ஈரானில் வைரல் ஆகியிருக்கின்றன.

அவரை விட்டுவிட்ட பிறகு போலீஸ் அஃக்டமின் வீட்டுக்கு ஃபோன் செய்து அவர் நலமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அப்பொழுது யூட்யூபின் மேல் அவருக்கு இருக்கும் கோபத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது ஃபோன் காலில் யூட்யூப் அஃக்டம் கோபப்படும்படி ஏதோ செய்திருக்கிறது என்றும் அதனால் கூட அஃக்டம் கலிஃபோர்னியாவுக்கு வந்திருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் ஆனால் அவர் அதைப் பெரிய விசயமாக சொல்லவில்லை என்றும் போலீஸ் சொல்கிறது.

செவ்வாய்கிழமை காலை அவர் அருகிலிருக்கும் துப்பாக்கி சுடப் பழகும் இடத்துக்கு சென்றுவிட்டு, மதியம் யூட்யூபின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு, யூட்யூம் அலுவலர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்குள் நுழைந்திருக்கிறார்.

போலீஸ் தகவல் வந்து இரண்டு நிமிடத்தில் யூட்யூப் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அவர்கள் வந்த பொழுது அஃக்டம் இறந்துவிட்டிருந்தார். அவர் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்த 9 மிமி செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி அருகில் கிடந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவுக்குள் யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் அவரது பக்கங்களையும் வீடியொக்களையும் பொதுமக்கள் பார்வையிலிருந்து அகற்றிவிட்டது.

அவரது பெர்சனல் வலைதளத்திலும் அவர் போஸ்ட் செய்த வீடியோக்களிலும் யூட்யூப் பற்றிய புகார்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.

டெலிக்ராம் என்கிற ஈரானில் மிகவும் பிரபலமான சோசியல் மீடியாத் தளத்தில் அவர் கடைசியாக பதிவிட்டது பூக்களுக்கு மத்தியில் அவர் நிற்கும் அவருடைய சிறிய வயது ஃபோட்டோ. தலைப்பு ஏதும் இல்லை

காவிரி – பிரச்சனையின் நதிமூலம்

காவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.

Plate-51552568429

1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங்கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.

ஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.

1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.

நீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:

765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.

கர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.

Irrigation map.jpg

1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.

சுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்நாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.

1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.

விவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .

Cauvry basin

சர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.

1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.

1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.

எதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.

1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.

பதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.

2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே? கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.

தண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.