Making Of ஆவியும் பாவியும்.

எழுதின டுபாக்கூர் கதைக்கு மேக்கிங் வேறயா? இதெல்லாம் டூ மச். ரொம்ப ஓவர்ன்னு ஏம்ப்பா நெனக்கறீங்க. நான் எழுதின எல்லா கதையுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் (ஆமா இவரு பெரிய ஆர்.கே.செல்வமணி!). ஆனா இந்த கதை கொஞ்சம் ஸ்பெஷல். ஏன்னா என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு செய்திகளை -தினமலரில் வெளிவந்தது – அடிப்படையாகக் கொண்டது. நிர்மல் வேறு, முத்து ஆவி மேட்டர வெச்சு கண்டிப்பா ஒரு கதை எழுதுங்கன்னு சொல்லியிருந்தார் (பாவம் அவர விட்டுருங்க. சொன்னது தப்பாய்யா!) ஆனால் உண்மையிலே பலசரக்கு கடை சமாச்சாரம் அதிர்ச்சிதான். என்னத்த சொல்றது. ஆனா சிலர், என்ன இப்படி எழுதறீங்க நம்புறமாதிரி இல்லியேன்னு சொன்னதால, சில அதாரங்களை (?!) சமர்ப்பிக்கிறேன். ஆதாரங்கள் தினமலரில் வெளிவந்த செய்திகள்.

ஆவி ஜோதிடம் பற்றிய செய்தி:

பலசரக்கு கடை சீடி பற்றிய செய்தி:

அப்புறம், இந்த கதைக்காக நான் போட்ட flowchart இது. (அடப்பாவி இதுவேறையா!) ம்ம்..என்ன பண்றது, இந்த கதை நான் readers கண்டிப்பா guess பண்ணக்கூடாதுங்கறதுல கண்டிப்பா இருந்தேன். எத்தன பேரு கண்டுபிடிச்சீங்கன்னு தெரியல.

இப்ப போறேன். Next meet பண்றேன்.