வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

 

***
Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!

***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும்.

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007
“It is necessary for the sake of maintaining peace and security in the country”
DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008
“This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to do something about it. It is not a publicity stunt”
DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வீடு மாற்றம் இல்லை, விளம்பரம், ஒரு கவிதை, ஒரு பல்ட்டி

Bloggerஇல் இருந்து wordpressக்கு மாறும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்போதைக்கு வீடு மாற்றும் எண்ணம் இல்லை. போனவாரம் எல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டகொட்ட முழித்துக் கொண்டிருந்தேன். Blogger to wordpress import tool எல்லாருக்கும் வேலை செய்யும் எனக்கு மட்டும் வேலைசெய்யாது. நானும் நிறைய தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டேன் முடியவில்லை. என்னிடம் 175 போஸ்ட்டுகள் தான் இருக்கின்றன. சரியாக எல்லாதடவையும் 87 போஸ்ட்டுகளே import ஆகிறது. இது பாதியிலே நின்று விட்டதால் பின்னூட்டங்களும் import செய்யப்படவில்லை. போங்கப்பா என்று விட்டுவிட்டேன். பின்னூட்டங்களை விட்டுவிட்டு போக மனமில்லை. மேலும் இருக்கிற பதிவுகளையும் அப்படியே விட்டுவிட்டு புதிதாக ஆரம்பிக்கவும் மனமில்லை. மனமிருந்தால் மார்க்கபந்து தான் ஆனா நமக்கு வேலை செய்யமாட்டேங்குதே!***
கொஞ்ச காலத்துக்கு blogger தான் என்று முடிவாகிவிட்டபின், இருக்கிற தொடப்பத்த வெச்சு வீட்ட எப்படி சுத்தப்படுத்தறது என்று யோசிச்சேன். Labelsஐ பயன்படுத்தியே categories போட்டுவிட்டேன். மேலும் ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒவ்வொரு இடம் இடப்பக்கமும் வலப்பக்கமும் கொடுத்துட்டேன். ஆனால் அவை தற்சமயம் dynamic இல்லை. நாமளே தான் மாற்றவேண்டும். அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. stumbleupon, digg this, del.ico.us போன்ற bookmarks சேர்க்கவேண்டும். .

***
வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. எனக்கும் தூக்கம் வருகிறது. இதோ ஒரு கவிதை:

மழை என்னும் பிராணி

திடீரென
விழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்கடியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

-த அகிலன்

ஆமாம், நனையப்போன தூக்கம், வேகமாக திரும்பி மீண்டும் என்னை தலையணைக்கு அழைக்கிறது. கனவுகள் எனக்காக காத்திருக்கின்றன.

***

ஒரு “நானா சொன்னேன்?” வகை:
டிசம்பர் 14 2007

It is necessary for the sake of maintaining peace and security in the country

DATUK SAMY VELLU speaking a day after the five Hindraf leaders were detained for organising a massive rally last nov 25 to protest against government policies which allegedly discriminate against Indian Community.

மார்ச் 30 2008

This is done in fairness, sympathy and also we feel that we as Indians have to
do something about it. It is not a publicity stunt

DATUK SAMY VELLU, calling for detainee’s release yesterday.

நடந்து முடிந்த தேர்தலில் சாமிவேலு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

***

கூண்டிலடைக்கப்பட்ட பறவை

எனக்கு நீ வேண்டும்;
ஆனால் ஒருபோதும் என்
கைகளால் உன்னை
அணைத்துக்கொள்ள
முடியாதென்றும் தெரியும்.
நீ துல்லியமான
பிரகாசமுள்ள ஆகாயம்.
நானோ
கூண்டிலடைக்கப்பட்ட பறவை.

– ·பரூக் ·பரோக்சாத்

சில ஹைக்கூக்களும், முத்துவும்.

(No! when I say Haikus, I am not mentioning girls!)

ஒரு ஞாயிறு மதியம் Open Page என்கிற புத்தகக்கடையில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த பொழுது, ஒரு சில ஹைக்கூ புத்தகங்கள் கிடைத்தன. சும்மா, புரட்டினேன். (பாவம் நீங்கள்!) என்னால் முடிந்த அளவிற்கு மொழிபெயர்த்திருக்கிறேன்.

In the mirrors on her dress
Little pieces of my
Self.
-Cor van den heuvel

அவளின் சுடிதார் கண்ணாடிகளில்
நான்
சிதறிக்கிடக்கின்றேன்.


The momment two bubbles
are united, they both vanish.
A lotus blooms.
-Murakami Kijo / TR. Makoto Ueda

இரண்டு குமிழ்கள் சந்திக்கும் தருணத்தில்
இரண்டுமே மறைந்துபோகின்றன.
அங்கே ஒரு தாமரை மலர்கிறது.

Kept awake
By the silence
Of her breathing.
-Maurice Tasnier

அவள் முச்சுக்காற்றின்
நிசப்தத்தில்
நான் முழித்திருக்கிறேன்.

Morning Shyness –
After our bath
She wraps herself in a towel.
-Brain Tasker

காலை வெட்கம் –
எங்கள் குளியலுக்கப்புறம்
துண்டு அவளைப் போர்த்திக்கொண்டது.

Looking for you
Through hundreds
Of love haiku.
-Manu Bazzano

கணக்கிலடங்கா
காதல் ஹைக்கூக்களில்
உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

Since you went away
No flowers are left on earth.
-Natsume Soseki

நீயும் சென்றுவிட்டபிறகு
பூக்களே இல்லை –
இந்த பூமியில்.

A broken heart
Is an open
Heart.
-Anonymous.

உடைந்த இதயம்-
ஒரு திறந்த
இதயம்.

நீயும். உன் மீன்களும்.

நீ இல்லாத
இந்த நாட்களில்
மீன்கள் என்னை
வந்தடைந்தன.

மீன்கள் இல்லாத
உன்னுள்
என் செதில்கள் மட்டும்
நீந்துகின்றனவாம்.

***

மீன்கள் என்னை
வந்தடைந்த அன்று
இலைகளற்ற
இந்த மரத்தினடியில்
செதில்கள் இல்லாத நானும்
உன் வெற்றிடமும்
மௌனமாக
அமர்ந்திருந்தோம்.

பேச்சுத்துணை கிடைக்காத
மீன்கள்
இலையில்லாத கிளைகளில்
சென்று ஒட்டிக்கொண்டன.

நீ இல்லாத
உன் வெற்றிடத்தை
உதிர்ந்த இலைகள்
கூட
நிரப்ப மறுக்கின்றன.

***

திடுக்கிட்டு
விழிக்கும் நான்
முன்நகராத
பின்னிரவில்
என்னை உற்றுநோக்கும்
உன்
மீன்களுடன்
பேசத்துவங்குகிறேன்.

ஏனோ,
என் வார்த்தைகள்
கிளைகளை
சென்றடைவதேயில்லை.

***

எப்படியேனும் கடத்திவிடு

உயிர் உடைவதை உணர்கிறேன். தலையெழுத்தை தலைகீழாய் எழுதினேன். தலைகீழாய் எழுதியதைப் படிக்கமுடியாமல் மாய்ந்துபோகிறேன். தலையெழுத்தைப் படிக்கத்தெரிந்த நட்சத்திரம் ஒன்று மேக இதயத்துக்குள் மறைந்துகொண்டது. இதயங்கள் காற்றில் அலைக்கழிக்கப்படுகின்றன. வடிவங்கள் மாறியவாறு இருக்கின்றன. ஒவ்வொரு வடிவத்திலும் நான் தொலைத்த நட்சத்திரத்தை தேடித்தேடி அலைகிறேன். மேகங்கள் என்னை கடத்திச்செல்கின்றன. குயிலொன்று என்னை மேகத்திலிருந்து மீட்டெடுக்கிறது. அந்த குயிலின் பாடல் என்னைப் பற்றிக்கொள்கிறது. குயில் அசையாமல் நின்று கொண்டிருக்கும் அந்த ஆலமரத்திலேறி அமர்ந்துகொண்டது. ஆல இலைகள் குயிலின் பாடலை சுவாசித்தன. குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது. பாடல்களைத் தேடி வேர்களில் நெடுந்தூரம் பயணம் செய்தேன். அந்த மரத்தின் இலைகளின் நரம்புகளில் அந்தப் பாடல்களைத் தேடித்திரிந்தேன். இலைகள் காற்றில் உதிர்ந்தன. பாடப்பட்ட பாடல்கள் காற்றில் கலந்திருக்கின்றன. காற்றிலிருந்து குரலை மட்டும் பிரிக்கத் தெரிந்த பறவை ஒன்று வேண்டும். இறைவனிடம் கேட்டேன். பிறகு, பறவை வேண்டாம், இந்த இரவை மட்டும் எப்படியேனும் கடத்திவிடு, என்று மீண்டும் வேண்டிக் கொண்டேன். இரவு கனக்கிறது. இறைவன் என்னை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார். இரவு கனவுகளில் மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தது. கனவு, இரவின் கரிய இருளில், சிக்கிக்கொண்டிருந்தது. கனவுகளினூடே பறவை ஒன்று பறந்துவந்தது. அது நான் இழந்த பாடல்களை மீட்டுத்தந்தது. பாடல்கள் அருவியில் நனைந்தன. அருவியின் சத்தம் பாடல்களை நினைவிழக்கச்செய்தது. கனவுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு உப்புக்கரித்தது. உப்புக்கரித்த நினைவுகள் கணங்களை நிறுத்துகின்றன. கடந்துவிட்ட கணங்களிலிருந்து நினைவுகளை சேகரிக்க முயல்கிறேன். சேகரிக்கப்படாத நினைவுகள் ரயில் நிலையங்களில் சுற்றித்திரிகின்றன. அனாதையான அந்த நினைவுகள் ரயில் நிலையங்களில் மணி காட்டும் டிஜிட்டல் கடிகாரங்களில் சென்று ஒளிந்து கொண்டன. புள்ளிகளாய் தேய்ந்தன. நினைவிடங்களை விட்டகலாத மூச்சுக்காற்று அங்கேயே சுற்றித்திரிந்தது. ஜான்சன்ஸ் பேபி பவுடரின் மணம் என் மூச்சுக்காற்றை இறுகப்பிடிக்கிறது. என் இதயத்தில் உன்னைக் கண்டதும் அது அங்கேயே ஒழிந்துகொண்டது. என் சிவப்பனுக்கள் பவுடரின் மணத்தை உறிஞ்சிக்கொள்கின்றன. நினைவுகள் என் ரத்தக்குழாய்களுக்குள் இங்கும் அங்கும் திக்குத்தெரியாமல் அலைந்து கொண்டிருக்கின்றன. அவை உறைந்து போகும் நாட்களை எண்ணி காத்துக்கிடக்கின்றன.

துர்கனவுகளில் சிக்கியிருக்கும் நம் ஜுவாலைகள்

மனிதன் – அல்லது வேறு எந்த உயிரினமானாலும் – வாழ்வைத் தொடங்கும் நேரத்திலே முடித்துக்கொள்ள நினைப்பதில்லை. தன் முகத்தில் தானே காறி உமிழ்வதில்லை. ஏன் இந்த வாழ்க்கை என்று நினைப்பதில்லை. வாழ்வு ஒரு சாபம் என்றும் எண்ணுவதில்லை. அதற்கு நிறைய கால அவகாசம் தேவைப்படுகிறது. நிறைய தவறுகள் நடக்கவேண்டியிருக்கிறது. கால அவகாசமும் தவறுகளின் வீரியமும் மனிதனுக்கு மனிதன் வேறுபடும். சுமைகளின் முதல் அழுத்தத்திலே சிலர் நம்பிக்கை இழந்துவிடுகின்றனர். விட்டுக் கொடுத்துவிடுகின்றனர். வேறு சிலர் வாழ்வின் இரக்கமில்லாத துர்கனவுகளில் சிக்கி, அவை கனவுகள் என்றே நினைத்து, தங்களுக்குள் இருக்கும் கடைசி ஜுவாலையையும் இழக்கின்றனர். இவர்களுக்கு வாழ்க்கையை எங்கே இழந்தோம், எப்படி இழந்தோம் என்று எப்பொழுதுமே தெரிவதில்லை. வாழ்க்கை, எண்ணிக்கை இல்லா நம் மூதாதயர்களின் குழப்பமான இருண்ட அனுபங்களில் சிக்கி வெளிவரமுடியாத – இயலாத – ஒளியாகவே இருக்கிறது. “அனுபவம்: சுயபுத்தியை இழந்தால்தான் கிடைக்கும், பாதுகாப்பு: சுயகௌரவத்தையும் தன்மானத்தையும் இழந்தால் மட்டுமே கிட்டும், சுயகௌவரவம்: நடைமுறைக்கு சாத்தியமே இல்லை” என்று நம் முன்-அனுபவ “முத்தண்ணாக்கள்” தவறாமல், இடைவிடாமல் திரும்ப திரும்ப எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றனர்.

எனினும் சிலர் பிடிப்பை விட்டுவிடுவதில்லை, முன்னேற தவறுவதுமில்லை. அவர்கள் தங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணையவிடுவதில்லை. அவர்கள் அந்த தீ தரும் ஒளியை வளர்க்கிறார்கள். அதற்கு வடிவம் கொடுக்கிறார்கள். தீயின் நோக்கத்தை அறிந்து கொள்கிறார்கள். அந்த நோக்கத்திற்கு ஒரு திட்டம் அளிக்கிறார்கள். அந்த திட்டத்தை உண்மையாக்குகிறார்கள். அதன்பின்னர் உள்ளுக்குள் இருக்கும் தீயும் உண்மையாகிறது. வலுப்பெறுகிறது. தன் முழு சக்தியை அடைகிறது.

எதிர்காலம் எவ்வாறு இருப்பினும், ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்வின் உதயத்தில், ஒரு மேன்மையான தொலைநோக்கு சிந்தனையுடன் தான் இருக்கிறான். தன் வாழ்வின் முழு அர்த்தத்தையும் புரிந்துவிட துடிக்கிறான். தன் உள்ளார்ந்த சக்தியை முழுமையாக உபயோகித்து, வாழ்வின் முழு பயனையும் அடைந்துவிட தவிக்கிறான்.

***

The Fountain Head இல் Ayn Rand எழுதிய முன்னுரையில் இருந்து ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

Thanks: Ayn Rand and Signet.

***

பி.கு: இதில் சொல்லப்பட்டிருக்கின்ற “முத்தண்ணா” கண்டிப்பாக நான் இல்லை.

லவ்ஸ் – 1

(கற்பனைக்காதலி : புஷ்பா)

கார்ரெட் கம்ப்யூட்டர் சிஸ்டெம்ஸ். காபிட்டேரியா.

ஸ்ட்ரா பாக்கெட்டுகள்
கூட்டம் கூட்டமாக
தற்கொலை செய்து கொண்டன.

புஷ்பா இன்று ஜூஸ்
சாப்பிட வரவில்லை.

***

பிரம்மா. படைப்புலகம்.

வாருங்கள்.
நீங்கள் போன பிறவியில்
நிறைய நன்மைகள்
செய்திருப்பதால், இந்தமுறை
நீங்கள் எது நினைக்கிறீரோ
அதுவாகவே பிறக்கலாம்.

உலகத்தின் மிகப்பெரிய
செல்வந்தராக போகிறீரா?

வேண்டாம்.

உலகத்தின் ஆன்மீகத்
தலைவராக?

வேண்டாம்.

உலகத்தையே உங்கள்
கையில் வைத்துக்கொள்ளும்
அதிகாரம் கொண்டவராக?

வேண்டாம்.

அழகான கிளியோபாத்ராவாக?

வேண்டாம்.

பெண்கள் மயங்கும் மன்மதனாக?

வேண்டாம்.

யூ.எஸ். ப்ரசிடென்ட்டாக?

வேண்டாம்.

கொஞ்சும் கிளியாக?

வேண்டாம்.

அழகான முயலாக?

வேண்டாம்.

பிறகு என்னவாகத்தான் பிறக்கவேண்டும்
என்று நினைக்கிறீர்கள்?

புஷ்பாவின் போனிடெயிலுக்கு
ஹேர்பேண்டாக. ப்ளீஸ்.

***

அடர்ந்த காடு.
கடும் குளிர்.
விடாமல் தவம் புரியும்
விசுவாமித்திரர்.

வேட்டையாடவந்த
அழகான மன்மதன்
ஒருவன்
அவரின்
தவத்தைக் களைத்தான்.

விசுவாமித்திரர்
கொடுத்தார் சாபம்
என் கூஜாவிலிருக்கும்
தண்ணீராக மாறிவிடு.

அவன் மன்றாடினான்.
கூத்தாடினான்.

மனம் இளகிய
விசுவாமித்திரர்
சொன்னார்.
மனிதன் அல்லாத
வேறு
உருவம் உனக்கு
கொடுக்கிறேன்.
கேள் என்றார்.

சற்றும் தாமதிக்காமல்
அவன் சொன்னான்:

புஷ்பாவின் டெஸ்கிலிருக்கும்
மானிட்டராகப் போகிறேன்.
தினமும் அவள் என்னைப்
பார்த்துக்கொண்டேயிருப்பாள்.

***

புஷ்பாவுக்கு
ரொம்பத்தான் திமிர்
என்றது தலையணை.

நான் தான் அவளுடைய
தலைக்கு இதமாக இருக்கிறேன்.
ஆனால் என்றுமே
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.

ஆமாம் ஆமாம்
உண்மைதான்.
நான் தான் அவள்
போர்த்திக்கொள்ள
உதவுகிறேன்.
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்.
என்றது போர்வை.

ஆமாம்.ஆமாம்.
நான் தான் அவள்
படுப்பதற்கு
இதமாக இருந்து
அவளுக்கு நல்ல
தூக்கத்தைத் தருகிறேன்
ஆனாலும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மெத்தை.

ஆமாம். ஆமாம்.
நான் தான் அவளுக்கு
குளிர்ந்த காற்றைத்
தருகிறேன்
இருந்தும்
எனக்கு கிடைப்பதில்லை
அவளது முத்தங்கள்
என்றது மின்விசிறி.

இவை எதுவுமே
செய்யாமல் சும்மா
இருக்கும்
அந்த டெடி பியருக்குத்தான்
எப்பொழுதுமே
கிடைக்கின்றன முத்தங்கள்
என்றன எல்லாமுமாய்
சேர்ந்து.

டெடி பியர்
சொல்லியது:
உங்கள் எல்லாரையுமே
அவளாக வாங்கிக்கொண்டாள்.

என்னை
அவன் அல்லவா
வாங்கிக்கொடுத்தான்.

நீங்கள்
அவனிடம் சென்று
மன்றாடுங்கள்.

***

ரோடெங்கும் நயாகராக்கள்

எண்ணம் எனது : ஆகாசம் பதிவை படித்தேன். அதன் தொடர்ச்சியாக!!

(ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதினால் கவிதைதானே? பார்த்திபன் கூட ஒரு படத்திலே சொல்லுவார். )

ரோடெங்கும் நயாகராக்கள்:

பெய்யென பெய்யுமா
மழை?
திறந்திடு என்றால்
திறக்குமா அணை?

மழை பொய்க்கும்
ஆச்சரியமில்லை.
நல்லார் ஒருவர் உளரேல்
அவர் பொருட்டு பெய்யும்
மழை
நல்லார் : மரம்?

சென்னை முழுதும்
நல்லார்கள் – சில
நாட்களுக்கு மட்டும்!
நல்லார் பலர் உளரேல்
வேண்டாமெனினும்
வற்றாமல் தேங்கும்
மழை

மழையின் வீடுகளை
ஆக்கிரமித்தோம்.
நம் வீடுகளை
மழை ஆக்கிரமித்தது.
இலாபமில்லை
இருவருக்கும்!

ஏரி தெருக்கள்
எருமை கார்கள்
முதலை மனிதர்கள்

ரோடெங்கும் நயாகராக்கள்!

மழை. தெருவிலே கிடக்கிறது.
அதற்கு அப்பார்ட்மெண்ட்
பழக்கமில்லை.
லிப்ட் ஏறத்தெரியாது.

**

த்ராயிருப்பில்
வருடந்தோரும்
வெள்ளம்.
தே. கள்ளுப்பட்டியில்
வருடந்தோரும்
வரட்சி.

நீர் சேகரிப்பா?
கலர் டீவியா?
ஏரியில் ‘செல்வி’
தெரியுமா?
எட்டிப்பார். தெரியும்.

நதி நீர் இணைப்பு?
(உண்ணாவிரதமா?
இந்தமுறையும்
கூட்டம் வருமா?)
கனவு இன்·பினிடி.
1 கோடி / 0.

மின்சாரம் தருகிறோம்.
அனு சக்தி தயாரிக்கிறோம்.
விளைவுகள் எங்களுக்கு.
பயன் எல்லோருக்கும்.
மந்திரிகளும் தருகிறோம்.
கண்ணீரும் தருகிறோம்
பண்டமாற்று முறையில்
தண்ணீர் தாருங்கள்.

**

ஞ்சி நிற்பது
கூல் சட்டிகளும்
விவசாயிகளின்
கண்ணீரும் தான்.
கண்ணீர் சேமிப்புத்திட்டம்
ஒன்றை அறிவியுங்கள்.
சேமிக்காதவர்களுக்கு
அபராதம் நிச்சயம்.
சேமித்தவர்களுக்கு?
கண்ணீரில்
பயிர் விளையுமா?
நெல் உப்புகரிக்குமா?

கையேந்துகிறார்கள்.
கண்ணீர் சிந்துகிறார்கள்.
போராட்டம் நடத்துகிறார்கள்.
உண்ணாவிரதம் ஷ்பெசல்.
நேரடி ஒளிபரப்பு.
விவசாயிகளின் துயரம்?
யாருக்குவேணும்.
ப்ரைம்டைமில் இடமில்லை.
(பிறகு கோழி வெடக்கோழி
எப்போ போடுவதாம்?)

**

ணை திறக்குமா?
தன்னலம் அனைவருக்கும்
பொது.

நாம்
குழாயடி சண்டைகளை
நிறுத்தியிருக்கிறோமா?

**

அம்மாவின் பொய்கள்

பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
கதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒரு முறத் தவிட்டுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனை பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக்கொண்டாய்?
தவறுமேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னைவிட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

-ஞானக்கூத்தன்