எல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்

indpak

பாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா? இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்கள் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.

ஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.

இவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.

இரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்பரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.

இது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும்? இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

நாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.

இருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)

நீயா நானா – வருடாந்திர பலன்கள்

நீயா நானா பார்த்த பாதிப்பு.

நீயாநானா ஒரு மொக்கங்கறது என் தாழ்மையான கருத்து. அதுல எடுத்துவைக்கப்படும் தலைப்புகளும் பொதுமக்களின் கருத்துக்களும் மிகவும் மொன்னை. மிடில் க்ளாஸுக்கு பொதுவா ஷார்ப்பா பேசத்தெரியாது. பேச வராது. பேசவும் பிடிக்காது. அரே யார்.. தேட் ஆல்சா குட் திஸ் ஆல்சோ குட் என்கிற யதார்த்தம் தான் இருக்கும். தப்பித்தவறி ஒன்னுரெண்டு தத்துபித்துன்னு ஏதாச்சும் சொல்லுச்சுன்னாலும், அத உடச்சு யாராச்சும் சொன்னா, அதுக்கு பிறகு என்ன பேசறதுன்னே அதுங்களுக்கு தெரியாது. அப்படியே அதுங்க பேசுச்சுன்னாலும், நீயாநானால, “கனம்கோட்டார்” மடக்கி நிமித்திவிட்டுடுவார். அடடே வட போச்சேன்னு, பிடுங்கப்பட்ட மைக்கப் பாத்துக்கிட்டு உக்காந்திருக்கும்கள். நானூறு வருஷம் ஒலியும் ஒளியும் பாத்துவளர்ந்த குமரிக்கண்ட மூத்தகுடிகளுக்கு, நீயா நானா ஏன் பிடித்தது என்று பல்லுவெளக்கி துப்பத் தேவயில்லை.

நான் பாக்கறதில்லை – ஆனா அவார்டு எல்லாம் கொடுத்தப்பிறகு, என்னதான்யா செய்றாய்ங்கன்னு பாக்க ரெக்கார்ட் பண்ணிவெச்சேன். ஊத்தாப்பம் வர லேட்டான கேப்பில ரீப்ளே பண்ணதால வந்த வெண.

இந்த நீயா நானாவிலே ஏதோ ஒரு ராசிக்கு சொத்து தகராறு தீரும் என்று ஒரு விஞ்ஞானி சொன்னவுடன், நின்றுகொண்டிருந்த அந்த அப்பாவி குறுஞ்சிரிப்பு சிரித்தார். உடனே மற்ற விஞ்ஞானிகளும் அதே பாடலை ராகம் மாற்றாமல் பாடினர். கனம்கோட்டாரும் நெறைய விஞ்ஞானிகள் இதயே சொல்றாங்கன்னு, ஏத்திவிட, வழிந்த அந்த அப்பாவி, தனக்கு சொத்துப்பிரச்சனை இருக்கிறது, அதுவும் முடிஞ்சிரும்னு, அசட்டு சிரிப்புடன் சொன்னார்.

சிம்பிள். நீங்கள் இப்படி முகப்புத்தகத்தில் தவம் கிடப்பது போல, அவர்கள் உங்கள் முகப்புத்தகத்தின் ஒவ்வொரு தசையின் அசைவையும் படிக்கிறார்கள். கதை ரெடி செய்கிறார்கள். சமீபத்திய ஆன் டிமாண்ட் பிரிண்டிங் மாதிரி. அப்பப்ப சுடச்சுட வடை சுடுகிறார்கள். மாவு? ஆல்டைம் ரெடி. சேம் ப்ளட்.

பி கேர்ஃபுள். நான் என்ன சொன்னேன்.

தெரியாமத்தான் கேக்கறேன் – தமிழ்நாட்ல சொத்துப்பிரச்சனை இல்லாமல் யாராவது இருக்கிறார்களா என்ன?

சீரியசா கேக்கறேன் – இன்னுமா இந்த உலகம் இவிங்கள நம்பிக்கிருக்கு?

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய பொய். பொய்யைத் தவிர வேறில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன் நான் எழுதிய பதிவு.

மரண தண்டனை

தனி மனிதனின் அடிப்படை உரிமை – உயிர் வாழ்வது. அதைப் பறிப்பதற்கான உரிமை யாருக்கும் இல்லை – அந்தத் தனிமனிதனையும் சேர்த்து. அதனால் தான் தற்கொலை செய்ய முயற்சிப்பது குற்றம். அதனால் தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பதும் குற்றம்.

ஒருவன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். முன்கூட்டியே திட்டமிடுகிறான். நாள் குறிக்கிறான். நேரம் குறிக்கிறான். எப்படிக் கொல்வது என்று திட்டமிடுகிறான். பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் திட்டமிட்டபடி அந்தக் கொலையை அவன் செய்கிறான். நீதிபதி விசாரிக்கிறார். பலரது சாட்சிகளைக் கவனமாகக் கேட்கிறார். ஆழ்ந்து யோசிக்கிறார். ஒரு முடிவுக்கு வருகிறார். கொலை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். நாள் குறிக்கப்படுகிறது. நேரம் குறிக்கப்படுகிறது. எப்படி மரண தண்டனை வழங்குவது என்று முடிவுசெய்யப்படுகிறது. பிறகு குறித்த நாளில் குறித்த நேரத்தில் முன்பே திட்டமிட்டபடி கொலையாளி கொலை செய்யப்படுகிறான். இரண்டும் என்ன வித்தியாசம்? இரத்தத்துக்கு இரத்தமா? இது சரியாகுமா?

டிஎன்ஏ (DNA) சோதனையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் அலெக் ஜெ·ப்ரி (Alec Jeffery). அவர் அறிமுகப்படுத்திய ஆண்டு 1984. அப்பொழுது மிகவும் பிரபலமான பிட்ச் ·போர்க் வழக்கில் தான் முதன் முதலில் DNA fingerprinting பயன்படுத்தப்பட்டது. அந்த வழக்கில் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது பக்லேண்ட்(Buckland). கிட்டத்தட்ட போலீஸ் வழக்கை மூடிவிட்ட நிலையில், அலெக் ஜெ·ப்ரீயின் தொழில்நுட்பம் காலின் பிட்ச்·போர்க் என்பவனை மிகச்சரியாக அடையாளம் காட்டியது. பக்லேண்ட் தப்பித்தான். பிட்ச்·போர்க் மாட்டிக்கொண்டான். குற்றம் மிகச் சரியாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவன் குற்றவாளி. டீஎன்ஏ சோதனை அறிமுகம் ஆனபிறகு எண்ணற்ற அப்பாவிகள் விடுதலைசெய்யப்பட்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் மட்டும் 1973இல் இருந்து 130 நபர்கள் தூக்குதண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குற்றம் ஒன்றும் செய்யாத அப்பாவிகள். இவர்கள் கொலைசெய்யப்பட்டிருந்தால்?

டிவிட்டரில் ஒருவர் டிவிட்டிருந்தார்: “மூவரை தூக்கிலிட்டால் என்ன என்று சாதரணமாய் கேட்கிறார்கள். அந்த மூவருள் ஒருவர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்துச் சொல்லுங்கள்” என்று.  இது ஒரு விசயத்தை நடுநிலையாக ஆராயாமல், உணர்ச்சி வசப்பட்டுப் பார்ப்பது. அதே கேள்வியைத் திருப்பிக்கேட்க முடியும். “அந்த மூவர் கொலை செய்த நபர் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைத்துப்பார்த்து சொல்லுங்கள்” என்று.

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதத்தை கண்களை மூடிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு அதரத்ததைப் போல. அன்னா போல மற்றொருவர் இந்த ஆவின்பால் சட்டம் கொண்டுவந்தால் நாட்டில் சர்வாதிகாரப் போக்கு அதிகரிக்கும். யாரையும் எளிதாக லஞ்ச ஒழிப்பு வழக்கில் தண்டிக்க முடியும். அப்பாவிகள் மாட்டிக்கொள்வதற்கு சாத்தியம் ஏராளம். அதனால் நான் இந்த ஆவின்பால் சட்டத்தை எதிர்க்கிறேன் என்று எதிர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் – யாரும் செய்யாதது அன்னாவின் வெற்றி. அவர் கிளறிவிட்டு தூபம் போட்டதற்கு கிடைத்த வெற்றி – அப்பொழுது நீங்கள் யாருக்கு ஆதரவு அளிப்பீர்கள்? கவனிக்க அன்னாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பவர், லஞ்சத்தை ஒழிக்கக்கூடாது என்று உண்ணாவிரதம் இருக்கவில்லை. லஞ்சத்தை ஒழிப்பதற்கு சொல்லப்படுகின்ற தீர்வைத்தான் எதிர்க்கிறார்!

உண்ணாவிரதம் இருப்பது ஒரு மிக மோசமான முன்னுதாரணமாக ஆகிவருகிறது. அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். மரண தண்டனையை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கிறார்கள். இது ஒரு வகையான ப்ளாக் மெயில். மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்று மற்றொரு கோஷ்டி உண்ணாவிரதம் இருந்தால் என்ன செய்வது? அரசு யாருடைய கோரிக்கையை நிறைவேற்றும்?

அதே சமயத்தில் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்குதண்டனை சுப்ரீம் கோர்ட் விதித்த பொழுது மக்கள் அதைக் கொண்டாடத்தான் செய்தனர். கோயம்பத்தூர் குழந்தைகளின் இரட்டைக் கொலை வழக்கில் கொலையாளி சுட்டுக்கொல்லப்பட்டதும் இதே மக்கள் தான் ஆர்ப்பரித்தனர். மேலும் 2008 மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான கசாப்புக்கு தூக்குத்தண்டனை கொடுக்கவேண்டும் என்று வாதிட்டவர் பலர்.

நாளுக்கு ஒன்றும் நேரத்துக்கு இரண்டும் பேசித்திரிவது நமக்கு பழக்கமாகிவிட்டது.

யாராக இருந்தாலும் தூக்குத்தண்டனை என்பது கூடாது. ஒருவரது உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்கும் கிடையாது. ஒரு மனிதனின் உயிரை எடுப்பது என்பது நாகரீகமான ஒரு சமூகம் செய்யத்தகுந்ததா. இதற்கும் நரபலிக்கும் என்ன வித்தியாசம்?

ஐரோப்பா யூனியன் பிற நாடுகள் தங்கள் குழுமத்தில் இணைய தகுதியாக மரண தண்டனையை ஒழிக்கவேண்டும் என்கிற விதியை வைத்துள்ளது. நமக்குத்தான் எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை மேற்கோள் காட்டாமல் இருக்கமுடியாதே! எதற்கெடுத்தாலும் மனித உரிமையைக் காரணம் காட்டி சீனாவையும், க்யூபாவையும் வம்புக்கிழுக்கும் அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் மரண தண்டனை ஒழிக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்க விசயம். (அங்கும் கூட சில மாகானங்களில் மரணதண்டனையை ஒழித்துவிட்டனர்.)

தமிழர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாங்கள் எதிர்க்கிறோம் என்கிற கோஷம் உணர்ச்சியைத் தூண்டிவிட வழிவகுக்கும் ஆனால் இந்திய அளவில் பெரிய ஆதரவைப் பெற்றுத்தராது.

மரண தண்டனை மனித உரிமைக்கு எதிரானது. எனவே அதனை எதிர்க்கிறேன்.

மரண தண்டனைக்கு இன்னும் மிகச் சொற்ப நாட்களே இருக்கின்றன.

மட்டன் சமோசாவும் ஆன்மாவும்

http://religion.blogs.cnn.com/2011/07/21/hindu-diners-sue-indian-restaurant-for-selling-meat-samosas/?hpt=hp_c2

“The Hindu customers said the restaurant served them meat samosas, harming them emotionally and spirituality. A state appellate court ruled Wednesday that they can sue for the cost of travel to India to purify their souls.”

கேள்வி 1: ஆன்மா என்கிற வஸ்து இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம் விசாரித்து, தீர்ப்பளிக்குமா?
கேள்வி 2: மட்டன் சாப்பிட்டதால் அழுக்காகிவிட்ட அந்த ஆன்மா, இந்தியா சென்றால் தூய்மையாகுமா என்பதையும் விசாரிக்குமா  நீதிமன்றம்?
கேள்வி 3: மட்டன் சமோசா சாப்பிட்டதால் எத்தனை சதவிகிதம் ஆன்மா அழுக்காகியிருக்கிறது என்பதை நீதிமன்றம் சொல்ல முடியுமா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்…

(via India-Uncut)

ஓவியர் பாரதிராஜா – கதைசொல்லி சிவக்குமார் – அட்லாண்டிஸ் வீடியோ

நம்ம ஊரரசு இந்த வார விகடனுக்கு கொடுத்திருந்த பேட்டியில் “இயக்குனர் என்றால் பாரதிராஜா தான் நினைவுக்கு வருவார்” என்றார். (ஊரரசு பேட்டியவெல்லாம நீ படிக்கிறன்னு கேக்காதீங்க!). என்னைப் பொருத்தவரையிலும் இது தான் உண்மை. தமிழ் மொழியில் வேறு வேறு தளங்களில் படம் கொடுத்தவர் பாரதிராஜா மட்டுமே. சிவப்பு ரோஜாக்கள், பதினாறு வயதினிலே, ஒரு கைதியின் டைரி, கிழக்கே போகும் ரயில், டிக் டிக் டிக், முதல் மரியாதை, கிழக்கு சீமையிலே என்று சொல்லிக்கொண்டே போகலாம். என்னுடைய ஆல் டைம் பேவரிட் படம் முதல் மரியாதை தான்.

அவரை ஒரு முறை லேன்ட் மார்க்கில் வைத்து பார்த்திருக்கிறேன். வழக்கம் போல் ஒரு டி சர்டும் ஜீன்சும் போட்டுக்கொண்டு புத்தகங்கள் பார்த்துக்கொண்டிருந்தார். யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. நான் சென்று என்னை அறிமுகப் படுத்திக்கொண்டேன். கை குழுக்கள்களுக்கு அப்பால் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம். திரும்பி வரும் பொழுது ஒரு மிகப் பெரிய இயக்குனருடன் பேசிக்கொண்டிருந்தது போல இல்லை.

பாரதிராஜா ஒரு சிறந்த ஓவியர் என்பது எனக்கு இன்று தான் தெரிந்தது. அதுவும் எனக்குப் பிடித்தமான எழுத்தாளரை வரைந்திருக்கிறார். இதோ பாரதிராஜா வரைந்த எஸ்.ராமகிருஷ்ணனின் படம்.

(படம்: விகடன்)
*

நடிகர் சிவக்குமார் நன்றாகப் படம் வரைவார் என்று தெரியும் ஆனால் நன்றாக கதை அடிப்பார் என்று அண்மையில் தான் தெரியவந்தது. ஏதோ  ஒரு பெண்கள் கல்லூரியில் விழிகள் தெரிக்க அவர் மொக்கை போட்டுக்கொண்டிருந்ததை விஜய் டீவியில் பார்க்க நேர்ந்தது. அதில் முக்கியமாக என்னை கடுப்பேற்றிய விசயம்.ஏதோ ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் காண்டம்கள் கொத்து கொத்தாகக் கிடைத்தனவாம். இது என் எல்கேஜி காலத்திலிருந்து மிகவும் பிரபலமான கதை. வேதாளம் புளியமரத்தில் இருப்பதைப் போல.எந்த வேதாளம் எந்தப் புளியமரம் என்று கேட்டுப்பாருங்கள் ஒரு பயலுக்கும் தெரியாது.சிவக்குமாரிடம் எந்த கம்பெனி எந்த வருடம் என்று கேட்டுப்பாருங்கள்!

அப்புறம் பெண்பிள்ளைகளுக்கு அட்வைஸ் வேறு. நீங்கள் ஏன் திருமணத்திற்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்கிறீர்கள். அது துரோகம் இல்லையா – என்பது போல பல பிதற்றலகள்.இவை யாவும் சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டரில் வேலை பார்க்கும் பெண்களை (அதன் மூலமாக ஆண்களை) நோக்கி வீசப்பட்ட கேள்விகள். என்னவோ அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வதற்காகத்தான் வேலைக்கே செல்கிறார்கள் என்பதைப் போல.

என்னை கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கிய மற்றொரு அட்வைஸ் (பெண்களுக்கு):
படித்து முடித்ததும் நல்ல வேலை கிடைத்தவுடன் கூட வேலை பார்பவனையே (நல்லவனா என்று பார்த்து!) கல்யாணம் செய்துக்கனுமாம். இல்லீன்னா யாரோடவாவது அவர்கள் செக்ஸ் வைத்துக்கொள்வார்களாம்!

எப்பூடி!

இது (செக்ஸ் பிரச்சனை) என்னவோ சாஃப்ட்வேர் மற்றும் கால் செண்டர் தொழில்களுக்குத் தான் இருக்கிறது என்பது போல கதைகள் பிண்ணப்படுகின்றன. அப்புறம் இவரைப் போன்ற ராமச்சந்திர மூர்த்திகள் அக்கதைகளைப் பரப்பிவிடுகின்றனர்.

அக்கதைகளைப் பரப்பும் முன் இன்னும் ஜாதகம் பார்த்து வரதட்சனை கொடுத்து கல்யானம் செய்துகொடுக்கும் இந்தச் சமூகத்தில் இம்மாதிரியான செக்ஸ் கதைகள் எத்தகைய விளைவுகளை இருபாலருக்கும் உண்டு பண்ணும் என்று ஸ்ரீல ஸ்ரீ ராமசந்திரமூர்த்திகள் யோசிப்பது நலம்.

*

ஜுலை 17 அன்று அமெச்சூர் வானாராய்ச்சியாளர் ஸ்காட், அட்லான்டிஸ் ஸ்பேஸ் ஷட்டிள், இன்டர்னேஷனல் ஸ்பேஸ் (ISS) ஸ்டேஷனில் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை வீடியோ எடுத்திருக்கிறார்.

ஐஎஸ்எஸின் மேலே தெரிகிற வெள்ளையான பொருள் தான் அட்லாண்டிஸ். சோலார் பேனல்களையும் நீங்கள் பார்க்கமுடியும்.

*

மும்பை குண்டுவெடிப்பு

குண்டுவெடிப்பு நடந்து சில நிமிடங்களிலே எனக்கு தெரிந்துவிட்டது. iPhoneக்கும் NDTV appக்கும் நன்றி. தெரிந்தவுடன் என் மனதில் தோன்றியது ஒரு கெட்டவார்த்தை. உறக்கவே சொல்லிவிட்டேன். என் மனைவி சொன்னார்: அவன அப்படி திட்றதனால என்ன நடக்கப்போகுது?
ஒரு மும்பை ப்ளாக்கர் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்:

Bombs are something we have to live with now. Obviously, like other nasty things we have to live with, such as murder and robbery, it’s important to minimise the number of incidents. We haven’t had any attacks for two years and a half, which I think is good going. I’ll happily take one attack every two years that kills about twenty of us, and accept the risk of being one of those twenty next time round.

இது மிகவும் வேதனையான விசயம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்றதொரு குண்டுவெடிப்பை ஏற்றுக்கொள்வதாகவும்; அப்படி குண்டுவெடிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரும் பொழுது உயிரிழக்கும் அந்த இருபது பேரில் ஒருவராக இருக்கக்கூடும் ஆபத்தை சந்திக்கத் தயாராக இருப்பதாக சொல்வதற்கு எத்தனை தைரியம் வேண்டும்? வேறு வழி? கொலைகள் நடக்கிறது. கொள்ளை நடக்கிறது. கொலையும் கொள்ளையும் நடக்காமலே இருந்தால் நல்லது தான். ஆனால் முடியுமா? அவ்வளது பாதுகாப்பை வழங்க முடியுமா? இவ்வளவு சிறிய சிங்கப்பூரிலே கொலைகள் நடப்பதைத் தடுக்கமுடியவில்லை.
எப்படி இவற்றுடன் வாழப்பழகிக்கொண்டோமோ அப்படி குண்டுவெடிப்புகளுடனும் வாழப்பழகிக்கொள்வோம். அவர் குண்டுவெடிப்பு நடந்த இட்த்திலிருந்து ஒரு கிமீ தொலைவில் தான் இருந்திருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரும் அப்படி இருந்திருக்கக் கூடும். அப்படி இருந்திருந்தால், இப்படித்தான் யோசிக்கத்தோன்றும். குண்டு வெடிக்காத இடத்தில் இருக்க ஆசையாகத்தான் இருக்கும். அப்படி ஒரு இடம் இருக்கிறதா என்ன? ஆனானப்பட்ட அமெரிக்காவிலே – CIA, FBI, ABC என சகட்டுமேனிக்கு உலகமெங்கும் உளவுத்துறை வைத்திருக்கும் அமெரிக்காவிலே – டிவின் டவரை இடித்து தரைமட்டமாக்கினார்கள். எங்கு ஓடுவது?
அமெரிக்காவில் சமீபத்தில் நடக்கவிருந்த குண்டுவெடிப்பைத் தடுத்து நிறுத்தியது நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அது பற்றிய செய்தியொன்றை அப்பொழுது பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஒரு விஷயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அது தீவிரவாதிகள் உருவாக்கிய புதிய வேலைவாய்ப்புகள். அப்பொழுது இரண்டு புதிய வேலைகள் என் கண்ணில் பட்டன. Terror Expert மற்றும் Terrorism Analyst. இதைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.படிக்க: தீவிரவாதிகள் உருவாக்கிய முற்றிலும் புதிய வேலைவாய்ப்புகள்.

நான் மேலே குறிப்பிட்ட மும்பைப் பதிவர் மேலும் ஒரு விஷயத்தைச் சொன்னார். அது: ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது அடிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் இருபதாயிரம்!
இன்னும் ஒருவரும் பிடிபடாத நிலையில் குண்டுவெடிப்பு தொடர்பாக பொதுஜனம் கொடுத்த டிப் ஒன்றை கண்டுகொள்ளாமல் விட்டதற்காக ஒரு காண்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மேகத்தில்…

இன்று இந்த அருமையான வீடியோ காணக்கிடைத்தது..

மேகங்கள் கொந்தளிக்கும் கடல் போல இருக்கிறது..
Danial Lopez என்பவர் Canary Island இல் எடுத்த வீடியோ..
நம் கிரகம் எவ்வளவு அழகானது பார்த்தீர்களா?

**

ராக் மியுசிக்கும் வானவியல் ஆராய்ச்சியும் இணைந்தால் என்ன கிடைக்கும்?
இது போன்றதொரு (மற்றொரு) அருமையான வீடியோ கிடைக்கும்..

Cassini அனுப்பிய புகைப்படங்களுக்கு Nine Inch Nails இன் ராக் மியூசிக்..
Enjoy ராஜாக்களா 😉 
(via Discovery News)


**


தெய்வத் திருமகன் படம் பற்றிய விமர்சனம் படித்து விட்டேன் (படம் பார்த்துவிட்டேன் என்று சொல்ல ஆசை தான்!). விமர்சனம் படித்த வரைக்கும் இது I AM SAM இன் காப்பி போலத் தெரியுது.. கிரெடிட் ஏதும் போட்டார்களா? இல்ல கமல் பண்ற மாதிரி வெறும் காப்பி மட்டும் தானா? (முன்னாடி கமல் மட்டும் தான் செய்வாரு!)

**

இரண்டு முக்கியமான (அட்லீஸ்ட் என்னக்கு அப்படி தோணிச்சு!) புத்தகங்கள் படித்து முடித்தேன்:


1. Pour Your Heart Into It: How Starbucks Built a Company One Cup at a Time
2. The Facebook Effect

பிசினஸ் ஆரம்பிக்க வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகங்கள். புத்தகங்களைப் பற்றி இன்னொரு முறை விரிவாக எழுத வேண்டும். இப்பொழுது ஒரு சில விஷயங்கள்.

Howard Schultz தான் Starbucks பற்றிய புத்தகத்தை எழுதியவர். அவர் தான் Starbucks இன் CEO கூட! ஆச்சரியமான விசயம் என்னவென்றால் Howard Schultz Starbucksஐ ஆரம்பிக்கவில்லை. Starbucks முன்னமே இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி காஃபி விற்கும் கம்பெனியாக அல்ல – காஃபி கொட்டை விற்கும் கம்பெனியாக! Starbucks ஐ ஆரம்பித்தவர்கள் மூவர்! ஒருவர் ஆங்கியல் ஆசிரியர் (Jerry Baldwin). ஒருவர் வரலாற்று ஆசிரியர் (Zev Seigl). ஒருவர் எழுத்தாளர் (Gordon Bowker). ஆனால் மூவருமே காஃபியின் மேல் தீராத ஆசை கொண்டவர்கள்! 

இவர்களோடு 1982ஆம் வருடம் ரீடைலைக் கவனித்துக்கொள்ள வந்தவர் தான் Schultz. மிலனுக்கு ஒரு பிஸினஸ் ட்ரிப் அடித்தவுடன் அவரது மனம் துள்ளிக்குதிக்கிறது! மிலனில் மக்கள் ஆசை ஆசையாக தெருமுனைகளில் இருக்கும் காஃபி பார்களில் காஃபியை சுவைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறார். இதையே நாம் அமெரிக்காவில் செய்தால் என்ன என்கிற எண்ணம் அவருக்கு உதித்தது. ஆனால் Jerry இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. Jerry ஐ ஒத்துக்கொள்ள வைக்க படாத பாடு பட்டும் பிரயோசனம் இல்லாதாதல் தானே தனியாக கடை போடுவது என்று முடிவெடுத்தார் Schultz. அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான்  Il Giornale. பெயரே வித்தியாசமாக இருக்கிறதல்லவா?! அப்புறம் Schultz Starbucksஐயே வாங்கியது வேறு கதை!


*

zuckerbergஐப் பற்றி நான் ஒன்றும் பெரியதாகச் சொல்லத் தேவையில்லை. இந்தப் புத்தகம் பற்றியும் நான் சொல்லத் தேவையில்லை. இது படமாக வந்து விட்டது. Social Network.


அதாவது உலகம் முழுதும் மொத்தம் 400 பில்லியன் டாலர் வருமானம் ஆண்டொன்றுக்கு விளம்பரங்கள் மூலம் கிடைக்கின்றன. இவை டீவி, பேப்பர், இன்டர்னெட் போன்ற எல்லா ஊடகங்கள் வாயிலாகவும் கிடைக்கிறது. இதில் ஒரு சொற்பப் பகுதியே இன்டெர்னெட்டிலிருந்து கிடைக்கிறது. அதன் பெரும்பகுதி கூகிள் இன்று வரை எடுத்துக்கொண்டிருந்தது. AdSense மூலமாக. கூகிளின் மிகப்பெரிய பலவீனம்: செர்ச்.


விளம்பரத்துறையில் இது பலவீனம் தான். ஏனென்றால் விளம்பரம் மக்களுக்கு எப்படிக்கொடுக்கமுடியும்? அவர்கள் செர்ச்சில் ஏதாவது ஒரு வார்த்தை அடித்தப்பிறகு தானே? ஆனால் நீங்கள் செர்ச் செய்ய வரும் முன்னரே 80 சதவிகிதம் உங்களுக்கு என்ன தேடுகிறோம் என்பது தெரிந்து விடும். எடுத்துக்காட்டுக்கு: SAMSUNG LED TV. அதை வைத்துக்கொண்டு தான் அவர்களால் விளம்பரம் கொடுக்கமுடியும்.


ஆனால் 750 மில்லியன் நபர்களை உறுப்பினராகக் கொண்டிருக்கும் facebookக்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியும். உங்களைப் பற்றி நன்றாகத் தெரியும். உங்கள் பெயர் என்ன, பிறந்த ஊர் என்ன, நீங்கள் படித்த கல்லூரியின் பெயர் என்ன, உங்கள் அப்பா யார், அம்மா யார், உங்கள் பிறந்த தேதி என்ன, உங்கள் நண்பர்கள் யார், அவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, என்ன புத்தகங்கள் படிப்பார்கள் போன்ற எல்லா விசயங்களும் தெரியும்!


இப்பொழுது சொல்லுங்கள் யார் அதிக வருவாய் ஈட்ட முடியும்?

இப்பொழுது தெரிகிறதா கூகிள் ஏன் தலைகீழாய் நின்று தண்ணி குடிக்கப் பாக்குதுன்னு?


ஆனா எனக்கென்னவோ டூ லேட்டுங்கிற மாதிரி படுது! Circleஐயும் Hangoutஐயும் கொண்டுவருவதற்கு facebook க்கு எவ்வளவ நேரம் ஆகப்போகுது?


*



சமச்சீர்கல்வி பாடநூல்களின் தரம் – ஒரு ஆய்வு!

http://www.vinavu.com/2011/07/08/samacheer-kalvi-syllabus/

>>

மச்சீர்கல்வி பற்றிய விவாதங்களில் ஒன்றைக் கவனிக்க முடிந்தது. சமச்சீர் கல்வி வேண்டாம் எனச் சொன்னவர்கள் ‘சமச்சீர் கல்விப் பாடப்புத்தகங்களின் தரம் குறைவானது’ எனச் சொன்னார்கள். குறைந்தது 10 பேராவது இதனை என்னிடம் சொல்லியுள்ளனர். அவர்களிடம் அந்த நூல்களை வாசித்தீர்களா எனக்கேட்டேன். ஒருவரும் இல்லை என்றார்கள். மேலும் தரம் குறைவானதென எல்லோரும் சொல்கின்றனர் என்பதால் அவர்களும் அவ்வாறு சொல்வதாக ஒப்புக் கொண்டனர். அப்படி என்றால் சமச்சீர் கல்விப்பாட நூல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளன என்பதை அறிவதுதான் முதன்மையானதெனக் கருதி அரசின் இணையதளத்தில் போய்ப் பார்த்தேன். அதிலிருந்து பாடநூல்கள் எடுக்கப்பட்டு விட்டன. கூகிளில் தேடி ஒரு தனிநபரது இணையதளத்தில் இருந்து 5,7,8,9,10 ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்களை மட்டுமே எடுத்துப் படிக்க முடிந்தது. அவற்றில் கணக்குப் பாடங்களைத் தவிர பிறநூல்கள் அனைத்தையும் வாசித்ததில் இருந்து சில அம்சங்களைச் சொல்லலாம் எனக் கருதுகிறேன்.
பாடத்திட்டங்களை அனைத்துத் தரப்பினரின் பங்கெடுப்போடுதான் நூல்களாக்கி உள்ளனர். மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல், அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்துதான் நூல்களை உருவாக்கி உள்ளனர். பல நூல்களின் ஆசிரியர் குழுக்களில் தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளின் பேராசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்பு அறிவியல் நூலுக்கு தலைமை வகித்தவர் சென்னை ஐஐடி பேராசிரியர் ஆவார்.
பாடப்புத்தகங்கள் மனப்பாடம் செய்ய என இல்லாமல் சிந்திக்க, கலந்துரையாட, சுகமான வாசிப்புக்கு எனும் நோக்கில் வண்ணப்படங்கள், எளிய வரைபடங்கள் மூலம் அழகிய லே-அவுட்டில் அருமையாக இருந்தது.
>>

மேலும் படிக்க ..


கல்வெட்டின் இந்த நக்கல் நன்றாக இருந்தது..
>>
சம்ச்சீர் கல்வி என்றாலே என்ன என்று தெரியாமல் “அது நன்னா இல்லை, நேக்கு வர்ணாசிரம பாணியில் உயர்வு தாழ்வு வேண்டும். அப்பத்தான் சமூகம் நன்னா இருக்கும்” என்று பேசும் மக்கள் (மக்குகள்) புத்தகத்தைப் படித்து இருப்பார்களா?
>>


😉





குரல்வலைப் பக்கங்கள்

(உலகக்கோப்பை கிரிக்கெட், ஓலைச்சிலுவை, பழசிராஜா, நடுநிசி நாய்கள், யாரும் ஜெஸிக்காவைக் கொலைசெய்யவில்லை.)

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி 350 வருஷம் ஆச்சுன்னு சொன்னேன் என் நண்பரிடம்; அவர் சிரித்தார். உண்மைதான். ஒரு ஓவர் இல்லை இல்லை ஒரு பால் கூடப் பார்த்து நிறைய வருடங்கள் ஆச்சு. நான்கு வருடங்கள். போன உலகக்கோப்பை நினைவிருக்கிறதா? அதில் இந்தியா பங்களாதேஷ் போட்டி நினைவிருக்கிறதா. சூடு சொறனை இருக்கிற கிரிக்கெட் ரசிகன் எவனும் அந்த மேட்சை மறக்கமாட்டான். அப்புறம் இந்தியா இலங்கை மேட்ச் ஞாபகம் இருக்கிறதா?

விடிய விடிய காலை நான்கு மணி (சிங்கப்பூர் நேரம்) வரை மேட்ச் பார்த்தோம். அப்பொழுது நான் பேச்சுலர். சச்சின், ராகுல், கங்கூலி என்கிற நட்சத்திரங்கள் நிறைந்த டீம். என்ன ஆயிற்று? முதல் சுற்றிலேயே வெளியேறினோம். தோல்வி. அதுவும் யாரிடம் கத்துக்குட்டி பங்களாதேஷிடம். பிறகு இலங்கையிடம். அந்த மேட்ச் இன்று வரை எனக்கு நினைவிருக்கிறது. டிராவிட் அவுட் ஆன கனம் என் கிரிக்கெட் பார்க்கும் ஆசையை குழிதோண்டிப் புதைத்தது. மறுநாள் எங்கள் தொலைக்காட்சி வேலை செய்யவில்லை. தற்கொலை செய்து கொண்டது. அது தான் நான் பார்த்த கடைசி மேட்ச்.

கங்கூலியும், சச்சினும், டிராவிட்டும் அன்றோடு ரிட்டையர்ட் ஆகிவிட்டார்கள். வெற்றி தோல்விகள் சகஜம் தான். ஆனால் எப்படித் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். யாரிடம் தோற்கிறோம் என்பது மிக முக்கியம். கிரிக்கெட் பார்க்கவில்லையென்றாலும், செய்திகள் அவ்வப்போது கண்ணில் படும். இந்த முறை உலகக்கோப்பைக்கு முன் சேவாக் “இந்த முறை பங்களாதேஷைப் பழி வாங்குவோம்” என்று சொல்லியிருந்தார். எனக்கு குபீர் சிரிப்பு வந்தது. சட்டென்று எனக்கு தோன்றிய வசனம் “இந்த உலகம் இன்னுமாடா உங்கள நம்பிக்கிருக்கு” என்பது தான். இந்த வேர்ல்ட் கப் நாம் வாங்கலாம் என்று ஒரு சிலர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். வாங்கலாம். அதிர்ஷ்டவசமாக நமக்குக் கிடைக்கலாம். ஆனால் என் அளவில் போன உலகக்கோப்பையில் பங்களாதேஷிடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிய அன்றே இந்திய கிரிக்கெட் டீம் கலைக்கப்பட்டாயிற்று. போங்கப்பா போங்கப்பா போய் பிள்ளைகளப் படிக்கப்போடுங்கப்பா.

மா.சிவக்குமார் தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டித்து இந்த உலகக்கோப்பையைப் புறக்கணியுங்கள் என்று சொல்கிறார். நான் எப்பொழுதோ புறக்கணிக்கத் தொடங்கியாச்சு.

***

ஜெயமோகன் எழுதிய ஓலைச்சிலுவை படித்தீர்களா? சிறுகதை படிக்கும் பழக்கமுள்ளவர்கள் கண்டிப்பாக படியுங்கள். இதுபோன்ற ஒரு கதையை சமீபத்தில் நான் படித்ததில்லை. கதை தோறும் பல தருனங்களில் நெகிழ்வாக உணர்ந்தேன்.

உலகப்போரில்; ப்ரான்ஸின் ஒரு போர் முனையில் அடிபட்ட ராணுவவீரர்களுக்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார் சாமர்வெல். ராணுவ வீரர்கள் பலருக்கு கைகால்கள் சிதைந்து போயிருக்கிறது. குருதி வழிந்தோடி ஒரு கால்வாய் போலவே ஆகிவிட்டிருக்கிறது. அடிபட்டவர்களுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்காவிடில் ஒரு மணி நேரத்துக்குள்ளாக அவர்கள் இறந்து விடும் அபாயம் இருக்கிறது. சாமர்வெல் வெறி பிடித்தார் போல சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார். நீண்ட நேர உழைக்குப் பின்; கலைத்து அங்கிருந்த கட்டிலில் படுக்கிறார். அங்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் கால்கள் சிதைந்து ரத்தம் ஓடிக்கொண்டிருந்த ஒரு ராணுவ வீரன் தன்னைக் கூர்ந்து பார்ப்பது கண்டு துடுக்குற்று எழுகிறார். பரவாயில்லை ஓய்வெடுத்துவிட்டு வாருங்கள் என்று சைகையில் சொல்கிறான் அந்த ராணுவவீரன்.

விக்கிப்பீடியாவில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான ஒரு குறிப்பு:
During the Battle of the Somme in 1916 he was one of four surgeons working in a tent, while hundreds of wounded men lay dying on stretchers outside. On short breaks from surgery, he spoke with some of the dying men, and noted that not one asked to be treated ahead of the others.

எத்தகைய மனிதன் சாமர்வெல்?
1. எவரஸ்ட்டை இரண்டு முறை ஏறுவதற்கு கடும் முயற்சி செய்திருக்கிறார்.
2. மணிக்கனக்காக பேட்மிட்டன் விளையாடுபவர்.
3. இசையில் தேர்ந்தவர்
4. அறுவை சிகிச்சை நிபுணர்
5. தன் நாட்டு மக்கள் அல்லாத வேறொரு நாட்டின் மக்கள் மேல் அதீத அன்பு கொண்டு அவர்களுக்காக வாழ்வை அற்பனித்தவர்.
6. தீவிர இறை நம்பிக்கை கொண்டவர்.

இது கதையாக இருந்தாலும்; பல உண்மைச் சம்பவங்களை வைத்துப் பிண்ணப்பட்டிருக்கிறது. இந்த கதையின் நாயகனான சாமர்வெல்லைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விக்கிப்பீடியாவைப் பாருங்கள்.

வேறொரு நண்பர், அவ்ளோ நல்லாருக்கா? கதையில கடைசியா ட்விஸ்ட் இருக்கா? என்றார். இல்ல, அதனால படிக்க உக்காரும் முன் ஒரு பாக்கெட் ட்விஸ்ட் வாங்கி வைத்துக்கொண்டு உக்காருங்கன்னு சொன்னேன். கஷ்டம்.

***

பழசிராஜா பார்த்தேன். கேரள வர்மா பழசிராஜா. வரலாற்றுத் திரைப்படங்களை இப்பொழுது எடுக்கும் பொழுது எப்படி ஒரு நாடகத்தன்மை தெரிகிறதோ அதே போன்றதொரு நாடகத்தன்மை இதிலும் இருக்கிறது. அதிலும் மொழிமாற்றம் செய்யப்பட்ட படம். மம்முட்டியின் குரல் ஒரு பக்கம் கெட்கிறது. வாய் ஒருபக்கம் அசைகிறது. இதில சரத்குமார் வேற. சும்மா நெஞ்ச நிமித்திக்கிட்டு வர்றார். அவ்வளவுதான். சுமன் கூட ஒரு ·பைட். இதுக்குத்தான் என்னைய படத்தில வெச்சிருக்காங்கன்னு சொல்றார். கிட்டத்தட்ட. 🙂 ஒரு படமாக எடுக்கக்கூடிய அளவிற்கு பழசிராஜாவின் வாழ்க்கையில் சம்பவங்கள் இல்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது.

***

அப்புறம் த மோஸ்ட் வாண்டட் மூவி பார்த்தேன். அதாங்க: நடுநிசி நாய்கள். தியேட்டர்க்குள்ள இருந்து டிவிட்டினேன். தெரியாம படத்துக்கு வந்துட்டன்டா. இனிமே இந்தப் பக்கவே வர மாட்டேன்டான்னு. கொடுமை.

எனக்கு படத்தின் சப்ஜெக்டில் பிரச்சனை ஒன்றும் இல்லை. எடுக்கட்டும். ஆனா ஒரு த்ரில்லர் இப்படியாப்பா இருக்கும்? ஹாலிவுட் படங்கள் எல்லாம் பார்க்கறீங்க தான? அட்லீஸ்ட் கொரியன் படங்கள் கூட பார்த்ததில்லையா? பின்ன ஏன் இப்படி? லக்ஷ்மியம்மா லக்ஷ்மியம்மான்னு. இதுல மல்டிபிள் பர்சனாலிட்டி கதை வேற.

உங்களுக்கெல்லாம் திரில்லர் எதுக்கு? ஹீரோ சைக்கோ. சோ வாட்? அவர் எப்படி சைக்கோ ஆனார்ன்னு ஹிஸ்டரி ஆப் த இனிஸிடென்ட் ஜியோகரபி ஆப் த ப்ரசிடென்ட் சொல்லி முடிக்கறதுக்குள்ள படமே ஒரு முடிவுக்கு வந்திடுது. எதுக்குய்யா சைக்கோவ சைக்கோவாவே விட்றவேண்டியதுதான? எதுக்கு காரணத்தை தேடிக்கிட்டே அலையறீங்க? ஹீரோ ஒரு சைக்கோ. அவனோட வேலை சாம்பர குடிச்சு கத்திரிக்காய கடிக்கறதுதான்னு விட்றவேண்டியதுதான? அவன் எதுக்காக சாம்பார விடாம குடிக்கிறான்? அவனுக்கு எப்படி கத்தரிக்காய் பிடிச்சுப்போனதுன்னு ஏன் எங்களப் படுத்தறீங்க? செவன்னு ஒரு படம் வந்துச்சு பாத்திருக்கீங்களா சார். பாத்திருப்பீங்க. காக்க காக்கவில டப்பாக்குள்ள மண்டைய வெச்சு பார்சல் பண்றத வேற எங்கருந்து பிடிச்சீங்க? அப்பவே நினைச்சிருக்கீங்க நாமளும் வாழ்க்கையில ஒரு சைக்கொ த்ரில்லர் எடுக்கனும்னு. எடுத்துட்டீங்க. சரி. இந்தப் படம் ரிலீஸ் ஆகும் போதா என் மனைவி ஊருக்குப் போகனும். அதனாலத்தான தியேட்டரில போய் உக்காந்தேன். இல்லன்ன போயிருந்திருக்க முடியுமா?! மிஸ் யூ டா ச்செல்லு. 😉

எங்கோ எப்பொழுதோ நடந்த ஒன்றை பெரிதுபடுத்தி எழுதினாத்தான் கதை. சினிமா. சிறுத்தையில கார்த்தி எப்படி போலிஸா சும்மா புகுந்து விளையாடறார். அப்படியா இருக்கு நம்ம ஊர்ல போலிஸ¤? சாமர்வெல் எவரஸ்ட் ஏறும் போது, இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பனிச்சறிவு ஏற்பட்டு கூடவந்தவர்கள் அடித்துச்செல்லப்பட, அவர் மட்டும் உயிர் பிழைக்கிறார். அவரும் செத்துவிட துணிகையில், அவர் தலைக்கு மேலே பனிச்சறுக்கு ஏற்பட்டு பனி ஏசுவின், ஆசீர்வதிக்கும் ஒரு கை போல உறைகிறது. சாமர்வெல் எவரஸ்டை ஏறின உண்மைச் சம்பவத்தை வைத்துக்கொண்டும் கற்பனையைத் தட்டிவிட்டால் கிடைப்பது இது தான். இது தான் கதை. குழந்தைக்கு யானை வானத்தில் பறந்தால் தான் கதை.

எப்பொழுதும் எங்கேயும் நடப்பது போல அப்பா பையனுக்கு ஆனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தாருன்னு சொன்னா என்ன ஆகும்? ஒரு பய திரும்பிப்பாக்கமாட்டான். ஊருக்குள்ள ரவுடின்னு ·பார்ம் ஆயாச்சு; அப்புறம்? இந்த மாதிரி ஒரு நாலும் படம் எடுத்தாத்தானே நாலு பேர் பேசுவாங்க .

சின்னப்பிள்ளைகள் பாப்பாங்க?! சின்னப்பிள்ளைங்க எதுக்குப் பாக்கறாங்க? அதான் சர்டிபிகேட் இருக்கே. பின்ன எப்படி சின்னப்பிள்ளைங்க தியேட்டருக்குள்ள போவாங்க? (திருட்டு) டீவிடி? தாட்ஸ் நாட் டைரக்டர்ஸ் பிராப்ளம்.

சிகப்பு ரோஜாக்கள் முப்பது வருடங்களுக்கு முன் வந்தது. சிவக்குமார் பென்சில்ல மீசை வரைஞ்சிட்டு நடுச்சிட்டிருந்த சமையம். செக்ஸ் காட்லையா? அதுவும் பெண்ணே வலிய வந்து செக்ஸ் கேட்பது போல காட்டவில்லையா? மகன் (வளர்ப்பு மகனாக இருந்த போதிலும்) செக்ஸ் வைத்துக்கொளவதை அப்பா படம் பிடித்து ரசிப்பது போலக் காட்டவில்லையா?

கௌதம் மேனனின் எந்த படங்களும் எனக்கு அவ்வளவாகப் பிடித்ததில்லை. காக்க காக்க தவிர. வேட்டையாடு விளையாடுவின் முதல் 20 நிமிடங்கள் தவிர.

ஆறுதலுக்கு சிகப்பு ரோஜாக்களில் இருந்து அட்டகாசமான இந்தக் காட்சியைப் பாருங்கள்.

தமிழில் நல்ல த்ரில்லருக்கு இன்னும் எத்தனை நாள் காத்திருக்கனுமோ தெரியல.

***

No one killed jessica (யாரும் ஜெஸிக்காவைக் கொலை செய்யவில்லை) என்கிற ஹிந்திப் படம் பார்த்தேன். துப்பறியும் பத்திரிக்கையாளர்கள். மீடியாக்கள். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாம்.

ஜெஸிக்கா வளர்ந்துவரும் மாடல். அதிநவீன பார்களில் காக்டெயில் மேக்கர். ஒரு நாள் பாரில் நள்ளிரவைத் தாண்டியபின்னர் டிரிங்க்ஸ் தீர்ந்து விடுகிறது. மூன்று நபர்கள் ஜெஸிக்காவிடம் வந்து டிரிங்க்ஸ் கேட்கின்றனர். ஜெஸிக்கா இல்லை என்று சொல்ல, அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான். ஜெஸிக்கா அதான் இல்லையே பின்ன எங்க இருந்து கொடுக்கிறதுன்னு கேட்டுக்கொண்டிருக்கிற போதே அவன் சட்டென்று ஜெஸிக்காவைச் சுட்டுவிடுகிறான். கொஞ்ச நேரத்தில் ஜெஸிக்கா இறந்து விடுகிறாள். சுட்டவன் மந்திரியின் மகன். மந்திரி பண பலம் செல்வாக்கை வைத்து சாட்சிகளை விலைக்கு வாங்குகிறார். ஜெஸிக்காவின் அக்கா போறாடுகிறார். முன்னூறு நபர்கள் இருந்த அந்த பாரில் இரண்டு மூன்று பேரே சாட்சி சொல்கின்றனர். முக்கிய சாட்சி ஜெஸிக்காவின் நண்பன் (குடும்பத்தின் நண்பனும் கூட) கடைசி நேரத்தில் நான் வாக்குமூலமே கொடுக்கவில்லை. எனக்கு ஹிந்தியே தெரியாது என்று ஜகா வாங்கிவிடுகிறான். ஜெஸிக்காவைக் கொன்றவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

இது வரை படம் அட்டகாசம். அருமையான மேக்கிங். வித்யா பாலன் கன கச்சிதமாக செய்திருக்கிறார். இது போல தமிழில் படங்கள் எப்பொழுது வரும்?!

இதற்கப்புறம் ஒரு மீடியா மேடம் இந்த வழக்கில் அக்கறை கொண்டு எப்படி உண்மையை வெளிக்கொணர்கிறார் என்பதே கதை.

சிடி கிடைத்தால் கண்டிப்பாகப் பாருங்கள்.

***

மதம் – குழந்தைகளின் மீதான வன்முறை

The Indian Clerk என்கிற நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். David Leavitt எழுதியது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் Non-Fiction வகையான புத்தகங்கள் படிப்பதால் நாவல் படிப்பதற்குப் போதுமான நேரம் கிடைப்பதில்லை. நாவல் படிப்பதிலும் எனக்கு ஆர்வம் வெகுவாகக் குறைந்துவிட்டது. (மீண்டும் ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் ஏதாவது ஒரு அற்புதமான நாவல் ஒன்றைப் பரிந்துரை செய்யுங்களேன்!)

நான் வாரம் ஒரு புத்தகம் படிக்கிறேன் என்று வைத்துக்கொண்டால் என் வாழ்நாள் முழுவதிலும் நான் சில ஆயிரம் புத்தகங்கள் மட்டுமே படித்திருப்பேன் – இது உலகத்தில் கிடைக்கப்பெறும் புத்தகங்களின் எண்ணிக்கையில் சொற்பம் தான். தந்திரம் என்னவென்றால் – படிக்கவேண்டிய ப்த்தகங்களைத் தெரிந்து வைத்திருப்பதே! (The trick is to know which books to read!)
– கார்ல் சாகன்

நூலகத்தில் இந்த நாவலைப் பார்த்த பொழுதே நினைத்தேன் இது அவரைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்று. நான் நினைத்தது சரியாகப் போயிற்று. இது அவரைப்பற்றிய நாவலே தான்!

யார் அவர்? யூகியுங்கள் பார்ப்போம். (Clue – நாவலின் பெயர் The Indian Clerk :))

இந்த நாவல் கணித மேதை ராமனுஜர் பற்றியது ஆனால் இங்கிலாந்தின் கணிதமேதையான G.H.Hardyஐ சுற்றிப் பிண்ணப்பட்டுள்ளது. வெறும் ஐம்பது பக்கங்கள் மட்டுமே படித்துள்ள நிலையில் நாவலைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை!

நாவலில் வரும் ஒரு கேள்வி என்னைக் கவர்ந்தது:

ஒரு ஊரில் உள்ள ஒரு பார்பர் அந்த ஊரில் தானே முகச்சவரம் செய்து கொள்ளாத எல்லோருக்கும் முகச்சவரம் செய்துவிடுகிறார். அப்படியென்றால் அவருக்கு அவரே முகச்சவரம் செய்துகொள்வாரா?

***

சமீபத்தில் நான் படித்துமுடித்த வேறொரு புத்தகம் Christopher Hitchens எழுதிய god is not great. ஹிட்சன்ஸ் ஒரு அமெரிக்கப் பத்திரிக்கையாளர். ஒரு தேர்ந்த debater. யூ டியூபில் அவரது debate வீடியோக்களைத் தேடிப்பாருங்கள். அவருக்கு இருப்பது மூளையா இல்லை என்சைக்லோப்பீடியாவா என்று தெரியவில்லை. எப்படி ரஷ்யாவின் மூலையில் நடந்த சம்பவங்களைக் கூட சரியான சந்தர்ப்பத்தில் எடுத்து விட முடிகிறது? அவருக்கு எதிராக வாதம் செய்பவர் என்றைக்குமே பாவம் தான் – ஹிட்சன்ஸ் முன்னால் அவர் முட்டாளாகத்தான் தெரிவார்.

Richard Dawkins உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவர் ஒரு விஞ்ஞானி. இன்று உலகத்தில் இருக்கும் மிகச் சிறந்த கடவுள் மறுப்பாளர்களில் மிக முக்கியமானவர். அவரது எல்லாப் புத்தகங்களுமே அற்புதமானவை. (விஜய் டீவியின் மன்மதன் அம்பு நிகழ்ச்சியில் கோபிநாத்திடம் கமலஹாசன் தான் தற்பொழுது படித்துக்கொண்டிருக்கும் புத்தகம் எனச் சொன்னது Richard Dawkins எழுதிய The Greatest Show on Earth என்கிற புத்தகம் தான். கமலஹாசன் ஆனால் எதோ வேறு ஒரு பெயர் சொன்னார்!) ஆரம்பமாக The God Delusion என்கிற அவரது புத்தகத்தை நான் பரிந்துரை செய்வேன். (தற்பொழுது தி.க.வினர் இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்). பிறகு The Blind Watchmaker.

Richard Dawkins தனது இந்த வருடத்தின் ஹீரோ Christopher Hitchens தான் என்று சொல்லியிருக்கிறார்.

God is not great பலவகையில் ஒரு அருமையான புத்தகம். பொறுமையாக படித்தீர்கள் என்றால் இது ஒரு விழிப்புணர்ச்சியைக் கொடுக்கும். (நீங்கள் விழித்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்! தூங்குவது போல நடிக்கக் கூடாது!)

மதம் என்பது குழந்தைகளின் மீதான வன்முறை

என்று சொல்கிறார் Hitchens.

பதினெட்டு வயதுக்கு அப்புறம், குழந்தைகளுக்கு நாம் நம்முடைய மதத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுத்திருந்தோம் என்றால் இந்த உலகம் முற்றிலுமாக வேறுமாதிரி இருந்திருக்கும்.

எப்படி ஐய்யா மதம் குழந்தைகளின் மீதான் வன்முறையாகும்?

ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு இந்து. நீங்கள் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவர் வசிக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைக்கு தினமும் வேத பாடங்கள் சொல்லிக்கொடுத்து ஹிந்துவாக வளர்க்கிறீர்கள். (அல்லது அப்படியேதும் ப்ரத்யேகமாக சொல்லிக்கொடுக்காவிடிலும் நீங்கள் கும்பிடும் கடவுளையே உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்கள்)ஆனால் உங்கள் குழந்தை பக்கத்திலிருக்கும் கிறிஸ்தவரின் வீட்டுக்கு சென்று பழகுவதால் அவரது மதத்தால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்துவப் பழக்கங்களை கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறது. பைபிள் தான் படிக்கிறது. கிறிஸ்துவனாக மாறப்போகிறேன் என்று சொல்கிறது.

அப்பொழுது நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஐயையோ பாழாப்போன பக்கத்து வீட்டுக்காரன் என் குழந்தையின் பச்ச மனச கலச்சு இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கானே அப்படீன்னு புலம்ப மாட்டீர்கள்?!

பக்கத்து வீட்டுக்காரன் செய்வது உங்கள் குழந்தையின் மீதான வன்முறை என்றால், நீங்கள் செய்வது?!

***

நான் ஆ·பீஸிலிருந்து வரும் பொழுது ரயிலில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவரிடம் பேசிக்கொண்டு வந்தேன். அப்பொழுது அவர் தன் இரண்டு வயது மகளை ஒரு பள்ளியில் சேர்த்திருப்பதாகவும். அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவேண்டும் என்றால் அட்மிஷன் தெதிக்கு முந்தின நாள் இரவு முழுவதும் வரிசையில் நிற்க வேண்டும் என்று சொன்னார். அப்படியென்ன அந்த பள்ளியில் விஷேசம் என்றேன். ஸ்லோகம் எல்லாம் சொல்லித்தருகிறார்கள். சாப்பாட்டுக்கு முன்னால் சாமி கும்பிடச் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே சென்றார்.

அத்துடன் நில்லாது என்னையும் என் மகளை அந்த பள்ளியில் சேர்த்துவிடுமாறு சொன்னார். நான் எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை என்றேன். திடுக்கிட்டுப் பார்த்தவர் ஒருவாரு சமாளித்து பேச்சைத் தொடர்ந்தார். பிறகு சைடு கேப்பில “இப்போ நீங்க கடவுள் நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க நான் என்ன உங்களுக்கு மதிப்பு கொடுக்காமலா போயிடப்போறேன்” என்றார்.

சட்டென்று நான் “இப்போ நீங்க கடவுள் இருக்கார்ன்னு சொல்றீங்க நான் என்ன உங்கள மதிக்காமலா போயிட்டேன்” என்றேன். அத்துடன் அவர் கப்சிப்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் எப்படி வெளிப்படையாக தாங்கள் ஹோமோ செக்ஸ¤வல்ஸ் என்று சொல்லிக்கொள்ள இயலவில்லையோ அதே நிலையில் இன்று கடவுள் மறுப்பாளர்கள் இருக்கிறார்கள்

என்று யாரோ சொல்லியிருந்தார்கள். மிகச் சரி.

***

நீங்கள் ஹாயாக பீச்சில் குளித்துக்கொண்டிருக்கிறீர். திடுமென சுனாமி வந்துவிடுகிறது. நீங்கள் உங்களைக் காத்துக்கொள்ள ஓடுகிறீர்கள். நீங்களாகவே ஓடி தப்பிக்க முடியாது. உங்களுக்கு இரண்டு சாய்ஸ் இருக்கிறது. உங்களின் இஷ்ட தெய்வத்தின் படம் ஒன்று இருக்கிறது. பக்கத்தில் அறிவியலின் கண்டுபிடிப்பான புத்தம் புதிதாக அதிவேகமாகச் செல்லும் கார் ஒன்று இருக்கிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்?

1. கடவுளே என்னைக் காப்பாற்று. சுனாமியை நிறுத்திவிடு என்று அந்தப் படத்தைக் கும்பிடுவீர்களா? (ஐயப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை நினைவில் கொள்க!)
2. அந்தக் காரில் ஏறிக்கொண்டு அறிவியலின் துணைகொண்டு தப்பிப்பீர்களா?

(அந்த அறிவியலை மனிதன் கண்டுபிடிக்க காரணமாக இருந்ததே கடவுள் தானே என்கிற மிக மொன்னையான பதிலைத் தரக்கூடாது!)

***

சில வருடங்களுக்கு முன் ஒரு பார்ட்டிக்குச் சென்றிருந்த பொழுது – சாப்பிட்டுக்கொண்டிருந்த பொழுது – ஒரு ஆந்திராக்காரர் தமிழர்களைப் பற்றி கமெண்ட் ஒன்று அடித்துக்கொண்டிருந்தார். “கல்யாணப்பத்திரிக்கையில் கட்சித் தலைவர்களின் படங்களைப் போய் போடுகிறார்கள் இவர்கள். அதெப்படி கல்யாணப் பத்திரிக்கையில் கூட கட்சித் தலைவர்களின் படங்களைப் போடுகிறீர்கள்? கணேஷ் ஷிவாவைப் போன்ற கடவுள்களின் படங்களைத்தானே போடவேண்டும்?!” என்று நக்கலாகச் சிரித்தார்.

அங்கிருந்த ஒரு கடவுள் மறுப்பாளர் “கட்சித் தலைவர்களின் படங்களைப் போட்டாலாவது அவர்கள் கல்யாணத்திற்கு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது!” என்று படக்கென்று சொன்னார். எல்லோரும் கப்சிப்.

முற்றிலும் உண்மை. 🙂

***