Hindi Movie – Karthik calling Karthik

தமிழ்ல வேட்டைக்காரன் சுறா புறான்னு எதுனாச்சும் எடுத்துட்டுப்போறாங்க விடுங்க, ஹிந்தில கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீன்னு ஒரு படம் வந்திருக்கு பாருங்க. கண்டிப்பா பாருங்க.

பாடம் பாத்த கையோட இந்த பதிவு போடறேன். கார்த்திக் காலிங் கார்த்திக் அப்படீங்கற டைட்டில் பார்த்த உடனே என்னைய மாதிரி கொஞ்சம் அறிவாளியா இருந்தீங்கன்னா சட்டுன்னு கண்டுபிடிச்சிருவீங்க என்ன கதைன்னு. அதேதான் கதை. ஆனால் படத்தில இன்னும் நிறைய இருக்கு. காமெடி காதல் சஸ்பென்ஸ் த்ரில் எல்லாம்.

படத்தை பாக்கணுங்கறவங்க இதுக்கு மேலே தயவுசெய்து படிக்காதீங்க.

கார்த்திக் ஒரு கன்ஷ்ட்ரக்ஷன் கம்பெனியில வேலை செய்யறவர். சின்ன வயசில தன்னோட அண்ணன் இறந்ததுக்கு காரணம் தான் தான்னு நினைச்சுக்கறார். அதுக்கப்புறம் மனசுக்குள்ளேயே சுயவெறுப்பு வளர்கிறது. யாரோடும் சரிவர பேசுவதில்லை. சைக்கியாட்ரிஸ்ட் இடம் செல்கிறார். சைக்கியாட்ரிஸ்ட் இது உனது தவறு இல்லை என்று எடுத்துச்சொல்லியும் மீண்டும் அதே போல சுயவெறுப்பில் ஆழ்கிறார். சுயவெறுப்பு அவறுக்கு தன்னம்பிக்கையை மழுங்கச்செய்கிறது. ஐஐஎம்மில் படித்திருந்தாலும் வேலையில் அவரை எல்லோரும் மிகவும் கீழ்த்தரமாக நடத்துகின்றனர். எம்டி இவரை தூசு போல நடத்துகிறார்.

நீண்ட நாட்களாக நான்கு வருடங்களாக உடன் வேலைசெய்யும் சொனாலியை ஒரு தலையாகக் காதலிக்கிறார். நிதமும் ஈமெயில் எழுதி சேமித்து வைத்துக்கொள்கிறார். சொனாலிக்கு அனுப்பவதில்லை. நீண்ட நாட்களாக உடன் வேலை செய்தும் சொனாலிக்கு கார்த்திக் யார் என்றே தெரியாது.

ஒரு நாள் எம்டி போனில் கார்த்திக்கைப் பிடி பிடி என்று பிடிக்க போனை தூக்கிப்போட்டு உடைத்து  விடுகிறார்.பிறகு மறுநாளே வேறு ஒரு புதிய போன் வாங்கிக்கொள்கிறார். அப்படியே கொஞ்சம் தைரியம் வரவழைத்துக்கொண்டு எம்டியிடம் கார்த்திக் பேசப்போக அது பெரிய பிரச்சனையாக முடிகிறது. வேலையை இழக்கிறார். ஆழ்ந்த சோகத்தில் மூழ்குகிறார். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து தூக்கமாத்திரையை விழுங்கப்போகும் போது டெலிபோன் அழைப்பு வருகிறது.

பேசுவது கார்த்திக்கேதான்.முதலில் கார்த்திக் பயந்துபோகிறார். டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் விசாரிக்கிறார். கார்த்திக்குக்கு ஏதும் கால்கள் வரவில்லையென்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருவழியாக போன் கார்த்திக் கார்த்திக்கின் வாழ்வை மாற்றிவிடுவதாக உறுதியளித்தப்பின் கார்த்திக் அவரிடம் பேசுகிறார்.

போன் கார்த்திக்கின் அறிவுரையின் பேரில் கார்த்திக் இழந்த தன் வேலையை மீட்கிறார். அதே அலுவலகத்தில் பெரிய பதவியில் அமர்கிறார். சொனாலியிடம் காதலை தைரியமாக சொல்கிறார். அவரும் ஒப்புக்கொள்கிறார். பெரிய புது வீட்டுக்குக் குடிபோகிறார். எல்லாம் நல்லபடியாக நடக்கிறது.

போனில் பேசும் கார்த்திக் கார்த்திக்கிடம் தான் தினமும் காலை ஐந்து மணிக்கு கால் செய்வதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரிக்கிறார். ஆனால் கார்த்திக் மற்றொரு கார்த்திக்கைப் பற்றி சொனாலியிடம் சொல்லிவிடுகிறார். சொனாலி சைக்கியாட்ரிஸ்டைப் பார்க்கச்சொல்கிறார்.

சைக்கியாட்ரிஸ்ட் கார்த்திக் சொல்வதை பொறுமையாகக் கேட்டு அப்படி நடக்க சாத்தியமில்லை உங்களுக்காக அதிகாலை ஐந்து மணிக்கு நான் வருகிறேன் கார்த்திக் கால் செய்கிறாரா பார்ப்போன் என்று நக்கலாகச் சொல்கிறார். மறுநாள் காலை ஐந்து மணிக்கு மிகச்சரியாக போன் அடிக்கிறது. முதலில் கார்த்திக்கின் நண்பர்களுல் யாரோ ஒருவர் தான் விளையாடுகிறார் என்று நினைக்கும் சைக்கியாட்ரிஸ்ட் பிறகு தான் உணர்ந்துகொள்கிறார் அது கார்த்திக் தான் என்று. சைக்கியாட்ரிஸ்ட் எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இதையெல்லாம் நம்ப மறுக்கும் சொனாலியும் மறுநாள் காலை ஐந்து மணிக்கு காத்திருக்கிறார். சரியாக ஐந்து மணிக்கு போன் வருகிறது. பயந்து போன சொனாலி போனை எடுக்கவே கூடாது என்று உறுதியாகச் சொல்லிவிடுகிறார்.

போன் கார்த்திக்குக்கு கோபம் வந்துவிடுகிறது. அதெப்படி என் போனை நீ எடுக்காமல் போகலாம் என்று சொல்லி எப்படி உன்னை மேலே ஏற்றினேனோ அப்படி உன்னை கீழே இறக்குகிறேன் பார் என்று சொல்கிறார். அதே போல வேலையும் போகிறது. சொனாலியும் பிரிந்து போகிறார்.

கார்த்திக் பேங்கில்ப் சேமித்து வைத்திருந்த பதினைந்து லட்ச ரூபாயும் ஏதோ அனாதை இல்லத்துக்கு போன் கார்த்தி டெலிபேங்கிங்கில் மாற்றிவிடுகிறார். என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப்போகிறார் கார்த்திக்.

பிறகு அவருக்கே தெரியாமல் இன்னொருவரை விட்டு டிக்கெட் எடுக்க சொல்லி கண்ணைக் கட்டிக்கொண்டு எங்கோ தூரதேசத்துக்கு சென்று விடுகிறார்.

சில மாதங்கள் கழித்து கார்த்திக் அந்த தூரதேசத்தில் ஒரு சின்ன கம்பெனியில் வேலையில் சேர்ந்து அமைதியாக வாழ்ந்து வருகிறார். போனே வைத்துக்கொள்வதில்லை. மானேஜரின் வற்புறுத்தலின் பேரில் மீண்டும் போன் வாங்குகிறார்.ஐந்து மணிவரையிலும் முழித்திருக்கிறார். கால் வரவில்லை. கார்த்திக் கால் செய்யவில்லை.

சொனாலிக்கு எல்லாம் சரியாகிவிட்டதாக மெயில் அனுப்பி நாளைக்கு மும்பய் வருகிறேன் என்கிறார். பே செய்துவிட்டுத் தூங்கிவிடுகிறார். சரியாக காலை ஐந்து மணிக்கு மீண்டும் கார்த்திக் கால் செய்கிறார்.

என்னையா ஏமாத்தப்பாக்குற..எப்படி பிடிச்சேன் பார்..நீ சாகத்தான் போகிறாய்..செத்துவிட்டதாக நினைத்துகொள் என்று கொக்கறிக்கிறார்.

மீதியை வெள்ளித்திரையில் காண்க. அல்லது டிவிடி வாங்கி சின்னத்திரையில் காண்க. அல்லது விக்கிப்பீடியாவில் சென்று என்னதாண்டா நடக்குதுங்கறத தெரிஞ்சுக்கோங்க.

ஆனா நான் சொல்லமாட்டேன்.

This songs rocks.

*

ஏம்ப்பா கோடம்பாக்கத்து குசேலங்களா, நீங்க இங்கிலீசுப் படத்தயெல்லாம் பாத்து கிழிச்சு படமெடுத்து ஆஸ்கார் நாயகனா ஆனதெல்லாம் போதும் மொத ஹிந்திப்படத்தப் பாருங்க.

*
Karthik calling Karthik, hindi cinema,Deepika,Movies

தீவிர‌வாதிக‌ள் உருவாக்கிய‌ முற்றிலும் புதிய‌ வேலை வாய்ப்புக‌ள்

நேற்றோ அத‌ற்கு முன் தின‌மோ அதிகாலையில் எழுந்து மிகுந்த‌ ப‌சியுட‌ன் செரிய‌ல்ஸ் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் பொழுது நியுயார்க் ந‌க‌ர‌ குண்டு வெடிப்பு பீதி ச‌ம்ப‌ந்த‌மான‌ செய்தி சிஎன்என் இல் ஒளிப‌ர‌ப்பாகிக் கொண்டிருந்த‌து. இது தொட‌ர்பான‌ ந‌ப‌ரை ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்தாயிற்று. இன்னும் பெய‌ர் தெரிய‌வில்லை. அல்ல‌து நீதிப‌தி அறிவிக்கிறவ‌ரை சொல்ல‌க்கூடாது என்று நினைத்திருக்கிறார்க‌ள். நீதிப‌தி அறிவிப்பு செய்ய‌ இன்னும் ப‌த்து நிமிட‌ம் இருக்கிற‌து. அப்பொழுது தான் தீவிர‌வாத‌ம் உருவாக்கியிருக்கிற‌ வேலைவாய்ப்புக‌ளைப் ப‌ற்றித் தெரிந்து கொண்டேன்.

இர‌ண்டு ந‌ப‌ர்க‌ள் பேசினார்க‌ள். ஒருவ‌ரின் வேலையின் பெய‌ர் Terror Expert ம‌ற்றொருவ‌ரின் வேலை யின் பெய‌ர் Terrorism Analyst.

தீவிர‌வாத‌ ஆய்வாள‌ர்(?!) ச‌ரி Terror Expert?! எப்ப‌டித் த‌ன்னை அறிமுக‌ம் செய்து கொள்வார்?

இன்னும் கொஞ்ச‌ கால‌த்தில் வானிலை ஆய்வாள‌ர் தின‌மும் வானிலை ஆராய்ச்சி செய்து செய்தியில் இன்ன‌ இன்ன‌ இட‌ங்க‌ளில் ம‌ழை பெய்ய‌க்கூடும் க‌டும் புய‌ல் வீச‌க்கூடும் என்று சொல்வ‌து போல‌, பின்னாடி ஒரு உல‌க‌வ‌ரைப‌ட‌த்தை வைத்துக்கொண்டு, தீவிர‌வாத‌த்தையும் ஆராய்ந்து இந்த‌ இட‌ங்க‌ளில் மித‌மான‌ குண்டு வெடிப்பு இருக்கும்; உயிராப‌த்து ஏதும் இருக்காது. இந்த‌ இட‌த்தில் க‌டுமையான‌ குண்டுவெடிப்பு இருக்கும்; உயிர் ப‌லி இருக்கும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்.

வானிலையைத் தெரிந்து கொண்டு பாதுகாப்பாக‌ குடை எடுத்து வ‌ருவ‌து போல‌ தீவிர‌வாத‌நிலையைத் தெரிந்து கொண்டு என்ன‌ செய்வ‌து? குடை உத‌வாதே?

இன்ஸ்யூர‌ன்ஸ் வாங்கிக்கொண்டு போக‌லாம். குண்டு வெடிக்கிற‌து என்று போகிற‌ இட‌த்துக்குப் போகாம‌ல் இருக்க‌ முடியுமா என்ன‌?

மும்பை மேரி ஜான் என்கிற‌ ஹிந்திப்ப‌ட‌ம் பார்த்திருக்கிறீர்க‌ளா? மும்பையில் ர‌யிலில் ந‌ட‌ந்த‌ குண்டுவெடிப்புக‌ளுக்குப் பிற‌கு அத‌னால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ரின் வாழ்க்கையை அழ‌காக‌ அல‌சுகிற‌து இந்த‌ப் ப‌ட‌ம்.

மாத‌வ‌ன் ம‌யிரிழையில் த‌ப்பியிருப்பார் ஆனால் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் ஒரு கையை இழ‌ந்து விடுவார். ர‌யில் குண்டு வெடிப்புக்கு முன் அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பு வ‌ந்தும் ம‌றுத்துவிடுகிற‌ மாத‌வ‌ன் குண்டு வெடிப்புக்குப் பின் பேசாம‌ல் அமெரிக்கா போய்விட‌லாம் என்று நினைக்கிறார். இங்கு ர‌யிலில் ஏற‌வே ப‌ய‌ப்ப‌டுகிறார்.

அமெரிக்காவிலிருந்து திரும்பி வ‌ரும் அவ‌ர‌து ந‌ண்ப‌ரிட‌ம் இதைச் சொல்ல‌கிறார். எந்த‌ நாட்டில் தான் தீவிர‌வாத‌ம் இல்லை? பாதுகாப்பான‌ தேச‌ம் என்று க‌ருத‌ப்ப‌ட்ட‌ அமெரிக்காவின் இர‌ட்டைக் கோபுர‌த்தைத் தீவிர‌வாதிக‌ள் த‌க‌ர்த்து எறிய‌வில்லையா?

க‌டைசியில் அந்த‌ ந‌ண்ப‌ர் சொல்லுவார்: ந‌ம் பிள்ளைக‌ளுக்கு தீவிர‌வாத‌ம் ப‌ழ‌கிவிடும். எப்ப‌டி பூக‌ம்ப‌த்தினோடும் புய‌ல்க‌ளோடும் சூறாவ‌ளிக‌ளோடும் சுனாமிக‌ளோடும் வாழ‌ப்ப‌ழ‌கிக்கொண்டோமோ அதே போல‌ ந‌ம் பிள்ளைக‌ள் தீவிர‌வாத‌த்தோடு வாழப் ப‌ழ‌கிக்கொள்வார்க‌ள்.

ரொம்ப‌வும் வ‌ருத்த‌மாக‌ இருக்கிற‌து.

நானும் ஹிந்தி சினிமாவும்

எங்க‌ள் வீட்டில் டீவி வாங்கிய‌திலிருந்து ஹிந்தி சினிமா பார்க்க‌ ஆர‌ம்பித்தேன் என்று நினைக்கிறேன். டீவி எப்பொழுது வாங்கினோம் என்ப‌து தெளிவாக‌ ஞாப‌க‌ம் இருக்கிற‌து. நான் நான்காவ‌து ப‌டிக்கும் பொழுது. ப்ளாக் அன்ட் ஒயிட் சிய‌ர்ஸ் எல்காட். மூடி வைத்துக்கொள்ள‌ க‌த‌வுக‌ள் கூட‌ இருக்கும். டீவி வாங்கிய‌ அந்த‌ வார‌த்தில் ச‌ரியாக எந்த‌க்க‌ட்சியோ ப‌ந்த் அறிவித்த‌து. ஒரு நாள் லீவ் கிடைத்த‌து. என‌வே வாட‌கைக்கு ஒரு நாள் டெக் எடுத்தோம். பார்த்த‌ ப‌ட‌ங்க‌ள் க‌ந்த‌ன் க‌ருணை, வ‌ருஷ‌ம் ப‌தினாறு, ராஜாதி ராஜா, க‌ர‌காட்ட‌க்கார‌ன். ராஜாதிராஜா என‌க்காக‌. ர‌ஜினி பட‌ம் வேண்டும் என்று நான் அழுது அட‌ம்ப‌ண்ண‌தால்.

டீவி வாங்கி முத‌லில் வாட‌கை டெக்கில் ப‌ட‌ம் பார்க்கும் பொழுது சாமி ப‌ட‌ம் போட‌வேண்டுமாம். அத‌னால் க‌ந்த‌ன் க‌ருணை! அண்ட‌த்தின் ஒரு மூலையில் ஒரு துக‌ள் போல‌ இருக்கும் ந‌ம் பூமியின் ஒரு மூலையில் துக‌ள் போல‌ இருக்கும் எங்க‌ள் வீட்டில் ஒரு மூலையில் இருக்கும் இந்த‌ டீவிப் பெட்டியைக் கூட‌ க‌ட‌வுள் க‌வ‌ன‌மாக‌ப் பாதுகாக்கிறார் பாருங்க‌ள்! அதுவும் முத‌லில் சாமி ப‌ட‌ம் போட்டால் ம‌ட்டுமே பாதுகாக்கிறார் என்ப‌தை நினைத்துப்பார்க்கும் பொழுது ஆச்ச‌ரிய‌மே மேலிடுகிற‌து! அந்த‌ப் ப‌ட‌த்தில் வீர‌பாகுவாக‌ சிவாஜி ஓவ‌ர் ஆக்டிங் செய்திருப்ப‌தை இன்று நினைத்துப்பார்த்தாலும் ஏனோ எரிச்ச‌ல் வ‌ருகிற‌து.

ஓகே. ஹிந்தி சினிமா ப‌ற்றிய‌ல்லவா பேச‌வேண்டும். அந்த‌க் கால‌த்தில் ச‌னிக்கிழ‌மை மாலைக‌ளில் ஹிந்தி சினிமா தூர்த‌ர்ஷ‌னில் வ‌ரும். ச‌னிக்கிழ‌மை மாலைக‌ளில் டியூச‌ன் இருக்காது. பெரும்பாலும் காலையிலே முடிந்துவிடும். அத‌னால் ராஜேஷ் க‌ண்ணா, ரிஷி க‌பூர், தேவான‌ந்த், அமிதாப் ப‌ச்ச‌ன் போன்றோர்க‌ளை அன்று ம‌ட்டுமே பார்க்க‌முடியும். பெரும்பாலும் அம்மாவும் நானும் ம‌ட்டுமே உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்போம். என‌க்கு ப‌ள்ளியில் ஹிந்தி உண்டு. என் அம்மா ஹிந்தி ப‌டித்த‌தேயில்லை. ஹிந்தி ப‌டிக்கும் என‌க்கே ஹிந்திப் ப‌ட‌ம் புரியாம‌ல் இருக்கும்போது ஹிந்தியே தெரியாதா அம்மாவுக்கு ம‌ட்டும் எப்ப‌டி எல்லாம் புரிகிற‌து என்ப‌து என‌க்கு விய‌ப்பாக‌வே இருந்த‌து.

ரிஷி க‌பூர் ப‌ட‌ங்க‌ள் என்றால் என‌க்கு பிடிக்க‌வே பிடிக்காது. எப்பொழுதும் பாட்டுப்பாடிக்கொண்டிருப்பார். இந்திய‌ சினிமாவில் யார் தான் பாட்டு பாடாம‌ல் இருப்ப‌ர்? இருக்கிறார்க‌ள்? ப‌ட‌த்தில் இருக்கும் க‌த‌ப்பாத்திரங்க‌ள் யாவ‌ரும் பாட‌ முடியாத‌ துர் சூழ்நிலை உருவானால் இருக்க‌வே இருக்கிறார் இளைய‌ராஜா! பின்ன‌னியில் பாடிக்கொண்டிருப்பார் அவ‌ர். என‌க்கு ஏனோ அமிதாப்ப‌ச்ச‌ன் பிடிக்காது.அப்போது என‌க்கு பிடித்த‌ ஹிந்தி ந‌டிக‌ர்க‌ள் இருவ‌ர். தேவான‌ந்த் ம‌ற்றும் ச‌த்ருக்க‌ன் சின்ஹா. ப‌ட‌த்தில் இவ‌ர்க‌ளில் யாரேனும் ஒருவ‌ர் இருந்தால் போதும் க‌ண்டிப்பாக‌ ச‌ண்டை இருக்கும். ச‌ண்டையில்லாத‌ ப‌ட‌ங்க‌ள் என‌க்கு பிடிக்கவே பிடிக்காது. த‌ர்மேந்திரா கொஞ்ச‌ம் ப‌ர‌வாயில்லை. ச‌ண்டைக்கு ம‌ட்டுமில்லை ஏனோ என‌க்கு ச‌த்ருக்க‌ன் சின்ஹாவைப் பிடிக்கும். அவ‌ர் ஏன் வில்ல‌னாக‌வே இருந்தார் என்ப‌து பிற‌கு ஏன் பிஜேபியில் சேர்ந்தார் என்ப‌தும் புரியாத‌ புதிர். நிஜ‌த்திலும் வாழ்க்கையிலும் அவ‌ர் எதிர்க‌ட்சியிலேயே ரொம்ப‌கால‌ம் இருந்திருக்கிறார்.

அப்புற‌ம் ச‌ன்டீவிக்க‌ள் ஆதிக்க‌ம் செலுத்த‌ ஆர‌ம்பித்த‌வுட‌ன் ஹிந்தியுட‌னான‌ என‌து தொட‌ர்பு அறுந்து போன‌து. என் ப‌ள்ளியிலும் ஹிந்தியை நிறுத்திவிட்டு த‌மிழ் நான் இர‌ண்டாம் பாட‌மாக‌ எடுத்த‌வுட‌ன் ஹிந்தியை ம‌ற‌ந்தேபோனேன். என் ந‌ண்ப‌ன் சூர்யா தான் அவ்வ‌ப்போது ஞாப‌க‌ப்ப‌டுத்துவான்.

அத‌ற்க‌ப்புற‌ம் நான் பார்த்த‌ ஹிந்திப்ப‌ட‌ங்களை விர‌ல் விட்டு எண்ணிவிட‌லாம். ஹ‌ம் ஆப் கெ ஹ‌யின் க‌வுன், தில் வாலே..,குச் குச் ஹோத்தா ஹை, ஹ‌ம் ஆப் கே தில் மே ர‌ஹ்தே ஹை, ப்யார் கியா தோ த‌ர்னா க்யா அவ்வ‌ள‌வே. இதுவும் சோனி டீவியின் த‌யவால்.

அப்புற‌ம் ம‌றுப‌டியும் இடைவெளி. ரொம்ப‌ கால‌த்துக்கு அப்புற‌ம் தான் ஸ்வ‌தேஸ் பார்த்தேன். அமெரிக்காவின் நாசாவில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞ‌ன் இந்தியா வ‌ருகிறான். அவ‌னுக்கு இந்தியா பிடிக்க‌வில்லை. வ‌ந்த‌ இட‌த்தில் ஒரு பெண்னை நேசிக்கிறான். அவ‌னால் முடிந்த‌ ஒரு ந‌ல்லுத‌வியை அந்த‌ குக்கிராம‌த்திற்கு செய்கிறான். சிவாஜியில் ர‌ஜினி செய்த‌து சினிமா. ஆனால் ஸ்வ‌தேஸ் ய‌தார்த்த‌மாக‌ இருக்கும். பிற‌கு அமெரிக்கா போனானா இல்லை இந்தியாவிலே இருக்கிறானா என்ப‌து தான் ப‌ட‌ம். ர‌ஹ்மான் பாந்த‌மாக‌ இசைய‌மைத்திருப்பார். ந‌ல்ல‌ ப‌ட‌ம். இந்த‌ப் ப‌ட‌ம் பார்த்த‌த‌ற்கு அப்புறம் தான் ஹிந்தி சினிமா கூட‌ ந‌ல்லாருக்குமோ என்ற‌ எண்ண‌ம் வ‌ந்த‌து.

அப்புற‌ம் மேலும் வெகு சில‌ ப‌ட‌ங்க‌ள். தில் சாக்தா ஹை, ப்ளாக், ர‌ங் தே ப‌ச‌ந்தி, தாரே ஜ‌மீன் ப‌ர், க‌ஜினி, ச‌க் தே இந்தியா, டான், ச‌ர்கார், பூத், க‌ம்பெனி என்று விர‌ல் விட்டு எண்ணிவிட‌க்கூடிய‌வை. இவை அனைத்துமே அருமையான‌ ப‌ட‌ங்க‌ள் தான் என்றாலும் என‌க்கு இர‌ண்டு ப‌ட‌ங்க‌ள் ஸ்பெஷ‌ல்.

ர‌ங் தே பசந்தி ம‌ற்றும் தாரே ஜ‌மீன் ப‌ர். அமீர்கான் ம‌ட்டும் எப்ப‌டி ப‌டங்க‌ளைத் தேர்வு செய்கிறார் என்று ஆச்ச‌ரியமாக‌ இருக்கும். ர‌ங் தே ப‌ச‌ந்தி போன்ற‌ க‌தையை நான் இது வ‌ரை ப‌டித்த‌துமில்லை பார்த்த‌துமில்லை. ப‌க்த் சிங்கை தூக்கில் போட்ட‌ ஆங்கில‌ ஜென‌ர‌லின் பேத்தி அவ‌ர் எழுதி வைத்த‌ டைரிக்குறிப்புக‌ளை ஒரு நாள் ப‌டிக்கிறாள். ப‌க‌த்சிங் ம‌ற்றும் அவ‌ன‌து ச‌காக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டு அவ‌ர்க‌ள‌து க‌தையை டாக்குமென்ட‌ரியாக‌ எடுக்க‌வேண்டும் என்று விரும்புகிறாள். ஒரு நிறுவ‌ன‌த்திட‌ம் பேசி அனும‌தியும் வாங்கிவிடுகிறாள்.

இந்தியாவில் டாக்குமென்ட‌ரி எடுக்க‌ எல்லாம் ஏற்பாடு செய்து விட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் ப‌ண‌த்துக்காக‌ காத்திருக்கும் பொழுது அந்த‌ நிறுவ‌ன‌ம் ம‌றுத்துவிடுகிற‌து. ஆனாலும் எப்ப‌டியாவ‌து டாக்குமென்ட‌ரியை எடுத்தே தீர‌வேண்டும் என்கிற‌ உறுதியோடு இந்தியா வ‌ருகிறாள். இங்கு அவ‌ள‌து தோழி ஒருத்தி அவ‌ளுக்கு ஆறுத‌ல் த‌ருகிறாள். தோழிக்கு ந‌ண்ப‌ர் கும்ப‌ல் ஒன்று இருக்கிற‌து. ந‌ண்ப‌ர் கும்ப‌ல் எத‌ற்கும் க‌வ‌லைப்ப‌டாத‌ டோன்ட் கேர் பார்ட்டிக‌ள். தோழியின் பாய்ப்ர‌ண்ட் மாத‌வ‌ன். ராணுவ‌த்தில் பைல‌ட்.

ஜென‌ர‌லின் பேத்தி அவ‌ர்க‌ளோடு ப‌ழ‌கும்பொழுது ப‌க்த்சிங்கின் ச‌காக்க‌ளை அவ‌ர்க‌ளுள் காண்கிறார். அவ‌ர்க‌ளைக் க‌ண்வின்ஸ் செய்து டாக்குமென்ட‌ரியை ஆர‌ம்பிக்கிறார். லாலா ல‌ஜப‌திராயைக் கொன்ற‌ ஜென‌ர‌லைக் கொல்ல‌வேண்டும். ப‌க‌த்சிங்கும் ச‌காக்க‌ளும் திட்ட‌ம் போடுகிறார்க‌ள். திட்ட‌ம் போட்ட‌ப‌டி கொல்கிறார்க‌ள். அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌லில் வாங்கிய‌ ப்ளைட்டை ஓட்டும் பொழுது மாத‌வ‌ன் இற‌ந்துபோகிறார். எத‌ற்கும் க‌வ‌லைப்ப‌டாத‌ டோன்ட் கேர் பார்ட்டிக‌ள் என்ன‌ செய்தார்க‌ள் என்ப‌து சினிமா.

(மேலும்)‌